Total Pageviews

Monday, May 24, 2010

திருமயம் கோட்டை பைரவர், திருவீசர், முருகன் தரிசனம்

திருமயம் கோட்டை பைரவர் மிக பிரசித்தம். அந்தப் பக்கம்
போகும் எந்த வண்டியும் நிறுத்தாமல் போகமாட்டார்கள்.
கோட்டை பைரவரை தரிசித்துவிட்டு திருமயத்திலிருந்து
திருப்பத்தூர் செல்லும் சாலையில் போனோம்.
திருமயம் கோட்டை உள்ளே ரொம்ப அழகா இருக்கும்.
ஒரு சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும் இருக்கு.
அம்மா வேலைப்பாத்தப்போ அவங்க ஸ்கூல் எக்ஸ்கர்ஷனுக்கு
ஒரு தடவை திருமயம் வந்தாங்க. நானும் போயிருந்தேன்.

அதுக்கப்புறம் போனதேயில்லை. பீரங்கிகள் எல்லாம்
இன்னும் இருக்கு. ஒரு வாட்டி புதுகையிலேயே தங்கி
புதுகையின் அழியாச்சின்னங்களான திருமயம் கோட்டை,
சித்தன்னவாசல் ஓவியங்கள், குடுமியான் மலை எல்லாம்
படம் பிடிச்சு பதிவாக்கணும்.

பசங்க படத்தில் ஷோபிக்கண்ணு செருப்பை தள்ளிக்கிட்டே
வருவாங்க. அது திருமயம் கடை வீதி. அங்கே பெரிய்ய்ய்
தகரக் கொட்டகை இருக்கும். அது திருமயத்துக்கே அடையாளம்
மாதிரி இருந்துச்சு. அத்தப்போய் ஏன் பிரிச்சாங்கன்னு
தெரியலை. வெறிச்சோடி கிடக்கு.



பிள்ளையார்பட்டிக்கு திருப்பத்தூர் போயி போகலாம்.
ஆனா திருமயத்துலேர்ந்து திருப்பத்தூர் போகும் வழியில
ஒரு சின்ன ஷார்ட் கட் ரூட் இருக்கு. அதுல 45 நிமிஷத்துல
பிள்ளையார்பட்டி போயிடலாம். இந்த ரூட்டுல முதலில்
குன்னக்குடி வரும். செட்டிநாட்டு பெரிய பெரிய வீடுகளை
பாத்துகிட்டே போவது நல்லா இருக்கும். ரொம்ப
வாகனங்கள் அந்த பக்கம் இருக்காது.

நாங்க போன அன்னைக்கு (மே 2) சங்கட ஹர சதுர்த்தி.
சாயந்திர நேரத்துல  அபிஷேகம் கண ஜோரா நடந்து
கிட்டு இருந்துச்சு. நல்லா பாத்தோம். முடிஞ்சதும்
தங்ககாப்பு அலங்காரத்துல திருவீசர் காட்சி தந்தார்.
ஆஹா... ஆஹா காணக் கண்கோடி வேணும்.

அடுத்து குன்னக்குடியில் முருகனை தரிசிக்க போனோம்.
அவரும் அன்னைக்கு என்னவோ சந்தன காப்பு
அலங்காரத்துல தரிசனம். அங்கேயிருந்து புதுகை
திரும்பி வரும் வழியில் அன்னலட்சுமி ஹோட்டலில்
குழிப்பணியாரம் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.

ஊருக்கு போனதிலேர்ந்து அம்மாகிட்ட,” ஞாபகமா
எடுத்துக்கொடுத்திடுமான்னு!” சொல்லிகிட்டே
இருந்தேன். அது வேற ஒண்ணுமில்ல மஞ்சப்பைதான்.
இப்பல்லாம் கையிலேயே ஒரு பேக் எடுத்துகிட்டு
போயிடுவேன். பிளாஸ்டிக் பை கொடுத்தா
வேணாம்னு சொல்லிடறது. ஏதோ என்னால
இந்த பூமிக்கு செய்ய முடிஞ்சது. எங்க ஊருல
இன்னமும் துணிக்கடையில மஞ்சப்பை கொடுக்கறாங்க.
அதுவும் பானுமதி கட்பீஸ் செண்டரில் கண்டிப்பா
மஞ்சப்பை தான். அம்மா அதை ஒரு பெட்டியில
போட்டு சேத்து வெச்சிருப்பாங்க. அதுலேர்ந்து
ஒரு 5 பை ஞாபகமா கொடுக்கச் சொல்லியிருந்தேன்.
 ஒரு காலத்துல மஞ்சப்பை எடுத்துகிட்டு போறதுன்னா
கேவலமா இருந்துச்சு. இப்ப நான் eco friendly  அப்படின்னு
சொல்லிக்குவாங்க பாருங்க.

சாப்பாடு கட்டக்கூட ப்ளாஸ்டிக் வேணாம்னு நானும்
மகளும் சேர்ந்து வாழ இலை வாங்கப்போனோம்.
பக்கத்துலே தான் பெருமாள் கோவில் மார்கெட்.
வாங்கிகிட்டு அப்படியே ஒரு வாக் போனோம்.
அம்ருதா கிட்ட பாலையா ஸ்கூலை காட்டி
“இதுதான் அப்துல்லா மாமா படிச்ச ஸ்கூல்னு”
சொன்னேன். ஐயோ மொபைலை வீட்டுல வெச்சுட்டோமே!
ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்குல போட்டிருக்கலாமேன்னு
சொன்னாங்க(இன்னொரு ப்ளாக்கர் உருவாகிறார்) :))

அம்மா வீட்டுலேர்ந்து கிளம்பியாச்சு. போறவழியில
அந்தக்கோவிலுக்கு மறக்காம கூட்டிகிட்டு போங்கன்னு
அயித்தான் கிட்ட அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.
எங்க கூட்டிகிட்டு போனார்!! அடுத்த பதிவுல.

DHORUKUNA ITUVANTI SEVA

கடப்பா வானொலி மூலமாகத்தான் எனக்கு
தெலுங்குப்பாடல்கள் அறிமுகம். பாடல்கள்
எழுதியது வேடுரி என்று கேட்டிருக்கிறேன்.
அருமையான பாடல்கள். இங்கே வந்த பிறகு
அந்த மகா கவிஞர் எழுதிய பலப்பாடல்கள்
கேட்டு என்ன ஒரு கவிஞர் என வியந்திருக்கிறேன்.


வேடுரி சுந்தரராமமூர்த்தி இது இவரின் முழுப்பெயர்.
22.05.10 இந்தக் கவிஞர் இறைவனடிச்சேந்துவிட்டார்.
74 வயதுவரை தனது படைப்பாற்றலால் படைத்துக்
கொண்டுதான் இருந்திருக்கிறார்.

தெலுங்குக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட பல
படங்களுக்கு வேடுரிதான் பாடல்வரிகள் தந்தது.
மணிரத்தனத்தின் எத்தனையோ படங்களுக்கு
இவர்தான் ஆஸ்தான கவிஞர். அலைபாயுதே கண்ணா
பாடலை தெலுங்கு பதிப்பில் விட்டுவிட நினைத்தாராம்
மணிரத்தன்ம். ஆனால் வேடுரி அதையே அழகான
பாட்டாக எழுதிக்கொடுத்துவிட்டாராம்.

மேகசந்தேசம் (1984)எனும் படத்தில் வேடுரி
அவர்கள் எழுதி ரமேஷ் நாயுடு இசையில்
கானகந்தர்வன் பாடிய இந்தப்பாடல் கானக்கந்தர்வனுக்கு
தேசிய விருதை ஈட்டித்தந்தது.

பாடலைக் கேட்க இங்கே:



எனது விருப்பமான டைரக்டர் கே. விஸ்வநாத்தின்
பல படங்களின் பாடல்கள் வேடுரி எழுதியதுதான்.
சங்கராபரணம் படத்தின்
“சங்கரா நாதஸ்வரீராபதா”  பாட்டுக்கு ஆந்திர
அரசின் நந்தி விருது கிடைத்திருக்கிறது. இந்தப்
படத்தின் கடைசி பாடலான ”துரகுனா இடுவண்டி சேவா”
பாடல் அனைவரும் மிகவும் ரசிக்கும் பாடல். 1979ல்
வெளிவந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும்
ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாடலைப்பற்றி சுவையான செய்தி ஒன்று
கேள்விப்பட்டேன். இந்த சிச்சுவேஷனுக்கான பாடல்
எழுதும் சமயம் வேடூரிக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய் சென்னையில் ஒரு மருத்துவமனையில்
ஐஸியூவில் வைக்கப்பட்டிருந்தாராம். கே.விஸ்வநாத்
வேறு ஏதாவது கவிஞரை வைத்து பாடலை எழுதி
படமாக்கத் திட்டமிட வேடூரி விஸ்வநாத்
அவர்களுக்கு போன் செய்து யாரையாவது அனுப்பினால்
பாட்டை தருவதாக சொல்ல, விஸ்வநாத் அவர்களின்
அஸிஸ்டெண்ட் மருத்துவமனைக்குச் சென்று
வேடூரிச் சொல்ல சொல்ல பாடலை எழுதினாராம்.
இந்தப் பாடலின் வரிகள், அதை உணர்ந்து
அற்புதமாகப் பாடியிருக்கும் பாலு... மறக்கமுடியாத
பாடல்.



அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
பூத உடல் மறைந்தாலும் அவரின் பாடல் வரிகளால்
நம்முடன் என்றும் வாழ்ந்திருப்பார்.


Friday, May 21, 2010

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி!

உங்க பேரு என்னங்க?
புவனா... புவனேஸ்வரி!
உங்களுக்குச் சொந்த ஊரு புதுக்கோட்டையா?
அப்படின்னு கேக்கும் அளவுக்கு எங்க ஊரில்
பிறந்தவங்க பலருக்கு புவனேஸ்வரின்னு
பேர் வைச்சிருப்பாங்க. புதுகை மன்னர்
பூஜித்து அருள் பெற்ற அன்னை பிரகதாம்பாளுக்கு
அடுத்து புதுகையை காத்து அருள் புரிபவள்
இந்த புவனேஸ்வரி. ராஜாகுளக்கரையில் இருக்கிறது
இந்தக் கோவில். பொற்பனையானைப் பார்க்கப்போன
வழியில் ஒரு எட்டு புவனேஸ்வரியையும் தரிசித்து
வந்தேன். போனதடவையே பாஸ் ஆயில்யன்
புவனேஸ்வரி கோவில் பற்றி எழுதச் சொன்னார்.

இந்தப் பதிவு எங்கள் பாஸ் ஆயில்யன் விருப்பப்பதிவு.

முன்பு இந்த இடம் ஜட்ஸ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த
இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு
அதிஷ்டானமாக்கி இருக்கிறார். புவனேஸ்வரி
கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936ஆம் ஆண்டு
முதல் இந்தக்கோவில் இருக்கிறது.

அன்னை புவனேஸ்வரிக்கு நேர் எதிரில் அஷ்டதச புஜ லட்சுமி.
இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே
இருக்கலாம். நேர்   எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர்
வகுப்பினர் புடவை கட்டும் ஸ்டைலில் புவனேஸ்வரிக்கு
அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம்
இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும்
யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை
நிச்சயம்.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி
இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த
சாமூண்டிஸ்வரி புவனேஸ்வரியாக அன்னை இங்கே
வணங்கப்படுகிறாள்.


கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்
கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது.
நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும்.
இடது பக்கத்தில் புவனேஸ்வரி எதிரே லட்சுமி. லட்சுமியின்
எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடை பெறும்.
கற்பூரார்த்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில்
ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி.
நடுவில் தரிசனம் மட்டும்தான்.

கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார்,
பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே
அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான்
ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக
இருப்பது சிறப்பு.

புதுகை அதிஷ்டானம் பற்றிய இணையதளம்.
சென்னையை அடுத்த தாமபரத்தில் ஸ்கந்தாஸ்ரமம்
இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால்
அமைக்கப்பட்டதுதான். சேலம் ஸ்கந்தாஸ்ரமமும்
இந்த அமைப்பினருடையதுதான்.



இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக்
கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக
வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும்
இல்லாத மஞ்சள் குங்குமம்.






புவனேஸ்வரியை தரிசித்து விட்டு நேராகச் சென்ன்றது
பொற்பனை முனீஸ்வரர்.

இவரைப்பற்றி டிசம்பர் ட்ரிப்பிலேயே எழுதியிருக்கிறேன்.
பெரியவரைப்பாத்து வந்து சாப்பிட்டு சின்னதாக ரெஸ்ட்
எடுத்துக்கொண்டு  மாலை 4 மணிக்கு அரியவள் எங்க ஊர்
அரியநாச்சி அம்மனை பார்க்கப்போனோம். கோவில் இன்னமும்
திறக்கவில்லை. சரி அடுத்த இடத்திற்கு நேரமாகிவிடும்
என்று கிளம்பிவிட்டோம்.

புதுகை கடைவீதி வழியாகப்போனோம். டாடா கோல்ட்
ப்ளஸ் கடையில் ஒரே பரபரப்பு. ஷூட்டிங் எடுப்பதாகச்
சொன்னார்கள். பசங்க டைரக்டர் பாண்டிராஜுக்கு ஊர்பாசம்
ஜாஸ்தி. (என்னிய மாதிரி :) ) பசங்க படத்துல எங்க ஊரு பல இடங்கள்,
ராம் சைக்கிள் மார்டை காட்டினார். எல்லோரும் அங்கேதன்
சைக்கிள் வாங்கியிருப்போம் என்பதால் பலருக்கும்
கொசுவத்தி சுத்தியிருக்கும். இப்ப எடுத்துகிட்டு இருக்கற
”வம்சம்” படத்துல  டாடா கோல்ட் ப்ளஸ் கடை வருதான்னு
பாக்கணும்.

அங்கேயிருந்து போனது.....

யெஸ் அடுத்த பதிவுல...


Thursday, May 20, 2010

எனக்கு சம்மன் அனுப்பிட்டாங்க...

எனக்கு ஒரு கஷ்டம்னா நான் யாரைக் கேட்க.

எல்லாம் நம்ம வலையுலகத்துலதான் கொட்டணும்.

நீங்களே நியாயம் சொல்லுங்க இல்ல கேளுங்க!


Jeevaa: அன்புள்ள அக்கா அவர்களுக்கு,
இப்போதெல்லாம் நீங்கள் முன்பு போல் இல்லை என்பது வெள்ளிடை மலைப் போலத் தெரிகிறது. தாங்கள் இப்போதெல்லாம் கண்டுக்கொள்வதில்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. ஆகையால் இந்தப் பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்ல நீதிபதி ஜெயஸ்ரீ அவர்கள் தங்களை பெங்களூர் நீதிமன்றத்திற்கு வருமாறு பணித்திருக்கிறார்.
(ஒ-ம்)
ஜீவ்ஸ்
குறிப்பு : இந்த நகலைப் பெற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக தாங்கள் உடனடியாக ஆஷிஷ் அம்ருதாவிடம் மடல் எழுதிக் கொடுத்து அதை இருவரும் நேரடியாக நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியது! 

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதாங்க சம்மன். என்னத்த சொல்ல. கரண்ட் கட், உக்கிரமான வெயில்,  ரெண்டு குட்டீஸும் வீட்டுலன்னு செம வேலை, செம பிசி. இதுல எனக்கு இப்படி சம்மன்.  அதெல்லாம் நீங்களாச்சு, ஜட்ஜாச்சுநீங்க ஜெயஸ்ரீ கிட்டயேபேசிக்குங்கன்னு சொல்லிப்புட்டாரு. ஜீவ்ஸ் தம்பி எனக்காக நீங்க எல்லோரும் தான் நியாயம் கேக்கணும்!!
ஜட்ஜம்மா பாடின பாட்டு கேளுங்க.





லாலி பாப், ஐஸ்கிரீம், சாக்லெட் இதெல்லாம் வாங்கிஅனுப்பி ஜட்ஜை சரிகட்ட திட்டம். நீங்க எல்லோரும்ஏதாவது செஞ்சு என்னிய காப்பாத்துங்க ப்ளீஸ்!!

Wednesday, May 19, 2010

கடமையைச் செய்

”நாம நம்ம கடமையை விடாமச் செய்யணும்!!”
அப்படின்னு அம்மம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.
எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கும். என்ன கடமையை?
விடாமச் செய்யணும்? 

அம்மம்மா அன்பின் திரு உருவம். எல்லார்கிட்டயும்
அன்பாத்தான் இருப்பாங்க. மத்தவங்க கிட்ட குத்தம்
பாக்கத் தெரியாது. அடுத்தவங்க அவங்க மனசை
புண்படுத்தினாக்கூட “அவங்களுக்குத் தெரிஞ்சது
அவ்வளவுதான்னு!” மனசு வருத்தப்பட்டுகிட்டு
இருப்பாங்க. தவிர சண்டை போட மாட்டாங்க.

நான் சொன்னதை நீ எப்பவும் விடாம செய்யணும்!
அப்படின்னு அம்மம்மா சொன்னாங்க. யோசிச்சு
பாத்தா அதை நடைமுறைப் படுத்த ரொம்ப
சிக்கல் இருக்கும் போல இருந்துச்சு.

நாம் நம்ம கடமையைச் செய்யும்போது அதை
அடுத்தவங்க ஏத்துக்கணும், நம் மேலே அன்பு
காட்டணும்னு தோணுவது இயல்பு. அதுஇல்லாத
பட்சத்துல தூக்கி போட்டுட்டு போயிடலாம்னு
தோணும். இது சராசரி மனித இயல்பு.

ஆனா அம்மம்மா சொல்வது எதிராளி நம்ம கிட்ட
எப்படி இருந்தாலும் நீ அவங்களுக்குச் செய்ய
வேண்டியக் கடமையை விடாதே!

என்னம்மா இப்படி சொல்றீங்க. என் மனசு
கஷ்டப்படுமே.

நம்ம மனசு கஷ்டப்படும் என்பதற்காக நாம்
செய்யவேண்டியக் கடமையைச் சரியா
செய்யாட்டி நீ பாவத்தை சுமப்ப!! இது அம்மம்மா.

உன் கை சுத்தமா இருக்கணும். உன் வேலையை
நீ செஞ்சிடு. எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காம
உன் கடமையைச் செஞ்சிடு. காலம் பார்த்துக்கும்.

ஏதோ வேதாந்த கிளாஸ்ல இருக்கறாப்ல இருக்குன்னு
சொன்னாலும் அன்பா அம்மம்மா சொல்வதைக்
கேட்டாத்தான் என்னன்னு? ஒரு எண்ணம்.

ஆண்டவன் என்றால் கொஞ்சம் பயப்படும் ரகம் தான்.
நாளைக்கு கணக்கு சொல்லும்பொழுது என் கைசுத்தம்,
யார் என்ன செய்தாலும் நான் என் வேலையை ஒழுங்கா
செஞ்சிட்டேன்னு சொல்லாமேன்னு ஒரு எண்ணம்.
அம்மம்மா சொன்னது மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு.

அன்பா அம்மம்மா கேட்கும் போது அதை கேட்டு
நல்ல பேத்தியாக என் கடமையைச் செய்வதை முதல்
வேலையா ஆரம்பிச்சேன். அன்னியிலேர்ந்து
என் வேலையை மகளாக, அக்காவாக, டீச்சராக
என்ன செய்ய வேண்டுமோ அதை கரெக்டா செஞ்சிடுவேன்.
திருமணத்துக்கு அப்புறமும் அதே குணம் தொடர்ந்துச்சு.

யார் என்ன சொன்னாலும் என் வேலை என் பொறுப்பில்
இது நான் செய்திருக்க வேண்டுமானால் அதை
செஞ்சிருப்பேன். என்ன செய்யணும்னு தெரியாட்டி
அம்மம்மாவை கேட்டு செஞ்சிடுவேன்.

ஒரு சமயம் புகுந்த வீட்டில் பிரச்சனை. அன்பே உருவான
மாமா ஏதும் சொல்ல முடியாத நிலை. அயித்தானும்
பெரியவர்களை ஏதும் சொல்ல முடியாத நெருக்கடி.
மாம்பலம் ரெங்கநாதன் தெருவில் என் அப்பாவின்
எதிரில் வைத்து என்னை அவமானப் படுத்தியது
ஒரு சொந்தம். கோவம் வந்தது. அது என் இயல்பு.
பேசாமல் போய்விட்டேன். ஏச்சுக்கள் பேச்சுக்கள்
எல்லாம் சுவாதீனமாக எடுத்துக்கொண்டேன்.

2 வருடங்கள் கழித்து என்னைத் திட்டியவரின்
மகளுக்குத் திருமணம். அம்ருதாவை கருவுற்றிருந்த நேரமது.
என்னைவிடப் பெரியவர் என்றாலும் சடங்குகள்,
சம்பிரதாயங்கள் தெரியாது. அதனால் திருமணத்தை
நடத்த வேண்டியது என் பொறுப்பானது.
கருவுற்றிருந்த நேரத்தில் என் உடலையும்பாராமல் அயித்தானுடன் பைக்கில் சென்று ஒவ்வொரு
உறவினரையும்  பத்திரிகை வைத்து அழைத்தேன்.(இல்லாட்டி
சொந்தக்காரங்க மரியாதைக்குறைவாக நினைப்பாங்க)2 வயது ஆஷிஷ், வயிற்றில் 5 மாத கருவோடு திருமணத்தை முன்னின்று
நடத்தி மாமா கையில் 50ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்துக்
கொடுத்தேன்.  மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு என்
உபசரிப்பு ரொம்ப பிடித்திருந்தது. ரொம்பவும்  புகழ்ந்து
சொல்லியிருக்கிறார்கள். மாமாவுக்கு எப்போதும்
என் மீது அன்பு. அது அப்போது மிக அதிகமானது.


அம்ருதா பிறந்த பிறகு வீட்டிற்கு வந்து
சண்டைபோட்ட சொந்தம்  வந்து சொன்ன வார்த்தை,” நீதான்
என் முதல் மருமகள், நீ என் சொந்தம் என்று
சொல்லிக்கொள்வதில் பெருமை,” என்றார்.
எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாதுன்னு
அம்மம்மா ஏற்கனவே சொல்லிக்கொடுத்திருந்ததால்
நான் ஏதும் பேசவில்லை. “வந்ததை வரவில்
வைப்போம், சென்றதை செலவில் வைப்போம்”
எனும் மனநிலை 25 வயதிலேயே வர காரணம்
அம்மம்மா.

அதன்பிறகு அந்த உறவினர் நான் இல்லாமல்
ஏதும் செய்ய மாட்டார். என்னை தான் எதற்கும்
முன்னிருத்துவார். என் மீது அதீத பாசம்
காட்ட ஆரம்பித்தார். அப்போதும் என் கடமை
எதுவோ அதை செய்தேன். எதையும் அம்மாவீட்டுக்கு
சொல்லும் பழக்கம் எனக்கு கிடையாது.
ஆனால் அந்த உறவினரே அம்மம்மாவிடம்
நடந்தவற்றைச் சொல்லியிருக்கிறார்.

என் அம்மம்மாவுக்கோ ரொம்ப மகிழ்ச்சி.
அம்மம்மா சொல்படி நான் கேட்டதற்கு.
எனக்கும் மகிழ்ச்சி, எங்க அம்மம்மா சந்தோஷமா
இருக்க நானும் காரணம் எனும் மகிழ்ச்சி அது.

கீதையின் சாரம் கடமையைச் செய் பலனை எதிர்பாரேதே.
ஆனால் அதை கீதாசாரமாக எடுத்துக்கொண்டு
நான் செயல்படுத்திருப்பேனா என்பது சந்தேகமே.
அம்மம்மாவின் வாக்கு அவர் சொன்ன விதம்,
இன்றும் மனதில் ஆழ பதிந்து விட்ட விஷயமா
இருக்கு.

என் கோபமோ, மன வருத்தமோ என் கடமையை
செய்ய என்னைத் தடுக்காமல் பார்த்துக்கொள்வேன்.
உடம்பு நல்லாயில்லாம இருந்தாலும் சரி,
கரண்ட் கட்டுன்னாலும் சரி, லைலா புயல் அடிச்சிகிட்டு
இருந்தாலும் சரி பதிவு போடுவதே என் கடமைன்னு
நான் இருக்க காரணம் அம்மம்மாதான்ன்னு
சொல்லிகிடறேன். :)))))

Tuesday, May 18, 2010

நான் ரசித்த படங்கள்

எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும்னு இல்ல. ஆனா
பிடிக்கும். பாட்டுதான் ரொம்ப இஷ்டம்.செலக்ட்
செஞ்சுதான் சினிமா பாப்பேன். டிரைக்டர், நடிகர்,
நல்லகதையம்சம், இசையமைப்பாளர் அப்புறம்
யேசுதாஸ் ஒரு பாட்டாவது பாடியிருந்தால்
சந்தோஷம்னு  ஒவ்வொண்னா பாத்து பாத்து
சினிமா போவதால மனசுல சிம்மாசனம் போட்ட
படங்கள் அதிகம்.

எதைவிட எதைச் சொல்லன்னுதான் தெரியலை.


அப்பல்லாம் மற்ற மொழி படங்கள் பாக்க வேண்டும்
என்றால் டீடீயில் ஞாயிற்றுக்கிழமை மதியத்
திரைப்படத்துக்காக காத்திருக்க வேண்டும்.
அப்படிப் பார்த்துதான் எனக்குத் தெலுங்குபடங்கள்
பரிச்சயமானது.

குடும்பம் ஒரு கதம்பம்:


விசு என் ஃபேவரீட் டைரக்டர். அவரின் எல்லா
படங்களையும் பாத்திருக்கேன். குடும்பம் ஒரு
கதம்பம் இப்பவும் பாக்கலாம். அதே போல
வேலைக்கு போகும் பெண்ணின் கஷ்டம்,
வேலைக்குப்போகாம வீட்டில் இருக்கும் கஷ்டம்,
பொண்டாட்டி வேலைக்கு போக தான் ஒரு
ஊரில் வேலைப்பார்க்க லெட்டரில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கணவன், வேலை வெட்டி
செய்யாம வெட்டியா இருக்கும் புருஷன்,
அடுப்படியில் வெஞ்சு அவியும் மனைவி,
தன்னை அம்ஜத்கானா நினைக்கும் மகனுக்கு
நல்லது செய்யும் அப்பான்னு சூப்பரா இருக்கும்
படம். ஒவ்வொருத்தரும் தன் பாத்திரத்தை
உணர்ந்து நடிச்சிருப்பாங்க.


ஸ்வர்ணகமலம்: (telugu)
எனக்கு மிகவும் பிடித்த தெலுங்கு இயக்குனர்
கே.விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் 1988ஆம்
ஆண்டு வெளிவந்தப்படம். பரதம், பானுப்ரியா
இரண்டும் எனக்குப் பிடித்த விஷயம். பானுவின்
நடனத்துக்கு நான் ரசிகை. அருமையான பாடல்கள்,
தேர்ந்தெடுத்த நடிகர்கள்னு கலவையான படம்.
விக்டரி வெங்கடேஷ்  நடிப்பு அருமையா இருக்கும்.
டான்ஸ் கிளாஸ் நடக்கும் இந்த சீன் பாருங்கள்
தெரியும். இசை இளையராஜா




 உன்னால் முடியும் தம்பி: 1988
பாலச்சந்தர் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
கமல், சீதா,மனோரமா இவர்களுடன்
பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளையாக எங்க
ஊரு ப்ரபலம்  ஜெமினி கணேசன் அவர்கள்
நடிச்ச படம். என் குருநாதர் யேசுதாஸ் பாடல்களும்
இருப்பது ஷ்பெஷல்.  இந்தப்படத்தில் ஜனகராஜ்
காமெடி மறக்க கூடியதா!!

அப்பா மகனுக்கு இடையில் நடக்கும் இந்த
சம்பவம் சூப்பர்.


 TEZAB: hindi

அனில்கபூர் சோ ஸ்வீட்டா இருப்பார்.
ek do theen னு மாதிரி ஆட்டம் போட்ட படம்.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது. இந்தப்பாட்டை
பாடதவங்க உண்டா!!!

மைனே ப்யார் கியா: 1989

இப்ப சல்மானைப் பாக்க பயம்மா இருக்கு. ஆனா
இந்த படத்தில் ரொம்ப அருமையா இருப்பார்.
பாலுவின் குரலில் சூப்பாரா இருக்கும் பாடல்கள்.
போனவருஷம்னு நினைக்கிறேன் இந்தப்படத்தை
நானும் அயித்தானும் சிலாகித்து பாத்துகிட்டு
இருந்தோம். கொஞ்ச நேரமே பக்கத்துல உக்காந்து
பாத்துகிட்டு இருந்த அம்ருதா “ஐயோ! இது
சம்திங் சம்திங்! படமாச்சேன்னு” சொல்லவும்தான்
பிரபுதேவா இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டாகி,
தமிழிலும் வெளிவந்தப்படம் மைனே பியார் கியாவின்
ரீமேக்குன்னே எனக்குப் புரிஞ்சிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தேவர் மகன்: 1992
இந்தப்படத்தைப்பத்தி நான் என்ன சொல்ல. எல்லோருக்கும்
தெரிஞ்ச படம். பரதன் இயக்கத்தில் வெளிவந்தப் படம்.
இஞ்சி இடுப்பழகி பாட்டு யாரும் அவ்வளவு சீக்கிரத்தில்
மறந்திருக்க முடியாது. ஜானகியம்மா கலக்கியிருப்பாங்க.
இந்தப்படம் தான் எந்த கஷ்டமும் படாம நாங்க கேட்டு
அப்பா ஓகே சொல்லின்னு படம் வெளிவந்த 3ஆம் நாளே
புதுகை வெஸ்ட் டாக்கீஸில் பாத்தது.

 ரங்கீலா: 1995

மாமாவிடம் கெஞ்சிக் கூத்தாடி என் தோழிகளுடன்
மும்பையில் தியேட்டரில் நான் பார்த்த ஒரே படம்.
இந்தப்படத்தின் அத்தனை பாடல்களூம் எனக்கு
பிடிக்கும். அமீர்கான் மாதிரி
“ஜரா ஏசிக்கோ குமா( jara  ac ko guma) ”
அப்படின்னு இப்பவும் டயலாக் அடிப்போம்.




yaaroon sunlo jara பாட்டும் ரொம்ப பிடிக்கும். கேட்டுப்பாருங்க.

 சதிலீலாவதி: 1995

கல்யாணத்துக்கு முன்னாடி நான் என் ஃப்ரெண்ட் சுபத்ரா,
தம்பி கார்த்தி நாங்க 3 பேர் மட்டும் தியேட்டருக்கு போய்
பாத்த படம். பாலுமகேந்திராவுக்கு உரிய ரெண்டு பொண்டாட்டி
கதை. கல்பனா புருஷனை கேள்வி கேட்கும் இடம்
அருமையா இருக்கும்.



Mr.pellam 1993 telugu:

தெலுங்கில் நான் விரும்பும் நடிகர் சிரஞ்சீவிக்கு
அடுத்து மிக மிக விருப்பமானது ராஜேந்திர பிரசாத்.
ராஜேந்திர பிரசாத் ஆமனி நடிப்பில் வெளிவந்த
இந்தப்படம் என் ஹஸ்பண்டாலஜி பாடத்திலும்
வந்தது. ஆமாம் வேலைக்கு போன போது ஐயா
அடிச்ச அதிகாரம், வேலை போன பிறகு மனைவி
வேலைக்கு போக வீட்டில் நடக்கும் கூத்துன்னு
தத்ரூபமா இருக்கும் காட்சிகள். இதை என் ஹஸ்பண்டாலஜிக்கு
சிறப்பு பாடமா வெச்சிருக்கேன். :))


சுபலக்னம்:

தமிழில் இரட்டை ரோஜான்னு ஒரு படம்
வந்துச்சு. எனக்குச் சுத்தமா பிடிக்கல. ஆனா
தெலுங்கில் இந்தப்படம் ஆமனி, ரோஜா,
ஜகபதி பாபு நடிப்பில் சூப்பரா இருக்கும்.
படத்தோட ஹைலைட் இந்தப் பாட்டு
எனக்கும் அயித்தானுக்கும் ஆல்டைம் ஃபேவரிட்.



HUM AAPKE HE KAUN: 1994
 ஹா!! அழகான மாதுரி. அருமையான
கதை, ராஜஸ்ரீ ப்ரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பு.
பிரம்மாண்ட வெற்றிப்படம். உறவுகளை
விட்டு பிரிஞ்சு வந்திட்டதா நினைப்பு வரும்
பொழுது இந்த சீடி போட்டு உக்காந்திருப்பேன்.


தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே:

என் திருமணத்துக்கு 2 மாசம் முன்னாடித்தான்
இந்தப்படம் வெளிவந்தது. காஜல், ஷாருக்
நடிப்பில் ரொம்ப அருமையா இருக்கும்.
இந்தப் படத்தை நான் அப்போ பார்க்கலை.
திருமணத்துக்கு அப்புறம் நாங்க பார்த்த
இரண்டாவது படம் இது. ஹைதை பரமேஸ்வரி
தியேட்டரில் பார்த்தோம். கடைசி சீனை பாக்காம
பைக் எடுக்கணும் கூட்டி வந்திட்டீங்கன்னு
எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பேன்னு
எனக்கா ஒரு சீடியே வாங்கிக்கொடுத்திட்டாரு
அயித்தான். இப்பவும் நான் அனுபவிச்சு பாக்கும்
படம் இது.

எல்லாப்பாட்டும் பிடிக்கும். ஆனா இது சம்திங்
ஷ்பெஷல்.




அநன்யா தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தாங்க.
நான் பதிவெழுத ஆரம்பிச்சு பதிவெழுத அதிக
நேரம் எடுத்துகிட்ட பதிவு இது தான். இரண்டரை
மணிநேரம் ஆகியிருக்கு. :))
எழுத ஆரம்பிக்க நிறைய்ய படங்கள் ஞாபகத்துக்கு
வந்து ரொம்ப செலக்ட் செஞ்சு கொடுத்திருக்கேன்.

நான் யாரையும் அழைக்கலை. யாருக்கு விருப்பமோ
அவங்க தொடரலாம்.

Monday, May 17, 2010

பச்சடிகள் பலவிதம்


ஆந்திராவில் ஊறுகாய், துவையல் ஆகியவற்றை
பொதுவா பச்சடின்னு சொல்வாங்க. போனதடவை
போட்ட ஆவக்காய் தானமாத்தான் போச்சு. இந்ததடவை
நிறைய்ய வேலை இருந்ததால் ஆவக்காய் போடவேணாம்னு
நினைச்சேன். என் மகனுக்கு திடும்னு புது ஆவக்காய்
போடலியேன்னு தோணிச்சு போல. ”எனக்காக ஒரு
பாட்டிலாவது  ஆவக்காய் போடும்மான்னு!!”
ஒரே தொணதொணப்பு. ”ஒரு பாட்டில் கடையில
வாங்கிக்கலாம். நீ போடாதேன்னு !”அயித்தான்.


பிள்ளை கேட்டு மாட்டேன்னு சொல்லமுடியலை.
நாளைக்கு பெரிசாகி படிப்பு,வேலைன்னுஓடினான்னா
பாவமேன்னு பத்தே பத்து மாங்காய் வாங்கிகிட்டு
வந்து ஆவக்காய் போட்டேன். செம குஷி ஆஷிஷுக்கு.
பொடி சேர்த்து கலக்கும்போதே வாசனை கும்முங்குதுன்னு!
பாராட்டு வேற. :))

இன்னைக்கு டீவியில வெல்லம் ஆவக்காய பாத்துட்டு
அது வேணும்னு கேட்டார் ஆஷிஷ். எனக்கு மாமானார்,
மாமியார் கொடுமைல்லாம் இல்லைன்னு யாரும்
சந்தோஷப்பட்டுக்க  வேணாம். ஆஷிஷ் ஒரு ஆள்
போதும். ச்சும்மா ஏன் இருக்கேன்னு அது இதுன்னு
வேலை வெச்சிடுவான் என் மகன். :))

வெல்லம் ஆவக்காய் போடும் முறை:
4 மாங்காய், 1 கப் பொடித்த வெல்லம், 1 கப் மிளகாய்த்தூள்,
1 கப் கடுகுப்பொடி,  1/2 கப் உப்பு, ந.எண்ணெய் 1 கப்.
எல்லாம் சேத்து கலந்து வெச்சுகிட்ட சுவையா
நல்லா இருக்கும். 1 வருஷம் தாங்கும்.(அதுவரைக்கும்
காலியாகாம இருந்தா)


ஆந்திரா பெசரட்டு ரொம்ப பேமஸ். பாசிப்பயறு, அரிசி
ஊறவெச்சு அரைச்சு தோசையா ஊத்துவதுதான் பெசரட்டு.
நடுவிலே ரவை உப்புமா வெச்சு மடிச்சு கொடுத்தா
எம். எல். ஏ பெசரட்டு( உப்புமாவுக்கும் எம் எல் ஏவுக்கும்
என்ன சம்பந்தம்?!!)

அதோட சைட் டிஷா ஆந்திரா ஷ்பெஷல் அல்லம் பச்சடிதான்.
அதாவது இஞ்சிப்பச்சடி.  செம டேஸ்ட். பருப்பு சாப்பிடுவதால்
வயத்துக்கும் பிராப்ளம் வராது. சரி சரி. செய்முறை
சொல்லிடறேன்.

இஞ்சி- 100 கிராம்,
பச்சைமிளகாய் - 4
மி வற்றல் - 4
புளி - சிறிதளவு.
வெல்லம் - 1 துண்டு.

இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செஞ்சு
கட் செஞ்சு வெச்சுக்கணும். சின்ன தாளிக்கும்
பாத்திரத்தில் பச்சை மிளகாய், மி.வற்றல்,
புளி போட்டு வதக்கி வைக்கவும்(1/2 ஸ்பூன்
எண்ணெய் போதும்). ஆறியதும்
எல்லாவற்றையும் போட்டு  உப்பு சேர்த்து
அரைக்கவும்.

சின்னக்கடாயில்  1 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி கடுகு வெடிக்க விட்டு அதில் அரைத்து
வைத்திருக்கும் இஞ்சி விழுதைப்போட்டு
பிரட்டி எடுத்தால் கம கம அல்லம் பச்சடி ரெடி.
மைய்ய அரைக்காமல் கொஞ்சம் பரபரவென
அரைத்தால் ருசி அதிகமா இருக்கும்.

பெசரட்டுக்குன்னு சொன்னாலும் இட்லி,
தோசை, வெண்பொங்கலுக்கும் செம ஜோடி.








சரி இன்னொரு சூப்பர் சட்னியும் சொல்றேன்.
100 கிராம் வேர்க்கடலை, 2 ப.மி, 2  மி.வற்றல்,
புளி கொஞ்சம். வேர்க்கடலையை எண்ணெய்
விடாமல் வறுத்து தோல் நீக்கி வெச்சுக்கணும்.
கொஞ்சம் எண்ணெய் விட்டு மற்ற சாமான்களை
வறுத்து வெச்சுக்கணும்.

மிக்ஸியில் முதலில் மிளகாய், புளி போட்டு
கொஞ்சம் அரைத்துவிட்டு தோல் நீக்கி
வெச்சிருக்கும் வேர்க்கடலையை போட்டு
மைய்ய அரைச்சா வேர்க்கடலை சட்னி ரெடி.
இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.


எல்லோருக்கும் மாங்காய் ஒரு துண்டு எடுத்துக்குங்க.
எங்க ஊருல மாம்பழம் கிலோ 25ஏ ரூபாய் தான். :))
இன்னைக்கு டின்னர்  ஆம்ரஸ் + பூரி. 


30 நிமிட மழையும் 300 மரங்களும்

மதியம் 4.30 மணிக்கு ஆரம்பிச்சது தூறல். ஆகா
45 டிகிரில காஞ்சு போய்க்கிடக்கோமே அப்படின்னு
சந்தோஷப்பட்டுகிட்டு உக்காந்திருந்தோம். கரண்ட்
கட் ஆனது. இதுவும் சர்வ சாதாரணம். மழை
ஆரம்பிச்சிருக்கு கூலா இருக்கும்னு மழையை
அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம்.

சரி காத்தோட மழை. சின்னச் சின்ன ஐஸ்கட்டிகளுடன்
விழுந்த மழையை பசங்க ரசிச்சுகிட்டு இருந்தாங்க.
சூடான மசாலா டீயோடு மழையை ரசிச்சோம்.
30 நிமிடம் நல்ல மழை. ஒரு ரூமுக்குள் தண்ணி
வந்திடிச்சு.

5 மணிக்கு மழைவிட்டிடிச்சு. கரண்ட் வரலை
1 மணிநேரம் கழிச்சு வந்திடும்னு இருந்தோம்.
காலையில் ஒரு மணிநேரம், மதியம் 1 மணி
நேரம் இங்க பவர்கட் கடந்த ஒரு வருஷமா
நடக்குது. அதனாலதான் இந்த சம்மரில் வெறும்
2 மணிநேர பவர்கட்டோட போச்சு. இல்லாட்டி
4 மணிநேரம் பவர் கட் இருக்கும்.

6.30 ஆகியும் கரண்ட் வரலை. மொட்டைமாடிக்கு
போய் நானும் அயித்தானும் நடந்துகிட்டு இருந்தோம்.
கூலா இருந்துச்சு கிளைமேட்டு. இரவு 8 மணிஆகியும்
கரண்ட் வர்ற மாதிரி தெரியலை. இரவு சாப்பாடு
சமைக்க கரண்ட் இல்லாததால வெளியில் போய்ச்
சாப்பிடலாம்னு வீட்டுக்கு பக்கத்துல இருக்கற
பாவ்பாஜி கடைக்கு போனோம். போகும் வழியில
மரங்கள் சாஞ்சிருப்பதை பாத்தோம்.

எங்க மங்கிபள்ளியில்(எங்க ஏரியாவில்
குரங்குகள் அதிகம் என்பதால்
நாங்கள் வைத்திருக்கும் பெயர்) மரங்கள் அதிகம்.
சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடிக்கு வந்து
சுத்தமாக இருந்த மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு
நட்சத்திரங்களை பார்த்துகிட்டு இருந்தோம். மணி 9
ஆகியும் கரண்ட் வரலை. எலக்ட்ரிசிட்டி போர்டு
ஆபீஸுக்கு போயிட்டு வந்த இரண்டு பேர் கரண்ட்
வரது சந்தேகம். மொத்தம் 9 மரங்கள் விழுந்திருக்கு.
அப்படின்னு சொன்னாங்க.

தோமல்குடாவில் இருக்கும் சொந்தக்காரவுங்க
வீட்டுக்கு தூங்கப்போனோம். கொடுமை கொடுமைன்னு
கோவிலுக்கு போனா அங்க 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு
ஆடிச்சாம், அதுமாதிரி நாங்க அங்க போன நேரம்
பாராத்(திருமண அழைப்பு) ஒண்ணு போய்க்கிட்டு இருந்துச்சு.
10 நிமிஷத்துல கடக்கற தூரத்தை 1 மணிநேரமா
டான்ஸ் ஆடி, மேளம் அடிச்சு போய்க்கிட்டு இருந்தாங்க.
12 மணி வரைக்கும் ஆட்டம் நடந்துகிட்டு இருந்துச்சு. :((

காலையில் 5 மணிக்கு கிளம்பி எங்க வீட்டுக்கு வந்தோம்.
அப்ப வரைக்கும் கரெண்ட் வரலை. பேப்பரில் பாத்தா
விஷயம் புரிஞ்சிச்சு. நேத்து மணிக்கு 70 கிமீ வேகத்தில்
காற்றோட மழை பெஞ்சிருக்கு. இதனால ஹைதை
மொத்தத்திலும் 300 மரங்கள் விழுந்திருச்சு.

அதிக பட்ச வெயிலால் அவிஞ்சிகிட்டு இருந்தோம்.
இந்த மழை இதத்தை கொடுத்து கொஞ்சம் மெர்க்குரி
லெவலை குறைச்சிருக்குன்னாலும் கிட்டத்தட்ட 14 மணிநேரம்
எங்க ஏரியா மின்சாரம் இல்லாமல் தவிச்சு போயிட்டோம்.

பல இடங்களில் மின்சார அலுவலகத்தை மக்கள்ஸ் முற்றுகை
இட்டதா பேப்பரில் படிச்சோம். ஒரு ஈ.பி ஆபிஸ் மேலேயே
மரம் விழுந்து கிடந்துச்சு. பாவம் அவங்களும் என்ன செய்வாங்க.
ஹைதையில் எனக்கு பிடிச்சது மரங்கள்,பசுமை.
பிர்லா மந்திரிலிருந்து பாக்கும்பொழுது கட்டங்களுடன்,
பசுமையா மரங்களும் தெரியும். Anandnagar, Jubilee Hills,
Baghlingampally, Gandhinagar, S P Road,
Vijayanagar Colony, Lower Tank Bund, Abids,
Basheerbagh, Yakutpura, Padmaraonagar,
SBI Colony, Goshamahal, Langar Houz,
Barkatpura, Noorkhan Bazar and Secretariat. இங்கல்லாம்
மரங்கள் விழுந்திருக்கு.
மரங்கள் எலக்ட்ரிக் வயர்களில் விழுந்ததுதான் பிரச்சனையே.

மழை நீர் தேங்குவதனாலும் பிரச்சனை. ராணிகஞ்ச்
பிரிட்ஜுக்கு அடியில் மழை நீர் தேங்கி டிராபிக்
ஜாம் ஆகிடிச்சு.


மழை பெஞ்சதால பகல்நேர வெப்பம் குறைய
வாய்ப்பில்லை, மாலை நேரங்கள் குளுமையா
இருக்கும்னு வானிலை அறிக்கை சொல்லுது.
எப்படியோ மழைக்காலம் ஆரம்பமாகிடிச்சு.
வரும்போதே ஆக்ரோஷமா வர்றாரு வருணபகவான்.
பாப்போம். நல்லபடியா மழை பெஞ்சு, நல்ல விளைச்சலை
கொடுத்து தண்ணிக்கஷ்டம் இல்லாம இருக்கட்டும்.




Friday, May 14, 2010

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு

எங்க உறவுக்கார அக்கா ஒருத்தரை ரொம்ப வருஷம்
கழிச்சு பாத்தேன். அவங்களுக்கு ஒரே பொண்ணு.
அந்த பொண்ணை 5 வயசு பாப்பாவா பாத்தது.
இப்ப அந்த செல்லம் காலேஜ் படிக்குது. ரொம்ப
நாள் கழிச்சு பாத்ததுல சந்தோஷமா பேசிக்கிட்டு
இருந்தோம். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.

”எம் பொண்ணு எப்பவும் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ்
காலேஜ் தான் கலா!! ஆம்பிளைங்களுடன் பேசவே
சான்ஸ் இல்ல! ரொம்ப ஸ்ட்ரிக்டா வளக்கிறேன்!”
அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரே யோசனை.
”ஏங்கா உங்க பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு
சொல்றீங்க! அப்ப கூட ஆண்களே இல்லாத
இடத்துக்குத்தான் அனுப்புவீங்களான்னு??” கேட்டேன்.
அவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சு. எனக்கு
அந்தப் பொண்ணை நினைச்சு மனசு ரொம்ப வருத்தம்.

அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.
ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்
கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத
காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கணவன் - மனைவி உறவில் ஆரம்பம் நட்பாகத்தான்
இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான புரிதல்
ஏற்படும்.

இதை கொஞ்சம் விவரமா பாப்போம்.

ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எதிர்பாலினருடன்
தொடர்பே இருக்கக்கூடாது என பொத்தி பொத்தி
வளர்த்தால் அலுவலகத்தில் வீட்டில் பிரச்சனை
ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.

வீட்டில் ஒரே ஆண்குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.
உடன் விளையாட அக்கா, தங்கை இல்லாத பட்சத்தில்
அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது.
பெண்ணின் பிரச்சனை தெரியாது, புரியாது. அவளின்
வருத்தங்கள் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலும்
அவனுக்கு நல்ல பெண் நட்பு (நட்பு மட்டுமே)
கிடைக்காத பொழுது சுத்தமாக பெண்வாசனையே
இல்லாமல் தன் தாயையை வைத்து மட்டுமே
பெண்களை எடை போடுவான்.

இப்படி பட்ட சூழ்நிலையில் வள்ர்ந்து
வேலைக்குச் செல்லும் பொழுது அங்கே சக
பணியாளராக பெண்ணோ, அல்லது உயரதிகாரியாக
பெண்ணோ இருந்தால் அந்த சூழ்நிலைக்கு தன்னை
அட்ஜஸ்ட் செய்து கொள்வது கஷ்டமாகிவிடும்.

இதேதான் பெண் குழந்தைகளுக்கும். எல்லோரும்
தன் தந்தையைபோல நல்லவர்/கெட்டவர் என்ற
முடிவுக்கு பெண் வந்துவிடுவாள். அதே கோணத்தில்
பார்த்து பார்த்து பிரச்சனை ஆகிவிடும். வேறு
விதமாக கூட ஆண்கள் இருப்பார்கள் என்று புரியாததற்கு
காரணம் ஆண்களிடம் பழக்கம் இல்லாமல் இருப்பது.
ஆண்களே சுற்றி இல்லாத சூழலில் வளர்ந்த
காரணத்தால் அலுவலகத்தில் தன்னை
பொறுத்திக்கொள்ள இயலாமல் போய்விடும்.
புகுந்த வீட்டில் கணவனைத்தவிர வேறு
ஆண்மகன்கள் இருந்தால் அவர்களுடன் சரியாக
பேசத்தெரியாமல் போய்விடும்.

நம் குடும்ப உறவுகள் தவிர வெளியாருடனும்
பழகத்தெரிவது அவசியம். மனிதர்களை படிக்க,
புரிந்து கொள்ள இது அவசியம்.

இதற்காக ஆண்களிடம் குழைந்து பேசி, மேலே
விழுந்து பழகச்சொல்வதாக நினைக்க வேண்டாம்.
ஆரோக்கியமான நட்பு இருபாலருக்கும் வேண்டும்.
அப்பொழுதுதான் எதிர் பாலினரை புரிந்து கொள்ள
முடியும். ”ஆண் பிள்ளைகளுடன் விளையாடினால்
காதறுந்து போகும்” என்று பயமுறுத்தியோ எங்கே
தன் மகள் காதல் வலையில் விழுந்துவிடுவாளோ
என்ற பயத்தினால் பொத்தி பொத்தி ஆண்வாசனையே
இல்லாமல் செய்வதனால் பெண்ணை காப்பாற்றுவதில்லை,
மாறாக அவளுடைய புரிதல் குணத்தை தடுத்து
நிறுத்துகிறோம்.

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொது இடத்தில் வாழ்வில்
அந்தப் பெண் ஆண்களை சந்தித்தாக வேண்டும்.
ஆண்களே இல்லாத உலகமோ, பெண்களே இல்லாத
உலகமோ சாத்தியப்படாத பொழுது சகஜமாக
பெண்/ஆண் குழந்தையை வளர்க்க வேண்டும்.

பொத்தி பொத்தி வளர்த்து அவர்களின் வாழ்க்கையை
கஷ்டமுள்ளதாக ஆக்க வேண்டாம். மலர்ந்து
நட்புக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை
உருவாக்க கை கொடுப்போம்.




Tuesday, May 11, 2010

குருவே சரணம்

ஹோட்டல் ரம்யாஸிலேயே அப்பா இந்தகோவிலுக்கு
எப்படி போகணும்னு ரூட் போட்டு வாங்கிட்டாரு.
திருநள்ளாறு, பேரளம், திருவாரூர், ஆலங்குடி.
ஒன்னரை மணிநேரத்துல போய்ச் சேர்ந்துடலாம்.
திருநள்ளாறிலிருந்து கிளம்பும்போதே மணி 10.
12 மணிக்குள்ள கோவிலுக்கு போயிடணும்னு
அடிச்சு பிடிச்சு ஓடினோம். அப்பா வந்த காரோட
டிரைவர் ”வரும் வராது” டிரைவர் மாதிரி.
செம ஸ்லோவா ஓட்டினார். எங்க டிரைவருக்கு
ரூட் தெரியாது. சென்னையை விட்டு இப்பத்தான்
இந்த ரூட்டில் வர்றாராம். சிவனேன்னு அப்பா
காரைத் தொடர்ந்தோம். சில சமயம் மாப்பிள்ளை
அழைப்பு ஊர்வோலம் ஏதும் போறோமோன்னு
இருந்துச்சு.

ஒரு கட்டத்துல கடுப்பாகி திருவாரூர் வரைக்கும்
வண்டியை விடுங்க தம்பின்னு சொல்லிட்டேன்.
அங்கன போய் வெயிட் செஞ்சுக்கலாம்னு.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின்
மெயின் கோபுரத்துக்கு கிட்டயே இருக்கு
தியாகய்யர் பிறந்த வீடு.

நீடாமங்கலம் போகும் பாதையில் போகாமல்
அதற்கு வலது பக்கம் போகும் பாதையில்
போனால் 6 கிமீட்டரில் ஆலங்குடி.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.
அம்மை ஏலவார்க்குழலி அம்மை.
தக்‌ஷீணாமூர்த்தி சுவாமி. இவர்களுடன்
கலங்காமற் காத்த பிள்ளையாரும் அருள்
புரியும் கோவில்.
இனையதள முகவரி


சிவன் கோவில்தான். ஆனால் இது குருபரிகாரஸ்தலம்.
குரு நல்லதே செய்வார்னு எல்லோரும் நினைச்சுகிட்டு
இருக்கோம். சனீஸ்வரர் ஆட்டும் அந்த 71/2 வருடங்கள்
தான் கஷ்டம்னு நினைக்கிறோம். ஆனால் உண்மை
அது இல்லையாம். குரு எல்லோருக்கும் நல்லது
செய்வதில்லையாம். 16 வருடங்கள் குரு தசை.
போட்டு புரட்டி எடுத்துவிடும். :( சனீஸ்வரராவது
இம்புட்டு பாடு படுத்தினோமேன்னு போகும்போது
நல்லது செஞ்சிட்டு போவார். சரின்னு குருவுக்கு
ஒரு வணக்கத்தை போட்டுகிட்டு கிளம்பினோம்.

12 மணிக்கு கோவில் சாத்திடுவாங்கன்னு அடிச்சு
பிடிச்சுஓடினோமே! கோவில் 1 மணி வரை திறந்திருக்குமாம்.

அங்கேயிருந்து கும்பகோணத்தை டச் செய்யாமல்
தஞ்சாவூர் போகும் வழி இருக்கு. இந்த வழியெல்லாம்
எங்க டிரைவருக்குத் தெரியாது. அதனால திரும்ப
அந்த தாத்தாவை தொடர்ந்து போனோம். ஆஷிஷுக்கு
அழுவாச்சியா வந்துச்சு. இனோவா வண்டியை
40 கிமீ ஸ்பீடுல ஓட்டுறது நாமளாத்தான் இருக்கும்னு
ஒரே புலம்பல்ஸ். அம்ருதா அம்மம்மாகூட அந்த
கார்ல வந்துக்கினு இருந்தாக. ஆஷிஷ் தான்
அம்பாசிடர்ல ஏற மாட்டாரே! 1 .30க்கு தஞ்சாவூர்
புது பஸ்ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டல்
ஆர்யாவில் லஞ்ச். செம கூட்டம். அதைவிட்டா
புதுகை போக 1 மணிநேரம் ஆகும். லேட்டாகிரும்னு
வெயிட் செஞ்சு சாப்பிட்டோம்.

சாப்பிட்டு வண்டியை கிளப்பியாச்சு. காரிலிருந்து
தஞ்சை பெரிய கோவிலை சுட்டோம். போட்டோ
தாங்க.



தஞ்சாவூர் புதுக்கோட்டை போகும் வழியில் ஆதனக்கோட்டைன்னு
ஒரு ஊர் வரும். இது முந்திரிக்கு பெயர் போன இடம்.
கொழும்பு கண்டி செல்லும் பாதையில் வரும் காஜூகிராமாவில்
கடை மாதிரி கட்டி முந்திரி விப்பாங்க. எங்க ஆதனக்கோட்டையிலும்
அதுமாதிரி கடை போட்டிருந்தாங்க. இறங்கி முந்திரி
வாங்கினேன். இங்க பச்ச முந்திரி கிடைக்காது. வறுத்தது
தான் கிடைக்கும். அப்படியே முந்திர்ப்பழம் பாத்ததும்
வாங்கிட்டேன். இந்தோ உங்களுக்கும். செம டேஸ்ட்.
உடம்புக்கும் நல்லதாம்.



அங்கேயிருந்து பெரம்பூர் வீரமாகாளி கோவில்
தரிசனம் முடிஞ்சதும் மெயின் ரோட்டுக்கு வந்ததும்
எங்க டிரைவர் கிட்ட தம்பி இது என் ஏரியா,
தெகிரியமா அந்த தாத்தாவை ஓவர் டேக்
செஞ்சு போங்கன்னு சொல்லிட்டேன். அப்பா
போன போட்டு நேரா ராதா கபே போயிடும்மா!
அப்படின்னு சொன்னார்.

ஸ்ரீநிவாஸா தியேட்டர், மச்சுவாடி, சர்ச்,
அப்பா பேங்க் வந்து வலதுல திரும்பினா
ராதா கபே. அங்க போய் சூடா டீ, ஆனியன்பஜ்ஜி
சாப்பிட்டோம். கொஞ்சம் நேரத்துல அப்பா
காரும் வந்து சேந்துச்சு. அப்பா அவசர வேலை இருக்குன்னு
காபி சாப்பிட்டுட்டு முன்னாடியே கிளம்பினதால பில்லை என் கிட்ட
கொடுக்கச் சொல்லி சொன்னேன்.

அப்பத்தான் அவரு அந்தக் கேள்வியைக் கேட்டாரு.
கிட்டத்தட்ட 18 வருஷம் கழிச்சு இந்தக் கேள்வியை
என் கிட்ட கேட்டதும் ஆஹா இன்னமும் இந்த
ஊரு மாறலடா சாமின்னு நினைச்சேன்.

“ரமணி சார் மகளாம்மா நீ” என்பதுதான் அந்தக்
கேள்வி. அவர் கேட்ட விதம் முகத்துல ஆச்சரியம்,
சந்தோஷம் எல்லாம் கலந்து இருந்துச்சு. வீட்டுக்கு
போய் ரெஸ்ட் தான்.

அடுத்த நாள் எங்க போனோம் அடுத்த பதிவுல சொல்றேன்.

Sunday, May 09, 2010

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!!

மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமென்றால்
அன்னையாக பிறப்பதற்கு கோடி புண்ணியங்கள் செய்திருக்க
வேண்டும். தெலுங்கில் ஒரு வாக்கியம் சொல்வார்கள்.
புண்ணியம் செய்வதன் பலன் பிள்ளைகள் என்று.

ஒரு குழந்தை பிறக்கும் பொழுதுதான் அன்னையும்
பிறக்கிறாள். அமூதூட்டக்கற்கிறாள். என்னைப்
பொறுத்தவரை நான் கற்கத்துவங்கியது அம்மாவான
பிறகுதான்.

காலையில் எழுந்ததுமே அம்மாவுக்கும்,
சித்திக்கும் போன் போட்டு வாழ்த்துச் சொல்லிவிட்டேன்.
”மணி 7 ஆச்சு இன்னும் என் மகளிடமிருந்து
போன் வரலியே என்று காத்திருக்கிறேன்!” என்றார்
சித்தி

என் பிள்ளைகளுக்காக விதம்விதமாய் சமைக்க கற்றேன்.
அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க என் புத்தியை
பெருக்கிக்கொண்டேன் என இப்படி எத்தனையோ...

நான் கற்க காரணமாக இருந்த என் பிள்ளைகளுக்கு
எனதன்புகள்.

ஒரு வாரம் முன்பிலிருந்தே அம்ருதாவும் ஆஷிஷும்
ஆரம்பித்து விட்டார்கள். அம்மா உனக்கு என்ன பிடிக்கும்?
இந்த முறை நீ விரும்புவதையே மதர்ஸ்டே கிப்டா
தர்றோம் என்று.

எனக்கு பிடித்த யேசுதாஸ் பாடல்கள் கலெக்‌ஷன் தேடினார்கள்
ப்ச் கிடைக்கவில்லை. எனக்காக சாஃப்ட் டாய்ஸ்
வாங்குவதாகச் சொல்லி பிறகு வேணாம் என
மாற்றினார்கள். ஷோ பீஸஸ் எதுவும் வேண்டாம்
என்று சொல்லியிருந்தேன்.

கடைசியில் இருவரும் சேர்ந்து வித்தியாசமாக
பரிசளிப்பதாகச் சொல்லிவிட்டார்கள். பிள்ளைகள்
எது செய்தாலும் சந்தோஷமே என இருந்தேன்.
நேற்று சாயந்திரம் முதலே என்னை கிச்சனுள்
விடாமல் டீ, இட்லி,சட்னி செய்து கொடுத்தார்கள்.


நான் கிச்சனுக்குள் நுழையக்கூடாது என இருவரும்
மறியல் செய்ய இன்று வம்படியாக மதிய
சமையலை செய்தேன். இதற்கு பிறகு
கிச்சனுக்குள் வரக்கூடாது என தடா போட்டுவிட்டார்கள்.
தங்களது பாக்கெட் மணியிலிருந்து இருவரும்
சேர்ந்து என்னை டின்னருக்கு அழைத்துச்
செல்லபோகிறார்களாம். சாயந்திரம் மசாலா
டீ கூட ஆஷிஷ் தான் போடப்போகிறார்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன். சில சமயம்
பிள்ளைகள் இருவரும் தாயாய் பாசம்
காட்டும் பொழுது மகிழ்ச்சியில் இறைவனுக்கு
நன்றி சொல்கிறேன்.

சாப்பிட்டு முடிச்சாச்சு. நான் போய் ஹாயா
ஒரு தூக்கம் தூங்கி ரெஸ்ட் எடுக்கறேன்.
நைட் வேற டின்னருக்கு போகணும். :))
இந்தப்பாட்டை கேட்டு எஞ்சாய் செய்யுங்க.

அன்னையர் அனைவருக்கும் மனமார்ந்த
அன்னையர் தின வாழ்த்துக்கள்.




A human body can bear only upto 45 Del (unit) of pain. But at the time of giving birth, a woman feels upto 57 Del of Pain. This is similar to 20 bones getting fractured at a time!!!! LOVE UR MOM... God couldn't be everywhere and therefore he made Mothers... THE MOST BEAUTIFUL PERSON ON THIS EARTH… OUR BEST CRITIC … YET OUR STRONGEST SUPPORTER… "MOTHER"



Saturday, May 08, 2010

ஈஸ்வரனுக்கு அடுத்து ஈஸ்வரப்பட்டம் பெற்றவரின் தரிசனம்

திருக்கடையூரிலிருந்து காரைக்கால் போய்சேர்ந்தோம்.
ஆன்லைனில் பாத்து ஒரு ஹோட்டல்ல புக் செஞ்சு
வெச்சிருந்தோம். எங்களுக்கு முன்னதாகவே அம்மா,
அப்பா வந்துவிட அவங்க புக் செஞ்சு வெச்சிருந்த
ரூமில் ஒன்றில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்தா இந்தா வென நாங்கள் ஹோட்டல் போய்ச்சேர்ந்த
பொழுது இரவு மணி 10. சிதம்பரத்தில் ஃப்ரெண்ட் வீட்டில்
சாப்பிட்டது. செம பசி. முதலில் போய் சாப்பிட்டோம்.

ரூம் சாவி கேட்கும்பொழுது ஆரம்பித்தது பிரச்சனை.
நாங்கள் புக் செய்து வைத்தது இரண்டு ஃபேமலி ரூமுக்கு.
ஆனால் அதில் ஒரு ரூம் காலிஆகாத காரணத்தால்
அப்பா,அம்மாவுக்கு டபுள் ரூம் சாதாரணமானது
கொடுத்திருக்கிறார்கள். ரூம் போய் பார்த்தால் ரொம்ப
சின்னது. நாங்களோ 5 பெரியவர்கள் இரண்டு குட்டீஸ்.

சண்டை போடவும் தெம்பில்லை. சரி டயர்ட். காலை
ட்ரையின்ல் இறங்கியதிலிருந்து பயணம் பயணம்...
ஆஹா காலையில போய் தரிசிக்கிறதுக்குள்ளேயே
ஆட்டத்தை காட்டுறாரே மிஸ்டர்.சனீஸ்வரர்னு நினைச்சேன்.
சூட்டுங்கற பேர்ல ஒரு ரூம் கொடுத்தாங்க. அதை
நாங்க எடுத்துகிட்டு அம்மா,அப்பா, கூடவந்த்வங்களுக்கு
அந்த ஃபேமிலி ரூமை கொடுத்தோம். ஹோட்டல்
பேரீஸ் இண்டர்னேஷனல் -காரைக்கால் அப்படி
ஒண்ணும் ஓகோ ரகமில்லை. ரூம் பரவாயில்லை ரகம்
ஆனா அவங்க சர்வீஸ் மகா மட்டம்.

திருநள்ளாறு போகனும்னு சொன்னதிலேர்ந்து அப்பா
6 - 7 சனி ஹோரையில் சனி பகவானை தரிசிப்பது
உத்தமம். அதுவும் அங்கேயிருக்கும் நளதீர்த்தத்தில்
குளிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தாரு. ஆஹா,
6-7 தரிசனம்னா அதுக்கு முன்னாடி 5 மணிக்கே
குளிக்கணுமே!!ன்னு விசனபட்டுகிட்டு இருந்தேன்.
ஆஷிஷுக்கு போன மாசம் தான் அம்மை போட்டு
சரியாகி இருந்தது. கொஞ்சம் சளி இருக்கும் நேரத்தில்
புது ஊரில் வெயில் வரும்முன் குளத்தில் குளிச்சா
என்னாகுமோன்னு பெம்மா இருந்துச்சு.

7 மணிக்கு மேலே தரிசனம் வெச்சுக்கோங்கப்பா,
சனிக்கிழமை திருநள்ளாறில் தரிசனம் செய்வோம்
இதுவே பெரிசுன்னு அப்பாகிட்ட சொன்னேன்.
5மணிக்கு அலாரம் வெச்சு எந்திரிச்சு அப்பாக்கு
போனைப்போட்டு போகலாம்பான்னு சொன்னேன்.
“வெளியில மழைக்கொட்டுது!!! ரூமிலேயே
குளிச்சிடலாம்னு சொன்னார் அப்பா.

சந்தோஷமா ரூமில் குளிச்சு ரெடியாகி ரூமை
காலி செஞ்சிட்டு திருநள்ளாறு கிளம்பினோம்.
காரைக்காலிலிருந்து திருநள்ளாறு 10 நிமிஷம்தான்.
மழை நல்லாவே தூறிக்கிட்டு இருந்துச்சு. கூட்டமும்
எக்கச்சக்கம்.கோவிலில் நுழைஞ்சு வெளியில
வரும் வரை மழை. தொப்பல் தொப்பலா நனைஞ்சோம்.
குளத்தில் குளிப்பதைவிட புனிதமான மழைநீரில்
உங்களை புனிதமாக்கிட்டேன்னு ஆண்டவன் சொல்றாரோ!
அருமையான தரிசனத்துக்கு அயித்தான்
அரேஞ்ச் செஞ்சிருந்தாரு.

முதலில் திருநள்ளாறில் கொலுவிருக்கும் சிவன்.
தர்ப்பாரேண்யேஸ்வரர் எனும் திருநாமம். இங்கே
ஸ்தல விருட்சம் தர்ப்பை எனும் புல்தான்.
அம்பிகைக்கும் தனி கோவில். அதற்கு அருகிலேயே
சின்னஞ்சிறு மூர்த்தியாக சனீஸ்வரர். மூர்த்தி
சிறுசானாலும் கீர்த்தி ரொம்ப பெரிசு.

நளனுக்கு பிடித்திருந்த சனிதோஷம் நீங்கியது
இங்கேதான். திருநள்ளாற்றிற்கு வேறு பெயர்களும்
உண்டு. ஆதிபுரி, தர்பாண்யம்,நாகவிதங்கபுரம் &
நளேஸ்வரம்.

8.30க்குள்ள தரிசனம் முடிஞ்சிருச்சு. வெளியே
வந்து பாத்தா அனுமார் வால்மாதிரி பெரிய்ய
க்யூ... சரி கூட்டம் அன்னைக்கு. சனிக்கிழமை
தவிர மே1 என்பதால் விடுமுறை தினம் வேற.
நாங்க கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் அடுத்த
கோவிலுக்கு போயிருக்க முடியாது.

திருநள்ளாறு கோவில் அதிகாரி ரம்யாஸ்னு ஒரு
ஹோட்டல் இருக்கு அங்க போய் டிபன் சாப்பிடுங்கன்னு
சொல்லியிருந்தாரு. கோவிலிலிருந்து கிட்டத்தான்
போய் பாப்போமேன்னு போனோம். புஃபே டைப்தான்னு
சொன்னாங்க. எம்புட்டுன்னு கேக்க 50ரூபாய்னு பதில்
வந்துச்சு. பரவாயில்லையேன்னு போய் தட்டை எடுத்து
கிட்டோம். தோசை,இட்லி, பொங்கல், கிச்சடி, சட்னி,
சம்பார், காபி இருந்துச்சு. நல்லா சாப்பிட்டு
அடுத்த கோவில் மூடுவதற்குள்ள போய்ச்சேரணும்னு
கிளம்பினோம்.

ரம்யாஸ் ஹோட்டலில் ரூம்களும் நல்லா இருக்கு.
வெஜ், நான் - வெஜ் ரெஸ்டாரண்ட்கள் தனித்தனியா
இருக்கு. சர்வீஸ் ரொம்ப அருமை. உங்களுக்கு
உதவும்னு இணைய தள முகவரி.



அடுத்து எங்க.... அதே தான் அடுத்த பதிவில்



Friday, May 07, 2010

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை....

சிதம்பரத்திலிருந்து ஒன்றரை மணிநேரப்பயணத்தில்
சென்றடடைந்தது திருக்கடையூர் எனும் புனித
கோவிலுக்கு.

இங்கே என்ன விஷேஷம்? அம்மையும் அப்பனும்
தனது பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இடம்.

தனது பக்தனான அபிராமி பட்டரின் உயிரைக்காக்க
தனது காது தோட்டைக்கழற்றி வானத்திலே வீசி
அமாவாசையன்று பொளர்ணமியை வரவழைத்தவள்
ஆயிற்றே இந்த அபிராமி!! அபிராமி பட்டரின் கதை.



அபிராமி அந்தாதி பாடினார் அபிராமி பட்டர்.
அந்தமே ஆதியாக வரும்படி பாடப்படும் பாடல் அது.

அபிராமி கடைக்கண்களால் பார்த்தாலே நாம் பேறு
பெற்றுவிடுவோமாம்.
அபிராமி அம்மை பதிகத்தில் இந்தப்பாடல்
ரொம்பவே விஷேஷம்.

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான
குரலில் இந்தப்பாடல். கீழே வரிகளும் கொடுத்திருக்கிறேன்.


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாதவாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரோடு கூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி!அபிராமியே!

தனம் தரும் கல்வித்தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும்

நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பவர் என்பவர்க்கே
கணம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!!


அம்மையின் கடைக்கண்களால் அருள் பெறும் பாக்கியம்
தரும் தலம் என்பதுடன் இன்னொரு விஷேஷமும் இதற்கு
உண்டு. அது சிவன் தனது பக்தனுக்காக காலனை
வதைத்த இடம். யார் அந்த பக்தன்? 16 வயதில்
சிவலோகப்ராப்தி அடைய வேண்டும் என்பது
மார்க்கண்டேயனின் ஜாதகம். தன்னைக்காக்க
வேண்டி இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தை
கட்டிக்கொள்கிறான்.


பக்தனுக்காக மனம் இறங்கி வந்த சிவபெருமான்
மார்க்கண்டேயனை விட்டுவிடும்படி எமனுக்குகூற
தனது கடமையைச் செய்ய எமன் பாசக்கயிற்றை
வீசுகிறான். மார்க்கண்டேயன் லிங்கத்தை கட்டிக்கொண்டிருப்பதால்
கயிறு சிவனின் மேலும் பட்டது. வெகுண்டு எழுந்த
சிவன் காலனை வதைக்க்கிறார்.



இங்கே இறைவனின் திருநாமம் அமிர்தகடேஷ்வரர்.
அமிர்தத்திற்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம்?
அதற்கும் கதை இருக்கிறது. திருப்பாற்கடலை
கடைந்து அமிர்த கலச வந்த பொழுது பிள்ளையார்
அந்தக் கலசத்தை யாருக்கும் தெரியாமல் திருக்கடையூரில்
கொண்டுவந்து வைத்துவிட்டாராம். காரணம்?
முழுமுதற்கடவுளைத் தொழாமல் எந்த வேலையும்
செய்யக்கூடாது. தேவர்கள் செய்த தவறுக்காக
கள்ளத்தனமாக அமிர்த கலசத்தை கொண்டு வந்ததால்
இவர் இங்கே “கள்ளப்பிள்ளையார்”எனும் பெயரில்
அழைக்கப்படுகிறார்.

இங்கே இருக்கும் லிங்கமே அமிர்த குடத்தால்
செய்யப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

திருக்கடையூரில் சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம்
போன்றவற்றை இந்தக் கோவிலில் செய்துக்கொள்வது
சிறப்பு. அதுவும் காலனை வதைத்த சிலை
இருக்கும் மேடையில் விசேஷங்கள் செய்ய 3500 ஆகிறது.
(அர்ச்சகர்கள் செலவு, இத்யாதிகள் தனி)இதற்கு
புக்கிங் ஒருவருடம் முன்பே செய்யப்படுகிறது.

கீழே ப்ராகாரத்திலும் செய்கிறார்கள். அது 1500 ரூபாயாம்.
அபிராமி அம்மையின் ப்ராகாரத்திலும் செய்யலாமாம்.

இந்தக்கோவிலில் இருக்கும் காலனை வதைத்த
சிலையை தரிசித்தால் நவக்கிரக தோஷங்களும் நீங்கும்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு.
அம்மனும் அப்பனும் காப்பாற்றுவார்கள் என்ற
நம்பிக்கையில் அனைவருக்கும் பிரார்த்தித்துக்கொண்டு

அங்கேயிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும்
காரைக்கால் போய்ச்சேர்ந்தோம்.
தொடரும்...




Thursday, May 06, 2010

நட்போடு ஒரு மணிநேரம்

பாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால் வண்டிக்கு
டீசல் புல் டேங்க் அடிச்சிட்டு வண்டியை நேரா விட்டோம்.
அங்கேயிருந்து கிளம்பும்போதே ஆத்தா மங்கம்மாவுக்கு
போனைப்போட்டேன். ”இன்னும் காலேஜுல தான் இருக்கேன்,
இன்னைக்கு லாஸ்ட் வொர்க்கிங் டே, எங்க ஊருக்கு கிட்ட
வரும்போது ஒரு கால் செய் ஓடியாந்திடறேன்னு!” சொன்னா.

சஸ்பென்ஸ் ரொம்ப வேணாம். பாக்கப்போனது என் 18 வருட
நட்பை. அவுக இருப்பது சிதம்பரத்தில். அண்ணாமலைப்
பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியை.
என் தோழியின் அறிமுகம் முன்பே எனது 450ஆவது
பதிவா போட்டிருந்தேன்.

பாண்டியிலேர்ந்து சிதம்பரம் 1 1/2 மணிநேரப்பயணம்தான்.
சிதம்பரம் அடைய 3 கிமீ இருக்கும்பொழுது ஆத்தாவுக்கு
போன் போட்டு ”கிட்ட வந்துக்கினே இருக்கோம்”னு சொன்னோம்.
ஐயோ இதோ கிளம்பிட்டேன்னு போனை கட் செஞ்சிட்டு
கிளம்பினாங்க அம்மா.

அடுத்த 5ஆவது நிமிஷம் திரும்ப கால். ”எங்க இருக்கீங்க?
நீங்க வீட்டுக்கு வந்திருப்பீங்கன்னு நினைச்சு ஒடியாந்தேன்னு!”
மூச்சிரைக்க பேசினா. டூவிலர் ஓட்டும்போது மூச்சிரைக்குமான்னு
எனக்கும் அயித்தானுக்கு செம டவுட். ”அவசரத்துல
வண்டியை ஸ்டார் செஞ்சு ஓடவிட்டுட்டு தங்கச்சி
வண்டி பின்னாடியே ஓடிருப்பாக! அதான் மூச்சிரைக்குது”
அப்படின்னு அயித்தான் ஜோக் அடிச்சாரு.

தோழியும் அவங்க மூத்தமகனும் இருந்தாங. சின்னவரு
லீவுக்கு காரைக்குடி போயிருந்தாப்ல. எனக்கு கொல பசி.
பப்ஸ், போளி, முறுக்குன்னு என் ஃப்ரெண்ட் வாங்கி
வெச்சிருந்தாப்ல. சாப்பிட்டுட்டு டீ போட்டு குடிச்சிட்டு
பேசிகிட்டு இருந்தோம்.

என் தோழிக்கு நான் பட்ட பெயர் வெச்சதை என் பிள்ளைகளுக்கு
சொல்லிகிட்டு இருந்தா. ”அப்பவே ஆத்தா படிப்ஸ் பத்மா!
அதான் பேர் வெச்சோம்னு” நான் சொல்ல ”நான் எப்பவும்
விழுந்து விழுந்து படிப்பதும் ஒண்ணும் உங்கம்மா
கடைசி நேரத்துல படிச்சு மார்க் எடுப்பதும் ஒண்ணு”
அப்படின்னு என்னிய விட்டுக்கொடுக்காம பேசினா
காலேஜ் கோல்ட் மெடலிஸ்டான என் தோழி.

கொஞ்ச நேரத்துக்கு பள்ளத்தூர் ஆச்சி காலேஜில்
நானும் என் ஃப்ரெண்டும் இருந்தது போல இருந்துச்சு.
கூட இருந்தவங்க எல்லோரையும் மறந்துட்டோம்.
1 மணிநேரத்துக்கும் மேலே நேரமாச்சு! அப்பா
5 மணிக்கு அந்த கோவில் அபிஷேகம் பார்க்க
வரச்சொல்லியிருந்தாரு. ஏகப்பட்ட போன் அப்படின்னு
ஞாபகப்படுத்தினாரு அயித்தான். அப்பவே மணி 6
இனி அபிஷேகம் பார்க்க முடியாது என்பதால்
சிதம்பரம் நடராஜரை தரிசிச்சிட்டு உடனே கிளம்பினோம்.


”இப்படி கால்ல கஞ்சி கொட்டினா மாதிரியா வருவது,
4 நாள் தங்கக்கூடாதான்னா!” சண்டைபோட்டா ஃப்ரெண்டு.
பாண்டியிலேர்ந்து போகும்போது வழியில உங்க ஊரு,
உன்னைப்பாக்காம போனா தில்லைக்காளி மாதிரி
நீ கோபப்பட்டு நடராஜர் மாதிரி தாண்டவம் ஆடினா
தாங்கமாட்டேன், அதாண்டா பாத்துட்டு போகலாம்னு
ஓடிவந்தேன். அடுத்தவாட்டி இங்க வந்து தங்கி
பிச்சாவரம் லேக் போகலாம்னு “ சமாதானம் செஞ்சுட்டு
கிளம்பினேன்.


அங்கேயிருந்து கிளம்பி நேரா போனது...
அடுத்த பதிவுல...

Wednesday, May 05, 2010

புதுச்சேரிக்கு ஒரு கலக்கல் ட்ரிப்...

பாசக்கார நண்பர்கள் அயித்தானுக்கு அதிகம். நாங்க போட்டு
வெச்சிருந்த திட்டத்தை மாற்றி எங்களை வம்படியாக அவங்க
வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டார் அயித்தானோட நண்பர்.
செண்ட்ரல் ஷ்டேஷனுக்கே வந்திட்டாரு. அவங்க வீட்டுக்குப்போய்
குளிச்சு, சாப்பிட்டு கிளம்புவதற்கு 2 மணிநேரம் தாமதமாகிடிச்சு.
தம்பி அப்துல்லாவோட தங்க்ஸும் பிள்ளைகளும் சென்னையில்
இருப்பதாக சொன்னாரு. ரொம்ப நாளா அவங்க தங்க்ஸை மீட்
செஞ்சு ”பேசணும்”னு முடிவு செஞ்சிருந்தேன். இந்தமுறையும்
அப்துல்லா தப்பிச்சிட்டாரு. :)

அங்கேயிருந்து நேராக காரில் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டோம்.
போறவழியில் முதலைப்பண்ணை வரும், ஆஷிஷ்
அப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி அங்கே போக ஒப்புதல்
வாங்கினாரு.(இதனால வேற எங்க பயணம் லேட்டாகிடிச்சு)
சரி போவோம்னு போனா போனதடவையை விட செம
மாறுதல். பரமாரிப்பே இல்லாத மாதிரி இருந்துச்சு.
சின்ன முதலையை கையில் பிடிச்சு போட்டோ எடுத்துக்கலாம்னு
தைரியம் வந்து அம்ருதா கேட்ட நேரம் 5 மாசமா அதை
தடை செஞ்சிட்டாங்களாம்!!




அங்கேயிருந்து மாங்கா பத்தை, வெள்ளரிக்காய் எல்லாம் உப்பு,காரம்
போட்டு வாங்கிட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பினோம்.
இதோ வரவேற்கும் வளைவு.


பாண்டிச்சேரியில் எனக்கு பிடிச்சது அழகான சாலைகள்.
எங்க புதுக்கோட்டை மாதிரி ஒவ்வொரு தெருவும் அளந்து
கட்டியிருப்பாங்க. அமைதியா இருக்கும். கொழும்புவை
நினைவுப்படுத்தும் சாலைக்கு அருகில் பீச். பாண்டிக்கு என்னுடைய
இரண்டாவது விசிட் இது. பத்துலட்சத்துக்கு குறைவான
மக்கள் வசிக்கும் பாண்டிச்சேரியில் நான்கு மாவட்டங்கள்
பாண்டி, காரைக்கால், யாணம், மாஹே. இது
ஒரு தனித்துவம் என்ன என்றால் 4 மாவட்டங்களில்
காரைக்கால் இருப்பது தமிழ்நாட்டில், யாணம் இருப்பது
ஆந்திராவுக்கு அருகில், மாஹே இருப்பது கேரளாவுக்கு
அருகில். 281 வருடங்கள் ஃப்ரெஞ்சு ஆட்சியின்
கீழ் இருந்ததால் அந்தத் தாக்கம்
இன்னமும் இங்கே இருக்கு. ஃப்ரெஞ்ச் கலாச்சாரங்கள்,
உணவு, கட்டிடக்கலைன்னு அந்த தாக்கத்தை பாக்கலாம்.

இங்கே ஃப்ரெஞ்ச் பேசுபவர்களும் இருக்காங்க.
கிளம்பும்போதே லேட், முதலைப்பண்ணை போனதுன்னு
நிறைய்யவே தாமதம் ஆனதால பாண்டி வந்து சேர்ந்த
பொழுது மதியம் 1 மணி. உறவினர் வீட்டுக்குபோய்
சாப்பிட்டுவிட்டு அவங்களோட பேசிகிட்டு இருந்தோம்.
3மணிக்கு கிளம்பியாச்சு.




பாண்டிச்சேரியில் முக்கியமா நாங்க போனது இரண்டு
இடத்துக்கு. ஒண்ணு மணக்குளவிநாயகர் கோவில்.
4 மணிக்கு மேலத்தான் கோவில் திறப்பாங்க. அதனால
வெளியிலேயிருந்து தரிசிச்சிட்டு நேரா அன்னை ஆஸ்ரம்
போனோம்.



மிர்ரா அல்ஃபசா இதுதான் அன்னையின் பெயர்.,
1878ல பிறந்தவங்க.1914ல் ஸ்ரீ அரவீந்தரை சந்திக்க
பாண்டிச்சேரிக்கு வந்தாங்க.11 மாதம் அரவீந்தருடன்
இருந்து ஆன்மீக ஞானம் பெற்று
ஃப்ரான்ஸுக்கு திரும்பச்செல்லும் நிர்பந்தத்தை
தந்தது முதலாம் உலக யுத்தம். 1 வருடம் கழித்து
ஜப்பானில் 4 வருடங்கள் இருந்தார்.


1920ல் பாண்டிச்சேரிக்கே திரும்ப வந்துவிட்டார்.
1926ல் ஆஸ்ரமம் தொடங்கப்பட்டது. அன்னையின்
முழுபொறுப்பில் ஆஸ்ரமத்தை விட்டார் அரவிந்தர்.
சர்வேதச டவுன்ஷிப்பான அரோவில்லை அன்னை
1968ல் அன்னை உருவாக்கினார். 1973ஆம் ஆண்டு
நவம்பர் 17ஆம்தேதி அன்னை இந்த உலகைவிட்டு
நீங்கினார்.

அன்னையின் சமாதி அங்கேயே இருக்கிறது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பலரும் தியானம்
செய்யும் இடமாக இருக்கிறது.




காலையில் ட்ரையினில் இருக்கும்போதே ஆத்தா போனை போட்டுடாங்க.
காலை வணக்கம்னு இனிய தமிழில் சொல்லிகிட்டே போனை
எடுத்தது அயித்தான் தான். “எங்கண்ணா இருக்கீகன்னு! கேட்டிருக்காக
இப்ப ட்ரெயினில். மாலை வணக்கம் சொல்ல உங்கவீட்டுக்கு வந்திடுவோம்னு
சொல்லிட்டாரு. போகாட்டி அம்புட்டுதான். அதனால் கிளம்பிட்டோம்ல...

வரவேற்கும் வளைவைப்போல டாடா பை பை சொல்லவும்
பாண்டியில் வளைவு. அங்கேயிருந்து நேரா போனது.....
அடுத்த பதிவுல.