Total Pageviews

Monday, December 31, 2007

இந்த வருடத்தின் நிறமென்ன? (2008)


சித்திரை வருடப்பிறப்பின் போது பஞ்சாங்கத்தில் மகர சங்கராந்தி தேவதை கட்டும் புடவை, பார்க்கும் திசை ஆகியவற்றை வைத்து அந்த வருடத்தின் பலன் சொல்வார்கள்.



மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கட்டியிருக்கும் வேஷ்டியின் நிறத்தை வைத்தும் வருடத்தின் பலன் சொல்வார்கள்.



PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக ஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை செலக்ட் செய்து வழங்குகிறது.
அந்த நிறுவனம் இந்த புத்தாண்டு 2008 ஆம் ஆண்டிற்கு வழங்கியிருக்கும் நிறம் blue iris.


நீலம் அன்ட் அயிரிஷ் கலரில் நீலம் என்பது கருப்பு, வெள்ளை நிறத்திற்க்கு இடைப்பட்ட நிறமாகும். ஆக பலன் 50:50 ஆக இருக்குமாம். (2007 ஆம் வருட நிறத்தின் பெயர் சில்லி(மிளகாய்) )



என்னவோ பிறக்கும், பிறந்திருக்கும் இவ்வாண்டு எல்லோருக்கும் நல்லதையே தந்து மகிழ்வையே சொரிந்து இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக.

HAPPY NEW YEAR



WISH YOU AND YOUR FAMILY MEMBERS A VERY VERY HAPPY AND PROSPEROUS NEW YEAT.
MAY THIS NEW YEAR BRING YOU ALL THE HAPPINESS AND YOUR EVERY DREAM COME TRUE.

Saturday, December 29, 2007

இது அற்புத பிரபஞ்சம்!!!!

ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் ஹைரோடில், 28 கி.மி தொலைவில் 2000 ஏக்கர் நிலபரப்பில் பரந்து விரிந்து இருக்கிறது இந்த அற்புத பிரபஞ்சம். 1991 ஆம் ஆண்டு திரு.ராமோஜி ராவ் அவர்களால் உருவாக்கப்பட்டது "ராமோஜி பிலிம் சிட்டி".

திரைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்றவகையில் பிலிம் சிட்டியின் உள்ளே பல தோட்டங்கள், லண்டனில் இருப்பது போன்ற தெருக்கள், கடைவீதி, சிலை இல்லா கோயில் (தேவையான சிலையை வைத்தால் அந்த கடவுளின் கோயிலாக மாற்றிக்கொள்ள வசதியாக இருக்குமாம்), எல்லாம் "பிளாஸ்டர் ஆப்ஃ பாரிஸில் செய்து வைத்திருக்கிறார்கள்.
படத்தை முழுதுமாக முடித்து படப்பெட்டியை கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு ரெடியாக, அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் நிற்கிறது ராமோஜி பிலிம் சிட்டி.
பிலிம் சிட்டியின் உள்ளே, ராமோஜி அவர்களுக்கு சொந்தமான "இ-டீவி" (11 மொழிகளில் 12 சானல்கள்) ஒளி-ஒலிபரப்படுகிறது. உஷாகிரண் மூவீஸ் அலுவலகமும் அமைந்திருக்கிறது.
துணை நடிகர்கள் தங்குவதற்காக பிரத்யேக தங்கும் விடுதிகள், நடிகர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக "தாரா" "சிதார" என இரண்டு நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன.
மெயின் ரோடில் இருந்து "யுரேகா" ஸ்டார்டிங் பாயிண்ட் வரை பேரூந்தில் அழைத்துச் செல்கிறார்கள். யுரேகாவிலிருந்து செட்டிங்குகளைப் பார்க்க மற்றொரு பேரூந்தில் அழைத்துச் செல்கிறார்கள். (கைடட் டூர்)
இப்போது நாம் யுரேகா, வைல்ட் வெஸ்ட் (தீனா படப்பாடல் படமாக்கப்பட்ட இடம்), வெளியே மொகல் கார்டன் உள்ளே மைசூர் கார்டன், ஏர்போர்ட், பஸ்ஸ்டாண்ட், போன்ற பல அற்புதங்களை பார்க்கலாம்.
ஏர்போர்ட் செட்டிங்க தத்ரூபமாந் இருக்கிறது. செக்கிங் கொவுண்டர், விமானத்தின் உள்ளே சீட்டிங் எல்லாம் ரியலாக இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தின் கீழே பஸ்ஸ்டாண்ட்.
(ஹீரோவின் விமானம் மிஸ்ஸானால் பஸ் பிடித்து போக வசதியாக:)) )
பிலிம் சிட்டியை சுத்தி பார்க்க வருபவர்களுக்காக பலவித நிகழ்ச்சிகள் இருக்கின்றன். துவக்கவிழா மற்றும் 5.30 மணிக்கு என்டிங் ஷோ கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
குழந்தைகள் விளையாட " பஃன் தூஸ்தான் ", கோகார்ட் மற்றும் பல இடங்கள் இருக்கின்றன.
1 நாள் டிரிப் ஆகவும் செல்லலாம். விரும்பினால் அங்கே ஹோட்டலில் தங்கி பொறுமையாக சுற்றி பார்க்கலாம். ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களுக்கு சுற்றி பார்க்கும் கட்ட்ணம் தனியாக வசூலிப்பது இல்லை. 1 நாள் டிரிப் செல்வதற்கு பெரியவர்களுக்கு 300/-, சிறியவர்களுக்கு 250/-.

Wednesday, December 26, 2007

அப்பரே... அப்பரே.......

ஹலோ இது அப்பரைப் பத்திய பதிவு இல்ல.


அப்பர் பர்த் பற்றியது. நான் மும்பையில் இருந்த போது பெற்றோர்களைப் பார்க்கபுதுகை வருவேன். தனியாகத்தான். அந்த பயணத்தை நினைக்கும் போது ஆஹா! ஆஹா!


டிக்கெட் புக் செய்யும் போதே அப்பர் பர்த் தான் வேண்டும் என்று புக் செய்து விடுவேன். பெரும்பாலும் சென்னை எக்ஸ்பிரஸ்தான். (அலுவலகத்திலிருந்து நேராக தாதர் போய்விடலாமே) அது என்றைக்கு சரியான் நேரத்தில் சென்னை போயிருக்கிறது.


டிரெயினில் ஏறி வண்டி ஸ்டார்ட் ஆகும் வரைதான் சீட்டில் இருப்பேன். அதற்குள் சாப்பிட்டு முடித்து அப்பர் பர்த்தில் ஏறினால் சென்னை வரும் வரை அங்கேதான்.


படிக்க கொஞ்சம் புக், அம்மம்மா கட்டிக்கொடுத்த சாப்பாடு, பெட் ஸ்பிரட் இவைகளுடன் அப்பரில் ஏறி விடுவேன். நல்ல தூக்கம், அடுத்த நாள் காலையில் சும்மா ஒரு 9 மணிக்கு எழுந்து பல் தேச்சு, கையில் இருக்கும் டிபனை சாப்பிட்டுவிட்டு அடுத்த கட்ட தூக்கம் ஆரம்பம். அப்புறம் மதியம் சாப்பாட்டிற்கு எழுந்து சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம், புக் படிச்சு, படம் வரைந்து (எல்லாம் அப்பர் பர்த்தில் தான். கீழே இறங்கறதா? நோ.நோ. அது ரொம்ப தப்பு)திரும்ப தூக்கம்.


இப்படி ரொம்ப அனுபவதித்து பயணம். 24 மணி நேரம் தான் பயணமா என்று இருக்கும். டிரெயின் லேட்டானால் இன்னும் கொண்டாட்டம் தான்.


சென்னைக்கும் மும்பைக்கும் சீசன் டிக்கெட் வாங்கியது போல பயணிக்கும் என் தாத்தா வழியில் என்னென்ன என்ஙெங்கே சாப்பிடலாம் என்று சொல்லி கொடுத்திருந்தார்.
மந்திராலயம் என்றால் ராகவேந்திரர் ஞாபகம் வரும் தானே? அங்கே மசால்வடை ரொம்ப பேமஸ். வாடி ஸ்டேஷனில் தேநீர் அருமை. பயனத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்பேன். அப்புறம் இருக்கவே இருக்கிறது ரயில் சிநேகம்.



தனியாக பயணிப்பதை போன்றே இருக்காது. என் உடன் வேலை பார்ப்பவர்கள் கூட கேட்பார்கள், தனியாக எப்படி பயணம் செய்கிறாய்? பயமாக இருக்காதா? போரடிக்காதா? நான் இல்லை என்று சொல்வதை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.


24 மணிநேரம் பயணம் செய்து, உறவினர் வீட்டில் தங்கி விட்டு, அடுத்தநாள் வைகை பிடித்து திருச்சியில் இறங்கி, பஸ்பிடித்து புதுகை போனால், பழநியப்பா தியேட்டர் ஸ்டாப்பில் தம்பி காத்திருப்பான்.



மறக்கவே முடியாத அப்பர் பர்த்தில் பயணம். தனிமை சில சமயங்களில் இனிமை.

Tuesday, December 25, 2007

M.SC HUSBANDOLOGY - MUTHUKALAI ILLARAVIYAL PAADAM 4

சொன்னதை செய்யாத கிளிப்பிள்ளை


தங்கமணிகள் எது சொன்னாலும் செய்யப்பிடாதுன்னு
கல்யாணத்தன்னைக்கே கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போல.

என்ன வேலையாக இருந்தாலும் சரி, செய்ய மாட்டார்கள்.

நாம் ஒரு உதவி கேட்டிருந்தாலோ, இல்லை மற்ற எந்த வேலையாக இருந்தாலும் சரி அது அவ்வளவுதான். (போன், எலக்டிரிக் பில், குளித்த பின் கட்டிலின் மீது போடப்படும் துண்டு, எதை விடுப்பது, எதை எடுப்பது என்று அவர்களே குழம்பி போய் வார இறுதியில் செய்வதாக சொன்ன கப்போர்டு கிளீனிங்!! இப்படி எதுவேண்டுமானுலும் இருக்கலாம்.)


ரங்கமணிகள் அகராதியில் இவ்வாறான வேலைகளுக்கு இருக்கும் கெடு மனதிற்குள் வைத்திருப்பார்கள்.ஆனால் அது எப்பன்னு அவங்களுக்கேத் தெரியாது.மெதுவா செஞ்சா போச்சு. என்ன அவசரம் என்ற மன நிலை தான் காரணம்.அலுவலக வேலைகள் மட்டும் தான் ஆன் டைமில் முடிக்கப்படும். வீட்டில் உதவுவது என்பதெல்லாம் ரொம்ப தப்பு.


இதுக்கு டீரீட்மென்ட் என்ன?

ரங்கமணிகள் வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதில் பல காரணம் இருக்கிறது.
1. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வ்ந்து தான் ரொம்ப பிசி என்று காட்டிக் கொண்டிருப்பார்கள்.


2. ரங்கமணிகள் செய்யாமலே காத்திருந்து, தங்கமணிகளுக்கு டென்ஷன் கொடுக்கலாமே!

3. மிக முக்கியமாக வேலை பளுவை தங்கமணிகள் மேல் சுமத்த திட்டம்.

4. யாராவது செய்யனுமே அப்படின்னு நினைச்சு தங்கமணிகள் செஞ்சு முடிச்சிட்டா அப்பாடின்னு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கிட்டு வேலை செய்யாம தப்பிக்கலாமே அது தான் முக்கியமான திட்டம்.


தங்கமணிகள் செய்யவேண்டியது ரங்கமணிகள் செய்யாவிட்டால், நமக்கென்ன என்று தங்கமணிகளும் செய்யாமல் காலம் தாழ்த்த வேண்டியது தான்.


நாமலே இழுத்து போட்டுகிட்டு வேலை செஞ்சா பாராட்டுராங்களேன்னு நினைச்சு செய்யப்பிடாது.

அது பாராட்டு இல்லை தங்கமணிகளே! உஷார். வேலை பளுவை தங்கமணிகளுக்கு அதிகமாக்கி ரங்கமணிகள் வேலை செய்யாமல் தப்பித்து கொள்ளும் திட்டம்.

Monday, December 24, 2007

டாடா! பைபை! பாகம் - 2

ஆச்சு, அவ்வளவுதான். மூட்டை முடிச்ச கட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.

புது வருடம் பிறக்கும் நேரத்தில் வந்திருக்கும் இனிப்பான செய்தி!!! :)))


அயித்தானுக்கு இந்தியாவுக்கு மாற்றல் ஆகிடுச்சு. பதவி உயர்வு + மாற்றல். இன்று காலையில் வந்த நீயூஸ். ஹைதராபாதிற்கு வரப்போறோம்.


ஏப்ரலில் மாற்றம். நல்ல வேளை நான் இங்கே வந்திருக்கும் நேரம் பார்த்து சொன்னதால், குழந்தைகள் பள்ளி அட்மிஷன் ஆகியவை பார்க்க வசதி.
அதனால் என் விடுமுறை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப் படுகிறது. ஜனவரி 14 வாக்கில் தான் கொழும்பு போகிறேன்.


இனி இலங்கை என் ஞாபக அடுக்குகளில் மாத்திரம் தான். என்றும் நான் மறக்க விரும்பாத இனிமையான ஞாபகங்கள்.



இன்னும் 4 அல்லது 6 மாதங்களில் இலங்கைக்கு டாடா பைபை கணத்த இதயத்துடன் சொல்ல வேண்டிய நேரம். :((

Sunday, December 23, 2007

மெகா ஸ்டார் தோசை.


இங்கே ஒரு ஹொட்டலக்கு போயிருந்தோம். மெனு கார்டில் வித்தியாசமாய் இருந்தது "ஸ்டீம்டு தோசா". மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிடித்தமான தோசை என்று வேறு போட்டிருந்தார்கள். எண்ணெய் இல்லா தோசை, அவித்தது என்று இருப்பதால் சாப்பிட்டு பார்கலாமே என்று ஆர்டர் செய்தேன்.
10 நிமிடத்தில் ஆவி பறக்க வந்தது தோசை. ஊத்தப்பம் மாதிரி இருந்தது. மிருதுவாக, வாயில் போட்டதும் கறைந்து போனது. (தொட்டுக்கொள்ள 4 வகை சட்னி தந்தார்கள். )சுவை என்றால் அப்படி ஒரு சுவை.சட்னியுடன் தரும் காரமில்லா சாம்பார் அந்த தோசைக்கு நல்ல காம்பினேஷன்.மைசூருக்கு ஷூட்டிங்கிற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி போயிருந்த போது ஒரு சிறிய கடையில் இந்த ஸ்டீம்டு தோசா சாப்பிட்டாராம். சுவையில் மயங்கி செய்முறை கேட்ட போது அந்த ஹோட்டல் காரர்," இலவசமாக எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஆனால் செய்முறை சொல்ல மாட்டேன்"! என்றாராம்.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் தான் சாப்பிட்ட தோசை குறித்து சொல்லி கணவனும் மனைவியும் சேர்ந்து செய்து பார்த்தார்களாம். 3 முறை தோற்று 4ஆவது முறை வெற்றி கண்டார். தனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் செய்து கொடுத்து மகிழ்ந்தாராம். நம் பிரபுதேவா இந்த தோசையை மிகவும் விரும்பி சாப்பிடுவகாக (சும்மா 20 தோசை சாப்பிட்வாராம்.!!!!) மெகா ஸ்டார் சொல்லியிருக்கிறார்.
இப்போ இந்த தோசை சிரஞ்சீவி வீட்டில் தினமும் தாயாரிக்கப்படுகிறதாம். நாம அங்கெல்லாம் போய் சாப்பிட முடியாது. அதனால நாமஎல்லாம் சாப்பிடனும்னு நினைச்சு தான் சிரஞ்சீவி இந்க ரெசிபியை ஹோட்டல் சட்னீஸுக்கும் சொல்லிக்கொடுத்து இருக்காரு. அதனாலஅடுத்தமுறை ஹைதராபாத் வரும்போது இருக்கும் "சட்னீஸ்" ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு பாருங்கள்.
இந்த தோசை லஞ்சுக்கு கூட சாப்பிடலாம். ஒரு தோசை சாப்பிட்டாலும் போதும். சும்மா ருசிக்குதுல்ல!!!.:))


address:


CHUTNEY'S

SHILPA ARCADE,

ROAD NO.3

BANJARA HILLS,

NEAR ANDHRA JYOTHI,

BANJARA HILLS,

HYDERBAD.

PHONE NO: 040-23350569

Saturday, December 15, 2007

டாடா! பைபை!



எல்லோருக்கும் போயிட்டுவரேன்.


புதிதா கிடைச்ச நட்பு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, இருக்கிறது.


உடம்பை நல்லா பார்த்துக்கோங்க.


என்ன செய்ய டாடா! பைபை! சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.


என்ன மொத்தமா பைபை சொல்றேன்னு நினைச்சீங்களா?


ஆசை, தோசை, அப்பளம் வடை.


பசங்களுக்கு லீவு விட்டாச்சு. வழக்கமா எங்காவது ஊருக்கு போவோம்.


வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்தியாங்கற ரூல மாத்தி அயித்தான்


இந்த முறை இந்தியா போகலாம்னு சொல்லிட்டாரு.


ஆக 2 வாரம் லீவு தான் சொன்னேன்.


எங்க போகப் போறேன்னு சொல்லலையே? வேற எங்க எனக்கு பிடிச்ச


ஹைதராபாத் தான். (ஷ்யாம் நிவாஸ் பதிவு போட்ட நேரம்னு நினைக்கிறேன்.)


அவருக்கு அபிஷயல் டிரிப். அதனால ஜாலியா கிளம்பறோம். 4 மாசம் முன்னாடிதான் போனாலும் பசங்க ஆவலா ஹைதராபாத் ட்ரிப் எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. நானும் தான்.


ஸ்கந்த கிரி, லும்பினி பார்க், ஷ்யாம் நிவாஸ், மீடா பான், மிர்ச்சி பஜ்ஜி, ஹைதராபாதி பிரியாணி இதோ திங்கள் கிழமை வர்றேன்! வர்றேன்!



ஹஸ்பண்டாலஜி பாடம் 2 வாரத்துக்கு லீவு.


நடுவில முடிஞ்சா பதிவு & பாடங்கள் தொடரும். (அதான் டேடாகார்ட் இருக்கே.)
வர்ற்ட்டா!!!!! :))

Friday, December 14, 2007

நாளின் முதல் உணவு.

நம்மில் பலர் வேலை மற்றும், நேரமின்மை காரணமாக "காலை உணவு" எடுத்துக்கொள்வதே இல்லை.

ஆனால் அது தவறு. காலை உணவு என்பது ஒரு நாளின் துவக்கத்திற்கு மிகத் தேவையான் ஒன்று. BREAK FAST என ஆங்கிலத்தில் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இரவு உணவின் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உண்ணும் உணவாதலால் விரதத்தை முடிப்பதற்கு சமானம்.

காலை உணவு எடுத்துக்கொள்வதால், அறிவுக்கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு ஆகியவற்றுடன் நம் படபடப்பும் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் காலை உணவு உண்ணாமலே செல்கின்றனர். அதிக தூரப் பயணம், அவசரம், தாமதமாக எழுதல் ஆகியவை காரணங்களாக இருக்கின்றன. காலை உணவு தவிர்ப்பதால் குழந்தைகள் பள்ளியில் பாடங்களில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது, அதன் விளைவாக பள்ளியில் செயல்திறன் குறைந்து அவதிப்படுகிறார்கள்.

தினமும் ஒழுங்காக காலை உணவு எடுத்துக் கொள்ளும் குழந்தையைவிட, பசியோடு இருக்கும் குழந்தையின் கவனம் சிதறுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம்.

குழந்தைகளை உதாரணமாக காட்டியிருந்தாலும் இது எவ்வயதினருக்கும் பொது. ஆரோக்கியமாக, ஆக்கப்பூர்வமாக
செயல் பட விரும்புபவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது.

பழவகைகள், பழச்சாறு ஆகியவைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
பால் அருந்த மறக்கக் கூடாது.

காலை உணவு எடுத்துக் கொள்வதனால் கிடைக்கும் மற்றொரு நன்மை, நம் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையின் மீது கவனம் செலுத்துபவர்கள், கட்டாயம் காலை உணவை தவிர்க்கக் கூடாது.


காலை உணவு சற்று ஹெவியாக இருந்தாலும் தவறில்லை, மதிய உணவை சமச்சீர் உணவாக சற்று அளவு குறைவாகவும்,
இரவு உணவை மிக மிக லைட்டகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


EAT YOUR BREAKFAST LIKE A KING, LUNCH LIKE A QUEEN, DINNER LIKE A BEGGER.
இதை மறக்காமல் நினனவில் வைத்துக் கொண்டு நேரம் தவறாமல்
சரியான சமச்சீர் உணவை அனனவரும் உண்டு ஆனந்த மாக வாழலாம்.
ஏனென்றால் "உணவே மருந்து".
HAPPY WEEKEND. டின்னர் பற்றிய ஒரு பதிவோடு உங்களை அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

Thursday, December 13, 2007

கருத்தும்! கானமும்!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் ஸ்தாபனம்,

வணக்கம். அன்பு நெஞ்சங்களே! நமது இன்றைய கருத்தும் கானமும் நிகழ்ச்சியில் வளமைப்போல் நேயர் ஒருவரின் பாடல் தெரிவு இடம்பெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு வீதி, இலக்கம் 2037 ஐ சேர்ந்த நேயர்
"தென்றல்" அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு போகலாமா?


1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். "சரணாகதி" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
முருகா! முருகா! முருகா!


2. அள்ளக் குறையாதது இயற்கையின் அழகு. அப்படிப்பட்ட அழகை ரசிக்கும்போது மனம் சிறகடித்து பறக்கிறது. இலங்கையின் பசுமை மிகு
அழகை பார்க்கும்போதெல்லாம் "பட்டம் தரத் தேடுகிறாரரம் அந்த நாயகனை".
முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்றுள்ள அப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா!

3. நேயரின் அடுத்த தெரிவு "சிட்டுக்குருவி" படத்திலிருந்து. பேருந்தில் பயணம் செய்யும் அனுபவத்துடன் அழகான் காதலையும் படம்பிடித்து காட்டுவதாலேயே இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.
நம் நேயரை கவர்ந்த அந்தப் பாடல்:

என் மன்னவன் உன் காதலன்
எனனப் பார்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ?
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ!

4. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் "விகடம்" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல "நச்".
அந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்
"அவள் ஒரு தொடர்கதை".

கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.

5.இன்றைய "கருத்தும் கானமும்" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயரி கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்"
படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்ணுக்கு மெய்யழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு.


6. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது
அந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு
மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். "பூந்தோட்ட காவல்காரன்"
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.


7. குழ்ந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா?
கானக் கந்தர்வன் யேசுதாஸின் குரலில் இந்தப் பாடலை கேட்கும்
பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,
"நினைத்ததை முடிப்பவன்" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்
பட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லன
இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.


8. ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படம் பிடித்துக்
காட்டும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக நேயர் கூறுகிறார்.

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகமே! கோலம் போடு

தோள்கள் ரண்டில் கையோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி.

என்று துவங்கும் பாடலில் கீழ்காணும் வரிகளை
வைர வரிகளாக கூறுகிறார்.

ஒரு கிளி உறங்குது தோளோடு
ஒரு கிளி உறங்குது மார்போடு
குடும்பமே ஆன்ந்தக் கிளிக்கூடு

காற்றடித்து இந்தக் கூடு கலையாது
வெந்நிலவு தண்ணி பட்டு
அழியாது.......


என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.
மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்
வரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான

கே... எஸ்.. ராஜா.


(இது என் 25 ஆவது பதிவு. புதியவளாகிய எனக்கு ஊக்கமளித்து,
உதவி செய்து, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்ட வலையுலக நண்பர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கின்றேன். என் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் தான் இப்பதிவு. நன்றி! அன்பு நெஞ்சங்களே!

Wednesday, December 12, 2007

M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல் பாடம் : 3

நவீன சித்ரகுப்தனும், கர்ணணுமாகிய ரங்கமணிகள்.

அழகான விளம்பரம் இதை நீங்கள் ரசித்திருப்பீர்கள். துயில் எழுந்தது முதல் தன் அன்னையின் முகத்தில் முழிப்பதற்காக கண்களை மூடியபடி அன்னையை தேடிச்செல்லும் விளம்பரம் கவிதையான விளம்பரம். (pears soap)

அந்த விளம்பரக் குழ்ந்தையைப் போல நம் ரங்கமணிகள் காலையில் எழுந்ததும் கண்களை மூடியபடி தலகாணிக்கு கீழே இருக்கும் செல்லிடை தொலைப்பேசியை எடுத்து கொண்டு, கண்களை திறக்காமலேயே அப்படிக்கா போய் கணிணியைப் பார்த்து அதை உயிர்பிப்பார்கள். அதற்கு உயிர் வருவதற்குள் பல்லை தேய்த்து விட்டு, பேப்பரை எடுத்துக் கொண்டு, காபி, போன்கள், கணிணி சகிதம் செட்டிலாகி விடுவார்கள். மேற்சொன்னவை நடக்காவிட்டால் பொழுது விடியாத மாதிரி தான். குளித்து ரெடியாகி அலுவலம் போகும் வரை கணிணி உயிரோடு இருக்கும்,போன்
சத்தம் ஓயாது.

அலுவலகம் போய் வீடு திரும்பிய உடன், உடை மாற்றுவதற்கு முன் கணிணிபொட்டியின் சுவிச்சை தட்டிவிட்டு தான் உடை மாற்ற செல்வார்கள்.
(டிரஸ் மாத்திகிர நேரத்துக்குள்ள கணிணி உயிர்பெற்று தயாராகிவிடுமே! டைம் மேனேஜ்மென்ட்....)

கணிணித்துறையை சேர்ந்தவர்களாக இல்லாத போதும் ரங்கமணிகளூக்கு கணிணி முன் தான் பொழுது போகும். கணிணி, இன்டர்நெட், போன் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டால் "கப்பல் கவிழ்ந்தாற்போல" சோகமாகி, அதை உடனே சரிசெய்ய முயற்சிக்கள் நடக்கும். (பைப் ஒழுகுதுன்னு சொல்லி 4 நாளாகியும் பிளம்பர கூப்பிட மாட்டங்க)

இப்படி கணிணியுடனேயே இருப்பதாலேயே ரங்கமணிகள்
நவீன சித்ரகுப்தன்கள். கர்ணானுக்குத்தானே கவசகுண்டலம் காதோடு இருக்கும். செல்லிடை தொலைப்பேசியையும், கார்ட்லெஸ் போனனயும் காதோடு எப்போதும் வைத்திருப்பதால் ரங்கமணிகள் நவீன கர்ணன்கள்.

இவங்க இப்படியே இருக்காங்களே? என்ன செய்வதுன்னு பார்க்கறது தான் இந்த பாடம். அவங்க அப்படியே இருக்கட்டும். இது ஆண்டவனாக பார்த்து தங்கமணிகளுக்கு அருளிய பொன்னான நேரங்கள்.

அவர்கள் அப்படி "பிஸியாக"இருக்கும் போது தங்கமணிகள் தாங்கள்
விரும்பிய வேலைகளை செய்யலாம். கதைப் புத்தகம் படிப்பது, பாட்டு கேட்கலாம். மிக முக்கியமாக கோவை சரளா- வடிவேலு அடிதடி காட்சிகள், பார்த்து குறிப்பெடுத்து வைச்சுக்கனும். ஒன்னுமே இல்லாட்டி சீக்கிரமா தூங்கப் போகலாம். இப்படி உங்களுகேன்னு நேரம் கிடைக்கிறது அரிது.
மிக முக்கியமாக ஒன்று ஞாபகம் வெச்சுக்கனும். ரங்கமணிகள் கணிணி முன் அமர்ந்திருக்கும் நேரத்தில் தங்கமணிகள் மற்ற வேலைகளை முடித்துவிட்டு ரங்கமணிகளுக்காக காத்திருக்க கூடாதூ. அவர்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு, ரங்கமணிகள் போதும் என்று நினனத்து
கணிணியையோ, போனையோ விட்டுவிட்டு வரும்போது நம் வேலைகளை செய்ய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
அதாவது வீட்டில் இருக்கும் :
ரங்கமணி பிஸி - தங்கமணி ஓய்வு!
தங்கமணி பிஸி - ரங்கமணி ????!!!!
இப்படீ சிலநாள் (பலருக்கு பல நாள்) டிரீட்மென்ட் கொடுத்தால் ரங்கமணிகள் கணிணி பக்கம் போக வேண்டும்
என்றால் தங்கமணிகளிடம் அனுமதி பெற்று போகும் நிலையும், நாளில் குறிப்பிட்ட
சில மணி நேரங்கள் மட்டுமே கணிணி முன் இருக்கும் நிலை ஏற்படும்.
செயற்பாடங்களை மறக்காம் பின்பற்றி செய்யுங்க. அப்பத்தான் பழகும். பயிற்சி சரியா வரும்.
அடுத்த புதன் பார்ப்போம்.

Monday, December 10, 2007

அப்படிப்போடு!!

ஏதோ பழமொழி சொல்வார்களே அப்படி இருக்கிறது.

வலையுலகில் சிலர் தாம் பத்திரிக்கைகளில் படித்ததை பகிர்ந்து கொள்வர்.

இப்போது பத்திரிகையில் பிளாக்கில் படித்ததைப் பிரசூரிக்க ஆரம்பித்துள்ளனர்.

விகடனில் ஒவ்வொருவாரமும் ஏதாவது ஒரு வலைபதிவர் குறித்து வரும்.
(அப்படித்தான் வலையுலகம் பற்றி நான் ஆறிந்து கொண்டேன்.)

12.12.07 தேதியிட்ட குமுதத்தில் , பிளாக் மெயில் என்று 6 பக்கத்திற்கு (92-97)
வலைப்பதிவிலிருந்து 3 இடுகைகளை எடுத்து எழுதியிருக்கின்றனர்.

விதர்பா அவலம், பெரியாரின் நேரடி ஜெயில் விசிட், ஜாலியன் வாலாபாக்கின் "அந்த நாள்" இது தான் அந்த 3 இடுகைகள். எழுதியது யாரோ நான் அறியேன்.

ஆனால் பிளாக் குறித்து அவர்கள் கொடுத்திருக்கும் முன்னுரையில் ஒரு வரி மாத்திரம் மனதிற்கு நெருடலாக இருக்கிறது.

(பத்திரிகைக்கு எழுதினால் பிரசுரம் ஆகாது, பதில் வராது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு ப்ளாக்கை உருவாக்கிக்கொண்டு அதில் தமது எண்ணங்களை, பார்வையை எழுதிக் குவிக்கின்றனர்) என்பது தான் அது.

நீங்களே சொல்லுங்கள்.

Sunday, December 09, 2007

ஹைதராபாத்திலே அறுசுவை உணவு.

ஹைதராபாத் - என்று நினனத்தவுடன் பிர்லா மந்திர், சார்மினார் ஆகியவைகளுடன் நினனவுக்கு வருவது ஹைதராபாதி பிரியாணி.


இதைத் தவிறவும் நான் மிகவும் விரும்பும் இடம் ஒன்று இங்கே உண்டு.


ராணிகன்ஞ் ஏரியாவில் இருக்கும் குஜராத்தி ஜெயின் கோவில் அருகில், இருக்கிறது ஸ்ரீ ஷ்யாம் நிவாஸ். இது ஒரு மார்வாடி, குஜராத்தி, மற்றும் மராத்தி உணவகம்.


பார்க்க சிறிய கடையாக இருக்கும் இதில் விசேஷம் என்ன வென்றால் இது

குடும்பத்துடன் போக ஏற்ற இடம். மெனு கார்ட் எல்லாம் கிடையாது.

ஆனால் அதிர்ச்சி காத்திருக்கும்.

ஆம் இங்கு சப்பாத்திக்கள், கறிவகைகள், சாதம் ஆகியவை "UNLIMITED".


வீட்டுச்சாப்பாடு போன்ற வகையில் நீங்கள் எவ்வளவு கேட்டாலும் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடு பரிமாறுவார்கள். சுடச்சுட சப்பாத்திகளை கையில் வைத்துக்கொண்டு ஒரு பையன் டேபிள்கள் அருகில் வந்து கேட்க கேட்க பரிமாறுவான்.

கோதுமை,ஜோவ்ரா,பாஜ்ரா, பேசன் ஆகிய வகை 4 வகை ரோட்டிகள் இங்கு கிடைக்கும். அன்லிமிடெடாக சாப்பிட்டாலும் வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யாத உணவு. குழந்தைகளுக்கு காரமில்லாமல் தனியாக பருப்பு, மற்றும் கறிவகைகள் பரிமாறப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் குஜராத்தி கிச்சடி & கடி (இம்சை கடிக்கு ஒரு பதிவு போட்டிருந்தார்), ஞாயிற்றுக்கிழமைகளில் பூரியும் இங்கு ஷ்பெஷல். (ஞாயிறு மாலை விடுமுறை)

பாஜ்ரா ரோட்டிகளுக்கு வெல்லம் கொடுப்பார்கள். தயிர்- 10 ரூபாய். ஆம்ரஸ்(Mango juice)um கிடைக்கும். (need to pay extra).

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மேலாக சுவையாலும், உபசரிப்பாலும் உங்கள் வயிறு நிறையும் என்பதற்கு நான் உத்திரவாதம். ஹைதராபாத்தில் இந்த இடத்தை தவிர வேறு எங்கும் குறைந்த பணத்தில் நிறைவான உணவு கிடைக்காது. ஒரு பிளேட் 50 ரூபாய்.

ஹைதராபாத் போனால் ஷ்யாம் நிவாஸ் போய் சாப்பிட்டு, எதிரில் இருக்கும் பான் கடையில் மீட்டா பான் சாப்பிட மறக்காதீர்கள்.

ADDRESS:

SHREE SHYAM NIVAS (MARWADI, GUJARATI & MARATHI FOODS)
2-2-57/4, PAN BAZAR, M.G.ROAD,
NEAR GUJARATI JAIN TEMPLE,
SECUNDERABAD - 500 003

Saturday, December 08, 2007

நாணயத்தின் மறுபக்கம்.

நான் பார்த்த வகையில் சில (பல) திருமணமான பெண்களைப் பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்வி, " இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது"?!

தவறாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!

அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவதைத்தான் கேட்கிறேன். கணவன் - மனைவி சண்டை, மாமியார் சண்டை, உறவுகளைப் பார்க்க, அம்மா, அப்பாவைப் பார்க்க, அது.... இது.... என்று போய் டேரா போட எப்படி முடிகிறது? இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ஓய்வெடுக்க பிறந்த வீட்டிற்கு போவார்கள். எப்படிங்க?

எனக்குத் தெரிந்த ஒரு பெண். தாய்வீடும் உள்ளூரிலேயே அமைந்து விட
ஒவ்வொரு வெள்ளி இரவும், கணவனோடு பிறந்த வீட்டிற்கு போய்விடுவார்.
சனி,ஞாயிறு இரண்டு நாளும் குழ்ந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு இருவரும் ஊர் சுற்றுவார்கள். என்ன கொடுமை இது? இப்படியே கழியும் ஒவ்வொரு வார விடுமுறையும். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்தப் பெற்றோர்கள்
படும் கஷ்டம். பாவம் அவர்கள்.

வெளியூரில் இருக்கும் பெண்கள் கூட அம்மா வீட்டிற்கு அடிக்கடி போவார்கள். பிறந்த வீட்டு பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் நம்
கடமையை விட்டு, பாரமாக (சத்தியமாக திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போய் தங்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு பாரம்தான். என்ன ?தன் மகளாயிற்றே என்று சொல்ல மாட்டார்கள்) ஏன் போகவேண்டும்.

ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு போபவர்களே!! ஓய்வெடுக்கப் போக அது என்ன ஹோட்டலா? ஓய்வு வேண்டுமானால் குடும்பத்துடன் (முடிந்தால் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு) ஏதேனும் ஊருக்கோ, ஹோட்டலில் தங்கி ஓய்வெடுங்கள்.


வயதான் பெற்றவர்கள் நம் வேலையாட்கள் அல்ல.
நமக்காக பாடுபட்டு, நம்மை வள்ர்க்க ஓடியாடி உழைத்தவர்கள் அவர்கள்.
வயதான காலத்தில் சற்று ஓய்வெடுக்கவேண்டாமா? அவர்களின் தனிமையில், ஆன்ந்தத்தில் குறுக்கிடுவது தவறல்லவா?

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உரிமையோடு பிறந்த வீட்டிற்கு செய்யலாமே?

( ஒரு தாய் 4 மணி நேரம் கலங்கிய கண்களுடன் புலம்பிய வார்த்தைகளின் சாராம்சம் இது)

டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!



Friday, December 07, 2007

என் உயிர்த் தோழி

vodafone விளம்பரத்தில் அந்தச்சிறுவனுடனேயே செல்லும் நாய்க்குட்டிப்
போல நான் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் என்னுடன் தான்
இருப்பாள்,

நான் வீட்டில் இல்லையென்றால் அவள் இருக்கும் இடம் தெரியாது,

அவளிடம் நான் மயங்கிக்கிடந்தேன் (கிடக்கிறேன்)

அவள் இல்லாமல் நான் இல்லை. இதனால் நான் வாங்காத திட்டு இல்லை.

போதும் பீடிகை என்கிரீர்களா? சரி சரி சொல்லி விடுகிறேன்.

அவள் தான் எனதருமை வானொலி பெட்டி.

என் பொழுது போக்கே வானொலியும், புத்தகங்களும் தான்.
பாடம் படிக்கும் போது கூட வானொலி அருகில் பாடிக் கொண்டிருக்கும்.

பாடல் கேட்கும் நேரம் தியானம் செய்வது போல் இருக்கும்.

வீட்டில் மற்றவர்கள் தொலைக்காட்சி பார்த்தாலும் நான் வானொலியுடன் தான் இருப்பேன்.

காலை பக்தி மாலையில் (திருச்சி வானொலி) ஆரம்பிக்கும்.

(வங்கக் கடலில் ஒரு முத்தெடுதையும், ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரையும் மறக்க முடியுமா?)

பள்ளிவிட்டு நேராக வீட்டுக்கு ஓடி (சரி சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டு) வருவேன். வழியில் தன் கம்பீரக் குரலில் டீக்கடைகளில் கூட ஒலிக்கும் சரோஜ் நாராயண சுவாமியின் குரலைக் கேட்டபடியே வருவேன்.

ek fankar ( hindi programme) கேட்ட படிதான் சாப்பாடு. பிறகு விவித பாரதியில் தமிழ் பாட்டு கேட்டுக் கொண்டு இருப்பேன்.
3 .30 க்கு திரைப்படப் பாடலோடு திருச்சி வானொலி முடியும்.

அதன் பிறகு பாட்டு, ஹிந்தி வகுப்புக்களுக்கு போய் வந்து பாடங்கள் படித்து
தேன் கிண்ணம் கேட்க ரெடியாகி விடுவேன்.

அப்பா 9 மணிக்கு தூங்கிவிடுவார். சத்தம் கேட்ககூடாது என்பதர்காக
மெல்லிய ஒலியில், காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு போர்வைக்குள்
வைத்து மூடிக்கொண்டு பாட்டு கேட்பேன்.

கடப்பாவில் தெலுங்கு பாட்டு, திருச்சி, மதுரை, சென்னை வானொலி நிலையங்கள், விவிதபாரதி, இலங்கை ரூபவாஹினி ஆகிய நிலையங்கள்
எனக்காகத் தான் இருப்பது போல் ஒரு பாடல் விடமாட்டேன்.

மறக்கமுடியவில்லை அவளை. இன்றும் என் அடுக்களையில் ஒருத்தி, ஹாலில் ஒருத்தி, கையில் ஒருத்தி(மொபைலில் ரேடியோ) என்று என்னோடு இருக்கிறார்கள்.

காலம் மாறினாலும் சில மாறாது. அதில் நானும் என் தோழியும் ஒன்று.

தாயன்பு - இது இல்லாவிட்டால் ஏது வாழ்வு?




தாயின் அன்பில் மிகவும் திளைப்பது மகன்.

அது ஏனென்றால் - ஒவ்வொரு தாயும்,

தன் மகனில் தன் தந்தையை காண்கிறாள்

அதனாலேயே தாய்க்கும் மகனுக்கும் அப்படி

ஒரு பாசப் பிணைப்பு.

தாயின் அன்பில் திளைத்த மகன்,

எல்லாவற்றையும் தனக்காக விட்டு வந்தாளே! மனைவி

என்று உணரும்போது ஆணில் இருக்கும் தாய்மை

வெளிப்பட்டு தாயுமானவன் ஆகிறான் - இங்கு

மனைவி முதல் குழந்தை.


தாய்க்குப்பின் தாரம் என்று உணர்ந்த மனைவி

கணவனுக்கு தாயாய் மாறும்போது அவளின்

முதல் குழந்தை கணவன்.










"அப்பனுக்கு பெண் பிடிக்கும்" என்று
தனக்கொரு மகள் வேண்டும் என்று
ஆண்மகன் விரும்பக் காரணம் எது?
தன் மகளில் தாயைக் காணவிழைகிறான்.
திருமணமாகும் வரைத் தந்தையின்
கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்லம்
கொஞ்சும் மகளின் பிரிவை (திருமணத்திற்கு பிறகு)
தாங்க முடியாத தகப்பன்கள் இருக்கிறார்கள் என்பது
ஆச்சரியமான உண்மை!
இவ்வாறாக தந்தையின் அன்பில் திளைத்த மகள்
தன் மகனின் மீது பாசத்தை பொழிந்து
தன் மகனில் தந்தையை பார்த்து பரவசமாகிறாள்
இது ஒரு சுழலும் சக்கரம்!
இதை உணர்ந்தால் வாழ்வு இன்பம்!

Thursday, December 06, 2007

Bama Vijayam - varavu ettana selavu pathana

அருமையான பாடல் சொல்லும் தகவல் மிக முக்கியமானது.

கூட்டுறவு வங்கிகளில் சொல்வது போல் "நம் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்".

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
FAILING TO PLAN IS PLANNING TO FAIL.

திட்டமிடுதல் மிக அவசியம். இன்றய சூழலில் அதிகம் செலவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கணவனும், மனைவியும் சேர்ந்து பட்ஜெட் போட்டு அழகாக சேமித்து, அளவாக செலவு செய்து, ஆனந்தமாக வாழலாமே!

Wednesday, December 05, 2007

M.SC HUSBANDOLOGY - (முதுகலை இல்லறவியல்) பாடம் : 2

எடுத்த சபதம் முடிப்பேன்! "சொல்வதைக் காதில் பொட்டுக்
கொள்ளக் கூடாது" என்று எடுத்த சபதம் முடிப்பேன்.


பல சமயம் ரங்கமணிகள் நாம பேசறத காதில் போட்டுக்காமலே
இருப்பாங்க. அது ஏன்? எதுக்கு? எப்படி? இது தான் இன்றைய
பாடம்.

நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி ஐயா
என்ன செஞ்சுகிட்டு இருக்காருன்னு பாருங்க.

இந்த மாதிரி சமயங்களில் சொல்லியிருப்போம்.

1. டீவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது. முக்கியமாக sports,
National geographic and news channels போன்றவைத்தான்
பொதுவா பாப்பாங்க. (தோத்துப் போன பழைய மேட்சாகவோ, aeroplane accident பத்தியோ தான் இருக்கும்.)

2. புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா? நடிக்கிறாரா? ஒன்னுமே புரியல)

3. சாப்பிடும்போது.

இந்த அதிமுக்கியம் வாய்ந்த தருணங்களில் மிக முக்கியமான விஷயமாக இருந்தால் கூட சொல்லாதீங்க. சொன்னாக்க செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான்.

நாம் சொல்றது காதிலே விழும். ஆனா கேட்காத மாதிரியோ அல்லது
interest இல்லாத மாதிரியோத்தான் இருப்பாங்க.

இந்த காட்சியைப் பாருங்க.

ரங்கமணி டீவி பார்த்துகிட்டு இருக்காங்க,

"என்னங்க, இன்னிக்க்கு...........", அப்படின்னு தங்கமணி ஆரம்பிக்கிறாங்க.

(சொல்லிக்கிட்டு இருக்கும்போது கேட்கிறாரா? இல்லையான்னு
சந்தேகம் வரும். ஏன்னா? ஐயா கண்ணு டீவி மேலல்ல இருக்கு.)

தங்கமணி," ஏங்க கேக்குறீங்களா?

"ஆமாம்! கேட்டுகிட்டு தான் இருக்கேன்"

"டீவி பார்க்கிறீங்களோன்னு நினைச்சேன்"

"காது கேட்குது சொல்லு" (பெரிய அஷ்டாவதானி. ஒரே நேரத்தில 2 வேலை செய்யறாருன்னு நினைப்பீங்களே?!)

பாதி கவனம் தங்கமணி சொல்லும் விஷயத்தில், மீதி கவனம் பார்த்துக்
கொண்டிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றியோ தான் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

(அடுத்து யாரை இரக்க போறாங்க. மேட்ச் என்னவாகும்?

ஐர்வினால எப்படி முதலைகள் பக்கத்தில நிக்க முடியுது?

புஷ் ஏன் இப்படி செய்யுறாரு? இதான் சிந்தனை)

சரி ஏன் இப்படி இருக்காங்க? என்ன பிரச்சினைன்னு பார்த்தாக்க
விஷயம் இது தான்.

  1. 1. தங்கமணிகள் சொல்றதை கவனிக்கிறார் ரங்கமணி அப்படிங்கற மெசெஜ் தங்கமணிகளுக்கு(அதாவது நாம் சொல்றதுல இன்ட்ரஸ்ட காட்டிட்டா?) உணர்த்திட்டா, அடுத்தமுறை தான் கேட்க விரும்பாத (செய்தி/சூழ்நிலை) போதும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்பதாலேயே இந்த "காது கேளாத" எஃபக்டு.
  2. விஷயத்தை கேட்டு "உம்" கொட்டிட்டா மொத்தமும் சொல்லிடுவாங்களோன்னு பயம்.
  3. கேளாத மாதிரி இருந்தால்," காது கேட்குதா இல்லையா? எந்த உலகத்திலே இருக்காரு"? அப்படின்னு குழம்பி தங்கமணிகளுக்கு பைத்தியம் பிடிச்சிடும்.
  4. கேட்டும் கேளாத மாதிரி இருந்து வெறுப்பேற்றினால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல், வெளிநடப்பு செய்து விடுவார்கள்.தப்பிச்சுக்கலாமே!!!! அது மேட்டரு.

சரி எப்படித்தான்? எப்பத்தான் சொல்லுறதுன்னு கேக்கறீங்களா?

கிட்ட வாங்க ரகசியம் சொல்றேன்!!!

எதை? எப்போது? எங்கே? எப்படி சொல்ல வேண்டும்னு திட்டமிட்டு சொல்லுங்க.

சொல்ல வேண்டியதின் சாராம்சம் மாத்திரம் சொல்லுங்க. இன்ட்ரெஸ்ட் இருந்தா பொட்டியை ஆஃப் செஞ்சுட்டு வருவாங்க.

பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.

சாப்பிடும்போது கண்டிப்பா சொல்லாதீங்க.

மேற்படி சொன்னது எதுவும் ஒத்துவரலைன்னா விட்டுடுங்க. சொல்லாவே சொல்லாதீங்க.

"உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க பிஸியாக இருந்தீங்க. அவசரம். அதனாலே நானே முடிச்சிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்," அப்படின்னு டயலாக் விடுங்க.

சொல்லிட்டு செய்ய வேண்டிய விஷயத்தைக் கூட சொல்லாமலே இருந்துட்டா? செஞ்சுட்டா? விட்டது பிரச்சனை.

அப்புறமென்ன. ஐயா, ஆடோமேடிக்கா," சொல்லாமல் அடிச்ச சுந்தரி- இனி எங்கிட்ட சொல்லுடி சுந்தரி"ன்னு வழிக்கு வந்திடுவாரு.

புரிஞ்சுதா? இது தான் இன்றைய பாடம். சொல்லியிருக்கிற செயற்பயிற்சிகளை செஞ்சு பார்க்கறது தானே

வீட்டுப்பாடம்.

அடுத்த புதன் நான் வந்திடுவேன். நீங்க வற மறந்திடாதீங்க

வர்ட்டா?

பினாத்தலாரின் பதிவுக்கு பின்னூட்டம் பதிவாக

தங்களின் முந்தைய பாடங்களில் நல்லா ஜொள்ளூங்கப்பா என்றும், வேலை செய்யாதீங்க என்று ஆணீய புயல் வீச எழுதி இருந்தாலும் அதற்கு பின்னூட்டம் இடத்தேவையென நினைக்கவில்லை. புதுப்பாடத்திற்கு பதில் போட்டே ஆகவேண்டிய கட்டாயம்.


பொண்ட்டாட்டியத்தான் மாத்த முடியாது, (இப்படி டயலாக் சொல்லி)
அதனால 6 மாதத்துக்கு ஒரு முறை ஆண்கள் மாத்தும் cellphone, tv, handycam,
car இவற்றை குறித்து சொல்ல ஆரம்பிச்சா அவ்வளவுதான்.

போர்டபிள் டீவி வேண்டாம், சாதரணமான டீவீ போதுமே. LCD ல் பாத்தாத்தான் சரியா தெரியுமா?

ஹோம் தியேட்டர் சிஸ்டம், இந்த மாசம் N- 73 music version னா அடுத்த 6ஆவது மாசம் N-90, அப்புறம் சின்ன கணிணியாக இருக்கும் மொபைல்னு
நீங்க இருக்கறத கொடுத்துட்டு மாத்திகிட்டே இருக்கீங்களே இதை எங்க போய் சொல்றது. உங்களுக்கு மாத்திரம் எல்லாம் latest model லா இருக்கணும்.
பெண்கள் நகை, பட்டுப்புடவை வாங்கினா தப்பு.

ஆமாம் எந்த யுகத்தில் இருக்கீங்க? பட்டுப்புடவைக்கும், நகைக்கும் பெண்கள் ஆசைப்படறாங்கன்னே சொல்லிகிட்டு இருக்கீங்களே.

இப்போ மாப்பிள்ளைங்க NRI ஸா இருகறதனால கல்யாணத்துக்கு வாங்கின பட்டும், நகையும் அம்மாவீட்டிலோ/மாமியார்கிட்டையோத்தான் இருக்கு. அதனால granda ஒரு பட்டுபுடவை கல்யாண்த்திற்கு, மத்ததெல்லாம் லைட் வெயிட் சில்க் காட்டன்னு வாங்கிக்கிட்டு, தேவையான நகைத்தவிர மிச்ச பண்த்தை பேங்கல தான் போட்டு வைக்கிறாங்க. இது உங்களுகு தெரியாம போச்சே!

இந்தியாவில் இருக்கும் பெண்கள் செலவு பண்றாங்கன்னா சொல்லிக்கொடுங்க. நானும் செலவு பண்னல, நீயும் பண்னாத. வருமானவரி கட்டறதுலேர்ந்து தப்பிக்க இன்வெஸ்ட் பண்ணலாம்னு பேசி பட்ஜெட் போட்டு காட்டி சேமியுங்களேன். முடிஞ்ச போது ஒருமுறை மனைவியின் விருப்பத்திற்கு என்றால், அடுத்தமுறை கணவன் ஆசைப்படும் லேட்டஸ்ட் எலக்ட்ரானிக் சாமான் வாங்குங்களேன்.

கிராமத்தில இருக்குற முனியம்மா கூட சிறுவாடு காசு சேர்த்து வைக்கும்போது, நகரத்தில் வசிக்கும் கண்ணம்மாக்களுக்கு தெரியாதா? அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.

இதெல்லாம் விட்டுப்புட்டு காமெடி பண்ணாதீங்க. சும்மா பொண்டாட்டிங்களைப் பத்தி தப்பா சொல்லி கல்யாணம் ஆக வேண்டிய வயசு பசங்களை பயமுறுத்தாதீங்க.

Tuesday, December 04, 2007

வாழ்த்துக்கள் முரளி



கிரிக்கெட உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கும் முரளிக்கு
வாழ்த்துக்கள்



டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வார்னேயின் சாதனையை
முறியடித்து முரளிதரன் 709 விக்கெட்டுகளை கைப்பற்றி
சாதனன புரிந்துள்ளார்.




சாதனனகள் தொடரட்டும்! இது முடிவல்ல ஆரம்பம்.

Monday, December 03, 2007

சுவாமியே ஐயப்பா! சரணம் ஐயப்பா!


























குளத்தூர் பாலா ! குணக் கொழுந்தே!
எங்கள் குற்றங்கள் பொருத்தருள்வாய்!
ஆரியங்காவினில் ஆனந்த ரூபா!
அபயம்! அபயம்! ஐயப்பா!
எரிமேலியில் வளர் ஏழைப் பங்காளா!
எங்களைக் காத்தருள்வாய்!
ஐந்து மலைக்கதிபா ஐங்கர சோதரா
ஐயப்பனே சரணம்
கலியுக வரதா! கலிமல நாசனா!
கருணாகர தேவா!
சத்யபரிபாலகா! சத்குண சீலா!
சபரிமாமலை வாசா!
வீரமணி கண்டா! விஜய குமாரா!
விஷ்ணு மோகினி பாலா!
சாந்த தயாபர! சத்குரு நாதா!
சரணம்! சரணம்! ஐயப்பா!
ஆறுவயதில் நானும்அப்பாவோடு மலைக்கு போனது,
பம்பையில் குளிக்கும் போது யேசுதாஸ் அவர்களைக் கண்டது,
மணி கட்டி தம்பி வேண்டும் என்று கேட்டது மனதில் பசுமையாய்
இருக்கிறது.
நாளை அப்பா 28வது முறையாக சபரிமலைக்குச் செல்கிறார்.
அவரோடு தம்பியும், கன்னிச் சாமியாக அம்மாவும் மலைக்குச்
செல்கிறார்.
தேகம் பலம் தா! பாத பலம் தா!

Sunday, December 02, 2007

இவர்கள் இப்படித்தான்!!!!

இந்த ராசியை சேர்ந்தவங்க இப்படித்தான்னு ஒரு பத்திரிகையில்

ஜோஸ்யர் ஒருத்தர் சொல்லி இருக்கிறார்.



ஜோஸ்யத்தில் நம்பிக்கை இல்லாத எனக்கு இவர் கூறியிருப்பது
உண்மையாக இருந்து தொலைக்க, ( மகர ராசி என் ராசி)

எல்லோருக்கும் இது சரியா
இருக்கான்னு கருத்துக்கணிப்பு செஞ்சு பார்க்கலாமேன்னு
இதை பதிவா போட்டிருக்கேன்.



அவர் சொல்லிருக்கிறது சரியான்னு படிச்சிட்டு சொல்லுங்கப்பு.



மேஷம்: நீங்கள் ஏணியைப் போன்று மற்றவர்களை உயரத்தில்
ஏற்றிவிட்டு அழகு பார்ப்பதில் சுயநலமற்றவர்.



ரிஷபம்: நீங்கள் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.
அனைவருடனும்பாகுபாடின்றி பழகுவீர்கள்.



மிதுனம்: நீங்கள் யாரிடமாவது அன்பு காட்டினால்
அதிதீவிரமாகஅன்பு செலுத்துவீர்கள்.
அதே போல் பிடிக்காவிட்டால்திரும்பிக்
கூட பார்க்க மாட்டீர்கள்.



கடகம்: நீங்கள் எதையும் தாங்கும் இதயம்
கொண்டவர். தான்என்னிய காரியம் முடிவடையும்
வரை அயராதுஉழைப்பவர். இதனாலேயே
வெற்றி உங்களிடம் தங்கும்.



சிம்மம் : நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில்
தடுமாறுவீர்கள். நிதானத்துடன் செயல்பட்டால்
வெற்றி உங்களுக்கே.



கன்னி : நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும்
கலைநயத்துடன்,அழகாகவும், நிதானமாகவும்
செய்வீர்கள்



துலாம் : நீங்கள் தன்னை நம்பி வந்தவர்களைக்
கைவிட மாட்டீர்கள்.உதவும் குணம்
உங்களுக்கு உண்டு.



விருச்சிகம் : நீங்கள் மனஉறுதியோடு எதையும்
பொருட்படுத்தாமல் தங்கள் இலக்கை
நோக்கி செல்லும் யதார்த்தவாதிகள்.



தனுசு : நீங்கள் நல்லவர்களுக்கு நல்லவர்.
கெட்டவர்களுக்கும் நல்லவர்.
பிடிக்காவிட்டால் ஒதுங்கிவிடுவீர்கள்.



மகரம் : கோபம் இருக்கும் இடத்தில்தான்
நல்ல குணம் இருக்கும்
என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்.

கும்பம் : உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ
அதனைச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேச மாட்டீர்கள்.

மீனம் : நீங்கள் எந்த ஒரு விஷயத்தை கையளும் போதும்
பகுத்தறிவுடன் அனுகுவீர்கள். மிகவும் அன்புடைய நபர்.



உங்களைப் பத்தி சரியா சொல்லிருக்காங்களான்னு சொல்ல மறந்து
விடாதீர்கள்

( இது நட்சத்திற்கு ராசி)