Total Pageviews

Wednesday, March 31, 2010

சிலேட்டுக்கு ஒரு கொசுவத்தி

பதின்மவயதுக்கு கொசுவத்தி, பொண்ணு பாக்க போனது/
வந்ததுக்கு கொசுவத்தி சுத்தறாங்க. ஆனா நாம் படிக்கும்போது
இருந்து இப்ப காணாம போன சிலேட்டுக்கு கொசுவத்தி
சுத்தலாம்னு ரொம்ப நாளா ஆசை. பதிவர் பட்டர்ஃப்ளை
சூர்யா சொல்லிகிட்டு இருந்தாரு. இப்ப ஆரம்பிச்சிட்டேன்.


நான் படிச்சது தமிழ் மீடியம் தான். 5 ஆம் வகுப்பு வரை
சிலேட்டு இல்லாமல் பள்ளிக்கு போக முடியாது. வீட்டுப்பாடம்
எழுதி அது அழிஞ்சிடாம இருக்கத் பைக்குள் வைக்காம
கஷ்டப்பட்டு கைவலிக்க தனியா தூக்கிக்கிட்டு போனது
எல்லாம் ஞாபகத்துக்கு வருது.

ஆங்கில மீடியத்தில் படித்த பொழுது எனக்கு இனிமை
நினைவுகள் இல்லை. என்னை அங்கு யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.
எல்லாம் சைல்ட் ஜீஸஸ் பள்ளியிலே படித்து
பல வருட நட்பாக இருந்த கூட்டம், 6 ஆம் வகுப்பு
முதல் ராணி ஸ்கூலிலும் சேர்ந்தே இருந்தார்கள்.
தனித்துதான் அலைந்தேன். அதை விடுங்க.




சிலேட்டுக்கு வருவோம். 4ஆவது வரை எனக்கு
சிலேட்டு மட்டும் தான். நோட் புக் அதுவும் 80 பக்க
நோட் 4 நோட் அறிமுகம் ஆனது 4ஆவதில் தான்.
அதுவரை சிலேட்டு. எனாமல் சிலேட் மார்கட்டில்
இருந்தாலும் அம்மா ஏனோ கல்லு சிலேட்டு
வாங்கிக் கொடுத்தார் 1 ஆம் வகுப்பில். அது
பொணம் கணம் கணக்கும். ”வேற சிலேட்டும்மா!”
என்று கேட்டதுக்கு ,”அடுத்த வருஷம் பாக்கலாம்!!
என்பது தான் பதில்.

அந்த அடுத்த வருஷம் வரவேயில்லை. ச்சே சே
நான் பாஸானேன். ஆனா சிலேட்டு மட்டும் அம்மா
வாங்கிக்கொடுக்க மாட்டாங்க. ஒவ்வொரு வருஷமும்
நல்லா படிச்சு முதல் 3 இடத்தில் மதிப்பெண்
வாங்கினவங்களுக்கு ஆண்டுவிழாவுல சிலேட்டு
பரிசா கொடுப்பாங்க. 6ஆவது போன பிறகும்
வந்து என் முந்தைய வருட ப்ர்ஃபாமன்ஸுக்கு
சிலேட்டு பரிசா வாங்கின கொடுமை நடந்ததால
என் பள்ளிப்பருவம் கல்லு சிலேட்டோடவே
முடிஞ்சிடிச்சு. :(((




இந்த மாதிரி அழகா மணி வைச்சு சிலேட்டு
பெருமாள் கோவில் மார்கெட்டில் இருக்கும்
கீதா கபே வீட்டு கடையில் வெச்சிருப்பாங்க.
எல்லோரும் லைட் வெயிட்ல சிலேட்டு வெச்சிருக்க
எனக்கு மட்டும் கணமான சிலேட்டு.

அம்மா இந்த சிலேட்டு வாங்க சொல்லும்
காரணம்,” இந்தச் சிலேட்டுதான் பெரிசா இருக்கு,
எனாமல் சிலேட்டு துருபிடிச்சு எழுத முடியாம
போகுது” அது இதுன்னு.ம்ம்ம்

6 ஆம் வகுப்பு வந்ததும் தானே ப்ரோகரஸ்
ரிப்போர்ட் எல்லாம். அப்பல்லாம் காப்பரிட்சை,
முக்காப்பரிட்சை, முழுப்பரிட்சை எல்லாம்
சிலேட்டிலேயே எழுதியிருக்கோம்ல்...

கேள்விகளை டீச்சர் போர்டில் எழுதி வெச்சிருப்பாங்க.
அதைப்பாத்து பதிலை சிலேட்டில் எழுதுவோம்.
சிலேட்டில் எழுத இடமில்லாட்டி வரிசையில்
நின்னு டீச்சரிடம் கரெக்‌ஷன் செஞ்சு மார்க்கை சிலேட்டின்
இடது மூலையிலோ, வலது மூலையிலோ
எழுதி அனுப்புவாங்க. தொடர்ந்து எழுதுவோம்.
கடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து
100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல
அதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி
அனுப்புவாங்க.

அதை கர்வமா தலையில வெச்சுகிட்டு வீட்டுக்குப்
போய் அப்பா, அம்மா வரும் வரைக்கும் அழிபடாம
பாதுக்காத்து காட்டுவது ஒரு சுகம்.

அந்த சிலேட்டை பாதுகாத்தல். சரி இண்ட்ரஸ்டிங்கா
இருக்கும். கல்லு சிலேட்டுக்கு கரி பூசுதல் அது
ட்ரெஸ்ல ஒட்டுதல், ”கோவப்பழம் போட்டு தேச்சா
சிலேட்டு கறுப்பாவே இருக்கும்னு!!” ஃப்ரெண்ட் சொல்ல
அம்மாகிட்ட அனத்தி கோவாப்பழத்துக்கு சொல்லி
வைக்கச் சொல்லுவது. எச்சி தொட்டு அழிக்கக்கூடாது
எனபதால் பக்கத்திலேயே ஈரத் துணி வெச்சு அழிச்சு
எழுதி படித்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.


DEO INSPECTIONக்கு வந்திருந்த பொழுது கணக்கு
டெஸ்ட் கொடுத்து அதை செஞ்சு DEO கிட்டயே
வெரி குட் வாங்கினது எல்லாமும் அந்த சிலேட்டில்தான்.

இந்தச் சுகம் இப்பத்த பிள்ளைங்களுக்கு இல்லை.
எல் கே ஜி யிலேயே நோட்புக் பென்சில்தான்.
என் சிலேட்டுக்கதை பிள்ளைகளுக்குச் சொன்னால்
“சிலேட்டில் பரிட்சை எழுதினீங்களா!!”” அப்படின்னு
ஆச்சரியாமா கேக்கறாங்க.

இதுவே ஆச்சரியம்னா ஆங்கில படிக்க ஆரம்பிச்சதே
4ஆம் வகுப்புல என்பதை எங்க போய்ச் சொல்ல.

சரி சரி அதை விடுங்க.

இப்ப இதைத் தொடர் பதிவாக்கணும்.
(அப்பாடி ஒரு தொடர் பதிவாவது நான்
ஆரம்பிச்சதா சரித்திரத்துல எழுதுவாங்கல்ல) :)))

தொடர நான் அழைப்பது

ஆயில்யன் பாஸ்

அப்துல்லா தம்பி


கண்மணி டீச்சர்


நர்சிம்

இதைத் தொடர வைக்கப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு
என் நன்றிகள்.

நான் வியக்கும் பெண்மணி!!

50 வயது நெருங்கும் முன்னரே பல பெண்கள் ஏதோ
தள்ளாத முதுமை வந்துவிட்டது போல இருப்பார்கள்.
ஆனால் 61 வயதில் நாட்டியமாடும் இந்த அய்யங்கார்
வீட்டு அழகுப் பெண்மணி தான் நான் வியக்கும் பெண்மணி.
தனது மகள்களுடன் ஹேமா



DREAM GIRL ஹேமமாலினி தான் அது. இயக்குனர் ஸ்ரீதர்
அவர்களால் நிராகரிக்கப்பட்ட பெண் இவர். நட்சித்திரமாக
தெரியவில்லை என்று நிராகரிக்கப்பாட்டார் இன்று இந்தியா
முழுதும் கொண்டாடும் நடிகை.

நடிகை என்பதை விட சிறந்த பரத நாட்டியக்கலைஞர்
என்பது சிறப்பு. தற்பொது சினிமா தயாரிப்பாளரும் கூட.
ஷோலே ஹிந்தி படத்தில் வாய்மூடாமல் பேசும்
பசந்தி கேரக்டரில் கலக்கியிருப்பார். இந்தபடத்தை
யாரும் ரீமேக்கினால் மற்ற கேரக்டர்களுக்கு ஆள்
கிடைப்பார்கள். இந்தக் கேரக்டர் மட்டும் சான்சே இல்லை.



ஹிந்தி நடிகர் தர்மேந்திராவுடன் காதலாகி கசிந்துருகினாலும்
திருமணம் முடிக்க இருவர் தடை. ஒருவர் ஹேமாவின் தந்தை
சக்கரவர்த்தி. மற்றொருவர் தர்மேந்திராவின் மனைவி
ப்ரகாஷ் கவுர். (சன்னி தியோல், பாபி தியோல் இருவரும்
ப்ராகாஷ்-கவுர் தர்மேந்திராவின் பிள்ளைகள்)

ஒரு பஞ்சாபிக்காரருடன் தன் மகள் திருமணம் புரிவதை
ஒத்துக்கொள்ளவில்லை ஹேமாவின் தந்தை. அவரின்
மறைவுக்குப் பிறகு ப்ரகாஷ் கவுர் விவாகரத்து செய்ய
மறுத்ததால் முஸ்லீமாக மதம் மாறி இருவரும் திருமணம்
செய்து கொண்டார்கள்.

இஷா, அஹானா என இரு பெண்குழந்தைகள். இருவரும்
தற்போது ஹேமாவுடம் சேர்ந்து நடன நிகழ்ச்சிகள்
வழங்குகிறார்கள். இஷா சில படங்களில் நடித்து இருக்கிறார்.

சக நடிகர்கள் ஜித்தேந்திரா(பல பெண்களை அழவைக்கும்
பாலாஜி டெலிவிஷன்ஸ் உரிமையாளரின் தந்தை), சஞ்சீவ்
கபூர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தும்
தர்மேந்திராவை மணந்தார்.



சஹேலி எனும் ஹிந்தி பத்திரிகையின் ஆசிரியர் ஹேமாதான்.
இந்தப் பெண்ணிடம் இத்தனை திறமைகள் எப்படித்தான்
கொட்டிக்கிடக்கிறதோ!!

சமீபத்தில் GOOD HOUSEKEEPING இவரது பேட்டி வந்திருந்தது.
இவருக்கு 61 வயது என்று சொன்ன பொழுது மகள் நம்பவில்லை.
இந்த வயதில் நாட்டியம் ஆடுகிறார் என்றது கூடுதல்
ஆச்சரியம் அவளுக்கு.

பார்த்தால் சத்தியமாகத் தெரியவில்லை.



பல வருடங்களுக்குப் பிறகு இப்போது சில ஹிந்திப்
படங்களில் நடித்திருக்கிறார். அமிதாப்ஜீ தான் ஜோடி.
ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது திரையில்.
இவரின் சமீபத்திய படத்தில் எனக்குப் பிடித்தது
baagban.



பாரதீய ஜனதா பார்ட்டியின் எம் பீ இவர். தனது திரைப்பட
வேலை, புத்தக வேலை, நாட்டிய வேலைகளுக்கு இடையே
பிசியான அரசியல்வாதியாகவும் தன் பொறுப்பை செய்து
வருகிறார். எத்தனையோ பரதம் ஆடும் பெண்கள் இந்த
வயதில் கிழடு தட்டிப்போய் இருக்க, இவர் இன்றும்
இளமையாக இருக்கிறார்.

பெண்கள் தனக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டுகொண்டு
அதை மேம்படுத்தி தன் உடல் நலனில் அக்கறை உடையவளாக
இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் எனபதற்கு
நம்ம தங்கத் தமிழ் நாட்டில் பிறந்து அகில இந்திய அளவில்
பிரசித்தமாக இருக்கும் ஹேமமாலினி ஒரு உதாராணம்.


Tuesday, March 30, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 30/3/09

சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக்கை
திருமணம் செய்யப்போவதாகச் செய்தி. அடுத்த மாதம்
திருமணம் இருவரும் துபாயில் வாழப்போகிறார்களாம்.
மேட்டர் அது அல்ல. சோயப் ஏற்கனவே ஹைதையைச்
சேர்ந்த ஆயிஷா சித்திக் என்பவரை மணந்து ஏற்க
மறுத்துவிட்டாராம்.(இந்த பிரபலங்களே இப்படித்தான்
இரண்டாவது மனைவியாக ஏன் தான் சம்மதிக்கறார்களோ!)

சானியா திருமண அறிவிப்பை அவங்கப்பா சொன்னதும்
பத்திரிகை காரங்க, ஆயிஷாவின் குடும்பத்தினரிடம்
போய் கேள்வி கேட்டிருப்பாங்க போல. அதுக்கு
அந்தப் பொண்ணொட அப்பா,” அந்தாளு ஸ்ரீதேவி,
ஹேமமாலினி யாரை வேணாம் கல்யாணம் செஞ்சுகட்டும்”
அப்படின்னு கமெண்டிருக்காரு.

ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் இப்போது
பெரிதாக நடிப்பதில்லை. இருவரும்
திருமணமாகி குழந்தைகளுக்குத் தாய் எனும் பொறுப்பில்
இருக்கும் போது என்னதான் தன் கோபத்தைக் காட்டுவதாக
இருந்தாலும் அவர்களை வம்பில் இழுக்காமல் பேசியிருக்கலாம்
மிஸ்டர். சித்திக். இது ரொம்ப தப்பு.

ஸ்ரீதேவி, ஹேமமாலினி இருவரும் நடிகைகள் என்பதாலே
அவங்களைப் பத்தி இவரு கமெண்ட் அடிக்கலாமா??
நடிகைகள் என்ன பொது சொத்தா??

***************************************************



ஒரு படம் பாக்கணும்னு ரொம்ப எதிர் பார்ப்போட
இருக்கேன். அது அல்லு அர்ஜுன்(சிரஞ்சீவியின் மச்சானின்
மகன்) நடிச்சிருக்கும் “வருடு”. அதாவது மணமகன்
என்று பெயர். பாட்டுக்கள் கேட்டுட்டேன் சூப்பர்.
அதுவும் “ஐது ரோஜ்ல பெல்லி” “தலம்பராலு”
சூப்பர்..

திருமணங்கள் 5 நாள் நடக்க வேண்டிய ஒரு
கொண்டாட்டம். அதை இப்ப 2 1/2 நாளுக்கு
சுருக்கிட்டாங்க. இந்தப்படம் தான் இப்ப ஹாட்
டாபிக் இங்க.



மகதீரா பேசப்பட்ட மாதிரி இந்தப்படமும்
இருக்கும்னு நம்பறேன். ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது.

***********************************************

நேத்து சார்மினார் போயிட்டு வந்ததைப் பத்தி
பதிவு போட்டேன். ஓல்ட் சிட்டியில கலவரம்,
144 சட்டம் போட்டிருக்காங்கன்னு பேப்பர் பாத்து
டீவி9 சேனல் வெச்சேன். ஆத்தாடி!!!!!
சார்மினார் கடைகள் மூடப்பட்டு போலிஸும்
மக்களும் அங்குமிங்கு ஓடிகிட்டு இருந்தாங்க.
கலவர பூமியா இருந்துச்சு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தக் கலவர பூமியில் 10ஆம் வகுப்பு
பொதுத் தேர்வு எழுதும் பள்ளிகளும்,
மாணவர்களும் இருக்காங்க. இந்த நேரத்துல
கலவரம் நடந்ததால் இன்னைக்கு நடக்க
இருந்த பரிட்சையை தள்ளி வெச்சிருக்காங்க.

**************************************
விவல் சோப் விளம்பரத்துல த்ரிஷாவோட
வரும் அந்தப்பொண்ணு (அதான் டல் திவ்யா)
நல்ல களையான முகம். சமீபத்துல இன்னொரு
டீவி விளம்பரத்துல கூட மாடர்னா வந்து
அசத்தது. யார் பெத்த பொண்ணோ... இல்ல
இல்ல எந்த மாநிலத்துப்பொண்ணோ வாழ்க
வளமுடன்.

அந்தப்பெண் பேரு விசாகாவாம்.

இங்க போனா விளம்பரத்தை பாக்கலாம்.
***********************************************
ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் 16 மாவட்டங்களை
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்னு
மத்திய அரசு அறிவிச்சு நிலமையை மேம்படுத்த
நிதி ஒதுக்கியிருக்காம்.

வறட்சி மாவட்டம் பாத்திருக்கோம்,
புயலால் அடிபட்ட மாவட்டம் பாத்திருக்கோம்,
வற்றாத வெள்ளத்தால் அழிந்த மாவட்டம்
பாத்திருக்கோம்.
நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாம்!!!
இங்க ஒண்ணு இல்ல இரண்டு இல்ல
16 மாவட்டங்களாம். ஊர்களின் பெயர்களைச்
சொல்றேன். அடிலாபாத், அனந்தபூர், கிழக்கு கோதாவரி,
குண்டூர், கரீம் நகர், கர்னூல், மேடக், மஹபூப் நகர்,
நல்கொண்டா, ப்ரகாசம், ஸ்ரீகாகுலம், விசாகப்பட்டினம்,
விஜயநகரம்,வராங்கல், நிஜாமாபாத் மற்றும் கம்மம்.

மிச்சம் எந்தெந்த மாவட்டம்னு இங்க போனா
பாக்கலாம்.


************************************************
அரசுத்தொட்டில் திட்டம் அப்படின்னு ஒண்ணு
1992ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகளின்
கதி? என்னன்னு மெசெஜ் ஒண்ணை பதிவர் நண்பர்.ஃபண்டூ
அனுப்பியிருந்தார். படிக்க படிக்க பயமாத்தான் இருக்கு.

முடிஞ்சா நீங்களும் படிச்சு பாருங்க.


Monday, March 29, 2010

ரவுண்ட் அப்

அதென்னவோ தெரியலை இந்த மாசம் கொஞ்சம் பிசியாவே
ஓடிப்போச்சு. பசங்களுக்கு பரிட்சை, அது முடிஞ்சு ரிசல்ட்ஸ்,
புது புத்தகங்களுக்கு அட்டைப்போடல் அது இதுன்னு இன்னைக்கு
ஸ்கூலும் திறந்தாச்சு. ஆஷிஷ் 9த், அம்ருதா 6த்.

இரண்டு வாரமா என் ஃப்ரெண்ட்ஸ் (ஆஷிஷ்,அம்ருதா)
வீட்டுல இருந்ததால மொத்தமா அவங்க கூட
கூத்தடிச்சு, கொண்டாடி, ஊர் சுத்தி, சண்டை
போட்டுன்னு ஒரு மார்கமா ஓடினிச்சு. ஏப்ரம் 23ஆம்தேதி
வரை அரைநாள் பள்ளிதான். 12.45க்கு வீட்டுக்கு
வந்திடுவாங்க. மதியம் சாப்பாடு தனியா சாப்பிடும்
கொடுமை இன்னும் 2 மாசத்துக்கு இல்லை.
ஜாலி...

சமைச்சு முடிச்சிட்டு உக்காந்து சும்மா பேசிகிட்டு
இருந்த ஒரு சனிக்கிழமை மண்டைய பொளக்கும்
வெயிலை சும்மா விடுவானேன்னு,”எங்கயாவாது
போவமான்னு” கேட்க ஆஷிஷ் ஐமேஸ், கேம்ப்ளக்ஸ்
அப்படி இப்படின்னு ஆரம்பிக்க அம்ருதா,”சார்மினார்
பாத்ததில்லை!” அப்படின்னு சொல்ல எனக்கு ஷாக்.

என்னக்கொடுமை இது ஹைதைக்கு பெருமை
சேர்க்கும் அந்த பாரம்பரியச்சின்னத்தை பசங்களுக்கு
காட்டமலேயே இருந்திட்டமோன்னு யோசிச்சா,
அடிக்கடி சார்மினார் நான் போனது மட்டுமல்லாம
பசங்களையும் கூட்டிகிட்டு போனா மாதிரி மெமரி
சொல்லுது. ஆஷிஷும் கன்பார்ம் செஞ்சாலும்
அம்ருதம்மா பார்க்கலை, அதாவது மேலே ஏறி
பாக்கலைன்னு சொல்ல அம்புட்டு தானேன்னு,
கிளம்பிட்டோம். திரும்ப வரும்போது அயித்தான்
ஆபிஸுக்கு வந்துட்டு அங்கேர்ந்து வீட்டுக்கு வர
திட்டம்.

ஆட்டோவுல “சலோ சார்மினார்”னு சொல்லி
கிளம்பியாச்சு. சார்மினார் மேலே ஏறி பார்க்க
சில சமயம் தான் அனுமதி கிடைக்கும். பல சமயம்
அங்க தற்கொலை முயற்சி செய்யறாங்கன்னு
போக அனுமதி கிடையாது. ”மேலே ஏறமுடிஞ்சா
சரி, இல்லாட்டி சார்மினார்ல பர்ச்சேஸ் செய்யலாம்னு”
திட்டம் போட்டுகிட்டோம்.

எங்க நேரம் நல்லாயிருந்து அன்றைக்கு மேலே ஏற
டிக்கெட் கொடுத்துகிட்டு இருந்தாங்க. எங்களுக்கு
முன்னாடி வரிசையில நின்னவங்க நம்ம தங்கத்
தமிழ் நாட்டைச் சேர்ந்தவங்க. மேலே ஏறிப்பார்க்க
பெரியவங்களுக்கு 5 ரூபாய். 15 வயசு வரை உள்ள
குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.
ஹைதையின் சின்னம் சார்மினாரின் ஒரு வ்யூ.

/>

டிக்கெட் வாங்கிகிட்டு மேலே ஏறப்போனோம்.
மிகக்குருகிய பாதை. ஒரு குகையில ஏறுவது போலவே
இருந்துச்சு. முழங்கால் உயரப் படிக்கட்டுக்கள்.
இதுல ராஜா எப்படி ஏறி இருப்பாருன்னு யோசிச்சுகிட்டே
மூச்சு வாங்க ஏறினோம்.

மேலேர்ந்து பார்க்க நல்லாயிருக்க ஒரு கிளிக்



கடைவீதிகள், வாகனங்கள்னு மேலேயிருந்து பார்க்க
நல்லாயிருந்துச்சு.




அழகான அலங்கார வளைவுகள் அவ்வளவு உயரத்துலயான்னு
ஆச்சரியம்



ரொம்ப நேரம் நிக்க விடமாட்டேங்கறாங்க செக்யூரிட்டிகள்.
ஆனாலும் கடலைபோடும் காதலர்கள் இருந்தாங்க.

இறங்கும்போதும் அதே மாதிரி படிக்கட்டுகள். கால்
தசைகளில் வலி எடுக்க ஆரம்பிச்சிருச்சு. எப்படியோ
கீழ வந்து சேர்ந்தோம்.

ஆஷிஷ் அம்ருதா சார்மினார் முன்னாடி நின்னு
போட்டு எடுத்தேன். அங்க வந்த ஒரு போட்டோகிராபர்
உங்க மொபைலில் போட்டோ பிடிச்சுத்தாரேன்னு சொல்ல
வேணாமேன்னு இருந்தேன். பசங்களும் நானும் நிக்கும்படியா
ஒரு போட்டோ எடுக்கலாமேன்னு சரின்னு சொல்ல முழு
சார்மினாரும் தெரியும் படி எடுக்க நடுரோட்டில் ட்ராபிக்கிற்கு
நடுவில் டென்ஷனோட போட்டோ எடுத்துகிட்டது செம
எக்ஸ்பீரியன்ஸ்.(ஒரு போட்டோக்கு 10 ரூபாய் சார்ஜ்
செய்யறாங்க)

இது நான் க்ளிக்கினது.



சார்மினார் வாசலிலேயே பழங்கால நாணயங்கள்
வித்துகிட்டு இருக்காங்க. நம்ம தாமரைக்காசு
போன்றவை வாங்கலாம். 5 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கும்
மேலே ரேட் வகை வகையா இருக்கு.

வெயில் அதிகம், சனிக்கிழமை என்பதால் செம கூட்டம்
என்பதால் சார்மினார்க்கு பின்னால் இருக்கும் மினார் பேக்கரியில்
உஸ்மானியா பிஸ்கட்டும், சாந்த் பிஸ்கட்டும் வாங்கிக்கொண்டு
ஆட்டோ பிடித்து அயித்தானின் ஆபிஸ் போய்ச் சேர்ந்தோம்.


சாயந்திரத்துக்கு மேலே கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சு.
சார்மினாரில் ஏறியதால் வந்த சைட் எஃபக்ட். :))
சார்மினாரில் ஏறி அயித்தான் கூட இன்னமும் பார்த்ததில்லை.
நாங்க 3 பேரும் பாத்துட்டோம்னு சந்தோஷப்பட்டுகிட்டே
கால்வலியை மறைச்சு 4 நாள் நடந்தோம்.

சார்மினார் மேலே ஏறிப்பாக்க நல்லாத்தான் இருக்கு.
இறங்கினதும் மறக்காம மெடிக்கல் ஷாப் போயி
வலி நிவாரணிகள் வாங்கிவெச்சுக்கறது உத்தமம்.


Wednesday, March 24, 2010

ஸ்ரீராமா ஸ்ரீராமா..

இது ஸ்ரீராமநவமி சிறப்புப்பதிவுன்னு நீங்க நினைச்சா
அதுக்கு நான் பொறுப்பில்லை. நம்ம அப்பாவி தங்கமணி
தொடர் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த சொல்லியிருக்காங்க.
பொண்ணு பாத்ததை கொசுவத்தியா சுத்த சொல்லியிருக்காங்க.
(உக்காந்து யோசிப்பாங்களோ)

சரி கொசுவத்திக்குள்ள போவோம்.
நான் +2 படிக்கும் பொழுது சத்யாமாமா(அம்மாவின் பெரிய தம்பி)
கல்யாணம் பழநியில் நடந்தது. பழநிக்கு வந்திருந்த மாமாவின்
நண்பர்களுக்கு ஹிந்தி அல்லது ஆங்கிலம் மட்டும்தான்
தெரியும் என்பதால அயித்தானை அவர்களுடன் போய்வரச்சொல்லி
மாமா கேட்டிருந்தார்.

ஸ்ரீராம் என் அம்மம்மாவுக்கு உறவு.(என்ன உறவுன்னு கேக்காதீங்க.
சொல்ல மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்)

மாமா கல்யாணம் முடிஞ்சு ரிஷப்ஷனுக்காக எல்லோரும்
புதுகை வந்திருந்தாங்க. அம்மம்மாவீட்டுல தண்ணி கொஞ்சம்
தட்டுப்பாடு. எங்க வீட்டுல போர் இருந்ததால மாமாவின் நண்பர்களுடன்
அயித்தானும் குளிக்க எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. பொதுவாவே
ஆண்களுடன் அதிகம் பேசக்கூடாதுன்னு அப்பா கண்டிப்பா
வளர்த்திருந்தாரு. இதுல மாமா நண்பர்கள்னா இன்னும் காத
தூரம் தான் இருந்தேன். அவங்க இருந்த ஏரியாவுலேயே நான்
இல்லை. மோட்டர் மட்டும் போட்டு தண்ணி நிறப்பிக்கொடுத்திட்டு
நான் பாட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு மதிய ஷிப்ட் பள்ளிக்கு
கிளம்பிட்டேன். பேசவே இல்லை. அம்புட்டுதான் இவரைப்பத்தி
தெரியும். அதைவிட இவரின் அக்கா,மாமா குடும்பத்தாரோடு
எனக்கு ரொம்ப பழக்கம். அவங்க தம்பி என்பது மட்டும் தான்.

அந்தக்கதை அப்பயோ முடிஞ்சிடிச்சு. நான் +2 காலேஜ் ஒருவருஷம்
முடிச்சு பாம்பே போய் வேலை பார்க்க ஆரம்பிச்சாச்சு. எங்க அவ்வா
(அப்பாவோட அம்மா)வுக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிழைச்சப்போ
என் ஒரே ஒரு பேத்தியோட கல்யாணத்தை கண்குளிர பாத்திடணும்னு
அப்பாகிட்ட கேக்க 21 வயசுலயே அப்பா ஜாதக்கட்டை எடுக்க
ஆரம்பிச்சாங்க. நான் வேற அப்ப கண்டீஷன் எல்லாம் போட்டிருந்தேனா!

அப்பா திட்டிகிட்டே மாப்பிள்ளை பாத்தாங்க. ஆனா யாரும் என்னை
பெண் பார்க்க வரலை. தாத்தாவீட்டு பங்க்‌ஷனுக்கு வந்த ஒரு குடும்பம்
துருதுருன்னு வேலைப்பார்க்கற என்னை பாத்து பிடிச்சிருக்குன்னு
ஜாதகம் கேட்டு வாங்கிட்டு போனாங்கன்னு மாமா சொன்னாங்க.

அப்ப மும்பைக்கு வேலை விஷயமா வந்திருக்கிற அயித்தான்
(நான் அங்க இருப்பது தெரியாது) சத்யாமாமாக்கு போன் செஞ்சு
பேசியிருக்காரு. சொந்தக்காரங்களுக்கு நலம் விசாரிக்கிற மாதிரி.
(அப்ப அவருக்குத் தெரியலை தனக்குத்தானே ஆப்பு வெச்சுக்கிறார்னு)

ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கன்பார்ம் ஆகியிருந்தது அயித்தானுக்கு.
”வேலை கன்பார்ம் ஆகிடிச்சின்னா பொண்ணு பாத்திர வேண்டியதுதான்”
அப்படின்னு மாமா சொல்ல ”அண்ணா பாக்க ஆரம்பிச்சிருக்காங்க”
சொல்லியிருக்காரு. வீட்டுக்கு வந்த மாமா அம்மம்மாகிட்ட நம்ம
”கலா ஜாதகத்தை வேணாம் கொடுப்போம்” அப்படின்னு சொல்ல
”சென்னை போகும்போதே நானே பேசறேன்னு” அம்மம்மா சொல்லி
ஜாதகத்தை மட்டும் அனுப்பிவைச்சிட்டாங்க.

அதுக்குள்ள எங்க அவ்வா என்னைப் பார்க்கணும்னு வரச்சொல்ல
அவங்களைப்பாத்துட்டு வரும்போது சென்னையில் வழக்கம்போல
அயித்தானோட அக்காவீட்டுக்கு போய் இறங்கி ரெடியாகித்தான்
மும்பைக்கு ட்ரையின் பிடிப்பேன். நான் போன அன்னைக்கு
தற்செயலா(நீங்க இதை நம்பணும்) சென்னையில் மீட்டிங்கிற்காக
வந்திருந்தவர் அக்காவீட்டுக்கு வந்து எதையோ கொடுத்துவிட்டு
போக வந்திருந்தார். அங்கேஇருந்த அந்தேரி தாத்தா என்னை
அறிமுகப்படுத்த “நீ தான் கலாவா?ன்னு கேள்வி” கேட்க
ஆமாம்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டேன்.
(அன்னைக்கு என் பேரைச் சொன்னவர்தான். அதுக்கப்புறம்
பேர் சொல்வதே இல்லை) :))

திருமணத்துக்கு முன்னாடியே டேப்ரிக்கார்டர், டீவி,
வாஷிங் மெஷின், கேஸ் அடுப்பு எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருக்கிறதா அவரைப்பற்றி ஒரே
புகழாரம் சூட்டினாங்க.


அம்மாம்மாவின் பிறந்தவீட்டு உறவுதான் அயித்தான்.
எனக்கு முன்னாடியே ஒரு ஜாதகம் ஆந்திரா பொண்ணு
செட்டாகும் நிலையில் இருந்திருக்கு. ராஜம் பேத்தின்னா
இதுக்குத்தான் முதலிடம்னு அயித்தானோட அம்மா
சொல்லிட அப்படின்னு நம்ம மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு.

அவரும் வரதட்சணை வேணாம்னு கொள்கையோட இருக்க,
என் பட்டுப்புடவை கண்டிஷனுக்கு ஓகே சொல்லிட்டாங்க.

அயித்தானும் என்னைப்பாத்திட்டாரு, அவங்க அக்காதான்
எனக்கு முன்னமே பழக்கமாச்சே. இதுல திடும்னு ஒரு நாள்
”பொண்ணு பாக்கணுமாம்! லீவு போட்டுட்டு சென்னைக்கு
வரச்சொன்னாங்கன்னு ”அப்பா போன் செஞ்சதா மாமா
சொன்னாரு. எத்தனை தடவை பாப்பாங்கன்னு கோவம்மாத்தான்
கிளம்பிப்போனேன். ஆனா என்னைப் பாக்கணும்னு சொன்னது
அயித்தானோட அண்ணன் குடும்பத்தினர். அவங்க அண்ணி,
பசங்க இப்படி ஒரு குடும்பம் இருக்காங்க அப்படின்னு எனக்கு
தெரியாது.

எங்க சித்தப்பா ஒருத்தர் வீட்டுல வெச்சு பெண்பார்க்கும்
படலம் நடந்தது. ”பாடெல்லாம் வேணாம்மா, ஈசியா இரு”
அப்ப்டின்னு ஆரம்பிச்ச மாமாவின் அன்பு ரொம்ப நெகிழ்வா
இருந்துச்சு. வரதட்சணை அது இதுன்னு எந்த பேச்சும்
கிடையாது. பொண்ணுக்கு நகை உங்க இஷ்டம் சொளகர்யம்
போல போடுங்க. குறைவோ, நிறைவோ எதுவும் பரவாயில்லை.
பொண்ணை அனுப்புங்க போதும்னு” சொன்ன மாமாவின் நல்ல
மனம்.

நிச்சயதார்த்தம் எல்லாம் கூட நடக்கலை. பாக்கு வெத்தலை
கூட மாத்தலை. திருமணம் பழநியில் நிறைவா நடந்தது.

என் தம்பி தான் அடிக்கடி வருத்தப்படுவான்.
பாவாவுக்கு ஆந்திரா பொண்ணு அமைஞ்சு காரசாரமா
சாப்பிட்டு நல்லா இருந்திருக்க வேண்டியது. உன் கிட்ட
மாட்டிகிட்டாரு!!! அப்படின்னு சொல்வான்.

நாம என்ன செய்ய முடியும். நம்ம கையில என்ன இருக்கு.
எல்லாம் ஆண்டவனருள் :)

தொடர் பதிவுக்கு நானும் யாராயாவது கூப்பிடணுமாம்ல.

இருங்க மாட்டிவிடறேன்.

புதுகை ப்ளாக்கர்களின் தானைத்தலைவர் சுரேகா.

சர்வேசன்

ஹுசைனம்மா

அமைதிச்சாரல்

பொண்ணு பாக்க போனதை, பாக்க வந்ததை கொசுவத்தி
சுத்துங்கப்பா


நம்பாதே நம்பாதே, ஆண்களை நம்பாதே

தங்கமணிகளுக்கு எதிரா சர்வேசனும் பதிவு போட
ஆரம்பிச்சிட்டாரு. விடலாமா. அதான் எதிர் பதிவு.
:))

எங்க அவ்வா சொல்லும் கதை இரண்டு இருக்கு
அதை இங்கே கொடுக்கிறேன்.
கதை: 1

நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய ரங்க்ஸுக்கு
நல்ல வெந்தயக்குழம்பு வெச்சு சாப்பிடணும்னு ஆசை.
மனுஷன் தங்க்ஸ் கிட்ட ,” உனக்கு இந்த வெந்தயக்குழம்பு
வைக்கத் தெரியுமா!” ன்னு கேட்க. ”தெரியாதுங்க.
ஆனா உங்களுக்காக செய்யக் கத்துகிட்டு செஞ்சு தர்றேன்னு
சொல்றா”

ஆசையா கேட்ட ஊட்டுக்காரருக்காக வெந்தயக்குழம்பு
செஞ்சு வைக்கிறா.

மனுஷன் சாப்பிட உக்காந்து வக்கணையா சோத்தைப்போட்டு,
குழம்பு போட்டு, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து
வாய்க்குள்ள போடுறார்.

செம ருசி!!! இன்னொரு கவளம் எடுத்து போடுறார்.
அப்ப ஏதோ குறையற மாதிரி இருக்கு.


கீழே விழுந்து புரண்டு கோபப்பார்வை வீசுறார்..
பயந்து போன தங்க்ஸ்,”என்னங்க ஆச்சு”ன்னு கேக்க

“வெந்தயக்குழம்பு செஞ்ச ஏன் கீரை பருப்புபோட்டு மசியல்’
செய்யலைன்னு” கேட்டு ஒரே ஆர்ப்பாட்டமாம்.

இதுதாங்க பல தங்க்ஸ்களின் நிலமை.
சொன்னது செஞ்சா அதுக்கும் மேலே, அதுக்கும் மேலேன்னு
ரொம்பத்தான் பேராசை இந்த ரங்க்ஸ்களுக்கு.

இதை தெலுங்கில ”புண்யானிகி புலுசு அன்னம் பெடிதே
தோட்டக்கூரன்னு தொல்லி தொல்லி ஏடிசினட்டா”
(போனாபோகுதுன்னு குழம்பு சோறு போட்டா
கீரை வேணும்னு விழுந்து விழுந்து அழுவது)அப்படின்னு
சொல்வாங்க.

கதை:2

இதுவும் கீரைக்கதைதான்.

ஒரு ரங்க்ஸுக்கு நல்லா கீரை மசியல் சாப்பிடணும்னு
ஆசை. தங்க்ஸ்கிட்ட அதைச்சொல்ல ,”அதுக்கென்னங்க
மத்தியானம் சாப்பாட்டுக்கே நல்லா தேங்காய், பச்சைமிளகாய்
சீரகம் அரைச்சு, பருப்பு போட்டு கீரை மசியல் செஞ்சு
வைக்கிறேன்னு” சொன்னாங்க.

வேலைக்கு போன இடத்துலயும் கீரை ஞாபகமாகவே
இருந்திருக்காரு. அதனால் 1 மணிக்கு சாப்பிட போகவேண்டிய
மனுஷன் 12.30க்கே வூட்டுல.

மத்த சமையலை முடிச்சிட்டு தங்க்ஸ் அப்பத்தான்
கீரைக்கு அரைச்சுவிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கொதிக்கும்
வாசனை ரங்க்ஸ் பசியை அதிகமாக்க தட்டைவெச்சுகிட்டு
உக்காந்திட்டாரு.

“இருங்க இன்னும் கொதிக்கலை. கொதிச்சு, கொஞ்சமா
சூடு ஆறினதும் போடுறேன்னு” சொன்னா ரங்க்ஸ்
கேட்டத்தானே!!!

இல்ல போடுன்னு சொல்ல வேற வழியில்லாம
பரிமாற ஆரம்பிக்க ஆவி பறக்கும் கீரையைப் பாத்து
குஷியாகி அது சூடு என்பதையும் மறந்து ஓரமா
எடுக்காம டக்குனு நடுவுல கைவிட சுடச்சுட இருந்த
கீரை கையை பொசுக்கிடுச்சி.

வந்துச்சே கோபம் ரங்க்ஸுக்கு. அப்படியே ஒரு உதை
கீரை மசியல் இருந்த ஏனத்தை. கீரை சுவத்துல போய் ஒட்டிக்கிச்சு.

தங்க்ஸும் பயந்து ஓரமா போய் உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க.
10 நிமிஷம் கழிச்சு கோபம் தணிஞ்சு சாப்பிட வந்த
ரங்க்ஸ் தன் ஆசை கீரை சுவத்துல இருப்பதை பாத்து
கொஞ்சமா எடுத்து சாப்பிட்டுப்பாத்தாராம்.
சூடு ஆறி சுவையா இருந்துச்சாம். உடனே ஒரே
குஷியாகி தங்க்ஸைப்பாத்து,”சுவத்துக்கறியை வழிச்சுபோடடி
சொரணகெட்ட பொண்டாட்டின்னாராம்”

யாருக்கு சொரணை இல்லன்னு படிக்கறவங்களுக்கு
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா!!
ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கேன் இது சர்வேசன்
அவர்களின் பதிவுக்கு எதிர் பதிவுன்னு. அங்க போய்
ஒரு தபா படிச்சாப்புரிய போவுது.

Monday, March 22, 2010

எல்லாத்தையும் இவங்க செய்யறாங்க, பேரு மட்டும் பெண்ணுக்கு :(

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,
குடும்பத்தின் சந்தோஷம் இருப்பது பெண்ணின்
கைலதான் அப்படி இப்படின்னு காலம் காலமாய்ச்
சொல்லிகிட்டு வர்றாங்க. ஆனா நடைமுறையில் பாத்தா
வேற மாதிரி இருக்கும்.

(இதை ஏதோ பெண்ணீயப் பதிவுன்னு நினைச்சா
மேலே படிக்க வேணாம். என்னோட பதிவுகளில்
கணவன் - மனைவி ஒற்றுமை ரொம்ப முக்கியம்னு
சொல்லிகிட்டே இருப்பேன். அதுதான் நல்ல
சூழ்நிலையை குழந்தைக்குத் தரும்.)

சரி மேட்டருக்கு வருவோம். செய்வதெல்லாம்
ஆண்கள். ஆனா பழி விழுவது பெண்ணின் மேல்.

குமுதம் சிநேகிதியில் நம்ம டாக்டர்.ஷாலினி
(உளவியலாளர்) ஆண்களை ஹேண்டில் செய்வது
எப்படின்னு தொடர் எழுதறாங்க. அவங்க தன்னோட
வலைப்பூவிலும் அதை பதிவிடறாங்க.

சமீபத்திய பதிவு பத்தித்தான் என்னுடைய இந்தப்
பதிவு.


”அவன் அப்பா பொறுப்பானவராய் இருந்து, தன் மனைவி மக்களை சரியாக பராமறித்து, தன் முதுமைக்குள், ”அப்பாடா, இதை நான் சாதித்தேன், இதனால் என் ஜென்மம் சாபல்யமாகிவிட்டது, இனிமேல் மரணத்தை நான் வரவேற்கிறேன்,” என்கிற மனநிறைவை அடைந்தவராக இருந்தால், அவர் மகனின் திருமணம் நிம்மதியாக இருக்கும். இப்படி ஒரு அப்பா சாதித்து, தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்று வையுங்களேன், அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும், குறிப்பாய் அந்த வீட்டுக்கு வாழ்க்கை படும் பெண்ணிற்கு.”

இது டாக்டர் ஷாலினி சொல்லியிருப்பது. மிக சத்தியமான
வார்த்தைகள். தன் சொந்தங்கள், பந்தங்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு கணவனை மட்டும் நம்பி கணவன் வீட்டுக்கு
அடிஎடுத்து வைக்கும் மனைவிக்கு கணவனின் அன்பும்,
அரவணைப்பும் மிக முக்கியம். அதுதான் அவளை பாதுகாப்பாக
வைக்கிறது. மாரல் சப்போர்ட் என்பார்களே அதுதான் இங்கே
அத்தியாவசியத்தேவை.


தனது கணவனை மிகச் சிறிய வயதில் இழந்த தாய்க்கு
3 குழந்தைகள். இதில் 1 ஆண், 2 பெண். ஷாலினி
சொல்லியிருப்பது போல தன் வாழ்வீன் ஜீவாதாரமாக
மகனை நம்பி அவன் மீது பாசத்தை பொழிந்து
தன் மீதும் கண்மூடித்தனமான பாசத்தை வைக்கும்
அளவுக்கு வளர்த்திருந்தாள் தாய். அந்த ஆண்மகன்
வளர்ந்து திருமணமாகி இரண்டு குழந்தைக்குத்
தகப்பன் ஆனபிறகும் தாய்க்கு மகனாக மட்டுமே
இருந்தான்.(அப்படித்தான் இருக்க வேண்டும் என
அந்தத் தாயும் விரும்பினால்) அந்தத்தாயின்
கட்டுப்பாட்டால் நல்ல கணவனாகவோ,
தகப்பானகவோ தன் பங்கைச் செய்யாமலேயே
விட்டுவிட்ட கொடுமை கண்ணாறக் கண்ட நிஜம்.


இதற்குக் காரணம் கணவனை இழந்து தனிமரமாக
நிற்கிறோமே, தன்னைக் காக்க யாரும் இல்லையே
என்று, தன் மகனை தன்பக்கமே வைத்துக்கொள்ளப்
பார்த்து இன்னொரு பெண்ணின் வாழ்வையும்
நாசமாக்கியதுமட்டுமல்லாமல் பேரக்குழந்தைகளுக்கு
தந்தையின் பாசம் கிடைக்க விடாமல் செய்ததுதான்
கொடுமை. உனக்கு என்ன வேணுமோ நான்
செய்கிறேன்! உங்கப்பாவை தொந்தரவு படுத்தாதே!
என்று சொல்லும் அளவுக்கு மகன் மீது உரிமை
நாட்டிக்கொண்டிருந்தாள்.

திருமணமாகி 30 வருடங்கள் கழித்து தாய் இறந்த
பொழுது மனைவியும், பிள்ளைகளும் அவ்வளவாக
ஒட்டாமல் தனி மரமாகிப்போனதும் கொடுமை.

இவ்வளவுக்கும் காரணம் அந்தப் பெண்ணிற்கு
கணவன் இல்லாததது. அவன் தரும் அரவணைப்பு
கிடைக்காமல் போய் தன் எதிர்காலத்திற்காக
மகனை பகடைக்காய் ஆக்கிவிட்டாள். இது
பல இடங்களில் நடக்கும் நிகழ்வு.

இப்படி பாதிக்கப்பட்ட மருமகள் தன்
மகனை சார்ந்து , அவள் மருமகள்
தன் மகனைச் சார்ந்து என இந்தச் சங்கிலி
தொடரும். எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்!!!

கணவன் இறந்துவிட்டால் ஒண்ணும் செய்ய
இயலாது. இருந்தும் இல்லாதது போல் இருப்பது
மஹா கொடுமை. சுகி சிவம் அவர்கள் மங்கையர் மலரில்
பெண்கள் பற்றி ஒரு தொடர் எழுதினார். அதில்
ஒரு ஆண் இரண்டு பெண்களை மணந்து குடும்பம்
நடத்தினாலும் அந்த இரண்டு குடும்பங்களையும்
நடத்துவது அந்த பெண்கள்தான் என்று.

ஆண் துணையில்லாமல் குடும்பத்தை தனியே
நிர்வகிக்கும் திறமை பெண்களுக்கு இருப்பதாலேயே
கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம்
கிடையாது. ஆனால் அந்த நிலையில் பெண் படும்
உளவியல் ரீதியான பிரச்சனைகள் கோடானு
கோடி.



தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
பேசுவோம் வாங்க. ஒரு ஆண் தன் மனைவியை
நல்லபடியா பாத்துக்கொண்டாலே பிரச்சனை
தீர்ந்தது. அப்பாவின் ஹஸ்பெண்டிங் திறமை
மிக முக்கியமென இந்த உளவியலார் சொல்கிறார்.

எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்.
எங்கம்மாவுக்கு பிடிச்சாமாதிரி நடந்துக்க!
என் தங்கசிக்கு நல்ல அண்ணியா இரு!
இப்படித்தான் எதிர் பார்க்கிறார்களேத் தவிர
அந்த பெண்ணிற்கும் தன்னிடம் எதிர் பார்ப்பு
இருக்கும். அதை பூர்த்தி செய்ய வேண்டியது
நம் கடமை என ஏன் புரிந்து கொள்ள மாட்டார்கள்???


கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிக்
கூட சண்டையிடலாம்! என்பார்கள்.
மனைவியை நல்ல படியாக வைத்து
காப்பாற்றும் திராணி இருந்தால் திருமணம்
செய்துகொள்ளலாம். இல்லையேல் சந்நியாசமே
மேல். ஒரு பெண்ணின் இல்லையில்லை
இரண்டு பெண்களின் வாழ்வாவது
நாசமாகாமல் இருக்கும். ஏன் இவ்வளவு கோபம் என்று
பார்க்கிறீர்களா! சில சபிக்கப்பட்ட பெண்
ஜென்மங்களைப் பார்த்ததால், அவர்கள்
அனுபவித்த கொடுமைகளைக் கண்ணாறக்
கண்டு, தெரிந்து கொண்ட கொடுமையால்
இதை எழுதுகிறேன்.

தன் காலில் நின்று சம்பாதிக்கும் பெண்ணானாலும்
நல்ல கணவன் வாய்க்காவிட்டால் அவள் வாழ்வு நரகம் தான்.
இந்தக் கொடுமைக்கு அந்தப் பெண் திருமணம் செய்து
கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். பணத்தட்டுப்பாட்டை
விட கொடுமையானது அன்புத் தட்டுப்பாடு.

தாயன்பு யாரும் கொடுக்கலாம். அண்ணன்,தம்பி
உறவுக்கூட நல்ல புரிதல் இருந்தால் உடன் பிறக்காதவர்களிடமிருந்தும்
கூட இந்தப் பாசம் கிடைத்துவிடும். பெற்றால்தான் குழந்தையில்லை,
தத்தெடுத்தும் வளர்க்கலாம். ஆனால் கணவன்
தரவேண்டிய பாசத்தை, அன்பை, புரிதலை வேறு
யாரும் தந்து விட முடியாதுதானே.

தனக்கான அன்பு கிடைக்காத ஆண்மகண் வேறு இடம் நாடலாம்.
ஆனால் அந்தப் பெண்!!!!?????? கணவன் தரவேண்டிய
அன்பு கிடைக்கவில்லை என்று வெளியிடத்தில் பெறமுடியுமா???
அப்படிபெறச்சென்றால் அவளுக்கு சமூகம் வைக்கும்
பெயர் தான் என்ன???? அப்படிப்பட்ட பெண்ணை
ஆண்கள் பார்க்கும் பார்வையின் விதம்!!!!!

ஆகவே திருமணம் செய்யும் முன் தன் மனைவியை
நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் எனும் திடமான
எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே திருமணம் செய்து
அழகான இனிய இல்லத்தை உருவாக்குங்கள்.

பெண்ணின் வாழ்வு கெடுவது மட்டுமல்ல, அடுத்த
தலைமுறையினருக்கு கிடைக்க வேண்டிய அன்பும்
அரவணைப்பும் சரியாக கிடைக்காமல் தன் சுயநலத்திற்காக
குழந்தையின் மீது தாய் அதீத அன்புக்காட்டி அவனது
நலத்தை குலைக்கும் சம்பவம்தான் நடக்கும்.

Friday, March 19, 2010

புளியோதரை மஹாத்மியம்!!!!

புளியோதரை.... பெயர் சொன்னால் போதும்
நீர் ஊறும். டூருக்கு எடுத்து போக வசதி.
இரண்டு நாளானாலும் கெடாது. என பலவிதங்களில்
புளியோதரை எல்லோருக்கும் பிடிச்சிருக்கும்.

வீட்டுல செய்யற புளியோதரையை வேணாம்னு
சொல்றவங்க கூட பெருமாள் கோவிலுக்கு போனால்
மறக்காம சாப்பிடுவது புளியோதரைதான்.

அங்க அக்காரவடிசலும், மிளகுவடையும் நல்லாத்தான்
இருக்கும். ஆனாலும் புளியோதரை வைணவத்தலங்களில்
சம்திங் ஷ்பெஷல்.






தில்லானா மோகனப்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சி.
தனது நாயனத்தை எடுத்துவரச் சொல்வார் மனோரமா.
“நீ நாயன கூட வாசிப்பியா?!!” என்பார் சிவாஜி.
“எல்லாம் தான் கத்தேன், என்ன பிரயோசனம்,” என
“இப்ப எதுக்கு நாதஸ்வரம்??!!”என சிவாஜி கேட்பார்.

“ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம்!!! உங்க நாயனத்துலதான்
அப்படி சத்தம் வருதா!! இல்ல எந்த நாயனத்துலயும் அதே
சத்தம் தான் வருமான்னு பாக்கணும்” என்பார் மனோரமா.

நாதஸ்வரத்துல என்ன இருக்கு? நாபிக்கமலத்துலேர்ந்து
நாம தரும் ஓசைதான்!”அப்படின்னு சொல்வார்.

இங்க இதை எதுக்கு சொல்றேன்னா,
அவங்க வீட்டுல,கோவில்ல செய்யற புளியோதரை
மட்டும் எப்புடி அம்புட்டு ருசியா இருக்கு? இதுதான்
விடை தெரியாத சிதம்பர ரகசியம். என்னதான்
அவங்க சொல்ற அதே ரெசிப்பில செஞ்சாலும்
அந்த டேஸ்ட் வராது.

கைமணம்தான் சமையலில் முக்கியம் என்றாலும் மத்த எல்லா
சமையலும் நல்லாச் செய்யறவங்க கூட சொதப்பும் இடம்
புளியோதரை. நான் ரொம்ப நல்லாச் செய்வேன்னு
சொல்றவங்க கூட பெருமாள் கோவில் புளியோதரை
சாப்பிடும்போது,”இந்த மாதிரி செய்யத்தான் முடியலைன்னு!”
நினைக்கத்தான் செய்வாங்க.

வைணவர்கள் செய்யும் புளியோதரைக்கு மட்டும் அப்படி
ஒரு மணம், குணம், சுவை. சிலர் எள்ளு சேர்ப்பார்கள்.
சிலர் வெந்தயப்பொடி சேர்ப்பார்கள். ஆனால் அந்தச்
சுவைக்கு ஈடு இணை எங்கும் இல்லை. திருப்பதி மட்டும்தான்
லட்டுக்கு பேமஸ். மற்ற வைணவத்தலங்களில் புளியோதரை.

அம்மா புளிக்காய்ச்சல்(புளியை அடுப்பில் வைத்து கொதிக்க
வைப்பதால் காய்ச்சல் வந்திருக்குமோ!!) செய்து வைத்து
சோற்றில் போட்டு புளியோதரை செய்வார்கள். இதற்கு
தகுந்த ஜோடி அவியல் இருந்தால் சந்தோஷம். மோர்க்குழம்பும்
ஓகே தான். :)

நானும் அம்மா மாதிரி புளிக்காய்ச்சல் எல்லாம் செஞ்சு
பாத்திருக்கேன். ஆரம்பத்துல அது மிளகுக் குழம்பு
மாதிரி வந்து அப்புறம் ஒரு ஸ்டேஜுக்கு நல்லா வந்துச்சு.
ஆனாலும் எனக்கு மட்டும் இஷ்டமே இருக்காது. நோகாம
நோன்பு கும்பிடும் என்னைப் போன்றவர்களுக்குன்னே
ஆபத்பாந்தவன் அனாத ரட்சகனா MTR, 777 போன்ற
தயாரிப்பாளர்கள் உடனடி புளியோதரை மிக்ஸ் மார்க்கெட்டில்
விட்டிருக்கிறார்கள். நமக்கு இப்ப இதுதான் ஆவி வந்தது.

அடிக்கடி செய்ய மாட்டேன். புளியோதரை கொஞ்சம்
ட்ரை என்பதால் அதுக்குத்தோதான காம்பினேஷன்ஸ்
இருக்க வேண்டும். இது அப்பாவிடமிருந்து கற்றது.
புளியோதரை, தேங்காய்ச்சாதம், தயிர்சாதம்,
சக்கரைப்பொங்கல் + அவியல், அப்பளம் அல்லது
வடகம், ஊறுகாய் இப்படி செய்ய முடிந்தால்தான்
புளியோதரை செய்வது என்பது என் திட்டம்.

இங்கே ஆந்திராவிலும் புளியோதரை மிகப்பிரபலம்.
எல்லோரும் சூப்பராக புளியோதரை செய்கிறார்கள்.
பெருமாள் கோவில் புளியோதரை மாதிரி இருக்காது,
ஆனால் சற்று வித்யாசமாக சூப்பரா இருக்கும்.
(பெருமாள் கோவில் பிரசாதத்துக்கு ஈடு இல்லைன்னு
இப்பவும் சொல்லிக்கிறேன்)

எந்த ஒரு நல்ல நாள் பெரிய நாள் எல்லாவற்றிற்கும்
புளிஹோரைதான். இங்கே புளியோதரைக்கு பெயர்
புளிஹோரை. புளியோதரை, வடை, பாயசம்
இல்லாத பெருநாள் கிடையாது. புளியோதரை
இல்லாவிட்டாலும் எலுமிச்சை சாதமாவது
செய்கிறார்கள். நிம்மபண்டு புளிஹோர என்று பெயர்.



சமீபத்தில் நடந்த ஒரு பாட்லக் கெட்டுடுகதரில் ஒரு தோழி
புளியோதரை செய்து எடுத்து வந்திருந்தார். உடனே ஒருவர்
“எங்க வீட்டுலயும் அடிக்கடி புளியோதரைதான். இங்கயும்
அதுவே வா!!”ன்னு சொல்ல அந்த தோழி சொன்னக்கதைதான்
இந்தப் பதிவுக்கு முக்கிய காரணம்.

புளியோதரை செய்து படைக்க காரணம் என்ன தெரியுமா?
சொல்றேன்.
பாற்கடலில் பிறந்த அன்னை லட்சுமிக்கு பாலில் எத்தனை
வகையாக பிரசாதங்கள் படைத்து அன்னையை மகிழ்விக்கிறோம்.

தன் தங்கைக்கு மட்டும் ராஜ உபசாரம் நடப்பதை பார்த்து
மனம் வெம்புகிறாள் லட்சுமியின் சகோதர் அலக்‌ஷ்மி.
லட்சுமி மங்களம் தருபவள் என்றால், அலட்சுமி அமங்களத்தை
தருபவள். “நான் இல்லாமல் இருந்தால்தானே உன்னருள்
மக்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படியிருக்க
எனக்கு மட்டும் நிவேதனம் ஏன் கிடையாது?” என
கோபபப்ட்டிருக்கிறாள்..

அலட்சுமியின் கோபம் தீர்க்க புளிப்பான(லட்சுமிக்கு
இனிப்பு தானே படைப்போம்) சோறு செய்து படைத்தால்
அதை உண்டு சந்தோஷத்துடன் அந்த இடத்தை
விட்டு போய்விடுவாளாம். லட்சுமி கடாட்சம் பெறத்தான்
புளியோதரையை கண்டிப்பாக பண்டிகை நாளில்
செய்கிறோம்” என்று அந்தத் தோழி சொன்னதும்தான்
இப்படி ஒரு கதை இருக்கிறது என்றே எனக்குத் தெரியும்.


இப்படியாக புளியோதரைக்கு ஒரு கதை இங்கே
உலவிக்கொண்டிருக்கிறது. ”எங்க வீட்டுல இன்னைக்கு
பூஜை செஞ்சேம்பான்னு” பிரசாதமாக புளியோதரையோ
எலுமிச்சை சாதமோ வந்துவிடுகிறது. :))

நல்லதை நாலு பேருக்குச் சொன்னா அவங்களுக்கும்
உபயோகமா இருக்குமேன்னுதான் சொன்னேன்.
விரும்பிறவங்க புளியோதரை செஞ்சு முடிஞ்சா
எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி வைச்சா சந்தோஷப்படுவேன்.

:))))))


சகோதரி. கே. ஆர். அருணா அவர்களுக்கு,

வணக்கம்,

வீட்டுவேலை செய்யும் பெண்களுக்காக “மனுஷி” எனும்
அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்காக நீங்கள்
போராடுவதாக கல்கி இதழில் படித்தேன். தங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தங்களின் அமைப்பின் பெயர் எனை மிகவும் கவர்ந்தது.
வீட்டு வேலை செய்பவரும் மனுஷி தான்.அவரைப்பற்றி
வரும் அசிங்கமான ஜோக்குகள் தடை செய்யப்பட வேண்டிய
ஒன்று.

1999ஆம் ஆண்டு வீட்டு வேலை என்பதை
அரசை ஒரு தொழிலாக ஏற்கவைத்து, 2007 ல் இவர்களுக்காக
தனி வாரியம் அறிவித்தது உங்களின் வெற்றின்னு
சொல்லியிருக்கீங்க.

சில இடங்களில் வீட்டு வேலைக்கு வரும்
பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு
ஆட்பட நேர்கிறது என பல இடங்களில் படித்திருக்கிறேன்.
இதற்கும் சிறுவயது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு
அனுப்பவதற்கும் கூட நல்ல தீர்வை நீங்கள் காண வேண்டும்.

உங்களிடம் எனக்கொரு வேண்டுகோள் உண்டு.

வீட்டு வேலைக்கு வரும் பெண் மனுஷி என்பது போல்,
தன் வீட்டில் வேலை தருபவரும் ஒரு மனுஷி என்பதை
பல நேரங்களில் வீட்டு வேலை செய்பவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

நான் ஏதோ வேண்டுமென்று குற்றம் செய்யவில்லை.
என் அனுபவம் அப்படி. என்னைப்போல அனுபவம்
பலருக்கும் இருக்கும். பேசி பார்ப்போம், கத்தி பார்ப்போம்
அப்போதும் மாறாவிட்டால் அடுத்த ஆளை வேலைக்கு
அமர்த்தி விடுவோம். :( திரும்பவும் அதே பிரச்சனை.

தங்களிடம் தமிழகம் முழுதும் 8000 பேர் பதிவு
செய்திருக்கிறார்கள் என்பது கட்டுரையிலிருந்து தெரிந்தது.
அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும்.
நம் வீட்டில் செய்யும் அதே பத்து பாத்திரம் கழுவி,
விடு பெறுக்கி, துடைப்பது தானே, எனும் ரீதியில் தான்
பலர் வீட்டு வேலைக்கு வருகிறார்கள். இந்த வேலைக்கும்
முறையான பயிற்சி தேவை.


பெருக்கினால் குப்பையை கட்டிலோ, சோபாவுக்கு அடியிலோ
தள்ளிவிடுவது, அதிகம் சோப் உபயோகித்தல், அப்போதும்
சுத்தமாகமால் எட்டிப்பார்க்கும் சோற்றுப்பருக்கைகள் என
வேலை பார்க்கும் பொழுது வேலைக்கு வைத்திருப்பவர்கள்
பாடு என்னவாகும்??

இலங்கையில் வீட்டு வேலை செய்பவர்கள் அன்னியசெலவாணி
ஈட்டித்தருப்வர்கள். வெளி நாட்டில் அதிகம் இவர்கள் தான்.
சிறந்த பயிற்சி பெற்று இருப்பார்கள். சுத்தம் சுத்தம்.
அவர்கள் வந்து சென்ற பின் வீடு பிரகாசிக்கும். இதுவும்
என் அனுபவம்.

முறையான பயிற்சி பெறுவதனால் சுத்தமாக வேலை
செய்வார்கள். இவர்களை போன்றவற்களுக்கு அதிக
டிமாண்ட் இருக்கும்.


அடுத்த விடயம் இவர்கள் எடுக்கும் விடுமுறைகள்.
சொல்லி கொஞ்சம் சொல்லாமல் கொஞ்சமென்று
எடுக்கும் விடுமுறைகளினால் படும் அவஸ்தைகள்
கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களுக்கு ஓய்வு தேவை,
உடல் நலமில்லாமல் போகும்.( வெளி நாடுகளில்
வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை.)





அலுவலகங்களில் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு
எடுத்தால் ஒத்துக்கொள்வார்களா? அது போல தானே
இங்கும். இங்கும் பார்க்கும் வேலைக்கு சம்பளம்
கிடைக்கிறதுதானே! எண்ணிக்கைகளற்ற விடுப்புக்களை
அவர்கள் குறைத்துக்கொள்வதனால் இருவருக்கும்
மகிழ்ச்சி.

மிக முக்கியமாக நான் கருதுவது அவர்களின் உடை.
வீட்டு வேலைக்குத்தானே போகிறோம் என்று
ஏத்தி கட்டிய புடவையும், அருக்கானி கொண்டையுமாக
வேலைக்கு போவார்கள். இதை கொஞ்சம் மாற்றச்
சொல்லுங்கள். அதற்காக கஞ்சி போட்ட உடை
என்று சொல்லவில்லை. படியத் தலைவாரி கொண்டால்
பார்க்க இனிமையாக இருக்கும். நம் பண்பாட்டில்
பெண்கள் பொதுவாக புடவைதான் அணிவார்கள்.
மால்கள் போன்றவற்றில் பாத்திருப்போமே அது போல்
புடவையின் மேல் சட்டை ஒன்றை போட்டுக்கொண்டு
வேலை பார்த்தால் வேலை பார்க்கும் பொழுது
புடவை அங்கே இங்கே விலகும் டென்ஷன் இல்லாமல்
இருக்கலாம்.


இப்படி உடை இருந்தால் பார்ப்பவர்களுக்கும் கொஞ்சம்
மரியாதையாக இருக்கும். இது என் எண்ணம் மட்டுமே.
வீட்டுவேலை செய்வதை ஆங்கிலத்தில் HOUSE KEEPING
என்று சொல்வார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களில்,
மால்களில் தூய்மை இவர்களின் கைவண்ணம் தான்.

இங்கே(ஹைதராபாத்தில்) வீடு பெருக்கி துடைக்க
ஒரு ஆள், பாத்திரம் தேய்க்க ஒரு ஆள் என்று
பலவீடுகளில் வைத்திருக்கிறார்கள். காரணம்
கேட்ட பொழுது ஒருவர் விடுப்பு எடுத்தால்
மற்றொருவரை வைத்தாவது வேலை செய்து
கொள்ளலாமே!! என்றார்கள்.( ஒரு வேலைக்கு
அதாவது வீடு பெருக்கி துடைக்க 500 ரூபாய்
மாதத்திற்கு.)

வீட்டு வேலை செய்யும் பெண்கள் அவர்கள் வேலை
செய்யும் வீட்டு எஜமானி அம்மாவால் கஷ்டப்படுவதைத்தான்
நீங்கள் கேட்டிருப்பீர்கள். பல இடங்களில் அப்படித்தான்.
வீட்டு வேலைக்கு வருபவர்கள் கொடுக்கும் கஷ்டங்களை
நாங்கள் யாரிடம் போய் சொல்ல முடியும்???


நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பது
போல் இதுவும்.


வேலைக்காரம்மாவின் சுயத்துக்கு தீங்கு விளைவிக்கும்
எந்த வேலையையும் வேலைத் தருபவர்கள் செய்துவிடக்கூடாது.
அந்த வீட்டில் இருக்கும் பொடிசு கூட பேர் சொல்லி
அழைப்பதோ ஏக வசனத்தில் பேசுவதோ தவிர்ப்பது நல்லது.

ஊசிப்போன உப்புமா, தண்ணிக்காப்பி போன்றவற்றை
இப்போது யாரும் கொடுப்பதில்லை. அவர்களும்
ஏற்பதில்லை. சத்தம் போடாமல் குப்பைத்தொட்டியில்
கொட்டி விடுவார்கள்.அவர்களும் மனுஷிதான் என்பதால்
நல்லவற்றை பகிர்வோம்.

வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு நிதித் தேவை,
வேலை தருபவர்களுக்கு ஆள்த் தேவை. ஒருவருக்கொருவர்
உதவி புரிந்துகொள்கிறார்கள்.இதை நன்கு இருவரும்
புரிந்து கொண்டால் பலப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
இதுதான் என் எண்ணம். என்வீட்டில் வேலைக்கு
வருபவர்களிடமும் இதுதான் சொல்வேன்.

என் வேண்டுகோளை ஏற்று அதற்கு ஆவன
செய்து தங்களிடம் பதிந்திருக்கும் 8000 பேருக்காவது
பயிற்சி கொடுத்தால் அவர்கள் வேலைக்கு போகப்போகும்
வீட்டுக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள். விரைவில்
உங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகும்
பொழுது மேலும் மேலும் நல்ல வேலைக்காரர்கள்
கிடைப்பார்கள்.


இந்த மடலை கல்கி இதழுக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி சகோதரி.

Thursday, March 18, 2010

எல்லோரும் நலமா???

ஹாய் ஹாய் ஹாய்!!!

என்ன காணம போயிட்டேன்னு நினைச்சீங்களா?
அதென்னவோ தெரியலை மொதோ தபா
பதிவெழுதக்கூட நேரம் இல்லாம பிசியாகிட்டேன்.
எனக்கே இது ஆச்சசரியமா இருக்கு!!

பசங்களுக்கு பரிட்சை நடந்துகிட்டிருந்த போது
கொஞ்சம் பிசியாக ஆரம்பிச்சேன். தெலங்கானா
பிரச்சனைகளினால பள்ளிகளுக்கு அதிகமா லீவு
விட நேர்ந்ததால் போர்ஷன்ஸ் முடிக்க முடியாம
வெறும் கேள்வி-பதில்களைமட்டும் சில
பாடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை.
அவங்க விட்டுட்டாங்களேன்னு நானும் விட
முடியுமா? கடைசி நேரம் வரை விளக்கம் சொல்லி
பரிட்சைக்கு தயார் செஞ்ச்சேன்.

மாமா மறைந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இந்த வருடத்தில் எத்தனை முறை,” ஏன் மாமா
இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போனீங்கன்னு?”
கேட்காத நாள் இல்லை. இன்னமும் வருத்தம்
தான். பெங்களூரில் மாமாவின் திவசங்கள்
நடந்தன. அந்த நேரம் மிகச் சரியா பசங்களுக்கு
பரிட்சை நேரம். நானும் குழந்தைகளும் போக
முடியவில்லை. அயித்தான் மட்டும் போனார்.
மனதுக்கு அதுவும் வருத்தமாகிடிச்சு. ”என் மூத்த
மருமகள் நீதான்னு?” சொன்ன மாமாவுக்கு
செய்யும் வாய்ப்பு கிடைக்கலியேன்னு தான்
வருத்தம்.

வீட்டில் அவரது படம் வைத்து, பூ போட்டு
பழங்கள் வைத்து படையல் கொடுத்தேன்.


எப்பவும் எல்லோருக்கும் சரியா பிறந்த நாள்
வாழ்த்து, திருமண வாழ்த்து சொல்லிடுவேன்.
இந்தத் தடவை அதிலும் ஒரு சொதப்பல்.
அயித்தானோட அண்ணன் மகனுக்கு இந்த மாதம்
பிறந்த நாள். ஊருக்கு போனவரிடம் ஞாபகமாக
ட்ரெஸ் வாங்கிக்கொடுத்துவிட்டேன். அயித்தான்
போன அன்று அண்ணன் மகனின் நட்சத்திர
பிறந்த நாள்(எனக்கு டேட் தான் ஞாபகம் இருக்கும்)
ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அவரின் பிறந்தநாள்
நம் ஆங்கில காலண்டர் படி. காலையில்
எழுந்த போது ஞாபகம் இருந்தது. சரி அயித்தானும்
பிள்ளைகளும் எழுந்ததும் வாழ்த்து சொல்லலாம்னு
நினைச்சிருந்தேன். வர இருக்கும் பெருநாளுக்கு
சாமான் வாங்குவது அது இதுன்னு மறந்தே விட்டேன்.

சாயந்திரம் 5.30 மணி இருக்கும் போன் வந்துச்சு.
”இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமான்னு?’
அயித்தானை கேட்க அவரு யோசிச்சுகிட்டே தெரியலை?ன்னு
சொல்லிட்டார். அயித்தானுக்கு செக்கரட்டரி நான் தான்
எல்லா நாளும் நான் தான் ஞாபகமா வெச்சிருந்து
வாழ்த்து சொல்லச் சொல்வேன். யாருப்பா? போன்ல
கேட்டேன். கிருஷ்ணா, இன்னைக்கு என்ன நாள்னு
தெரியுமான்னு! கேட்டதாச் சொல்லவும்
“ஐயோ, இன்னைக்கு அவருக்கு பிறந்த நாள்பா!”
அப்படின்னு சொல்லவும் சித்திகிட்ட போனைக்குடுன்னு
சொல்ல என் கிட்ட கொடுத்திருக்காரு. “எப்பவும்
காலேலேயே உங்க போன் வரும். உங்க வாழ்த்து
தான் முதல் வாழ்த்தா இருக்கும்! சாயந்திரம் வரைக்கும்
போன் வரலைன்னதும் என்னாச்சு? உடம்பு சரியில்லையான்னு”
கேட்கலாம்னு தான் போன் செஞ்சேன்னு சொல்லவும்
மனசு ரொம்ப பாரமாச்சு!என்னைவிட 6 மாதம் சின்னவர்.
ஆனாலும் சித்தின்னு தான் அழைப்பார்.

மாமா,அத்தை(அவங்க அப்பா,அம்மா)வைவிடவும்
முதலில் என் வாழ்த்துதான் அவருக்கு எப்போதும்
கடந்த 15 வருஷமா இதுதான் பழக்கம். இதுல
மாற்றம் ஆனதும் வருத்தப்பட்டுட்டார்.

இனி இந்த மாதிரி இன்னொரு தடவை செய்யக்கூடாதுன்னு
முடிவு பண்ணிட்டேன்.

யுகாதி மாமா இறந்த ஒரு வருட துஷ்டிக்கு பிறகு நாங்கள்
கொண்டாடும்முதல் பண்டிகை. இது தெலுங்கு கன்னடர்களின்
வருடப் பிறப்பு.

காலையிலேயே அனைவருக்கும் போன் போட்டு
வாழ்த்து சொல்லிட்டோம். கிருஷ்ணாவுக்கு போன் போட்டதும்
என் மருமக ,”உங்க போனுக்கு எப்பவும் காத்திருப்போம்,
போன் வந்ததும் சந்தோஷம் ஆயிடிச்சின்னு” சொல்ல
பர்த்டேக்கு வாழ்த்து சொல்ல மறந்து வருத்தப்பட
வெச்சதுக்கு காம்பன்சேட் செஞ்சிட்டேன்னு சந்தோஷப்பட்டுகிட்டேன்.

என்னென்ன சமைச்சேன்னு சொல்றேன். காதுல புகை விட்டுக்கோங்க.
யுகாதி ஷ்பெஷல் யுகாதி பச்சடி,(வேப்பம்பூ, வெல்லம், புளி,
மாங்காயத்துருவல், சிட்டிகை உப்பு போட்டு செய்வது) போளி,’
வடை, பாயசம், முருங்கை சாம்பார், சூப்பரா தக்காளி ரசம்,
வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி, மாங்காய் கல்யாண ஊறுகாய்,
அப்பளம் அம்பூட்டே தான். :))) (சேர்க்க மறந்தது
எலுமிச்சை சாதம், வெண்டைக்காய் பொரியல்)

இதுல சூப்பர் மேட்டர் என்னன்னா? தெலுங்கில் சூப்பரா
சமையல் செய்பவர்களை,” வண்டலோ சை திருகின மனுஷி”
அப்படின்னு சொல்வாங்க. அதாவது சமையலில் கை தேர்ந்தவர்
என்பது போல இங்கே கை திருகி போன ஆள்.

நிஜமாவே போளிக்கு பூரணம் செஞ்சு, போளி தட்டின்னு
வலது கை வீங்கி திருப்ப முடியாம ஆகிடிச்சி. :))
ரெண்டு நாளா கைக்கு செம ரெஸ்ட். நோ குக்கிங்.
இப்ப கூட ஜூட் விடப்போறேன். (ட்ரை பேண்டேஜை
எடுத்துட்டு மெயில் செக்கிக்கறேன்பான்னு ப்ர்மிஷன்
கேட்டுட்டு பதிவு போட்டா அயித்தான் சாயந்திரம்
வந்து மொத்தினாலும் மொத்துவார்) :)))


யுகாதி ஷ்பெஷல் கிஃப்ட் ஆனந்த விகடனிலிருந்து.
கானக்கந்தர்வன் வலைப்பூ விகடன் வரவேற்பரையில்
வந்திருக்குன்னு அமைதிச்சாரல் பதிவு போட்டிருந்தாங்க.
நன்றி அமைதிச்சாரல். பதிவு இங்கே.


Friday, March 12, 2010

கிரிக்கெட்டும் நானும்!!

அப்பொழுதெல்லாம் ரேடியோவில் வரும் கமெண்ட்ரிகள்தான்.
நாம் கேட்கும் நாடகமோ,சினிமா பாடலோ கேட்க முடியாமல்
போகும். 10 வயதில் கிரிக்கெட் மீது அவ்வளவு மோகம்
இருந்ததில்லை. எனது பள்ளி நண்பன் ஸ்ரீதர் வீட்டில்(ஸ்ரீதரின்
தாத்தா தான் எனக்கு ட்யூஷன் வாத்தியார்) ராஜா அண்ணா,
சிவா அண்ணா, ஸ்ரீதர், அவன் தம்பி சங்கர், தாத்தா எல்லோரும்
கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே வீட்டின் முன் விளையாடும்
காட்சி பாத்திருக்கிறேன். இப்படித்தான் கிரிக்கெட் அறிமுகம்.

அப்பாவுடன் சேர்ந்து அவரின் நண்பர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது கொஞ்சம் விரும்ப
ஆரம்பித்தேன். அப்பாவே வீட்டில் டீவி வாங்கிய பிறகு
ஆரம்பமானது ஆட்டம்.

சாப்பிட எப்போ வருவீங்க? எனும் அம்மாவின் கேள்விக்கு
”இன்னிங்க்ஸ் முடிஞ்சு லன்ச் ப்ரேக்ல” என கோரஸ் போடுவோம்
நான், அப்பா, தம்பி மூவரும். அந்தப் பக்கம் இந்தப்பக்கம்
நகர மாட்டோம். இதில் அப்பாவுக்கு ரன் ரேட் உடனுக்குடன்
நாங்கள்தான் சொல்ல வேண்டும். (கணக்கு பாடம்
அப்போதும் நடக்கும்ல) எப்படி ரன் ரேட் கண்டுபிடிப்பதுன்னு
சொல்லிக்கொடுத்தது அப்பா தான். ஓவரை எடுத்திருக்கும்
ரன்னில் வகுத்தால் ரன் ரேட் வரும்.

சிமெண்ட் தரைதான் எங்க வீட்டில். அந்தத் தரையில்
சாக்பீஸ் வைத்து ரன் ரேட், ஸ்கோர் எல்லாம் எழுதி
வைத்து அடுத்து விளையாடுபவர்கள் ஜெயிக்க முடியுமா
என சர்ச்சை செய்து.... என அந்த நேரம் களேபரமாக
இருக்கும் வீடு. அம்மா வேறு வழியில்லாமல் தூங்கப்போய்விடுவார்.
ஹாலில்தான் டீவி. அவ்வாவின் கட்டிலும் அங்கேதான்.

வேற வழியில்லாமல் திட்டிக்கொண்டே கிரிக்கெட் பார்ப்பார்.
”பிடிடா, பிடிடா.. சும்மா தண்டத்துக்கு நிக்கறான். ஓடினா
என்ன? ” உன்னால தான் கேட்ச் போச்சு, நீ வீட்டுக்கு போய்
சாப்பிட்டு தூங்கு” இதெல்லாம் அவ்வாவின் கமெண்ட்ஸ்.
சாம்பிளுக்கு கொஞ்சம் தான் கொடுத்திருக்கேன்.

கிரிக்கெட் பைத்தியம் முத்திப்போய் ஒவ்வொரு வீரரைப்
பற்றிய குறிப்புக்கள் வயது, விளையாட ஆரம்பித்தது,
எவ்வளவு ரன் கள் எல்லாம் விவரமாக எழுதி படத்துடன்
ஒரு நோட்புக் தயார் செய்திருந்தேன். அப்பா பார்த்து
ரொம்ப சந்தோஷப்பட்டார். அடுத்த முறை மேட்ச்
ஆரம்பிக்கும் பொழுது இதே போன்ற விவரங்கள் டீவியில்
தெரியும் பொழுது ஏதும் விட்டுப்போயிருந்தால் குறித்து
வைத்துவிடுவேன்.


எனக்கு கிரிக்கெட் விளையாடுவதை விட பார்க்க
ரொம்ப பிடிக்கும். அப்பா சொல்லிக்கொடுத்துதான்
வ்யூகம் எப்படி அமைக்கிறார்கள் என்பதெல்லாம்
தெரியும். அப்பாவும் தம்பியும் வீட்டிலேயே
கிரிக்கெட் விளையாடி அம்மாவுக்கும், பாட்டிக்கும்
டென்ஷன் ஏற்றுவார்கள்.


எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால்
அது சந்தேகமே இல்லாமல் கபில் தேவ்தான்.
ஆல் ரவுண்டர். பல மேட்சுகளில் முதல் ஓவர்
கபில்தன். கண்டிப்பாக மெய்டன் ஓவர் + ஒருவிக்கெட்
ஆவது எடுத்துவிடுவார். அப்படியானால் அந்த
மேட்சில் நாம் ஜெயித்துவிடுவோம் என்பது
என் செண்டிமெண்ட். அதற்காக கபிலுக்கு
பிரார்த்தனை நடக்கும்.

தன்னருகில் வரும் பந்தை கீழே குனிந்து
எடுக்காமல் கால்மேலே ஓடிவர
வைத்து கபில் எடுக்கும் பாணியே அழகு.




எந்த வருடம் என ஞாபகம் இல்லை. பொங்கல்
அன்று கிரிக்கெட் மேட்ச். அம்மாவிடம் திட்டு
வாங்கிக் கட்டிக்கொண்டு பழியாக டீவி முன் இருந்தோம்.
மேட்ச் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கபிலின்
பேண்ட் கிழிந்துவிட ஒரு பெரிய துணியை பின்னாடி
செருகிக்கொண்டு அந்த மேட்சில் ”பொங்கல் ஷாட்”
அடித்து வெற்றி வாகை சூடினார்.

கபில்கிரிக்கெட்டுக்கு டாடா காட்டிய அன்றோடு
நானும் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.

கபில் வீட்டிற்கு வந்து பாயசம் குடித்த மாதிரி
எல்லாம் தம்பி கனவு கண்டிருக்கிறான். :)

அடுத்து எனக்கு பிடித்தது ஸ்ரீகாந்த். மூக்கை மூக்கை
உறிஞ்சிக்கொண்டு, அடிக்கடி ஆகாசத்தை பார்த்துக்
கொண்டு என அவரது மேனரிசங்கள், வந்தமோ
அடிச்சமோ, போனமா எனும் பாணி எல்லாம்
ரொம்ப பிடிக்கும். ஆதித்ய ஹுருதயம் எனும்
சூரிய வழிப்பாட்டு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டுதான்
அவர் விளையாடுவதாக தெரிந்து எங்கும் எப்போதும்
பிரார்த்திக்கலாம் எனும் எண்ணம் எனக்கு வந்தது.
சீகா என செல்லப் பெயர் இவருக்கு வைத்திருந்தேன்.



சென்னையில் நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில் ஒரே
நாளில் 14 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்த
நரேந்த்ர ஹிர்வானியை மறக்க முடியுமா??


ஆஸ்த்ரேலிய கேப்டன் ஆலன் பார்டர் மிக இஷ்டம்.



DAVID BOON இவரை மறக்கவே முடியாது. அந்த பெரிய
உருவத்தை எடுத்துக்கொண்டு செம ஆட்டம்.


இலங்கையின் துலிப் மெண்டிஸ் பிடிக்கும்.


இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் தான் ஃபைனல்ஸுக்கு வரவேண்டும்
என பலரும் விரும்புவார்கள்.

இம்ரான் மிக மிக பிடித்த ஆட்டக்காரர்.


முதாஸர் நஸர். இவருக்கு நெற்றியில் நீளமாக
திருமண் போட்டுவிட்டால் ஸ்ரீரங்கம் பக்கம் அனுப்பி
வைக்கலாம். நீண்ட மூக்கு இந்திய முகம்.


மறக்க முடியாத இன்னொரு வீரர் sir-richard-hadlee.
விக்கெட்டை வீழ்த்தும் மந்திரத்தை பந்துக்கு சொல்லிக்
கொடுக்கும் மந்திரக்காரர் என பத்திரிகைகள் புகழாரம்
சூட்டும்.



இந்த சிரிப்பில்தான் ஹிந்தி நடிகை நீனாகுப்தா மயங்கி
போயிருக்க வேண்டும். அட்டாகசமாக நடந்து வந்து
அனாயசமாக ஆடும் viv-richards.




எத்தனையோ நினைவுகள் கிரிக்கெட்டை பற்றி. ஒவ்வொரு
ஆட்டக்காரரும் என்னவோ என் சொந்தம் போல வேறு
நாடாக இருந்தாலும் அவர்களது ஆட்டத்தை ரசித்திருக்கிறேன்.

அதன் பிறகு கிரிக்கெட் பார்க்க மனதே இல்லை. கபில் இல்லாத
மேட்சை என்ன பார்ப்பது? எனும் எண்ணம் தான்.” பூஸ்ட் இஸ்
த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி” என கபிலுடன் விளம்பரத்தில்
வந்த சச்சின் இப்போதும் ஆடி இந்தியாவுக்கு பெருமை
சேர்க்கிறார். பாராட்டுக்கள்.

இன்று IPL மேட்சுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
இன்றோடு பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் பிள்ளைகள்
இருவரும் திருவிழாவுக்கு தயாராகிவிட்டார்கள்.
DECCAN CHARGERS, MUMBAI INDIANS, CHENNAI SUPER KINGS
இந்த மூன்று அணிக்கும் தான் வீட்டில் சப்போர்ட்
நடக்கிறது.

அடுத்த தலைமுறை கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து
விட்டது.


என்னையும் இழுத்து டீவி முன் உட்கார வைத்துவிட்டான்
மகன். முதல் பந்து கபில் போல் விக்கெட் எடுத்தார்
சமிந்தா வாஸ். என் நினைவுகள் பின்னோக்கி ஓடின.


Wednesday, March 10, 2010

”போடு தாளம் போடு”

டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வெளியே
ஆடாட்டியும் மனசுக்குள்ள ஒரு குத்தாட்டம் ஓடிகிட்டே
இருக்கும். அப்பாவுக்குத் தப்பாம பிறந்திருக்கும் ஆனந்பாபு
நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிரபல நடிகர் நாகேஷின் மகன் என்ற அறிமுகம்
இருந்தாலும் நடனத்தால் தனக்கென ஒரு இடம்
பிடித்தவர் ஆனந் பாபு.

1985ல் வந்த பாடும் வானம்பாடி படத்தில் ஹிந்தி
மிதுன் சக்கரவர்த்தியை விட மிகச் சிறப்பாக
ஆடியிருக்கிறார் என்பது என் எண்ணம்.

வாழும் வரை போராடு வழி உண்டு என்றே
பாடு. நாகேஷின் இந்தப் பாடல் சூப்பர்



ஐம் எ டிஸ்கோ டேன்ஸர்னு ஆடும் பாடலைத்
தேடினேன் கிடைக்கலை. :(

இந்த படம் அப்போது புதுகையில் எஸ்.வீ. எஸ்
தியேட்டரில் ஓடி செம கலெக்‌ஷன். வெற்றிவிழாவுக்கு
ஆனந்பாபு புதுகைக்கு வந்து ஒரே ஒரு நடனம்
மட்டும்தான் ஆடினார்னு பாத்தவங்க வருத்தப்பட்டாங்க.

அவ்வளவு க்ரேஸ் அவரின் நடனம் மேல் பலருக்கும்
இருந்திருக்கு.

சேரன் பாண்டியன் படத்திலும் நல்ல நடிப்பு.

புது வசந்தம் படத்தில் சரி நடனம். ”ஆடலுடன்
பாடலைக்கேட்டு” பாட்டின் நடனத்தின் போது
திரையைச்சுத்தி லைட்டிங்க்ஸ் எல்லாம் கொடுத்திருந்தார்கள்
எங்க ஊர் சாந்தி தியேட்டர் காரர்கள். அந்த
படத்தில் வரும் ”போடு தாளம் போடு”
என் ஆல்டைம் ஃபேவரிட்.



தனக்கென ஒரு பாதை வகுத்து போய்க்கொண்டிருந்தவர்
தன் வாழ்க்கையில் தடுமாறி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்து தற்போது ஏதோ
ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி.

நேற்று புதுவசந்தம் படம் பார்த்தேன். எனக்குப் பிடித்த
நடிகரின் நடனம் பார்த்து பரவசமானேன். அதை இங்கே
பகிர்கிறேன்.


Tuesday, March 09, 2010

டெலிபோன் கொசுவத்தி

டெலிபோன் இது ஏதோ பணக்காரர்கள் வீட்டு சாதனமாத்தான்
இருந்துச்சு. டெலிபோன்ல பேசுவதெல்லாம் ஒரு 15 வருசத்துக்கு
முன்னாடி சாதாரண விஷயமில்லை. ரொம்ப அவசியம்னா
வீட்டுப்பெரியவங்க மட்டும் பேசுவாங்க.(இப்ப குட்டி குழந்தைக்கு
கூட செல்போன்னா என்னன்னு தெரியும்)


தொலை பேசியில பேசும் வாய்ப்பே எனக்கு இல்லாம
இருந்துச்சு. மும்பையில வேலை பாத்துகிட்டு இருந்தப்போ
சின்னதா இருந்த எங்க ஆபிஸை பக்கத்துல இருந்த
பெரிய கட்டிடத்துக்கு மாத்தினாங்க.

அங்கே வேலைகள் நடக்கும் பொழுதே PARESH எனும்
அலுவலக் நண்பன் வந்து, அங்கே ஒவ்வொருவருக்கும்
எக்‌ஷ்டன்ஷன் போன் இருக்கு!, 3 போன் கனெக்‌ஷன்ஸ்
இருக்கு! நீ தான் டெலிபோன் ஆப்பரேட் செய்யப்போறியாம்!
கேள்விபட்டேன்னு!! சொன்னதுலேர்ந்து செம டென்ஷன்.
எனக்கு எந்த ந்யூஸும் வரலை. கணபதி சுப்பிரமணியம்
சார்தான் அப்ப மேனேஜர். “பரேஷ் ஏதோ சொல்றாப்லயே!
எனக்கெல்லாம் டெலிபோன் பேச வராது! நான் மாட்டேன்னு”
சொல்ல,” அதெல்லாம் முடியாது நீ தான் செய்யறன்னு”
கட்டாயமா சொல்லிட்டார்.

நான் அங்க அப்ப டைப்பிஸ்டாத்தான் வேலை பாத்துகிட்டு
இருந்தேன். சரி டைப்பிங் எப்பவுமா இருக்கப்போவுது,
இதுவும் செஞ்சு பாக்கலாம்(பாத்துதானே ஆகணும்)னு
நினைச்சாலும் மொழி கொஞ்சம் பிரச்சனை. ஹிந்தி
நல்லா வரும். ஆங்கிலம் கூட ஸ்டார்ட் செஞ்ச வந்திடும்.
மராத்தி!! எங்க கம்பெனிக்கு பல மராத்தியர்கள் க்ளையண்ட்.

அம்மம்மாகிட்ட வந்து சொன்னேன். சாமியை மனசுல
வேண்டிக்கோ, எப்படி செய்வதுன்னு தெளிவு உனக்கு
கிடைக்கும்னு சொன்னாங்க.

புது கட்டிடத்துக்கு போனதுக்கப்புறம் டைப்பிங்கைவிட
கம்ப்யூட்டர், பெட்டிகேஷ், டெலிபோன் ஆப்பரேட்டிங்
எல்லாம் என் தலையில். :(

என்னோடு வசாயிலிருந்து வரும் தோழி ஒருவர்
மும்பை டெலிபோன்ஸில் வேலை. அவரிடம்
கேட்டு எப்படி பேசுவதுன்னு 4 நாளைக்கு ட்ரையினில் ட்ரையினிங்
எடுத்துகிட்டேன். பேசுபவரின் முகம் தெரியாது
என்பதால் கவனமா பேசு, இதமா பேசு, பதட்டப்படாதேன்னு
சொல்லிக் கொடுத்தாங்க.

ஒரு நாள் கணபதி சார் வந்து ஒரு பத்திரிகையைக்
கொடுத்து,” இதற்கு டெலிபோன் மூலமா வாழ்த்து
தந்தி அனுப்பிடு”! சொல்ல அது எப்படி செய்வதுன்னு
தெரியாது சார்னு சொல்ல “ அனுப்பிட்டு எனக்கு
கன்பர்ம் செய்யுன்னு போயிட்டார்!”

டெலிபோன் டைரக்டரியை புரட்டி எக்சேஞ்ச் நம்பரை
எடுத்து அவர்களுக்கு சொன்னா நம்ம போன் நம்பரை
வாங்கிகிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்களே கூப்பிடுவாங்க.
என்ன மெசெஜ் அடிக்கணுமோ அந்த நம்பரைச் சொல்லி
அட்ரஸ் சொன்னா மெசெஜ் அனுப்பிடுவாங்க. அதற்கான
தொகையை அடுத்தமாத பில்லில் சேத்திடுவாங்க.

செஞ்சிட்டு சாரிடம் கன்பர்மேஷன் நம்பர் கொடுத்தேன்.
“என்னமோ பயப்பட்டியளு! இப்ப எப்படி முடிஞ்சுதாம்”
அப்படின்னு கேட்க தண்ணியில தூக்கிப்போட்டா
நீச்சலடிச்சுத்தானே சார் ஆகணும்னு கேக்கவா முடியும்.


ஒரு முறை எங்க எம்டீ வந்திருந்த நேரம். அவசரமா
international call உடனடியா செய்ய வேண்டும்.
எங்க போன்ல எதுக்கும் அந்த வசதி இல்ல. எப்படி
செய்வதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தாங்க. என் ட்ரையின்
ஃப்ரெண்ட் JAYA BANE international call புக்கிங்க்ல
தான் இருந்தாங்க. அவங்க எக்‌ஷ்டன்ஷனுக்கு போன்
செஞ்சு புக் செஞ்சு கொடுத்தேன். செம பாரட்டு.

ஒரு முறை கஸ்டமர் ஒருவர் போன் போட்டு கத்திகிட்டு
இருந்தார். அவரோட பேச வேண்டிய அலுவலக நண்பர்
கீழே சின்ன அலுவலகத்தில் இருந்தார். கஸ்டமரை
ஹோல்டில் வைத்துவிட்டு அந்த நபரை அழைத்து உங்க
கிட்ட பேசணுமாம், பேசுங்கன்னு சொல்ல,”அந்தாளு
சுத்த வேஸ்ட், நான் பேசமாட்டேன், இல்லைன்னு
சொல்லிடுங்கன்னு”சொன்னாரு.

நானும் அப்படியே சொல்லிட்டு வெச்சிட்டேன்.
திரும்ப திரும்ப அந்த கஸ்டமர் போன் செஞ்சு
கத்திகிட்டு இருக்க லைனை கீழே கனெக்ட் செஞ்சிட்டு
வச்சிட்டேன். பேசிமுடிச்சிட்டு அந்த நபர் மேலே
வந்து செம காச்சு காச்சினார். மேனேஜரும்
அவருக்கு சப்போர்டா பேச(எம் டீயோட ஆள்)
வந்த கோபத்துல எம் டீயோட ஆள் என்பதால்
அவருக்கு சப்போர்ட் செஞ்சு பேசறீங்க! அப்படி
இப்படின்னு நானும் இரண்டு பேரையும் காச்சியது
அன்னைக்குத்தான்.

வடுமாங்காய் கடிச்சா மாதிரி நறுக்குன்னு பதில்
சொல்வீங்க தெரியும்! கடுகு பொரிச்சாப்ல பொறிஞ்சு
தள்ளிட்டீங்களாமேன்னு! அஸிஸ்டண்ட் மேனேஜர்
கேட்கும் அளவுக்கு என் கோபத்தை முழுமையா
வெளியில் காட்டியிருந்தேன். என் மேல் தவறில்லைன்னா
எந்த இடத்திலும் போராடுவேன். தவறுன்னா
ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்பேன்.

டெலிபோன் பத்தி நினைக்கும்பொழுது இவரை நான்
நினைக்காமல் இருக்க முடியாது. மாமா கம்பெனி
டெலிபோன் ஆப்பரேட்டர் த்வனி தான் அவர்.
நான் வேலை பார்த்த கம்பெனியின் சில
விடயங்களை சத்யாமாமா வேலைப்பார்த்த
கம்பெனிகாரர்கள் பார்த்துக்கொடுத்ததால்
அடிக்கடி டெலிபோன் போட்டுக்கொடுக்க
வேண்டியது என் வேலையாக, த்வனி தோழியாகிவிட்டார்.

பலமுறை போனில் பேசியிருப்போம்.
ஒருமுறை கூட நேரில் சந்தித்ததே கிடையாது. மிக நல்ல குரல்.
உங்கள் பெயருக்கேற்ற குரல்வளம் என பாராட்டியிருக்கிறேன்.
நான் போன் செய்யும் பொழுது மாமாவிடம் பேசுவதற்கு முன்
த்வனியுடன் 2 நிமிடம் பேசிவிட்டுத்தான் மாமாவிடம்
பேசுவேன். ஃப்ரெண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தியான்னு?”
மாமாவும் கட்டாயம் கேட்பார்.

சந்திக்காமலே போனது வருத்தம் தான்.
இப்பவும் ஒவ்வொருமுறை தொலை பேசி
ஒலிக்கும்பொழுதும் இந்த நினைவுகள் வராமல்
இருந்ததில்லை.

Monday, March 08, 2010

மகளீர் தின சிறப்பு பதிவு போடவில்லை.

மகளீர் தின சிறப்பு பதிவு போடவேண்டும் என நினைத்தேன்.
ஆனால் மனமே இல்லை. ஒரு நாள் மட்டும் மகளீர் தினம்
அது இது என்று சொல்லி நம்மை நாமே தேத்திக்கொள்கிறோமே
தவிர நிஜத்தில் நடப்பது என்ன? எத்தனையோ முன்னேற்றங்கள்
இன்றைய பெண்கள் வாழ்வில். மறுக்க வாய்ப்பில்லை. அதே
சமயம் சமூகத்தில் பெண் இப்போதும் போகப் பொருளாகத்தான்
பார்க்கப்படுகிறாள்.

ஒரு நாள் இரவு 9 மணி வாக்கில் நானும் அயித்தானும்
கடைக்குச் சென்றோம். அவர் ஒரு கடையில் வாங்கிக்
கொண்டு இருக்க 2 நிமிட தூரத்தில் இருக்கும் ஸ்வீட்
ஷாப்பில் தயிர் வாங்கப்போனேன். கொஞ்சம் இருட்டுதான்.
வேகமாக நடந்த என்னை எதிர் நோக்கி வந்த ஆண்
சொன்ன வார்த்தைகள் கை கால்கள் வெல வெலத்து
போய்விட்டன. தயிரை வாங்கி வந்து அயித்தானின்
கைபிடித்தபடிதான் வீடு வந்து சேர்ந்தேன்.நடந்ததை
அவரிடமும் சொன்னேன்.


திருமணமான, இரண்டுகுழந்தைக்கு தாயான எனக்கே
இந்த நிலை என்றாள் நாளை என் பெண் எப்படி?
தனியாக வளைய வருவாள். சமூகம் பாதுகாப்பாக
இல்லை.

என்னை 6 வயதில் அப்பா தனியாக கடைக்கு
அனுப்பி பழக்க படுத்தினார். இன்று என் மகளை
தனியாக அனுப்பி விட்டு நெஞ்சு அடித்துக் கொள்கிறது.
எத்தனை கதைகள் படிக்கிறோம்.

பெண் போதைப்பொருள் என்னும் எண்ணத்தை
ஆணின் மனத்திலிருந்து எடுக்காவிட்டால் எந்த
முன்னேற்றமும் வந்துவிடாது. 33% சதவிகிதம்
கொடுத்தால் மட்டும் முன்னேற்றம் வந்துவிடுமா?
அந்த எம் எல் ஏ, எம்பிக்கள் வேண்டுமானால்
சொத்து சேர்க்கலாம். வேறெதுவும் நல்லவிதமாக
நடக்கும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை.


காப்பி, சோப், இப்படி பல விளம்பரங்களுக்கு
கவர்ச்சியான உடையணிந்த படி வரும் பெண்களை
என்ன செய்தாலும் தகும். அப்படி உடை அணிய
மாட்டேன் என்று சொல்லாமல் இவர்கள் அணியும்
அரைகுறை ஆடைகள் மேலும் பெண்கள் மீது
தவறான எண்ணத்தையே தருகிறது. இவற்றுக்கெல்லாம்
ஒரு அமைப்பு இருந்து அப்படிபட்ட விளம்பரம்
எடுக்கப்படாமல் தடுத்தால் தான் உண்டு.

விஜய் மல்லய்யாவின் கிங்ஃபிஷர் காலண்டர்கள்
உலகப்ரசித்தம். அதுவும் அதில் எல்லாம் டூ பீஸ்
பெண்கள்தான். சென்ற வருட ஆள்பிடிப்புக்கு
நடுவர்களில் ஒருவர் நம்ம மாதவன். ஆளை செலக்ட் செய்வதை
டீவியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல்
பார்க்கும் படி சொல்லி கேட்டுக்கொண்டு போட்டார்கள்.
வந்த க்ளிப்பிங்க்ஸையே பார்க்க முடியவில்லை.

தன் உடலைக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்கள்
காசு சம்பாதிககாவிட்டால்தான் என்ன?

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை
குளியல் அறையில் நெறிக்க போக காப்பாற்ற
வந்த அவளின் தந்தையையும் கழுத்து அறுபட்டு
இறந்தார் என்பது செய்தி.அநாதையாய் பதின்மத்தில்
இருக்கும் அந்தக் குழந்தை பாவம். இன்றும் இத்தகைய
செய்திகளுக்கு ஒன்றும் குறைவில்லை.

ஆசிட் ஊத்தும் கயவர்களுக்கு 10 ஆண்டு
கடுங்காவல் தண்டனைக்கு இங்கே அமைச்சர்
சபீதா ரெட்டி சொல்லியிருக்கிறார். 10 ஆண்டு
கொடுக்காமல் ”ஷூட் அட் சைட்” சட்டம்
போடலாம். அப்பத்தான் அடுத்த ஆளுக்கு
அந்த எண்ணம் வராது.


மீரா குமார் பேச்சாளர், பிரதீமா பாடில் குடியரசு தலைவர்,
இங்கே சபீதா ரெட்டி, கீதா ரெட்டி ஆகியோர் அமைச்சர்கள்
எல்லாம் சரி. ஆனால் இரவில் ஒரு பெண்
தனியாக கடைக்கு போய் வர முடியவில்லை.
எனக்கு மட்டும்தான் இப்படி ஆகியிருக்கும் என்று
அர்த்தமில்லை. பலர் இருப்பார்கள். வெளியே
சொல்ல மறுத்திருப்பார்கள். தயக்கம். சொல்லி
ஆவப்போவது ஒன்றுமில்லை என்ற எண்ணம்.
நானும் சொல்லாமல் இருந்திருக்கலாம். நஷ்டம்
ஏதுமில்லை.

ட்யூஷன் செண்டர் ஒன்றில் தனது சகமாணவியை
தகாத கமெண்ட் அடித்து ஆசிரியர்(அவரும் ஒரு ஆண் )
தந்த மனஉளைச்சலால் என் தோழியின் மகள்
பட்ட கஷ்டம்!! அப்பப்பா, கவுன்சிலிங் கொடுத்து
அந்தக் குழந்தையை சரி செய்தோம்.


ஒரு பெண் தனியாக ரோடில் சுதந்திரமாக பாதுகாப்பாக
நடக்கும் நாள்தான் நாம் உண்மையான சுதந்திரம்
அடைந்திருக்கிறோம் என்ற காந்தி பெருந்தகையின்
வார்த்தைகள் ஏனோ மனதுக்குள் வந்து போயின.


ஒரு பெண் தனியாக ரோடில் நடந்து போக முடியாவிட்டால் என்ன
மகளீர் தினம்? சமூகத்தில் இன்னும் இந்த அவல நிலை.
என்ன கொண்டாட்டம் போங்கள். :(


Sunday, March 07, 2010

உங்க பர்ஸில் பணம் காணாம போகுதா???

சில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா
இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும்
அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட்
செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா??
கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க.

யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம்
சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம வீட்டுலயும்
நம்ம சட்டையில வெச்ச பணம் காணாம போயிருந்தா உஷார்
ஆக வேண்டியதுதான். யாரோட வேலையா இருக்கும்!!
நான் இதைச் சொல்வதால் ஏதோ எல்லா பதின்ம வயதுப்பிள்ளையும்
இப்படித்தான்னு இல்லை. சில வீடுகளில் இதுதான் நிகழ்வு.

பணம் காணாமல் போயிருந்தால் அது அந்த சற்றே பெரிய
குழந்தைதான் எடுத்திருக்கு வாய்ப்பு அதிகம். வயிற்றுப்பசிக்கு
சோறு வீட்டுல இருக்கு, வகைவகையா ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கு,
வெளிய வாச நாங்களே கூட்டிகிட்டு போறோம் அப்புறம்
இதுகளுக்கு பணத்தை கொடுப்பானேன்! என்று சில பெற்றோர்.

பாக்கெட் மணியெல்லாம் வசதி உள்ள வீட்டுப்பசங்களுக்குத்தான்.
நம்மாள முடியாது எனும் வகை பெற்றோர்.

பிள்ளை கையில காசைக்கொடுத்தா கெட்ட
பழக்கத்துக்கு ஆளாகிடுவாங்க என பயப்படும் பெற்றோர்
இப்படி பட்டவர்களால்தான் அப்பாவின் சட்டைபை, அம்மாவின்
அஞ்சறைப்பெட்டி, ஹேண்ட்பேக் ஆகியவற்றில் பணம்
காணாமல் போவது.

சைக்கிளுக்கு காத்தடிக்க, பேனா, பென்சில் வாங்க,
நண்பர்களுடன் சாட் சாப்பிட(எனக்குத் தெரிஞ்சு ஒருபையன்
சாட் கடையில் கடன் சொல்லி சாப்பிட்டு வீட்டுக்குத்
தெரிஞ்சு அடி பின்னிட்டாங்க) என சில செலவீனங்கள்
பதின்ம வயதுக்கு உண்டு.

நாமதான் எல்லாம் செய்யறோமே அப்புறம் இவங்களுக்கு
எதுக்கு காசுன்னு பெத்தவங்க நினைப்போம். ஆனா தானா
தன் கையால காசு வெச்சுகிட்டு செலவு செய்யணும்னு
பசங்க நினைப்பாங்க. பொம்பளைப்பிள்ளைன்னா அழுது
ஆர்பாட்டம் செஞ்சு காசு கறந்துடுவாங்க. பசங்க பாவம்!!
”நீ சிகரட் குடிக்கத்தான் காசு கேக்குற, என் காசை கரியாக்கன்னே
பொறந்திருக்குன்னு” ஏச்சுத்தான் கிடைக்கும்.

இதனால அப்பா, அம்மாக்குத் தெரியாம காசை எடுக்க
ஆரம்பிக்கறாங்க. தனுஷோட ஒரு படம்.(திருடா திருடின்னு)
அவர் அப்பா பணத்தை எடுத்து செலவு செய்வதுபோல
காட்டியிருப்பாங்க. இது நிஜத்துல நடப்பதுதான்.
(இல்லைன்னு யாராவது சொல்லுங்கப்பா, பாப்போம்)

போன வாரத்துல ஒரு நாள் ஆஷிஷ் கூட பேசிகிட்டு இருந்த
போது அவன் வகுப்பில் சில பசங்க வந்து, ”நான் இன்னைக்கு
எங்க அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்தேன்” என்று
சொல்ல ஐயா ஷாக் ஆகியிருக்கிறார். ”அப்பா, அம்மா
பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பது தப்பாச்சேம்மா!!
எப்படிம்மா இப்படி செய்யலாம்? என்றான். இதனால்
இந்தப் பழக்கம் பசங்களுக்கு இப்பவும் இருக்குன்னு
நான் நம்பறேன்.


பணம் கையில் வைத்திருப்பது பெரிய மனிதத்தன்மையைக்
காட்டுது. தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடும் அந்த
வயதில் தன் கையில் காசில்லை என்பதே பெரிய குறையாத்
தெரியும். நல்லா படிச்சு முடிச்சாத்தான் சம்பாரிக்க முடியும்.
சம்பாரிக்காம காசுவரணும்னா பர்ஸ்ல கை வைப்பதுதான்.
நாமே நம் பையனை திருடனாக்குறோம்.

பசங்களுக்கு காசு கொடுத்து குட்டிச்சுவராக்கச் சொல்லறீங்களான்னு?
சண்டைக்கு வரவேணாம். நம்ம பிள்ளைகளை நாம் முறையா
வளர்க்கணும். பணத்தை எப்படி செலவு செய்வதுன்னு சொல்லி
கொடுக்க வேண்டியதும் நம் கடமையாச்சே! இப்ப பழக்குவது
பின்னாளில் தான் சம்பாதிக்கும்பொழுது சேமிக்க கற்க வைக்கும்.

யோசிச்சு பாருங்க. ஆரம்பத்துல சொல்லியிருக்கற நிகழ்வு
நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்கு நடந்தா நமக்கு
எவ்வளவு அவமானம்?? நம்மைப்பத்தி, நம்ம பிள்ளைய பத்தி
என்ன நினைப்பாங்க??

என்ன செய்யலாம்? பாக்கெட் மணி கொடுத்திடலாம்.
(பதின்மவயது பிள்ளைகள் ஆண்/பெண் இருவருக்கும்)
சும்மா தூக்கி கொடுத்திட்டா பணத்தோட அருமை தெரிஞ்சிடுமா?
1 ரூபாய் காசுகூட சும்மா கிடைக்காதுன்னு நாம
சொல்லிக்கொடுப்போம். எப்படி? நான் என் வீட்டில் செய்வதை
சொல்றேன். ஆரம்பத்துல சொல்லியிருந்த அனுபவம் விருந்தினராப்
போனப்ப எனக்கும் ஏர்பட்டிருக்கு. அதனால என் பசங்க
அந்த வழிக்கு போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருந்தேன்.

அதுக்கு உருவகம் கொடுத்தது என் தோழி அண்ணபூர்ணா.
அவங்க சொல்லிக்கொடுத்ததை நான் கொஞ்சம் முன்னேற்றி
ஆரம்பிச்சதுதான் என் பசங்களுக்கு பாக்கெட் மணி
கொடுக்கும் பழக்கம்.


HOME IMPROVEMENT COMMITTEE இங்க அதைப்பத்தி
சொல்லியிருக்கேன்.

GOLDEN RULES இதை வெச்சுத்தான் பாயிண்ட்ஸ் கொடுத்து
அதை மாத இறுதியில பாக்கெட் மணியா கொடுக்கறேன்.

என்ன கொடுமைன்னு என்ன புலம்ப வெச்சிட்டாங்க பசங்க :))


சின்னக்குழந்தையா இருக்கும்பொழுதே இதை பழக்கிட்டா
பதின்ம வயதுக்கு வரும்பொழுது சுலபமா இருக்கும் என்பதால்
அப்போதே போட்டுவைத்துவிட்டேன் இந்தத் திட்டத்தை.

எங்க அப்பார்ட்மெண்டில் இருக்கும் பசங்க கூட ஆஷிஷ்
பேசிகிட்டு இருக்கும்பொழுது தனக்கு மாசா மாசம்
பாக்கெட்மணி கிடைப்பது பத்தி சொல்ல அந்த பசங்களோட
அம்மாக்கள் என்னை கேட்டாங்க. நானும் என் திட்டத்தைப்
பத்திச் சொல்ல ,”ஐடியா நல்லாயிருக்கேன்னு!” ஆஷிஷ்,
அம்ருதாவோட பாயிண்ட்ஸ் புக்கை வாங்கிகிட்டு போய்
ஜெராக்ஸ் எடுத்து தன் வீட்டிலும் நடைமுறை படுத்த
ஆரம்பிச்சிட்டாங்க. ”ஆஷிஷ் உன் புண்ணியத்துல
இப்ப எங்களுக்கும் பாக்கெட் மணி கிடைக்குதுன்னு!”
பாராட்டுக்கள்தான்.

பணத்தை எப்படி செலவழிக்கறாங்க என்பதை கண்காணிக்கணும்.

செலவு செய்வதை எழுதச் சொல்லி பழக்கி, மாத கடைசியில்
கையிருப்பு எவ்வளவு என்பதை எழுதச் சொல்வதால் பணம்
எங்கே தேவையில்லாமல் செலவாகுதுன்னு புரியும்.
கட்டுப்படுத்த முடியும். இதெல்லாம் நாம பக்கத்துல இருந்து
செய்யணும்.

கார் கழுவுதல் போன்ற அதிகமான வேலைகளில்
உதவும் பொழுது எக்ஸ்ட்ரா பாக்கெட்மணி.
(கொழும்புவில் இருந்த பொழுது ஆஷிஷும்,
அம்ருதாவும் சேர்ந்து கார் பார்க் ஏரியாவை கழுவுவார்கள்.
நானும் உதவுவேன். அன்றைக்கு இருவருக்கும் 25 ரூபாய்
எக்ஸ்ட்ரா மணி)

இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் இருக்கு. அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் தன் குழந்தைகளுக்கு
பாக்கெட்மணி வேலை செய்வதற்குத்தான் கொடுக்கிறார்
என செய்தி படித்தேன்.(அவர் பசங்களை விட எங்களுக்கு
பாக்கெட் மணி கூடவே கிடைக்குதுன்னு பசங்களுக்கு
சந்தோஷம்.)

பதின்மவயதுப்பிள்ளைகளை மதித்து அவர்கள்
வாழ்வில் நல்லபடியாக வளர உதவுவோம்.

நாளை மகளீர் தினம் என்பதால் நாளை வரவேண்டிய
பதிவு வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அன்றே.



Friday, March 05, 2010

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா!!!!

கொளசிக மாமுனி உலகின் நண்பன் ஆனது எப்படி?
உலக நன்மைக்காக அந்த மாமுனிவர் தந்த மந்திரம்
அவரை உலகின் நண்பனாக்கியது. கொளசிக மாமுனியின்
இன்னொரு பெயர் தான் விஸ்வாமித்திரர். விஸ்வா- உலகம்,
மித்திரர்- நண்பன்.



காயத்ரி தேவி வேதங்களின் தாய் என்றும் சொல்வார்கள்.
எந்த ஒரு தெய்வத்துக்கும் அதன் ப்ரத்யேக காயத்ரி மந்திரத்தை
சொல்லி வழிபட்டால் பலன் அதிகம்.

காயத்ரி மந்திரம் சொன்னால் ஏற்படும் பலன் அதிகம்.
பிராம்மணர்கள் பூணூல் அணிந்து 3 வேளையும் தொழுவது
இவளைத்தான். பெற்ற தாய் அருகில் இருந்து காப்பது போல்
காயத்ரி தன்னை ஜபிப்பவர்களை எப்போதும் காப்பாள்.


இதுதான் அந்த மந்திரம். இதை பெண்கள் சொல்லக்கூடாது
என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து
பல பெண்கள்(வட நாட்டினர் அதிகமாக) காயத்ரி மந்திரம்
சொல்கிறார்கள். ஜாதி வேறுபாடில்லாமல் வடநாட்டினர்
பலரும் காயத்ரி மந்திரம் ஜெபிப்பார்கள். காயத்ரி மந்திரம்
யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

காயத்ரி மந்திரம் தெய்வத்தை உணர உதவுகிறது.
நிஜமான தெய்வத்தை நமக்குள் தேடி அடைய
ஒரு வழி காயத்ரி மந்திரம்.

இதைப்பற்றி மேலும் அறிய இங்கே செல்லலாம். காயத்ரி ஜபிப்பதால்
உடலில் ஏற்படக்கூடிய அதிர்வுகள், விஞ்ஞான பூர்வமாக என
பல விடயங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


இந்த மந்திரத்தை எங்கும் எப்போதும் சொல்லலாம்.
பிராயணத்தின் போது,தனியாக நடக்கும் பொழுது,
மனது சஞ்சலமாக இருக்கும் பொழுது சொல்லலாம்.
சொல்பவருக்கு பலன் அதிகம் என்பதால் முறையாக
ஜபித்து சொல்வது நல்லது.

உடலில் இருக்கும் சக்கரங்களில் மட்டுமல்ல
எல்லா இடங்களிலும் சக்தி தருவது காயத்ரி மந்திரம்.
சொல்பவரும், கேட்பவரும் புனிதமடைவது
இந்த மந்திரத்தால்தான் சாத்தியம் என்கிறார்கள்
பெரியவர்கள்.



உலகின் நண்பன்

உலகின் நண்பன் இப்படி யாராவது இருக்க முடியுமா??
சாத்தியமா?? முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
என்பதற்கு இவரே சாட்சி.

மிகச் சிறந்த சக்திசாலியாக திகழ்ந்தான் அரசன் கொளசிகன்.
ஒரு சமயம் ஓய்வு எடுக்க தன் படைவீரர்களுடன்
வஷிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றிருந்தார்.
மொத்த படைக்கும் உணவிட்டு மிக அருமையாக
விருந்தோம்பல் செய்தார் வஷிஷ்டர். ஒரு முனிவருக்கு
இது எப்படி சாத்தியம் என்று கேட்க, கேட்பதை
கொடுக்கும் காமதேனுவின் மகள் நந்தினி தன்னிடம்
இருப்பதாகவும், அவள் தான் தனக்கு உதவியதாகவும்
சொன்னார் முனிவர்.

இந்திரனால் முனிவருக்கு பரிசளிக்கப்பட்ட நந்தினி
முனிவரை விட தன்னிடம் இருந்தால் நாட்டுமக்களுக்கு
உதவலாமே! என்ற எண்ணத்தில் நந்தினியை தனக்கு
கொடுக்க சொல்லி கேட்டான். முனிவர் மறுக்க
அவரிடமே யுத்தம் புரிந்தான். நந்தினியின் காதுகளிலிருந்து
படைபடையாக போர்வீரர்கள் வந்து போரிட மன்னன்
தோற்கிறான். கைதியாக முனிவர் முன் நிறுத்தப்படுகிறான்.
ப்ரம்மரிஷி வஷிஷ்டரும் மன்னனுக்கு அறிவுரை சொல்லி
அனுப்பி வைக்கிறார்.

ஆனாலும் இந்த நிகழ்வு மன்னனின் மனதில் நீங்கா வடுவாகிவிட்டது.
தவவலிமை மிகச் சிறந்தது என உணர்ந்து
தானும் தவம் செய்து தவவலிமை செய்ய
காட்டுக்கு போகிறான். வஷிஷ்டரைப்போல தானும் ப்ரம்மரிஷி
ஆகி காட்டுவதாக சொல்கிறான். ”பிறப்பால் ஷத்த்ரியனான
உனக்கு அது சாத்தியம் இல்லை!” என்று சொல்ல
“நடத்தி காட்டுகிறேன்” என்று புறப்படுகிறான் கொளசிகன்.
(க்ஷத்த்ரியர்களுக்கு கோவம் அதிகம். போர்க்குணம்
நிறைந்தவர்கள்)

கொளசிக மாமுனி தவம் செய்து வலிமை பெற்று தன்
நாட்டுக்கு வந்து பார்த்தால் நாடு காடாக இருக்கிறது.
மக்கள் சுயநலமிக்கவர்களாக இருந்தார்கள். பசுமை போய்
காய்ந்து போயிருந்தது. நாட்டின் அவலநிலையைக்
கண்டு மனம் வெம்பி தன் தவவலிமையைக் கொண்டு
நாட்டை மலர்ச்சி அடைய செய்து நல்லவர்கள்
கையில் கொடுத்துவிட்டு திரும்பவும் தவம் செய்ய
காட்டுக்கு போனான்.



கொளசிகனின் தவம் கலைக்க மேனகா வருகிறாள்.
மேனகையுடன் சிறிது காலம் வாழ்ந்து சகுந்தலையை
மகளாகப் பெற்று விட்டுவிட்டுப்போன மேனகையை
வெறுத்து மகளை கண்வ மகரிஷியிடம் வள்ர்க்கச்
சொல்லிக் கொடுத்துவிட்டு திரும்பவும் தவம்.

கண்வரிடம் வளர்ந்த சகுந்தலை- துஷ்யந்தன்
காதலில் உருவானவன் தான் பரதன். இவர்
பெயரால்தான் நம் தேசம் பாரதம் என அழைக்கப்படுகிறது
என்றும் சொல்வார்கள். மகளின் துயர் துடைக்க
துஷ்யந்துனுடம் போராடி மகளைச் சேர்த்துவிட்டு
திரும்பவும் தவம். எத்தனை முறை தவம்
செய்தாலும் ப்ரம்மரிஷி எனும் பட்டம் மட்டும்
கிடைக்கவில்லை.

நடுவில் த்ரிசங்கு மன்னனுக்காக தன் சக்தியை
கொடுத்து த்ரிசங்கு சொர்க்கம் அமைத்தார்.
பலகால தவத்துக்கு பிறகு ப்ரம்மா மஹிரிஷி/ராஜரிஷி
பட்டத்தை கொளசிக முனிக்குத் தருகிறார். தனது
ஆசை,கோபத்தை அடக்க முடியாத காரணத்தால்
இன்னும் ப்ரம்மரிஷி மட்டும் ஆக முடியவில்லை.

திரும்ப கடும் தவம் செய்யப்போனார். இந்திரனின்
சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் தவம் செய்தார்.
தவத்தின் சக்தி உச்சமாகி ப்ரம்மன் வந்து
ப்ரம்மரிஷி எனும் பட்டம் தருகிறார். ப்ரம்மரிஷி
வஷிஷ்டரும் வந்து தன் வாயால் அதை வழிமொழிகிறார்.

பிறப்பால் அரசனான கொளசிகன் தன் விடாமுயற்சியால்
ப்ரம்மரிஷி ஆனான். இந்த கொளசிக மாமுனி தந்தது தான்
மிகச் சக்தி வாய்ந்த மந்திரம். அது என்ன மந்திரம்?
யார் அந்த மந்திரத்திற்கான தெய்வம்? கொளசிக மாமுனி
உலகின் நண்பன் ஆனது எப்படி??

எல்லாம் மதியம் 3 மணி பதிவில்

Thursday, March 04, 2010

கண் போன போக்கிலே கால் போகலாமா?

”கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?”//

இந்த பாடல் சொல்லும் கருத்து என்ன??
குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் சாதனைகள்
இருப்பதில்லை.

தன்னம்பிக்கை மனிதர்களுக்கு தான் அடையவேண்டிய
இலக்கு எது என்பது தெரிந்து தெளிவாக இருப்பார்கள்.
தனக்கு எது முக்கியம், அவசியம் எல்லாம் புரிந்து
வைத்திருப்பார்கள். தனது திறமையை எங்கே வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்று அறிந்து தனது குறிக்கோளை
அடைய சிறந்த வழிகளை மேற்கொள்வார்கள்.


முதலில் நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி
“குறிக்கோள் என்ன?” உதாரணம்: என்ன படிக்க விரும்புகிறோம்?
என்ன சாதிக்க ஆசை? என்ன வேலை பார்க்க விருப்பம்?
இதை முதலில் தெரிந்து கொண்டால் தான் நாம் அடைய
வேண்டிய பாதைக்கான வழியை வகுத்துக்கொள்ள முடியும்.

சின்ன சின்ன personal goals வைத்துக்கொள்வது நல்லது.
அவை நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். டூவீலர் ஓட்டத்
தெரியாத ஒருவர் தான் ஓட்டக்கற்றுக்கொள்ள வேண்டும்
என திட்டமிட்டு அதை சாதிப்பதை சொல்லலாம்.


குறிக்கோள்/இலக்கு இவற்றை அமைத்துக்கொள்ள 5 முக்கிய
தேவைகள் இருக்கின்றன. இது வேலை, personal goals
எதற்கும் பொருந்தும்.

CREAM என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்
அதாவது - CLARITY,REALISM, ECONOMY, ACTIVITY & MEANS:

CLARITY - தெளிவு
REALISM -நிஜத்தன்மை
ECONOMY- பொருளாதாரம்
ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை
MEANS-வழிவகை

CLARITY - தெளிவு:
நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதில்
தெளிவாக இருக்க வேண்டும். எதை சாதிக்க விரும்புகிறோம்,
எப்போதைக்குள் அடைய விரும்புகிறோம், இலக்கை
அடைந்துவிட்டோம் என்று எப்படித் தெரிந்து கொள்வது
என பல கேள்விகளை கேட்டு ஒரு தெளிவான
பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

REALISM -நிஜத்தன்மை

நிஜத்தில் அடைய முடியாத ஒன்றுக்கு ஆசைப்படுவது,
அதை குறிக்கோளாக வைத்துக்கொள்வது என்பது மிகப்
பெரிய தவறு. மிகப் பெரிய/அடைய முடியாத ஒரு
குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைய முயற்சி
செய்வது பலனை அளிக்காது. தோல்வி அடைய வைக்கும்
இந்த நிகழ்வு தன்னம்பிக்கையை குலைத்துப்போடும்.
அதற்காக மிகச் சாதரணமான இலக்கு வைத்துக்கொள்வதும்
தவறு.


ECONOMY:வழிவகை

ஒரே நேரத்தில் பல இலக்குகள் வைத்துக்கொண்டால் எதை
முதலில் முடிப்பது என்று தெரியாமல் குழம்ப நேரும்.
பேராசை பெரு நஷ்டம் எனும் வழக்கு இங்கும் பொருந்தும்.
ஒவ்வொன்றாக முடிப்பதே நல்லது.

ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை


நல்லதைச் சொல், நல்லதைச் செய், நல்லதை நினை.
இது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். நம் இலக்கையும்
நல்லவிதமாகவும், செயல்திறன் உடையதாகவும் வைத்துக்
கொள்வது நல்லது. நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும்?
என திட்டமிட வேண்டும்.

MEANS-வழிவகை

இலக்குகளை திட்டமிடும் பொழுது எந்த வழியில் அதை நாம்
அடையப்போகிறோம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ள
வேண்டும். இதற்காக நாம் சில கலைகளை கற்க
நேரலாம். நடவடிக்கைகளில் சில மாறுதல்களும் தேவைப்படலாம்.
சில நேரங்களில் குறிக்கோள்களே புது அறிவை தந்து
அதை அடைய வழி வகுக்கும்.


குறிக்கோள்களை அடைய பல திறன்கள் வேண்டும்.

நேரத்தை திட்டமிடாமல் எதுவும் செய்ய முடியாது.
சரியான முறையான திட்டமிடல் அவசியம்,
முறையாக பேசத் தெரிய வேண்டும், பிரச்சனைகளைத்
தீர்க்கும் தன்மை, குழு அமைத்தல் என பல இருக்கிறது
ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் பார்க்கலாம்.


Wednesday, March 03, 2010

ஒரு கொசுவத்தி

பழைய பாணியை திரும்ப கொண்டுவருவதுதான் இப்ப ட்ரெண்ட்.
ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த பீரியட் ட்ரெண்ட் இப்ப பல படங்களில்
பார்க்கலாம்.

அதுவும் சுப்பிரமணியபுரத்தில் கல் வைத்த டாலர் செயின்,
பெல்ஸ் என அந்த காலத்தை அப்படியே காட்டியிருப்பாங்க.
ஸ்பீக்கர் வெச்சு கட்டின ஆட்டோ, சினிமா விளம்பரம்னு
அப்ப இருந்த வாழ்க்கையை திரும்ப பாத்த மாதிரி இருக்கும்.

அப்போதைய சூப்பர்ஹிட் படங்களை இப்போதைய ட்ரெண்டுக்கு
தகுந்த மாதிரி மாடர்னா ரீமேக்கும் செஞ்சு அசத்தறாங்க.
சூப்பர்ஹிட் பாடல்கள் ரீமிஸாகி வருது.

இந்த நிலமை இங்கே மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் 70,80ல்
இருந்த ஹேர்ஸ்டைல், ட்ரெஸ் ஸ்டைல் எல்லாம் திரும்ப
கொண்டு வர்றாங்கன்னு படிச்சேன்.

பாலிவுட்டிலும் அங்கங்க இந்த பீரியட் சமாச்சாரங்கள்
வருது. பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும்.

இதைப்பத்தி நினைக்கும் பொழுது அப்போதைய
பாடல்காட்சிகள்!!! பிரம்மாண்ட செட்டுகள் போட்ட
பாடல்கள். அதிலும் டீ.ஆரின் பாடல் செட்டுக்கள்.
அருமையா இருக்கும். அரசியல் தான் அவருக்குத்
தெரியவில்லையே தவிர அருமையான கலைஞன்
அவர் என்பது என் எண்ணம்.



வாசமில்லா மலரிது இப்பவும் எல்லோருக்கும் பிடிக்கும்.


“இது குழந்தை பாடும் தாலாட்டு” என்னமா இருக்கும்
வரிகள். ஹேட்ஸ் ஆப்ஃ டு யூ டீ ஆர்.



கண்ணே கலைமானேன்னு ஒரு படம்.(சந்திரசேகர்
ப்ரொடெக்‌ஷன்ஸ்) ரகுமான் - அமலா ஜோடி.
அமலா டைப்பிஸ்ட் என்பதால் டைப்ரேட்டர் மாதிரி
வடிவமைச்சு பாட்டு இருக்கும்.

பிராம்மாண்ட செட் போட்டு பாடல்கள் எடுப்பதிலேர்ந்து
வித்யாசமா வெளிநாட்டுக்கு போய் படம்பிடிச்சாங்க.
அநேகமாக எல்லாநாடும் படம் பிடிச்சு முடிஞ்சு
போரடிச்சு திரும்ப செட் போடும் நாள் தூரத்துல
இல்லைன்னு நினைக்கிறேன்.

பட்டியாலா சுடிதார் அப்போ பானுமதிம்மா
போட்டு ஆடினதுதான். இப்ப பட்டியாலாதான்
பேமஸ். குட்டைகை, நீட்டகைன்னு ஜாக்கெட்
மாடல்கள் பதினைந்து வருஷத்துக்கு ஒருதரம்
ட்ரெண்டா மறுபடி வருது.

இந்தப் பதிவு என்னைப்போல அந்த பிரம்மாண்ட
செட்கள் உள்ள பாடல்களை ரசிப்பவர்களுக்குள்
ஒரு கொசுவத்தி சுத்தத்தான்.


திங்கள் கிழமை வரவேண்டிய பர்சனாலிட்டி
பதிவுகள் நாளைமுதல் கண்டிப்பா வரும்.