Total Pageviews

Sunday, December 21, 2008

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு :)



ஹை ஜாலி, பசங்களுக்கு பரிட்சை முடிஞ்சாச்சு.
18 நாள் லீவு.

அலாரம் வெச்சு அதிகாலையில் எழ வேண்டியதில்லை.:)

மார்கழி குளிரில் போர்வையை போத்திகிட்டு தூங்கலாம்.



விடுமுறையின் போது என் தோழி வர்றாங்கன்னு
பதிவு போட்டிருந்தேன்.

அவங்களோட ஆனந்தமா ஒரு வாரம் விடுமுறையை
கொண்டாடணும்.

அதுக்கப்புறம் பிள்ளைகளுடன் ஒரு டூர்.
(புதுகையிலும், பெங்களூரிலும்
பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடக்கலாம்)




இதனால எல்லோருக்கும் சொல்லிக்கறது
என்னன்னா? இன்னும் 15 நாளைக்கு நான்
லீவு சொல்லிக்கறேன்.

(நடு நடுவில் வந்து தொந்திரவு கொடுக்காம
இருக்க ஆண்டவனைப் பிரார்த்திச்சுக்கோங்க. :)))


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 19, 2008

2009ஆம் வருடத்தின் நிறம் தெரியுமா?





PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக
ஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை
செலக்ட் செய்து வழங்குகிறது.

2009 ஆம் வருடத்திற்கான நிறம் Mimosa

மஞ்சள் புனிதமான நிறம்.

மஞ்சள் நிறம் சூரியனின் வெதுவெதுப்பை
போன்றது.

மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது.
கிருமி நாசினி.

பிறக்கப்போகும் 2009 அனைவருக்கும்
மங்களகரமாக அமைய பிரார்த்திப்போம்.


பெங்களூர் காரவுகளே இது தெரியுமா?




4 வருஷத்துக்கு முன்னாடி ஆரோக்கியமா
சாலட், சூப் மற்றும்
சாண்ட்விச்கள் மட்டும் தரும்
கடையை பங்களூரில் இருக்கும்
ஜெயநகரில் ஆரம்பிச்சிருக்காங்க.
தோசைகளுக்கு பேர் போன்
உணவகங்கள் இருக்கும் இடத்தில்
இப்படி ஒரு கடை.


சாலட், சூப் மற்றும்
சாண்ட்விச்கள்சாலட்,
PURE AND NATURAL இதுதான்
கடையின் பெயர். இப்போ
10 கிளைகள் இருக்காம்.
ஆரோக்கியமான, வெஜிடேரியன்
உணவு (சாலட், சூப் மற்றும்
சாண்ட்விச்கள்) கிடைக்குதாம்.


பனீர்க்கு பதிலாக
டோஃபு, கொழுப்புத் தரும்
கீரீம்களுக்கு பதிலாக
ஸ்கிம்மிடு மில்க் இப்படி
தர்றாங்களாம். இதனால்
டயடும் ஒழுங்கா இருக்கும்.
டய்ட்டாவும் சாப்பிடலாம்.


முகவரி:
PURE AND NATURAL:
260/79,2nd main,
7th block jayanagar,
Bangalore 0 82
phone 080-32902915
************************************************

சுவிச்சு ஒண்ணைத்
தட்டிவிட்டா தட்டுல
இட்டிலியும் சட்டினியும்
வந்திடணும்னு - அறிவாளி
படத்துல கலைவாணர் பாடினார்.

சுவிச்சைத் தட்டினா
வருவதற்கு சில
காலம் ஆகும். ஆனா
ஆன்லைனில்
ஆர்டர் செஞ்சா வரும். :)))

இந்த வசதியும்
தற்போது பெங்களூரில்
மட்டும்தான் இருக்கிறது.:(


Log on for a byte hungryzone

இந்த முகவரியை கிளிக்கி
பரவுஸ் செஞ்சு
HOME DELIVERY OR TAKE AWAY
ஆர்டர் செஞ்சுக்கலாம்.

IIT Alumini ரித்தேஷ்
குமார் & ப்ரியங்கா
தன்னோட அதிக சம்பள
வேலையை விட்டுட்ட்டு
இந்த கம்பெனியை
ஆரம்பிச்சிருக்காங்க.
இப்போ பெங்களூரில்
மட்டும் கிடைக்கும் இந்தச்
சேவை அடுத்த வருடம்
ஹைதைக்கும், சென்னைக்கும்
வரப்போகுதாம்.

HUNGRYZONE BLOG:

பெங்களூர்காரவுக இங்க
போய் பாத்திட்டு
பதிவு போடுங்கப்பா!
நாளைப்பின்ன அந்தப் பக்கம்
வந்தா நாங்களும் போய் பாக்கலாம்.

கூவின பூங்குயில்...

பாடலைக் கேட்க இங்கே:

வீடியோ இங்கே:

கூவின பூங்குயில் கூவின கோழி
குருவிகள் இயம்பின
இயம்பின சங்கம்.
யாவரும் அறிவறியார் உமக்கெளியார்.
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயோ!!!

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,
நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.

வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்

தாழம்பூவில் கல்யாண ஓலைத் தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலைத் தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து

காதல் மணம் காண்போம் எண்ணம்
போல் இன்பத்தின் வண்ணங்கள் ஆஆ

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,
நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்


அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை

கைகள் இரண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் இரண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம் என்றென்றும்
எங்களின் கைகளில்.

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
ஆரிராரோ ஆராரி ராரிரோ
ஆரிராரோ ஆராரி ராரிரோ
*******************************************

கூவின பூங்குயில் கூவின கோழி
குருவிகள் இயம்பின
இயம்பின சங்கம்.
யாவரும் அறிவறியார் உமக்கெளியார்.
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயோ!!!

இந்தப் பாடல் 12 ஆம் வகுப்பில் மனன பாடமாக
வந்திருந்தது. நாங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வதற்காக இந்த வரிகளை தமிழாசிரியை கண்ணகி அவர்கள்
பாட மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது
மொத்தப் பாடலும்.

நான் மிக விரும்பும் பாடல்களில் ஒன்று.

Thursday, December 18, 2008

மளிகைச் சாமான் லிஸ்ட்



வீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை!

என்ன சாமான் இருக்கு? என்ன சாமான் வேணும்?
இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா!
இருக்கற பருப்பையே வாங்கி வந்திருப்போம், இல்லாட்டி
வாங்க வேண்டிய பொடி்யை மறந்து போயிருப்போம்.

திட்டமிடுதல் சாமான் வாங்குவதிலும் அவசியமாச்சே!


1. முதல்ல சாமான் லிஸ்ட் 1 ரெடி செஞ்சுக்கணும்.

அதில் ஒரு மாசத்துக்கு நமக்கு எவ்வளவு பருப்பு,
எண்ணெய் மத்த சாமான், பேஸ்ட், ப்ரஷ்,
ஷேவிங் க்ரீம் எல்லாம் என்னென்ன
தேவைப்படும்னு எழுதி சமையக்கட்டுல
ஒட்டி வெச்சுக்கணும்.
இது மாஸ்டர் லிஸ்ட்.
(விருந்தாளிங்க வந்தா/பண்டிகை
மாசம் தவிர இந்த அளவு மாறாது.)


2. ஒவ்வொரு மாதமும் இன்னொரு லிஸ்டில்
மாஸ்டர் லிஸ்டில் இருக்கும் அளவுகளை
மட்டும் குறிச்சிட்டா லிஸ்ட் ரெடி.

3. இதனால மறக்காம எல்லா சாமானும்
வாங்கிடலாம்.

4. ஒரே தடவையில் எல்லா சாமானும்
கொண்டு வந்து வெச்சிடறதால அலைச்சல்
மிச்சம், தவிர பணமும் சேமிப்பாகும்.
(அதெப்படி்ன்னு கேட்டா மஞ்சள் தூள்
வாங்கக் கடைக்கு போவோம், அங்க போயிட்டு
வேற ஏதாவது சேத்து வாங்கிடுவோம். அது
குறையுமில்ல!! :)) )


3. கடைக்கு போ்றதுக்கு முன்னாடி போன மாதம்
வாங்கிய சாமான் ஏதும் மிச்சம் இருக்கான்னு
பாத்திட்டு, இந்த மாசத்து லிஸ்டில் அதை குறைச்சு
லிஸ்ட் தயார் செஞ்சுக்கணும்.

லிஸ்டெல்லாம் யாருங்க உக்காந்து எழுதறதுன்னு
கவலைப்படாதீங்க நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக
PROVISION LIST ரெடி.

எனக்கு மெயில் அனுப்புங்க.
லிஸ்டை நான் அனுப்பி வைக்கிறேன்.

ஆங்கிலத்தில் இருக்கும். அதை ப்ரிண்ட் எடுத்து
அதை 13 ஜெராக்ஸ் காப்பி போட்டு வெச்சுக்கோங்க.
1 லிஸ்டை மாஸ்டர் லிஸ்டாக்கி கிச்சனில்
வெச்சுக்கிட்டா, மத்த காப்பிக்களை ஒவ்வொரு
மாதமும் எடுத்து உபயோகிச்சுக்கலாமே!

ஹேப்பி ஷாப்பிங். :))))))))

Wednesday, December 17, 2008

முன்னுதாரணமாக ஒரு தோழி!

என்னுடைய இந்தத் தோழியை உங்களுக்கு அறிமுகப்
படுத்தவேயில்லையே!

இலங்கையில் இருந்த பொழுது எனக்கு அறிமுகமானத்
தோழி இவர்.

துரு துருவென ஏதோ ஒன்று செய்து கொண்டே இருப்பார்!
தன்னை பிசியாக வைத்துக்கொள்வதிலாகட்டும்,
தான் சேர்ந்த துறையில் தன்னை அப்டேட் செய்துகொள்வதிலாகட்டும்
அவரைப் பார்த்து நான் வியந்து கொண்டிருப்பேன்.

ஆள் பாதி ஆடை பாதி என்பது சரிதான். இவர்
சுடிதார் உடுத்தினாலும் சரி, புடவைக் கட்டினாலும்
சரி அதில் ஒரு கண்ணியம் தெரியும்.


சைக்காலஜி கோர்ஸ் செய்து கவுன்சிலிங் செய்து
கொண்டிருந்தார். ஒரு கல்லூரியில் சைக்காலஜி
விரிவுரையாளராகவும் வேலைபார்த்து வந்தார்.

பர்சனாலிட்டி டிவலப்மெண்ட் கோர்சிற்கு
தானே புத்தகம் ஒன்றை( பல புத்தகங்களீன்
ரெஃபரன்ஸுடன்) தயாரித்தார். அதை அச்சுக்
கோக்கும் வேலை என்னுடையதாக இருந்தது.

அப்போது அவரிடம் கற்றது என் மகனுக்கு
உபயோகமாக இருந்தது. எனக்குள்ளும்
நிறைய மாற்றம். ஒரு பிரச்சனையை
எவ்வாறு அணுக வேண்டுமென, கற்றுக்கொண்டேன்.

Anger Management, Time management,
Personality Management, general stress,
Problems in Married life இவைகளுக்கு
கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்.
தற்போது அங்கே இருக்கும் ஒரு மருத்துவமனையில்
கவுனிசிலிங் தருகிறாராம்!

கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் போதே
எனக்கு மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றார்!!
ஆச்சரியமாக பார்த்தேன்! ஆனால் அவருக்கு உறவினர்கள்
யாரும் தமிழ் நாட்டில் இல்லை. என் அப்பாவீட்டு
முகவரி கொடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
வேலை பார்க்கும் என் தோழி மூலம் ஏற்பாடு செய்து,
அஞ்சல் வழியில் மேல் படிப்பு படித்து சென்ற வருடம்
முடித்து விட்டார்.

தினமும் வாக்கிங்,ப்ர்ட்ஜ் விளையாடுவது,
பூஜை, நண்பிகளுடன் அளவளாவுதல்,
வியாழக்கிழமைகளில் சாயிபாபா கோவில் போதல், நல்ல
திரைப்படமா உடனே பார்த்துவிடுதல் என
பிசி பிசி தோழி!!!

சரி என் தோழியின் வயது எத்தனை தெரியுமா?
53 வயது. ஆம் அவரின் பெரிய மகனுக்கு
திருமணமாகி அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்.
சென்ற வருடம் மகளுக்கு திருமணமாகி விட்டது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு படிப்பது கஷ்டமா என்று
கேட்கிறீர்களா? குழந்தைகள் சின்னதாக இருந்த பொழுது
சென்னையில் கார்மெண்ட் பிசினஸ் நடத்தி உலகம்
முழுது சுற்றிக்கொண்டிருந்தவர்.

50 வயதிலும் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு,
ஃபிட்டாகவும் வைத்துக்கொள்கிறார். (தைராய்டு,
சுகர், அல்சர் என உடல் கோளாறும் இருக்கிறது)

இந்த வயதில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சியும்
பெற்றார். வள்ளிக்கு இந்த வயதில் படிப்புத் தேவையா?
என்று ஏளனம் பேசிய அவரது தோழிகள் இப்போது
வாய்பிளந்து பார்க்கிறார்கள்.

நானும் ஆண்ட்டியைப் போல எப்போதும்
ஏதாவது கற்றுக்கொண்டு, சுறு சுறுப்புடன்
இருக்க வேண்டுமென்றே நினைப்பேன்.


(என்னைப் போல ஒவ்வொருவரின் பிறந்த நாள்,
திருமண நாளை ஞாபகம் வைத்து வாழ்த்துவார்.

எங்கள் வள்ளி ஆண்ட்டி இன்று போல், என்றும் வாழ
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, December 16, 2008

அண்ணா கதை!

அம்மா! உங்க கிட்ட பேசணும்! அந்த ரூமுக்கு 5 நிமிஷம்
வாங்களேன்!" என்றழைத்தாள் அம்ருதா.
குழப்பத்துடன் போனேன்.
"அண்ணாவுக்கு என்னைக் கண்டா பிடிக்கறதே இல்லை!
என்னை ரொம்ப திட்டறாங்க!
ஹீ ஹேட்ஸ் மீ!!!" என்று கண்களில் நீருடன் சொன்னாள்.

"நான் பேசுகிறேன்! நீ முகத்தைக் கழுவி வா!" என்று
சொல்லிவிட்டு, மகனைத் தனியாக அழைத்து,"என்ன?
கண்ணா! என்ன பிரச்சனை? என்றேன்.

"அம்ருதா! எதற்கெடுத்தாலும் ஆர்குயுமெண்ட் செய்யறாம்மா!"
எனக்கு கோபம் தான் வருது. என்றான் ஆஷிஷ்.

நானும் சமீபகாலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஐயாவிற்கு கோபம் அதிகமாகவே வருகிறது.( டீன் ஏஜிற்குள்
அடி எடுத்து வைக்குமுன் ஏற்படும் மாற்றங்களி்ல்
இதுவும் ஒன்றாச்சே!) குரல் மிகப் பெரிதாக
வரும்பொழுது கண்டித்துக்கொண்டிருந்தேன். இருவரையும்
திட்டி அமைதிப் படுத்தியதும், கொஞ்சம் விலக்கி வைத்ததும்
உண்டு.

சின்னவளும்
அவனுக்கு விடாமால் வாயடிக்கிறாள்.
அவளுக்கும் சொல்லியும் நிலமை இப்படி வந்திருக்கிறது.
இருவரையும் அழைத்தேன்." உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கதை
சொல்லப்போறேன்" என்றேன்.

இருவரும் வந்து என் பக்கத்தில் அமர்ந்தேன்.
ஒரு வீட்டுல ஒரு குட்டிப் பையன் இருந்தான்.
அவனுக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுதுன்னு
ரொம்ப சந்தோஷப் பட்டான்.
எப்பம்மா வரும் பாப்பான்னு? அடிக்கடி அவங்கம்மாவைக்
கேப்பான். "பொங்கலுகப்புறம் பாப்பா வரும்னு"
அவங்கம்மா சொல்ல பொங்கலுக்காக காத்திருக்க
ஆரம்பித்தான் அந்தக் குட்டிப் பையன், என்று
நான் சொல்லி முடிக்குமுன்னரே ஆஷிஷ்
"அது நான் தான்!" என்று சிரித்த முகத்துடன்
சொன்னான்.

"அப்ப எப்பவரும்னு கேட்ட! இப்ப என்னைத்
திட்டுற" என்றாள் மகள். இரு இரு நான்
இன்னும் முடிக்கலை! என்று தொடர்ந்தேன்.
அந்தக் குட்டிப் பையன்
ஆஷிஷ் தான். நீ பிறந்த பிறகு ஹாஸ்பிட்டலில்
என் கூடவே இருந்தான் அண்ணா! நான் இருந்த
ரூம் வாசலில் கூர்கா மாதிரி உட்கார்ந்துக்கொண்டு
அவனுக்குத் தெரியாதவர்கள் யாரும் பாப்பாவைத்
தொட்டு விடாமல் பார்த்துக்கொள்வான்.

தெரியாதவர்கள் தொட்டால்,"என் தங்கச்சி பாப்பாவை
தொடக்கூடாது"என்று சத்தம் போடுவான்.

அம்ருதாவின் முகம் மலரத் துவங்கியது. ஆஷிஷோ
பெருமையான முகத்துடன் அமர்ந்திருந்தான்.

வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு பாப்பாவை விட்டு
எங்கேயும் போக மாட்டான். பக்கத்திலேயே
உட்கார்ந்து ஈரமாக்கிவிட்டால் உடனே
துணியை மாத்தச் சொல்வான். (6 மாதம்
கழித்து அவனே மாத்திவிடுவான்) பால் பாட்டிலை
தான் தான் பிடித்துக்கொள்வான்.

பள்ளியிலிருந்து வந்த உடன் கேட்கும் முதல்
கேள்வி,"பாப்பா என்ன செய்கிறாள்" அண்ணா
இப்போதும் அப்படித்தான் இருக்கிறான்.


"ஹீ ஸ்டில் லவ்ஸ் யூ" அண்ணாவைக்
கேள் என்றேன்.
அவள் கேட்கும்ன்னே," ஆமாம், அம்ருதாவை
பிடிக்காதுன்னு யாராவது சொன்னாங்களா?
ஆர்குயுமண்ட் செய்வதுதான் பிடிக்கலை".
என்றான்.

ஆஷிஷ்! உன்னை முதன் முதலில் தனியாக
ஃப்ளைட்டில் அனுப்பி வைத்தோமே ஞாபகம்
இருக்கிறதா? என்றேன். ம்ம். இருக்கு என்றான்.

அன்றும், நீ திரும்பி வரும் வரையும் உனக்காக
அம்ருதா எவ்வளவு அழுதாள் தெரியுமா?

அம்ருதா அண்ணாவுக்கு என்னென்ன பிடிக்கும்?
என்றேன். அவளும் வரிசையாகச் சொன்னாள்.

ஆஷிஷ், அம்ருதாவுக்குப் பிடித்ததை நீ சொல்?
அண்ணாவும் சொன்னார்.

நீங்க ரெண்டு பேருமே எம்புட்டு பாசம் வெச்சிருக்கீங்க?
அதனாலதான் அவங்களுக்குப் பிடிச்சது என்னன்னு?
தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.


ஓகே அம்ருதா ஒரு டீல். அண்ணாவுக்கு
பிடித்த மாதிரி நீ ஆர்குயூமெண்ட் செய்யாமல்
எதுவானாலும் என்னிடம் வந்துசொல்.

ஆஷிஷ் நீயும் அம்ருதாவிடம் கோபப்படாமல்
மெல்லச் சொல்லிப்பார் கேட்கவில்லை என்றால்
என்னிடம் வந்து சொல், சரியா? என்றேன்.

இருவரும் தலையாட்டினார்கள். இது போதுமா?
என்றேன். அண்ணனைக் கட்டிக்கொண்டு
முத்தம் கொடுத்தாள் அம்ருதா. பதிலுக்கு
அண்ணாவும் முத்தம் கொடுத்தார்.
கோபமான மூடு போகத்தான் இந்த கட்டிக்கொள்ளலல்)


இப்படி பேசிய பிற்கு நிறைய மாற்றங்கள்.
ஒருவரை ஒருவர் வெறுப்பது போல் இருந்த
தருணங்கள் குறைந்தது.

கலந்து விளையாடத் துவங்கினார்கள்.

பிள்ளைகளுக்கு பரிட்சை நடந்துக்கொண்டிருக்கிறது.
நேற்று அம்ருதாவிற்கு மேத்ஸ். ஒழுங்காக செய்வாள்
ஆனாலும் என்னவோ கொஞ்சம் டென்சாகவே இருந்தாள்.

அவளை ரிலாக்ஸாக்க மெடிட்டேஷன் செய்ய வைத்தேன்.
அது முடிந்ததும் கண்ணிலிருந்து கண்ணீர் மழை.
அதைக் கண்டதும் ஆஷிஷ் அம்ருதாவின் அருகில்
அமர்ந்து கண்களைத் துடைத்து விட்டு,"பாப்பா
அழக்கூடாது! உன்னால முடியும். அம்மா சொல்லிக்கொடுத்த
சி.எம் டபிள்யூ சொல்லி செஞ்சா போதும் பாப்பா"! என்று
சொல்ல கடவுளுக்கு நன்றி சொன்னேன் நான்.

************************************
இந்தக் கதை மட்டுமல்ல இப்படி இவர்கள்
இருவரின் கதைகளையும், எத்துனை அன்பாக
இருந்தார்கள், இருக்கிறார்கள் என்று சொல்வதனால்
அன்பு எனும் கிணறு அடிக்கடி தூர்வாரப்படுகிறது.
அப்புறமென்ன அன்பெனும் ஊற்று சுரந்துக்கொண்டே
இருக்கும் தானே!

அண்ணாவை அடிக்காதே!

ஒரு கொடியில் இரு மலர்கள்

இந்த இரண்டு பதிவையும் படிங்க.

நானும் சினிமாவும்!!!

நானும் சினிமாவும் தொடர் பதிவில் என்னை
கோப்பதாகச் சொன்னபோது வேண்டாம் என
கெஞ்சினேன். புரிந்துக்கொண்ட நண்பர்களுக்கு
நன்றி. ஆனாலும் சினிமா பற்றிய என் நினைவுகள்
இந்தப் பதிவு.

நான் முதன் முதலில் பார்த்தத் திரைப்படம் என
என் நினைவுகளில் இருப்பது கல்யாண ராமன் தான்.

புதிதாக சினிமா வந்திருக்கிறது என்பது சுவரொட்டி
பார்த்து தெரிந்துக்கொள்வேன், அல்லது ரோட்டில்
மைக் கட்டி அறிவித்து செல்வார்கள் அதைப் பார்த்து
தெரிந்துக்கொள்வேன். உடன் அம்மாவிடம் போய்
நிற்பேன். அம்மாதான் சினிமாவுக்கு அழைத்துச்
செல்வார்.
அப்பாவுடன் சினிமா என்பதெல்லாம்
கனவில். (நானும் அப்பாவும் மட்டும் பார்த்த
திரைப்படம் என்றால் அது மகாகவி காளிதாஸும்,
சம்பூர்ண ராமாயணமும் தான். அப்போது எனக்கு
8 வயது(எப்படி ஞாபகம் இருக்குன்னு கேக்கறீங்களா!
முருங்கைக்கீரை அதிகமாக ஆய்ந்து கொடுத்ததற்காக
காளிதாஸ் படம் (செல்லம் டாக்கீஸில்) இரண்டாவது
குர் பானி படம் பார்க்கவேண்டும் என்று கேட்டதர்கு
முடியாதென அழைத்துச் சென்ற படம் ராமாயணம்)
பெரிய மாமாவிற்கு திருமணமான பிறகு
அத்தைக்காக கேளடி கண்மணி திரைப்படம் பார்க்க
அப்பாவும் உடன் வந்து சாந்தி தியேட்டரில் படம்
பார்த்தோம்.


மற்றபடி அப்பா சினிமாவுக்கெல்லாம் அழைத்துச்
சென்றதுமில்லை, உடன் வந்ததுமில்லை. :(

அம்மா வேலைக்குச் சென்றதால்
அவருக்கு அதிகம் வேலை இல்லாத பொழுதுதான்
சினிமா. அந்த ஒரு சினிமாவும் பார்த்தது பசுமரத்தாணி
போல் மனதில் பதியும் அதற்கு காரணங்கள்
அதிகம்.

நான் கேட்கும் எல்லா படத்திற்கும் அம்மா அழைத்துச்
செல்ல மாட்டார்! நல்ல படமா? எல்லாம் பார்த்து
தான் அழைத்துச் செல்வார். அது எப்படி?

முன்பெல்லாம் புதுகை பழநியப்பா தியேட்டர்,
வெஸ்ட் டாக்கிஸீல் வரும்
படங்கள் நல்ல படம் (100 நாள் ஓடும் படங்கள்)
அதற்கப்புறம் சாந்தி தியேட்டரில் எந்தப் படம்
வருதோ அதுவும் சூப்பரான படமாக இருக்கும்.
எஸ்.வி.எஸ் தியேட்டர் படங்களும் ஓகே.
(சாந்தி தியேட்டரும், S.V.S உம் ஒரே உரிமையாளரது
தான் என்பதால் இரண்டு தியேட்டரிலும் ஒரே படம்
ஓடும்)அதற்கப்புறம் ஆர்.கே.பியில்தான் நல்ல
படம் ஓடுகிறது என்று சொன்னார்கள்.



இந்தத் தியேட்டரை வைத்து பார்ப்பதை விட
அம்மா படங்களைத் தெரிவு செய்வது அழகு.
படத்தின் பெயரைச் சொன்னாலும் அம்மா
"யாரு நடிச்சிருக்காங்க? டிரைக்டர் யாரு?
இசையாரு? எல்லாம் பாத்துகிட்டு வா"
என்பார் அம்மா. இந்தக் காம்பினேஷன்
நன்றாக இருந்து,
படத்தின் பெயரை வைத்து தான்
வேலைப் பார்க்கும் இடத்தில்
மற்றவர்களின் கருத்தைக் கேட்டு
பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம்
என்றால் மட்டுமே அம்மா
அப்பாவிடம் பேசுவதாகச் சொல்வார்.

அப்பா அவ்வளவு சீக்கிரம் வரம்
தர மாட்டார். சில சம்யங்களில்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி
வரம் கொடுக்க மாட்டார், அல்லது
பூசாரிக்கு மனம் இருந்தாலும் சாமி
வரம் கொடுக்க மாட்டார். இவர்கள்
பேசி முடிப்பதற்குள் அந்த சினிமா
தியேட்டரை விட்டே போயிருக்கும்.:((

நல்ல சினிமாவாக இருந்தால் பார்க்க வை
சாமி! என்று ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்
நானும் தம்பியும்!

அம்மாவிடமிருந்து கற்றதனால்தான்
கொஞ்சம் பெரிதான பிறகு நல்ல படமாக
இருந்தாலும் எனக்குப் பிடித்தால் மட்டும்தான்
போவது என்று முடிவு செய்தேன்.

அம்மாவும் தம்பியும் மட்டுமோ, அல்லது
அப்பா,அம்மா, தம்பி மூவருமோ சினிமாவுக்குச்
சென்றால் எனக்கு டிக்கெட்டிற்கான பண்த்தை
கொடுத்துவிடவேண்டும். நான் வீட்டிலேயே
இருந்துக்கொள்வேன். பாட்டி துணைக்கு
இருப்பார்கள்.


சரவணா தியேட்டரில் சினிமாவி்ற்கு
போகிறார்கள் என்றால் மட்டும் உடன் செல்வேன்,
ஆனால் தியேட்டருக்கு போகாமல் பின்னாலிருக்கும்
அம்மம்மாவீட்டிற்கு போய் விடுவேன். படம்
முடிந்தோ அல்லது அடுத்த நாளோ வீட்டிற்கு
வருவேன்.(இப்போது அந்தத் தியேட்டரும் இல்லை,
அம்மம்மாவும் மும்பையில் இருக்கிறார்கள்)


வெளியே போவதாகச் சொல்லி பிள்ளைகளைச்
சஸ்பென்ஸாகத் திரைப்படத்திற்கு அழைத்துச்
செல்வது எனக்கும் அயித்தானுக்கும் பிடித்த ஒன்று.
போகும் இடம் வரும் வரை சினிமாவா? பார்க்கா?
என்று பிள்ளைகள் சின்ன டென்ஷனுடன் வருவார்கள்.
தியேட்டரில் நிறுத்தியவுடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும்
படத்தைப் பார்த்து சந்தோஷமடைவார்கள். :))

தா ரா ரம் பம்,தாரே ஜமீன் பர், தாஸ்விதானியா ஆகிய
படங்கள் பார்த்து விட்டு பி்ள்ளைகள்,
"எப்படி அம்மா செலக்ட் செய்யறீங்க!
சூப்பரா இருக்கு! சொல்லி கழுத்தை கட்டிக்கொண்டு
முத்தமிடுவார்கள்," தேங்கஸ்ப்பா!" என்று
அப்பாவுக்கும் முத்த மழைதான்.

அம்மா அன்று கற்றுத் தந்த வழியில்தான்
நான் இன்றும் பார்க்க வேண்டிய படங்களைத்
தெரிவு செய்கிறேன்.

ஊருக்குப் போய் அம்மாவைக் கட்டிக்கொண்டு
நானும் நன்றி சொல்ல வேண்டும்.

Monday, December 15, 2008

குத்தாட்டம், கோலாட்டம், கொண்டாட்டம்!!

குத்தாட்டம், கோலாட்டம், கொண்டாட்டம்!!
இப்படித்தான் இருக்கு இப்ப வீடு!!!

டிசம்பர் துவங்கியதிலிருந்து கவுண்டவுன்
ஸ்டார்ட் ஆகிடுச்சு. தங்களோட ரூமில்
செட்டிங் எல்லாம் மாத்திட்டாங்க.


என் தங்கை(கசின்) எங்ககூடத்தான் இருக்காங்க.
வேலைக்குபோறவங்க. என் பிள்ளைகளுடன் தான்
படுத்துக்கொள்வார். மூவரும் கதை பேசி, சிரித்து
மகிழ்ந்து கிடப்பார்கள்.

"சித்தி, டிசம்பர் 20 - 25 தேதி வரை உங்களுக்கு
இந்த ரூமில் நோ எண்ட்ரி தான்!! இது ஆஷிஷ்.

"எங்கடா போகச் சொல்றத் தம்பி?"
கம்ப்யூட்டர் ரூமில் படுத்துக்கவா? இது தங்கை

"அங்கையும் புக் செஞ்சாச்சு" இது அம்ருதா.

"என்னக்கா ஆச்சு இவங்களுக்கு?"ன்னு என்னிடம்
கேட்டாள், பதிலும் பசங்களே சொல்லிட்டாங்க.

"எங்க ஃப்ரெண்டு வர்றாங்க. அவங்க வந்தா
இந்த ரூமுக்குள்ள அம்மா, அப்பாவுக்கே
எண்ட்ரி இல்ல."

மிக மிக ஆவலுடன் தன்னுடைய நட்பைச்
சந்திக்க காத்துக்கிடக்காங்க.

எங்கெல்லாம் போகணும்? என்னென்ன
செய்யப்போறாங்க, பிரதம மந்திரியின்
டூர் போல் பக்காவா ப்ளானிங் செஞ்சுட்டாங்க.

இப்ப மட்டுமா?

கொஞ்சமா கொசுவத்தி சுத்திக்கறேன்.

அயித்தான் மட்டும் இலங்கையில் இருந்த
நாட்களில் பழக்கமானவர் பாலகிருஷ்ணா.
அவரது மனைவி அண்ணபூர்ணா.
அவர்களுக்கு இரண்டு மகள்கள். பெரியவள் பானு
ஆஷிஷைவிட 1 வயது மூத்தவள், சின்னவள்
தேஜு அம்ருதாவைவிட இரண்டு மாதமே பெரியவள்.
(நான் அம்ருதாவை அம்மா என்று அழைப்பதாள்
தேஜுவை பெரியம்மா என்றுதான் அழைப்பேன்.
அப்படி அழைத்தாள் அவளும் மிக மகிழ்வாள்)

நாங்களும் இலங்கைச் சென்ற பிறகு எனக்கும்
அண்ணபூர்ணாவுக்கும் நல்ல நட்பு. அடிக்கடி
சந்திப்போம். பல இடங்களுக்கு இரு குடும்பங்களும்
சேர்ந்தே செல்வோம். பிள்ளைகளுக்குள்ளும்
நல்ல நட்பாகிவிட்டது.

ஹோட்டலில் விருந்து உண்வதற்குள்
4 பெரியவர்கள்(அதாங்க எங்க வீட்டு
குட்டீஸுகள்) மாநாடு போட்டு
யார்வீட்டுக்கு யார் போவதுன்னு
முடிவு செய்வார்கள்.


SLEEP OVER NIGHTS எங்கே என்பது
முடிவாகிவிடும். அந்த பிள்ளைகள் எங்கள்
வீட்டிற்கோ, இவர்கள் அங்கேயோ போய்
வார இறுதியை கழிப்பார்கள்.

இல்லாட்டி
போன் போட்டு "ஆஷிஷ் எங்க வீட்டுக்கு
வா" என்பாள் பானு. அங்கேயிருந்து போன்
வராவிடில் ஆஷிஷ் போன் போட்டு
பானுவையும், தேஜுவையும் எங்கள் வீட்டிற்கு
வரவழைத்துவிடுவான்.

விளையாட்டு, இஷ்டமான உணவு
என ஜாலியாக இருக்கும். 4 பேரும் ஒரே
அறையில் தூங்குவார்கள். இரவு முழுதும்
பேசிப்பேசி களைத்து நடு நசிக்கு மேல்தான்
தூங்குவார்கள். :) அப்படிப்பட்ட தோழிகள்
வரப்போகிறார்கள் என்பதால்தான் மேற்சொன்ன
ஆட்டமெல்லாம்.

அண்ணபூர்ணா எனக்கு மிக மிக நெருங்கிய
தோழி.பிள்ளைகளுக்கு அவர்கள் தன் வேலையைச்
செய்தால், வீட்டில் உதவினால் என்று நான்
பாயிண்ட்ஸ் கொடுத்து பாக்கெட் மணி அளித்து
அதை வங்கியில் போடும் பழக்கத்தை எனக்குச்
சொல்லிக்கொடுத்தவர். தனக்குத் தெரிந்தவற்றை
நாங்கள் இருவரும் பகிர்ந்துக்கொள்வோம்.

முதல் முறையாக என்னைவிட்டு அம்ருதா
தைரியமாக இருந்தது அண்ணபூர்ணாவிடம்தான்.

அவர்கள் நால்வரும் எங்கள் நால்வருக்கும்
நல்ல நட்பு. நானும் பாலகிருஷ்ணா அவர்களுக்கு
பிடித்த வாழைக்காய் பொடி செய்ய
வேண்டும், அண்ணபூ்ர்ணாவுக்கு பிடித்த
வெள்ளரிக்காய் ஆவக்காய், புளிமிளகாய்
எல்லாம் ரெடியாக வைத்துக்கொண்டு
காத்திருக்கிறேன். :)

ஐமேக்ஸில் சினிமா,தோலாரி தனி, சட்னீசில் சிரஞ்சீவி தோசா,
மெக்டோனால்ட்ஸ் என பிள்ளைகளும் திட்டத்துடன்
காத்திருக்கிறார்கள்

அயித்தானும் அவர்கள் இங்கே வருவதற்குள்
தன் டூரை முடித்துக்கொண்டு அவர்கள் இங்கே
இருக்கும்போது தன்னை ஃப்ரீயாக வைத்துக்கொள்ள
திட்டமிட்டுள்ளார்.

இதோ இந்த வாரம் பிள்ளைகளுக்கு பரிட்சை முடிந்து
அவர்கள் நண்பர்கள் வரும்பொ்ழுது விடுமுறை.
"இன்னும் 4 நாள் தான் இருக்கு, அதுக்கப்புறம்
இங்க என்ன நடக்குதுன்னு மட்டும் நீங்க பாருங்க
சித்தி" என்று சித்திக்கு டெர்ரர் மெசெஜ் கொடுத்து
கிட்டு இருக்காங்க.

"அவங்க ஊருக்குபோனதும் நீங்க என் கிட்டத்தானே
வரணும்" என்ற சித்திக்கு " அது அப்ப பாத்துக்கலாம்
என்ன அண்ணா சொல்ற?!!" என்கிறாள் அம்ருதா.

M .Sc Husbandology (முதுகலை இல்லறத்தியல்) பாடம்:5

அப்பா மகள் கூட்டணியும் அநாதை ஆகிப்போன தங்கமணியும்.

இதுதாங்க இன்றைய பாடம்.

அப்பாக்களுக்கு மகள் மேல் பாச மழைதான்.

"இந்தா! எம்பொண்ணை ஒண்ணும் சொல்லாத!"

" அம்மா கிடக்கறா! நீ வாடிச் செல்லம்"

" மாமியார் வீட்டுக்கு போகும்போது பாத்துக்கலாம்!
அதுவரைக்கும் என் பொண்ணை வேலை ஏவாத.
அவ என்ன வேலைக்காரியா?"

இப்படி தன் தங்கமணிக்கு லட்சார்ச்சனை செய்யும்
ரங்கமணிகள் தான் ஏராளம்.

தவறு செய்யும் மகளை அதட்டி சொல்லிக்கொடுக்க
முடியாம எத்தனை அம்மாக்கள் கஷ்டப்படுறாங்க!
திட்டினா மகள் அப்பாகிட்ட போட்டுக்கொடுத்திடுவா,
அதுக்கப்புறம் கேக்கவே வேணாம்!

ஆடுபகை குட்டி உறவு கதைதான். தங்கமணியை
ஒரு எதிரி மாதிரி நினைச்சு, அம்மா சொல்
கேக்கக்கூடாதுன்னே பால பாடம் சொல்லிக்கொடு்த்து,
செல்லம் கொ்டுத்து தலைக்கு மேலே ஏத்தி வைச்சுக்குவாங்க.


அப்பா செல்லமா மகளும் ஒரு வேலையும் செய்யாம
வேளா வேளைக்கு அம்மா சமைச்சதை குத்தம்
சொல்லிக்கிட்டே மூக்க பிடி்க்க சாப்பிட்டு அப்படியே
கல்யாணம் ஆகிப்போனதும் அங்க போய் ஒரு வேலையும்
செய்யத் தெரியாம திண்டாடுவாங்க.

ஆனா திட்டு விழுவது அம்மாவுக்குத்தான். "அம்மாக்காரி
பொண்ணை எப்படி வளர்த்து வெச்சிருக்கா பாரு" அப்படின்னுதான்
சொல்வாங்களேத் தவிர அப்பாவை எதுவும் சொல்ல மாட்டாங்க.
ஆகவே ரங்கமணிகளே உங்க தங்கஸ் சரியில்லைன்னா
அதுக்கு முழு பொறுப்பும் உங்களை மாதிரி ஒரு
ரங்கமணி(மாமனார்) தான். :)))

**********************************

அப்பா செல்லமான மகளுக்குத்தான் வீட்டில்
முக்கியத்துவம் கொடுப்பாங்க. அப்பாவுக்கும்
அம்மாவுக்கு இடையில் மகள் சர்வ சாதாரணமாக
புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறாள்.
காரணம் அப்பா!! (அன்புள்ள அப்பா சிவாஜி,
நதியா, சுரேஷ் நடித்த படம். அதில் வரு்ம்
அப்பா,மகள் பாசக் காட்சி டூ மச் அல்ல
அதையும் மிஞ்சும் அளவுக்கு பாசக் காட்சிகள்
இருக்கின்றன்.)

மகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் ரங்குவு்க்கு
பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறதே கண்ணுக்குத்
தெரியாது. 22,25 வருஷம் வரைக்கும் சுத்தி சுத்தி
வந்த மகள் திருமணம் செய்து கொண்டு போனதும்
மோட்டு வலையைப் பார்த்த படி உட்கார்ந்திருப்பார்
மிஸ்டர். ரங்கு. காரணம்??!! மகள் இருந்த வரை
மனைவியை மதித்ததிலை, அன்பாக நடத்தியதில்லை,
நட்பாக இருந்ததில்லை. அதே வீட்டிலேயே இருந்தாலும்
தங்மணி அந்நியமாக அநாதையாக அத்தனை நாள்
இருந்ததை உணர்ந்திருக்க வில்லை. அதனால்தான்
வயோதிக காலத்தில் வெறுமையாகி போகிறது
வாழ்க்கை.

எனது தோழி ஒருவர்
காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர்.
ஒரே ஒரு பெண். மகள் பிறந்த பின் கணவன் - மனைவிக்கு்ள்
இடையில் பெரிய இடைவெளி!!!!!மகள் எப்போதும்
அப்பாவுடனேயே இருப்பாள். காரில் போனால் கூட
அப்பா வண்டி ஓட்ட முன் சீட்டில் தான் தான் அமர்வேன்
என்று சண்டை போட்டு தான் எப்போதும் அப்பாவுடனேயே
இருப்பாள். மகள் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம்
அப்பாவுடன் பேசி, மகிழ்ந்து, கொஞ்சி கூத்தாடிக்கொண்டிருக்கிறாள்.

சமீபத்தில் சந்தித்தேன். தனது மன உளைச்சலை
சொல்லி அழுதார். காதல்
கணவரிடம் பேச வேண்டியதுதானே?என்று கேட்ட
பொழுது அவர் ரங்கமணி சொன்னது,
" எனக்கு என் மகள் தான்
முக்கியம்!!"

"இப்படியே இருந்தால் எப்படி?" என்றேன்.

"மகளுக்கு கல்யாணம் ஆகட்டும், அவருக்கு
வெச்சிருக்கேன் கச்சேரி!! அப்போ என்னை விட்டா
வேறு கதி இல்லேல்ல!! நான் யாருன்னு அப்ப
காட்டறேன்!!"

தேவையா ரங்கமணிகளுக்கே உங்களுக்கு இந்த
நிலமை???

Saturday, December 13, 2008

பதிவர் சந்திப்பு

நான் வலைப்பூத் தொடங்கி எழுத ஆரம்பித்த உடன்
சந்தித்த முதல் நண்பர் எங்கள் புதுகை ப்ளாகர்களின்
தானைத் தலைவர் சுரேகா அவர்கள்தான். புதுகையில்
அம்மா வீட்டிற்கு சென்றருந்த பொழ்து 30 நிமிடம்
தான் நேரம் இருக்கிறது. வந்து பார்க்கிறேன்
என்றார். மழையால் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


அதன் பிறகு தம்பி அப்துல்லாவுடனான சந்திப்பு நிகழ்ந்தது.

ஆங்காங்கே பதிவர் சந்திப்பு நடந்ததுன்னு பதிவு போட்டு
வயிற்றெரிச்சல் கிளப்பி விட்டுக்கொண்டிருப்பார்கள்.

நாம இருக்கற ஊருல சந்திப்பு ந்டக்க மாட்டேங்குதே!ன்னு
நினைப்பேன்.

இன்று மதியம் அப்துல்லாவிடமிருந்து ஒரு போன்.

அக்கா நம்ம தாமிரா ஹைதை வந்திருக்கிறார். அவரும்
கார்க்கியும் உங்களை சந்திக்க விரும்புகிறார்கள்?
அப்படின்னு சொன்னார். உடனே போன் நம்பர் கொடுங்கன்னு
சொன்னேன். தாமிரா பேசினார் முதலில். அடுத்து
கார்க்கியிடம் பேசினேன். பாரடைஸில் ஒரு
ஹோட்டலில் தங்கி இருப்பதாகச் சொன்னார்.
அட கிட்டத்துல தான் இருக்கீங்க, வாங்கன்னு
அட்ரஸ் சொன்னேன்.

30 நிமிடத்தில் வந்தார்கள். தாமிரா தங்கமணிகளைத்
திட்டி பதிவிடுபவர்.:) காரசாரமாக இந்த சந்திப்பு இருக்கப்போகிறது
என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எதிரும் புதிருமான
இந்த சந்திப்பு (அதாங்க ஹஸ்பண்டாலஜி பேராசிரியர்/
ரங்கமணிகள் சங்க உறுப்பினர்) எதிர் பாராதவிதமாக
நான் எதிர் பார்த்ததற்கு எதிரும் புதிருமாக நடந்தது.
(வலைப்பூவில் கலக்கும் தாமிரா நேரில்
மிக மிக பவ்யமாக இருந்ததன் காரணம் என்ன
தாமிரா?)


கார்க்கி முதலில் சந்தித்தாலும் நன்றாக பேசினார்.
பரிசல்காரனின் சமீபத்திய பதிவான ஓண்டிக்கட்டை
உலகம் புத்தக விமர்சனம் போல் தனிமை கொடுமையைச்
சொன்னார். தனிமை ரொம்ப கொடுமைதான்
கார்க்கி. நாங்கல்ளாம் இருக்கோம்.



பயந்து பயந்துக்கொண்டே நான் கொடுத்த டீயை
சாப்பிட்டார்கள். எப்படி இருந்தது என்றும் நானும்
கேட்கவில்லை (நல்லா இருக்கும்னு எனக்குத்
தெரியும்!!! :)) ) அவங்க பயந்த பயத்துக்கு நான்
வேற கேள்வி கேட்டு அதுக்கும் இன்னும் பயப்படுவாங்களோனு
கேக்கவே இல்லை.

எப்படியோ என் ஆசை நிறைவேறியது. எல்லோரும்
கவனிச்சுக்கோங்கப்பா!! ஹைதையிலும் வலைப்பதிவர்
சந்திப்பு நடந்திடுச்சு. நாங்களும் ப்ளாக்கர்ஸ்தான்.

:)))))))))

Friday, December 12, 2008

கற்கை நன்று!!!

எங்களை அழைத்துக்கொண்டு சென்று
FASHION BUG (colombo) துணிக்கடையின் முன்
நி்றுத்தினார் அயித்தான்.

இப்ப கிட்டத்துல பண்டிகைகூட கிடையாதே!
துணி எடுக்க எதுக்கு கூட்டிகிட்டு வந்திருக்காருன்னு?
யோசிச்சு கிட்டே போனோம்.

பசங்களுக்கு ஸ்விம் சூட் வாங்கினார்.
"லேடிஷ் செக்ஷன்ல உனக்கு ஸ்விம் ஸ்வீட்
பாத்துகிட்டு இரு, ஆஷிஷ் போட்டு பாத்ததும்
அங்கே வந்து செல்க்ட் செய்யறேன்னாரு!!!"

"என்னது ஸ்விம் சூட்டா? அட போங்கப்பா.
நீச்சல் அடிக்கணும்னு ஆசை இருந்தாலும்
அந்த ட்ரெஸ்ஸைப் பாத்து அடங்கிகிடக்க
வேண்டியதுதான். பசங்களுக்கு எடுத்தீங்கள்ல
சரி. போதும் உங்களுக்கு எடுத்துட்டு வாங்கன்னு"
சொன்னேன்.

"அட! ஸ்விம் சூட்னா கவர்ச்சியாதான் இருக்கணும்னு
சட்டமில்லை. கை வெச்சதும் இருக்கு.கால் முழுவது
மூடுற மாதிரி டைட்ஸ் போட்டு அதுக்கு மேல
ஸ்விம் சூட் கைவெச்சது போட்டுக்கோ" அப்படின்னு
சொல்லி கட்டாயமா வாங்கிக் கொடுத்த்தாரு.





எங்க வீட்டுக்கு கொஞ்சம் கிட்டத்துல இருக்கற
ராயல்காலேஜில் இருந்த ஸ்விம்மிங் பூலில்
மெம்பர்ஷிப் வாங்கிருந்தாரு. தினமும் பசங்களோட
அங்கே போய் நீச்சல் கத்துகலாம்னு திட்டம்.

அயித்தான் ஓரளவுக்கு நல்லாவே நீச்சலடிப்பாரு. பசங்களுக்கு
பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுத்தாலும்
மேலதிக பயிற்சி + பயம் போக நாமும் கூட
இருந்தா நல்லதுன்னு இந்தத் திட்டம்.

தீர்த்தக்கரை பாவி மாதிரி உக்காந்திருக்கக்கூடாதுன்னு
என்னியையும் தண்ணில இறக்கிவிடுறாரோன்னு
நினைச்சேன்.

விடலியே! பசங்களுக்கு கோச் சொல்லிகொடுக்க
எனக்கு அயித்தானே கோச் ஆயிட்டாரு.

(இதுதான் அந்த ராயல் காலேஜ் நீச்சல் குளம்)




முதல் நாள் மூச்சை தம்பிடிச்சு உடலை மிதக்க
வைக்கக்கூட என்னால் முடியவில்லை. பயம்!
தரையில் விழுந்தால் பரவாயில்லை. தண்ணீருக்குள்
விழுந்தால்??!!


(இலங்கைக்கு போன புதுசு)28
வயசுல இதெல்லாம் தேவையா? அப்படின்னு
யோசிக்கும்போது அங்கே நீச்சல் பழக வருபவர்களை
பாக்கும்போது நாமளும் கத்துகிட்டா என்ன?ன்னு
தோணுச்சு.

ஒரு முறை பெண்களுக்கே உரித்தான்
பிரச்சனைக்காக கைனகாலஜிஸ்டை
பார்க்கவேண்டியிருந்தது. வயிற்றுவலி,
இடுப்புவலிக்கு நீச்சல் செஞ்சா நல்லதுன்னு
சொல்ல, விடக்கூடாதுன்னு கத்துகிட்டேன்.


தினமும் அயித்தான் சொல்லிக் கொடுத்தாங்க.
"பாருங்க அம்மாவும் செய்யறாங்கன்னு!"
பசங்களுக்கும் சொல்ல அவங்களும் கத்துக்க
ஆரம்பிச்சாங்க.



தண்ணீரில் இறங்க பயந்து கொண்டிருந்த நான்
Floating, Dolphin stroke எல்லாம் அடிக்க
ஆரம்பிச்சேன். :))) சின்ன அளவுல டைவ்
அடிக்கவும் கத்துகிட்டேன்.


ஆனந்தமா நீந்தும் போது யோகா செஞ்ச மாதிரி
உடம்பும் மனசும் லேசாகிடுது. ஆஷிஷும்
நானும் போட்டி போட்டுக்கொண்டு நீந்துவோம்.
ட்யூ்ப் ரிங்கில் இருந்த படி அம்ருதாவும்,
அயித்தானும் நீந்து வார்கள்.



சில நேரம் நீச்சல், சி்ல் நேரம் விளையாட்டுன்னு
அந்த ஒரு மணி நேரமும் இனிமையா இருக்கும்.

பலவந்தமா தண்ணியில இறக்கி எனக்கு நீச்சல்
கத்து கொடுத்த என் குரு இப்போ இடம் பெயர்ந்து
(குருப்பெயர்ச்சியின் தாக்கமாக இருக்குமோ!!)
வண்டி ஓட்டச் சொல்லித் தரப்போறாரு என்பதை
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


குருதட்சிணையாக பிஸிபேளாபாத்/வாங்கிபாத் செய்து கொடுக்க
வேண்டும். :)))))))))))))

(இரண்டும் அவரோட விருப்பமான உணவு)

Thursday, December 11, 2008

அழகென்ற சொல்லுக்கு முருகா!!!



சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா!

நீ அல்லால் வேறு தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.






ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்.




திருப்புகழைப் பாடப்பாட வாய்மணக்கும்.

Wednesday, December 10, 2008

கறுப்பு கலர் பெயிண்ட் மற்றும் ஒரு ப்ரஷோட......

கறுப்பு கலர் பெயிண்ட் மற்றும் ஒரு ப்ரஷோட
சாயந்திரம் 7 மணிக்கு எங்க வீட்டுக்க்கு பக்கத்துல
இருக்கற வீதியில்
நிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். :)

நீங்களும் உங்க ஊர்ல இதை செய்வதா இருந்தாலும்
செய்யலாம்?

என்னாச்சு? ஏன் இப்படின்னு யோசிக்கறீங்களா?

நம்ம நாட்டுல ஒரு சட்டம் இருந்தாலும் நம்ம
மிஸ்டர்.பொதுஜனம் மதிக்கறதில்லை. சட்டத்தை
தான் நம்ம கையில எடுத்துக்ககூடாது. திட்டத்தை
எடுக்கலாம்ல அதான்!!!

டூ வீலர் மற்றும் 4 வீலர் வண்டிகளில்
இந்த ஹெட்லைட்டை ப்ராகசமா போட்டுகிட்டு
வண்டி ஓட்டினாத்தான் நம்மாளுங்களுக்குத் த்ருப்தியே!



நடுவில் ஒரு கறுப்பு புள்ளி அல்லது ஸ்டிக்கர்
பாதி அளவாவது மறைக்கும்படி இருக்கணும்
என்பது சட்டமாம். (என்னது பல பேருக்கு இது
தெரியாதா? அது சரி!!!)

அதனாலதான் நான் ஒவ்வொரு வண்டிக்கும்
ஹெட் லைட்டில் கறுப்பு பெயிண்ட் பாதிவரைக்கும்
அடிக்கும் முடிவுல இருக்கேன்.




NIGHT DRIVINGன் போது குறைந்த பட்சம்
டிம்,டிப்பாவது செய்யணும். அப்பத்தான்
எதிரில் வண்டி ஓட்டிகிட்டு வர்றவங்களுக்கு
இடைஞ்சல் இல்லாமல் இருக்கும். ஆனா
இதெல்லாம் செஞ்சுட்டா எங்கப்பன் வீட்டு
ரோடுன்னு சொல்லிக்க முடியாதுல்ல!!!

இந்த போட்டோக்களை பாருங்க. இதைப் பாத்ததுக்கே
கண்ணு கூசும் அப்ப ரோடுல வண்டி ஓட்டும்போது
நினைச்சு பாருங்க!!

பக்கத்துல உக்காந்து பயணிக்கும் பொழுதே
நமக்கே பயமா இருக்கு. ஓட்டறவங்க
நிலமையை யோசிச்சு பாருங்க.

நடுவுல மீடியேட்டர் இருக்கான்னு தெரியாது.
சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி,"எதுத்தாப்ல
2 டீவீஎஸ் 50 வருது, நடுவுல போயிடலாம்னு
நினைச்சேன்னு" நாமளும் சொல்ற மாதிரி
எதிருல என்ன வண்டி வருதுன்னே தெரியாம
போகுது.




நம்ம ட்ராபிக் கான்ஸ்டபில்களும் கேக்கறதே இல்லை.

(ஒருவேளை இந்த ஹெட்லைட் அவங்க கண்ணுல
பட்டு கண்ணு தெரியாமலேயே போயிடுச்சு போல.)

அந்தக் ஹெட்லைட்டில் போட வேண்டிய பல்பு கூட
குறைந்த அளவு வாட்ஸ் பல்புதான் போடணும்னு இருக்காம்.
யாரு கேக்கறாங்க??
BREAK THE RULES தான் மிஸ்டர்.பொதுஜனத்தின்
பாலிஸி ஆச்சே!!!!

அரசாங்கம் போடும் சட்டங்களை
திட்டம்போட்டு மீறுவதுதான் நம்மா ஆளுங்க
ஷ்பாஷலிட்டி.

தனி மனித ஒழுக்கம் இருந்தா பல பிரச்ச்னைக்ளுக்கு
சட்டம் போடாமலேயே தீர்வு இருக்கும்.

இந்த அதிபயங்கர ஹெட்லைட்டால வண்டி
ஓட்டறவங்க 1 நிமிடம் தன் கண் பார்வையை
இழக்கறாங்கன்னு ஆராய்ச்சி சொல்லுது.


இதுக்கு நாம ஏதும் செய்ய முடியுமான்னு
வழி சொல்லுங்க.

இல்லாட்டி நான் மட்டும் என் திட்டத்தை
செயல் படுத்த ஆவன செய்யப்போறேன்!!!

(நானானி என் எதிர் பதிவு இதுதான்.நீங்க
உங்க பதிவுல சொல்லியிருந்த மாதிரி

ரெண்டு பக்கமும் விஷ்க்..விஷ்க் என்று பாயும்
இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்கள்
மட்டுமல்ல
இந்த இரவு நேரப்பயணமும் என்னிய பயமுறுத்துது)

********************************

இது எல்லோரும் படிக்க வேண்டிய பதிவுன்னு
நீங்க நினைச்சீங்கன்னா தமிழ்மணம்
வாசகர் பரிந்துரைக்கு
ஓட்டு போடுங்க.

கொசுவத்தி பாகம் - 2

ஆனா! மேனேஜர்தான் செம டென்ஷனில்
இருந்தார்!!!! அவங்க கூட இருந்தவங்க
அதைவிட டென்ஷனில்!!!!!!!!!

என்னாச்சு????

(அடுத்த பதிவுல சொல்றேன்) அப்படின்னு போன
பதிவில் சொல்லியிருந்தேன். அந்த சஸ்பென்சை
உடைச்சிடறேன்.

அன்னைக்கு சாயந்திரம் நடக்க விருந்த மீட்டிங்ல்
சமர்பிக்க வேண்டிய ப்ரசண்டேஷன்ஸ், முக்கியமான
டாக்குமெண்ட்ஸ் இருந்த மேனேஜரோ பெட்டியை
அந்தக் காரிலேயே விட்டுட்டாங்க. அம்மாம் பெரிய
மும்பையில் அந்தக் காரை எப்படி கண்டு பிடிக்கறதுன்னு
ஒரே டென்ஷன்.

உடனே நான் அயித்தான் கிட்ட அந்தக் காரோட
நம்பரை சொல்லி டாக்ஸி ஸ்டாண்டுல போய்
பார்க்கச் சொல்லலாமேன்னு கேட்க, அவரும்
மேனேஜர் கிட்ட சொன்னதும் அவர் உடனே
ஆளை அனுப்பி பாத்தா வண்டி அங்க இருந்து
அந்த பொட்டியும் கிடைச்சது. :)))

ஒரே பாராட்டு மழைதான். சரி என்னை
ஏன் வரச்சொன்னாரு? அதுதான் இந்தக்
கொசுவத்தி போட முக்கிய காரணம்.

அயித்தான் அப்ப வேலை பார்த்துகிட்டு இருந்தது
ஹிந்துஸ்தான் லீவரில். அங்கே ஒரு பாலிசி
உண்டு.

உங்க குடும்பம் சந்தோஷமா இருந்தாத்தான்
நீங்க நல்லா வேலை பார்க்க முடியும் என்று
அங்க வேலை பார்க்கறவங்களுக்கு அடிக்கடி
சொல்வாங்க. கணவர் டார்கெட் அச்சீவ் செய்தால்
FAMILY MEET ஏதாவதொரு சுற்றுலா தலத்தில்
குடும்பத்தினருடன், BEST PERFOMANCE விருது
வென்றால் அந்த நபரின் குடும்பத்தின்ருடன்
மட்டும் ப்ரத்யேகமாக BUSINESS MANAGER
அவர்களுடன் 5 நட்சத்திர ஹோட்டலில்
விருந்து என குடும்பத்தை முன்னிருத்துவார்கள்.

(தங்க்மணியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்,
வீட்டில் நிம்மதி இல்லாவிட்டால் அலுவலகத்தில்
ஒழுங்காக வேலைசெய்ய முடியாது, அதனால்
டார்கெட் அச்சீவ் ஆகாது இது நிர்வாகத்தை
பாதிக்குமே!!)

அப்போது கணவரின் வேலையால்
தங்க்ஸிற்கு இருக்கும் பிரச்சனைகள்
ஏதும் இருக்கா என்று அதிகாரி கேட்டு
அறிந்துக்கொள்வார். இதனால் வீட்டிலும்
நிம்மதி அதனால் வேலையும் நிம்மதியாக
நடக்கும்.

என்னை அங்கே அழைத்ததும் இது போன்றதொரு
சந்திப்பிற்காகத்தான். அன்று அந்த மேனேஜர்
எனக்கு சொல்லிக்கொடுத்த பல நல்லவிடயங்கள்,
அயித்தான் 5 முறை BEST PERFOMANCE விருது,
சார்க் நாடுகளிலேயே BEST PERFOMANCE விருது
1 முறை, ஒவ்வொரு வருடமும் டார்கெட்டிற்கு
மேல் விற்பனை என்று அசத்த காரணம் என்று
இன்றளவும் அயித்தான் சொல்வார்.



திருமணமுடிந்து ஹைதைக்கு வந்த உடன்
தன் வேலை(Nature of job)எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.
Year end pressure
monthly target pressure,
இப்படி பல எனக்கு புரிந்தது. நான் கொடுக்க
வேண்டிய ஒத்துழைப்பும் தெரிந்ததும். நானும்
வேலைக்கு சென்றிருந்ததால் வேலையில் இருக்கும்
கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததும் உதவியாய் இருந்தது.

சரி இதெல்லாம் இங்கே எதற்கு? வலையுலக
நண்பர்களுக்கு என் வேண்டுகோ்ள் இது.

திருமணம் நிச்சயம் ஆகும்பொழுதும் சரி
அதற்கு பிறகும் சரி மாப்பிள்ளை என்ன வேலை
பார்க்கிறார் என்று தெரிந்தாலும் அந்த வேலையின்்
தன்மை, கஷ்ட நஷ்டங்கள் தெரிவதில்லை. நீங்கள்
உங்கள் தங்கமணியிடம் இதை அவர்கள் புரியும்
விதத்தில் சொல்லி ஒரு புரிந்துகொள்ளும் தன்மையை
ஏன் வளர்க்கக்கூடாது? தங்கமணியின் கஷ்டங்கள்
ரங்கமணிக்கும், ரங்கமணியின் கஷ்டங்கள் தங்கமணிக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கையில் ப்ரச்சனை ஏது?

பொட்டி தட்டும் வேலைன்னு நாம சொல்றோம். 8 மணிநேரம்
தொடர்ந்து அந்தக் க்யூபிளில் ரங்கமணி படும் கஷ்டம்
சொல்லாவிட்டால் எப்படி தெரியும்?

தங்கமணியும் தனது கஷ்டத்தைச் சொன்னாத்தான்
ரங்கமணிக்கு புரியும்.

யோசிச்சு பாருங்க. நான் சொல்வது சரின்னா
செய்லபடுத்தி பாருங்க.

ஆங்கிலத்தில் ஒரு வசனம் ஞாபகம் வருது:

BEING ABLE TO SURVIVE IT DOES'T MEAN
THAT IT WAS EVER OK!!


************************************
ராமசாமி( அந்த மானேஜர்) சாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
இன்றளவும் நீங்கள் சொல்லிக்கொடுத்ததை விடாமல்
கடைபிடிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர்.
தொடர்கிறது இந்த பந்தம்.

Tuesday, December 09, 2008

ஒரு கொசுவத்தி

எங்க அத்தை எனக்கு ஒரு ப்ரெண்டு
மாதிரி. அம்மாமாதிரி என்னியபாத்துக்குவாங்க.
நாத்தனார் பொண்ணுங்கற காண்டெல்லாம்
கிடையவே கிடையாது.


மாமா மனைவின்னாலும் அவங்க எங்கப்பாவுக்கு
தூரத்து உறவில் தங்கை. அப்பாவின் தங்கை அல்லது
அக்காவை பூவாஜி என்று ஹிந்தியில் கூப்பிடுவாங்க.
நானும் அவங்களை BUAJIன்னுதான் கூப்பிடுவேன்.
ரொம்ப பாசமானவங்க.

கையில சின்னதா கீறல் விழுந்திருந்தா
போதும், எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க!! :)
மாமா கூட பொறாமையில என் கூட
சண்டைக்கு வருவாங்க. :)))))

மாமாவும் அத்தையும் என்னை தன் சொந்த
மகளாதான் பாத்துகிட்டாங்க. (அவங்களுக்கு
ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க)

மாமா ஒரு அப்பா மாதிரி. ரொம்ப கண்டிப்பு
அதே சமயம் பாசமும் ஜாஸ்தி.


திருமணம் நிச்சயம் ஆனதும் இருவரும் சேர்ந்து
ஊரு சுத்துவதெல்லாம் இப்போது் சகஜம்.

எங்கவீட்டுல பயங்கர கட்டுப்பாடு. போன்
செஞ்சார்னா பேசக்கூடக்கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க
மாமா!!! (நான் அப்போ மும்பையில் இருந்தேன்)

இதுல இவர் ஒரு நாள் நான் வேலை பார்க்கும்
அலுவலகத்திற்கு போன் செஞ்சு,”இன்ன தேதியில்
எங்க கம்பெனி மீட்டிங் இருக்கு மும்பையில்,
எங்க மேனேஜர் உன்னைய பார்க்கணுமாம்!!!
தாதர் ரயில்வே ஷ்டேஷனுக்கு வந்திடு”
அப்படின்னு சொல்லிட்டாரு.

இதென்னடா கொடுமை? மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க பாப்பாங்க சரி,
அவங்க வேலை செய்யற கம்பெனி மேனேஜரும்
பாத்து ஓகே! சொல்லணுமா என்ன?
கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சே!
மாமா போகக்கூடாதுன்னு சொல்லிடுவாங்க,
நான் என்ன செய்யன்னு ஆயிரத்தெட்டு
யோசனையோடு குழம்பிக்கினு கிடந்தேன்!!!!


அம்மம்மா, தாத்தா, மாமா எல்லோரும்
பயங்கர ஸ்ட்ரிக்ட் இந்த விஷயத்தில்!!

வீட்டுல எதையும் மறைக்கும் பழக்கம்
எனக்குக் கிடையாது. யாராவது ஒருத்தருக்கு
நான் செய்யும் வேலை எல்லாம் தெரிஞ்சிருக்கும்.
இந்த மாதிரி போன் வந்ததும் பூவாஜிக்கிட்ட
சொன்னேன். ”என்ன செய்ய பூவா? போனா
மாமா கொன்னுடுவாரு. போகாட்டியும் தப்பு.
அவங்க மேனேஜர் பார்க்கணும்னு சொல்லியிருக்காரு!
என்ன செய்யட்டும்னு நீங்க சொல்லுங்க” அப்படின்னேன்.

அவங்களும் யோசிச்சிட்டு,”நீ பொய் சொல்லவில்லை!
என் கிட்ட உண்மையைச் சொல்லித்தானே போற!
போய்ட்டுவா!மாமாகிட்ட சொல்லவேண்டாம்.
அவங்க ஆபிசர் பாக்கணும்னு சொல்லியிருகார்னா
ஏதும் காரணம் இருக்கும். நீ போகாட்டி போனா
அவரைத் தப்பா நினைப்பாங்க”ன்னு சொல்லி
போகச் சொன்னாங்க.



அந்தநாளும் வந்தது. தாதர் ரயில்வே ஷ்டேஷனில்
தேவுடு காத்துகிட்டு உக்காந்திருந்தேன்.
நம்ம நாட்டுல ட்ரெயின் சரியான நேரத்துல
வந்தா அது சரித்திரம். அன்றும் 2 மணி நேர
தாமதத்தில் ட்ரெயின் வந்தது.

அயித்தான் அவங்க மேனேஜர் மற்றும் அவங்க
தென்னிந்திய டீம்காரவுக எல்லோரும் வந்திருந்தாங்க.

“வாம்மா! உன்னை நாந்தான் பாக்கணும்னு
சொன்னேன். எங்க கூட வாஷி வரைக்கும் வா.
6 மணிக்கு எங்களுக்கு மீட்டிங் இருக்கு. அதுக்கு
முன்னாடி உன்னோட பேசிட்டு அனுப்பி வைக்கறேன்”
அப்படின்னு சொல்ல தலை சுத்தினுச்சு.

எனக்கு வெஸ்டர்ன் மும்பைதான் தெரியும். வாஷி
நி்யூ பாம்பேயில் இருக்கு. அங்கேர்ந்து நான்
எப்ப வீட்டுக்கு போய் சேர்றது!!!

பேசமுடியுமா? தாதரில் இருந்து கார் ஏற்பாடு
செய்திருந்தாங்க. நான்,அயித்தான், அவங்க
கூட வேலை பார்க்கிறவங்க 2 பேர் ஒரு காருல,
மத்தவங்க இன்னொரு காருல போனோம்.

என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், நாம்
ஏறுற வண்டி நம்பர் மொதல்ல பாத்து
வெச்சுக்குவேன். அன்னைக்கு
அந்த மேனேஜர் ஏறின வண்டி நம்பரும்
பாத்து வெச்சுகிட்டேன். (வழி தெரியாத
இடத்துல ஒழுங்கா இந்தக் கார்
அவங்களை ஃபாலோ செய்யுதான்னு
தெரிஞ்சுக்கலாமே!!)

நடுவுல திடும்னு அந்த வண்டியைக்
காணோம்!!! எனக்கு ஒரே டென்ஷன்.
கந்தா காப்பாத்துன்னு பயந்துகிட்டே
போனேன்.

ஆனா நான் போன கார் டிரைவர்
சரியா அவங்க கம்பெனி கஸ்ட் ஹவுஸில்
தான் வண்டியை கொண்டு போய்
நிப்பாட்டினார். எங்களுக்கு முன்னாடியே
மேனேஜர் வண்டியும் அங்கே இருந்துச்சு.
முகத்துல் கொஞ்சம் நிம்மதி வந்துச்சு
எனக்கு.

ஆனா! மேனேஜர்தான் செம டென்ஷனில்
இருந்தார்!!!! அவங்க கூட இருந்தவங்க
அதைவிட டென்ஷனில்!!!!!!!!!

என்னாச்சு????

(அடுத்த பதிவுல சொல்றேன்

புலம்புவதற்கு அழைத்திருந்த முத்துலெட்சுமிக்காக ஒரு புலம்பல்

முத்துலெட்சுமி
டேக் போட்டு புலம்ப சொல்லியிருந்தாங்க.


மும்பையில் நடந்த கோரம் இனி எங்கேயும் நடக்கக்கூடாது.

அதற்கு நம்மாளான பங்களிப்பு என்ன?

//சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.// இப்படி முத்துலெட்சுமி சொல்லியிருந்தாங்க.

ஆமாம். நமக்கு எல்லாமே கஷ்டம். நாட்டுக்காக் நாம்
ஏதுமே செய்ய மாட்டோம். ஆனா ஏதாவது நடந்தா மட்டும்
குத்தம் சொல்வோம் இதுதானே மிஸ்டர். பொதுஜனம்.

சோதனைகள் நமக்காகத்தான் என்பதை உணர்ந்து நாம்
பூரண் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சந்தேகிக்கும்படி
யாரேனும் இருந்தால், பெட்டிகள் அனாதையாக கண்டால்
தகவல் தரவேண்டும். இதெல்லாம் நம்ம நாட்டில்
செய்வோமா? நம்ம வீட்டுல அல்லது நம்ம உறவுக்காரங்களுக்கு
பாதிப்பு ஏற்படாத வரை நமக்கு நஷ்டம் ஏதும் இல்லையே!
என்ற நினைப்புத்தான்.

நாங்கள் இலங்கையில் இருந்திருக்கிறோம். அங்கு சாலையில்
ஒவ்வொரு அடிக்கும் ஆயுதமேந்திய ராணுவத்தினரை
கொழும்பு நகரில் பார்த்திருக்கிறோம். வீட்டை
விட்டு வெளியே வந்தால் சோதனை சாவடிகள்
இருக்கும் என்று தெரியும். கையில் பாஸ்போர்ட்
இல்லாமல் வெளியே போகவே முடியாது.

சோதனைக்கு ஆகும் நேரத்தை உணர்ந்து
1 மணி நேரம் முன்னதாகவே கிளம்புவோம்.
நள்ளிரவு நேரங்களில் ப்ராயணங்களை தவிர்த்தல்
நலம். இவை நமக்கு கஷ்டமாக இருந்தாலும்
நம் நல்லதற்குத்தான் என்று மக்கள் உணர்ந்து
நடந்து கொண்டார்கள்.

இஸ்ரேல் ஒரு குட்டி நாடு. ஆனால் அந்த
நாட்டில் இருக்கும் பாதுகாப்பு பற்றி அத்தனை
பத்திரிகைகளும் எழுதுகிறார்கள். நாம் அவற்றைப்
படித்து ஏக்கப் பெருமூச்சு விடத்தான் முடியும்.


நம் நாட்டில் மட்டும் இதெல்லாம் எதுவும்
சாத்தியமில்லாமல் போவதற்கு காரணம்?
DONT CARE ATTITUDE என்று சொன்னால்
தவறில்லை.

மிஸ்டர்.பொதுஜனம் தான் இப்படி என்றால்?
நமது அரசாங்கமும் சொதப்பாலகத்தான் இருக்கிறது.
பதவிக்கு அடித்துக்கொள்வதிலும், சொத்து
சேர்ப்பதிலும் மட்டும்தான் நம்மவர்கள் கவனம்
செலுத்துகிறார்கள்.

செக்கிங் என்ற பெயரில் இங்கே நடப்பது
எல்லாம் ஒரு கண் துடைப்புத்தான்.
ஹோட்டல்களிலும், மால்களிலும்
இனி விமானநிலையங்கள்
போல் ஸ்கேனிங் வரவேண்டும்.
விமானங்களில்
எடுத்துச் செல்லத் தடை
விதித்திருக்கும் பொருட்கள் போல ஹோட்டல்,
மற்றும் பொது இடங்களிலும் இவைகளை
எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்.

முறைப்படுத்தப் பட்ட சோதனை,
அனைத்து மக்களுக்கு முறையான ஐடி
கார்ட் எல்லாம் ஒழுங்காக தரப்படவேண்டும்.

மேலைநாடுகளில் பிறந்த குழந்தைக்கு உடன்
பாஸ்போர்ட் தந்து விடுகிறார்கள். நம் நாட்டில்
60 வயதானாலும் ஐடி கார்ட் இல்லாதவர்கள்
பலர்.

பாஸ்போர்ட், ஐடி கார்ட், ரேஷன் கார்ட்
வழங்குவதில் இவர்கள் வைத்திருக்கும்
ஃபார்மலிடீஸை தளர்த்தி இவைகளில்
ஏதேனும் ஒன்று இருந்தால் கூட மற்றவை
கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

கோவில்கள், மால்கள், திரையரங்குகள்,
ஹோட்டலகள், வங்கிகள் இப்படி மக்கள் கூடும்
இடங்களில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்
படவேண்டும்.

//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.//

சரியாச் சொன்னீங்க முத்துலெட்சுமி!!!
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

வங்கிகளில் கயிறு கட்டி வெச்சிருந்தாலும்
நம்ம ஆளுங்க கேஷியர் டேபிளில் கவுந்து
நின்னு பணம் கட்டினாத்தான் சந்தோஷமே.

முறையா நடந்துக்கணும்னு எண்ணமில்லாத
மிஸ்டர்.பொதுஜனத்தை அரசாங்கம்
அடாவடி சட்டம் போட்டாத்தான்
திருத்த முடியும்.

பாதுகாப்பு சோதனை கட்டாயம் நடக்கும்,
இஷ்டம் இருந்தா வீட்டை விட்டு வெளியே
வாங்க, கஷ்டம்னா வீட்டுக்குள்ளேயே
சிறைவாசம் இருங்கன்னு அரசாங்கம்
சொல்லணும்.

அதுக்கு முன்னாடி நாம செய்ய வேண்டியது
ஒண்ணு இருக்கு. ஆளுக்கு காசுப் போட்டு
நமது நாட்டின் பாதுகாப்புத்துறை பெரிய
ஆளுங்களை இஸ்ரேலுக்கு அனுப்பு
1 மாசம் ட்ரெயினிங்கிற்கு அனுப்பனும்.

புலம்ப நான் அழைப்பது:

பரிசல்காரன்,
ஜோசப் பால்ராஜ்
தாமிரா
ச்சின்னப்பையன்.
ஹரி

Monday, December 08, 2008

அப்பா பிள்ளை!!


பசங்க எப்பவும் அம்மா பிள்ளையாத்தான் இருப்பாங்கன்னு
சொல்வாங்க. இதுக்கு நேர்எதிர் ஆஷிஷ்.
அப்பா பிள்ளைதான்.(இரண்டு பேருக்குமே
அப்பா தான் ஷ்பெஷல்)

“நாநா” என்றுதான் அழைப்பான்.
குட்டியாக இருந்த பொழுது
அதைத் தவிர வேறெந்த வார்த்தையும்
வராது.

அவன் கண்ணெதிரில் அயித்தான் ஆபிஸுக்கு
கிளம்பிவிடமுடியாது.

வெளியே பைக் சத்தம் கேட்டால்(இவரின்
பைக் சத்தம் கரெக்டாக தெரிந்து வைத்திருப்பான்)
முகம் பிரசன்னமாகிவிடும்!!

வீட்டில் இருக்கும் நேரமெல்லாமல்
அவரின் நிழல்போல ஒட்டிக்கொண்டே
இருப்பான்.


மாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை
இவருக்கு. இவர் டூர் கிளம்பினால் என்
பாடு திண்டாட்டம்தான்.

அவரின் பேண்ட், ச்ர்ட் துவைத்து
காயப்போட்டிருந்தால் அதைக் காட்டி
அழுவான்!
போட்டோ, பைக் சத்தம் எல்லாவற்றிற்கும்
உப்பி உப்பி அழுவான்!!



அப்பா வரும்வரை உணவு ஒழுங்காக உள்ளே
செல்லாது. சில நாட்கள் வெறும் திரவ ஆகாரம்தான்.
அவர் வந்து அவரது கையால் ஊட்டினால் தான் சாப்பிட
ஆரம்பிப்பான். :(

2 வயது ஆன பொழுது ஆபிஸிற்கு கூட போகவிடமாட்டான்.
மழை பெய்தால் போதும்,”அப்பா! உங்களுக்கு குளிரும்,
வாங்க நாம போத்திகிட்டு தூங்கலாம். அம்மா சூடா
பஜ்ஜி போட்டுகிட்டு வருவாங்க” என்பான். :)


ஆபீஸுக்கு கிளம்பினால் போதும் கண்ணில்
தண்ணீர் முட்டும். அப்பாவை விட்டு நிமிட
நேரம் பிரிவது அவனால் இயலாத காரியம்.


இப்படி இருந்த ஆஷிஷ் திடுமென்று ஒருநாள்
டீவியைக் காட்டி,”ஹை நாநா!”என்று
காட்ட, இவர் எங்கே டீவியில் வந்தார்?!!
என்று நாங்கள் இருவரும் ஓடி வந்து பார்த்தால்
அங்கே ஒரு நடிகர்! :)))

ஆஹா! நல்லா ஐடியா என்று அந்த நடிகரின்
வீடியோ சீடி ஒன்றை வாங்கி வந்து
அதைப் போட்டுவிட்டால் நாநா! பாக்கறேன்”!
என்று அந்த சீடி இவர் வரும் வரை ஓடிக்கொண்டிருக்கும்!!!!!

போஸ்டரில், டீவியில் அந்த நடிகரின் முகம்
பார்க்கும்போதெல்லாம் “நாநா!பாத்தியா?!!
என்று பெருமையாக முகம் முழுதும் சந்தோஷமாக
சொல்வான்.(இந்த விஷயம் தெரிந்தால்
தனக்கு இப்படி ஒரு குட்டி ரசிகன் இருக்கிறான்
என்று அந்த நடிகர் சந்தோஷப் பட்டிருப்பார்!!
அவர் அப்போது வளர்ந்து கொண்டிருந்த
நட்சத்திரம்)





ஆஷிஷ் தனது அப்பாவின் மேல் பயங்கர பொசசிவ்
என்பதற்கு பல சம்பவங்கள் இருந்தாலும்
நானும் இவரும் அடிக்கடி நினைவு கூறும் ஒரு
சம்பவம் இதுதான்.

புதுகைக்கு நாங்கள் போயிருந்த பொழுது
என் சின்ன மாமாவும் வந்திருந்தார்.

அவர் ஒரு முறை வெளியே செல்ல
அயித்தானின் செருப்பை போட்டுக்கொண்டு
போய்விட்டார்!!!!

என் மாமா திரும்பி வரும்வரை அழுதுகொண்டே
இருந்தவன், சரியாக பேச வராத அந்த வயதிலும்
“நாநா! செப்பல்! நாநா செப்பல்!!” என்று
மட்டும் சொல்லி ஏன் போட்டுக்கொண்டு போனாய்?
என்பது போல் சண்டை போட்டு விட்டு

மாமா காலில் விழுந்து வணங்கி
“நாநா செப்பல் வேண்டாம். ப்ளீஸ்”
என்று கெஞ்சி மாமாவை செருப்பை
கழட்ட வைத்து ஒரே களேபரம்தான்.

இன்றும் இவர் டூருக்கு போனால்
இருவரும் சார்ஜ் போன செல்
மாதிரிதான் இருப்பார்கள்.

அம்ருதா பிறந்த பிறகு அவளும் அப்பாகோண்டுவாக
அழுதுகொண்டிருந்தவள்தான், அவளும் இந்த சீடி
உபயத்தில் அப்பாவை பார்த்துக்கொண்டிருந்தாள்!!
(அப்போது இவர் வெளிநாட்டில் இருந்தார்)

ஆஷிஷ் அண்ணா,”அம்ருதா! அது நாநா இல்லை.
...... அங்கிள்,” என்று சொல்லும்போது எனக்குச்
சிரிப்பாய் வரும்.

1 வயது அம்ருதாவிற்கு அண்ணன் புரிய வைக்க
முயற்சி செய்வார். “நானும் அது நாநான்னுதான்
நினைச்சே! அது நாநா இல்ல அம்ருதா” என்று
சொல்லிவிட்டு, என்னிடம்,” பாருங்கம்மா பாப்பாவுக்கு
தெரியவே இல்லை, அந்த அங்கிளைப் போய்
நாநான்னு சொல்றா” என்று சிரித்ததுதான் ஹைலைட்.

:))))))))))))))))))))

அம்மாவும்! நானும்!

தலைக்குளித்து முடியை காயப்போட்டால்
ஓடி வந்து முடிக்கொள் கையைவிட்டு
அளைந்து கொண்டே இருப்பாள்.

தலைகோதும் விரல்களில் தாய்மை தெரிகிறது.

”ஏன்மா என்னை அம்மான்னு கூப்பிடறீங்கன்னு!!” கேட்டாலும்

அம்மா என்றழைத்தால் முகத்தில் அம்புட்டு பெருமை.

உடனே ஓடிவந்து கட்டிக்கொண்டாகவேண்டும். :)



”நான் என்ன எங்க அம்மாவீட்டுக்கு போறேனா”?
நீதான் அம்மாமாதிரி என்னிய பாத்துக்கணும்”

”நான் அம்மா! சரி!” அப்ப அண்ணா?

ம்ம் அண்ணா, அன்னபைய்யா! (annabayya)
(அப்படித்தான் அண்ணனை அழைப்பாள்)




சரி! அம்மா எனக்கு என்னென்ன செய்வீங்க?

நீங்க என்னைப் பாத்துக்கற மாதிரி?
நல்லா பாத்துப்பேன், நெய் தோசை செஞ்சு
கொடுப்பேன்!..... இப்படி பெரிதாக
போனது லிஸ்ட்.






பேசிக்கொண்டிருக்கும்போதே யோசனை வந்து
“ஆமா! இதெல்லாம் செய்யணும். ஆனா,
நான் ஸ்கூலுக்கு போயிடுவேனே!” அப்புறம்
எப்படி அம்மாவா இருந்து பாத்துக்கறது??!!

”ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்து பாத்துக்கலாமே!”இது
annabayya.




ஸ்கூல் விட்டு வந்து டயர்டா இருக்கும்ணா,
ஹோம்வொர்க் கொடுத்தாங்கன்னா முடியாது.

ம்ம். இப்படி செய்வோம்! எனக்கு எப்பல்லாம்
லீவு வருதோ அப்பெல்லாம் நான் அம்மா!

அப்ப நான் நல்லா பாத்துக்க முடியும் பாருங்க!
என்ன சொல்ற annabayya? (கூட்டுக்கு ஆள்
வேறு :) )

வார இறுதிகளிலும், விடுமுறைகளிலும்
அம்மாவாக இருப்பதாக ஒப்பந்தம் போடப் பட்டது.




ஒப்பந்தம் ஞாபகம் வரும்பொழுது
குட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து
பக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.


தூங்கும்பொழுது பக்கத்தில் வந்து
கட்டிக்கொண்டு(அம்மா கட்டிபிடிச்சுக்கறாங்களாம்!!!!)
தான் தூங்கிப்போவாள்!!!


தனக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில்
நான் இப்ப அம்மா!” என்று சொல்லிக்கொள்வாள்.


மழலையர் பள்ளியில் படிக்கும்போது
ஒப்பந்தம் போட்டாள் மகள்.

இன்று 4ஆவது படிக்கிறாள்.

நேற்று அம்மாவின் தலைக்கு
வெந்தயம்,ஆம்லா,செம்பருத்தி பேக்
போட்டுக்கொண்டே மகனிடம் கேட்டேன்,
“ஏன் அன்னபையா! யாரோ
வீக் எண்ட் மற்றும் லீவின் போது தான்
தான் அம்மாவா இருக்கபோறதா? சொன்னாங்களே!
அது என்னாச்சு”?

சிரிப்புடனே மகன்,”உங்கம்மாவைத்தான்
கேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்
சொல்லுங்க” என்றான்.


”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி! என்று சொல்லிவிட்டு
அப்பாவிடம் ஓடிவிட்டாள். :((





இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்!!!!


வலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து
வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்க.
முடிஞ்சப்ப போய் பாருங்க.

அம்மாக்களின் வலைப்பூக்கள்:

M .Sc Husbandology (முதுகலை இல்லறத்தியல்) பாடம்:4

தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தாலும்
புரிய மாட்டேங்குதே!

இதுதாங்க இந்த வாரப் பாடத்தின் தலைப்பு.

இந்தக் காட்சியை பாருங்க.

தொங்கிப்போன முகத்துடன் மிஸ்டர்.ரங்கு
வீட்டுக்கு வர்றாரு.

"என்னங்க! ஒரு மாதிரி இருக்கீங்க?”
என்னாச்சு! தலைவலிக்குதா!

“சும்மா ஙொய் ஙொய்ன்னான்னாத!”
(கேக்கறது ஒரு குத்தமாய்யா!!)

தலைவலிக்குதா! அமிர்தாஞ்சன்
தடவட்டுமா? சூடா காபி குடிக்கறீங்களானு
கேட்டேங்க.

” ஒரு ..... வேணாம்.
நானே நொந்து நூலாப் போயிருக்கேன்!”

அறைக்குள் போய் படுத்துவிடுகிறார்
ரங்க்ஸ்.

30 நிமிடம் கழித்து,” ஏய் ரமா!
சூடா ஒரு கப் காபிக் கொடு”

போட்டு கொண்டு வந்த தங்கஸ்
ரங்குவின் முகத்தைப் பாத்து,
“ஏதும் ப்ரச்சனையாங்க!”

“அவன் ஆபிசுல பிடுங்கறான்னா?
நீ வேற ஏன் பிடுங்கற?”

பேசாமல் இருந்த தங்க்ஸைப் பாத்து
புலம்ப ஆரம்பிக்கிறார் ரங்கு,
” எம்புட்டு செஞ்சாலும் திருப்தியே இல்லை
அந்த ஆபிஸருக்கு. என்னிய விட
2 வயசுதான் கூட இருக்கும். அதிகாரியா
உக்காந்திருக்கோம்னு ரொம்ப
திமிரு. எவ்வளவு கஷ்டப்பட்டு
வேலைப் பாத்தாலும் அதுல
குத்தம் மட்டுமே கண்டு பிடிக்கறதே
பொழைப்பு. தப்பித்தவறி
பாராட்டு மட்டும் மனுஷ்ன் கிட்டேயிருந்து
வாங்கவே முடியாது!!!

செஞ்ச வேலைக்கு ஒரு அங்கீகாரம்
இல்லாம வேலைப்பாக்கறது ரொம்ப
கஷ்டம். என்ன கொடுமைடா
இந்த வாழ்க்கைன்னு நான் இருக்கேன்,
நீ வேற என்னாச்சு, ஏதாச்சுன்னு
கேக்கற,” என்று எரிந்து விழுகிறார்.

இதுல எங்கங்க ஹஸ்பண்டாலஜி பாடம்
வந்துச்சுன்னு கேக்குற அப்பாவிகளுக்கு பாடமே
இனிமேதாங்க ஆரம்பம்!!!

பாடத்தோட தலைப்பை மறுபடி ஒருமுறை
ஞாபகப் படுத்திக்கோங்க.

தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தாலும்
புரிய மாட்டேங்குதே!


தான் செய்யுற வேலைக்கு ஒரு பாராட்டு,
அங்கீகாரம் இது இருந்தாத்தான் ஊக்கமா
வேலை செய்யமுடியும் என்பது ரங்கமணிக்கு
தெரிஞ்சிருந்தாலும் வீட்டுல தங்கமணி
செய்யற வேலைக்கு ஒரு நாளாவது
பாராட்டிருப்பாரா?

எம்புட்டு நல்லா போட்டாலும் காபி
நல்லா இல்லை, சட்னி சரியில்லை
சாம்பார் எங்கம்மா செய்யற மாதிரி
இல்லை, எங்கக்கா மாதிரி காரக்குழம்பு
வெக்கமாட்டீங்கற, என் தங்கச்சி
மாதிரி உடுத்த மாட்டேங்கற.. இப்படி எத்தனை டார்ச்சர்
கொடுக்கறாங்க!!!!

இந்த ரங்கமணிகளுக்கு,தங்கமணியும்
தன்னைப் போல ஒரு மனுஷிதான்.
அவங்களுக்கு சின்னதா ஒரு பாராட்டு,
அட்லீஸ்ட் செஞ்சதுல குத்தம் கண்டுபிடிச்சு
சொல்லாம இருந்தாலே நல்லா இருக்கும்னெல்லாம்
தோணவே தோணாதுங்க.


ஆபிசுல நம்மளைப் பாராட்டணும்னு நாம
எதிர் பார்க்கற மாதிரி நம்ம தங்கமணியும்
நம்மகிட்டேயிருந்து பார்ப்பாங்கற நினைப்பெல்லாம்
கிடையவே கிடையாது.

கேட்டா வீட்டுவேலை செய்யறதுல என்ன
பாராட்டு. அவங்க வேலையை அவங்க
செஞ்சாங்க அம்புட்டுதானேன்னு
கேப்பாங்க ரங்கமணிங்க.
ஆனா அவங்கள மட்டும் ஆபிஸுல
பாராட்டனும், பதக்கம் கொடுக்கணும்,
குத்தம் கண்டுபி்டிக்கக்கூடாதுன்னு
நினைப்பாங்க. எந்த ஊரு
நியாயம்னுதான் தெரியலை!!!


நீங்க இதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க
தங்கமணிகளே!!!

வீட்டுல தங்கமணிகளுக்கு கொடுக்கற
டார்ச்சருக்குத்தான் ஆபிஸுல
அதிகாரிகள் அவங்களுக்கு டார்ச்சரோ
டார்ச்சர் கொடுக்கறாங்க.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமுங்க,
மனசை தேத்திக்கிட்டு இருங்க.

அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

Saturday, December 06, 2008

HAPPY BIRTHDAY JEEVES

நம்ம கேமிராக் கவிஞர் தம்பி ஜீவ்ஸிற்கு
இன்று பிறந்தநாள்.






எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறோம்.

Friday, December 05, 2008

நம்மை உணர்ந்தால், நாம் நம்மை உணர்ந்தால் என்றுமே ஆனந்தமே!



இது நடந்து 7 வருஷம் ஆச்சு. இலங்கையில் இருந்த
பொழுது


நாங்க ஒரு 6 பேர் தோழிகள்.( என்னைப் போலவே
இங்கேயிருந்து அங்கே வந்திருந்தவங்க.
அவங்கள்ளாம் என்னைய விட
2 வருசம் பெரியவங்க)
நாளை என் வீட்டிற்கு 11 மணிக்கு வந்துவிடு! வரும்பொழுது
கலர் பென்சில், ஸ்கெட்ச் எல்லாம் கொண்டுவா!??!!” அப்படின்னு
சொல்லிட்டு என் தோழி போனை வெச்சிட்டாங்க.

”பசங்க வர்றதுக்குள்ள வந்திடலாம்லன்னு,” கேட்டு கன்பார்ம்
செஞ்சுட்டுதான் போனேன்.

எல்லாரும் உட்கார தோட்டத்தில சேர்லாம் போட்டு அழகா
செட் செஞ்சிருந்தாங்க. கலர் பென்சிலை எடுத்து ரெடியா
எடுத்து வெச்சுகிட்டு எல்லோரும் காத்திருந்தோம்.

ஆளுக்கொரு பேப்பரை கொடுத்து,”உங்க பெயரைக் குறிக்கும்
விதத்தில் படங்கள் வரைங்க பார்க்கலாம்னு!”
தானும் வரைய ஆரம்பிச்சார்.

கொடுத்த 10 நிமிசத்துல என் படங்கள் ரெடி. :)

என்னப்பா! சீக்கரம் முடிச்சிட்ட, எனக்கு பென்சில்
சீவித்தாயேன் அப்படி, இப்படின்னு பேசிகிட்டே
சின்ன வயசுக்கு போயிட்டோம். ஒரு வழியா
20 நிமிசத்துல எல்லோரும் முடிச்சதும்

அவங்கங்க வரைஞ்ச படத்தை எல்லோருக்கும்
காட்டணும். பெயர் தெரியும் என்பதால்
படம் அவங்க பெயருக்கு ஏத்தா மாதிரி வந்திருக்கான்னு
அடுத்தவங்க சொல்லணும்னு விளையாட்டு.

ரொம்ப நல்லா இருந்துச்சு.” எப்பவும் பிள்ளைகளின்
பென்சில்களை எடுத்து அடுக்கும்போது மட்டுமே
பென்சிலைத் தொடரோம். ஒரு மாறுதலுக்கு
கரண்டி பிடிக்கும் கையில் சித்திரம் தீட்டச் சொன்னேன்”
என்றார்.

வீட்டுக்கு வரும் வழியில் எல்லாம் ஒரே யோசனை.
அம்ருதா பி்றந்த பிறகு நான் பென்சிலை பிடித்து
வரையவே இல்லை! இப்படி எனக்குள் எத்தனை
மாற்றம்?!! என யோசித்துக்கொண்டே அன்று
முழுதும் இருந்தேன்.

இரவு 8 மணி வாக்கில் அதே தோழி போன்
செய்தார். ”என்னப்பா! எப்படி இருந்தது
வொர்க் ஷாப் என்று கேட்டார்?”

என்னது வொர்க்‌ஷாப்பா? என்றேன் நான்.

ஆமாம்! எனது சைக்காலஜி படித்த
தோழியிடம் குடும்பம், குழந்தைகள் என்று
மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம்மை மொத்தமாக தொலைத்துவிட்டு
வாழ்க்கை வெறுமையா இருக்குன்னு
புலம்பகிட்டு இருந்தேன். உன் தோழிகளை
கூப்பிட்டு இந்த மாதிரி செய். அவங்க
மனசுல புதைஞ்சு போயிருக்கற எண்னங்கள்
வெளியே வந்து, தன்னை உணர்ந்து
வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குவாங்க”
அப்படின்னு சொன்னாங்க. உனக்கு எப்படி
இருக்குன்னு? கேட்டாங்க.


பசங்கள கூட்டிகிட்டு வரும்போது நல்ல
ட்ராயிங்புக், பென்சில் எல்லாம் வாங்கிகிட்டு
வந்துட்டேன். கிட்டத்தட்ட 7 வருஷமா
மறந்தே போயிருந்த ட்ராயிங்கை ஆரம்பிக்கப்போறேன்னு
சொன்னேன்.

சபாஷ்! அடுத்த ஃப்ரண்ட்சுக்கு போனப் போட்டு
நிலமையை கேக்கணும்னு வெச்சிட்டாங்க.




ஓடும் ட்ரெயினில் க்ரோஷா பின்னுவோமே
அதையும் செய்யலாம்னு வாங்கிகிட்டு வந்தேன்.



புதுசா புத்தகம் வந்திடக்கூடாதே! அதைப் படிச்சு
முடிச்சு கீழே வெச்சாதான் ஆச்சா! என்று திட்டும்
அம்மாவுக்கு”சுடச்சுட படிக்கணும் அம்மான்னு” பதில்
சொல்லிகிட்டே சாப்பிடும்போது கூட புத்தகம் படித்த
நான் தொலைந்து போயிருந்தது உணர்ந்தேன்.

தினமும் எப்படியாவது புத்தகம் படிக்கவேண்டும்
என்று முடிவு செய்து அதை நடை முறையும்
படுத்தினேன். (அதுக்காக பிள்ளைகள் எழுமுன்
சீக்கரமே எழுந்து படிப்பேன், அல்லது
தூங்கும் முன், என டைம் வெச்சுகிட்டேன்.
இப்ப ஹிந்தி, தமிழ், ஆங்கில இதழ்கள்
எம்புட்டு படிக்கிறேன் தெரியுமா!)




பாட்டுக்கேக்கறன்னு அப்பா திட்டினா டேக் இட் ஈஸி பாலிசின்னு
பாட்டு, பாட்டுன்னு பாட்டு கேப்போமே, அதுவும்
இருந்தா நல்லா இருக்குமே! அப்படின்னு
அயித்தான் கிட்ட சொல்ல
கிச்சனிலும் ரேடியோ வெச்சு கொடுத்தாங்க.
ஆனந்தமா பாட்டுத்தான்.

(பாட்டு எங்க ரெண்டு பேருக்குமே உயிர் :) )



15 நாளுக்கு ஒரு முறை பிள்ளைகள் மற்றும்
நாங்கள்(ஒன்லி லேடீஸ் :) ) மட்டும் அவுட்டிங்
போவோம்.

ஸ்லோகம் தெரிந்தவர்கள் பிள்ளைகளுக்குச்
சொல்லிக்கொடுக்க கூடுவோம்.

இப்படி எங்களுக்குள் இருந்த திறமைகள்
வெளிப் படுத்திகிட்டோம்.

இந்தியாவிலிருந்து மாஸ்டரை
வரவழைச்சு ஒரு ப்ரெண்ட் ரெய்கி
கத்துக்க ஏற்பாடு செஞ்சாங்க. இன்னைகு
அந்த ரெய்கியால எனக்கும் அனைவருக்கும்
ரொம்பவே உதவியாய் இருக்கு.


மத்த ப்ரெண்ட்ஸ்ங்கள்லாம் என்ன செஞ்சாங்கன்னு

ஒருத்தங்க 15 வருஷத்துக்கப்புறம் காலில் சலங்கையை
கட்டிகிட்டு நடனம் ஆடத் துவங்கிட்டாங்க!

வீட்டுல என்ன பாட்டு வேண்டிகிடக்கு!!” கேட்ட
கணவருக்காக தன் குரலை மறந்து இருந்தவர்
பாட ஆரம்பித்த பொழுது அவரின் பிள்ளைகள்
தந்த கரவொலி!!!!!

பாட்டரி பெயிண்டிங்க் செஞ்சு கொண்டுவந்து
எல்லோருக்கும் கொடுத்து அசத்தினாங்க
ஒரு ப்ரெண்ட்!

சல்லுன்னு காரோட்டின சந்தோஷத்தைப்
பகிர்ந்துகிட்டாங்க இன்னொருத்தங்க.

இப்படி எங்க எல்லோர்கிட்டயும் நிறைய
மாறுதல்கள். :)


நம்மை நாம் தொலைத்ததால்தான் வாழ்க்கையில்
வெறுமை வருதுன்னு புரிய வெச்சத் தோழிக்கு
இதன் மூலம் நன்றி சொல்லிக்கறேன்.

இப்ப என் கடைமைகளை முடிஞ்சதும்,
எனக்கே எனக்காக நேரம் ஒதுக்கிட்டு
என்னை நான் நல்லா கவனிச்சுக்கறேன்.
அதனால நான் சந்தோஷமா இருக்கறேன்.

நம்ம சந்தோஷமா இருந்தா நம்மளை சுத்தி
இருக்கறவங்களையும் சந்தோஷமா வெச்சுக்க
முடியும்ல!!

தொலைஞ்சு போயிருக்கும் உங்களைத்
தேடுங்க!

கல்யாணம் ஆயிடிச்சு, வயசாயிடுச்ச்
அப்படிங்கற நினைப்பெல்லாம் எடுத்து
ஓரம் கட்டி வெச்சிடுங்க!


உங்களுக்கே உங்களுக்கு நேரம்
ஒதுக்கி உங்களை நல்லா பாத்துக்கோங்க.

MUMMY ALSO NEEDS TIME OUT!!!! :)

பிள்ளைகள் பள்ளி/கல்லூரிக்கு போன பிறகு,
கணவர் அலுவலகம் போன பின்பு உங்களுக்கென
ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

தோழியை சந்திப்பது, கடைக்குச் செல்வது
(விண்டோ ஷாப்பிங்), அதிக நேரம்
இருந்தால் தோழியுடன் ஒரு சினிமா!
மதியம் லன்ச் தோழிகளுடன்....
என நமக்காக நேரம் வெச்சுக்கலாம்.


குடும்பத்துக்காக எம்புட்டு செய்யறோம்!
பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் அலுவலகத்தும்
போன பிறகு எல்லா வேலைகளும் முடித்து
விட்டு பார்லர் போய் பெடிக்யூர் செஞ்சுக்கோங்க.

கால்கள் பரமாரிப்பது மிக முக்கியம். அதைப்
பத்தின பதிவு கூட இங்க இருக்கு.




ஆனந்தமா ஒரு ஆயில் மசாஜ் செஞ்சுக்கலாம்.





நம்மளை நாமே கவனிச்சுக்காட்டி போனா
வேற யாரு கவனிக்கப்போறாங்க??!!!

உங்களைத் தேடி் கண்டுபிடிச்சிட்டீங்களா?
தனியா பதிவு போட்டாலும், சரி
மெயில் எழுதினாலும் சரி.

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Tuesday, December 02, 2008

ஹோம் மேக்கர்


வீட்டு நிர்வாகம் என்பது “அஷ்டாவதானி” போன்றதொரு
வேலை. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்காவது
ஓய்விருக்கும். ஆனால் வீட்டில் வேலைக்கு ஓய்வே
கிடையாது.

Finanace Management, purchasing, Housekeeping,
cooking..........
டீச்சர், பிள்ளைவளர்ப்பு..
இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது.




ஒரு ஹோட்டலை திறம்பட நடத்த மேலே நான்
சொல்லியிருப்பது போல பல துறைகளுக்கு என
தனித்தனி துறை தலைவர்கள், அவர்களின்
கீழ் வேலை செய்ய என ஒரு குரூப் இப்படி
நிர்வகித்தால்தான் அங்கு வேலை சரிவர நடக்கும்.

வீட்டு நிர்வாகத்தில் ஹோம் மேக்கரின் கீழ்
வேலை செய்ய ஒரே ஒரு வேலைக்காரம்மாதான்!!!

அவரும் “டும்மா” அடித்தால் அன்றைய தினம்
வேலைக்காரம்மாவாக மாறித்தான் ஆகவேண்டும். :)



வேலைக்காரம்மா அடிக்கடி லீவு எடுப்பது போல்
ஹோம் மேக்கர் லீவு போடத்தான் முடியுமா?
அப்படியே போட்டாலும் போவது எங்கே??!!

அலுவலகங்களில் வாரத்திற்கு 5 அல்லது 6 நாள்
வேலை செய்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை.

வீட்டுவேலைக்கு என்று விடுமுறை?



போலிஸ்காரர் பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பிற்காக
பாடுபடுகிறார் என்றால், பண்டிகை காலங்களில்
ஹோம் மேக்கருக்கு “அதிகச் சுமையான”
வேலைகள் இருக்கிறதே.

டாக்டர்கள் எந்த நேரத்திலும் வேலை வரலாம்
என்பதால் தன்னை எப்போதும் “அவைலபிளாக”
வைத்திருக்கவேண்டும். ஹோம் மேக்கரு்க்கும்
எந்த நேரமும் வேலை வரலாம்.

ஆனா என்ன சொல்வாங்க? வேலைக்கு போகாம
வீட்டுல சும்மா தான இருக்க! வேலைக்கு
போற்வங்களூக்காவது
”சில சமயம்” கருணை காட்டுவாங்க.

வீட்டுல இருக்கற எல்லா பெண்களும், டீவி
பார்த்து, மதியம் தூங்கி சோம்பேறிகளாக
பொழுதை கழிப்பதாக ஒரு எண்ணம் எல்லோருக்கும்
இருக்கிறது.

மத்தவங்க கருணைக் காட்டினா என்ன?
காட்டாட்டி என்ன? நம்மை நாம கவனிச்சுக்கணும்ல?

நாம நல்லா இருந்தாத்தான் நம்ம வேலைகளை
திறம்பட செஞ்சுக்க முடியும்.

DESPARATED HOUSEWIFEவா DEPRESSION தான் வரும்.

என் தோழி எனக்கு சொல்லிக்கொடுத்த சில
விசயங்களை உங்களோடு பகிர்ந்துக்கறேன்.

அப்புறம் நீங்க DELIGHTFUL HOUSEWIFE/HOME MAKER தான்.




அந்த விசயங்கள் அடுத்த பதிவுல....

Monday, December 01, 2008

GOOD BYE!!!

”கபி அல்விதா ந கஹனா!” என்று ஒரு
பழய ஹிந்திப் பாடல் உண்டு. ஆனால்

ஆட்டம் முடிஞ்சு போச்சு!
டாடா பைபை சொல்லவேண்டிய நேரமும் வந்தாச்சு!
மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் உண்மை அதுதான்.

என்ன நான் டாடா சொல்லப்போறேன்னு நினைச்சீங்களா?!!
அந்த சந்தோஷம் உங்களுக்கு கிடைக்காது. :)

எம்புட்டு அழகா வாழ்க்கைக்கு குட் பை சொல்லமுடியும்னு
ஒரு படம் பார்த்தேன். அதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு.


Dasvidanya இந்த
ஹிந்தி்ப் படம் “சிம்பிளி சூப்பர்ப்”.





To-do-list எழுதுவதைத் தவிர வேறு எந்த
எண்டடயர்மெண்டும் இல்லாத ஒரு அக்கவுண்டடிற்கு
வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வருகிறது.

37 வயதான அவருக்கு திருமணம் கூட
ஆகியிருக்கவில்லை. அலுவலகத்தில் அமரின்(அதான்
ஹீரோ பெயர்) பாஸ் Noukri.com விளம்பரத்தில் வரும்
”ஹரி சாடு” டைப். மொத்தத்தில் ஒரு சராசரி மனிதனின்
வெறுப்பும், வேதனையும் நிறைந்த ஒரு வாழ்க்கை.

வாழ்க்கை இன்னும் 3 மாதம் தான் என்று
புரிந்த பொழுது தான் இதுவரை எதுவுமே
செய்ததில்லையே? என்று புலம்புகிறார் ஹீரோ.

அவரது மனசாட்சி வந்து பேசும்பொழுது
தான் விழித்துக்கொண்டு சாவதற்கு முன்பு
செய்யவேண்டிய 10 To-do-list எழுதுகிறார்.
என்ன எழுதினார்?
எழுதியவற்றை அவர் இறப்பதற்குள் செய்து முடித்தாரா?
இதை வெள்ளித் திரையில் காணுங்கள்.


படாடோபமான மாளிகைகள் இல்லை, மரத்தைச்
சுற்றிப் பாடும் டூயட்டுக்கள் இல்லை.
நட்பு, காதல், பாசம், காமெடி,
சோகம் எல்லாம் கலந்த
படு யதார்த்தமான காட்சிகள்,
அருமையான கதை, அதை உணர்ந்து நடித்திருக்கும்
நடிகர்கள் இதுதான் இந்தப் படத்தின் பலம்.

அலுவலகத்தில் அமர் படும் பாடுகள் பலர்
தன் வாழ்வில் சந்தித்திருக்க்கூடிய சம்பவங்களே!





சாவதற்கு முன் செய்யவேண்டிய லிஸ்டில் ஒன்றாக
தான் கிடார் கற்று தன் அம்மாவிற்கு பாடும் இந்தப்
பாடல் நம் அம்மாவிற்கு நாம் பாடுவது போல்
இருக்கும்.(ஓடிப்போய் அம்மாவை கட்டிக்கொள்ள
வேண்டும், அவர் மடியில் தலை சாய்க்க வேண்டும்
என்றும் தோன்றும் அளவுக்கு சூப்பர் பாடல்)




தியேட்டரில் இருந்து வெளியே வந்த பிறகு கூட
சில படங்கள் நம்மை அசைப் போட வைக்கும்.
தாஸ்விதானியா(குட் பை- ரஷ்ய மொழியில்)
அந்த வகைப் படம்.

ஹீரோ வினய் பாதக்கின் அற்புதமான நடிப்பு,
அழகான கதையமைப்பு, காட்சிகள்
எல்லாம் சில சமயம் கண்ணில் கண்ணீரை
வரவழைக்கும்.




இந்தப் படத்தை
பார்க்கும் நேரமும், அதற்கு செல்வழித்த
காசும் வீணாகப் போகாது.

கசப்பும் இனிப்பும் நிறைந்த நினைவுகளை
நமக்குத் தரும் இந்தப் படம் கண்டிப்பாக
பார்க்கவேண்டியஒன்று.

அமர் தன் குட்பையை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு தன் வாழ்வின் கடைசி தெரிந்ததால்
விழித்துக்கொண்டார்.

நமக்கு அது தெரியாது என்பதாலேயே நாம்
வி்ழித்துக்கொள்ளாமல் இருக்கக்கூடாது.
மனதுக்குள் ஆசைகளை புதைத்து
வைத்துக்கொண்டு, கால்போன போக்கில்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.




இருக்கும் வரை ஆனந்தமாக இருந்துவிட்டு
அழகாக “தாஸ்விதானியா” சொல்வோமே!

நினைவே ஒரு சங்கீதம்!!






”நீங்க தூக்கிகிட்டு வராட்டி
மணமேடைக்கே வரமாட்டேன்”
என்று நான் மாமாக்களை மிரட்டியது!

”கல்யாணத்துக்கு முதல் நாள் பந்தாமே!
மாப்பிள்ளை தாலிகட்ட வந்திடுவாரா!!??!!”
என அப்பா பயந்தது!


பந்த் தந்த டென்ஷனில் கிடைத்த
டிரையினில் ஏறி கதவருகே அமர்ந்து
பயணித்து 1 நாள் முன்னதாகவே
அனைவரும் சத்திரத்திற்கு வந்தது!

எப்படியும் வந்துவிடவேண்டும் என்று
உங்கள் அலுவலக நண்பர்களும், மற்ற
உறவினர்களும் வேன், லாரி என பயணித்து
நள்ளிரவுக்குள் மண்டபம் வந்து சேர்ந்தது!

திரைவிலக்கி கண்கள் கலக்க
காத்திருந்தது!

நம் திருமண வீடியோ பார்க்கும்பொழுது
இவைகளும் எனக்கு நினைவுக்கு
வருகிறது.



இன்று நம் திருமணநாள்.
நினைவுகள் ஒரு சங்கீதமாய் இனிக்க
அந்த நந்நாளை நினைத்து பார்க்கிறேன்.

அயித்தானுக்கு மணமார்ந்த
திருமணநாள் வாழ்த்துக்கள்!