வந்ததுக்கு கொசுவத்தி சுத்தறாங்க. ஆனா நாம் படிக்கும்போது
இருந்து இப்ப காணாம போன சிலேட்டுக்கு கொசுவத்தி
சுத்தலாம்னு ரொம்ப நாளா ஆசை. பதிவர் பட்டர்ஃப்ளை
சூர்யா சொல்லிகிட்டு இருந்தாரு. இப்ப ஆரம்பிச்சிட்டேன்.
நான் படிச்சது தமிழ் மீடியம் தான். 5 ஆம் வகுப்பு வரை
சிலேட்டு இல்லாமல் பள்ளிக்கு போக முடியாது. வீட்டுப்பாடம்
எழுதி அது அழிஞ்சிடாம இருக்கத் பைக்குள் வைக்காம
கஷ்டப்பட்டு கைவலிக்க தனியா தூக்கிக்கிட்டு போனது
எல்லாம் ஞாபகத்துக்கு வருது.
ஆங்கில மீடியத்தில் படித்த பொழுது எனக்கு இனிமை
நினைவுகள் இல்லை. என்னை அங்கு யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.
எல்லாம் சைல்ட் ஜீஸஸ் பள்ளியிலே படித்து
பல வருட நட்பாக இருந்த கூட்டம், 6 ஆம் வகுப்பு
முதல் ராணி ஸ்கூலிலும் சேர்ந்தே இருந்தார்கள்.
தனித்துதான் அலைந்தேன். அதை விடுங்க.

சிலேட்டுக்கு வருவோம். 4ஆவது வரை எனக்கு
சிலேட்டு மட்டும் தான். நோட் புக் அதுவும் 80 பக்க
நோட் 4 நோட் அறிமுகம் ஆனது 4ஆவதில் தான்.
அதுவரை சிலேட்டு. எனாமல் சிலேட் மார்கட்டில்
இருந்தாலும் அம்மா ஏனோ கல்லு சிலேட்டு
வாங்கிக் கொடுத்தார் 1 ஆம் வகுப்பில். அது
பொணம் கணம் கணக்கும். ”வேற சிலேட்டும்மா!”
என்று கேட்டதுக்கு ,”அடுத்த வருஷம் பாக்கலாம்!!
என்பது தான் பதில்.
அந்த அடுத்த வருஷம் வரவேயில்லை. ச்சே சே
நான் பாஸானேன். ஆனா சிலேட்டு மட்டும் அம்மா
வாங்கிக்கொடுக்க மாட்டாங்க. ஒவ்வொரு வருஷமும்
நல்லா படிச்சு முதல் 3 இடத்தில் மதிப்பெண்
வாங்கினவங்களுக்கு ஆண்டுவிழாவுல சிலேட்டு
பரிசா கொடுப்பாங்க. 6ஆவது போன பிறகும்
வந்து என் முந்தைய வருட ப்ர்ஃபாமன்ஸுக்கு
சிலேட்டு பரிசா வாங்கின கொடுமை நடந்ததால
என் பள்ளிப்பருவம் கல்லு சிலேட்டோடவே
முடிஞ்சிடிச்சு. :(((

இந்த மாதிரி அழகா மணி வைச்சு சிலேட்டு
பெருமாள் கோவில் மார்கெட்டில் இருக்கும்
கீதா கபே வீட்டு கடையில் வெச்சிருப்பாங்க.
எல்லோரும் லைட் வெயிட்ல சிலேட்டு வெச்சிருக்க
எனக்கு மட்டும் கணமான சிலேட்டு.
அம்மா இந்த சிலேட்டு வாங்க சொல்லும்
காரணம்,” இந்தச் சிலேட்டுதான் பெரிசா இருக்கு,
எனாமல் சிலேட்டு துருபிடிச்சு எழுத முடியாம
போகுது” அது இதுன்னு.ம்ம்ம்
6 ஆம் வகுப்பு வந்ததும் தானே ப்ரோகரஸ்
ரிப்போர்ட் எல்லாம். அப்பல்லாம் காப்பரிட்சை,
முக்காப்பரிட்சை, முழுப்பரிட்சை எல்லாம்
சிலேட்டிலேயே எழுதியிருக்கோம்ல்...
கேள்விகளை டீச்சர் போர்டில் எழுதி வெச்சிருப்பாங்க.
அதைப்பாத்து பதிலை சிலேட்டில் எழுதுவோம்.
சிலேட்டில் எழுத இடமில்லாட்டி வரிசையில்
நின்னு டீச்சரிடம் கரெக்ஷன் செஞ்சு மார்க்கை சிலேட்டின்
இடது மூலையிலோ, வலது மூலையிலோ
எழுதி அனுப்புவாங்க. தொடர்ந்து எழுதுவோம்.
கடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து
100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல
அதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி
அனுப்புவாங்க.
அதை கர்வமா தலையில வெச்சுகிட்டு வீட்டுக்குப்
போய் அப்பா, அம்மா வரும் வரைக்கும் அழிபடாம
பாதுக்காத்து காட்டுவது ஒரு சுகம்.
அந்த சிலேட்டை பாதுகாத்தல். சரி இண்ட்ரஸ்டிங்கா
இருக்கும். கல்லு சிலேட்டுக்கு கரி பூசுதல் அது
ட்ரெஸ்ல ஒட்டுதல், ”கோவப்பழம் போட்டு தேச்சா
சிலேட்டு கறுப்பாவே இருக்கும்னு!!” ஃப்ரெண்ட் சொல்ல
அம்மாகிட்ட அனத்தி கோவாப்பழத்துக்கு சொல்லி
வைக்கச் சொல்லுவது. எச்சி தொட்டு அழிக்கக்கூடாது
எனபதால் பக்கத்திலேயே ஈரத் துணி வெச்சு அழிச்சு
எழுதி படித்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.
DEO INSPECTIONக்கு வந்திருந்த பொழுது கணக்கு
டெஸ்ட் கொடுத்து அதை செஞ்சு DEO கிட்டயே
வெரி குட் வாங்கினது எல்லாமும் அந்த சிலேட்டில்தான்.
இந்தச் சுகம் இப்பத்த பிள்ளைங்களுக்கு இல்லை.
எல் கே ஜி யிலேயே நோட்புக் பென்சில்தான்.
என் சிலேட்டுக்கதை பிள்ளைகளுக்குச் சொன்னால்
“சிலேட்டில் பரிட்சை எழுதினீங்களா!!”” அப்படின்னு
ஆச்சரியாமா கேக்கறாங்க.
இதுவே ஆச்சரியம்னா ஆங்கில படிக்க ஆரம்பிச்சதே
4ஆம் வகுப்புல என்பதை எங்க போய்ச் சொல்ல.
சரி சரி அதை விடுங்க.
இப்ப இதைத் தொடர் பதிவாக்கணும்.
(அப்பாடி ஒரு தொடர் பதிவாவது நான்
ஆரம்பிச்சதா சரித்திரத்துல எழுதுவாங்கல்ல) :)))
தொடர நான் அழைப்பது
ஆயில்யன் பாஸ்
அப்துல்லா தம்பி
கண்மணி டீச்சர்
நர்சிம்
இதைத் தொடர வைக்கப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு
என் நன்றிகள்.







/>



















