தமிழ்மண விருதுகள் முதற்கட்ட முடிவுகள்
அறிவிச்சிருக்காங்க.
நம்ம நண்பர்கள் பலரின் பதிவுகள் இருக்கு.
அனைவருக்கும் என் மன்மார்ந்த பாராட்டுக்கள்.
தமிழ்மண விருது
பிரிவு: அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
இந்தப் பகுதியில் என் மாண்டிசோரி முறைக்கல்வி 6ஆவது
இடத்தில் இருக்கு.
நகைச்சுவை, கார்ட்டூன் பகுதியிலும்
என் பொண்ணு பார்க்கப்போகும்பொழுது பதிவு
9ஆவது இடத்தில் இருக்கு.
வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கு இதயம் கனிந்த
நன்றிகள்.
Friday, February 27, 2009
நம்ம ஊரு நல்ல ஊரு! இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க...
சமீபகாலமா நம்ம் ரயில்வே துறை சூப்பரா
வேலை செய்யுது.
எந்த கோச் எங்க வரும்னு எழுதி வெச்சிருப்பாங்க.
இல்லாட்டி போர்டர் கிட்ட,” இந்த கோச் எங்க வரும்னு”
கேட்டுகிட்டு இருப்போம்.

இப்ப அந்தந்த ப்ளாட்பார்ம்ல வண்டி வருவதற்கு
30 நிமிடம் முன்னாடியே அழகா வண்டி எண்,
கோச் நம்பர் எல்லாம் தெரியறமாதிரி செஞ்சு
வெச்சிருக்காங்க.

டிக்கெட் ரிசர்வேஷனுக்கு வரிசையில் நின்னு
டிக்கெட் வாங்கிகிட்டு இருந்தோம். கேன்சலேஷன்,
ரிசர்வேஷன்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு பாரம்
எழுதி அதைக் கொடுத்து கவுண்டர்ல இருக்கறவங்க
சல்லு புல்லுன்னு விழுவாங்க அதையும் கேட்டுகிட்டு
வேற விதி இல்லாம டிக்கெட் புக்கிங் செஞ்சிருக்கோம்.
கொஞ்சம் அதிகம் பணம் கொடுக்க முடிஞ்சவங்க
ட்ராவல்ஸ் மூலமா முன் பதிவு செஞ்சுக்குவாங்க.
இப்ப எல்லாம் ஆன்லைன் தான். அழகா
கஷ்டப்படாம டிக்கெட் புக் செஞ்சுக்கலாம்.
நல்ல வசதி இது.
இங்க பதிவு
செஞ்சு வெச்சுகிட்ட கார்டு ஒண்ணு அனுப்புவாங்க.
அந்த கார்டு இருந்தா ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கத் தேவையில்லை.
நாம் புக் செய்யும் டிக்கெட்களுக்கு விமானம்
மாதிரி பாயிண்ட்ஸ் சேரும்.
(பலருக்கும் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்காகத்தான்)

யாராவது ஊருலேர்ந்து வர்றாங்கன்னா அவங்களை
ஸ்டேஷன்ல போய்கூப்பிட்டுகிட்டு வர்றதுக்குள்ள
நம்ம உசிரு போயிடும். நேரத்துக்கு வராது.
நான் ஒவ்வொரு முறை மும்பையிலிருந்து
சென்னை வரும்பொழுது சென்னை எக்ஸ்பிரஸ் தான்
வருவேன். அது என்னைக்கும் சரியான நேரத்துக்கு
வந்ததே கிடையாது. 8 மணிக்கு வரவேண்டிய
ட்ரையின் ராத்திரி 12 மணிக்கு வந்த கொடுமையும் உண்டு.
இந்த மாதிரி யாரையாவது கூப்பிட போகும் முன்
ரயில்வே என்கொயரிக்கு போன் போட்டு
எத்தனை மணிக்கு வருது ட்ரையின்னு கேட்டுகிட்டு
போறது நல்ல ஐடியா. ஆனா அங்கையும் பிரச்சனை
இருக்கு.
அந்த நம்பர் எப்பவும் என்கேஜ்டாத்தான் இருக்கும்!!!
“ஆப் கதார் மேன் ஹை!! யூ ஆர் இன் க்யூ”
இப்படி சொல்லி டடடையிங்குன்னு பாட்டு
ஒண்ணு ஓடும். வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.
ஆனா இப்ப இதுவும் ஆன்லைனில் பார்க்க முடியுமே!!
வண்டி எண், எந்த இடத்திலிருந்து எங்கேன்னு
விவரங்கள் கொடுத்தா போதும். ட்ரையின் எங்க
இருக்கு? எத்தனை மணிக்கு வருதுங்கற லேட்டஸ்ட்
விவரங்கள் தெரியுது. அப்பப்ப அப்டேட் செஞ்சு
வைக்குது நம்ம ரயில்வே.
TRAIN RUNNING INFORMATION
Find Your Train
Train Arrivals
Train Departures
Train Time Table
Passing By Trains
Tourist Information
Passenger Amenities
Reservation Enquiry
Fares
Special Trains
Platform Berthing
Western Railway
Rules
Other Information
About Us
FAQs
இந்த விவரமெல்லாம் இந்த சைட்ல
தெரிஞ்சுக்கலாம்.
ரயில்வேக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வேலை செய்யுது.
எந்த கோச் எங்க வரும்னு எழுதி வெச்சிருப்பாங்க.
இல்லாட்டி போர்டர் கிட்ட,” இந்த கோச் எங்க வரும்னு”
கேட்டுகிட்டு இருப்போம்.

இப்ப அந்தந்த ப்ளாட்பார்ம்ல வண்டி வருவதற்கு
30 நிமிடம் முன்னாடியே அழகா வண்டி எண்,
கோச் நம்பர் எல்லாம் தெரியறமாதிரி செஞ்சு
வெச்சிருக்காங்க.

டிக்கெட் ரிசர்வேஷனுக்கு வரிசையில் நின்னு
டிக்கெட் வாங்கிகிட்டு இருந்தோம். கேன்சலேஷன்,
ரிசர்வேஷன்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு பாரம்
எழுதி அதைக் கொடுத்து கவுண்டர்ல இருக்கறவங்க
சல்லு புல்லுன்னு விழுவாங்க அதையும் கேட்டுகிட்டு
வேற விதி இல்லாம டிக்கெட் புக்கிங் செஞ்சிருக்கோம்.
கொஞ்சம் அதிகம் பணம் கொடுக்க முடிஞ்சவங்க
ட்ராவல்ஸ் மூலமா முன் பதிவு செஞ்சுக்குவாங்க.
இப்ப எல்லாம் ஆன்லைன் தான். அழகா
கஷ்டப்படாம டிக்கெட் புக் செஞ்சுக்கலாம்.
நல்ல வசதி இது.
இங்க பதிவு
செஞ்சு வெச்சுகிட்ட கார்டு ஒண்ணு அனுப்புவாங்க.
அந்த கார்டு இருந்தா ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கத் தேவையில்லை.
நாம் புக் செய்யும் டிக்கெட்களுக்கு விமானம்
மாதிரி பாயிண்ட்ஸ் சேரும்.
(பலருக்கும் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்காகத்தான்)

யாராவது ஊருலேர்ந்து வர்றாங்கன்னா அவங்களை
ஸ்டேஷன்ல போய்கூப்பிட்டுகிட்டு வர்றதுக்குள்ள
நம்ம உசிரு போயிடும். நேரத்துக்கு வராது.
நான் ஒவ்வொரு முறை மும்பையிலிருந்து
சென்னை வரும்பொழுது சென்னை எக்ஸ்பிரஸ் தான்
வருவேன். அது என்னைக்கும் சரியான நேரத்துக்கு
வந்ததே கிடையாது. 8 மணிக்கு வரவேண்டிய
ட்ரையின் ராத்திரி 12 மணிக்கு வந்த கொடுமையும் உண்டு.
இந்த மாதிரி யாரையாவது கூப்பிட போகும் முன்
ரயில்வே என்கொயரிக்கு போன் போட்டு
எத்தனை மணிக்கு வருது ட்ரையின்னு கேட்டுகிட்டு
போறது நல்ல ஐடியா. ஆனா அங்கையும் பிரச்சனை
இருக்கு.
அந்த நம்பர் எப்பவும் என்கேஜ்டாத்தான் இருக்கும்!!!
“ஆப் கதார் மேன் ஹை!! யூ ஆர் இன் க்யூ”
இப்படி சொல்லி டடடையிங்குன்னு பாட்டு
ஒண்ணு ஓடும். வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.
ஆனா இப்ப இதுவும் ஆன்லைனில் பார்க்க முடியுமே!!
வண்டி எண், எந்த இடத்திலிருந்து எங்கேன்னு
விவரங்கள் கொடுத்தா போதும். ட்ரையின் எங்க
இருக்கு? எத்தனை மணிக்கு வருதுங்கற லேட்டஸ்ட்
விவரங்கள் தெரியுது. அப்பப்ப அப்டேட் செஞ்சு
வைக்குது நம்ம ரயில்வே.
TRAIN RUNNING INFORMATION
Find Your Train
Train Arrivals
Train Departures
Train Time Table
Passing By Trains
Tourist Information
Passenger Amenities
Reservation Enquiry
Fares
Special Trains
Platform Berthing
Western Railway
Rules
Other Information
About Us
FAQs
இந்த விவரமெல்லாம் இந்த சைட்ல
தெரிஞ்சுக்கலாம்.
ரயில்வேக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Thursday, February 26, 2009
ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணக்கட்டுதே.....
சிவராத்திரி முடிஞ்சதும் சிவ சிவான்னு குளிர்
போயிடும்னு எங்க பாட்டி சொல்வாங்க.
சிவராத்திர்க்கு முன்னாடியே குளிர் குறைஞ்சிடுச்சு.
:(
திங்கள்கிழமை சிவராத்திரி முடிஞ்சதும் தன்னோட
வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரு சூரிய பகவான்.
சென்ற வருடத்தோடு ஒப்பிடும்பொழுது நேற்று
வெப்பநிலை 39 டிகிரியாம். 5 டிகிரி அதிகமாயிடுச்சாம்.
அனல் காத்து வீச ஆரம்பிச்சிடிச்சி

இப்பவே இந்த நிலைன்னா? மே மாசம் கேக்கவே
வேண்டாம். ஆனந்த தாண்டவமாடிடுவார் சூரியன்
அண்ணாச்சி. 44 டிகிரியையும் தாண்டிடுமோன்னு தோணுது.
வெயிலோட கொடுமைக்கு ப்ளம்பர், கார்பெண்டர் கூட
வேலைக்கு வரமாட்டாங்க. சாயங்கலமா வர்றோம்
அப்படின்னு ஊட்டுலையே உக்காந்துக்குவாங்க.
என் பசங்களுக்கு மார்ச்ல 2 வாரம் விடுமுறைக்கப்புறம்
பள்ளி திறந்து ஏப்ரல் கடைசியில் விடுமுறை கொடுக்கும்
வரை மதியம் 12 மணிக்கே ஸ்கூல் விட்டுவாங்க.
ஏப்ரல் மேல 4 மணிநேர கரண்ட் கட் இருக்கும்.
இந்த 3 மாசம் மட்டும் தாக்காட்டிட்டா அப்புறம்
ஹைதை சொர்க்கம். :)))

வெயில் காலம் பாட்டி அதிக சூடு இல்லாமல்
உடம்புக்கு சூடு ஆகாத சாப்பாடா கொடுப்பாங்க.
புளியை குறைச்சு, தக்காளி அதிகமா சேப்பாங்க.
வீட்டில எப்பவும் ஸ்ரீராம நவமி தான். (கரைச்ச மோர் :)) )
வெள்ளரிக்காய், நுங்கு, இளநி வாங்கி கொடுப்பாங்க.




மதியம் 4 மணி வாக்கில் நல்லா சில்லுன்னு தயிர்
சோறு பிசைஞ்சு தொட்டுக்க வெங்காயம் வெச்சு
கொடுப்பாங்க. வயித்துல போனதும் உடம்பு
சில்லுன்னு ஆயிடும். ( இப்பவும் வெயில்காலத்தில் என்
ஊறுகாய் பழக்கமெல்லாம் மூட்டை கட்டி
வெச்சிட்டு வெங்காயத்தை தான் எடுப்பேன். :( )
அப்பல்லாம் வீட்டில் ஃப்ரிட்ஜ் கிடையாது.
பாட்டி நல்ல மண் பானை வாங்கிவந்து
கழுவி சுத்தமாக்கி கீழே மணல் பரப்பி,
பானையை வெச்சு அதுல தண்ணி ஊத்தி
வைப்பாங்க. ஏலக்காய், வெட்டிவேர்னு தினத்துக்கு
ஒண்ணு போடுவாங்க. சீரகம் போட்டத் தண்ணி
சூப்பரா இருக்கும்.
மண்பானையை சுத்தி ஒரு வெள்ளைத் துணி
போட்டு வெச்சிருப்பாங்க. அந்தப் பக்கம்
போகையில் 1 டம்பளர் தண்ணி எடுத்து
மண்ணுலையும், துணி மேலையும் ஊத்தி
வெச்சா பானைக்குள்ள தண்ணி ஜும்ம்மா
ஜில்லின்னு இருக்கும்.
வெயில் காலம்னா பானைத்தண்ணிதான்.
இலங்கையில் இருந்தப்ப கூட வெள்ளவத்தைக்கு
போய் வருசா வருஷம் புது பானை வாங்கிகிட்டு
வந்து தண்ணி ஊத்தி வெப்பேன். என் தோழிகள்
கூட எங்க வீட்டு பானைத்தண்ணி குடிக்க
வந்துட்டு போவாங்க.
இதோ இன்னைகு காலேல பானை கண்ணுல
பட்டதும் வாங்கிகிட்டு வந்திட்டேன்.
இன்னைக்கு ஏலக்காய் போட்டு வெச்சிருக்கேன்.
மூண்டா மார்க்கெட் போகும் பொழுது
வெட்டிவேர் வாங்கிகிட்டு வரணும்.
தர்பூஷணி பழம் மீடியம் சைஸ் 10 ரூபாய்தான்
இங்கே. சீட்லஸ் திராட்சையும் விலை குறைய
ஆரம்பிச்சிருச்சு. கிலோ 30. :))

உடம்புக்கு சூடு ஏறாமல் சாப்பாடு.
மாசத்துக்கு ரெண்டு தடவை (கண்டீஷனிங்)
ஹென்னா போட்டா உடம்பு கூலாகிடும்.
(இல்லாட்டி கண்ணு எறிய ஆரம்பிச்சிடும்)
தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஜூஸ்.
டீ காபியை குறைச்சு திக் மோர் குடிச்சாலும்
நல்லதாச்சே!
போன வருஷம் சம்மர் ஷ்பெஷல் பதிவு
போட்டிருந்தேன். அதை இப்ப மீள் பதிவாக
போட்டுக்கறேன்.
அப்புறம் நண்பர்களுக்கு வேண்டுகோள்:
வெளியே அதிகம் போறவங்க சன்ஸ்கீரீன் லோஷன்
போட்டுக்கோங்க.
கூலிங்கிளாஸ் (பார்வைக் கண்ணாடி அணியறவங்க
கூட வெயிலில் போகும்பொழுது கூலிங் கிளாஸ்
கட்டாயம் போடணுமாம். வெயில் அதிகம் பட்டால்
மைக்ரேன் தலைவலி வரும்ணு டாக்டர் சொன்னார்)
மத்தவங்க சிரிப்பாங்கன்னு வெக்கப்படாம ஹேட்,
போடுங்க.
குடையை எடுத்துகிட்டு போறது இன்னும் நல்லது.
(கையில வெச்சிருந்தா பத்தாது. குடையை
விரிச்சு வெக்கணும் :)) )
சன்ஸ்ட்ரோக் வந்துச்சுன்னா ரொம்ப கஷ்டம்.
உடம்பை நல்லா பாத்துக்கோங்க.
போயிடும்னு எங்க பாட்டி சொல்வாங்க.
சிவராத்திர்க்கு முன்னாடியே குளிர் குறைஞ்சிடுச்சு.
:(
திங்கள்கிழமை சிவராத்திரி முடிஞ்சதும் தன்னோட
வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரு சூரிய பகவான்.
சென்ற வருடத்தோடு ஒப்பிடும்பொழுது நேற்று
வெப்பநிலை 39 டிகிரியாம். 5 டிகிரி அதிகமாயிடுச்சாம்.
அனல் காத்து வீச ஆரம்பிச்சிடிச்சி

இப்பவே இந்த நிலைன்னா? மே மாசம் கேக்கவே
வேண்டாம். ஆனந்த தாண்டவமாடிடுவார் சூரியன்
அண்ணாச்சி. 44 டிகிரியையும் தாண்டிடுமோன்னு தோணுது.
வெயிலோட கொடுமைக்கு ப்ளம்பர், கார்பெண்டர் கூட
வேலைக்கு வரமாட்டாங்க. சாயங்கலமா வர்றோம்
அப்படின்னு ஊட்டுலையே உக்காந்துக்குவாங்க.
என் பசங்களுக்கு மார்ச்ல 2 வாரம் விடுமுறைக்கப்புறம்
பள்ளி திறந்து ஏப்ரல் கடைசியில் விடுமுறை கொடுக்கும்
வரை மதியம் 12 மணிக்கே ஸ்கூல் விட்டுவாங்க.
ஏப்ரல் மேல 4 மணிநேர கரண்ட் கட் இருக்கும்.
இந்த 3 மாசம் மட்டும் தாக்காட்டிட்டா அப்புறம்
ஹைதை சொர்க்கம். :)))

வெயில் காலம் பாட்டி அதிக சூடு இல்லாமல்
உடம்புக்கு சூடு ஆகாத சாப்பாடா கொடுப்பாங்க.
புளியை குறைச்சு, தக்காளி அதிகமா சேப்பாங்க.
வீட்டில எப்பவும் ஸ்ரீராம நவமி தான். (கரைச்ச மோர் :)) )
வெள்ளரிக்காய், நுங்கு, இளநி வாங்கி கொடுப்பாங்க.




மதியம் 4 மணி வாக்கில் நல்லா சில்லுன்னு தயிர்
சோறு பிசைஞ்சு தொட்டுக்க வெங்காயம் வெச்சு
கொடுப்பாங்க. வயித்துல போனதும் உடம்பு
சில்லுன்னு ஆயிடும். ( இப்பவும் வெயில்காலத்தில் என்
ஊறுகாய் பழக்கமெல்லாம் மூட்டை கட்டி
வெச்சிட்டு வெங்காயத்தை தான் எடுப்பேன். :( )
அப்பல்லாம் வீட்டில் ஃப்ரிட்ஜ் கிடையாது.
பாட்டி நல்ல மண் பானை வாங்கிவந்து
கழுவி சுத்தமாக்கி கீழே மணல் பரப்பி,
பானையை வெச்சு அதுல தண்ணி ஊத்தி
வைப்பாங்க. ஏலக்காய், வெட்டிவேர்னு தினத்துக்கு
ஒண்ணு போடுவாங்க. சீரகம் போட்டத் தண்ணி
சூப்பரா இருக்கும்.
மண்பானையை சுத்தி ஒரு வெள்ளைத் துணி
போட்டு வெச்சிருப்பாங்க. அந்தப் பக்கம்
போகையில் 1 டம்பளர் தண்ணி எடுத்து
மண்ணுலையும், துணி மேலையும் ஊத்தி
வெச்சா பானைக்குள்ள தண்ணி ஜும்ம்மா
ஜில்லின்னு இருக்கும்.
வெயில் காலம்னா பானைத்தண்ணிதான்.
இலங்கையில் இருந்தப்ப கூட வெள்ளவத்தைக்கு
போய் வருசா வருஷம் புது பானை வாங்கிகிட்டு
வந்து தண்ணி ஊத்தி வெப்பேன். என் தோழிகள்
கூட எங்க வீட்டு பானைத்தண்ணி குடிக்க
வந்துட்டு போவாங்க.
இதோ இன்னைகு காலேல பானை கண்ணுல
பட்டதும் வாங்கிகிட்டு வந்திட்டேன்.
இன்னைக்கு ஏலக்காய் போட்டு வெச்சிருக்கேன்.
மூண்டா மார்க்கெட் போகும் பொழுது
வெட்டிவேர் வாங்கிகிட்டு வரணும்.
தர்பூஷணி பழம் மீடியம் சைஸ் 10 ரூபாய்தான்
இங்கே. சீட்லஸ் திராட்சையும் விலை குறைய
ஆரம்பிச்சிருச்சு. கிலோ 30. :))
உடம்புக்கு சூடு ஏறாமல் சாப்பாடு.
மாசத்துக்கு ரெண்டு தடவை (கண்டீஷனிங்)
ஹென்னா போட்டா உடம்பு கூலாகிடும்.
(இல்லாட்டி கண்ணு எறிய ஆரம்பிச்சிடும்)
தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஜூஸ்.
டீ காபியை குறைச்சு திக் மோர் குடிச்சாலும்
நல்லதாச்சே!
போன வருஷம் சம்மர் ஷ்பெஷல் பதிவு
போட்டிருந்தேன். அதை இப்ப மீள் பதிவாக
போட்டுக்கறேன்.
அப்புறம் நண்பர்களுக்கு வேண்டுகோள்:
வெளியே அதிகம் போறவங்க சன்ஸ்கீரீன் லோஷன்
போட்டுக்கோங்க.
கூலிங்கிளாஸ் (பார்வைக் கண்ணாடி அணியறவங்க
கூட வெயிலில் போகும்பொழுது கூலிங் கிளாஸ்
கட்டாயம் போடணுமாம். வெயில் அதிகம் பட்டால்
மைக்ரேன் தலைவலி வரும்ணு டாக்டர் சொன்னார்)
மத்தவங்க சிரிப்பாங்கன்னு வெக்கப்படாம ஹேட்,
போடுங்க.
குடையை எடுத்துகிட்டு போறது இன்னும் நல்லது.
(கையில வெச்சிருந்தா பத்தாது. குடையை
விரிச்சு வெக்கணும் :)) )
சன்ஸ்ட்ரோக் வந்துச்சுன்னா ரொம்ப கஷ்டம்.
உடம்பை நல்லா பாத்துக்கோங்க.
Wednesday, February 25, 2009
கலர் டீவி.....
இப்ப சின்ன குடிசையில் கூட கலர் டீவி இருக்குது.
20 வருடத்துக்கு முன்னாடி டீவி வாங்குவது என்பது
பெரிய விஷயம். கிரிக்கெட் மாட்ச் பார்க்க மட்டும்தான்
எங்கள் வீதியில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு செல்வோம்
நானும் தம்பியும். ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.
அந்த டீவி வீட்டுக்கு வந்ததில் எனக்கும் தம்பிக்கும்
செம சந்தோஷம்.
அது சாலிடர் டீவி!!
Solidaire for latest news
Solidaire for sports
Solidaire for sunday movies
Chorus:
Solidaire Solidaire So-lidaire
We want we want true color
We want we want clear sound
You know what we want we want Solidaire Solidaire!
எங்க தாரக மந்திரமா இந்தப்பாட்டுத்தான் இருந்துச்சு.
சாலிடர் டீவி வாங்கிருக்கோம்னு ரொம்ப பெருமை!!!
பெரிய ஆண்டனா,ரூபவாஹினிக்கு ஒண்ணு, டீடீக்கு
ஒண்ணுன்னு ரெண்டு இருக்கும் அதுல.
கலர் டீவியா? என்ன டீவிப்பான்னு நாங்க
கேக்க, அப்பா இது ப்ளாக் & வொயிட் தான்
அப்படின்னு சொல்லவும் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு.
பச்சை பசேல்னு புல்தரையில் கபில்தேவ்
ஓடி வந்து பந்து வீசுறதையோ, மனீந்தர் சர்மாவின்
சிரிப்பையோ க்ளியரா பாக்க முடியாதே!!
கலர் டீவி வாங்கியிருக்கலாம்பா! இது தம்பி.
புள்ளைங்க அக்கம் பக்கம் போயி டீவி பாக்கறாங்களேன்னு
டீவி வாங்கினா அதுக்கும் குத்தம் சொல்லுடா!!!
அப்படின்னு அப்பா கோபப்பட்டார்.
சரி சண்டை வேணாம்னு அம்மா சமாதனப்படுத்த
டீவி, ஆண்டனா எல்லாம் செட் செஞ்சாங்க
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் படம் பார்க்க
அம்மம்மா கடலையை உப்பு போட்டு அவிச்சு
கொண்டுவந்திருந்தாங்க :(
தாத்தா, மாமா என பெரிய கூட்டமே இருந்தோம்.
படம் என்னத் தெரியுமா?
சாந்த சக்குபாய். ஆன்னா பாட்டு, ஊன்னா பாட்டு
தம்பி தலையில அடிச்சுகிட்டான்.
அடுத்த வாரமும் கிருஷ்ணா முகுந்தா முராரேன்னு
பாகவதர் படம். எங்களுக்கு கொடுப்பினை இல்லைன்னு
நானும் தம்பியும் வெளியிலே போய் உக்காந்திட்டோம்.
கிரிக்கெட் மாட்ச், ஒளியும் ஒலியும், சித்ரஹார்
என பார்க்க அப்பாவிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்.
ஹிந்தி ப்ரோக்ராம்களும் மிகவும் பிடிக்கும்.
நீவ்,ஹம் பன்சி ஹே எக் டால் கி, லஹர் லஹர் சங்கீத்,
நுக்கட், ரஜனி, புனியாத், த்ருஷ்ணா என பல சீரியல்கள்.
வரதுக்கு கல்யாணம், நகையே உனக்கொரு நமஸ்காரம்,
க்ரேசி மோகனின் தொடர்கள் என செம கலக்கலாக இருக்கும்.
டீடீ நியூஸ் ரீடர் மஞ்சர் ஜோஷி அப்பாவுக்கு மிகவும்
பிடிக்கும். எனக்கு சுனித் தந்தன்தான்.
ஆரதனா ஹிந்தி படம் அப்பா 16 முறை தியேட்டரில்
பார்த்தாராம். அந்தப் படம் திரையிடப்பட்ட அன்று
அப்பா முன்னதாகவே ஆஜர். ”குன் குனாரகே பவனு”
பாட்டை என் பாட்டி (60 வயது )பாடியது அதிசயம். :))
வீட்டில் டீவி பார்க்க அக்கம்பக்கத்தவர்கள் புக்கிங்
செய்து கொள்வார்கள். சில சமயம் சங்கடங்கள்,
சில சமயம் சந்தோஷம். சவுண்ட் வை, தள்ளி
உக்காருன்னு நம்மயே பேசுவாங்க!!
பேப்பரில் மஹாபாரதம் தமிழில் படித்துவிட்டு
அடுத்த சீன் இதான் என சஸ்பென்ஸ் உடைத்த
அப்பாவின் அலுவலக நண்பர்,
விளம்பரங்களை நானும் தம்பியும் ரசித்து பார்க்க
விளம்பரம் வரும்பொழுது டீவியை ஆஃப் செஞ்சு
வைக்கலாம்ல என்று சொன்ன பக்கத்து வீட்டு பாட்டி!!
ஒளியும் ஒலியும் பாடல்கள் பார்க்க நாங்கள்
காத்திருக்க எங்களுக்கு “சென்சார்” செய்ய ரெடியாக இருந்த
எங்கள் பாட்டி என பயங்கர கொசுவத்திதான்.
எங்கள் கலர் டீவி நச்சரிப்பை தாளாமல் அப்பா
”நாளைக்கு நீங்கள் பள்ளியிலிருந்து வரும்பொழுது
கலர் டீவி இருக்கும்”!!! என்றார்.
சந்தோஷமாக வீட்டுக்கு வந்தோம்.
டீவிக்கு கவர் போடப்பட்டிருந்தது!!
பழைய டீவிதானே! புது டீவீ எங்கே?
என பாட்டியை கேட்டதுக்கு,
” அப்பா வந்து பதில் சொல்வார்” அப்படின்னாங்க
பாட்டி. சாயந்திரம் 5 மணிக்கு அப்பா வந்திட்டாரு.
அவரு வந்துதான் ஓபனிங் செர்மனி(!!!!)
தூர்தர்ஷன் ஆரம்பிக்கும் முன்னாடி சுவிட்சைபோட்டு
கவரை எடுத்தாரு எங்களுக்கு ஷாக்.
ப்ளாக் & வொயிட் டீவிக்கு முன்னாடி
கலர் கலரா கண்ணாடி பேப்பர்
நீலம், மஞ்சள், பச்சை, சிகப்புன்னு வாங்கி
தொங்க விட்டிருந்தாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதான் கலர் டீவி, உங்களுக்கு என்ன கலர் வேணுமோ
அந்தக் கலர்ல டீவி பாருங்கன்னு சொல்லிட்டாரு.
:(((((
நான் ரொம்ப நாளாத் தேடிகிட்டு இருந்த
இந்த வீடியோ கிடைச்சிடுச்சு.
டிடி வலைப்பூ இதில் அனைத்து
பழை டீடீ வீடியோக்கள் இருக்கிறதாம்.
20 வருடத்துக்கு முன்னாடி டீவி வாங்குவது என்பது
பெரிய விஷயம். கிரிக்கெட் மாட்ச் பார்க்க மட்டும்தான்
எங்கள் வீதியில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு செல்வோம்
நானும் தம்பியும். ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.
அந்த டீவி வீட்டுக்கு வந்ததில் எனக்கும் தம்பிக்கும்
செம சந்தோஷம்.
அது சாலிடர் டீவி!!
Solidaire for latest news
Solidaire for sports
Solidaire for sunday movies
Chorus:
Solidaire Solidaire So-lidaire
We want we want true color
We want we want clear sound
You know what we want we want Solidaire Solidaire!
எங்க தாரக மந்திரமா இந்தப்பாட்டுத்தான் இருந்துச்சு.
சாலிடர் டீவி வாங்கிருக்கோம்னு ரொம்ப பெருமை!!!
பெரிய ஆண்டனா,ரூபவாஹினிக்கு ஒண்ணு, டீடீக்கு
ஒண்ணுன்னு ரெண்டு இருக்கும் அதுல.
கலர் டீவியா? என்ன டீவிப்பான்னு நாங்க
கேக்க, அப்பா இது ப்ளாக் & வொயிட் தான்
அப்படின்னு சொல்லவும் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு.
பச்சை பசேல்னு புல்தரையில் கபில்தேவ்
ஓடி வந்து பந்து வீசுறதையோ, மனீந்தர் சர்மாவின்
சிரிப்பையோ க்ளியரா பாக்க முடியாதே!!
கலர் டீவி வாங்கியிருக்கலாம்பா! இது தம்பி.
புள்ளைங்க அக்கம் பக்கம் போயி டீவி பாக்கறாங்களேன்னு
டீவி வாங்கினா அதுக்கும் குத்தம் சொல்லுடா!!!
அப்படின்னு அப்பா கோபப்பட்டார்.
சரி சண்டை வேணாம்னு அம்மா சமாதனப்படுத்த
டீவி, ஆண்டனா எல்லாம் செட் செஞ்சாங்க
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் படம் பார்க்க
அம்மம்மா கடலையை உப்பு போட்டு அவிச்சு
கொண்டுவந்திருந்தாங்க :(
தாத்தா, மாமா என பெரிய கூட்டமே இருந்தோம்.
படம் என்னத் தெரியுமா?
சாந்த சக்குபாய். ஆன்னா பாட்டு, ஊன்னா பாட்டு
தம்பி தலையில அடிச்சுகிட்டான்.
அடுத்த வாரமும் கிருஷ்ணா முகுந்தா முராரேன்னு
பாகவதர் படம். எங்களுக்கு கொடுப்பினை இல்லைன்னு
நானும் தம்பியும் வெளியிலே போய் உக்காந்திட்டோம்.
கிரிக்கெட் மாட்ச், ஒளியும் ஒலியும், சித்ரஹார்
என பார்க்க அப்பாவிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்.
ஹிந்தி ப்ரோக்ராம்களும் மிகவும் பிடிக்கும்.
நீவ்,ஹம் பன்சி ஹே எக் டால் கி, லஹர் லஹர் சங்கீத்,
நுக்கட், ரஜனி, புனியாத், த்ருஷ்ணா என பல சீரியல்கள்.
வரதுக்கு கல்யாணம், நகையே உனக்கொரு நமஸ்காரம்,
க்ரேசி மோகனின் தொடர்கள் என செம கலக்கலாக இருக்கும்.
டீடீ நியூஸ் ரீடர் மஞ்சர் ஜோஷி அப்பாவுக்கு மிகவும்
பிடிக்கும். எனக்கு சுனித் தந்தன்தான்.
ஆரதனா ஹிந்தி படம் அப்பா 16 முறை தியேட்டரில்
பார்த்தாராம். அந்தப் படம் திரையிடப்பட்ட அன்று
அப்பா முன்னதாகவே ஆஜர். ”குன் குனாரகே பவனு”
பாட்டை என் பாட்டி (60 வயது )பாடியது அதிசயம். :))
வீட்டில் டீவி பார்க்க அக்கம்பக்கத்தவர்கள் புக்கிங்
செய்து கொள்வார்கள். சில சமயம் சங்கடங்கள்,
சில சமயம் சந்தோஷம். சவுண்ட் வை, தள்ளி
உக்காருன்னு நம்மயே பேசுவாங்க!!
பேப்பரில் மஹாபாரதம் தமிழில் படித்துவிட்டு
அடுத்த சீன் இதான் என சஸ்பென்ஸ் உடைத்த
அப்பாவின் அலுவலக நண்பர்,
விளம்பரங்களை நானும் தம்பியும் ரசித்து பார்க்க
விளம்பரம் வரும்பொழுது டீவியை ஆஃப் செஞ்சு
வைக்கலாம்ல என்று சொன்ன பக்கத்து வீட்டு பாட்டி!!
ஒளியும் ஒலியும் பாடல்கள் பார்க்க நாங்கள்
காத்திருக்க எங்களுக்கு “சென்சார்” செய்ய ரெடியாக இருந்த
எங்கள் பாட்டி என பயங்கர கொசுவத்திதான்.
எங்கள் கலர் டீவி நச்சரிப்பை தாளாமல் அப்பா
”நாளைக்கு நீங்கள் பள்ளியிலிருந்து வரும்பொழுது
கலர் டீவி இருக்கும்”!!! என்றார்.
சந்தோஷமாக வீட்டுக்கு வந்தோம்.
டீவிக்கு கவர் போடப்பட்டிருந்தது!!
பழைய டீவிதானே! புது டீவீ எங்கே?
என பாட்டியை கேட்டதுக்கு,
” அப்பா வந்து பதில் சொல்வார்” அப்படின்னாங்க
பாட்டி. சாயந்திரம் 5 மணிக்கு அப்பா வந்திட்டாரு.
அவரு வந்துதான் ஓபனிங் செர்மனி(!!!!)
தூர்தர்ஷன் ஆரம்பிக்கும் முன்னாடி சுவிட்சைபோட்டு
கவரை எடுத்தாரு எங்களுக்கு ஷாக்.
ப்ளாக் & வொயிட் டீவிக்கு முன்னாடி
கலர் கலரா கண்ணாடி பேப்பர்
நீலம், மஞ்சள், பச்சை, சிகப்புன்னு வாங்கி
தொங்க விட்டிருந்தாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதான் கலர் டீவி, உங்களுக்கு என்ன கலர் வேணுமோ
அந்தக் கலர்ல டீவி பாருங்கன்னு சொல்லிட்டாரு.
:(((((
நான் ரொம்ப நாளாத் தேடிகிட்டு இருந்த
இந்த வீடியோ கிடைச்சிடுச்சு.
டிடி வலைப்பூ இதில் அனைத்து
பழை டீடீ வீடியோக்கள் இருக்கிறதாம்.
வண்ணத்துப்பூச்சி விருது

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்!!!!
அப்படின்னு லிங்க் கொடுத்து நாகைசிவா பின்னூட்டம்
போட்டிருந்தாரு!!! அவ்வ்வ்வ்வ்வ்
இவங்க வரிசையில் நானா?? ஆஹா அப்படின்னு
அடிச்சு பிடிச்சு ஓடிபோய் பார்த்தா எனக்கு கூல்
ப்ளாகுக்கான விருது கொடுத்திருக்காரு. மனமார்ந்த
நன்றிகள் சிவா.
புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.
இந்த வரிகள் எனக்கு
நல்ல விஷயங்களை இன்னமும் எழுதணும்னு
ஊக்கத்தை கொடுக்குது. மறுபடியும் என் நன்றிகள் சிவா.
சரி நான் விருது கொடுக்க விரும்பும் நபர்கள்
1. ராமலக்ஷ்மி -
டைமிங்கான கவிதை. அழகான வார்த்தைகள். இவருக்கு நான்
ஏற்கனவே ”வலையுலகின் கவிக்குயில்” அப்படின்னு பட்டம்
கொடுத்திருக்கேன். இந்த வண்ணத்துப்பூச்சி விருதையும் கொடுப்பதில்
மகிழ்ச்சி. ஜெய்ஹோ கவிதை யூத்ஃபுல் விகடனில் வந்திருப்பதற்கும்
எனது பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.
2. நட்புடன் ஜமால் - அனைத்து
வலைப்பூக்களிலும் மீ த பர்ஸ்டாக வந்து பின்னூட்டம் இடுபவர்.
தனது வலைப்பூவில் மிக அழகாக கற்பிப்பார். கற்போம் வாருங்கள்.
இதுதான் இவரது வலைப்பூ. அன்புத் தம்பிக்கு விருது கொடுப்பதில்
சந்தோஷம்.
3. தேன் கிண்ணம் :
1000 மாவது பாட்டை சீக்கிரம் பதிவிடபோகிறார்கள்.
இசையைத்தவிர நம்மை கூலாக வைக்க என்ன இருக்கிறது.
தேன் கிண்ணத்து தேனீக்களுக்கு கூல்ப்ளாக் வண்ணத்துப்பூச்சி விருது.
4.சுரேகா -
அஷ்டாவதானி. பல வேலைகளுக்கு இடையேயும் பல
நல்ல பதிவுகளைத் தரும் இவருக்கு கூல் ப்ளாக் விருது.
5. மங்களூர் சிவா
the only cololurful blog - வீக் எண்ட் ஜொள்ளு படங்கள்
வந்த (அது ஒரு காலம்!!!) ப்ளாக். அப்புறம் கவுஜை கவிதைகளா
வந்துச்சு. இப்ப அப்பப்போ பதிவெழுதும் அன்புத் தம்பி
சிவாவிற்கு கூல் ப்ளாக்
விருது.
//இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம//
அப்படின்னு நாகை சிவா சொல்லியிருந்தாரு. நான்
கொடுக்க நினைத்தவங்களுக்கு கொடுத்திருக்கேன்.
இதை அவர்கள் யாருக்கேனும் கொடுக்க நினைத்தால்
கொடுக்கலாம். இல்லையேல் விருது வழங்கும் விழாவை
முடிச்சுக்கலாம்.
அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்
*************************************
இது எனது 350ஆவது பதிவு. :))
Monday, February 23, 2009
வீக் எண்ட் கொண்டாட்டம் .....


பிள்ளைகள் பரீட்சைக்கு தயார்
ஆகிக்கொண்டிருப்பதால் கொஞ்சம் ப்ரேக்
கொடுக்க வெளியே அழைத்து சென்றோம்.
NTR GARDENSசென்றதே
பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம்.
ட்ரையினில் ஒரு ரவுண்ட்,
பவுண்டைன்கள், பச்சை பசேல்
தோட்டம் என மிக அழகாக இருந்தது.
சாமந்தி பூத்தோட்டத்தின் நடுவில்
புகைப்படம் என மகிழ்ந்தனர்.
முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமாகிய
என்.டீ.ராமராவ் அவர்களின் நினைவு மண்டபத்திற்கு
அருகில் அவரது பெயரால் இந்த இடம்.
மிக அழகாக இருக்கிறது.
போன்சாய் தோட்ட புகைப்படங்களுக்கு
டெசர்ட்
அங்கிருந்து நேராக உறவினர் வீட்டிற்குச்
சென்று விட்டு நாராயணகுடாவில் இருக்கும்
தாஜ்மஹால் ஹோட்டலில் உணவருந்தினோம்.
பக்கத்து கட்டிடம் சினிமா தியேட்டர் எனச்
சொன்னார் அயித்தான். போலாமாப்பா!
என்றனர் குழந்தைகள். பாப்போம் என்று
இருந்துவிட்டார்.
மணி 9.15 வெளியே வந்து தியேட்டரில்
என்ன படம் என்று பார்த்தால் நான்
பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த
சசிரேகா பரிணயம்(சசிரேகா திருமணம்)
ஆஹா, இந்தப் படமா? என்றேன்.
போகலாமா? என்றார் அயித்தான். எனக்கு
பயங்கர ஷாக்.

காரை உள்ளே விட்டார். படம் ஆரம்பித்து
10 நிமிடம் ஆகிறது என்றார்கள். சரி
பார்ப்போம் என்று உள்ளே நுழைந்தோம்.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு
நைட்ஷோ சினிமா... (அதற்கு முன்
வைசாக்கில் “மாவிடாகுலு” (மா+விடாகுலு
எங்கள் விவாகரத்து அல்லது மாவிலை தோரணம்
எனும் பெயர் வரும்படி படம்)
படம் பார்த்தோம்.
தருண், ஜெனிலியா நடிப்பில் கிருஷ்ணவம்சியின்
இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
ஒருமுறை பார்க்கலாம்.
திட்டமிட்டு சில சமயம் போக முடியாமல் போவதுண்டு.
எந்தத் திட்டமும் இடாமல் நேற்று சினிமா
பார்த்தோம். மல்டிப்ளக்ஸுகளில் அதிகம்
பணம் செலவழித்து பார்ப்பதை விட
40ரூபாயில் பால்கனி டிக்கெட் வாங்கி
இந்த மாதிரி தியேட்டர்களில் பார்ப்பதும்
தனி சுகம் தான்..
மொத்தத்தில் சென்ற வார இறுதி
கொண்டாட்டமாக இருந்தது.
(காதுல புகை, வயிற்றெரிச்சல் இதெல்லாம்
பயங்கர வந்து தாக்கப்போகுதுன்னு நல்லாவே
புரிய்து) :)))
Friday, February 20, 2009
TOP 10/10
என்ன எனக்கும் 10/10 ஜுரம் வந்திருச்சுன்னு பாக்கறீங்களா?
இல்லை இதுவரைக்கும் வந்திருக்கும் 10/10 கேள்விகளின்
தொகுப்பு தான் இந்தப் பதிவு. இதுலயும் 10 போஸ்ட்கள்
இருக்கு. :))
பரிசல் ஆரம்பிச்சு வெச்ச கேள்வி ஜுரம்
அதுக்கப்புறம் வந்த எசப் பதிவுகளின் சுட்டி இங்கே
இருக்கு. படிக்காதவங்க படிக்க வசதியாய்.
பரி்சல்காரன்
தாமிரா
அப்துல்லா
அறிவிலி
அம்பி
அபிஅப்பா
mrs.டவுட்
பப்புவின் ஆச்சி
கார்க்கி
தமிழர்
கடைசியா இளையபல்லவன்.
இது இப்போதைய நிலவரம். இதற்கப்புறம்
போடப்படும் பதிவுகளையும் சேத்துஒரு
பதிவு வரும்.
எஞ்சாய். :)))
இல்லை இதுவரைக்கும் வந்திருக்கும் 10/10 கேள்விகளின்
தொகுப்பு தான் இந்தப் பதிவு. இதுலயும் 10 போஸ்ட்கள்
இருக்கு. :))
பரிசல் ஆரம்பிச்சு வெச்ச கேள்வி ஜுரம்
அதுக்கப்புறம் வந்த எசப் பதிவுகளின் சுட்டி இங்கே
இருக்கு. படிக்காதவங்க படிக்க வசதியாய்.
பரி்சல்காரன்
தாமிரா
அப்துல்லா
அறிவிலி
அம்பி
அபிஅப்பா
mrs.டவுட்
பப்புவின் ஆச்சி
கார்க்கி
தமிழர்
கடைசியா இளையபல்லவன்.
இது இப்போதைய நிலவரம். இதற்கப்புறம்
போடப்படும் பதிவுகளையும் சேத்துஒரு
பதிவு வரும்.
எஞ்சாய். :)))
எவர்கிரீன் ஹீரோ!!!!
ஆண்டொ்ன்று போனால் வயதொன்று போகும் -என
பாட்டே இருக்கு. ஆனா இவருக்கு மட்டும் எப்படி
வயசாக வயசாக அழகு கூடுதோ!!!!
அன்றும் இன்றும் என்றும் என்றென்றும்
எனக்கு மிகவும் பிடித்தது அமிதாப் தான்.

இவருக்கு அடுத்து anti-hero கேரக்டர்கள்
செய்வ(த)து ஷாருக் மட்டும் தான்.
shrabhi படத்திலிருந்து இந்தப் பாடல்.

மும்பை லோக்கல் ட்ரையினில் எங்கள் பாட்டுக்கச்சேரியில்
தவறாமல் இடம் பெறும் பாடல் இது. :))
பாம்பே டு கோவா படப் பாடல்.
என்றும் நீங்காத நினைவுகளில் இந்தப் பாடல்.
KABHI KABHI MERE DIL ME KAYALU AATHA HEI
KE THUJUKO BANAYAGA GAYAHEI MERE LIYE.
THU AB SE PAHALEY SITAROMEIN BAS RAHI THI HI.
TUME JAMEEN PE BULAYA GAYA HEI MERE LIYE...
தனது ரியல் ஜோடி ஜெயாவுடன் இணைந்து நடித்த படம்
அபிமான். கணவன் மனைவிக்குள் ஈகோ கூடாது
எனச் சொல்லும் படம். அருமையான பாடல்கள்
நிறைந்த படமென்றும் சொல்லலாம்.
இப்பொழுதும் இவரது படங்கள் மிக அருமையா
இருக்கு.
சீனி கம் இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு 34 வயது.
ஹீரோவுக்கு 64, மாமனாருக்கு 58 வயது என
சுவாரசியமாக இருக்கும்.
தேர்ந்தெடுத்த செஃபாக அருமையான பாத்திரம்
அமிதாப்பிற்கு.
CHINI KUM TRAILER

விருத் படத்தில் தன் மகனின் சாவிற்கு நியாயம்
கேட்டுப் போராடும் தந்தையின் பாத்திரத்தில்
கலக்கியிருப்பார் அமிதாப். ஷர்மிளா டாகூர்
இவருக்கு ஜோடி. அருமையான நடிப்பு.

வீட்டை விட்டு மகன் போனதை தாளாமல் தாய் இறக்க,
மகன் சென்று விடாமல் ஓடி வந்து தடுக்கப் பார்க்கும்
அமிதாப் கால் இடறி விழுந்து சாகிறார். அந்த
வீட்டில் பூதமாக இருந்து அனைவரையும் கஷ்டப்படுத்த
அவரை ஒரு குட்டிப்பையன் எப்படி தனது நண்பனாக்கிக்
கொள்கிறான் என்பது தான் கதை.

அமிதாப்போடு
போட்டி் போட்டு பையன் கலக்குகிறான் என்றால்,
பையனோடு போட்டி போட்டு ,”ஹே படி” பாட்டில்
அமிதாப் கலக்குகிறார்.

HAPPY WEEK END. :))
பாட்டே இருக்கு. ஆனா இவருக்கு மட்டும் எப்படி
வயசாக வயசாக அழகு கூடுதோ!!!!
அன்றும் இன்றும் என்றும் என்றென்றும்
எனக்கு மிகவும் பிடித்தது அமிதாப் தான்.

இவருக்கு அடுத்து anti-hero கேரக்டர்கள்
செய்வ(த)து ஷாருக் மட்டும் தான்.
shrabhi படத்திலிருந்து இந்தப் பாடல்.

மும்பை லோக்கல் ட்ரையினில் எங்கள் பாட்டுக்கச்சேரியில்
தவறாமல் இடம் பெறும் பாடல் இது. :))
பாம்பே டு கோவா படப் பாடல்.
என்றும் நீங்காத நினைவுகளில் இந்தப் பாடல்.
KABHI KABHI MERE DIL ME KAYALU AATHA HEI
KE THUJUKO BANAYAGA GAYAHEI MERE LIYE.
THU AB SE PAHALEY SITAROMEIN BAS RAHI THI HI.
TUME JAMEEN PE BULAYA GAYA HEI MERE LIYE...
தனது ரியல் ஜோடி ஜெயாவுடன் இணைந்து நடித்த படம்
அபிமான். கணவன் மனைவிக்குள் ஈகோ கூடாது
எனச் சொல்லும் படம். அருமையான பாடல்கள்
நிறைந்த படமென்றும் சொல்லலாம்.
இப்பொழுதும் இவரது படங்கள் மிக அருமையா
இருக்கு.
சீனி கம் இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு 34 வயது.
ஹீரோவுக்கு 64, மாமனாருக்கு 58 வயது என
சுவாரசியமாக இருக்கும்.
தேர்ந்தெடுத்த செஃபாக அருமையான பாத்திரம்
அமிதாப்பிற்கு.
CHINI KUM TRAILER

விருத் படத்தில் தன் மகனின் சாவிற்கு நியாயம்
கேட்டுப் போராடும் தந்தையின் பாத்திரத்தில்
கலக்கியிருப்பார் அமிதாப். ஷர்மிளா டாகூர்
இவருக்கு ஜோடி. அருமையான நடிப்பு.

வீட்டை விட்டு மகன் போனதை தாளாமல் தாய் இறக்க,
மகன் சென்று விடாமல் ஓடி வந்து தடுக்கப் பார்க்கும்
அமிதாப் கால் இடறி விழுந்து சாகிறார். அந்த
வீட்டில் பூதமாக இருந்து அனைவரையும் கஷ்டப்படுத்த
அவரை ஒரு குட்டிப்பையன் எப்படி தனது நண்பனாக்கிக்
கொள்கிறான் என்பது தான் கதை.

அமிதாப்போடு
போட்டி் போட்டு பையன் கலக்குகிறான் என்றால்,
பையனோடு போட்டி போட்டு ,”ஹே படி” பாட்டில்
அமிதாப் கலக்குகிறார்.

HAPPY WEEK END. :))
Thursday, February 19, 2009
பிரிவும்!!! சந்தோஷமும்...
பிரிவு::
காலையில் காபிக்காக காத்திருக்க ஆளில்லாமல்
தனியே காபிக் குடிக்க முடியவில்லை.
மாலை வேளைகளில் டீ போடும் பொழுது
மறந்துபோய் ஒரு கப் அதிகமாகவே
தயாரித்து விடுகிறேன்.
டீயை கையில் வைத்துக்கொண்டு அந்திக் காற்று
வீச பால்கனியில் பேசிக்கொண்டே டீ அருந்தியதை
நினைத்துக்கொண்டே தனியாக டீ குடிக்கிறேன்.
பிள்ளைகள் ஏதும் கேட்கையில் ,”நாநா வந்ததும்
கேட்போம்!” என்றுச் சொல்ல ,”அம்மா நாநா
ஊருக்கு போயிருக்காங்க!!” என்று சோகமாக
முகத்துடன் சொல்வார்கள்.
மாத்திரை சாப்பிட்டியா? என நினைவூட்ட
ஆளில்லாததால் மாத்திரை சாப்பிடவே இல்லை.
(வந்ததும் அதுக்குத் தனி திட்டு இருக்கு :) )
அலுவலகம் போய் வீடுதிரும்பிவிடுவீர்கள்
எனும் நினைப்பிலேயே ஓட்டி ஊருக்குப்
போயிருப்பது இது போன்ற தருணங்களில்
உரைக்கும்பொழுது அதிகமாக
பிரிவை உணர்கிறேன்!!(இப்படி அடிக்கடி
ஊருக்குப் போவது நியாயமான்னு அயித்தான்
வந்த உடன் செல்லச் சண்டை போடுவேன், பேசி முடித்த
உடன் அடுத்த வாரம் ஊருக்குப் போவதாய்ச்
சொல்வார்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ம்ம்ம்முடியலை..)
********************************************
சந்தோ்ஷம்
அயித்தான் ஊருக்குபோனால் அண்ணனும் தங்கையும்
தலையனையை எடுத்துக்கொண்டு எங்கள் அறைக்கு
வந்துவிடுவார்கள். :)
இருவரும் கட்டிலில் படுக்க நான் கீழே படுத்துக்
கொள்வேன். நேற்று பயங்கரத் தலைவலி.
விடாமல் இருக்கவே மாத்திரை எடுத்துக்கொண்டு
படுக்கப்போனேன்.
சிறிது நேரத்தில் அம்ருதா அழைத்தாள்
“என்னம்மா?”
R u feeling ok?
ம்ம் பரவாயில்லை.
கஷ்டப்படாதே அம்மா! மேலே படுத்துக்கொள்.
நான் கீழே படுத்துக்கொள்கிறேன் என்றாள்.
அம்மாவின் அக்கறை 9 வயது மகளிடம்.
காலையில் பிள்ளைகளுக்கு சப்பாத்தி செய்து
ஆலு கறி கட்டிக்கொடுத்து மிச்சம் இருந்ததை
எனக்கு ஒரு டப்பாவில் எடுத்து வைத்தேன்.
பார்த்துக்கொண்டிருந்த அம்ருதா,”உனக்காம்மா!
இங்கே கொண்டா அம்மா, நான் எடுத்து
வைக்கிறேன்.நானும் பாத்துக்கிட்டு இருக்கேன்.
வரவர சரியாவே சாப்பிடுவதில்லை!!!!” என்றாள்.
ஆலு என்பதால் குறைவாகவே வைத்துக்கொண்டேன்
என்றும் என் உணவு ந்யூட்ரீஷயன் சொன்னபடிதான்
இருக்கிறது என்று சொன்னாலும் சமாதனமாகவில்லை
அவள்.
போஜ்யேஷு மாதா - என உணவளிக்கும் பொழுது
ஒரு பெண் தாய்போல் பார்க்கவேண்டும் என்று
சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
என அம்ருதம்மா” போஜ்யேஷு மாதாவாகி”
என்னை கண்டிக்கிறாள்.
எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது!!!!!
காலையில் காபிக்காக காத்திருக்க ஆளில்லாமல்
தனியே காபிக் குடிக்க முடியவில்லை.
மாலை வேளைகளில் டீ போடும் பொழுது
மறந்துபோய் ஒரு கப் அதிகமாகவே
தயாரித்து விடுகிறேன்.
டீயை கையில் வைத்துக்கொண்டு அந்திக் காற்று
வீச பால்கனியில் பேசிக்கொண்டே டீ அருந்தியதை
நினைத்துக்கொண்டே தனியாக டீ குடிக்கிறேன்.
பிள்ளைகள் ஏதும் கேட்கையில் ,”நாநா வந்ததும்
கேட்போம்!” என்றுச் சொல்ல ,”அம்மா நாநா
ஊருக்கு போயிருக்காங்க!!” என்று சோகமாக
முகத்துடன் சொல்வார்கள்.
மாத்திரை சாப்பிட்டியா? என நினைவூட்ட
ஆளில்லாததால் மாத்திரை சாப்பிடவே இல்லை.
(வந்ததும் அதுக்குத் தனி திட்டு இருக்கு :) )
அலுவலகம் போய் வீடுதிரும்பிவிடுவீர்கள்
எனும் நினைப்பிலேயே ஓட்டி ஊருக்குப்
போயிருப்பது இது போன்ற தருணங்களில்
உரைக்கும்பொழுது அதிகமாக
பிரிவை உணர்கிறேன்!!(இப்படி அடிக்கடி
ஊருக்குப் போவது நியாயமான்னு அயித்தான்
வந்த உடன் செல்லச் சண்டை போடுவேன், பேசி முடித்த
உடன் அடுத்த வாரம் ஊருக்குப் போவதாய்ச்
சொல்வார்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ம்ம்ம்முடியலை..)
********************************************
சந்தோ்ஷம்
அயித்தான் ஊருக்குபோனால் அண்ணனும் தங்கையும்
தலையனையை எடுத்துக்கொண்டு எங்கள் அறைக்கு
வந்துவிடுவார்கள். :)
இருவரும் கட்டிலில் படுக்க நான் கீழே படுத்துக்
கொள்வேன். நேற்று பயங்கரத் தலைவலி.
விடாமல் இருக்கவே மாத்திரை எடுத்துக்கொண்டு
படுக்கப்போனேன்.
சிறிது நேரத்தில் அம்ருதா அழைத்தாள்
“என்னம்மா?”
R u feeling ok?
ம்ம் பரவாயில்லை.
கஷ்டப்படாதே அம்மா! மேலே படுத்துக்கொள்.
நான் கீழே படுத்துக்கொள்கிறேன் என்றாள்.
அம்மாவின் அக்கறை 9 வயது மகளிடம்.
காலையில் பிள்ளைகளுக்கு சப்பாத்தி செய்து
ஆலு கறி கட்டிக்கொடுத்து மிச்சம் இருந்ததை
எனக்கு ஒரு டப்பாவில் எடுத்து வைத்தேன்.
பார்த்துக்கொண்டிருந்த அம்ருதா,”உனக்காம்மா!
இங்கே கொண்டா அம்மா, நான் எடுத்து
வைக்கிறேன்.நானும் பாத்துக்கிட்டு இருக்கேன்.
வரவர சரியாவே சாப்பிடுவதில்லை!!!!” என்றாள்.
ஆலு என்பதால் குறைவாகவே வைத்துக்கொண்டேன்
என்றும் என் உணவு ந்யூட்ரீஷயன் சொன்னபடிதான்
இருக்கிறது என்று சொன்னாலும் சமாதனமாகவில்லை
அவள்.
போஜ்யேஷு மாதா - என உணவளிக்கும் பொழுது
ஒரு பெண் தாய்போல் பார்க்கவேண்டும் என்று
சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
என அம்ருதம்மா” போஜ்யேஷு மாதாவாகி”
என்னை கண்டிக்கிறாள்.
எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது!!!!!
கனவுக் காணும் வாழ்க்கையாவும்... இறுதிப் பகுதி
மைசூர் யுனிவர்சிட்டி முதன் முதலாக
வெளிநாட்டில் தனது எக்ஷ்டென்ஷன்
கல்லூரிக்கான பதிப்பை இலங்கையில்
கொடுத்திருந்தார்கள்.
மாணவர்களுக்கு ஹிந்தி, கட்டாய பாடமாக
இருந்தது. (மற்ற மொழிகள் அங்கே செய்ய
முடியாது என்பதால்)
அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் ஹிந்தி போதிக்க
இந்திய கலாச்சார நிறுவனத்தினரிடம் கேட்டிருக்கிறார்கள்.
பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டு, “ஆனா, ஆவன்னா
கற்றுக்கொடுத்து, எழுத்துப் பயிற்சிக்கே 6மாதம்
ஆகும்! இதில் 6மாததிற்குள் பாடம், இலக்கணம்
இதெல்லாம் சாத்தியமில்லை என்று” கையை
விரித்துவிட்டார்கள்.
என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்த
நேரத்தில் என் உறவினர் மகன் அங்கு வேலைப்
பார்த்துக்கொண்டிருந்தவர்,”என் அத்தை
இருக்கிறார்கள்! பேசிப்பாருங்கள்” என்றதும்
கல்லூரியிலிருந்து அழைப்பு வந்து போனேன்.
ஹிந்தி பாடத்திட்டத்தை காட்டி, கலாச்சார
மையத்தில் சொன்னதையும் சொன்னார்கள்.
”6மாதம் பாலபாடம் படிக்க அவர்கள் பச்சைக்குழந்தை
இல்லை. +2முடித்த மாணவர்கள். என்னால்
முடியும் செய்து காட்டுகிறேன்!” என்று
சொன்னேன். ஆங்கில இலக்கியம் படித்திருப்பதால்
ஆங்கிலம் + ஹிந்தி இரண்டையும் நடத்தச்
சொன்னார்கள்.
கல்லூரியில் பேராசிரியர்(விசிட்டிங் லெக்சரதான் என்றாலும் )
என் கனவாச்சே! சந்தோஷமாக அயித்தானுக்கு
போன் போட்டுச் சொன்னேன். மிக மகிழ்ச்சி
அடைந்தார். ஒரு நாளைக்கு 1.30 மணி நேரம்
தான் வேலை, பிள்ளைகள் வீட்டுக்கு வருவதற்குமுன்
நான் வந்துவிடலாம். சரி என்று சொல்லி
சேர்ந்தேன். (என் தோழிகள் எல்லோருக்கும் காதில்
பயங்கர புகை. அவர்கள் மற்ற இடங்களில் இப்படி விசிட்டிங்
லெக்சரராக முயற்சி செய்த பொழுது 1.30மணி
நேரத்திற்கு 400 ஸ்ரீலங்கன் பணம் கொடுப்பதாகச்
சொன்னார்கள். எனக்கு 600 ரூபாய் :)))
ஹிந்தியில் ஒன்றும் தெரியாதே! எப்படி
பாடம், இலக்கணம் எழுதுவோம் என்று
பயந்து கிடந்த பிள்ளைகளிடம்,”ஹிந்தி
எனக்கும் தாய்மொழி இல்லை. தென் இந்தியாவைச்
சேர்ந்த என்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள
முடிந்தது என்றால் உங்களாலும் முடியும்!
முடியும் என்று நம்பித் துவங்குவோம். பிறகுச்
சொல்லுங்கள்!!” என்றேன். இவ்வரிகள்
செய்த அவர்களுக்குள் மாஜிக் செய்தது.
1 மாதத்தில் உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமல்ல
வார்த்தைகள் எழுதும் அளவுக்குத் தயாரானார்கள்.
(என் பாடம் நடத்தும் ஸ்டைல் மிகவும்
பிடித்திருபப்தாக நிர்வாகத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்)
3ஆவது மாதம் நான் போர்டில் எழுதுவதை
நிறுத்தி விட்டு பாடக் குறிப்புக்களை
சொல்லச் சொல்ல அவர்கள் தானே எழுத ஆரம்பித்தனர்.
”நாங்கள் இந்த செமஸ்டரில் அனைவரும் பாஸ்
செய்து காட்டுவோம்!” என்று சந்தோஷமாக
சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. சாதித்த
திருப்தி தந்தது.
ரொம்ப நாளைக்கப்புறம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர்,
வோர்ட்ஸ்வொர்த் ஆகியோரின் பாடங்களுடன்
என ஆங்கில வகுப்பும் அருமையாக இருந்தது.
படித்த, மனதிற்கு மிகவும் பிடித்த வகுப்புக்களை
எனக்குக் கொடுத்து என் கல்லூரி பேராசிரியரார்
கனவையும் ஆண்டவன் நனவாக்கி விட்டான்.
முதல் செமஸ்டர் பரிட்சை நடத்த மைசூர்
யுனிவர்சிட்டியிலிருந்து வந்திருந்த பேராசிரியர்
ஹிந்தியில் மாணவர்களுக்கு தான் ஒரு டெஸ்ட்
வைத்துப் பார்த்து தேறினார்கள் என்றால் மட்டுமே
பரிட்சைக்கு அனுமதிப்பேன் என்றார்! விடைத்தாளைத்
திருத்திவிட்டு நேராக வந்து," you are a dedicated
teacher" என்று பாராட்டினார்.
நாம் ஆசைப்படுவது நியாயம் என்றால் அது கண்டிப்பாய்
நிறைவேறும். கனவு காணும் வாழ்க்கை கலைந்து போகும்
ஓடமாகாது. நம் கனவு நனவாகும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
கல்லூரிப் படிப்புத் தடைப்பட்ட பொழுது மிக வருந்தினேன்.
என் கனவு நொறுங்கிபோனதில் துயரம் அதிகமாக
இருந்தது. அந்த வலியை மனதில் வைத்து வாழ்க்கை
என்னை இழுத்துச் சென்ற பாதையில் சென்று அங்கும்
என் வேலையை சிறப்பாகச் செய்தேன்.
அதன் பயன் தான் என் கனவு நனவானதாக நினைக்கிறேன்.
உன்கனவு நனவாகிவிட்டதில் மிக்க சந்தோஷ்ம் என
அப்பா, அம்மா, அயித்தான் எல்லோரும் மகிழ்ச்சி
அடைந்தனர்.
”கனவு மெய்பட வேண்டும்” என்று பாரதி கூட
ஏக்கத்துடன் பாடியிருக்கிறார். கனவு கண்டிப்பாய்
மெய்படும்.
வெளிநாட்டில் தனது எக்ஷ்டென்ஷன்
கல்லூரிக்கான பதிப்பை இலங்கையில்
கொடுத்திருந்தார்கள்.
மாணவர்களுக்கு ஹிந்தி, கட்டாய பாடமாக
இருந்தது. (மற்ற மொழிகள் அங்கே செய்ய
முடியாது என்பதால்)
அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் ஹிந்தி போதிக்க
இந்திய கலாச்சார நிறுவனத்தினரிடம் கேட்டிருக்கிறார்கள்.
பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டு, “ஆனா, ஆவன்னா
கற்றுக்கொடுத்து, எழுத்துப் பயிற்சிக்கே 6மாதம்
ஆகும்! இதில் 6மாததிற்குள் பாடம், இலக்கணம்
இதெல்லாம் சாத்தியமில்லை என்று” கையை
விரித்துவிட்டார்கள்.
என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்த
நேரத்தில் என் உறவினர் மகன் அங்கு வேலைப்
பார்த்துக்கொண்டிருந்தவர்,”என் அத்தை
இருக்கிறார்கள்! பேசிப்பாருங்கள்” என்றதும்
கல்லூரியிலிருந்து அழைப்பு வந்து போனேன்.
ஹிந்தி பாடத்திட்டத்தை காட்டி, கலாச்சார
மையத்தில் சொன்னதையும் சொன்னார்கள்.
”6மாதம் பாலபாடம் படிக்க அவர்கள் பச்சைக்குழந்தை
இல்லை. +2முடித்த மாணவர்கள். என்னால்
முடியும் செய்து காட்டுகிறேன்!” என்று
சொன்னேன். ஆங்கில இலக்கியம் படித்திருப்பதால்
ஆங்கிலம் + ஹிந்தி இரண்டையும் நடத்தச்
சொன்னார்கள்.
கல்லூரியில் பேராசிரியர்(விசிட்டிங் லெக்சரதான் என்றாலும் )
என் கனவாச்சே! சந்தோஷமாக அயித்தானுக்கு
போன் போட்டுச் சொன்னேன். மிக மகிழ்ச்சி
அடைந்தார். ஒரு நாளைக்கு 1.30 மணி நேரம்
தான் வேலை, பிள்ளைகள் வீட்டுக்கு வருவதற்குமுன்
நான் வந்துவிடலாம். சரி என்று சொல்லி
சேர்ந்தேன். (என் தோழிகள் எல்லோருக்கும் காதில்
பயங்கர புகை. அவர்கள் மற்ற இடங்களில் இப்படி விசிட்டிங்
லெக்சரராக முயற்சி செய்த பொழுது 1.30மணி
நேரத்திற்கு 400 ஸ்ரீலங்கன் பணம் கொடுப்பதாகச்
சொன்னார்கள். எனக்கு 600 ரூபாய் :)))
ஹிந்தியில் ஒன்றும் தெரியாதே! எப்படி
பாடம், இலக்கணம் எழுதுவோம் என்று
பயந்து கிடந்த பிள்ளைகளிடம்,”ஹிந்தி
எனக்கும் தாய்மொழி இல்லை. தென் இந்தியாவைச்
சேர்ந்த என்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள
முடிந்தது என்றால் உங்களாலும் முடியும்!
முடியும் என்று நம்பித் துவங்குவோம். பிறகுச்
சொல்லுங்கள்!!” என்றேன். இவ்வரிகள்
செய்த அவர்களுக்குள் மாஜிக் செய்தது.
1 மாதத்தில் உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமல்ல
வார்த்தைகள் எழுதும் அளவுக்குத் தயாரானார்கள்.
(என் பாடம் நடத்தும் ஸ்டைல் மிகவும்
பிடித்திருபப்தாக நிர்வாகத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்)
3ஆவது மாதம் நான் போர்டில் எழுதுவதை
நிறுத்தி விட்டு பாடக் குறிப்புக்களை
சொல்லச் சொல்ல அவர்கள் தானே எழுத ஆரம்பித்தனர்.
”நாங்கள் இந்த செமஸ்டரில் அனைவரும் பாஸ்
செய்து காட்டுவோம்!” என்று சந்தோஷமாக
சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. சாதித்த
திருப்தி தந்தது.
ரொம்ப நாளைக்கப்புறம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர்,
வோர்ட்ஸ்வொர்த் ஆகியோரின் பாடங்களுடன்
என ஆங்கில வகுப்பும் அருமையாக இருந்தது.
படித்த, மனதிற்கு மிகவும் பிடித்த வகுப்புக்களை
எனக்குக் கொடுத்து என் கல்லூரி பேராசிரியரார்
கனவையும் ஆண்டவன் நனவாக்கி விட்டான்.
முதல் செமஸ்டர் பரிட்சை நடத்த மைசூர்
யுனிவர்சிட்டியிலிருந்து வந்திருந்த பேராசிரியர்
ஹிந்தியில் மாணவர்களுக்கு தான் ஒரு டெஸ்ட்
வைத்துப் பார்த்து தேறினார்கள் என்றால் மட்டுமே
பரிட்சைக்கு அனுமதிப்பேன் என்றார்! விடைத்தாளைத்
திருத்திவிட்டு நேராக வந்து," you are a dedicated
teacher" என்று பாராட்டினார்.
நாம் ஆசைப்படுவது நியாயம் என்றால் அது கண்டிப்பாய்
நிறைவேறும். கனவு காணும் வாழ்க்கை கலைந்து போகும்
ஓடமாகாது. நம் கனவு நனவாகும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
கல்லூரிப் படிப்புத் தடைப்பட்ட பொழுது மிக வருந்தினேன்.
என் கனவு நொறுங்கிபோனதில் துயரம் அதிகமாக
இருந்தது. அந்த வலியை மனதில் வைத்து வாழ்க்கை
என்னை இழுத்துச் சென்ற பாதையில் சென்று அங்கும்
என் வேலையை சிறப்பாகச் செய்தேன்.
அதன் பயன் தான் என் கனவு நனவானதாக நினைக்கிறேன்.
உன்கனவு நனவாகிவிட்டதில் மிக்க சந்தோஷ்ம் என
அப்பா, அம்மா, அயித்தான் எல்லோரும் மகிழ்ச்சி
அடைந்தனர்.
”கனவு மெய்பட வேண்டும்” என்று பாரதி கூட
ஏக்கத்துடன் பாடியிருக்கிறார். கனவு கண்டிப்பாய்
மெய்படும்.
Wednesday, February 18, 2009
கனவு காணும்வாழ்க்கையாவும்........
ஆசிரியை ஆவதுதான் எனது கனவு.
ஆனால் நான் +2படித்த பொழுது பேராசிரியை
ஆக வேண்டுமென கனவல்ல கங்கணம்
கட்டிக்கொண்டேன்.
அதற்காகத்தான் ஆங்கில இலக்கியத்தை
எடுத்து படித்தேன். இந்த துறைதான்
வேண்டுமென்று நான் வேண்டி
பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில்
ஆனந்தமாய் துவங்கினேன் என் கல்லூரிப்
படிப்பை.
கல்லூரியில் சேர்ந்த அன்று என் அம்மாவிடம்
“ஒரு கோல்ட் மெடலிஸ்டாகத்தான் நான்
வெளியே வருவேன்!” என சொன்னேன்.
அந்த நேரத்தில் ததாஸ்து தேவதைகள்
அந்தப் பக்கம் வரவில்லை போலிருக்கிறது!!!!
என் கனவு நனவாக வாய்ப்பில்லாமல்
கல்லூரிப் படிப்பு கட்டாகி போனது. :(
அதன் காரணம் இங்கே..
ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆர்வத்தில் இலங்கையில்
இருந்த பொழுது மாண்டிசோரி
ஆசிரியைப் பயிற்சி பெற்று
வேலை செய்தேன்.
அப்பொழுதெல்லாம்
M.A english Literature, M.phil. ph.d
செய்ய வேண்டும், ஒரு கல்லூரியில்
ஆங்கிலத்துறையில் பேராசிரியையாக
ஆசைப்பட்டோமே! B.A முடித்து இப்பொழுது
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
போதிக்க ஆண்டவன் அனுப்பி
விட்டானே! என நினைத்துக்கொள்வேன்.
இந்தக் குழந்தைக்கு நான் சொல்லிக்
கொடுக்காத எதையும் கல்லூரியில்
சொல்லிக்கொடுத்துவிட முடியாது
என்பதை புரிந்து சந்தோஷமாக செய்தேன்.
ஆனாலும் மனதின் மூலையில்
பேராசிரியை ஆகவில்லையே என
வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு கதவை மூடிய ஆண்டவன் மறு
கதவை திறந்துவிட்டு அதன் பிறகு
மூடிய கதவையும் திறந்துவிட்டால்
எப்படி இருக்கும்? அப்படித்தான்
ஆனது.
கனவுக்காணும் வாழ்க்கையெல்லாம்
கலைந்து போகும் ஓடங்களல்ல...
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்
சொன்னது போல் நான் அடிக்கடி
கண்ட கனவு நனவானது.
( ஹஸ்பண்டாலஜி
பேராசிரியை ஆனதை சொல்லவில்லை! :)))
எங்கே? எப்படி? என்னையும் மதித்து
அவர்கள் கூப்பிட்டதனால் என்னாச்சு??!!!
நாளைக்கு வாங்க சொல்றேன்.
ஆனால் நான் +2படித்த பொழுது பேராசிரியை
ஆக வேண்டுமென கனவல்ல கங்கணம்
கட்டிக்கொண்டேன்.
அதற்காகத்தான் ஆங்கில இலக்கியத்தை
எடுத்து படித்தேன். இந்த துறைதான்
வேண்டுமென்று நான் வேண்டி
பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில்
ஆனந்தமாய் துவங்கினேன் என் கல்லூரிப்
படிப்பை.
கல்லூரியில் சேர்ந்த அன்று என் அம்மாவிடம்
“ஒரு கோல்ட் மெடலிஸ்டாகத்தான் நான்
வெளியே வருவேன்!” என சொன்னேன்.
அந்த நேரத்தில் ததாஸ்து தேவதைகள்
அந்தப் பக்கம் வரவில்லை போலிருக்கிறது!!!!
என் கனவு நனவாக வாய்ப்பில்லாமல்
கல்லூரிப் படிப்பு கட்டாகி போனது. :(
அதன் காரணம் இங்கே..
ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆர்வத்தில் இலங்கையில்
இருந்த பொழுது மாண்டிசோரி
ஆசிரியைப் பயிற்சி பெற்று
வேலை செய்தேன்.
அப்பொழுதெல்லாம்
M.A english Literature, M.phil. ph.d
செய்ய வேண்டும், ஒரு கல்லூரியில்
ஆங்கிலத்துறையில் பேராசிரியையாக
ஆசைப்பட்டோமே! B.A முடித்து இப்பொழுது
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
போதிக்க ஆண்டவன் அனுப்பி
விட்டானே! என நினைத்துக்கொள்வேன்.
இந்தக் குழந்தைக்கு நான் சொல்லிக்
கொடுக்காத எதையும் கல்லூரியில்
சொல்லிக்கொடுத்துவிட முடியாது
என்பதை புரிந்து சந்தோஷமாக செய்தேன்.
ஆனாலும் மனதின் மூலையில்
பேராசிரியை ஆகவில்லையே என
வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு கதவை மூடிய ஆண்டவன் மறு
கதவை திறந்துவிட்டு அதன் பிறகு
மூடிய கதவையும் திறந்துவிட்டால்
எப்படி இருக்கும்? அப்படித்தான்
ஆனது.
கனவுக்காணும் வாழ்க்கையெல்லாம்
கலைந்து போகும் ஓடங்களல்ல...
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்
சொன்னது போல் நான் அடிக்கடி
கண்ட கனவு நனவானது.
( ஹஸ்பண்டாலஜி
பேராசிரியை ஆனதை சொல்லவில்லை! :)))
எங்கே? எப்படி? என்னையும் மதித்து
அவர்கள் கூப்பிட்டதனால் என்னாச்சு??!!!
நாளைக்கு வாங்க சொல்றேன்.
தனியே தன்னந்தனியே!!!!
விடுமுறை நாட்கள் சோம்பேறித்தனமாக
இருக்கும்.
அம்மா ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியாது!!
ஆனால் அம்மா வேலைக்குச் செல்லும்பொழுது
என்னை வீட்டில் வைத்து பூட்டிவிடுவார்.
பாட்டியிடமும் கண்டிப்பாக,” வெளியே
விடக்கூடாது !” என்று சொல்லிவிடுவார்.
அப்பாவும் எதுவும் சொன்னதில்லை.
வீட்டிலும் விளையாட்டுச் சாமான்கள்
கிடையாது(அம்மா தானே களிமண்ணால்
செய்து கொடுக்கும் சொப்பு சாமன்கள்
மட்டும் தான்)!!
நாங்கள் குடியிருந்த வீட்டில் 3 குழந்தைகள்.
இங்கோ நானொருத்தி மட்டும்!! அவர்களுடன்
கூட விளையாட அம்மா அனுப்ப மாட்டார்கள்.
வேலைகள் முடிந்த பின் பாட்டியுடன்
பல்லாங்குழி, தாயம் விளையாடலாம்.
சாயங்களில் ராமாயணம், மஹாபாரதம்
போன்ற கதைகள் சொல்வார் பாட்டி.
அம்மம்மா வீட்டுக்குச் செல்லும் பொழுது தான்
அம்மம்மா அக்கம் பக்கத்துப் பிள்ளைகளுடன்
விளையாட அனுப்புவார்.
தனிமை! தனிமை!தனிமை தான். எப்படிக்
கழித்தேன் அந்த நாட்களை என்று புரியவில்லை.
எனக்கு 8 வருடங்கள் கழித்து தம்பி. அவனோடுதான்
விளையாடுவேன். ஒரு தாயாய் அவனைப் பார்த்துக்
கொள்ள மிகவும் பிடிக்கும்.
”ஒரு நாள் அம்மாவிடம் எனக்கு போரடிக்கிறது”
என்றேன். புத்தகம் படிக்கிறாயா? என்றார்.
சரிம்மா! என்றேன். மாலை வரும்பொழுது
தனது பள்ளி நூலகத்திலிருந்து சிறுவர்கள்
இதழ்கள் கொண்டுவந்துக் கொடுத்தார்.
அதில் அழ.வள்ளியப்பா ஆசிரியராக இருந்த
ஒரு சின்ன புத்தகமும் இருந்தது. அடுத்த
நாள் மதிய உணவுக்கு முன்னரே படித்து
முடித்துவிட்டேன்.(அதான் போரடித்துக்
கொண்டு இருந்தேனே!!)
அம்மாவின் பள்ளி நூலகத்து புஸ்தகங்கள்
அம்மாவால் ஃபில்டர் செய்யப்பட்டு
கொண்டு வரப்பட்டன. படிக்க படிக்க
இன்னும் இன்னும் என கேட்கும் நிலை
ஆனது. தினமும் தூக்கி வர அம்மா
கஷ்டப்படுவதைப் பார்த்து
“உங்களுக்குத் தொந்திரவு தராமல்
நானும் பள்ளிக்கு வந்து ஒரு ஓரத்தில்
அமர்ந்து எத்தனை புத்தகம் வேண்டுமோ
படிக்கட்டுமா?” என்றேன்.
ஒரு நாளைக்கு இவ்வளவு புஸ்தகம்
எடுக்கலாம் என்று வரம்பு இருக்கிறது,
ஆனாலும் வா பார்க்கலாம் என்றார்.
என் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்து
அம்மாவுடன் வேலைப் பார்க்கும்
ஆசிரியைகள் தனது கணக்கில்
எனக்கு புத்தகம் எடுத்துக் கொடுப்பார்கள்.
அம்மா எங்கும் வெளியே செல்ல நேர்ந்தால்
எனக்கு மிகவும் பிடித்த கனகாம்புஜம் டீச்சர்
வகுப்பில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன்.
எத்தனையோ நாவல்கள்! விதம் விதமான
எழுத்தாளர்கள் எல்லாம் அப்போதுதான்
அறிமுகமானது.
படிக்கும் பழக்கத்தை அம்மாதான் ஏற்படுத்திக்
கொடுத்தார். என் தனிமை தீர்த்ததில், தீர்ப்பதில்
புத்தகங்களுக்கு முதல் இடம். அடுத்து என்
இனிய தோழி வானொலி. :))
அன்று அம்மா என்னை வீட்டினுள் அடைத்து
வைத்ததும் நல்லதுக்குத்தான் என்று நான்
நினைக்கிறேன். இன்றுவரை வம்புபேச
யார் வீட்டுக்கும் சென்றதில்லை. அனாவசியமாக
வெளியே சுற்றுவதும் இல்லை.என்
வேலை முடிந்ததும் வேறு என்ன செய்யலாம்?
என்று யோசித்து அதை முடிப்பேன்.
இருக்கும்.
அம்மா ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியாது!!
ஆனால் அம்மா வேலைக்குச் செல்லும்பொழுது
என்னை வீட்டில் வைத்து பூட்டிவிடுவார்.
பாட்டியிடமும் கண்டிப்பாக,” வெளியே
விடக்கூடாது !” என்று சொல்லிவிடுவார்.
அப்பாவும் எதுவும் சொன்னதில்லை.
வீட்டிலும் விளையாட்டுச் சாமான்கள்
கிடையாது(அம்மா தானே களிமண்ணால்
செய்து கொடுக்கும் சொப்பு சாமன்கள்
மட்டும் தான்)!!
நாங்கள் குடியிருந்த வீட்டில் 3 குழந்தைகள்.
இங்கோ நானொருத்தி மட்டும்!! அவர்களுடன்
கூட விளையாட அம்மா அனுப்ப மாட்டார்கள்.
வேலைகள் முடிந்த பின் பாட்டியுடன்
பல்லாங்குழி, தாயம் விளையாடலாம்.
சாயங்களில் ராமாயணம், மஹாபாரதம்
போன்ற கதைகள் சொல்வார் பாட்டி.
அம்மம்மா வீட்டுக்குச் செல்லும் பொழுது தான்
அம்மம்மா அக்கம் பக்கத்துப் பிள்ளைகளுடன்
விளையாட அனுப்புவார்.
தனிமை! தனிமை!தனிமை தான். எப்படிக்
கழித்தேன் அந்த நாட்களை என்று புரியவில்லை.
எனக்கு 8 வருடங்கள் கழித்து தம்பி. அவனோடுதான்
விளையாடுவேன். ஒரு தாயாய் அவனைப் பார்த்துக்
கொள்ள மிகவும் பிடிக்கும்.
”ஒரு நாள் அம்மாவிடம் எனக்கு போரடிக்கிறது”
என்றேன். புத்தகம் படிக்கிறாயா? என்றார்.
சரிம்மா! என்றேன். மாலை வரும்பொழுது
தனது பள்ளி நூலகத்திலிருந்து சிறுவர்கள்
இதழ்கள் கொண்டுவந்துக் கொடுத்தார்.
அதில் அழ.வள்ளியப்பா ஆசிரியராக இருந்த
ஒரு சின்ன புத்தகமும் இருந்தது. அடுத்த
நாள் மதிய உணவுக்கு முன்னரே படித்து
முடித்துவிட்டேன்.(அதான் போரடித்துக்
கொண்டு இருந்தேனே!!)
அம்மாவின் பள்ளி நூலகத்து புஸ்தகங்கள்
அம்மாவால் ஃபில்டர் செய்யப்பட்டு
கொண்டு வரப்பட்டன. படிக்க படிக்க
இன்னும் இன்னும் என கேட்கும் நிலை
ஆனது. தினமும் தூக்கி வர அம்மா
கஷ்டப்படுவதைப் பார்த்து
“உங்களுக்குத் தொந்திரவு தராமல்
நானும் பள்ளிக்கு வந்து ஒரு ஓரத்தில்
அமர்ந்து எத்தனை புத்தகம் வேண்டுமோ
படிக்கட்டுமா?” என்றேன்.
ஒரு நாளைக்கு இவ்வளவு புஸ்தகம்
எடுக்கலாம் என்று வரம்பு இருக்கிறது,
ஆனாலும் வா பார்க்கலாம் என்றார்.
என் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்து
அம்மாவுடன் வேலைப் பார்க்கும்
ஆசிரியைகள் தனது கணக்கில்
எனக்கு புத்தகம் எடுத்துக் கொடுப்பார்கள்.
அம்மா எங்கும் வெளியே செல்ல நேர்ந்தால்
எனக்கு மிகவும் பிடித்த கனகாம்புஜம் டீச்சர்
வகுப்பில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன்.
எத்தனையோ நாவல்கள்! விதம் விதமான
எழுத்தாளர்கள் எல்லாம் அப்போதுதான்
அறிமுகமானது.
படிக்கும் பழக்கத்தை அம்மாதான் ஏற்படுத்திக்
கொடுத்தார். என் தனிமை தீர்த்ததில், தீர்ப்பதில்
புத்தகங்களுக்கு முதல் இடம். அடுத்து என்
இனிய தோழி வானொலி. :))
அன்று அம்மா என்னை வீட்டினுள் அடைத்து
வைத்ததும் நல்லதுக்குத்தான் என்று நான்
நினைக்கிறேன். இன்றுவரை வம்புபேச
யார் வீட்டுக்கும் சென்றதில்லை. அனாவசியமாக
வெளியே சுற்றுவதும் இல்லை.என்
வேலை முடிந்ததும் வேறு என்ன செய்யலாம்?
என்று யோசித்து அதை முடிப்பேன்.
Monday, February 16, 2009
படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்
பாலமலர், அம்புலிமாமாவில் ஆரம்பித்த
புத்தக பைத்தியம்.. இப்பொழுது பல நாள், மாத
வார இதழ்கள் படிக்கிறேன்.
போதாக்குறைக்கு நியூட்ரிஷியன் எனது
டயட் சார்ட்டில் தினமும் புத்தகம் படிக்க
வேண்டும் என எழுதி வேறுகொடுத்திருக்கிறார். :)))
சென்ற வருடம் இலங்கையை விட்டு வந்த
பொழுது எனது தோழி புத்தகம் பரிசளித்திருந்தார்.
கப்பலில் வந்த சாமன்களில் சில அதிகம்
உபயோகப்படுத்தாத பெட்டியில் இருந்துவிட
இந்த புத்தகமும் அதில் இருந்துவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நற்சிந்தனை
தரும் பக்கங்கள்.
JANUARY 12
ONE DAY, my father posted a poem by Rabindranath Tagore
on the door of our fridge. It read simple, "spring has passed, summer has gone
and winter is here. And the song that i meant to sing remains unsung.
I have spent my days stringing and unstringing my instrument".
These words were about a man whose heart was filled with
regret over a life half-lived. The time to start bulding your
legacy is today, not ten years from today when "have more time".
Reflect on what it is you want to create in your life and,
more importantly, what gift you wish to leave the world when
you are no longer here. Greatness comes from beginning
something that does not end with you.

சென்ற மாதம் வேறு வீடு மாற்றிய பொழுது
இந்தப் புத்தகம் கிடைத்தது. இதோ
இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்
THE MONK WHO SOLD HIS FERRARI எழுதிய ROBIN SHARMA
அவர்களின் DAILY INSPIRATION.

அருமையான செய்தி.
ரபீந்தரநாத் தாகூர் அவர்களின் பாடலின் ஒரு பகுதியை
கருத்தாக எடுத்துக்கொண்டு நமக்கு நல்லதொரு
செய்தியை தந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு தேதிக்கும்
ஒரு செய்தி இருக்கிறது. 365 பக்கங்கள் இருக்கின்றன
படிக்க. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிப்பதை விட
ஒரு நாளுக்கு ஒரு பக்கமாக படித்து பயன் பெற
முடிவெடுத்துள்ளேன்.
WOMENS ERA போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
வாங்குவதே இல்லை.
எதேச்சையாக இந்த புத்தகத்தை கடையில்
பார்த்து வாங்கினேன்.
ம்ம் இண்ட்ரஸ்டிங்...

GOOD HOUSEKEEPING இந்தியா பதிப்பு
அருமையாக இருக்கிறது.

பிள்ளை வளர்ப்பு, உடல் ஆரோக்கியம்,
மருத்துவம் என எல்லா பகுதிகளையும்
உள்ளடக்கி இருக்கிறது.
மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த மாத இதழ் தாமதமாகக் கிடைத்திருக்கிறது.
காதலர் தினம் ஷ்பெஷலாம் பார்க்க வேண்டும்
நான் போய் படிக்கிறேன்.
புத்தக பைத்தியம்.. இப்பொழுது பல நாள், மாத
வார இதழ்கள் படிக்கிறேன்.
போதாக்குறைக்கு நியூட்ரிஷியன் எனது
டயட் சார்ட்டில் தினமும் புத்தகம் படிக்க
வேண்டும் என எழுதி வேறுகொடுத்திருக்கிறார். :)))
சென்ற வருடம் இலங்கையை விட்டு வந்த
பொழுது எனது தோழி புத்தகம் பரிசளித்திருந்தார்.
கப்பலில் வந்த சாமன்களில் சில அதிகம்
உபயோகப்படுத்தாத பெட்டியில் இருந்துவிட
இந்த புத்தகமும் அதில் இருந்துவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நற்சிந்தனை
தரும் பக்கங்கள்.
JANUARY 12
ONE DAY, my father posted a poem by Rabindranath Tagore
on the door of our fridge. It read simple, "spring has passed, summer has gone
and winter is here. And the song that i meant to sing remains unsung.
I have spent my days stringing and unstringing my instrument".
These words were about a man whose heart was filled with
regret over a life half-lived. The time to start bulding your
legacy is today, not ten years from today when "have more time".
Reflect on what it is you want to create in your life and,
more importantly, what gift you wish to leave the world when
you are no longer here. Greatness comes from beginning
something that does not end with you.

சென்ற மாதம் வேறு வீடு மாற்றிய பொழுது
இந்தப் புத்தகம் கிடைத்தது. இதோ
இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்
THE MONK WHO SOLD HIS FERRARI எழுதிய ROBIN SHARMA
அவர்களின் DAILY INSPIRATION.

அருமையான செய்தி.
ரபீந்தரநாத் தாகூர் அவர்களின் பாடலின் ஒரு பகுதியை
கருத்தாக எடுத்துக்கொண்டு நமக்கு நல்லதொரு
செய்தியை தந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு தேதிக்கும்
ஒரு செய்தி இருக்கிறது. 365 பக்கங்கள் இருக்கின்றன
படிக்க. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிப்பதை விட
ஒரு நாளுக்கு ஒரு பக்கமாக படித்து பயன் பெற
முடிவெடுத்துள்ளேன்.
WOMENS ERA போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
வாங்குவதே இல்லை.
எதேச்சையாக இந்த புத்தகத்தை கடையில்
பார்த்து வாங்கினேன்.
ம்ம் இண்ட்ரஸ்டிங்...

GOOD HOUSEKEEPING இந்தியா பதிப்பு
அருமையாக இருக்கிறது.

பிள்ளை வளர்ப்பு, உடல் ஆரோக்கியம்,
மருத்துவம் என எல்லா பகுதிகளையும்
உள்ளடக்கி இருக்கிறது.
மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த மாத இதழ் தாமதமாகக் கிடைத்திருக்கிறது.
காதலர் தினம் ஷ்பெஷலாம் பார்க்க வேண்டும்
நான் போய் படிக்கிறேன்.
வாழ்க்கைக்கு உதவும் கல்வி:7
நாம் பள்ளிகளில் படிக்கும் பொழுது வகுப்பிலிருந்து
வெளியில் எங்கு சென்றாலும் கிளாஸ் லீடரோ,
டீச்சரோ கொடுக்கும் குரல்,”எல்லாம் லைனா
போங்க!!” என்பது தான்.
நம் வகுப்பிலிருந்து P.T பாட்டுகிளாஸிற்கு
என எங்கு சென்றாலும் வரிசையாக சென்று
வரிசையாக வரவேண்டும். உயரத்தை
வைத்து யார் முதலில் நிற்க வேண்டும் என
சொல்லிக்கொடுப்பார் P.Tடீச்சர்.
P.T வகுப்புக்களின் போது ஒரு மாணாக்கனுக்கும்
இன்னொரு மாணாக்கனுக்கு இடையே ஆன
தூரத்தை கைகளால் அளந்து நிற்க வேண்டும்.
தினமும் அசெம்பிளிக்கு செல்லும் பொழுது
வரிசை தவறினாலோ, சரியாக நிற்கா
விட்டாலோ அவ்வளவுதான். முழங்கால்
போட்டு பனிஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்கள்.
சரி ”இந்த வரிசையில் தான் செல்லவேண்டும்!”
என்ற கொள்கை பள்ளிகளில் ஏன் கட்டாயமாக்க
வைத்தார்கள்?
வளர்ந்த பிறகு வங்கி, ரயில்நிலையம் என
பொதுமக்கள் கூடும் இடங்களில் நாம்
வரிசையாக செல்லப் பழக வேண்டும்
என்பதற்காகத்தான்.
ஆனால் நம் மக்களுக்கு வரிசையில்
செல்வதெல்லாம் பிடிக்காது. கயிறு
கட்டியிருந்தாலும் தள்ளிக்கொண்டு,
முண்டியடித்து போனால் தான்
திருப்தி.!! அதுவும் வங்கிகளில்
பணம் போட ,எடுக்க என டென்ஷன்
இருந்தாலும் அடுத்தவரைப் பற்றி
கவலைப்படாமல் மேலே விழுவார்கள்.
விமான நிலையங்களில்
பாஸ்போர்ட்டில் குடியேற்றம் முத்திரை அடிக்க
நிற்கும் வரிசையில், கடவுச்சீட்டு கொடுத்திருக்கும்
நபருக்கு அவருக்கு பின்னால் நிற்கும் நபருக்கும்
இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்
என்பதால்,”ஒருவர் மட்டும்!” என எழுதியிருப்பார்கள்.
ஆனால் நிஜம் எப்படி இருக்கும் என்பது
பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
(குறிப்பாக நம் நாட்டில்)
வாஷிங்கடனில் திருமணம் நாவலில்
திரு. சாவி அவர்கள், அம்மாஞ்சி தக்களி
நூற்றதை மக்கள்.”வாராவதி மேல்
வாராவதியாக கவிழ்ந்து நின்று பார்த்ததாக
எழுதியிருப்பார்.”
எதுவாக இருந்தாலும் நம் மக்கள்
ஒருவர் மேல் ஒருவர் கவிழ்ந்து நின்றுதான்
பார்ப்பார்கள். சாலையில் ஏற்படும்
விபத்துக்களில் இவர்கள் கூட்டம் கூடி
பார்க்கும் பொழுது போதிய காற்று இல்லாத
காரணத்தால் விபத்துக்குள்ளானவர்
மயக்கமுறும் நிலமையும் ஏற்படு்ம்.
மாண்டிசோரி கல்வியில் இந்த
வரிசையில் செல்லும் பழக்கத்தை
போதிப்பது கட்டாயப் பாடம்.
வட்டமாகவோ, சதுரமாகவோ
சாக்பீஸால் வரைந்து மாணவர்களை
நிற்க வைத்து நடந்து வரப் பழக்குவோம்.


இதனால் பிள்ளைக்கு வரிசையில் செல்ல
பழக்கமாகிறது. கோட்டிற்கு மேல் நடக்க
வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதால்
கண்கள் பார்க்க கால்கள் அந்த தடம்
பிரழாமல் நடக்க பயிற்சி கிடைக்கிறது.
பிள்ளை தனது முறை வரும் வரை
பொறுமையாக காத்திருக்க பழகுகிறது.

ரயிலின் பெட்டிகள் வரிசையாக செல்லாமல்
தடம்புரண்டால் அது விபத்து. நாம் வரிசையில்
நிற்க வேண்டிய இடத்தில் வரிசையில் நில்லாமல்
போனாலும் பிரச்சனையே!
எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?
அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.
பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.
வளரும் குழந்தை சுற்றுப்புரத்திலிருந்தும்
கற்றுக்கொள்கிறது.
நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!
வெளியில் எங்கு சென்றாலும் கிளாஸ் லீடரோ,
டீச்சரோ கொடுக்கும் குரல்,”எல்லாம் லைனா
போங்க!!” என்பது தான்.
நம் வகுப்பிலிருந்து P.T பாட்டுகிளாஸிற்கு
என எங்கு சென்றாலும் வரிசையாக சென்று
வரிசையாக வரவேண்டும். உயரத்தை
வைத்து யார் முதலில் நிற்க வேண்டும் என
சொல்லிக்கொடுப்பார் P.Tடீச்சர்.
P.T வகுப்புக்களின் போது ஒரு மாணாக்கனுக்கும்
இன்னொரு மாணாக்கனுக்கு இடையே ஆன
தூரத்தை கைகளால் அளந்து நிற்க வேண்டும்.
தினமும் அசெம்பிளிக்கு செல்லும் பொழுது
வரிசை தவறினாலோ, சரியாக நிற்கா
விட்டாலோ அவ்வளவுதான். முழங்கால்
போட்டு பனிஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்கள்.
சரி ”இந்த வரிசையில் தான் செல்லவேண்டும்!”
என்ற கொள்கை பள்ளிகளில் ஏன் கட்டாயமாக்க
வைத்தார்கள்?
வளர்ந்த பிறகு வங்கி, ரயில்நிலையம் என
பொதுமக்கள் கூடும் இடங்களில் நாம்
வரிசையாக செல்லப் பழக வேண்டும்
என்பதற்காகத்தான்.
ஆனால் நம் மக்களுக்கு வரிசையில்
செல்வதெல்லாம் பிடிக்காது. கயிறு
கட்டியிருந்தாலும் தள்ளிக்கொண்டு,
முண்டியடித்து போனால் தான்
திருப்தி.!! அதுவும் வங்கிகளில்
பணம் போட ,எடுக்க என டென்ஷன்
இருந்தாலும் அடுத்தவரைப் பற்றி
கவலைப்படாமல் மேலே விழுவார்கள்.
விமான நிலையங்களில்
பாஸ்போர்ட்டில் குடியேற்றம் முத்திரை அடிக்க
நிற்கும் வரிசையில், கடவுச்சீட்டு கொடுத்திருக்கும்
நபருக்கு அவருக்கு பின்னால் நிற்கும் நபருக்கும்
இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்
என்பதால்,”ஒருவர் மட்டும்!” என எழுதியிருப்பார்கள்.
ஆனால் நிஜம் எப்படி இருக்கும் என்பது
பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
(குறிப்பாக நம் நாட்டில்)
வாஷிங்கடனில் திருமணம் நாவலில்
திரு. சாவி அவர்கள், அம்மாஞ்சி தக்களி
நூற்றதை மக்கள்.”வாராவதி மேல்
வாராவதியாக கவிழ்ந்து நின்று பார்த்ததாக
எழுதியிருப்பார்.”
எதுவாக இருந்தாலும் நம் மக்கள்
ஒருவர் மேல் ஒருவர் கவிழ்ந்து நின்றுதான்
பார்ப்பார்கள். சாலையில் ஏற்படும்
விபத்துக்களில் இவர்கள் கூட்டம் கூடி
பார்க்கும் பொழுது போதிய காற்று இல்லாத
காரணத்தால் விபத்துக்குள்ளானவர்
மயக்கமுறும் நிலமையும் ஏற்படு்ம்.
மாண்டிசோரி கல்வியில் இந்த
வரிசையில் செல்லும் பழக்கத்தை
போதிப்பது கட்டாயப் பாடம்.
வட்டமாகவோ, சதுரமாகவோ
சாக்பீஸால் வரைந்து மாணவர்களை
நிற்க வைத்து நடந்து வரப் பழக்குவோம்.


இதனால் பிள்ளைக்கு வரிசையில் செல்ல
பழக்கமாகிறது. கோட்டிற்கு மேல் நடக்க
வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதால்
கண்கள் பார்க்க கால்கள் அந்த தடம்
பிரழாமல் நடக்க பயிற்சி கிடைக்கிறது.
பிள்ளை தனது முறை வரும் வரை
பொறுமையாக காத்திருக்க பழகுகிறது.

ரயிலின் பெட்டிகள் வரிசையாக செல்லாமல்
தடம்புரண்டால் அது விபத்து. நாம் வரிசையில்
நிற்க வேண்டிய இடத்தில் வரிசையில் நில்லாமல்
போனாலும் பிரச்சனையே!
எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?
அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.
பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.
வளரும் குழந்தை சுற்றுப்புரத்திலிருந்தும்
கற்றுக்கொள்கிறது.
நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!
Friday, February 13, 2009
தொடத் தொட மலர்வதென்ன???
காதல் எனப்படுவது யாதெனில்?
விளக்கம் கொடுக்கப்பட முடியாத
ஒரு அனுபவம் காதல்.
காதல் உலகை இயங்கச் செய்கிறது.
நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.
இது ரெண்டும் அயித்தானுக்கு பிடிச்ச
பாடல்கள்:
எனக்கு பிடிச்சது ஒரே பாடல்
இரு வேறு மொழிகளில். பாடல்வரிகள்
சுகமோ சுகம்.
(தெலுங்கு)
தெலுசா மனசா
இதி ஏ நாட்டி அனுபந்தமோ,
தெலுசா மனசா!
இதி ஏ ஜன்ம சம்பந்தமோ!!
TU MILE DIL KILE
AUR JEENE KO KYA SAHIYE!!
NA HO THUM UDASU
ME RAHUNGA ZINDAIBAR
SAARE SANSARUKA PYARE MAINE PAYA
TUM MILE DIL KILE
தொடத் தொட மலர்வது காதல்.
தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்
THERE IS ONLY ONE HAPPINESS IN LIFE,
TO LOVE AND TO BE LOVED
விளக்கம் கொடுக்கப்பட முடியாத
ஒரு அனுபவம் காதல்.
காதல் உலகை இயங்கச் செய்கிறது.
நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.
இது ரெண்டும் அயித்தானுக்கு பிடிச்ச
பாடல்கள்:
எனக்கு பிடிச்சது ஒரே பாடல்
இரு வேறு மொழிகளில். பாடல்வரிகள்
சுகமோ சுகம்.
(தெலுங்கு)
தெலுசா மனசா
இதி ஏ நாட்டி அனுபந்தமோ,
தெலுசா மனசா!
இதி ஏ ஜன்ம சம்பந்தமோ!!
TU MILE DIL KILE
AUR JEENE KO KYA SAHIYE!!
NA HO THUM UDASU
ME RAHUNGA ZINDAIBAR
SAARE SANSARUKA PYARE MAINE PAYA
TUM MILE DIL KILE
தொடத் தொட மலர்வது காதல்.
தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்
THERE IS ONLY ONE HAPPINESS IN LIFE,
TO LOVE AND TO BE LOVED
பர்ஸ் பத்திரம்....
நாட்டில் இல்லை இல்லை உலகில் பொருளாதார
நிலை அவ்வளவு நல்லா இல்லை.
வேலை இருக்குமா? பறிபோகுமா? எனும் அச்சம்.
சம்பள உயர்வு போய் சம்பளம் குறைப்பு,
ஆள்குறைப்பு இப்படி பல பிரச்சனைகள்.
இருக்கறவனுக்கு இருக்கறது பிரச்சனை!
இல்லாதவனுக்கு இல்லைன்னு பிரச்சனை!
இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும்
மத்தியதரக் குடும்பத்திற்கு என்றும் பிரச்சனைதான்.
ஐடி கம்பெனிகளில் தடலாடியாக ஆள்குறைப்புச்
செய்து வருகிறார்கள். நாளிதழில் படித்தேன்
வருத்தமாக இருந்தது. ஒருவர் பாவம்
தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது
என்று அனைவருக்கும் இனிப்பு வாங்கிக்
கொண்டு அலுவலகம் சென்று அனைவருக்கும்
கொடுத்திருக்கிறார். இனிப்பு விநியோகம்
முடித்து தனது இருக்கையில் அமரும் வரை
காத்திருந்து,”உனது பணிக்காலம் முடிவடைந்தது!
என செட்டில் மெண்ட் கவரை நீட்டியிருக்கிறார்கள்”
அதிர்ச்சியில் மாரடைப்புவந்ததாம்!
என் அனில் அண்ணா அடிக்கடி சொல்வார். நாம்
வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நாம் ஒரு
சொத்தாக இருக்க வேண்டும்.”இவன் இல்லையென்றால்
இயங்குவது கடினம் எனும் அளவிற்கு தனது
தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்”
அப்பொழுதுதான் எந்த பிரச்சனை வந்தாலும்
நிர்வாகம் நமக்கு சாதகமாக இருக்கும் என்று.
சத்தியமான வார்த்தை. இந்த இடத்தில் எனது
தனிப்பட்ட கருத்தினை பகிர்கிறேன்.
பொதுவாக வேலை கிடைக்கும் வரை
“வேலை மட்டும் கிடைக்கட்டும்!
அப்புறம் பார்” என்று சவடால் விடுவார்கள்.
அப்புறம் போரடிக்கும். THIS IS NOT MY
CUP OF TEA என்று வேறு வேலைத் தேடுவார்கள்.
(கல்யாணமானா பொண்டாட்டியை
அப்படி பாத்துக்கணும், இப்படி பாத்துக்கணும்னு
பிளான் போட்டு வெச்சிருப்பாங்க. கல்யாணத்துக்கு
அப்புறம் அதான் கல்யாணம் ஆயிடிச்சே,’இங்கதான்
இருப்பா எப்ப வேணாம்!!! கவனிச்சுக்கலாம்
என்று பாராமலே இருந்து விடுவார்கள்)
கிடைத்த வேலையில் முழு ஈடுபாட்டுடன்
வேலை செய்து, தனது அறிவுத்திறனை
வளர்த்துக்கொண்டு தன்னை முன்னேற்றிக்
கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவசியம்.
எல்லா இடத்திலும் ப்ரச்சனை இல்லாமல்
இருக்காது. சிலருக்கு உயரதிகாரிக்கு
”மண்டையில் மசாலா இல்லை” ஆனாலும்
அவன் எனக்கு பாஸ் என்ற நினைப்பு இருக்கும்.
(சில சமயம் அது உண்மையாகவும் இருக்கும்)
ஆனால் ஒரு விடயம் மறக்கக் கூடாது. அந்த
பாஸ் ஏதோ ஒரு விடயத்தில் நம்மை விட
சிறந்தவன்(மஸ்கா அடிப்பது, போட்டுக்கொடுப்பது,
என எதில் வேண்டுமானாலும். ஸ்ட்ரேடச்ஜி
என்பார்களே!) அதனால்தான் அவனால்
பாஸாக வர முடிந்தது.
இப்பொழுது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில்
பணத்தை மிச்சம் பிடிப்பது மிகக் கடினம்.
செலவுதான் அதிகமாகிறது. இந்த ரெஷ்ஷன்
நேரத்தில் எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம்?
பட்ஜட்டில் துண்டு விழுந்து கொண்டிருந்த
இடத்தில் இப்போது போர்வை விழுகிறதே!
என்ன செய்யலாம்? என குழம்பிக்கிடக்கிறார்கள்
குடும்பத் தலைவரும், தலைவியும்.
பேச்சிலர்கள் எப்படி பணத்தை மிச்சம் பிடிக்கலாம்
என? சக பதிவர் செல்வேந்திரன் பதிவிட்டிருக்கிறார்.
மிக அருமை.
இப்படி நாமும் யோசித்தால் பணத்தை
மிச்சம் பிடித்து பர்ஸை பாதுகாக்கலாம்.
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில்
மிச்சம் பிடிக்காவிட்டாலும் அதிகம்
செலவழிக்காமல் இருப்பது புத்திசாலித்தனமாச்சே!!
பினாத்தல் சுரேஷ் அவர்களின் இந்தக் கதையையும்
படிச்சிருப்பீங்க. படிக்காதவங்களுக்கு இங்கே.
நிலை அவ்வளவு நல்லா இல்லை.
வேலை இருக்குமா? பறிபோகுமா? எனும் அச்சம்.
சம்பள உயர்வு போய் சம்பளம் குறைப்பு,
ஆள்குறைப்பு இப்படி பல பிரச்சனைகள்.
இருக்கறவனுக்கு இருக்கறது பிரச்சனை!
இல்லாதவனுக்கு இல்லைன்னு பிரச்சனை!
இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும்
மத்தியதரக் குடும்பத்திற்கு என்றும் பிரச்சனைதான்.
ஐடி கம்பெனிகளில் தடலாடியாக ஆள்குறைப்புச்
செய்து வருகிறார்கள். நாளிதழில் படித்தேன்
வருத்தமாக இருந்தது. ஒருவர் பாவம்
தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது
என்று அனைவருக்கும் இனிப்பு வாங்கிக்
கொண்டு அலுவலகம் சென்று அனைவருக்கும்
கொடுத்திருக்கிறார். இனிப்பு விநியோகம்
முடித்து தனது இருக்கையில் அமரும் வரை
காத்திருந்து,”உனது பணிக்காலம் முடிவடைந்தது!
என செட்டில் மெண்ட் கவரை நீட்டியிருக்கிறார்கள்”
அதிர்ச்சியில் மாரடைப்புவந்ததாம்!
என் அனில் அண்ணா அடிக்கடி சொல்வார். நாம்
வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நாம் ஒரு
சொத்தாக இருக்க வேண்டும்.”இவன் இல்லையென்றால்
இயங்குவது கடினம் எனும் அளவிற்கு தனது
தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்”
அப்பொழுதுதான் எந்த பிரச்சனை வந்தாலும்
நிர்வாகம் நமக்கு சாதகமாக இருக்கும் என்று.
சத்தியமான வார்த்தை. இந்த இடத்தில் எனது
தனிப்பட்ட கருத்தினை பகிர்கிறேன்.
பொதுவாக வேலை கிடைக்கும் வரை
“வேலை மட்டும் கிடைக்கட்டும்!
அப்புறம் பார்” என்று சவடால் விடுவார்கள்.
அப்புறம் போரடிக்கும். THIS IS NOT MY
CUP OF TEA என்று வேறு வேலைத் தேடுவார்கள்.
(கல்யாணமானா பொண்டாட்டியை
அப்படி பாத்துக்கணும், இப்படி பாத்துக்கணும்னு
பிளான் போட்டு வெச்சிருப்பாங்க. கல்யாணத்துக்கு
அப்புறம் அதான் கல்யாணம் ஆயிடிச்சே,’இங்கதான்
இருப்பா எப்ப வேணாம்!!! கவனிச்சுக்கலாம்
என்று பாராமலே இருந்து விடுவார்கள்)
கிடைத்த வேலையில் முழு ஈடுபாட்டுடன்
வேலை செய்து, தனது அறிவுத்திறனை
வளர்த்துக்கொண்டு தன்னை முன்னேற்றிக்
கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவசியம்.
எல்லா இடத்திலும் ப்ரச்சனை இல்லாமல்
இருக்காது. சிலருக்கு உயரதிகாரிக்கு
”மண்டையில் மசாலா இல்லை” ஆனாலும்
அவன் எனக்கு பாஸ் என்ற நினைப்பு இருக்கும்.
(சில சமயம் அது உண்மையாகவும் இருக்கும்)
ஆனால் ஒரு விடயம் மறக்கக் கூடாது. அந்த
பாஸ் ஏதோ ஒரு விடயத்தில் நம்மை விட
சிறந்தவன்(மஸ்கா அடிப்பது, போட்டுக்கொடுப்பது,
என எதில் வேண்டுமானாலும். ஸ்ட்ரேடச்ஜி
என்பார்களே!) அதனால்தான் அவனால்
பாஸாக வர முடிந்தது.
இப்பொழுது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில்
பணத்தை மிச்சம் பிடிப்பது மிகக் கடினம்.
செலவுதான் அதிகமாகிறது. இந்த ரெஷ்ஷன்
நேரத்தில் எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம்?
பட்ஜட்டில் துண்டு விழுந்து கொண்டிருந்த
இடத்தில் இப்போது போர்வை விழுகிறதே!
என்ன செய்யலாம்? என குழம்பிக்கிடக்கிறார்கள்
குடும்பத் தலைவரும், தலைவியும்.
பேச்சிலர்கள் எப்படி பணத்தை மிச்சம் பிடிக்கலாம்
என? சக பதிவர் செல்வேந்திரன் பதிவிட்டிருக்கிறார்.
மிக அருமை.
இப்படி நாமும் யோசித்தால் பணத்தை
மிச்சம் பிடித்து பர்ஸை பாதுகாக்கலாம்.
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில்
மிச்சம் பிடிக்காவிட்டாலும் அதிகம்
செலவழிக்காமல் இருப்பது புத்திசாலித்தனமாச்சே!!
பினாத்தல் சுரேஷ் அவர்களின் இந்தக் கதையையும்
படிச்சிருப்பீங்க. படிக்காதவங்களுக்கு இங்கே.
Thursday, February 12, 2009
கொசுவத்தி சுத்துது....

நர்சிம் அவர்களோட இந்தப் பதிவு கொசுவத்தியை
சுத்திவிட்டுடுச்சு.
10த் முடிச்சதும் தான் டைப்ரைட்டிங் பரிட்சை
எழுத முடியும்னாலும் “ஸ்பீடு”!! வரணும்னு
எங்கப்பா 9த் அரைப்பரிட்சை முடிச்சதுமே
கொண்டு போய் சேத்துட்டாரு.
வாசவி தட்டச்சு பயிற்சி பள்ளி.
இது எங்க குடும்ப டைப்ரைட்டிங்
இன்சிடிட்யூட்!!! எங்க சித்தி, மாமா
எல்லோரும் இங்கதான் படிச்சாங்க.
அதனால் ஆவி!! வந்த இடம்னு என்னையும்
சேத்தாங்க.
முதல் நாளே, சரவணன் சார்,”உமாவோட
அக்கா பொண்ணா? வாம்மான்னு”
சொல்ல அங்க இருந்தவங்க மொத்தமும்
என்னிய பாத்தாங்க. தெரியாதவங்க
யாரும் அந்த ஊருல கிடையாது. அன்னைக்கு
அங்க தெரியாதவங்க இருந்திருந்தாங்கன்னா
அவங்களுக்கும் அறிமுகம் ஆகியிருக்கும்!!!
1 வாரத்துக்கு கை விரல்கள் வலி.
கண்டிப்பா போகணுமாம்மா? அப்படின்னா
அம்மா,”இது கத்துகிட்டாத்தான்
ஸ்டெனோவேலையாவது கிடைக்கும்?
கைத்தொழில் கற்றுக்கொண்டா நல்லது”
அப்படின்னு சொன்னதக்குப்புறம் மாட்டேன்னு
சொன்னா கொன்னே புடுவாங்க!!!
காலையில் பள்ளி என்பதால் 4மணிலேர்ந்து
5வரைக்கும் கிளாஸ். ஆரம்பத்துல
கஷ்டமா இருந்தது போகப்போக விரல்கள்
பழகிடுச்சு. அதைவிட சூப்பர் 2 மாதத்திலேயே
வேகமா அடிக்க ஆரம்பிச்சது.
கீ போர்டை பாக்காம வேகமா அடிக்க
நல்லா பழகி எக்சாம் வந்திருச்சு. அதுக்கு
முன்னாடி டெஸ்ட் அடிக்கடி வைப்பாங்க.
எல்லோருக்கு 10 நிமிஷம் ஆகும் நான்
6 நிமிஷத்துலேயே முடிச்சிட்டேன்.
சரவணன் சார் வந்தார்.
”இவ்வளவு சீக்கிரம் ஏன் முடிச்ச?
மிஸ்டேக் எவ்வளவுன்னு பாத்துட்டு
கச்சேரி இருக்குன்னாரு?? பயந்துகிட்டே
இருந்தேன். ஹை!! 6 மிஸ்டேக் தான்.
பரவாயில்லை. ஆனாலும் இவ்வளவு
சீக்கிரம் அடிக்கக்கூடாது.10 நிமிஷம்னா
10நிமிஷம் தான் அடிக்கணும்!! அப்படின்னு
ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு.
இன்ஸ்டிட்யூட்ல ஸ்பீடு டெஸ்டுக்கு அடிச்சதெல்லாம்
ஆங்கிலம் இரண்டாம் பாடத்துக்கு கட்டுரைக்கு
உதவிச்சு. :)))
இன்சிடிட்யூட்ல சார், அவங்கப்பா, அவங்க
தங்கை எல்லோரும் சொல்லிக் கொடுப்பாங்க.
ஒழுங்கா எல்லாத்தையும் அடிக்கறேனா?
இல்லை டிமிக்கி கொடுக்கறேனான்னு
ஒவ்வொத்தங்களும் ஸ்பீட் டெஸ்ட்
கொடுத்திட்டு பக்கத்திலேயே நின்னு
பாப்பாங்க!!! (நம்ப மாட்டேங்கறாங்கப்பா)
டைப் அடிச்சதை படிக்கச் சொல்லி
திருத்தி பாத்ததுக்கப்புறம் தான்
ஒத்துகிட்டாங்க.
எவ்வளவு ட்ரை செஞ்சாலும் என்னால்
10நிமிஷம் வரை அடிக்க முடியலை.
அதிகம் போனால் 7 நிமிடத்திற்குள்
முடிச்சிடுவேன். :))))
லோயர் பரிட்சை புதுகை டீ யீ ஓ அலுவலகத்தில்
நடந்தது. பெல் அடித்ததும் ஸ்பீட் டெஸ்ட்.
அதுக்கு முன்னாடி சரவணன் சார்,” ஒழுங்கா
10நிமிஷம் அடிக்கற! அப்படின்னு கோபமா
சொன்னாரு. ”பாக்கறேன் சார்!”னு சொல்லிட்டு
ரெடியா இருந்தேன். பெல் அடிச்சதும்
பேப்பரை திருப்பி அடிக்க ஆரம்பிச்சேன்.
கட கட கடன்னு அடிச்சு முடிச்சேன்.
மணியைப் பாத்தா?7 நிமிஷம் தான்
ஆகியிருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மத்தவங்க எல்லாம் டொக் டொக்குன்னு
தட்டிகிட்டு இருக்க நான் உக்காந்து
ஸ்பெல்லிங் செக் பண்ணிகிட்டு இருந்தேன்.
அதையும் முடிச்சு ஜன்னல் பக்கம் பார்த்தா,
“சரவணன் சார்!” அடிச்சிட்டியா?”ன்னு சைகை
காட்ட சிரிப்புதான் என் பதில். அதைப் பாத்து
தலையில் அடிச்சிகிட்டாரு.(எவ்வளவு
சொன்னாலும் திருந்த மாட்டா இவ அப்படின்னு
நினைச்சிருப்பாரா இருக்கும்!!!)
நான் என்ன செய்ய? கையில் அம்புட்டு
வேகமா செய்ய முடியுது. கீ போர்டை
பாக்காமலேயே வேகமா அடிக்க பழகிட்டேன்.
இப்ப வரை அப்படித்தான். அடிக்க வேண்டியதை
மனதில் முடிவு செய்துவிட்டு,” ஸ்டார்ட் ,
மீஜிக்”னு தட்ட ஆரம்பிச்சேன்னா மானிடரை
விட்டு கண்னை எடுக்கவே மாட்டேன்! :))
சென்ற வருடம் என் தங்கை வேலைக்குச்
சேரும் முன் கீ போர்டில் ஸ்பீட் பத்தாது
என்று அவளை ப்ராக்டீஸ் செய்யச் சொல்லி
வெப்சைட் ஒன்றை கொடுத்திருந்தார்கள்.
வேலைக்குச் சேரும் நாள் வரை தினமும்
அவள் அடிப்பாள். ரொம்ப நாளாச்சு டெஸ்ட்
செஞ்சுன்னு நான் ட்ரை செஞ்சா கரெக்டா
100 மார்க் வந்துச்சு.:)))
”நீ ட்ரை செஞ்சா ஈசியா பீபீஓ வில் வேலை
கண்டிப்பா கிடைக்கும், இந்த ஸ்பீடெல்லாம்
என்னால் சாத்தியமே இல்லைன்னு”
சொல்ல ஒரே புளகாங்கிதமா இருந்துச்சு.
சும்மாவா!! நிக்கும் போதும் நடக்கும்போதும்
கை தட்டிகிட்டே இருக்கும். கீ போர்டே
தேவையில்லை!!
ஆங்கிலம் லோயர்,ஹையர் முடிச்சதும்
அப்பா தமிழ் டைப் அடிக்கப் போகச்சொன்னாரு.
ஷிப்ட் போட்டு போட்டு சுண்டுவிரல்
காலி ஆகிடும் போல இருந்துச்சு. மாட்டேன்னு
தகராறு செஞ்சேன். சரி சார்ட்ஹேண்ட் கத்துக்கோன்னு
அப்பா ஆரம்பிக்க சரி போவோம்னு
போய் பாத்தா அதைக் கத்துக்கறதுக்கு பதில்
நான் எழுதறதே சீக்கிரமா இருக்கும்னு
தோணிச்சு”.என்னிய விட்டுடங்கப்பா!
என்னால முடியலை”ன்னு அப்பா கிட்ட
சொல்ல என்னவோ அரசாங்க வேலை
ஒண்ணு எங்க குடும்பத்துக்கு கிடைக்க
வேண்டியது கிடைக்காம போக விட்டுட்டேன்னு
திட்டித்தீத்தாரு. :(
(எங்க சித்தி ஆங்கிலம் ஹையர், தமிழ் ஹையர்,
ஹிந்தி ஹையர், சார்ட் ஹேண்ட் ஹையர்
முடிச்சிருக்காங்க. அவுங்க வாரிசா நானும்
இதெல்லாம் கத்துக்கணும்னு வாசவிலையும்
சரி வீட்டிலையும் சரி ரொம்ப வற்புற்த்தல்)
இந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது
வாசவி தட்டச்சு பள்ளி பக்கம் போயிருந்தேன்.
கணிணியில் வேகமாக வேலை செய்ய
தட்டச்சு உதவும். ஆகவே தட்டச்சு
கற்றுக்கொள்ளுங்கள்னு பேனர் கட்டியிருந்தாங்க.
அப்பாக்கு மட்டும் நான் தமிழ் டைப் அடிக்க
கத்துக்கலைன்னு வருத்தம் இருந்துச்சு.
போன முறை என்னைப் பார்க்க வந்திருந்த
பொழுது ,” இப்ப கம்ப்யூட்டர்ல எம்புட்டு
அழகா தமிழ் டைப் அடிக்கறேன்!பாத்து
சந்தோஷப் பட்டுக்கோங்கப்பா” அப்படின்னேன்.
ஆமா! நீ இப்ப அடிச்சு என்ன செய்யன்னு
கமெண்ட் அடிச்சாரு!!!!!
புள்ளைங்களுக்கு டைப் அடிக்கச்
சொல்லி கொடுக்க இங்கே நல்லா இருக்கும்!
உங்க ஸ்பீடு என்னன்னு சின்ன டெஸ்ட்
வெச்சுக்க சில சைட்கள்.(வெப் சைட்டைச்
சொன்னேன்.)
http://www.typingtest.com/
http://www.calculatorcat.com/typing_test/
சோம்பேறி டீச்சரின் சுற்றுலா பயணம் :)) நிறைவுப் பகுதி
எங்க போனேன்னுஒரே மண்டை குடைச்சலா இருந்துச்சா?
:))
சஸ்பென்ஸை உடைச்சிடறேன்
நான் போய் பேசியது என் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் அந்தப் பள்ளியில் கணிணிபயிற்சி மிக பிரபலம் லண்டன் எடெக்ஷல் கோர்ஸ் பட்டம்
கிடைக்கும் அங்கே கணிணி கற்பது ஒரு வரம் போல் அனைவரும் நினைப்பார்கள்
அந்த பள்ளி பற்றிஆஷிஷின் ஆட்டோ கிராப் . :))
25 கணிணி வைத்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனி கணிணியில் பயிற்சி கொடுப்பார்கள்.
இன்பச் சுற்றுலாவாக அங்கே அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். 1 மணி நேரம் போதும் என்று சொன்னதும் அவர்களும் ஆனந்தமாக
ஒத்துக்கொண்டார்கள். (இலவசமாக)
இங்கு அழைத்துச் சென்றதால் என்ன பயன்?
ஒண்ணா ரெண்டா ஒவ்வொருவருக்கும் பலன்.
நான் வேலை பார்த்த பள்ளிக்கு:
1. சுற்றுலான்னு பார்க்குக்கு கூட்டிகிட்டு போகாம
கம்ப்யூட்டர் செண்டருக்கு கூட்டிகிட்டு போ்ற ஸ்கூல்னு பேரு!
2. சுற்றுலாவிற்காக அதிகம் பணம் வசூலிக்கவில்லை
என நல்ல பெயர்.
3. கொடுத்த காசுக்கு உபயோகமா கூட்டிகிட்டு
போனாங்க என புகழாரம்.
பெற்றோர்களுக்கு:
1. குறைந்த செலவில் பிள்ளைகள் சுற்றுலா சென்றது.
2. சுற்றுலா என்ற பெயரில் வெயிலில் வாட விடாமல்
ஏசி அறைக்குள் அவர்கள் அமர்ந்திருந்தது.
3. அம்மாம் பெரிய ஸ்கூல் நடத்தும் கம்புயூட்டர்
சென்டரில் என் பிள்ளையுக் உக்காந்திருச்சுல்ல எனும்
பெருமை!!!
குழந்தைகளுக்கு:
1. தனக்கென ஒரு கம்ப்யூட்டர். தான் தொட்டு
பார்த்து கற்க, மகிழ 1 மணி நேரம்.(வீட்டில்
இது சாத்தியமில்லை)
2. அப்சார்பன் மைண்ட் என மாண்டிசோரி அம்மையார்
சொல்வார். எதைக் கொடுத்தாலும் கற்றுக்கொள்ளும்
வயதில் கணிணியின் அறிமுகம்.
3. பெருமை பொங்க அவர்கள் அங்கே அம்ர்ந்திருந்தைப்
பார்க்க வேண்டும்!!
அந்த கணிணி மையத்துக்கு:
1. தனது பள்ளியின் பெயர் பொறித்த தொப்பி,
கணிணியின் பாகங்கள் அச்சடித்த பேப்பர் எல்லாம்
கொடுத்தார்கள். இது பெற்றோரை மிகவும்
கவர்ந்தது.
2. இலவச விள்ம்பரம்.
எங்களுக்கு அதாவது ஆசிரியைகளுக்கு:
1. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
2. 2 பிள்ளைக்கு ஒரு கணிணி ஆசிரியை என
பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
3. நாங்கள் நோகாமல் நோன்புகும்பிட்டு
மகிழ்ந்துகொண்டிருந்தோம்.
4. முதன் முறையாக இப்படி ஒரு இடத்திற்கு
பிள்ளைகளை அழைத்துச் சென்ற ஆசிரியைகள்
என்ற பெருமை முகத்தில் பொங்கியது எங்களுக்கு.
5. இந்த ஐடியாவிற்காக எனக்கு பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து, பெற்றோர்களிடமிருந்து, சக ஆசிரியைகளிடமிருந்து பாராட்டோ பாராட்டுத்தான்.
6. சொல்ல மறந்துவிட்டேனே!! என் குட்டி பிள்ளைகள் முகம் நிறைய அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அந்தக் குழந்தைகளின் முகத்தில் பார்த்த சந்தோஷம் சொல்லி புரியாது!!!
கொஞ்ச நாளைக்கு மற்ற வகுப்பு பிள்ளைகளிடம் "we played with computer" என்று உதார் விட்டு அவர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். :))))
”எப்படிப்பா? இப்படி? சூப்பர் ஐடியா? என என் சக ஆசிரியைகள் பாராட்ட
“எல்லாம் இந்தியமூளை!!” என காலரைத்தூக்கி விட்டுக்கொண்டேன்.
என்னை அடிக்க(விளையாட்டாகத்தான்) எல்லோரும் என் மேல் பாய்ந்தார்கள். இருக்காதே பின்னே, சக ஆசிரியைகளில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர், என் தோழியும் அசிஸ்டென்ட் டீச்சருமாகிய தாஹிரா பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.:))))
:))
சஸ்பென்ஸை உடைச்சிடறேன்
நான் போய் பேசியது என் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் அந்தப் பள்ளியில் கணிணிபயிற்சி மிக பிரபலம் லண்டன் எடெக்ஷல் கோர்ஸ் பட்டம்
கிடைக்கும் அங்கே கணிணி கற்பது ஒரு வரம் போல் அனைவரும் நினைப்பார்கள்
அந்த பள்ளி பற்றிஆஷிஷின் ஆட்டோ கிராப் . :))
25 கணிணி வைத்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனி கணிணியில் பயிற்சி கொடுப்பார்கள்.
இன்பச் சுற்றுலாவாக அங்கே அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். 1 மணி நேரம் போதும் என்று சொன்னதும் அவர்களும் ஆனந்தமாக
ஒத்துக்கொண்டார்கள். (இலவசமாக)
இங்கு அழைத்துச் சென்றதால் என்ன பயன்?
ஒண்ணா ரெண்டா ஒவ்வொருவருக்கும் பலன்.
நான் வேலை பார்த்த பள்ளிக்கு:
1. சுற்றுலான்னு பார்க்குக்கு கூட்டிகிட்டு போகாம
கம்ப்யூட்டர் செண்டருக்கு கூட்டிகிட்டு போ்ற ஸ்கூல்னு பேரு!
2. சுற்றுலாவிற்காக அதிகம் பணம் வசூலிக்கவில்லை
என நல்ல பெயர்.
3. கொடுத்த காசுக்கு உபயோகமா கூட்டிகிட்டு
போனாங்க என புகழாரம்.
பெற்றோர்களுக்கு:
1. குறைந்த செலவில் பிள்ளைகள் சுற்றுலா சென்றது.
2. சுற்றுலா என்ற பெயரில் வெயிலில் வாட விடாமல்
ஏசி அறைக்குள் அவர்கள் அமர்ந்திருந்தது.
3. அம்மாம் பெரிய ஸ்கூல் நடத்தும் கம்புயூட்டர்
சென்டரில் என் பிள்ளையுக் உக்காந்திருச்சுல்ல எனும்
பெருமை!!!
குழந்தைகளுக்கு:
1. தனக்கென ஒரு கம்ப்யூட்டர். தான் தொட்டு
பார்த்து கற்க, மகிழ 1 மணி நேரம்.(வீட்டில்
இது சாத்தியமில்லை)
2. அப்சார்பன் மைண்ட் என மாண்டிசோரி அம்மையார்
சொல்வார். எதைக் கொடுத்தாலும் கற்றுக்கொள்ளும்
வயதில் கணிணியின் அறிமுகம்.
3. பெருமை பொங்க அவர்கள் அங்கே அம்ர்ந்திருந்தைப்
பார்க்க வேண்டும்!!
அந்த கணிணி மையத்துக்கு:
1. தனது பள்ளியின் பெயர் பொறித்த தொப்பி,
கணிணியின் பாகங்கள் அச்சடித்த பேப்பர் எல்லாம்
கொடுத்தார்கள். இது பெற்றோரை மிகவும்
கவர்ந்தது.
2. இலவச விள்ம்பரம்.
எங்களுக்கு அதாவது ஆசிரியைகளுக்கு:
1. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
2. 2 பிள்ளைக்கு ஒரு கணிணி ஆசிரியை என
பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
3. நாங்கள் நோகாமல் நோன்புகும்பிட்டு
மகிழ்ந்துகொண்டிருந்தோம்.
4. முதன் முறையாக இப்படி ஒரு இடத்திற்கு
பிள்ளைகளை அழைத்துச் சென்ற ஆசிரியைகள்
என்ற பெருமை முகத்தில் பொங்கியது எங்களுக்கு.
5. இந்த ஐடியாவிற்காக எனக்கு பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து, பெற்றோர்களிடமிருந்து, சக ஆசிரியைகளிடமிருந்து பாராட்டோ பாராட்டுத்தான்.
6. சொல்ல மறந்துவிட்டேனே!! என் குட்டி பிள்ளைகள் முகம் நிறைய அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அந்தக் குழந்தைகளின் முகத்தில் பார்த்த சந்தோஷம் சொல்லி புரியாது!!!
கொஞ்ச நாளைக்கு மற்ற வகுப்பு பிள்ளைகளிடம் "we played with computer" என்று உதார் விட்டு அவர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். :))))
”எப்படிப்பா? இப்படி? சூப்பர் ஐடியா? என என் சக ஆசிரியைகள் பாராட்ட
“எல்லாம் இந்தியமூளை!!” என காலரைத்தூக்கி விட்டுக்கொண்டேன்.
என்னை அடிக்க(விளையாட்டாகத்தான்) எல்லோரும் என் மேல் பாய்ந்தார்கள். இருக்காதே பின்னே, சக ஆசிரியைகளில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர், என் தோழியும் அசிஸ்டென்ட் டீச்சருமாகிய தாஹிரா பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.:))))
Wednesday, February 11, 2009
சோம்பேறி டீச்சரும், சுற்றுலா பயணமும்... :))
பள்ளிகளில் சுற்றுலான்னு கூட்டிகிட்டு போவாங்க.
வேகாத வெயிலில் வாடி வதங்கி போவோம்.
"கோபு பாபுன்னு" சின்ன பசங்க சினிமா,
புதுகை அருங்காட்சி நிலையம் இப்படி போவோம்.
வரிசைல போங்க!
ரெண்டுரெண்டு பேரா போங்கடி!!
ரோடுல போறதை என்னவோ திருவிழா
பாக்கற மாதிரி வீட்டுல இருக்கறவங்க
வந்து பாப்பாங்க. கொடுமையா இருக்கும்.
ராணி ஸ்கூல்ல எங்கையோ கூட்டிகிட்டு
போறாங்கன்னு கமெண்ட் வேற கிடைக்கும்.
அம்மா பள்ளிகூடத்தில் சித்தன்னவாசல், திருமயம்
கோட்டைன்னு போவாங்க. நானும் அம்மாகூட
தொத்திக்குவேன். :) பஸ் ஏற்பாடு செஞ்சு
போவாங்க. நான் படிக்கும் பள்ளி சுற்றுலா
போனா சாதரணமாத்தான் இருக்கும். அம்மாகூட
போனா டீச்சர் பொண்ணு( அம்மா அங்க கிளார்க்
ஆனா ஆரம்பத்துல அரிச்சுவடி டீச்சர்) சும்மா
மருவாதையா நடத்துவாங்க. அதுக்காகவும்
அம்மா கூட போவலாமேன்னு இருக்கும். :)
இன்பச் சுற்றுலாவ? கல்விச் சுற்றுலாவானு குழப்பமே
இருக்கும். அந்த இடத்திற்கு போவதால் அந்த
இடத்தை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான்
அழைத்துச் செல்வாங்க.
ஆசிரியர் பயிற்சி 6 மாசம் முடிச்சதும் என்னை
கே ஜி 2 வுக்கு கிளாஸ் டீச்சரா போட்டுட்டாங்க.
(நம்ம டீச்சிங் ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு சர்டிபிகேட்
வேற. சும்மா ”காந்தானி சோர்” மாதிரி
”காந்தானி டீச்சர்ஸ்” ஆச்சே. குடும்பமே
வாத்தியார் குடும்பம்னு சொன்னேங்க) :))
வருடத்திற்கு இரண்டு முறை பிள்ளைகளைச்
சுற்றுலா அழைத்துச் செல்லணும். இதுக்கு
முன்னாடி எங்க போனாங்கன்னு கேட்டேன்.
பார்க், பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
(அங்கே மேக்கிங் பிட்ஸா எப்படின்னு
செஞ்சுகாட்டுவாங்க) இப்படி சொன்னாங்க.
சரின்னு பார்க் போகலாம்னு யோசிச்சேன்.
வெயில் நேரம். போய் கஷ்டப் படணுமா?
பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
எல்லாம் வளமையா கூட்டிகிட்டுப் போறாங்க.
அதைவிட இன்னொரு ஷாக்கிங் விசயம்.
என் கேஜி 2 கிளாஸுக்கு 2 செக்ஷன்.
ஒவ்வொரு செக்ஷனுக்கும் கிளாஸ் டீச்சர்,
அசிஸ்டெண்ட் டீச்சர்னு ரெண்டு டீச்சர்.
ஆக மொத்தம் 4 டீச்சரும் போவோம் என்பதால்
ஆயாம்மாவை கூட அனுப்ப மாட்டாங்களாம்.
இது கேள்வி பட்டதும் ஆஹா நாம பிள்ளைகளைக்
கூட்டிகிட்டு போனா ஆயா வேலையும் சேத்துல்ல
செய்யணும்!! என்ன கொடுமைன்னு நினைச்சேன்.
(மேலை நாடுகளில் மாண்டிசோரி டீச்சர்/ப்ளே
ஸ்கூல் டீச்சர் எல்லாம் சொல்ல மாட்டாங்க.
நாநி(NANNY). நம்ம ஊருல தான் டீச்சர்னு
மதிப்பு மருவாதில்லாம்.
பேசிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி. இந்த
மேட்டரை கேட்டதும்,” வூட்டுல என் புள்ளைங்க
தானே தன் வேலையை செஞ்சுக்குவாங்க. இவுங்களுக்கு
நான் செய்யணுமான்னு!” ஒரே யோசனை.
என் அசிஸ்டெண்ட் டீச்ச்ரும் நானும் ஒண்னத்தான்
மாண்டிசோரி கோர்ஸ் செஞ்சோம்.” ஏதாவது
செய்பா! இதெல்லாம் நம்மளால ஆவாது”
அப்படின்னு சொல்லவும்.
எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு. நான் போய்
ஹெ எச் எம்மை பாத்து எனக்கு 2 நாள்
டைம் கொடுங்க. நான் ஒரு ஏற்பாடு செய்யறேன்.
அவங்க ஓகேன்னு சொன்னா? சரி இல்லாட்டி
பார்க் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லிட்டேன்.
நான் கூட்டிகிட்டு போறேன்னு சொன்ன இடத்தைச்
சொன்னதும் ஒரே ஆச்சரியம் ஹெ எச் எம்முக்கு இது முடியுமா?
செஞ்சா நல்லா இருக்கும்னு?
சரி, ஆனா கேஜி 2 ரெண்டுசெக்ஷனும்
ஒரே இடத்துக்குத்தான் ஒரே நாளில் செல்லணும்”
அப்படின்னு சொல்லிட்டாங்க.
எங்க கூட்டிகிட்டு போக ப்ளான் செஞ்சிருந்தேன்?
(நான் சோம்பேறின்னு சொன்னதையும் மனசுல
வெச்சுகிட்டு யோசிங்க!)
வேகாத வெயிலில் வாடி வதங்கி போவோம்.
"கோபு பாபுன்னு" சின்ன பசங்க சினிமா,
புதுகை அருங்காட்சி நிலையம் இப்படி போவோம்.
வரிசைல போங்க!
ரெண்டுரெண்டு பேரா போங்கடி!!
ரோடுல போறதை என்னவோ திருவிழா
பாக்கற மாதிரி வீட்டுல இருக்கறவங்க
வந்து பாப்பாங்க. கொடுமையா இருக்கும்.
ராணி ஸ்கூல்ல எங்கையோ கூட்டிகிட்டு
போறாங்கன்னு கமெண்ட் வேற கிடைக்கும்.
அம்மா பள்ளிகூடத்தில் சித்தன்னவாசல், திருமயம்
கோட்டைன்னு போவாங்க. நானும் அம்மாகூட
தொத்திக்குவேன். :) பஸ் ஏற்பாடு செஞ்சு
போவாங்க. நான் படிக்கும் பள்ளி சுற்றுலா
போனா சாதரணமாத்தான் இருக்கும். அம்மாகூட
போனா டீச்சர் பொண்ணு( அம்மா அங்க கிளார்க்
ஆனா ஆரம்பத்துல அரிச்சுவடி டீச்சர்) சும்மா
மருவாதையா நடத்துவாங்க. அதுக்காகவும்
அம்மா கூட போவலாமேன்னு இருக்கும். :)
இன்பச் சுற்றுலாவ? கல்விச் சுற்றுலாவானு குழப்பமே
இருக்கும். அந்த இடத்திற்கு போவதால் அந்த
இடத்தை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான்
அழைத்துச் செல்வாங்க.
ஆசிரியர் பயிற்சி 6 மாசம் முடிச்சதும் என்னை
கே ஜி 2 வுக்கு கிளாஸ் டீச்சரா போட்டுட்டாங்க.
(நம்ம டீச்சிங் ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு சர்டிபிகேட்
வேற. சும்மா ”காந்தானி சோர்” மாதிரி
”காந்தானி டீச்சர்ஸ்” ஆச்சே. குடும்பமே
வாத்தியார் குடும்பம்னு சொன்னேங்க) :))
வருடத்திற்கு இரண்டு முறை பிள்ளைகளைச்
சுற்றுலா அழைத்துச் செல்லணும். இதுக்கு
முன்னாடி எங்க போனாங்கன்னு கேட்டேன்.
பார்க், பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
(அங்கே மேக்கிங் பிட்ஸா எப்படின்னு
செஞ்சுகாட்டுவாங்க) இப்படி சொன்னாங்க.
சரின்னு பார்க் போகலாம்னு யோசிச்சேன்.
வெயில் நேரம். போய் கஷ்டப் படணுமா?
பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
எல்லாம் வளமையா கூட்டிகிட்டுப் போறாங்க.
அதைவிட இன்னொரு ஷாக்கிங் விசயம்.
என் கேஜி 2 கிளாஸுக்கு 2 செக்ஷன்.
ஒவ்வொரு செக்ஷனுக்கும் கிளாஸ் டீச்சர்,
அசிஸ்டெண்ட் டீச்சர்னு ரெண்டு டீச்சர்.
ஆக மொத்தம் 4 டீச்சரும் போவோம் என்பதால்
ஆயாம்மாவை கூட அனுப்ப மாட்டாங்களாம்.
இது கேள்வி பட்டதும் ஆஹா நாம பிள்ளைகளைக்
கூட்டிகிட்டு போனா ஆயா வேலையும் சேத்துல்ல
செய்யணும்!! என்ன கொடுமைன்னு நினைச்சேன்.
(மேலை நாடுகளில் மாண்டிசோரி டீச்சர்/ப்ளே
ஸ்கூல் டீச்சர் எல்லாம் சொல்ல மாட்டாங்க.
நாநி(NANNY). நம்ம ஊருல தான் டீச்சர்னு
மதிப்பு மருவாதில்லாம்.
பேசிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி. இந்த
மேட்டரை கேட்டதும்,” வூட்டுல என் புள்ளைங்க
தானே தன் வேலையை செஞ்சுக்குவாங்க. இவுங்களுக்கு
நான் செய்யணுமான்னு!” ஒரே யோசனை.
என் அசிஸ்டெண்ட் டீச்ச்ரும் நானும் ஒண்னத்தான்
மாண்டிசோரி கோர்ஸ் செஞ்சோம்.” ஏதாவது
செய்பா! இதெல்லாம் நம்மளால ஆவாது”
அப்படின்னு சொல்லவும்.
எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு. நான் போய்
ஹெ எச் எம்மை பாத்து எனக்கு 2 நாள்
டைம் கொடுங்க. நான் ஒரு ஏற்பாடு செய்யறேன்.
அவங்க ஓகேன்னு சொன்னா? சரி இல்லாட்டி
பார்க் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லிட்டேன்.
நான் கூட்டிகிட்டு போறேன்னு சொன்ன இடத்தைச்
சொன்னதும் ஒரே ஆச்சரியம் ஹெ எச் எம்முக்கு இது முடியுமா?
செஞ்சா நல்லா இருக்கும்னு?
சரி, ஆனா கேஜி 2 ரெண்டுசெக்ஷனும்
ஒரே இடத்துக்குத்தான் ஒரே நாளில் செல்லணும்”
அப்படின்னு சொல்லிட்டாங்க.
எங்க கூட்டிகிட்டு போக ப்ளான் செஞ்சிருந்தேன்?
(நான் சோம்பேறின்னு சொன்னதையும் மனசுல
வெச்சுகிட்டு யோசிங்க!)
Subscribe to:
Posts (Atom)