போகும் எந்த வண்டியும் நிறுத்தாமல் போகமாட்டார்கள்.
கோட்டை பைரவரை தரிசித்துவிட்டு திருமயத்திலிருந்து
திருப்பத்தூர் செல்லும் சாலையில் போனோம்.
திருமயம் கோட்டை உள்ளே ரொம்ப அழகா இருக்கும்.
ஒரு சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும் இருக்கு.
அம்மா வேலைப்பாத்தப்போ அவங்க ஸ்கூல் எக்ஸ்கர்ஷனுக்கு
ஒரு தடவை திருமயம் வந்தாங்க. நானும் போயிருந்தேன்.
அதுக்கப்புறம் போனதேயில்லை. பீரங்கிகள் எல்லாம்
இன்னும் இருக்கு. ஒரு வாட்டி புதுகையிலேயே தங்கி
புதுகையின் அழியாச்சின்னங்களான திருமயம் கோட்டை,
சித்தன்னவாசல் ஓவியங்கள், குடுமியான் மலை எல்லாம்
படம் பிடிச்சு பதிவாக்கணும்.
பசங்க படத்தில் ஷோபிக்கண்ணு செருப்பை தள்ளிக்கிட்டே
வருவாங்க. அது திருமயம் கடை வீதி. அங்கே பெரிய்ய்ய்
தகரக் கொட்டகை இருக்கும். அது திருமயத்துக்கே அடையாளம்
மாதிரி இருந்துச்சு. அத்தப்போய் ஏன் பிரிச்சாங்கன்னு
தெரியலை. வெறிச்சோடி கிடக்கு.
பிள்ளையார்பட்டிக்கு திருப்பத்தூர் போயி போகலாம்.
ஆனா திருமயத்துலேர்ந்து திருப்பத்தூர் போகும் வழியில
ஒரு சின்ன ஷார்ட் கட் ரூட் இருக்கு. அதுல 45 நிமிஷத்துல
பிள்ளையார்பட்டி போயிடலாம். இந்த ரூட்டுல முதலில்
குன்னக்குடி வரும். செட்டிநாட்டு பெரிய பெரிய வீடுகளை
பாத்துகிட்டே போவது நல்லா இருக்கும். ரொம்ப
வாகனங்கள் அந்த பக்கம் இருக்காது.
நாங்க போன அன்னைக்கு (மே 2) சங்கட ஹர சதுர்த்தி.
சாயந்திர நேரத்துல அபிஷேகம் கண ஜோரா நடந்து
கிட்டு இருந்துச்சு. நல்லா பாத்தோம். முடிஞ்சதும்
தங்ககாப்பு அலங்காரத்துல திருவீசர் காட்சி தந்தார்.
ஆஹா... ஆஹா காணக் கண்கோடி வேணும்.
அடுத்து குன்னக்குடியில் முருகனை தரிசிக்க போனோம்.
அவரும் அன்னைக்கு என்னவோ சந்தன காப்பு
அலங்காரத்துல தரிசனம். அங்கேயிருந்து புதுகை
திரும்பி வரும் வழியில் அன்னலட்சுமி ஹோட்டலில்
குழிப்பணியாரம் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.
ஊருக்கு போனதிலேர்ந்து அம்மாகிட்ட,” ஞாபகமா
எடுத்துக்கொடுத்திடுமான்னு!” சொல்லிகிட்டே
இருந்தேன். அது வேற ஒண்ணுமில்ல மஞ்சப்பைதான்.
இப்பல்லாம் கையிலேயே ஒரு பேக் எடுத்துகிட்டு
போயிடுவேன். பிளாஸ்டிக் பை கொடுத்தா
வேணாம்னு சொல்லிடறது. ஏதோ என்னால
இந்த பூமிக்கு செய்ய முடிஞ்சது. எங்க ஊருல
இன்னமும் துணிக்கடையில மஞ்சப்பை கொடுக்கறாங்க.
அதுவும் பானுமதி கட்பீஸ் செண்டரில் கண்டிப்பா
மஞ்சப்பை தான். அம்மா அதை ஒரு பெட்டியில
போட்டு சேத்து வெச்சிருப்பாங்க. அதுலேர்ந்து
ஒரு 5 பை ஞாபகமா கொடுக்கச் சொல்லியிருந்தேன்.
ஒரு காலத்துல மஞ்சப்பை எடுத்துகிட்டு போறதுன்னா
கேவலமா இருந்துச்சு. இப்ப நான் eco friendly அப்படின்னு
சொல்லிக்குவாங்க பாருங்க.
சாப்பாடு கட்டக்கூட ப்ளாஸ்டிக் வேணாம்னு நானும்
மகளும் சேர்ந்து வாழ இலை வாங்கப்போனோம்.
பக்கத்துலே தான் பெருமாள் கோவில் மார்கெட்.
வாங்கிகிட்டு அப்படியே ஒரு வாக் போனோம்.
அம்ருதா கிட்ட பாலையா ஸ்கூலை காட்டி
“இதுதான் அப்துல்லா மாமா படிச்ச ஸ்கூல்னு”
சொன்னேன். ஐயோ மொபைலை வீட்டுல வெச்சுட்டோமே!
ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்குல போட்டிருக்கலாமேன்னு
சொன்னாங்க(இன்னொரு ப்ளாக்கர் உருவாகிறார்) :))
அம்மா வீட்டுலேர்ந்து கிளம்பியாச்சு. போறவழியில
அந்தக்கோவிலுக்கு மறக்காம கூட்டிகிட்டு போங்கன்னு
அயித்தான் கிட்ட அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.
எங்க கூட்டிகிட்டு போனார்!! அடுத்த பதிவுல.















