Total Pageviews

Wednesday, September 29, 2010

வம்சம்

மொதோ படத்துக்கு இன்னமும் விருது வாங்கிக்கிட்டு இருக்கும்
இயக்குனரின் இரண்டாவது படம். எப்படி இருக்குமோ???ன்னு
பயம்மா இருந்துச்சு. படம் பார்க்க பயமில்லை. நம்ம ஊர்க்காரர்
செயிச்சுப்பிடணும்ங்கற ஆதங்கத்தோட கூடிய பயம் அது.

ஹைதையில் இருப்பதால சீடியில தான் பாக்கக் கிடைச்சது.
மொதல்ல இந்தப் படத்தை பாத்தது அப்பாதான். கூட்டுறவு
பேங்குல வேலை பாத்ததால புதுகையைச் சுத்தி இருக்கும்
பல கிராமங்களுக்கு போன அனுபவம் அப்பாவுக்கு இருக்கு.
ஹை இதுபுலிவலம், மான்கொம்பு,பேரையூர் அது இதுன்னு அப்போவோட
சத்தத்தை கேட்டுட்டுத்தான் பொறுமையா ஒரு நாள் இந்தப்
படத்தை பாக்கணும்னு நினைச்சிருந்தேன். அப்பாவுக்கு
ரொம்ப பிடிச்சிருந்தது படம்.

ஹீரோ தமிழரசு (அவரோட உண்மையான பேரும் மறந்து
போச்சு, கலைஞரோட பேரன் என்பதற்காக எதையும் மாத்தாம
பக்காவா எங்க ஊர்க்கார பையன் மாதிரி காட்டியதற்கு
பாண்டிராஜுக்கு ஷ்பெஷல் பாராட்டுக்கள். சுனைனாவா அது.
அடி ஆத்தி!! எங்க ஊர் பக்க புள்ளைங்க மாதிரி சைடு வாகு
எடுத்து வாஞ்ச போஞ்சன்னு பேசிக்கிட்டு ஆஹா நான் +2 படிச்ச
காலத்துக்கு போய்வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.



கதை அதை உருவாக்கின விதம் எல்லாம் அருமை. பசங்க
படத்துல வர்ற ஸ்கூல் மாஸ்டர் சசிகுமார் படங்களுக்கு
அக்ரிமெண்ட் போட்டுட்டாரு போல. இந்தப் படத்துலயும்
அவரு.(இதுக்கு முன்ன நாடோடிகள்ல நடிச்சிருந்தாரு)
வில்லனாம். பரவாயில்லை. ஏத்துக்கலாம்!!

கஞ்சா கருப்பு அடிக்கிற லூட்டி தாங்க முடியல. ஊரைவிட்டு
வேற ஊர்ல இருக்கறவங்க ஒரு ஹோட்டலுக்கு போய்
கஞ்சா கருப்பு “முட்டை புரோட்டான்னு” ஆர்டர் செய்யும்பொழுது
நாக்குல தண்ணி ஊத்திருக்கும். எங்க ஊர் ஷ்பெஷல் ஆச்சே!
சில்லி புரோட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

டவர் கிடைக்காம மரத்து மேல ஏறி உக்காந்து பேசுறது,
அதே டவர் கிடைக்காம மேலேர்ந்து ஹெட்போனை கட்டிவிட்டு
பேசுறதுன்னு செம ஜாலி. மாடு விடு தூது புதுசா இருக்கு.
நான் ஊருக்கு போயிருந்த போது ஷூட் பண்ணிகிட்டு இருந்தாங்கன்னு
சொன்ன டாடா கோல்ட் ப்ள்ஸ் சீனும் வந்துச்சுல்ல. :))

கலைஞரின் பேரன் அருள்நிதிக்கு ஆரம்பமே அமர்க்களமா
எங்க ஊர் டைரக்டர் கையால நல்ல ரோலில் நடிப்பு
ஆரம்பமாகியிருக்கிறது.

கதாபாத்திரங்கள் அதை உணர்ந்து நடிச்சிருப்பது ரொம்ப சிறப்பு.
இசை எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தது படத்துக்கு
கூடுதல் பலம். எங்க ஊர் டைரக்டரும் நடிகராகிட்டாரு.
ஆமாங்க இரண்டு மூணு இடத்துல லுங்கியை மடக்கி கட்டிகிட்டு
வாரது, பைக்ல சுனைனாவா கூட்டிகிட்டு போறதுன்னு தலையை
காட்டி தானும் நடிகராகிட்டாரு. வாழ்த்துக்கள் பாண்டிராஜ்.
இந்த முறையும் நம்ம ஊரைக்கண்ணுல காட்டி, அந்த
மக்களோட வாழ்க்கையை திரையில காவியமா காட்டி
அசத்திட்டீங்க.

ரொம்ப எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த வம்சம் படம்
அதை பூரணம் செஞ்சிருக்கு. வம்சம் வளரட்டும்.
பாண்டிராஜ் இதேபோல நல்ல படங்களை கொடுத்து
புதுகையின் பெயரை சிறப்பிக்கவேண்டும்.




5 தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்.:

Thenral said...

Mmm...Nalla vimarsanam.Antha hero per "Arulnithi" thenral!!!

நட்புடன் ஜமால் said...

செம ஜாலியாத்தான் போகுது படம் ...

புதுகைத் தென்றல் said...

நன்றி தென்றல்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜமால் நல்லா ஜாலியா போரடிக்காம படம் எடுத்திருக்காங்க.

வருகைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

நா மொத நாளே பாத்துட்டேன். அந்த படத்துல எங்க தோப்பும் வருது :)