Total Pageviews

Thursday, July 30, 2009

கதம்ப மாலை 30.7.09

ஏப்ரல் 95க்கு பிறகு தனியே தன்னந்தனியே
என் பயணம் சமீபத்தில் நடந்தேறியது.
சென்னைக்கு பயணம் என்பதால் கொஞ்சம்
இண்ட்ரஸ்ட் இல்லாமல்தான் வந்தேன்.
மும்பை-சென்னை ரயில்பயண நேரம்
போல் நீண்டதாக இல்லாமல் இருக்கும்
ஹைதை-சென்னை பயணம். அதனால்
பெரிதாக வித்யாசம் இல்லை.
இதற்கு முந்தைய என் தனி சென்னைப்
பயணங்கலின் போது என்னை வரவேற்க
சென்னையில் யாரும் வந்திருப்பார்கள்.
இந்த முறை நானே ஆட்டோ பிடிச்சு
என் தோழிவீட்டுக்கு
சென்று அங்கிருந்து திருமண மண்டபம்
எல்லாம் போய்வந்துட்டோம்ல.
****************************************


(ஏதோ நேரம் நல்லா இருந்து
ஆட்டோ அண்ணன்கள் தகராறு செய்யாம
வந்ததாலதான் பயணம் இனியதாய்
இருந்துச்சுன்னு நினைக்கறேன்)

சென்னை செண்ட்ரலில் தகராறு
செய்யாமல் ஆட்டோ கிடைத்தது
என் முன் ஜென்மத்து நல்வினையோ!!!!
:))))))))))))

இவங்க அடாவடியால் மக்கள் கஷ்டப்படக்கூடாது
என்பதால் PRE PAID AUTO கவுண்டரை
செண்ட்ரல் ஷ்டேஷனில் ஆரம்பிச்சிருக்காங்க.
(அவங்க நடுவுல தகராறு செஞ்சா மொபைலை
எடுத்து போலிசுக்கு போன் போடறேனு பயம்
காட்டணுமாம் :)) )

****************************************

சமீபத்திய சென்னை- ஹைதை ரயில் பயணத்தில்
நடந்தது இது.

என்னுடம் பயணித்த சக பயணி
தென்னக ரயில்வே ஆடிட்டர் போலிருக்கிறது.(அவரது
தொலைபேசி பேச்சுக்களிருந்து தெரிந்துகொண்டேன்)
தன்னிடமிருந்த மற்றொரு போனில் பெரிதாக
பாடல்களைக் கேட்டுக்கொண்டு வந்தார்.
மனிதருக்கு இங்கிதம் இருக்கும். நிறுத்தி
விடுவார் என பார்த்தேன். ம்ஹூம்.. :(

பொறுத்து பொறுத்து பார்த்து
“எக்ஸ்க்யூஸ்மி, பாட்டு கேப்பதா இருந்தா
சவுண்டை குறைச்சு கேளுங்க, இல்லாட்டி
ஹெட்போன் வெச்சுக்கோங்க. எனக்கு
டிஸ்டபர்ன்ஸா இருக்கு” என்று சொன்னேன்.
ஐம் சாரி” என்று பாட்டை நிறுத்தினார்.
*****************************************

அதிசயமாக 7.30 வணிவாக்கிலேயே ஆர்டர்
கொடுத்திருந்த உணவு வந்துவிட்டது.
திருமண வீட்டு அசதி + பயங்கர கழுத்து
முதுகுவலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
சாப்பிட்டுவிட்டு 8.30 மணி வாக்கிலேயே
என் அப்பர் பர்த்தில் ஏறி படுத்து விட்டேன்.
(ரயில் அதிகாலை 5.15க்கெல்லாம் ஹைதையை
அடைந்துவிடும்)

எனக்கு எதிர் பர்த் பையன் அவருக்கு மிடில்
பர்த். அவரும் சாப்பிட்டுவிட்டு அந்த
ஆடிட்டரிடம்(அவருடையது லோயர் பர்த்)
தான் படுக்க விரும்புவதாக கூறியதுதான்
தப்பு. ஐயா ஆரம்பித்தார் அவரது
பேருரையை.

“நோ!நோ! 9 மணிக்கு குறைந்து
பர்த் போடச்சொல்லி நிர்பந்திக்கக்கூடாது.
அது இது என்று அந்த பையனுக்கு 30 நிமிடம்
லெக்சர் கொடுத்து 9 மணிக்கு பர்த்
போட பர்மிஷன் கொடுத்தார்.

இதற்கெல்லாம் சட்டம் பேசத் தெரிந்த இவருக்கு
வண்டியில் பாடலை அலற விட்டுக் கேட்க
கூடாது என்பது தெரியவில்லை...

*********************************
அம்ருதா ஆஷிஷ் இருவருக்கும் சென்ற வருட
முழுப்பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்
அவர்கள் விரும்பும் விளையாட்டுச் சாமான்
வாங்கித் தருவதாக சொல்லியிருந்தோம்.
ஆஷிஷ் ஹாட்வீல்ஸ் டர்போ ட்விஸ்டர்
கார் செட் கேட்க, அம்ருதா தனக்கு பார்பி
செட் வேண்டுமென்றாள். சரி என்று
சொல்லியிருந்தோம்.

ஆஷிஷ்க்கு டர்போ ட்விஸ்டர் வாங்கி
விட்டு அம்ருதாவுக்கு என்ன விதமான
செட் தேவையோ அவளையே அழைத்துச் சென்று
வாங்குவதாக ப்ளான். அவளைக் கடைக்கு
அழைத்துச் செல்ல நேரமில்லாமல் போக
சென்றவாரம் அழைத்துச் சென்று என்ன
வேண்டும்? என்று கேட்டோம்.

பார்பி பக்கம் சென்றவள், சுத்தி சுத்தி
வந்தாள். பார்பியை விட்டு அவள்
கையில் எடுத்தது ரோலர் ஸ்கேட்டரை.

”பார்பிதானே கேட்டாய்? இப்ப இதை
எடுத்திருக்க?” என்று கேட்டதற்கு
அம்ருதாவின் பதில்,”பார்பி இன்னும்
கொஞ்ச நாள்தான் விளையாடலாம்மா,
ரோலர் ஸ்கேட்டர்னா நான் எப்ப வேணாம்
விளையாடலாமே!!!”

யோசிக்கும் தன்மை, மனமுதிர்ச்சி
இதை இயற்கையே பிள்ளைகளுக்கு
அந்தந்த சமயத்தில் வழங்கிவிடுகிறது.
**********************************

என்னுடைய வலைப்பூவைத் தொடரும்
அந்த 75ஆவது நபருக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.
***********************************

Wednesday, July 29, 2009

வித்தியாசமாய், அழகாய்...அழைப்பிதழ்கள்

வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கும்
அழைப்பிதழ் அச்சிடுவோம். அந்த
அழைப்பிதழ் சிற்ப்பாக இருக்க வேண்டும்
என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும்.


சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில்
வித்யாசமான அழைப்பிதழ் பற்றி படித்தாக
ஞாபகம். இரண்டுவருடங்களுக்கு முன் வீட்டில்
நடந்த விசேடம் ஒன்றிற்கு அழைப்பிதழ் தெரிவு
செய்ய வேண்டும். மனதுக்குள் அந்த அழைப்பிதழ்
தான் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓவியரின்
பெயரும் மறந்துவிட்டேன். ஆனால் அந்த அழைப்பிதழ்
தான் என்பதில் திடமாக இருந்தேன். நெட்டில் தேடினால்
ஈசியாக கிடைக்கும் என்றாலும் ஓவியரின் பெயர்
தெரியாதே!!!

என் நண்பர் ஒருவரிடம் இதுப்பற்றி பேசிக்கொண்டிருந்த
பொழுது ஆமா, நானும் படிச்சேன். பெயர் மறந்து
போச்சு, ஆனாலும் தேடித்தர்றேன் என்று சொன்னார்.
சொன்னால்போல அடுத்த நாள் அவரது மெயிலும்
வந்ததும். அந்த லிங்கை தொடர்ந்து பார்த்த
பொழுது மனதுக்குள் மிக்க மகிழ்ச்சி.

அப்படி என்ன விசேடம் இந்த அழைப்பிதழில்.
எந்த ஒரு நிகழ்வும் எதற்காக செய்யப்படுகிறது?
என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

திருமணச் சடங்குகள் எதற்காக? போன்ற
விடயங்கள் எளிதாக புரியும் விதத்தில்
சடங்குகளின் புகைப்படத்தோடு அழைப்பிதழ்
இருந்தால் அனைவருக்கும் புரியும் தானே!!

பல நாளிதழ்கள் இவரைப்புகழ்ந்து
பாராட்டியிருக்கிறார்கள்.

அந்த ஓவியர் மாயா. அவரின் ஓவியங்கள்
நம் கலாச்சாரத்தை பரைசாற்றும் அழைபிதழ்களாகி
இருக்கின்றன.

அழைப்பிதழ் மாடல்கள் சில பார்க்க

ஷஷ்டியப்தபூர்த்தி எனப்படும் 60ஆம் கல்யாண
வைபோக அழைப்பிதழ்கள்.


கிருஹப்ப்ரவேசம் அழைப்பிதழ்

அழைப்பிதழ்கள் வாங்குவது எப்படி?
அச்சிடுவது என எல்லா விவரங்களூம்
இந்த வெப்பேஜில் இருக்கிறது.





பாருங்களேன்..

சந்தோஷமா இருக்கு..

என் தோழி ஒரு கதை சொல்வாங்க.
அந்தக் கதையை நான் உங்களுக்குச் சொல்றேன்.

ஒரு ஊருல ஒரு அம்மா. அவங்களுக்கு 4 குழந்தைங்க.
2 மகள், 2 மகன். அன்னைக்கே உரிய அன்போடு
பிள்ளைகளை நல்லவிதமா வளர்த்தாங்க. பிள்ளைகளுக்காக
எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அன்புத்தாய்.

அம்மோவோட அன்புக்குத்தான் அளவே இல்லையே.
பிள்ளைங்க மனசு கோணாம அவங்க கேட்கும்
முன்னே செய்து தரும் அம்மா அவங்க.

பிள்ளைங்களும் வளர்ந்து பெரியவங்க ஆனாங்க.
அம்மா எப்போதும் போல அவங்களுக்குச் சேவைகள்
செஞ்சு, கல்யாணம் கட்டி கொடுத்து,
பேரன், பேத்திகளை எல்லாம் பார்த்த பிறகு
சந்தோஷமா மன திருப்தியுடன் இறைவனடி சேர்ந்தாங்க.

எமலோகத்தில் இறந்தவர்களின் பாவ புண்ணிய
கணக்குகளை பார்க்கும் பொழுது இந்த அம்மாவை
கொஞ்ச நாட்களுக்கு நரகத்தில் இருந்து விட்டு
பிறகு சொர்க்கம் செல்லும் படி யம தர்மன் சொல்ல
அம்மாவுக்கு ஆச்சரியம்!!

“நான் என் வாழ் நாளில் எனக்கென எதுவும்
செய்து கொண்டதில்லை. எப்போதும் என்
பிள்ளைகளை பேணி வளர்ப்பதில் தானே
கண்ணும் கருத்துமாக இருந்தேன். குடும்பத்தினரின்
சந்தோஷத்திற்காக என்னை தியாகம் செய்து
வாழ்ந்த நான் ஏன் நரக லோகத்தில்
தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று
கேட்க யமதர்மராஜ சொல்கிறார்
“அம்மா! உங்களுடைய தன்னலமற்ற
சேவைக்காகத்தான் உங்க தண்டனை
குறைக்கப்பட்டிருக்கிறது” அப்படின்னு
சொல்ல,”நான் செய்த குற்றம் தான் என்ன?”
அப்படின்னு அந்த அம்மா கேட்கிறார்.

யம தர்மராஜன் உன் பிள்ளைகளின்
நிலையைச் சற்று பார் என்று
சொல்லி மாயக்கண்ணாடியில் காட்டுகிறார்.
அங்கே அந்த அன்னையின் பிள்ளைகளும்,
மருமக்களும், பேரன், பேத்திகளும்
அவர் இல்லாமல் வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

பார்த்து பார்த்து செய்து கொடுக்க ஆளிருந்ததால்
தன் வேலையைத் தானே செய்து கொள்ளத்
தெரியாமல் சோம்பேறிகளாக வளர்ந்துவிட்டார்கள்.
அதனால் இப்போது குடும்பத்தில் குழப்பம், சண்டை
சச்சரவுகள் என நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்.

“எங்கம்மாவைச் சொல்லணும்! எனக்கு ஒண்ணும்
தெரியாமல் வளர்த்துட்டாங்க. அவங்களாலத்தான்
நான் இவ்வளவு கஷ்டம் படறேன்” என்று சொல்வதை
அந்தத் தாயும் கேட்டு கண்ணீர் விடுகிறாள்.

வாதமாக எடுத்துக்கொள்ளமால் இந்தக் கதை கூறும்
நீதி பிள்ளையை வளர்ப்பது என்பது அவர்கள் வேலையையும்
நாமே செய்து அவர்களின் வளர்ச்சியைக் கெடுப்பது இல்லை
என்பது. சுயமாக அவர்கள் வாழும் வகையில் வளர்க்க
வேண்டும். சரிதானே!

சரி இப்ப எனக்கு எதுக்காக சந்தோஷம். சொல்றேன்.:)
திருமணம்,குழந்தைகள் என்று ஆன பிறகு நான்
தனியாக எங்கும் சென்றதே இல்லை. ஆனால்
முதன் முறையாக திருமணம் ஒன்றுக்காக நான்
மட்டும் பயணம் ஒன்று செய்தே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம். போய்வந்தேன்.

ஞாயிறு, திங்கள் இரண்டு நாளும்
நான் ஊரில் இல்லை. திங்கள்
பிள்ளைகளுக்கு பள்ளி இருந்தது. ஆனால்
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரெடியாகி
விட்டார்களாம். அயித்தான் உணவு தயார்
செய்து கொடுக்க எப்போதும் போல் பள்ளிக்குச்
சென்று வந்து பாடம் படித்து,
துணிகளை மடித்துக்கொடுத்து, பாத்திரம் எடுத்து
வைக்க அப்பாவுக்கு உதவி செய்து....

என இருந்திருக்கார்கள். நான் எப்படி விட்டுச்
சென்றேனோ அப்படியே சுத்தமாக வீடு இருந்தது.

கேட்க சந்தோஷமாக இருந்தது. அந்தக் கதையி்ல்
வரும் தாய் போல இல்லாமல் இருப்பதால்
சந்தோஷம். :))

அயித்தானுக்கும், குட்டீஸ்களுக்கும் நன்றி.

Friday, July 24, 2009

பேரண்ட்ஸ் கிள்ப்பில் முக்கியமான பதிவு

எந்தக் குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவது தீயனாவதும் பெற்றவர் வளர்ப்பதிலே..

கணவன் மனைவி என்கின்ற இரண்டு சக்கரமும்
சமமாக ஒரே சீராக ஒரே பாதையில் சென்றால்தான்
வாழ்க்கை இன்பமாக இருக்கும். அவர்களின்
அன்பின் காணிக்கையான குழந்தைகளின் வாழ்வும்
அதில் அடங்கியிருக்கே.

இதைப்பற்றி பேரண்ட்ஸ் கிளப்பில் இரண்டு பதிவுகள்
போட்டிருக்கேன்.

என்ன காரணமோ பேரண்ட்ஸ் கிளப்பில் பல நல்ல
விடயங்கள் எழுதப்பட்டாலும் கூட்டம் கம்மிதான்.

அதான் இங்கே ஒரு அழைப்பிதழ்.

1.ஆயிரம் காலத்துப் பயிரைக் காத்தால் விளைச்சல்
அமோகம்.



2.ஆதலினால் காதல் செய்வீர்


உங்களின் ஆதரவை பேரண்ட்ஸ் கிளப்
பதிவுகளுக்கும் தருக வேண்டுகிறேன்

Thursday, July 23, 2009

நானும் ஸ்கூலுக்கு போவேன்!!!!

கயல்விழியின் இந்த கொசுவத்தியை படிச்சதும்
எனக்கும் (அதான் எப்பவுமே சுத்துதே!) கொசுவத்தி
சுத்த ஆரம்பிச்சிருச்சு. :))

எனக்கும் என் தம்பிக்கு 8 வயது வித்யாசம்.
அதனால் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் போரடித்துக்
கொண்டு கிடப்பேன். புதுகையில் சுப்பராமய்யர் பள்ளி
அம்மாவின் தாத்தாவுக்கு சொந்தமான பள்ளி.
தாத்தா அங்குதான் வேலைப்பார்த்தார். சித்தி
அரிச்சுவடி(அந்தக்கால எல்.கே.ஜி) டீச்சர்.


எங்கள் வீட்டின் வழியாகத்தான் சித்தி வேலைக்குச்
செல்ல வேண்டும். தனியாக போரடித்துக்கொண்டு
வீட்டில் இருப்பதை விட தன்னுடன் பள்ளிக்கு
அழைத்துச் சென்றார். 31/2 வயதுதான்.
சின்ன தூக்குச்சட்டியில்
சோறு எடுத்துக்கொண்டு வாசலில் ரெடியாக
காத்திருக்க சித்தி அழைத்துச் செல்வார்.
சாயந்திரம் திரும்ப வருவதும் அவரோடு தான்.
அப்பா, அம்மா தடுத்தாலும் நானும் ஸ்கூலுக்கு போவேன்
என்று அடம்பிடித்து செல்வேனாம். (அப்பாடி
தலைப்பை பிடிச்சாச்சு)

என் முதல் ஆசிரியை சித்திதான். (இன்றளவும்
எனக்கும் ஏதாவது தெரியும் என்றால் என்னை
செதுக்கிய சிற்பிகளில் சித்தியும் முக்கியமானவர்)

புதுகையில் பிரபலமாக இருந்த child jeasus convent
பள்ளியில் என்னை சேர்க்க முடியாவிட்டாலும்
அதே போன்ற ஒரு யூன்பார்ம், டக்டக்கென
நான் நடக்க ஷூ, அலுமினியப்பெட்டி
ஆங்கில ரைம்ஸ் புக்(எம்.ஜே.சார் பைண்டிங்
செஞ்சது. பார்க்க ஒரு சாயலில் எம் ஜி ஆர்
அவர்கள் போலிருந்ததால் அவருக்கு என் நாமகரணம்)
என என்னை அடுத்த வருடமே அழகு படுத்தி
பார்த்தார் சித்தி.

சித்தி அந்த வேலையை விட்டு விட அம்மா
அங்கே டீச்சரானார். அம்மாவிடமிருந்தால்
தகராறு செய்வேன் என்று அவர்களாக நினைத்து
பக்கத்து வகுப்பான (கிளாஸ் ரூமைச் சொன்னேன்)
ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த டீச்சர் ஈஸ்வரி டீச்சர்.
இவரது கணவர் புதுகை அரசு மருத்துவமனையில்
வேலை பார்த்தார். டீச்சர் காலை ஆட்டிக்கொண்டே
சொல்லிக்கொடுக்கும் பாணி ரொம்ப பிடிக்கும்.
கையில் குச்சி வைத்திருப்பார். அந்தக் குச்சி
தரையில் தட்டி பயத்தை உண்டாக்க மட்டுமே.
நான் மாண்டிசோரி ஆசிரியை ஆன போது
என் ஒண்ணாம்கிளாஸ் ஈஸ்வரி டீச்சரின்
முறையில்தான் எடுத்தேன். 24 வருடங்களுக்கு
பிறகும் அவரை என்னால் மறக்கவே முடியவில்லை.

சரியாக 6வயது ஆனதும் அப்பா வந்து முறையாக
அப்ளிகேஷன் எழுதி, எல்லோருக்கும் ஆரஞ்சு
மிட்டாய் கொடுத்து திரும்பவும் அதே கிளாசில்
உட்கார்ந்து ஒண்ணாம் வகுப்பு!!!!

ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரின் மகன்
என்னோடு ஒண்ணாம் கிளாசில் படித்தான்.
அவன் தினமும் பள்ளிக்கு வர சாம்பார்
தூக்குச் சட்டி நிறைய்ய கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அழுகைதான். அதனால்
அவனுக்கு சாம்பார் என்றே பெயர் சூட்டினோம்.
கிளாசில் எப்போதும் தூங்கி வழியும் அவனை
ஒரு முறை ஒரு நண்பன் சொன்னான் என்று
சீண்டி தோப்புக்கரணம் போட்டேன். அதுவும்
பசங்க படத்தில் வருமே அது போல் ஒருத்தர்
தோளை ஒருத்தர் பிடிக்க “உன்னாலே நான்
கெட்டேன், என்னால நீ கெட்ட” என்று
பாடிக்கொண்டு அப்படியே தான். :)) (அப்படி
உக்கி போடும் போது என் காது தோட்டை
ஒருத்தி இழுத்துவிட ஓட்டை பெரிதானது.
அதை +2 படிக்கும்போதுதான் தைத்தோம்.
அந்த சீனை பார்க்கும் போது தானாக என்
கைகள் காதைத் தொட்டு பார்ததது)


இரண்டாம் வகுப்பு பெரிய்ய ஸ்கூலிலிருந்து
சின்ன ஸ்கூலுக்கு. அதாவது 1ஆம் வகுப்பு
இருந்தது 6,7,8 வகுப்புக்கள் இருந்த பெரிய
கட்டிடத்தில். 2,3,4,5 வகுப்புக்கள் இருந்தது
சின்ன கட்டிடம்(சின்ன ஸ்கூல், பெரிய்ய ஸ்கூல்)
இராமமூர்த்தி சார் கிளாஸ். வேட்டி கட்டிக்கொண்டு
டிபிகல் வாத்தியாராக ஆனால்” என்ன கலா!
என்னாச்சு, நீ படிக்கற பிள்ளையாச்சே! என்று
ஊக்கம் தரும் சார்” "சும்மா பிள்ளைய திட்டாத
ரத்னா!" என அம்மாவை திட்டுவார்.(அம்மாவும்
அவுங்க ஸ்டூடண்ட்)



3ஆம் வகுப்பு பட்டு டீச்சர். இவரது வகுப்பில்
படிக்கும்போது நடந்த ஒரு மறக்க முடியாத
நிகழ்வால்தான் எனக்கு அருமையான தாத்தா
ஒருவர் கிடைத்தார்.(அதெல்லாம் அடுத்த போஸ்ட்ல)


4 சுவாமியப்பன் சார் கிளாஸ். புதுகையில்
நடனப்பள்ளி வைத்திருந்தார். கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.
ஆங்கில கற்க ஆரம்பித்தது இங்கே தான். நான் தமிழ் மீடியத்தில்
தான் படித்தேன். அதுவும் அரசு உதவிபெரும் பள்ளியில்

5ஆம் வகுப்பு. எனக்கு மிகவும் பிடித்தது இந்த
வகுப்புதான். காரணம் கனகாம்புஜம் டீச்சர்.
அன்பாலே என்னை வென்றவர். இந்த வகுப்பில்தான்
நோட் புக்கில் எழுத பழகியது. அது வரை ஸ்லேட்தான்.
வேறு செக்‌ஷனில் இருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
ராவ் சார்தான் வரலாறு,புவியியல் ஆசிரியர். குடுமி
வைத்திருக்கும் சார்தானேன்னு வாலாட்ட முடியாது
கம்பெடுத்து முதுகு பட்டையை உரிச்சிடுவார்.
(புதுகைக்கு பெருமை சேர்க்கும் அதிஷ்டானம்
புவனேஸ்வரி கோவிலில் மந்திரம் சொல்லிக்கொண்டு
சாயங்கால நேரங்களில் இருப்பார்)

ராமச்சந்திரன் சார் என்று ஒருவர். அவருக்கு
நாங்கள் வைத்த பெயர் லீவு சார். வி்டுமுறை
என்றால் அதை ராமச்சந்திரன் சார் வந்துதான்
சொல்வார். அவரைக்கண்டாலே லீவு எப்ப சார்?
என்று கேட்டு முறைப்பை பதிலாக பெற்ற
குறும்பு மாணவர்களும் உண்டு. :))
என் ஆரம்பப்பள்ளி வரை எங்கள் குடும்பத்தில்
அனைவருமே படித்தது இந்தப் பள்ளியில்தான்.


எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான விஷயம்
என் சின்ன தாத்தா(அம்மாவின் சித்தப்பா) அதே பள்ளியில்
ஹெட்மாஸ்டராக இருந்தாலும், அந்த பள்ளியே
எங்களுக்கு சொந்த மான பள்ளியாக இருந்தாலும்
தனி மரியாதை, ஷ்பெஷல் ட்ரீட்மெண்ட் ஏதுமில்லாமல்
மற்ற மாணவர்களோ்டு என்னையும் ஒரு சேர
பார்த்தது. பாகுபாடு இல்லாமல் அனைத்து
ஆசிரியர்களும் நடந்து கொண்டார்கள்.



புதுகையில் நடந்த என் திருமண ரிஷப்ஷனுக்கு
அம்மாவுடன் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளாக
அனைவரும் ஆஜர். அதனால் இன்றளவும் விரும்பும்
நேரத்தில் வீடியோவில் இவர்களை பார்க்க முடியும்.


ராணிஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேர்ந்த பிறகும்
ஓடி வந்து டீச்சர்களைப் பார்ப்பேன்.
அப்போது என் கனகாம்புஜம் டீச்சர் அடித்த
கமெண்ட்,” உங்க பேட்ச்சோட டீச்சருக்கு
இருக்கற மரியாதையே போயிடிச்சு கலா!!
உங்களுக்கெல்லாம் படிப்பு சொல்லிக்கொடுக்க
இஷ்டமா இருக்கும். இப்பல்லாம் ரொம்ப
கஷ்டமா இருக்கு!!!”

:))) வாத்தியார் மெச்சும் மாணாக்கர்கள் நாங்கள்.

Wednesday, July 22, 2009

என்ன சமையலோ!!!!!

என்ன ரெஷஷ்ன்னாலும் ஹோட்டலில் கும்பல் மட்டும் குறைவில்லை.
சமையலை மையமாக வைத்து எத்தனை பாடல்கள்
வந்திருக்கின்றன்?? பதிவுகள் வந்திருக்கின்றன தெரிஞ்சுக்க
கண்டிப்பா பதிவைப் படிக்க வேண்டியதுதான். :))



என்ன சமையலோ!!!!




என்ன சமையலோ....



Get Your Own Hindi Songs Player at Music Plugin


விவாஹ போஜனம்பு(தெலுங்கு மாயா பஜார்)

கல்யாண சமையல் சாதம்...

Get Your Own Hindi Songs Player at Music Plugin


நித்த நித்தம் நெல்லுச் சோறு,, நெய் மணக்கும்
கத்திரிக்காய்...

Get Your Own Hindi Songs Player at Music Plugin


தூக்குச் சட்டியை தூக்கிபார்த்து கண்டுபிடிடா...

கத்திரிக்காய் பாட்டு பார்க்க

எனக்குத் தெரிஞ்சு இம்புட்டுதான் உங்களுக்கு ஏதும்
பாட்டுத் தெரிஞ்சா சொல்லிட்டு போங்க.


இனி சமையல் பற்றியோ ஹோட்டல்கள் பற்றிய
பதிவுகள்.

எங்கே என்ன சாப்பிடலாம் என்று சுவையாக
சொல்வதில் வித்யாவுக்கு நிகர் வித்யா தான்.

என் வலைப்பூவிலும் நான் ரசித்த,சுவைத்த
ஹோட்டல்கள் பற்றிய பதிவு இருக்கும்.
(கொட்டிக்கலாம் வாங்கங்கற லேபிள்ல பாருங்க)

நானானிம்மா வலைப்பூவில் நிறைய்ய சமையற்குறிப்புகளும்
பார்க்கலாம்.

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி இங்கே பல
வித குறிப்புக்கள் கிடைக்கும்.

சாப்பிடவாங்க இங்கேயும் குறிப்புக்கள் கிடைக்கும்


அபிஅப்பா தஞ்சாவூர் கும்பகோணம் ஏரியாவில்
எங்கே சாப்பிடலாம்னு
பதிவு போட்டுக்கினு இருக்காரு.


நல்லா மூக்கு முட்ட சாப்டா என்னாகும்னு
டாக்டர் தேவா பதிவு போட்டிருக்காரு அதையும்
மறக்காம படிச்சிக்கிடுங்க.

சர்க்கரை நோய்க்காரவுக இத்த படிக்காம
வுட்டுடாதீக ஆமா சொல்லிப்புட்டேன்.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே..

சந்தோஷமா மத்யான சாப்பாட்டு டப்பாவை
தொறங்க. கொஞ்சமா சாப்பிடுங்க.

நானும் போயி சாப்பிட்டுடு வாறேன்.

Tuesday, July 21, 2009

எப்போன்னு காத்திருப்பாங்க போல இருக்கே....

கொஞ்சமாகத் தூறல் போட்டால் போதும்
அண்ணனும் தங்கையும் கோரஸாக
“லாலாலான்னு பாடுவாங்க” கொஞ்ச நேரம் கழிச்சு
நமுட்டு சிரிப்பு சிரிப்பாங்க. கடைசியா

”நாங்க இன்னைக்கு உங்க ரூம்ல படுத்துக்கலாமான்னு”
கேட்டு அப்பாவை மயக்கி சம்மதமும் வாங்கிடுவாங்க.
சில சமயம் நான் வரம் கொடுத்துவிடுவேன். :))

நேற்று அது போல நடந்து தலையணை, போர்வையுடன்
எங்கள் ரூமுக்கு வந்துவிட்டனர் இருவரும்.



இரவு படுக்கப்போகும் முன் கட்டாயமாக
கைகாள்களில் மாய்ச்சுரைஸர் க்ரீம் தடவிக்கொள்ள
வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.
பாதங்களில் கிரீம் தடவி சாக்ஸ் போட்டுக்கொண்டு
படுப்பதால் கால்கள் சுத்தமாகவும், மாய்ச்சுரைஸ்
செய்யப்பட்டும் இருக்கும்.

நேற்று நான், ஆஷிஷ், அம்ருதா மூவரும் க்ரீம்
தடவிக்கொண்டிருந்தோம். பிள்ளைகளை உசுப்பேத்த
தலையில் அடித்துக்கொண்டார் அயித்தான்.

உடனே முறைத்தாள் அம்ருதா..
சற்று நேரத்தில் குழிப்புண்ணுக்காக வாயில் மருந்து
தடவிக்கொண்டார் அயித்தான்.
“ இப்ப நீங்க மட்டும் என்ன செய்யறீங்களாம்” இது அம்ருதா.
நான் என்ன உங்களை மாதிரி பூசிக்கிட்டேனா? மருந்து
தடவிக்கறேன்.

”இதுவும் மருந்துதான் நீங்க வாயில தடவறீங்க
நாங்க கை,கால்ல தடவிக்கறோம்!!”

“அதானே!! நீங்க எங்களை மாதிரி வெயில்ல
போறதில்ல, ஏசிலதான் இருக்கீங்க. அதனால
உங்களுக்குத் தேவையில்ல. நாங்க அப்படியா??”
இது அண்ணன்.

என்ன பேசுவதென்று தெரியவில்லை!!!

சரி சரி தூங்குங்க!!! குட் நைட் என்று சொல்வதைத்
தவிர...

எப்போ கார்னர் செஞ்சு அட்டக்கலாம்னு
காத்திருப்பாங்க போல இருக்கே..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மல்லிகை என் மன்னன் மயங்கும்....

அருமையான பாடலின் இந்தத் துவக்கத்தை
கேட்டதும் நீங்களும் அந்தப் பாடலை முனுமுனுக்கிறீர்கள் தானே!!!

அருமையான பாடல். குயில் குரலாய் ஒலிப்பது
வாணிஜெயராம் அவர்களின் குரல்.

ஹை பிட்சில் பாடும் வரம் பெற்றவர்.


இவரின் சில பாடல்கள் இதோ உங்களுக்கா, எனக்காக..


அந்தமானைப் பாருங்கள் அழகு.
இளம்பாவை என்னோடு உறவு...

Get Your Own Hindi Songs Player at Music Plugin

யாரது சொல்லமல் நெஞ்சள்ளிப்போவது....





பாரதிக் கண்ணம்மா நீயே பொன்னம்மா...
பாலுவுடன் ஜோடியாய்


Get Your Own Hindi Songs Player at Music Plugin


இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...

Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஏபீசி சீ வாசி,,

Get Your Own Hindi Songs Player at Music Plugin

நானே நானா?? யாரோ தானா??


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேகமே... மேகமே... (மறக்க முடியாத பாடல்)

Get Your Own Hindi Songs Player at Music Plugin


மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லோவோ....

Get Your Own Hindi Songs Player at Music Plugin


ராகமாலிகையின் கலக்கல் பாடலான் ஏழு சுவரங்களுக்குள்
எத்தனை கேள்வி பாட்டு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது கானம்..

Get Your Own Hindi Songs Player at Music Plugin
வாணிஜெயராம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு:

Monday, July 20, 2009

நட்புக்கு மரியாதை..

நட்பு இந்த சொல் எனக்குள் உண்டாக்கும் அதிர்வு
சொல்லில் அடங்காது.

இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு என் பதிவு

நண்பர் ரங்கா எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறார். நன்றி ரங்கா. மிக்க மகிழ்ச்சியாக
இருக்கிறது.




வலையுலகில் எனக்கு நிறைய்ய உறவுகள்.
மிகச் சிறந்த நட்பும் உண்டு. இதில் எனக்கு
மிக்கச் சந்தோஷம்.

ரங்கா இந்த விருதை ஏற்படுத்த காரணமாக
கூறியிருக்கும் காரணங்கள் மிக்க அருமை:

முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.

இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.

மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.

இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

1.முதல் சந்திப்பிலிருந்தே தோழி என்றழைத்து
பேசியவர் ஆதி(தாமிரான்னு சொன்னா புரியும்)இவருக்கு என் நட்பு விருது.


2. கார்பரேட் கம்பர் நர்சிம். சொல்லுங்க ஃப்ரெண்ட்
என்றழைத்து பேசும் தொனியிலேயே நட்பு உணரப்படும்.
இந்த நண்பருக்கும் என் விருது.

3. எனது 50ஆவது பதிவிற்கு வந்த நண்பர் ஹரி.
இன்றளவும் சாட்டிங் உண்டு. யூ டுய்பில் தான் ரசித்தது,
என நிறைய்ய பகிர்தல்கள். அவரது வலைப்பூ.


4. கயல்விழி முத்துலெட்சுமி இவரைப்பற்றி தெரியாதவங்க
உண்டா?? அவங்களுக்கு தோழியின் அன்புப் பரிசு இந்த விருது.

5. ஹைதையில் இருந்து கொண்டு முத்துச்சரத்துக்கு
விருது கொடுக்காவிடில் எப்படி?? முத்துச்சரம் தொடுக்கும்
ராமலக்‌ஷ்மியும் என் தோழி என்று சொல்லிக்கொள்வதில்
பெருமை.

6. ஊஞ்சல்னு சொன்னதும் இவங்க பெயர்தான் ஞாபகத்துக்கு
வரும். யெஸ் தாரணிப்பிரியாவுக்கு இந்த விருது.

7. அன்புடன் அருணா உங்களுக்கும் இந்த விருது.
பொறுப்பான ஆசிரியை வேலைக்கிடையே அழகான
கவிதைகள் சிம்பிளி சூப்பர்ப்.

8.மனதில் உறுதி வேண்டும் எஸ்,பி.பீ போல
மருத்துவருக்குள் இம்புட்டு திறமையா என நான்
வியக்கும் நண்பர் டாக்டர் தேவா. பின்ன என்ன?
இன்றைய அவரது பதிவில் இருக்கும் பென்சில்
ஸ்கெட்சிங் அவரே போட்டதுங்க.


9.என் வானம் அமுதா நல்ல தோழின்னு
சொல்வதில் சந்தோஷம். பாத்தா ஹாய் (சாட்டிங்கில்)
சொல்லாம இருக்க மாட்டாங்க.


10.சமீபத்தில் அறிமுகமாகிய நண்பர்.
வண்ணத்துப்பூச்சியாருக்கு என் விருது.


இவ்வளவுதானா என் நட்பு வட்டம் என்று நினைக்காதீங்க.
மிகப் பெரிய வட்டம்தான். இந்த விருது பகிரப்படும்பொழுது
வழங்க ஆள் வேணுமே!! அதான் பத்து பேரோடு
நிறுத்திக்கொண்டேன்.


இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
அப்படின்னு ரங்கா சொல்லியிருக்காரு.

நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பருக்கு
விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்.

ஹா..ஹா...ஹா... தாங்க முடியலையே...

இந்தச் செய்தியை படிச்சதிலேர்ந்து சிரிப்பு தாங்க முடியலை!!!!

குப்பை பொறுக்குவது எப்படின்னு
தெரிஞ்சுக்க சிங்கப்பூர் போனேன், அப்படி இப்படின்னு
நம்ம அமைச்சர்கள் எல்லாம் அடிக்கடி வெளிநாட்டுக்கு
போறாங்க... இதுக்கு எப்படி ஆப்பு வைக்கறது
அப்படின்னு ரூம் போட்டு இந்திய அரசாங்கம்
யோசிச்சிருக்கு போல...


அதான் இப்படி ஒரு சட்டம் போட்டிருக்காங்க.
அதாகப்பட்டது வெளிநாட்டுக்குச் செல்லும்
அமைச்சர்கள், மற்ற அரசு அதிகாரிகள் எல்லோரும்
நமது தேசிய விமானத்தைதான் உபயோகிக்கணுமாம்.
தனியார் விமானங்களில் பறக்கக்கூடாதாம்.

உள்நாட்டுக்குள் இந்திய விமானச்சேவைதான்.
வெளிநாட்டில் அவர்கள் செல்லும் இடத்தில்
ஏர் இந்தியா பறக்காவிடில் எந்த இடம் வரை
ஏர் இந்திய விமானம் செல்கிறதோ அதுவரை
சென்று,, அதன் பிறகு ஏர் இந்தியாவுடன்
கூட்டாக இருக்கும் விமானச்சேவையை
பெறவேண்டுமாம்.. ஹி ஹி ஹி.

என்ன கொடுமை சரவணன் இது??!!

நஷ்டத்தில் இயங்கிக்கு கொண்டிருக்கிறது
இந்தியன் ஏர்லைன்ஸ். அதை நாமே
தூக்கிவிடாட்டி எப்பூடி???ன்னு யோசிச்சிருக்காங்க.
அதன் விளைவுதான் இது.


ஒரே கல்லுல இரண்டு மாங்காங்கறா மாதிரி
யாரும் பயணம் செஞ்சா!!! இந்தியன் ஏர்லைன்ஸுக்கு
வரும்படி, அதுல பயணம் செய்ய பிடிக்காம
அதிகாரிகளும், அமைச்சர்களும் “ஆணியே...
வேணாம்னு””!! முடிவு செஞ்சு எந்த
வெளிநாட்டுக்கும் போகவேண்டாமனு முடிவு
செஞ்சா நம்ம அரசாங்கத்துக்கு செலவு மிச்சம்.

என்ன ஒரு மூளை!!!

இந்திய விமானச்சேவையை அனுபவிச்சவங்க
பல பேருக்கு அவர்களின் சேவைத்தரம் தெரிஞ்சிருக்கும்.
நாம காசு கொடுத்து டிக்கட் வாங்கி போறோம்.
என்ன நம்ம கூட காசு வாங்காம கரப்பான் பூச்சி,
எலியார் எல்லாம் வருவாங்க. அம்புட்டுதான்.

விமாணப்பணி(கிழவி)பெண்கள் ஆடுற ஆட்டம்.
அப்பப்பா.. தாங்க முடியாது. என்னோட அனுபவம்
இங்க


விமானச் சேவையின் தரத்தை கூட்டினா ஏன்
தனியார் விமானத்தை தேடி போகப்போறாங்க???

அத்த விட்டுப்புட்டு இந்திய விமானச்சேவையைத்தான்
உபயோகிக்கணும்... எலிகளோடத்தான் பயணிக்கணும்னு
சொல்றதெல்லாம் ... சுத்த

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..........

Friday, July 17, 2009

தேவை ஒரு மாற்றம்...

சர்வர் சுந்தரம் படத்தில் சினிமா நடிகனாகிய
பிறகு நாகேஷ் பேட்டி அளிப்பது போல் ஒரு
காட்சி வரும்.

பிரச்சனை என்பதை நான் ஒரு கல்லா
பாக்கறேன்!! கல்லை கண்ணுக்கிட்ட கொண்டு
போனா கல்லு பெருசா தெரியும், கொஞ்சம்
விலக்கி முன்னாடி கொண்டு வந்தா கொஞ்சம்
சிறுசா தெரியும்!! அதையே காலடியில
போட்டுகிட்டா காணாமப்போயிடும்!!
என்பார். அருமையான வசனம். நம்
மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று.


நமக்கு நல்லதாக நடக்கப்போவதைக்கூட
சில சமயம் நாம் தவறாக நினைத்து வருந்துவோம்.
இலங்கைக்கு மாற்றலாகிய புதிது. விலை வாசி,
புது சூழல், யுத்த பயம்.. நட்பென்று அப்போது
யாருமே கிடையாது. எப்படி இங்கே வாழ்வது???
பேசாமல் திரும்ப இந்தியாவுக்கே போய்விடுவோமா???
என யோசித்து யோசித்து குழம்பிக்கொண்டிருந்த
நேரம்.

என் அனில் அண்ணாவைப்பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.

எப்போதும் நல்ல ஆலோசனை வழங்குவதில்
அண்ணா எக்ஸ்பர்ட். நலம்விரும்பியாகத்தான்
இருந்திருக்கிறார், இருக்கிறார்.

“ஹே! கமான். இவ்வளவு அழகான ஊர்.
பச்சை பசேலென்று ரம்யமாக இருக்கிறது.
3 மணி நேரப்பயணத்தில் குளிர் ப்ரதேசத்தை
அடையலாம். அங்கிருந்து 3 மணிநேரம்
மிக மிக ரம்யமான குளிர் ப்ரதேசம்..
பீச் ரிசார்ட்ஸ், சுத்தமான காற்று,
தூய்மையான சாலைகள், அருமையான
தண்ணீர் என எவ்வளவு +கள் இருக்கிறது
பார்!!இது மாதிரி உனக்கு உலகில்
வேறெங்கும் கிடைக்காது.
இந்த இடம் உங்களுக்கும் பிடிக்கும்.
ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும்.”
என்ற அவரது வார்த்தைகள் கேட்டு
வாழ்ந்துதான் பார்ப்போமே என்று இருக்கத்
துவங்கினோம். 7 வருடங்கள் அண்ணா
சொன்னது போல் அருமையாக கழிந்தது.
விட்டுவிட்டு வர மனசில்லாமல் போனது.

தேவை ஒரு மாற்றம் என்று சொன்னது
நம் அணுகுமுறைக்கு, ஒரு நிகழ்வை
நாம் பார்க்கும் விதத்திற்கு மாற்றம் தேவை.

ஆங்கிலத்தில் "U PUT YOUR SELF IN OTHERS
SHOES, THEN U WILL KNOW THE PAIN"
என்பது வழக்கில் இருக்கும் வாக்கியம்.
அடுத்தவர் இடத்தில் நம்மை இறுத்திப்
பார்ப்பதால் பிரச்சனையின் மறுபக்கமும்
தெரிந்து கொள்ள முடியும்.

நம்ம சின்னப்பாண்டி அதாங்க ஆயில்யன் பாஸ்
ஒரு முறை குருஞ்செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்.
அதை பத்திரமாக எனது மொபைலில் வைத்திருக்கிறேன்.
மிக அருமையான செய்தி அது:

WHILE RAINING EVERY BIRDS PICKS SHELTER
IMMEDIATELY, XCEPT D EAGLE!!!
IT GOES OVER D CLOUD, 2AVOID D RAIN.
PROBLEM IS D SAME BUT ATTITUDE
MAKES IT D KING!!!!!


மழை பெய்யும்பொழுது கழுகைத் தவிர
பறவைகள் அனைத்தும்
ஒதுங்க இடம் தேடி ஓடுகின்றன!!!

கழுகு மட்டும் மேகத்துகுள் சென்று
மழையில் நனையாமல் இருக்கிறது.

பிரச்சனை என்னவோ ஒன்றுதான்
சிந்தனை முறை கழுகை பறவைகளின்
அரசனாக்குகிறது.

அருமையான வார்த்தைகள் இல்ல!!

நம் சிந்தனை முறையில் மாற்றம்
வந்தால் நம் வாழ்விலும் நல்ல மாற்றம் + முன்னேற்றம்
வரும்.

Wednesday, July 15, 2009

ஆவ்வ்வ்வ்......

கதவைத் திற காற்று வரும்னு சொல்வாங்க.

இங்க கதவைத் திறந்தா ஜில் ஜில்ன்னு காற்று...


ஊருக்கே ஏசி போட்டாப்ல செம கூலா இருக்கு.

வருண தேவன் அப்பப்போ தலையைக்காட்டிக்கிட்டு இருக்காரு.
இன்னும் அவரோட ஆட்டம் ஆரம்பம் ஆகலை.

இந்த கூல் கிளைமேட் எனக்கு ரெம்ப பிடிக்கும்.

சும்மா ஜில் ஜில்னு... அப்படியே இழுத்து
போத்திக்கினு தூங்கலமான்னு இருக்கு.


வேலைகள் இருக்கு, பதிவு போடணும், பின்னூட்டம்
போடணும், கமெண்ட் மாடரேஷன் செஞ்சு பின்னூட்டத்துக்கு
பதில் போடணும், மத்த வீட்டுக்கு தலையைக்காட்டிட்டு
வந்ததால் அங்கே போடப்பட்ட பின்னூட்டங்கல் மெயிலில்
வரும் அதை படிச்சு ரசிக்கணூம்... இம்புட்டு வேலை இருக்கு...

அதனால தூங்காம இருக்கலாம்னு அடிக்கடி டீ(ப்ளாக் டீ
வித் அவுட் சுகர் அண்ட் மில்க்) குடிச்சு தூக்கத்தை
விரட்டலாம்னா குளிர்ல இன்னும் தூக்கம் வருது. :)))

தூக்கத்தை விரட்ட என்ன செய்யலாம்னு பின்னூட்டுத்துல
சொல்லிட்டு போங்க. அதுக்குள்ள நான் போயி....

Tuesday, July 14, 2009

மும்பை மழையும் என் கொசுவத்தியும்...

மும்பை இந்தப்பெயர் எனக்குள் எப்போதும் கொசுவத்திதரும்.

மும்பையில் மழை என்று செய்தி பார்த்ததும் என்
கொசுவத்தி சுத்தோ சுத்துன்னு சுத்துது. :))

வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று
நம்மால் சொல்ல முடியாது அது போலதான்
மும்பையில் மழைக்காலத்தை கட்டாயம்
சொல்லலாம்..

அலுவலகம் கிளம்பும் முன் என்றால் சரி என்று
வீட்டிலேயே இருந்து விடலாம். ஆனால் ஆபிஸ்
போய்விட்டால் மழை கணமாகினால் டிராக் நிரம்பிவிடு்ம்.
ரயில்போக்குவரத்து இல்லாவிட்டால் வீட்டுக்கு
செல்லவே முடியாது. அதுவும் மாமா வீடு
வசாய். புறநகர் பகுதியில் இருக்கிறது.




போரிவிலி தாண்டி எப்படியும் டிராக்குகள் நிரம்பி
விடும், இல்லாவிட்டால் ரயில் தடம்புரள வாய்ப்பு.
சர்ச்கேட் - தாதர் வரை கூட தண்ணீர் அதிகமாகும்.

மாமாக்களின் அலுவலகமோ அந்தேரிக்கு அருகில்தான்.
அந்தேரியில் தாத்தா(அம்மாவின் மாமா) வீடு இருக்கிறது
அங்கே போய்விடலாம். ஆனால் நான் சர்ச்கேட்டிலிருந்து
அந்தேரி வருவது அப்பாடி......

“மழை அதிகமாச்சு, டிராக் ரொம்பி போச்சு பஸ்
பிடிச்சு வந்திடுன்னு”மாமா மெசெஜ் கொடுத்திருவாங்க.
சர்ச்கேட்- அந்தேரி ரயிலில் 30 நிமிடம் தான்.
பஸ்ஸில் அதுவும் மழை நேர டிராபிக்கில்
4 மணிநேரம் ஆகும்.

கூட இருக்கும் தோழியுடன் மழையில் நடுங்கிக்கொண்டே
பஸ்ஸ்டாண்ட் வரை வந்து பொங்கி வழியும் பஸ்ஸில்
எப்படியோ ஏறி(ஓடும் ரயிலில் ஏறுவது கூட கஷ்டமில்லப்பா..
நிக்கற பஸ்ஸுல ஏறுறதுதான் கம்ப சூத்திரம் :)) )
பசி தாகத்தோட அந்தேரி வந்து சேர்ந்தால் மாமா
சுடச்சுட சாப்பாடு வாங்கி வைத்திருப்பார்.

அடுத்த நாளும் மழை பெஞ்சு ஆபிஸ் லீவு
விடணும்னு பிரார்த்தனையோட தூங்குவேன்.
நம்ம நேரம் இப்படியாகும்..



சில சமயம் முதல் நாள் மழையில் நனைஞ்ச
களப்புக்காக ஆபிஸூக்கு மட்டம் போடுவேன்.
“அந்தேரிதானே போன, அப்புறம் ஏன் லீவுன்னு”
அடுத்த நாள் கேட்கும் டேமேஜரிடம் “இல்லையே
வசாய்தான் போனேன்” என்று சொ்ன்னால்
“மாமாவுக்கு போன் வீட்டு விசாரிக்கறேன்”
(இதுக்கு ஸ்கூலே பராவாயில்லை:( ) அப்ப்டின்னு
சொல்வார்.

இதே போன்றதொரு மழை நாளில் பயந்தர்-மிராரோடு
இடையில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு
வசாய்க்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அந்தேரி வரை டிரையினில் வந்து நான், மாமாக்கள்
எல்லாம் ஷ்டேஷனிலேயே இருந்தோம்.(அந்தேரி
தாத்தா ஊருக்கு போயிருந்தார்) பசி, மழை.
அந்த நேரத்தில் மாமா சாப்பிட அழைத்துச் சென்றிருந்த
ஹோட்டலில் சாப்பிட்டதுதான் என் முதல்
கடாய் பனீர் டேஸ்ட். செம சூப்பர்.

இரவு 11.30 மணி வரை மூவரும் ஷ்டேஷனில்
உட்கார்ந்திருந்து வசாய் செல்லும் டிரையின்
அறிவிக்கப்பட்டதும் வீடு சேர்ந்த பொழுது மணி
1.

மழை கொட்டே கொட்டென்று கொட்டியது.
டிராக் ரொம்பி லீவு. இரண்டு நாளைக்கு
வீட்டில் கார்டு, அரட்டை, அந்தாக்‌ஷரின்னு
ஒரே அட்டகாசம்தான்.

இப்பயும் மும்பையில் மழை. மழைதரும்
அசொளகர்யங்களையும் மீறி மும்பை மழை
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆஹா!! என்ன ருசி!!!

மழைக்காலத்தில் பிள்ளைகளுக்கு பசி கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கும். சோறு, தோசைன்னா
முகம் சுளிப்பாங்க. ஏதாச்சும் சட்டுன்னு
செஞ்சு கொடுக்கணும்னா என்ன செய்வதுன்னு
குழம்புவோம்.

எனக்கு தோணிய இரண்டு ஐடியாக்களை சொல்றேன்.
உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு பாருங்க.

இட்லி மாவில், வெங்காயம், கறிவேப்பிலை,
சீரகம், மிளகு, கொத்தமல்லி இலை எல்லாம்
போட்டு கலந்து குழிப்பணியாரச்சட்டியில்
குழிப்பணியாரமா செஞ்சு எடுத்துக்கோங்க.

தக்காளி,வெங்காயச் சட்னி அரைச்சு தனியா
வெச்சுக்கோங்க.




தயாரான குழிப்பணியாரத்தை தட்டில்
வெச்சு அதில் வெங்காயச் சட்னி 1 ஸ்புன்
போட்டு மேலே காராபூந்தி, சேவ் ஆகியவை
தூவி கொடுத்தா சூப்பரா இருக்கும்.
விரும்பறவங்களுக்கு தயிர் கொஞ்சம் சேத்தா
தஹி பூரி போல சுவையோ சுவை.

*****************************************

காலேல செஞ்ச இட்லியை இட்லி உப்புமா
இல்லாட்டி இட்லி ஃப்ரை இது மாதிரி செய்வோம்.

இட்லியையும் மேலே சொன்ன மாதிரி
அலங்கரிச்சு கொடுத்தா பாராட்டு மழைதான்.

எங்க வீட்டு குட்டீஸ் ஆஷிஷ் அம்ருதா
சுவைல மயங்கி அன்னைக்கு முழுக்க எனக்கு
ஒரே பாராட்டு மழைதான் போங்க.

Friday, July 10, 2009

நட்பின் அறிமுகம்

பள்ளத்தூர் ஆச்சி காலேஜ் இது நான் படித்த கல்லூரி.

கல்லூரி வாழ்க்கையை முழுதுமாக அனுபவிக்காமல்
அல்பாயுசில் என் கல்லூரி படிப்பு தடை பட்டுவிட்டது.

ஆனால் அந்த ஒரு வருடமே எனக்கு 3 வருடத்திற்கான
ஆனந்தத்தை தந்துவிட்டது.


ஆங்கில இலக்கிய பிரிவுக்காரர்கள் நாங்கள் அடித்த லூட்ட்
கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுக்கு முந்தைய பேட்ஜ்ல்
(செகண்ட் இயரி)வெறும் 12 பேர்தான். அதற்கு முந்தைய
பேட்ஜ்ல் 3 பேர் இப்படி இருந்த இடத்தில் நாங்கள்
30 பேர். எங்கள் ஹெச் ஓடிக்கே சந்தேகம்,
“என்ன இம்புட்டு கூட்டம்னு” யோசிச்சிருப்பார்.


தயங்கி தயங்கி ஒவ்வொருவராக நட்பானோம்.
காலேஜில் நானும் விசாலாட்சியும் இரட்டையர்களாக
அறியப்பட்டோம். இருவரும் சேர்ந்துதான் சுத்துவோம்.

சாலா, ஸ்ரீதேவி, மீனாள், சாந்தி, விசாலாட்சி,வஹீதா
என பெரிய பட்டாளம்.

அந்த வருடத்தோடு நான் படிப்பை நிறுத்த போகிறேன்
என்று கேள்விப்பட்டதும் விசாலாட்சி அழுதது,
அப்பாவுடன் பேசிப்பார்த்தது எல்லாம் மீறி
என் படிப்பு நிறுத்தப்பட்டது. காரணம் இங்கே:


ஆட்டோ கிராப்கள், போட்டோக்கள் எல்லாம் முடிந்தது.
முகவரி பரிமாற்றங்கள் எல்லாம் முடிந்து
கண்ணீரோடு வந்தாச்சு.

சாலா, ஸ்ரீதேவி இரண்டுமுறை கடிதம் எழுதினார்கள்.
விசாலாட்சி தொடர்பே இல்லாமல் போயிவிட்டது.


ஆனால் இவளிடமிருந்து மட்டும் பதிலுக்கு பதில்
என உடனடியாக கடிதம் வரும்!!!!

மாதத்திற்கு 5 கூட இருக்கும்.

"நீ பக்கத்துல இல்லாத குறையே தெரியாம
எதிர்ல பேசுற மாதிரி இருக்கு உன் லெட்டர்”
அப்படின்னு அடிக்கடி பாராட்டுவாள்.

“வெந்து வெர்மிசிலியாகி, நொந்து நூடில்ஸாகின்னு”
அப்பயே காமெடி தெறிக்க கடிதம் எழுதுவாள்.

புதுகையில் டீச்சர் வேலையை விட்டு மும்பையில்
வேலை கிடைத்துப்போன பிறகும் விடவில்லை.
கடிதம் கண்டிப்பாய் வரும். மாதத்திற்கு 3 கடிதம்.

என் கடிதங்களை மாமாவிடம் படிக்கக் கொடுத்துவிடுவேன்.
(நோ ரகசியம்) நான் வந்து பிரிக்கும் வரை கடிதம்
சாமியிடம் இருக்கும். அவ்வளவு நம்பிக்கையாக
அவர்கள் இருக்கும்போது நான் மட்டும் கடிதத்தை
மறைப்பது நல்லதல்ல என்பது என் எண்ணம்.

என் திருமணம் டிசம்பரில் அவளது திருமணம்
பிப்ரவரியில்.” நீ வரமுடியாதுன்னு தெரியும்,
முடிஞ்சா ட்ரை செய்” என்ற புரிதல்...

எங்கள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த
கடிதப்போக்குவரத்துக்கள்.....

குழந்தை பிறந்தது... என எல்லா பகிர்வுகளும்
உடனுக்குடன் கடிதம் மூலம் தெரிந்துவிடும்.

ஆரம்பத்தில் அத்துனை நெருங்கிய தோழியாக
இல்லாது போனவள் கடிதத்தினால் மிக மிக
நெருங்கிய தோழியாகிப்போனாள்.

இன்று வரை தொடர்பில் இருப்பவள் அவள்தான்.

அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி. தற்போது தமிழகத்தில் புகழ்பெற்ற
பல்கலைக்கழகமொன்றில் ஆங்கிலத்துறை
பேராசிரியை, இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்...

எனக்கு மட்டும் அன்பான ஸ்ப்ராட் குண்டு.

:))))))))))))))))))))))

அவள் பெயர் s.p.shanthi.

குண்டம்மா, இது என்னுடைய 450ஆவது பதிவு.
அது உன்னைப்பற்றி எழுதியது என்பதில் சந்தோஷம்.
ஆன்லைனில் எழுதியாவது நம் 18 வருட
நட்பை கொண்டானும்ஞ்ச!!!
” என்ற உன் கோரிக்கை
இதோ என் 450ஆவது பதிவாக..

தொடரும்....

Thursday, July 09, 2009

ஆச்சரியம் ஆனால் உண்மை...

இதைப்பற்றி இத்தனை நாளாய் பெரிதாகக் தோன்றவில்லை!!!

ஆனால் ஓவ்வொரு வருடமும் இதைப்பற்றி நினைவு வரும்.
பெருமையாகவும் இருக்கும்.

இவ்வளவு பெருமையாக நான் நினைப்பது என் நட்பை பற்றி.

எனக்கு ஆரம்பமுதலே உதட்டளவில் நட்புக்கொள்ளப்பிடிக்காது.
தெரியாது என்றாலும் தவறில்லை.

இதுல என்ன குறைஞ்சிடப் போறோம் என் நினைப்பேன்.

என்னுடைய பெரிய குறையும் இதுதான். என்னைப்போல்
அனைவரும் ”நெஞ்சத்தக நக நட்பு” கொள்ள மாற்றார்கள்
என்பது காலம் எனக்கு கற்றுக்கொடுத்தாலும் நான்
என்னை மாற்றிக்கொள்வதாக இல்லை.

நட்பிற்கு இலக்கணமாக நல்ல நட்பாக இருந்துவிட்டு
போவேமே என்ற எண்ணம் தான் காரணம்.

நம் அலைவரிசை நட்பு மட்டுமல்ல, நம்மைப்போல்
நட்பு பாராட்டும் ஒரு நண்பரோ/தோழியோ கிடைப்பதும்
ஆண்டவனின் ஆசிர்வாதம் தான்.


நான் அந்த விதத்திலும் கொடுத்து வைத்தவள். ஆண்டவனுக்கு
நன்றி.

ஆண்களின் நட்போடு பார்க்கும்பொழுது பெண்ணிற்கு தனது
பள்ளீ/கல்லூரி அல்லது ஊரில் இருக்கும் நட்பு தொடர
வாய்ப்பு குறைவுதான்.

பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தொடர்பு விட்டு போகும்.
திருமணத்திற்கு பிறகும் தன் மனைவியின் நண்பனுடன்
தொடர்பு(communication) என்பதை ஏற்றுக்கொள்ளும்
கணவர்கள் வெகு சிலரே.


இப்படி இருக்க நான் ஒவ்வொரு வருடமும் ஜூலை
மாதம் பிறந்தால் சந்தோஷமாக, ஆண்டவனுக்கு
நன்றி சொல்லும் வகையில் எனக்கும் ஒரு நட்பு
இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையோ
பெருமைதான்!!!

என் நட்பின் வயது என்ன தெரியுமா?
அது தெரிந்தால் நீங்கள் பொறாமை கொள்ளக்கூடும்!!!

என் நட்புக்கு 18ஆவது வயது ஆரம்பித்திருக்கிறது.
இன்றும் தொடர்பில் இருக்கிறோம்..

யார்?? யார்?? யார்??

கேள்விக்கு விடை அடுத்த பதிவில்

(சஸ்பென்ஸ் வெச்சு பதிவு போட்டு
எம்புட்டு நாளாச்சு? :)))

Wednesday, July 08, 2009

சுவாராபிஷேகம்

ஸ்வரங்களால் செய்யப்படும் அபிஷேகம்
சுவாரபிஷேகம்.

2004 ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் அவர்களின்
இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஸ்வராபிஷேகம்.




இதில் விஸ்வநாத் அவர்கள் நடித்திருக்கிறார்.
ஜோடி ஊர்வசி.

ஸ்ரீரங்கம் சகோதரர்கள் ஸ்ரீநிவாஸாச்சாரி(கே.விஸ்வநாத் & ரங்கா
ஸ்ரீகாந்த்)இருவரும் சங்கீத கலைஞர்கள்.

ஸ்ரீநிவாஸாச்சாரிக்கு குழந்தைகள் இல்லை. இளையவன்
ரங்காவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.
மனைவியை இழந்தவர். பெரியம்மா,பெரியப்பாவிடம்
பிள்ளைகள் வளர்கிறார்கள். கூட்டுக்குடும்பமாக ஒன்றாக
வாழ்கிறார்கள்.

அண்ணன் தம்பி இருவரும் இணைந்து
தெலுங்கு சினிமாவில் கிளாசிக்கல் மற்றும் சாஸ்திரிய
முறையில் மட்டுமே திரைப்படங்களுக்கு இசை அமைக்கும்
மிகப்பெரிய இசையமைப்பாளர்கள்.

பேரும் புகழும் பெறுவதற்கு முன்னர் அதற்குகாரணமாக
இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல்
தாங்கள் அமெரிக்கா சென்ற அந்த நந்நாள் அன்று அந்த
செருப்புத் தொழிலாளி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு
மரியாதை செய்வதாக காட்டியிருப்பது நாம் பழைய
வாழ்வை மறக்க கூடாது என்றும், நன்றி மறப்பது
நன்றன்னு என்றும் அழகாக சொல்லியிருப்பது போலிருக்கும்.

ராமாவினோதி வல்லபா பாடல் அருமை.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சாரி ஹோமியோபதி மருத்துவரும்
கூட. கட்டணமாக பாடலை பாடச்சொல்லும் அளவுக்கு
இசையின்மேல் பற்று உடையவர். ம்யூசிக் தெரபியிலும்
விற்பன்னர்.


ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு தாய்க்கு
பாடி அமைதி படுத்தி பிரசவம் பார்க்கும் இப்பாடல்
அருமையாக இருக்கும்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

டீவி ஆங்கர் சுரேகா(லயா)இளையவர் ரங்காவை விரும்ப
திருமணம் நடக்கிறது. திருமணத்து்க்கு பிறகு சுரேகா
தன் கணவனுக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் பெரியவர்
ரங்காச்சாரிக்கு மட்டுமே கிடைப்பதாகவும் தனக்கும் தன்
கணவனுக்கு அந்த வீட்டில் உரிய இடம் இல்லை என்பதாகவும்
நினைக்க ஆரம்பித்ததும் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.



ஸ்ரீரங்காச்சாரிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததும் பொறாமை பொங்க
சுரேகா பேசிய வார்த்தைகளால் குடும்பம் பிரிகிறது. விருது வாங்க
டெல்லிக்குச் சென்ற பெரியவர்கள் இருவரும் வீட்டுக்குத் திரும்பாமல்
தன் இருப்பிடம் சொல்லாமலும் வாழ்கிறார்கள்.

இளையவன் ரங்காவோ தன் அண்ணன் இல்லாமல் ஒரு பாடல்
கூட இசையமைக்க முடியாமல் போகிறார். ரசிர்கர்களும்
இவர் இசையமைப்பில் ஜீவன் இல்லாததாக கூறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் குரல் போய் பாடகூட முடியாத நிலைக்கு ஆகிறார்.
சுரேகா அண்ணன் தம்பி இருவரும் இணைந்தால்தான் இவர்களால்
இசைக்க முடியுமென்றும், இசையாய் இணைந்த குடும்பத்தைப்
பிரித்து தான் செய்தது மாப்பெரும் தவறு என உணர்கிறார்.


அண்ணன் தம்பி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது
கிளைமாக்ஸ்.



”லட்சுமணன் தன்னை அண்ணா என அழைக்க இந்த
ராமன் என்ன தவம் செய்தேனோ” எனும் பொருள் படும்
இந்தப்பாடல் தான் கிளைமாக்ஸ்.

“பெரியவன் ராமனை அண்ணா என அழைக்க தான் என்ன
தவம் செய்தேனோ” இளையவன் ரங்கா பாடும் இடமும்
அருமை. (யேசுதாஸ், எஸ்.பி.பி காம்பினேஷன் வேறு,
கேட்க வேண்டுமா!!)



Get Your Own Hindi Songs Player at Music Plugin





அழகான கூட்டுக்குடும்பம், மனதை மயக்கும் பாடல்கள்
என பல +கள் நிறைந்த இந்தப்படம் விருது வென்ற படம்.

************************************************
டிஸ்கி: இன்று மறைந்த மாமாவின் பிறந்த நாள்.
அண்ணன் தம்பி பாசமா? தந்தை மகன் பாசமா?
என பட்டிமண்டபம் வைக்கும் அளவுக்கு இந்த
அண்ணன் தம்பி பாசமும் இருந்தது.

என்றும் அன்பு மழை பொழிந்த மாமாவின்
நினைவு இந்தப்படம் பார்க்கும் பொழுது
மிக மிக அதிகமாகும்.


மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இந்தப்பதிவு மாமாவுக்கு சமர்ப்பணம்.

Tuesday, July 07, 2009

பத்துக்குள்ளே உலகம் இருக்கு பாருங்க....

எனது மாண்டிசோரி ஆசிரியை தனது பள்ளியில்
நடந்த பல சுவாரசியமான விடயங்களை எங்களுடன்
அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

அவரை வாயடைக்க வைத்த ஒரு மாணவனைப்பற்றி:

மாண்டிசோரி முறையில் 11 முதல் சொல்லிக்கொடுக்க
teen board

உபயோகித்து சொல்லிக்கொடுப்போம்.

எல்லா மாணவர்களும் ஒழுங்காக பயிற்சி செய்ய
ஒரு மாணவன் மட்டும் “சும்மா” உட்கார்ந்திருதிருக்கிறான்.

”ஏன் நீ மட்டும் இந்தப் பயிற்சி செய்யவில்லை?”
என்று கேட்டிருக்கிறார் ஆசிரியை.

இதெல்லாம் கத்துக்க வேண்டியதே இல்லை. டைம் வேஸ்ட்!!!
என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே
11,12---100 கற்றுக்கொள்வது வேஸ்டா? எப்படி?!!”
என்று கேட்க.

”உங்க வீட்டுல கால்குலேட்டர், போன் எல்லாம் இல்லையா?
அதுல எத்தனை நம்பர் இருக்கு? 0 - 9 தானே எனக்கு 10 கூட
தெரியும் அதனால் அதுக்கு மேல கத்துகிட்டு டையத்தை
வேஸ்ட் செய்ய விரும்பலை. எவ்வளவு கத்துகிட்டாலும்
0-9 தெரிஞ்சா போதும்” அப்படின்னு அசால்டா சொல்லிட்டு
போய்விட்டானாம்.!!!









10குள்ளே உலகம் இருக்குன்னு அந்த குட்டிபையன்
சொல்லிட்டான்.

அந்த பையன் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருக்கு. அவன்
சொன்னது தவறுன்னு சொல்ல முடியாது. 3 வயது
குட்டி பயலுக்கு என்ன ஒரு யோசனை பாருங்கள்!!!

Monday, July 06, 2009

அம்ருதா மொழி...

ஆஷிஷ் சென்னையில் ஆரம்பக்கல்வி கற்றதனால்
அவன் ஆங்கில உச்சரிப்புக்கள், வாசிப்புக்கள்
சாதாரண இந்திய பிரஜையின் உச்சரிப்புபோலிருக்கும்.

அம்ருதாவின் பள்ளிக்கல்வி ஆரம்பம் பிரிட்டிஷ்
முறைக் கல்வியில். இதனால் இருவரையும்
படிக்க வைக்கும்பொழுது செம கலாட்டாவாக இருக்கும்.

அம்ருதாவின் உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும்.
உச்சரிப்பை விட ஸ்பெல்லிங்கிற்கு படிக்கும்பொழுதுதான்
காமெடியே.

ஏ,பி,சி,டி என உச்சரிக்கும் எழுத்துக்கள் உண்மையில்
அப்படி உச்சரிக்கக்கூடாது. இது நான் மாண்டிசோரி
பயிற்சி எடுக்கும்போது தெரிந்தது.

Phonetic sound a-எ/அ b-ப c -க d-ட இப்படித்தான்
அம்ருதாவுக்குத் தெரியும்.

cat- கஎட என படிப்பாள் அம்ருதா.
BIG- பி இ க

இப்படிச் சொல்லிக்கொடுக்கும்பொழுது உச்சரிக்கும்
விதத்திலேயே எழுத ஈசியாக இருக்கும் என
அங்கே அப்படி சொல்லிக்கொடுப்பார்கள்.

இது ஆரம்பத்தில் எனக்கும் புதிராகத்தான் இருந்தது.
பிறகு எனக்கு வசதியாகிவிட்டது. அம்ருதாவுக்கு
ஸ்பெல்லிங் சொல்லிக்கொடுக்க ஆஷிஷ் முயலும்போதெல்லாம்
இந்த உச்சரிப்பு வித்யாசத்தில் எப்படி சொல்வது?
என புரியாமல்,”அம்மா, அம்ருதாவோட லாங்குவேஜ்ல{!!)
இதை எப்படி சொல்லணும்”? என்று கேட்பான்.

அயித்தானுக்கும் ஆரம்பத்தில் இதென்ன அம்ருதா லாங்குவேஜ்
என்று புரியாமல் இருந்தது. விவரம் சொன்னதும்
அவரும் பாட நேரத்தில் “சற்றே தள்ளியிரு்ம் பிள்ளாய்”
ஆகிவிட்டார். நாம் சாதரணமாக ஸ்பெல்லிங் படித்ததை
சற்று வித்யாசமாக சொல்வது கடினம்.

காரில் பயணிக்கும் போதெல்லாம் ஆஷிஷும், அம்ருதாவும்
world building விளையாட்டு விளையாடுவார்கள்.
ஆரம்பித்து விட்டு கடைசி எழுத்தை அம்ருதாவுக்கு
எப்படிச் சொல்வது? என என்னிடம் கேட்டு பிறகு
சொல்வான்.

அம்ருதா சொல்லும் வார்த்தைகள் புரிந்த பொழுது
சரி, புரியாவிட்டால் கடைசி எழுத்து என்னவென்று
அம்ருதா யோசித்து சொல்வதற்குள்,” அம்மாவே!
சொல்லட்டும் அம்ருதா!” என்று சொல்லிவிடுவான்.

ஒருமுறை பொனடிக்ஸ் முறை சொல்லிக்கொடுத்தேன்.
ஆனால் குழம்பிப்போவான். இ e/i எதற்கு சொல்ல
வேண்டுமென குழப்பம். v s இவற்றிற்கு
உச்சரிப்பு ஞாபகத்தில் இல்லாமல் குழம்புவான்.

அதனால் இந்த உச்சரிப்புக்கு அம்ருதா மொழி
என்றே பெயராகிவிட்டது வீட்டில். :))


இருவரும் படிப்பதென்னவோ ஆங்கிலம் தான்.
ஆனால் அம்ருதா படிப்பது வேற்றுமொழி என ஆஷிஷும்,
அண்ணா படிப்பது வேற்றுமொழி என அம்ருதாவும்
நினைத்துக்கொள்ளும் அளவுக்கு வீட்டில்
கலாட்டா நடக்கும்.


அம்ருதா கற்ற படி பொனடிக்ஸ் உச்சரிப்புக்கள்:

a- அ/எ, b-ப, c-க, d-ட, e-எ f-ஃப g-க h-ஹ
i -இj-ஜ k-க l-ல m-ம n-ன o-ஒ p-ப q-க்வ
r-ர s-ச t-ட u-உ v-வ

w-வ்வ x - க்ஸ் y-ய z-ஜி


curtain- இதை எப்படி உச்சரிப்போம்.
கர்டைன். ஆனால் ஸ்பெல்லிங் படிக்கும்பொழுது
சி யு ஆர் டி எ ஐ ன் இப்படித்தான் படிப்போம்.

பொனடிக்ஸ் படி எழுதுவதும் படிப்பதும் ஒரே மாதிரிதான்.

curtain- கர் + டெயின்

இது கொஞ்சம் பெரிய சப்ஜகெட்.


இவ்வகை உச்சர்ப்பு ஆரம்பக்கல்வியில் மட்டும்தான்.
1 வகுப்பு துவக்கத்திலேயே சாதரணமாக நம்மைப்போல்
படிக்க,உச்சரிகக் சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.

குழந்தையும் அதை சர்வ சாதரணமாக கற்றுக்கொண்டுவிடும்.

இப்பொழுது நினைத்தாலும் ஆஷிஷ்,அம்ருதாவின் லூட்டிக்கள்
கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கும்.

தோட்டம் பார்க்க வாங்க..

வடக்கு 4ல் (புதுகையில் எங்கள் வீடு) இருந்த பொழுது
மிகச்சிறிய இடம். அதில் கறிவேப்பிலை, வாழை,
துளசி, செம்பருத்தி ஆகிய செடிகள் இருந்தன.

எப்போதும் காய்க்கும் முருங்கைமரமும் உண்டு.

பச்சை பசேல் என்ற இயற்கை அழகு கண்ணிற்கு
குளிர்ச்சி தரும். இலங்கையை எனக்கு மிகவும்
பிடித்ததன் காரணமே அதன் பசுமை தான்.



அங்கே மிகச் சிறிய வீடுகளில் கூட கண்டிப்பாய்
செடி வைத்திருப்பார்கள். நாங்கள் இருந்த வீட்டில்
எப்போதும் பூக்கும் நந்தியாவட்டை பூ, துளசி
சில க்ரோட்டன்ஸ் வகைகள் வைத்திருந்தேன்.
வாழை, கறிவேப்பிலை எல்லாமும் உண்டு.

எங்கள் வீட்டு வேலைகாரம்மா மேரி அந்த
கறிவேப்பிலையின் வாசத்தை மிகவும் மெச்சிக்கொள்வார்.

இவைகளை விட்டு வர மனசில்லாமல் வந்தேன்.

இங்கு வந்த பிறகு இதற்கு முன் இருந்த வீட்டில்
வைத்திருந்த செடிகள் இங்கே வந்த பிறகு அதிக
வெயிலுக்கு காய்ந்து போய்விட்டன.

புதிதாக தோட்டம் போட முடிவு செய்தேன்.
அந்த நேரத்தில்தான் அமுதாவின் இந்தப் பதிவு.
ஆஹா!! இதையும் ஒரு தொடர் பதிவாக்கலாமே
என்று போட்டோ எடுத்து உங்களுக்காக இதோ...


பால்கனியை விட காலியாக இருக்கும் காரிடாரில்
வைத்தால் கதவு திறந்ததும் கண்ணிர்க்கு குளிர்ச்சியாக
இருக்குமென என் தோட்டம் இங்கே..

வெண்டக்காயும், கத்திரிக்காயும் விதை இன்னும்
முளைக்கவில்லை.



வரவேற்க வாசற்படியில் ரெடியாய் ஒரு செடி




வரவேற்பரையிலும் பசுமைக்காக ஒரு சின்ன ஏற்பாடு:


பூத்துக்குலுங்கும் செடிகள்:






ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)
அப்படின்னு கயல்விழி கேட்டிருந்தாங்க.

கயல்விழி, அமுதா எங்கிருந்தாலும் வாங்க.
மற்ற நண்பர்களும் எங்க வீட்டு தோட்டத்தை பார்க்க
வந்திருக்காங்க.

தோட்டம் வெச்சிருக்கறவங்க எல்லோரையும் தொடர் பதிவுக்கு
அழைக்கிறேன். உங்க தோட்டத்தையும் பார்க்க ஆவல்..

Friday, July 03, 2009

பார்லே-- சில ஞாபகங்கள்

பார்லே பிஸ்கட் வாங்கி வந்து பிள்ளைகளுக்கு
கொடுத்த பொழுது என் நியாபகங்கள் பின்னோக்கிச் சென்றது.

பார்லே... இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மும்பையில் இருந்த பொழுது வசாய்- சர்ச்கேட்டுக்கான
என் பயணங்களில் விலே பார்லேவைத் தாண்டித்தான்
இருக்கும்.

அந்தேரி ஸ்டேஷன் தாண்டியதுமே ஆவலாக காத்திருப்பேன்.
அது விலே பார்லே ஷ்டேஷன் தாண்டியதும் வரும் பார்லே
கம்பெனியில் இன்று என்ன வாசம் வரும் என்று பார்க்கத்தான்.
:)))

ஏலக்காய் மணக்கும் ஒரு நாள், ஒரு நாள் குளுகோஸ்
மணம் காற்றில் வரும்.

ரயில்வே ட்ராக்குக்கு அருகிலேயே ஃபேக்டரியின்
சுவர்(பின்புறச்சுவராய்த்தான் இருக்கும்) இருந்ததால்
சுகந்த மான மணம்.

சனிக்கிழமை வேலை முடித்து வீடு போகும்போது
ஆகா நாளை “வாசம்” பிடிக்க முடியாதே!!
என நினைத்துக்கொள்வேன்.

பார்லேயின் இந்த விளம்பரம் நினைவிருக்கிறதா??




குளுகோஸ் பிஸ்கட்கள் என்றால் அது
பார்லேவினுடையதுதான்.




மாங்கோ பைட் வந்த போது அதை யார் போய்
வாங்கி வருவது என எனக்கும் தம்பிக்கும் சண்டையே
நடந்தது..


இவையெல்லாம் பார்லேயின் தயாரிப்புக்களில் சில.




சில விடயங்கள் சுகமான நினைவுகளாகும்.
பார்லே எனக்கு சுகந்தமான நினைவுகளாகி
எப்போதும் இருக்கிறது.

தங்கத்தில் முகமெடுத்து....

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து,
மங்கையென்று வந்திருக்கும்- நிலவோ
நீ மாலை நேர பொன்மஞ்சள் அழகோ...

மீனவ நண்பன்படத்தில் கானகந்தர்வனின்
குரலில் அருமையான பாடல்.

நம் முகத்தை நிஜமாகவே தங்கம்போல் ஜொலிக்க வைக்கலாம்.
எப்படி என்றால் ஃபேசியல் செய்து கொள்வதன் மூலம்
முக அழகு வெளிப்படும்.



முகம் சொறசொறப்பாக இருப்பதாக உணர்கிறீர்களா?
முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் ஏற்படுகிறதா?
அப்படியானால் ஃபேசியல் மிக அவசியம்.

ப்ளாக் ஹெட்ஸ் மூக்கின் மேற்புறத்தில் அசிங்கமாக
இருக்கும். அதை நீக்கவும் ஃபேசியல் உதவுகிறது.
முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய், காய்ந்த சரும
திசுக்கள் இவை ப்ளாக் ஹெட்ஸ் வர காரணம்.

ஃபேசியல் பார்லருக்கு சென்று செய்து கொண்டால்,
சில சமயம் காசுகேற்ற பணியாரம் கிடைக்காத
மாதிரி இருக்கும். நாமே வீட்டில் ஃபேசியல் செய்து
கொள்ளலம். 15 நாட்களுக்கொரு முறை செய்து
கொண்டால் கூட முகம் ஜொலிக்கும்.

(இது ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்தும்)


வீட்டிலேயே ஃபேசியல் செய்து கொள்வது எப்படி??
வாங்க பார்க்கலாம்.

ஃபேசியலுக்குத் தேவையான சாமான்கள் ஒவ்வொரு
ஸ்டப்பிலும் கொடுத்திருக்கிறேன். நல்ல தரமான
பொருட்களாக பார்த்து வாங்கிக்கொள்ளவும்.

முதல் ஸ்டெப்: கிளன்சிங்.



தரமான கிளன்சிங் மில்கை பஞ்சில் எடுத்துக்கொண்டு
முகம,கழுத்து, பின்னங்கழுத்து, காது, காதின் பின் புறம்
ஆகிய இடங்களில் மெல்ல தேய்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.


இரண்டாவது ஸ்டெப்: ஸ்க்ரப்பிங்.





தரமான ஃபேஸ் ஸ்க்ரப்பை கைவிரல்களில் கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து முகம் முழுதும்(நெற்றி, கண்களுக்கு கீழ், கண்ணம் என
எங்கெங்கெல்லாம் எண்ணெய் பசை அதிகமாகுமோ அங்கெல்லாம்), கழுத்து,
பின்னங்கழுத்து ஆகிய பகுதிகளில் நன்கு தேய்க்கவும்.

கொஞ்சம் ப்ரஷ்ர் அதிகம் கொடுத்து தேய்க்கவும்.



ஸ்கரப்பி்ங் செய்வதன் மிக முக்கிய நோக்கம்
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை எடுத்து
முகத்தை ஃப்ரெஷ்ஷாக காட்டுவது.

முகத்தை நீர் கொண்டு கழுவி,
மெல்ல துடைக்கவும்.

மூன்றாவது ஸ்டெப்: ஸ்டீமீங்

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்துக்கொண்டு
ஜலதோஷம் பிடித்த பொழுது முகத்துக்கு ஆவி
பிடிப்போமே அப்படி முகமுழுதும் ஆவி பிடிக்கவேண்டும்.


இது முகத்திலிருக்கும் துவாரங்கள் திறக்க உதவும்.
சாதாரண தண்ணீர் அல்லது ரோஜா இதழ்கள், மல்லிப்பூ
துளசி போன்றவை நீரில்சேர்த்தும் ஸ்டீம் செய்யலாம்.
10 முதல் 15 நிமிடங்கள் வரை ஸ்டீமிங் செய்ய வேண்டும்.
ப்ளாக் ஹெட்ஸ் போன்றவற்றை சற்றே டிஷ்யூ பேப்பர்
கொண்டு அழுத்தினால் வந்துவிடும்.(ஸ்டீமிங்கிற்கு
பிறகுதான் இது செய்யப்பட வேண்டும்)

நான்காவது ஸ்டெப்: மாஸ்க்.
நம் முகத்தின் தன்மை எது வென்று தெரிந்துக்கொண்டு
மாஸ்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உலர்ந்த சருமத்துக்காரர்கள் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை
மோரில் அல்லது பாலாடையில் கலந்து போடலாம்.

எண்ணெய் சருமத்துக்காரர்கள் மோர்,பாலாடை
போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முல்தானி மட்டியை, பன்னீரில் கலந்து
போடுவது மிகச் சிறந்தது.



2 வெள்ளரித்துண்டங்களை கண்களில் வைத்து முகத்தில்
இருக்கும் மாஸ்க் காயும் வரை வைகக்வும்.

ஐந்தாவது ஸ்டெப்: துவாரங்களை அடைத்தல்.

மாஸ்க் நன்கு காய்ந்து முகம் டைட்டாக இருப்பது
போல் உணரும் நிலையில் கொஞ்சம் வெதுவெதுப்பான
நீர்க்கொண்டு கழுவவும். திறந்திருக்கும் துவாரங்கள்
அடைக்கப்பட இது உதவும்.





ஆறாவது ஸ்டெப்: டோனிங்.

நல்ல தரமான டோனர் அல்லது மாய்ச்சுரைசிங் கிரீம் கொண்டு
முகம் ,கழுத்து பகுதிகளில் அழுத்தம் கொடுத்து
மசாஜ் போல் செய்ய வேண்டும். இது முகத்திற்கு
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.






அவ்வளவுதான்,30 அலல்து 45 நிமிடங்களில் அழகான முகம் ரெடி.

குறிப்புக்கள்:

1.மாஸ்க் போட நேரமில்லை என்றால் அதற்கு முன்பு
வரை ஸ்டெப்களை தொடர்ந்து மாஸ்கிற்கு பதில்
EVER YOUT PEEL OFF போன்றவற்றை உபயோகிக்கலாம்.

2. மாசாஜ் செய்யும் பொழுது அதிக அழுத்தம் கூடாது.

3. வீட்டிலேயே ஃபேஸ் ஸ்கரப் தயாரிக்க.
ஆண்டாள் ஸ்நான பவுடர் ஒரு பாக்கெட் வாங்கி
வைத்துக்கொண்டால் அருமையான நேச்சுரல் ஸ்க்ரப்.

4. முகத்தை கழுவ சோப் உபயோகிப்பதை விட
Face wash உப்யோகிப்பது சாலச் சிறந்தது.
எண்ணெய் சருமத்துக்காரர்கள் குளியல்தவிர
இரண்டுமுறை முகம் கழுவுவதால் முகத்தில்
கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.


அப்பல்ஸ், அலம்பல்ஸ் இல்லாமல் அழகாத்தான்
இருக்கேன் என்று சொல்லிக்கொள்பவர்கள் கண்ணாடியில்
ஒரு தடவைக்கு 4 தடவை சரியாக பார்த்துக்கொள்ளவும்.

ஃபேசியல்ஸ் செய்து கொள்வது அழகூட்ட அல்ல.
முகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள.
தூய்மையாக இருக்கும் எதுவும் அழகுதான்.

எந்த பூச்சும், மேக்கப்பும் இல்லாமல் முகத்தையும்,
கழுத்தையும் அழகாக்கும் ஒரு வழிதான் ஃபேசியல்.
மேக்கப் போடுவதை விட ஃபேசியல் மிகச் சிறந்தது.


இந்த வார விடுமுறையில் ஃபேசியல் செய்து
பாருங்கள்! புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்!!

இனிதான வாரவிடுமுறைக்கு என் வாழ்த்துக்கள்

பெடிக்யூர் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே:

Thursday, July 02, 2009

என்ன கொடுமை இது??!!!! :))

கமிட்டி மீட்டிங் நேற்றும் தொடர்ந்தது.


கமிட்டி பத்தின போஸ்ட் இங்க இருக்கு


”இந்த மாசத்துலேர்ந்து உங்க பாயிண்ட்ஸ் & பாக்கெட்
மணி 500 ரூபாயாக்கலாம்னு இருக்கோம்.”

”ஹை ஜாலி, அப்ப வருஷத்துக்கு 6000, பேங்கல
போட்டுக்கலாம், அப்புறமா பெருசா ஏதாவது
வாங்கிக்கலாம்” இது ஆஷிஷ்.

”ஆமாண்ணா” இது அம்ருதம்மான்னு சொல்லணுமா!!

நான் சொல்றது மொத்தத்தையும் கேட்டுட்டு அப்புற்மா
கொண்டாடலாம்.

”சரி சொல்லுங்க!”

”பாக்கெட் மணி அதிகமாக்கினதுக்கு காரணம் அப்படியே
பேங்கல போட்டுக்கறதுக்கு இல்லை!! செலவும்
செய்யணும். உங்க ஸ்டேஷனிரி, செருப்பு
தைக்கறது,கிப்ட் எல்லாத்துக்கும் அதுலேர்ந்துதான்
எடுத்துக்கணும்.”

”ஐயோ!”எல்லாம் எங்க பாக்கெட் மணியிலேர்ந்துன்னா எப்படிம்மா?”
அப்ப மணி கணிசமா குறையேமே!!”

”ஆமாண்ணா, கிப்டுக்கு இனிமே அதிகமா பட்ஜட்
வேண்டாம்”

“நீ 100 ருபீஸ் போடு, நான் 100 ருபீஸ் போடறேன்”
அதுல வாங்கிக்கலாம்”.

(தன் பணம் குறையுதுன்னதும் என்னமா சிக்கன
பட்ஜட் போடறாங்க. அவ்வ்வ்வ்வ்)



”இன்னொரு முக்கியமான விஷயம்!! அங்க கட்டு,
இங்க கட்டுன்னு பாயின்ட்ஸ் கட்டானா உங்க
பாக்கெட் மணியும் குறையும். அதனால் நல்லா
ப்ளான் செஞ்சுக்கோங்க, ஒழுங்கா பாயிண்ட்ஸ்
கட்டாகம பாத்துக்கோங்க.”

”பர்த்டே மாசா மாசம் வரப்போறதில்லை.
கிப்ட் செப்டம்பர், அக்டோபர், ஜனவரிலதானே!!
பிரச்சனையில்லை”


”அண்ணா, எனக்கு தீபாவளிக்கு, பொங்கலுக்கு
பணம் தரணும், மறந்திடாதே!!”

”ஆமாம் ரக்‌ஷா பந்தனுக்கும், கருடபஞ்சமிக்கும்
நீ எனக்கு பணம் தரணும் அதுவும் லிஸ்ட்ல
போட்டுக்கோ”

(தன் வரும்படியை கரீக்டா ஞாபகம் வெச்சிருக்குங்க
இரண்டு பிள்ளைகளூம்.. தேறிடுவாங்க...)

திட்டமெல்லாம் நீங்க போட்டுக்கோங்க.
நாங்க வாங்கித் தர்றதுக்கு மேல
கடைக்கு போகும்போதெல்லாம் எனக்கு அந்த
பொம்மை, இந்த பொம்மை, அடிக்கடி புது ஷூ,
எல்லாம் கேட்டா நாங்க வாங்கித் தர மாட்டோம்!
உங்க பாக்கெட் மணிதான் செலவு செஞ்சுக்கணும்”.

”எங்க பணத்துலேர்ந்துன்னா வேணவே வேணாம்.
நாம டாய்ஸ் வேணும்னு கேப்போம் அம்ருதா??
அம்மா,அப்பா வாங்கிகொடுப்பதோடயே சந்தோஷமா
இருப்போம்!! இல்ல பாப்பா!!!”

அடப்பாவிகளா!ன்னு இந்த பாட்டைத்தான் நினைச்சுகிட்டேன்.





ஆனா எந்த எண்ணத்துக்காக பாயிண்ட்ஸ் போட்டு,
பாக்கெட் மணி கொடுத்து, அதை சேமிக்க
பேங்க அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேனோ!!
அது சரியா ஒர்க்கவுட் ஆகிடிச்சு.

பணத்தோட அருமை புரியுது பசங்களுக்கு.
அனாவசிய செலவு தப்புன்னு தெரியுது.
சேமிப்பு அவசியம்னுபுரிஞ்சது.

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா சொல்லிக்கொடுத்த
பாயிண்ட்ஸ்& பாக்கெட் மணி திட்டத்துக்கு்
நான் மேலும் மெருகூட்டி போட்டுவைத்த
சேமிப்புத் திட்டம் ஓகே கண்மணின்னு பாடிக்கிட்டேன்.

Wednesday, July 01, 2009

சிக்கி... சிக்கி..

அப்பாவால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இது.
பாய்க்கடையில் 1 ரூ்பாய்க்கு வாங்கி வருவார் அப்பா. மேலே
தேங்காப்பூவெல்லாம் தூவி சூப்பரா இருக்கும்.

ஒழுங்கா சைக்கிள் ஓட்டினா, சொன்னபடி
வேலைகளை முடிச்சிருந்தா, ஹிந்தி எக்ஸாம்ல
பாஸ் செஞ்சா என எல்லாத்துக்கும் எனக்கு
அப்பா தரும் ட்ரீட் கடலை உருண்டை.

ஒரே ஒரு மாதம் பள்ளத்தூர் ஆச்சி காலேஜ்
ஹாஸ்டலில் தங்கி இருந்த என்னை பார்க்க
வந்த போது அல்லது பார்க்க வருபவர்களிடமெல்லாம்
அப்பா கொடுத்தனுப்பியதும் இது தான். :))

”ஏன்ப்பா கடலை உருண்டையே வாங்கித்தர்றீங்க”?
அப்படின்னு தெகிரியமா கேட்டப்போ அப்பா சொன்னது,
“இது உடம்புக்கு நல்லது. வெல்லம் இரும்புச் சத்து
தருது. வேர்க்கடலை உடலுக்கு நல்லது. சல்லிசான
விலையில உடலுக்கு நல்லதாச்சேன்னு வாங்கி
கொடுத்தேன். பிடிக்கலைன்னா வேற ஏதாவது
வாங்கித் தர்றேன்” என்றார்.

பழகிபோயிவிட்டாதல் கடலை உருண்டை பிடித்த
பண்டமாகிவிட்டது.

மும்பையிலிருந்து கிளம்பும்போதே மாமா
ஞாபகமா சொல்லி அனுப்புவார். ”புனேல
லோனாவாலா சிக்கி கிடைக்கும். தூங்கிடமா(!!)
வாங்கிகிட்டுவா!”

எல்லா இடத்திலும் கடலைமிட்டாய், கடலை
உருண்டை கிடைக்கிறது. ஆனாலும் லோனாவாலாவில்
புகழ் பெற்றது.
லோனாவாலாவின் இருக்கும் புகழ்பெற்ற சிக்கி
கடையின் போட்டோ இது.




முப்பது வகையான சிக்கிக்கள்.
(பலதுக்கு பேருதான் தெரியாது)

பாதாம், பிஸ்தா, எள்ளு என
பல வகைகள்



சிக்கி பற்றியவிக்கிப்பீடியா:


சென்ற முறை மாமா வந்திருந்த போது
5 பாக்கெட் சிக்கி வாங்கி வைத்திருந்தேன்.
மாமா வந்ததும் கையில் கொடுத்த போது
சின்ன பிள்ளையாய் “ஹை என்னோட
ஃபேவரீட்!! இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு?!”
என ஆச்சரியப்பட்டார்.

சென்ற வாரம் இங்கே லோக்கலில் இருக்கும்
அத்தை மகள் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அக்காக்கு பூ, அக்காவின் மகளுக்கு பிறந்த
நாள் என்பதால் உடை எல்லாம் வாங்கிக்கொண்டேன்.
ஞாபகமாக 2 சிக்கி பாக்கெட். இது பாவாவுக்கு(அக்கா
கணவர்).

கையில் கொடுத்ததும் ,”விலையுயர்ந்த ஸ்வீட் வாங்கிக்
கொண்டுவந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷ
பட்டிருக்க மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்ததை
கொண்டு வந்து கொடுத்திருக்காய்” என அக மகிழ்ந்தார்.

அல்ப காசுக்கு வாங்கின பொருளாக என நினைக்காமல்
அவர்களுக்கும் சந்தோஷம். அவர்களின் சந்தோஷம்
கண்டு எனக்கும் சந்தோஷம்.

சரி யாருக்கெல்லாம் கடலை மிட்டாய் பிடிக்கும்?
ஆளுக்கொன்னு எடுத்துக்கோங்க.:))