Friday, August 01, 2008

உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்.

6 வருடங்களுக்கு முன்பு அயித்தானுக்கு இலங்கை மாற்றுதல்
ஆன போது, எல்லோரும்,அங்கே ஏன் போகிறீர்கள்? யுத்தம் நடக்கிறதே!
பயமாக இல்லை? என்று பலரும் பலக்கேள்விகள் கேட்டார்கள்.
அந்த பயம் எங்குதான் இல்லை? இலங்கையில் யுத்தம் சரி.
நம் நாட்டில் என்ன நிலமை நன்றாகவா இருக்கிறது.


மும்பை லோக்கல் ரயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு,
கோயம்புத்தூர் குண்டு தாக்குதல், இந்தோ பங்களூரு பயங்கரம்,
அகமதாபாத் அவலம் எல்லாம் எங்கே நடக்கிறது?
நம் இந்தியாவில் தானே?


உலகத்தின் எந்த மூலையிலும் உயிர் பயம் இருக்கத்தான்
செய்கிறது. அது இயற்கையின் சீற்றமோ, இருப்பவர்களின்
சீற்றமோ உயிர் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறது.



மதத்தின் பேரால் குஜராத்தில் ரயில் எரிந்ததைச் சொல்வதா,
மதத்தின் பெயரால் சார்மினார், லும்பினி பார்க்கில் குண்டு
வெடித்ததைச் சொல்வதா. பாவம். கோகுல் சாட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் மாண்டார்களே!



இதற்கு தீர்வுதான் என்ன? நம் இந்திய நாட்டில் நமக்கு
இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு இடையே
இப்போது இந்த உயிர் பயம் மிகப் பெரிய பிரச்சினையாக
இருக்கிறது.



நாங்கள் இலங்கையில் இருந்தவரை செய்திகளில்
இலங்கையைப் பற்றிய எந்த செய்தி வந்தாலும்
உறவினர்கள், நண்பர்கள் கண்களின் நாங்கள்
ஒருமுறை வந்து செல்வோமாம். உடனே
போன் வந்துவிடும்.


மங்களூர் சிவாக்கூட நான் இலங்கையிலிருந்து
சாட்டும் போது அடிக்கடி, ”யுத்த பூமியில்
உட்கார்ந்து கொண்டு ஜோக் அடிக்காதீங்க.
சீக்கிரம் கிளம்பி வாங்க தாயி!
என்பார்”.


சரி எதற்கு இந்த சீரியஸ் பதிவு? இதில் என்ன சிரிப்பு
என்கிறீர்களா? விதி வலியதுங்கோ.



லேட்டஸ்ட் நீயூஸ் தெரியுமா? பங்களூர்,
அகமதாபாத்திற்கு அடுத்து ஹிட் லிஸ்டில் இருப்பது
ஹைதை தான்.


அக்டோபரில் தீபாவளி வேண்டாம், ஆகஸ்ட் 15க்குள்
தீபாவளி கொண்டாடலாம் என்று இருக்கிறார்களாம்.


உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!!!!!!