Total Pageviews

Thursday, July 29, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 29.7.10

இங்க வானிலை சூப்பரா இருக்கு. சில் சில்லுன்னு காத்து.
அடிச்சு கொளுத்திய வெயிலுக்கு இதமா மழை. அங்கங்கே
மக்காச்சோளம் விக்க ஆரம்பிச்சிருக்காங்க. தணல்ல சுட்ட
மக்காச்சோளம்... அதுமேல அப்படியே எலுமிச்சை உப்புதடவி
சாப்பிட்டா... சும்மா சொகமோ சுகம். :))


மக்காச்சோளம் உடம்புக்கும் நல்லது. அதனால தாரளமா
சாப்பிடலாம். வீதிக்கு நாலு தள்ளுவண்டி அதுமேல
கரி அடுப்பு ஒண்ணுன்னு வெச்சு அழகா மக்காச்சோளம்
அடுக்கி வெச்சு விக்கறாங்க. என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க
மக்காச்சோளத்துல புலாவ் செய்யறாங்க. ரெசிப்பி கேட்டு
போடுறேன்.

******************************************************

ஆந்திராவுக்கு இல்ல இல்ல திருப்பதிக்கு ஏதோ ஆகிடிச்சு
போல. சமீபகாலமா செய்திகளில் அடிபடுவது திருப்பதிதான்.
லேட்டஸ்ட் தகவல் சிறுத்தை ஒண்ணு படிவழியா
மலை ஏறிக்கிட்டு இருந்த குழந்தை ஒண்ணை அடிச்சு
தூக்கப்பாத்திருக்கு, அவங்கப்பா எப்படியோ காப்பாத்தியிருக்காரு.
இனி படி ஏறிப்போறவங்க ஜாக்கிரதையா இருக்கணும்.

”காட்டுவழி போறப்பொண்ணே கவலைப்படாதே, மம்பட்டியான்
பேருசொன்னா புலி ஒதுங்கும் பாரு!!” பாட்டு பாடச்சொல்லலாமா?

********************************************************

தற்கொலைகள அதிகமாகிட்டு வருது. அதுலயும் இளம்பருவத்தினர்
தான் ஜாஸ்தி!! கல்லூரிப் பெண்கள்/ஆண்கள் இப்படி நிறைய்ய.
திருப்பதி காலேஜுல எம் சீ ஏ படிச்சிட்டிருந்த பொண்ணு
செத்தா எப்படி இருக்கும்னு பாக்க தற்கொலை செஞ்சிருக்காளாம்!!
என்னத்த சொல்ல??? பிள்ளைங்களுக்கும் பெத்தவங்களுக்கும்
இடையே விழும் இடைவெளிதான் இதுக்கெல்லாம் காரணம்.
ஆரோக்கியமான மனசை விதைக்க மறந்திட்டாங்க.

எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற ப்யூட்டி பார்லரில் ஒரு
பொண்ணு வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. 2 வருஷமா
நல்ல பழக்கம். ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்கும். நல்லா
கல கலன்னு பேசும். சில நாளா அந்தப் பொண்ணக் காணோம்.
உடம்பு சரியில்லை போலன்னு நினைச்சேன். விசாரிச்சதுல
தற்கொலை செஞ்சுகிட்டு செத்து போயிட்டாளாம்!!! மனசுக்கு
வருத்தமா இருக்கு. காதல் தோல்வியாம். 20 வருஷம்
வளர்த்த அப்பா அம்மாவை நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டேன்.
அந்தப் பொண்ணோட பேரு மம்தா. அவளோட ஆத்மா
சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
*******************************************************

என்னோட ஃவேரீட் டைரக்டர் கே.விஸ்வநாத் ரொம்ப
நாளைக்கப்புறம் படம் டைரக்ட் செஞ்சிருக்காரு. எப்பவும்
”சுப” அப்படின்னு ஆரம்பிக்கற டைட்டில் வெப்பாரு.
இந்தத் தடவை “சுபப்ரதம்”. ம்யூசிகல் டிலைட்டா
வந்திருக்கும். அல்லரி நரேஷுக்கு இந்தப் படத்துலேர்ந்து
நல்ல பேரு கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க. படம்
பாக்கணும்.


பாக்க வேண்டிய லிஸ்ட்ல இன்னொரு படமும் இருக்கு,
அது காமெடியன் சுனிலை வெச்சு சூப்பர் டைரக்டர்
ராஜமொளலி எடுத்திருக்கு”மரியாதை ராமண்ணா”.
இரண்டு படமும் பாத்துட்டு விமர்சனம் எழுதறேன்.

************************************************
அந்தேரி தாத்தா மறைந்து இன்றோடு 8 நாள் ஆச்சு.
2 வாரத்துக்கு முந்தி தாத்தாகிட்ட பேசும்போது
“நான் தான் ஹைதைக்கு வரமுடியாதுன்னு” சொன்னாரு.
“அதுக்கென்ன தாத்தா பசங்களை கூட்டிகிட்டு
பாம்பேக்கு நானே வரேன்னு!” சொல்லியிருந்தேன்.
எங்க அம்மம்மா வீட்டுலதான் உடம்பு முடியாம
இருந்தாரு. அம்மம்மாகிட்ட.”கலா குழந்தைகளைக்
கூட்டிகிட்டு வர்றேன்னு சொல்ல்யிருக்கா!” அப்படின்னு
சொல்லிக்கிட்டே இருந்தாராம். ஆனா அதுக்குள்ள
எல்லாம் முடிஞ்சிருச்சு. இவ்வளவு சீக்கிரம் ஆகும்னு
நினைச்சு கூட பாக்கலை. மனசை வருத்தும் விஷயம்]
இது.


அந்தேரி தாத்தா, என் மாமாக்கள், தம்பி, ஆஷிஷ்
என நாலு தலைமுறை ஆட்களை வைத்து படம்
எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாம
போயிடிச்சு.

தாத்தாவின் உடல் ஒரு தேஜஸோடு இருந்ததாகவும்
கட்டியிருந்த கைகளை விடுவித்து பார்த்த பொழுது
தவம் செய்வது போலவும் இருந்ததாம். மாமா
சொல்லியிருந்தார். தாத்தாவுக்கு பக்தி அதிகம்.
அவரோட ஆசிர்வாதம் எப்போதும் இருந்தா போதும்.
**************************************************

Tuesday, July 27, 2010

இயற்கையின் சுவையிலே!!!!


மாமா தலைவலிக்கு மருந்து கொடுப்பதைப்பத்தி
பசங்களுக்கு சொல்லி வெச்சிருந்தேன். அதனால எப்ப சாப்பிட்டாலும்
தாத்தாவுக்கு ஒரு மெசெஜாவது அனுப்பாட்டி பசங்களுக்கு
தின்னது செரிக்காது. :)


போன மாசம் எங்க பெரிய மாமா ஹைதை வந்திருந்தாரு.
வீட்டுக்கு பக்கத்துலேயே AMUL ஐஸ்க்ரீம் பார்லர் வந்திருக்குன்னு
பசங்க மாமா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. உடனே
மாமா நாங்க இப்பல்லாம் வால்ஸ், அமுல் சாப்பிடறதில்லை.
நேச்சுரல்ஸ்தான். செம டேஸ்ட். அப்படின்னு சொன்னாரு.
ஹைதையில இருக்கணுமேன்னு கேட்டு பேராண்டிகிட்ட
நெட்டுல தேடுடான்னு! சொல்ல கருமமே கண்ணாயிரமாக
ஆஷிஷும் தேடி கண்டு பிடிச்சிட்டான். பஞ்சாரா ஹில்ஸில்
இருக்கு கடை. அங்க மட்டும்தான் இருக்கு.

மாமாவை வெளியே சாப்பிட கூட்டிகிட்டு போயிட்டு வந்த
பிறகு நேச்சுரல்ஸ் போகணும்னு பசங்க தொணத்த ஆரம்பிச்சிட்டாங்க.
ஏற்கனவே இங்க புயலும், மழையுமா இருக்கு. இதுல ஐஸ்க்ரீம்
சாப்பிட்டா அம்புட்டுதான்ன்னு நோ சொன்னேன். மாமாவிடுவாரா
“என்ன நீ? உனக்கு தலைவலின்னா நான் என்ன மருந்து
கொடுப்பேன். பிள்ளைகளை ஏன் மாத்தறன்னு!!” சொல்லி
கூட்டிகிட்டு போயிட்டாரு. :))

ஆஹா!!! என்ன ஒரு ருசி. இளநீர் வழுக்கையில் ஐஸ்க்ரீம்.
சாப்பிடும்போது அங்கங்கே இளநீர் வழுக்கை வருது. செம சூப்பர்.
அந்தந்த பழத்தை ஒரிஜனலா சேத்து செஞ்சிருக்காங்க.
அன்னாசி, சப்போட்டா, பலாப்பழம்னு ஒவ்வொண்ணும் செம
ருசி. சாக்லேட் ஐஸ்க்ரீம் கூட வித்தியாசமான சுவையில்
நல்லா இருக்கு. டேஸ்டுக்கு கொஞ்சம் வாங்கி ருசி பார்த்து
எது பிடிச்சிருக்கோ அதை வாங்கிக்கலாம். கோன்/ கப்ல
கொடுப்பாங்க. குறிப்பிட்ட தொலை தூரத்துக்கு ஹோம்
டெலிவரியும் உண்டு.

மும்பையில் பிரசித்தமான ஐஸ்க்ரீம் கடை இந்த நேச்சுரல்ஸ்.
இணைய தள முகவரி இங்கே:

மும்பை தவிர ஜெய்பூர், அஹமதாபாத், ஷிரடி,நாசிக்,
ஹைதராபாத், புனே, கோல்ஹாபூர்,  கோவா, பெங்களூரு
ஆகிய ஊர்களில் கடை வெச்சிருக்காங்க.  ஒவ்வொருவரும்
கண்டிப்பா டேஸ்ட் செஞ்சு பார்க்க வேண்டிய ஐஸ்க்ரீம்
வகைகள் இவை. ப்ரஸர்வேடிவ்ஸ் இல்லாத இயற்கை
சுவை. நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம்னு பேரு வெச்சிருப்பது
ரொம்ப சரி.

எதிர் பார்த்தது போல மூக்கடைப்பு, ஜலதோஷம்
ஏதும் வரலை என்பது கூடுதல் சந்தோஷம்.

மாமாவின் கைங்கர்யத்தால பசங்க இப்ப ஐஸ்க்ரீம்னா
நேச்சுரல்ஸ்தான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.





Thursday, July 22, 2010

போய் வாருங்கள் அந்தேரி தாத்தா :(((

நம் குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு ரோல் மாடல் நீங்கள்.
தாய் இறந்த பிறகு தங்கையை 3 வயதிலிருந்து வளர்த்தெடுத்த
தாயுமானவன். (என் ஆருயிர் அம்மம்மாதான் அந்தத் தங்கை)

என் உலகில் ஆண்கள் என்ற என் பதிவில் உங்களைப்பற்றி
கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும் என்று பதிவு போட்டிருந்தேன்.
அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்.

பரோபகாரி தங்களால் வைத்தியச் செலவு, திருமணச்செலவு,
கல்விச்செலவு பெற்றவர்கள் எத்தனையோ பேர்.

தானாக படித்து முன்னேறி மும்பை வருமான வரித்துறை
அதிகாரியாக வேலை பார்த்தது இன்று வரை எங்களுக்கு
பிரமிப்பு!!

காஞ்சி காமகோடி வேத ரக்‌ஷண ட்ரஸ்டில் பாம்பே சுப்பராமன்
என்று பெயர் சொன்னால் போதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்!!
அந்த அளவுக்கு பணி ஓய்வுக்கு பின்னால் தன்னை
ட்ரஸ்டுடன் இணைத்துக்கொண்டு இலவசமாக சேவை செய்து
ஊர் ஊராக அலைந்து திரிந்த உங்கள் எறும்பு போன்ற சுறு சுறுப்பு!


இன்று காலை வந்த அந்தச் செய்தி மிகுந்த துயரத்தை தந்தது!
88 வயதில் இறைவனடி சேர்ந்து விட்டீர்கள். 15 நாள் முன்பு
வரை 88 வயது இளைஞனாக சுற்றி சுற்றி வந்த உங்கள் கால்கள்
இப்போதுதான் ஓய்வை பார்த்திருக்கிறது!

வயதாகிவிட்டது என்று சொன்னாலும் மனது கலங்குகிறது தாத்தா.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்
தங்கள் மனப்பான்மை எங்கள் அனைவருக்கும் வரவேண்டும்.
எப்போதும் நீங்கள் எங்கள் ரோல் மாடல்தான்.

தாங்கள் பெரிதும் மதித்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர
சுவாமிகள் காலடிகளில் ஐக்கியமாகிவிட்டீர்கள். தங்களது
ஆன்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள்.


கண்ணீர் நெஞ்சங்களுடன் :((((
உங்கள் கலா, ஸ்ரீராம்,
ஆஷிஷ் அம்ருதா.


Wednesday, July 21, 2010

பதிவுலகில் நான்!!!!

தொடர் பதிவு எழுத விதூஷ் கூப்பிட்டிருக்காங்க.
இதோ என் பதில்கள்:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
புதுகைத் தென்றல்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் நிஜப் பெயர் .கலா ஸ்ரீராம். பிறந்த ஊர் புதுக்கோட்டை.
புதுகையில் பெயர் சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய குடும்பத்திலிருந்து
வந்தவள். அதை என் அடையாளமாக்கிக்கொள்ள ஊரின் பெயரை
பேருல சேத்தேன். ”தென்றல்” சில சமயம் புயலாகவும் வீசும். :)


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இம்சை அரசியோட வலைப்பூ விகடன் வரவேற்பரையில்
வந்ததைப் படிச்சு வேடிக்கை பாக்க வந்தேன், பினாத்தல் சுரேஷ்
வைஃபாலஜி எழுதி கலாய்ச்சுகிட்டு இருந்தாரு. அதைப்பாத்து
பொங்கி எழுந்து ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா எழுத
ஆரம்பிச்சேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஹஸ்பண்டாலஜி வகுப்பில் நடந்த ஹாட் ஹாட் பின்னூட்டங்கள்
மூலம் என் எழுத்து எல்லோருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்புன்னு
நினைக்கிறேன். அதைத்தவிர பிரபலமாகன்னு ஏதும் பெருசா செஞ்சிடல.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

PRE MENSTURAL SYNDROME போன்ற சில பெண்களுக்கே உண்டான
பிரச்சனைகள் வெளியே பலருக்கும் தெரியாது. (தனக்கு இருப்பது
பெண்களுக்கே தெரியாது) அதை ஆண்களும் உணரணும்னு என்னோட
நிலையை எழுதி அதைப்பத்தி புரிஞ்சிக்க வெச்சதை பெருமையா
நினைக்கிறேன். என்னுடைய சில அனுபவங்கள் பலருக்கு உதவும்னு
அதை பகிர்ந்ததும் உண்டு. அதனால நல்ல விளைவுகள்தான்
இருந்திருக்கு.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவு எழுதுவதை பொழுது போக்கா எப்பவும் நினைக்கலை.
எனது இந்த வலைப்பூவிலும் சரி பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவிலும் சரி
ஒரு ஆசிரியையாக பெற்றோர்களிடமிருந்து என்ன எதிர் பார்ப்பார்களோ
அதை, ஒரு தாயாக என் அனுபவப்பகிர்வை, எனது ஆசிரியைப்
பயிற்சி அனுபவங்களை, பயண அனுபவங்களை பலருக்கு
உபயோகப்படும் என்பதால் பகிர்கிறேன். நட்பு, அன்பு
உறவுகளும் இப்போ என் பேங்க் பேலன்சில் நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கு.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

எனக்காக என் புதுகைத் தென்றல்

சமூகத்திற்காக பேரண்ட்ஸ் கிளப்

யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் தொகுப்பு
வலைப்பூவான கானக்கந்தர்வன் - இவை நான்
ஆரம்பித்தது.

அம்மாக்களின் வலைப்பூக்கள், சாப்பிடவாங்க,
தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, இவற்றிலும்
அவ்வப்போது எழுதுவேன்.

தெலுங்கு பாடல்களுக்கு மதுர கீதாலு,

ஹிந்தி பாடல்களுக்கு வசய்லோக்கல்.
அம்புட்டுதாங்க.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் எல்லாம் எப்பவும் இருந்தது இல்லை. எல்லார் மேலயும்
பொறாமை மட்டும் உண்டு. ஒவ்வொருவருவரும் தனது
பார்வையில் கோர்வையா எழுதும் விதம், தனக்கென ஒரு
பாணி அமைச்சு எழுதுவது ரொம்ப பிடிக்கும். நாம எழுத
நினைச்சதை அதைவிட அழகா எழுதிட்டாங்களேன்னு
பொறாமை பட்டிருக்கேன். அனைவரின் ரசிகை நான்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

 மை ஃப்ரெண்ட் அனு, மங்களூர் சிவா, ரசிகன், இப்படி
நிறைய்ய பேர் என்னை ஊக்குவிச்சிருக்காங்க. இவர்களோட
ஊக்குவித்தல்கள்தான் என்னை எழுத வெச்சது. ஆனா
ரொம்ப நன்றி சொல்ல வேண்டியது பினாத்தல் சுரேஷ்
அண்ணாவுக்குத்தான். அவருக்கு எதிரா வகுப்பு ஆரம்பிக்க
போய் இப்ப 3ஆவது வருஷம் முடியப்போகுது + 650 போஸ்டும்
போட்டாச்சு. (ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா நிறைய்ய
பேர்கிட்ட திட்டு வாங்கிகட்டிகிட்டிருக்கேன். ரங்கமணிகளுக்கு
எதிரா பதிவு போடுவதாலும் நல்ல பேரெல்லாம் இல்லை)  :)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தம்பி அப்துல்லா தன் பதிவுல சொல்லியிருப்பது போல
நம்ம வலைப்பூவை படிக்க வந்ததே பெருசு. இதுல
என்னைப்பத்தி இன்னும் வேற என்னத்த சொல்ல.
மேலே சொல்லியிருக்கும் பதில்களிலேயே என்னியப்பத்தி
எல்லோருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கும். :))


ஒரு குழந்தையின் வளமான எதிர்காலம்  பெற்றோர்
இருவரின் கைகள்களில்தான் என்பதை உணர்ந்து
அதை நடைமுறைப்படுத்தி என் குழந்தைகளுக்கு
இனிதான குழந்தைப்பருவத்தை தர முயற்சி செய்து
கொண்டிருக்கும் ஒரு தாய்.



***************************************************************
சரி சிலரை மாட்டி விடணுமாமே! செஞ்சிடுவோம்.

பரிசல்காரன்

அப்பாவித் தங்கமணி

கயல்விழி முத்துலெட்சுமி

அமைதிச்சாரல்

சர்வேசன்




Thursday, July 15, 2010

நிஜமா நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்


இப்போதுதான் தம்பி நிஜமா நல்லவன் போன் செய்தார்.
பெண்குழந்தை பிறந்திருக்கிறதாம். அவருக்கும் அவரது
மனைவி வென்னிலாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மருமகன் இளஞ்சேரனுக்கும் அண்ணன் ஆனதிற்கு
வாழ்த்துக்கள்.

இறைவன் எல்லா வளத்தையும் சுகத்தையும், சந்தோஷத்தையும்
நீண்ட ஆயுளையும் குழந்தைக்கும் குடும்பத்தாருக்கும் கொடுக்க
எங்கள் ஆசிகள்.


Monday, July 12, 2010

அன்பு நண்பர் AKM அவர்களுக்கு

என்னுடைய முந்தைய பதிவுக்கு நண்பர் AKM கொடுத்திருந்த
பின்னூட்டம் இது. இதுக்கு பதில் ஒரு தனிப்பதிவா போட்டிடலமேன்னு
இந்தப் பதிவு.


AKM said...

உங்கள் அம்மா இதை நல்ல பதிவு என்று பாராட்டினாரா? நிச்சயம் எந்த அம்மாவும் சொல்லமாட்டார்.. நாளை மணம் முடித்து உங்கள் பெண் வந்து தங்கும்போது சுமை என நினைப்பீரகளா..//


என்னிடம் தன் சோகக்கதையைச் சொல்லி அழுததும் ஒரு தாய்தான்.
தன் மகளுக்கு புரிய வைக்க முடியாமல், அவள் மேல் இருக்கும்
பாசத்தை தவறாக பயன் படுத்திக்கொள்வதைச் சொன்னார். தன்னால்
முடியவில்லை என்று அம்மா சொன்னாலும்,” எனக்கு என் மாமியார்
வீட்டில் நிம்மதி இல்லை! இந்த இரண்டு நாள்தான் நிம்மதி!” என்று
சொல்லிவிடுகிறாளாம். மகளும், மருமகனும் ஊர் சுற்றி நிம்மதியாக
தூங்கி எழ முதியவர்கள் இருவரும் படுச்சுட்டியான குழந்தைகள்
இருவரையும் பார்த்துக்கொள்ள முடியாத அவஸ்தையை நானே
கண்ணால் பார்த்திருக்கிறேன்.

தன் மகளைச் சுமையாக யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால்
தன் கடமையை சரியாக செய்யாமல் இருந்தால் நான் ஒத்துக்
கொள்ள மாட்டேன். திருமணத்திற்கு பிறகு என் வீட்டிற்கு
என் மகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால்
அடிக்கடி வந்து ஓய்வு எடுக்கிறேன் என்றாள், “ என்ன பிள்ளை
வளர்த்திருக்கிறீர்கள்? எங்களுடன் ஒட்டவே இல்லை உங்கள் மகள்?
என்று மருமகனிடம் வார்த்தை பட நான் ரெடி இல்லை. திருமணத்திற்கு
பிறகு உங்கள் மகள், உங்கள் மகள் என மருமகன் சொல்வதை விட,
என் மனைவி என அடிக்கடிச் சொல்லிக் கேட்க விருப்பம். அந்த
நெருக்கம் வர இந்தச் சின்னச் சின்னப் பிரிவு தடையாக இருக்கும்
என்பதால் தான் எதையும் ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்றும்
சொல்லிக்கொடுத்து புகுந்த வீடு அனுப்புவேன்.

(என் அப்பாவைத் தெரிந்திருக்கும் உங்களுக்கு என் தாத்தா(அம்மாவின்
அப்பா) தெரிந்திருக்கும் என் நினைக்கிறேன். நான் சுந்து சார் பேத்தி.
அவரது மனைவி என் அம்மம்மா திருமதி ராஜலட்சுமி எனக்குச்
சொல்லிக்கொடுத்த மந்திரம் இது)

இறைவன் விரும்பினால் என் மருமகளும் அப்போது என்னுடன்
இருந்தால், என் மருமகளுக்கு எக்ஸ்ட்ரா சுமையைத் தரும்
வேலைகளை தர விருப்பமில்லை. அடிக்கடி வீடு வரும் நாத்தி
வேண்டாதவளாகி விடுவாள்.அவர்கள் உறவு இனிக்க
வைக்க வேண்டியது என் கடமை.

எப்போது வருவார் என காத்திருப்பீரா மாட்டீர்களா.. பயிர் வேண்டுமானால் நாற்றாங்காலை மறந்து போகலாம்.. பெண்ணால் எப்படி வாழ்வின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை கழித்த வாழ்ந்த இடத்தை மறக்க முடியும்..உரிமையான இடத்தில் விருந்தாளி போல் வந்து தங்கிப்போக சொல்கிறீர்கள்.. எத்ததை பெண்கள் தாயின் மடியில் தங்கிச்செல்லும் அந்த தருணங்கள்தான் பேட்டரி சார்ஜ் என சொல்ல கேட்டிருக்கிறீர்களா..?//

கண்டிப்பாய் ஏங்கி தவிப்பேன். ஆசைக்கு பெண் என்பது பெரியவங்க
சொன்னது. ஆசை ஆசையாய் அழகு படுத்தி, ஆடை உடுத்தி, வளர்த்து,
விளையாடி, தலை கோதும் விரலாக தாய்மை காட்டுபவளை விட்டு
பிரிவது என்பது எவ்வளவு சோகம் என்பது தெரியும். முற்றிலும்
மறக்கவா சொல்கிறேன்! அப்படி மறந்தால் என் வளர்ப்பு சரியில்லை
என்றோ, இல்லை நான் என் மகளிடம் அன்பு காட்டவில்லை என்றோ
அர்த்தம்.( மருமகன் என்னை விட அன்பு காட்டி அந்த அன்பில்
திளைத்து என்னை மறந்தால் சந்தோஷமே)

பிறந்த வீட்டினர் மீதுஏதும் கோபம் கடுப்பு இருந்தால் தான் முற்றிலும் மறக்க முடியாவிட்டலும் கடமையை மட்டும் செய்து,
கொஞ்சம் எட்டியே நிற்கும் பெண்களையும்
பார்த்திருக்கிறேன்.

தாயின் மடியில் வந்து பேட்டரி ரீசார்ஜ் செய்து கொள்வது
தவறல்ல. திரும்ப திரும்ப சொல்கிறேன். பல பெண்கள்
தாய்வீடு செல்கிறேன் என்று கிளம்பிச் சென்று அங்கே
விருந்தினர் போல எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு
எடுப்பதையே வழக்கமாக்கிக்கொள்வதை, அதையும் அடிக்கடி
செய்வதைத்தான் தவறு என்று சொல்கிறேன்.

தங்கள் பெண் வந்து தங்குவதை எந்த தாயும் சுமையாக நினைக்க மாட்டார்..நிச்சயம் இந்த பதிவை உங்கள் மனதிலிருந்து எழுதியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.. சற்றே கோபமாய் (எழுதுவது என் உரிமை அதில் நீ என்ன கோபப்படுவது என என் மேல் கோபப்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்) ஏகேஎம்

இந்தப் பதிவை என் உள் மனதிலிருந்துதான் எழுதியிருக்கிறேன்.
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!” என அக்னி நட்சத்திர
ஜனகராஜ் மாதிரி சந்தோஷப்பட்டுகிட்டு கணவன் இருக்க இருவருக்கும்
இடையே ஒரு இடைவெளி கண்டிப்பா விழுது. அந்தத் தனிமைக்காக
சிலர் மனைவி,”அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னா உடனே
அனுப்பிடறாங்க. சிலர் போகாதேன்னு சண்டை போடறாங்க. இந்த மனஸ்தாபம் பிள்ளை வளர்ப்பில் பாதிக்கும். கணவன் - மனைவி உறவில் விரிசல் விழவைக்கும் எந்த ஒரு செயலும் என் பார்வையில் தவறுதான்.
அந்த பாதிப்பு அடுத்த தலைமுறையை பாதிப்பதை சுத்தமா
விரும்பலை. ஒரு ஆசிரியையா அது அவங்க மனசை பாதிக்கும்னு
என்னோட ஒவ்வொரு பதிவுலயும் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு
வர்றேன்.

ஆமாங்க தன் மகள் வருகையையே தவறுன்னு அம்மா சொல்வதாக
நான் பதிவு இட்டிருப்பதாக நீங்க புரிஞ்சிக்கிட்டதால தான் இந்தக்
கோபம். சத்தியமாக நான் அப்படி எழுதவில்லை என்பது மேலே
சொல்லியிருக்கும் பதில்களில் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.

உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கீங்க.அதுவும் கடுகடுப்பா
சொல்லாம. அப்புறம் நான் ஏன் கோபப்படப்போறேன். :))

சரி அயித்தான், பிள்ளைகளோடு புதுகைக்கு வர்றேன்.
முடிஞ்சா அங்க சந்திக்கலாம். இந்தப் பதிவின் மூலமா
நண்பர்கள் எல்லார்கிட்டயும் ஒருவாரத்துக்கு லீவு சொல்லிக்கிறேன்.

அப்பா,அம்மா புது வீடு வாங்கி போயிருக்காங்க. பால் காய்ச்சும்
போது கூட நானும் தம்பியும் பக்கத்துல இல்லன்னு வருத்தப்பட்டாங்க.
இதோ தம்பி கூட லீவு போட்டு வர்றாப்ல. அப்படியே கோவில்,
குளம்னு சுத்திட்டு வரலாம்னு மீ த கிளம்பிங். அடுத்த செவ்வாய்தான்
வர்றேன். அதுவரைக்கும் டாடா! (நடுவுல 2நாள் வந்து ஏதும்
பதிவு போட்டா போடலாம். சொல்றதக்கில்லை. :) )


Wednesday, July 07, 2010

நாணயத்தின் மறுபக்கம்.

நான் பார்த்த வகையில் சில (பல) திருமணமான பெண்களைப் பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்வி, " இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது"?!

தவறாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!

அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவதைத்தான் கேட்கிறேன். கணவன் - மனைவி சண்டை, மாமியார் சண்டை, உறவுகளைப் பார்க்க, அம்மா, அப்பாவைப் பார்க்க, அது.... இது.... என்று போய் டேரா போட எப்படி முடிகிறது? இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ஓய்வெடுக்க பிறந்த வீட்டிற்கு போவார்கள். எப்படிங்க?


எனக்குத் தெரிந்த ஒரு பெண். தாய்வீடும் உள்ளூரிலேயே அமைந்து விட
ஒவ்வொரு வெள்ளி இரவும், கணவனோடு பிறந்த வீட்டிற்கு போய்விடுவார்.
சனி,ஞாயிறு இரண்டு நாளும் குழ்ந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு இருவரும் ஊர் சுற்றுவார்கள். என்ன கொடுமை இது? இப்படியே கழியும் ஒவ்வொரு வார விடுமுறையும். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்தப் பெற்றோர்கள்
படும் கஷ்டம். பாவம் அவர்கள்.

வெளியூரில் இருக்கும் பெண்கள் கூட அம்மா வீட்டிற்கு அடிக்கடி போவார்கள். பிறந்த வீட்டு பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் நம்
கடமையை விட்டு, பாரமாக (சத்தியமாக திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போய் தங்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு பாரம்தான். என்ன ?தன் மகளாயிற்றே என்று சொல்ல மாட்டார்கள்) ஏன் போகவேண்டும்.

ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு போபவர்களே!! ஓய்வெடுக்கப் போக அது என்ன ஹோட்டலா? ஓய்வு வேண்டுமானால் குடும்பத்துடன் (முடிந்தால் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு) ஏதேனும் ஊருக்கோ, ஹோட்டலில் தங்கி ஓய்வெடுங்கள்.


வயதான் பெற்றவர்கள் நம் வேலையாட்கள் அல்ல.
நமக்காக பாடுபட்டு, நம்மை வள்ர்க்க ஓடியாடி உழைத்தவர்கள் அவர்கள்.
வயதான காலத்தில் சற்று ஓய்வெடுக்கவேண்டாமா? அவர்களின் தனிமையில், ஆன்ந்தத்தில் குறுக்கிடுவது தவறல்லவா?

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உரிமையோடு பிறந்த வீட்டிற்கு செய்யலாமே?

( ஒரு தாய் 4 மணி நேரம் கலங்கிய கண்களுடன் புலம்பிய வார்த்தைகளின் சாராம்சம் இது)

டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!

Monday, July 05, 2010

THE KARATE KID

வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித், ஜாக்கி சான் நடித்திருக்கும்
இந்தப் படம் 1984 ஆண்டு வெளிவந்த THE KARATE KID ன் ரீமேக்.


டெட்ராய்ட்டை விட்டு ஷெர்ரி பார்கரும் அவரது மகன் Dre பார்கரும்
பீய்ஜிங்கிற்கு கிளம்புகிறார்கள். கணவன் இறந்த பிறகு தனது
புது வாழ்க்கையை மகனுடன் அங்கே தொடங்குகிறார் ஷெர்ரி.
புது இடத்தில் மொழி புரியாமல் அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும்
அதே வேளையில் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பார்கில்
Mei Ying எனும் இளவயது வயலினிஸ்ட் பெண்ணுடன் ஏற்படும்
சிநேகம் சங் எனும் பையனுடன் விரோதமாகிறது.

அந்தப் பெண்ணும் Dre படிக்கும் பள்ளியில் படிக்கிறாள்
என சந்தோஷமடையும் வேளையில் அவனது விரோதி கூட்டமும்
அந்தப் பள்ளியில் படிக்கிறது என்பது அவனை மேலும்
பயமாக்குகிறது. அவர்கள் அவனை துன்புறுத்துகிறார்கள்.
சாப்பிடவிடாமல் தட்டை தட்டிவிடுவது, புத்தகைப்பையை
பந்தாடுவது என ஒரு வெளிநாட்டு மாணவன் எதிர் கொள்ளும்
அவஸ்தைகளை அழகாக படமாக்குயிருக்கிறார்கள்.

மனம் நொந்து போய் தனது தாயிடம் தான் இங்கே
சந்தோஷமாக இல்லை என்றும் தனது நாட்டிற்கு
திரும்பி போக விரும்புவதாகவும் குமுறும் இடம்
துக்கப்படும் குழந்தையின் மனநிலையை அழகாக
படம் பிடித்து காட்டுகிறது.


பயப்படும் அதே வேளையில் சமயோஜிதமாக அவர்களுக்கு
பதிலடி கொடுக்கவும் செய்கிறான். அப்படி ஒரு அடிதடியில்
Dreக்கு எக்கச்சக்கமாக அடிபட அவன் வசிக்கும் பகுதியின்
ப்ளம்பராக இருக்கும் ஜாக்கி சான் வந்து காப்பாற்றுகிறார்.
அவனது காயத்துக்கு பாரம்பரிய சீன வைத்திய முறைப்படி
சிகிச்சை அளித்து குணமாக்க, அவரை தனக்கு கராத்தே
சொல்லிக்கொடுக்கும்படி கேட்கிறான் Dre. முடியாது என
மறுக்கிறார் ஜாக்கி சான். மறுக்கும் சான் டெரியை குங்ஃபூ
பயிற்றுவிக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். சாங்
குங்ஃபூ கற்கும் இடத்துக்கு சென்று அவரது ஆசிரியரிடம்
பேசி சமாதானம் செய்துவைக்க நினைக்கையில் அதை
மறுக்கும் ஆசிரியர், இங்கிருந்து வெளியே செல்ல வேண்டுமானால்
இருவரில் ஒருவர் தனது மாணவர்களுடன் மோத வேண்டும்!!
எனச் சொல்ல ஜாக்கிசான் போட்டியில் Dre மோதுவான்
என்றும் அதுவரை அந்த மாணவர்கள் அவனை ஏதும் செய்யக்கூடாது
என்றும் சொல்கிறார். இவர்கள் சைனா மொழியில் பேசிக்கொள்வது
எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு டெரி நிற்கிறான்.


Dreயிடம் நடந்ததை விவரித்து அவனுக்குத் தான் கற்றுக்கொடுப்பதாக
சொல்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது கல கலப்பு. ஒரு ஆசிரியராக
நின்று ஜாக்கி சான் கராத்தே வகுப்பெடுக்கப்போகிறார் என நினைத்திருக்கும்
வேலையில் Dreயை தனது கோட்ஐ கழட்டி, கீழே போட்டு, அதை
ஸ்டாண்டில் மாட்டுவதையே 1 வாரத்துக்கு செய்ய வைக்கிறார்.
இவர் கராத்தே சொல்லிக்கொடுக்கப்போகிறார் என நினைத்தால்
இப்படி செய்கிறாரே என்று கோபப்பட்டாலும் வேறு வழியில்லாமல்
அவர் சொல்படி செய்கிறான்.

வீட்டுக்கு போனதும் இன்று என்ன கற்றாய்? என கேட்கும் அம்மாவிடம்
பதில் சொல்லாமல் உள்ளே போகிறான். ஆனால் கோட்ஐ எப்போதும்
போலே கீழே போடாமல் ஸ்டாண்டில் மாட்டும் மகனை ஆச்சரியமாக
பார்க்கிறாள். இடையே அந்த வயலின் பெண்ணுடன் நட்பு தொடர்கிறது.

குத்துக்களும், அடிகளும் தற்காப்பு கலையை வளர்க்காது.
மெச்சூரிட்டி,அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களை
பொறுமையாக செய்வது ஆகியவைதான் கற்க வைக்கும்
என்று Dreக்கு ஜாக்கி சான் புரிய வைக்கும் இடம் அருமை.
வுடாங் மலைக்கு டெரியை அழைத்துச் செல்லும்
பொழுது அங்கே காணும் காட்சிகள் அற்புதம். அங்கே
அவன் கவனிக்கும் ஒரு காட்சி கிளைமாக்ஸில் ஜாக்கிசானையே
புருவத்தை உயர்த்த வைக்கும் இடம் ரொம்பவே அருமை.

ஜாக்கி சான் குடித்து விட்டு அவர் உருவாக்கிய காரை
அடித்து நொறுக்கும் காட்சியை பார்த்து அவரிடம் பேசி
அன்று அவரின் மனைவி மற்றும் மகனின் இறந்த நாள்
என்பதை தெரிந்து கொள்கிறான்.(கார் ஓட்டும் பொழுது
கோபப்பட்டு மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்ததால்
நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கிறது)

போட்டி நடக்கும் நாளும் வருகிறது. மெல்ல மெல்ல Dre
முன்னேறுகிறான். சாங் கடைசி சுற்றுக்கு தகுதி பெறுகிறான்.
அதற்கு முன்னால் சாங்குடன் பயிலும் இன்னொரு மாணவனுடம்
Dre மோத வேண்டும். அந்த மாணவனின் ஆசிரியர் டெரியின்
எலும்பை முறித்து விடச் சொல்கிறார். அப்படியே நடக்கிறது.
Dreக்கு 2 நிமிடங்கள் தரப்படுகிறது. அதற்குள் அவன் மேடைக்கு
வரவில்லை என்றால் சாங் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்படுவான்.

Dre போட்டிக்கு வந்தானா? எப்படி வந்தான்? அது திரையில்
பார்த்து அனுபவிக்க வேண்டிய அருமையான காட்சிகள். தந்தை
வில் ஸ்மித்தையும் மிஞ்சிவிட்டான் மகன் ஜேடன் ஸ்மித். அதிரடி
மன்னனாக அறியப்பட்ட ஜாக்கிசான் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டை
போல மிக நிதானமாக, அழகாக ஒரு ஆசானாக தன் பங்கை
மிக அழகாகச் செய்திருக்கிறார். எனக்கென்னவோ ஒவ்வொரு
தடவை அவரை ஸ்கீரினில் பார்க்கையில் கிழட்டுச் சிங்கம்
போல் தெரிந்தது. கம்பீரம் குறையாத கிழட்டுச் சிங்கம்!!!

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படமாக
இதை நினைக்கிறேன். மிக மிக அருமை.

டிஸ்கி:
 இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்க இன்னொரு காரணமும்
உண்டு. இலங்கைக்கு சென்ற புதிதில் ஆஷிஷ் பள்ளியில்
சந்தித்த கஷ்டங்களுக்கு அவனுக்கு தன்னம்பிக்கை வரவைக்க
அருகில் இருந்த கராத்தே பள்ளியில் சேர்த்தோம். மாஸ்டர்
பூஸோ போட்டிக்கெல்லாம் அனுப்ப மாட்டேன், தன்னைக்
காத்துக்கொள்வதை விட தன்னம்பிக்கையும், ஒருங்கிணைப்பு
தன்மையும் குழந்தைக்கு கிடைக்கும். அதுவே அவன் தன்னைக்
காத்துக்கொள்ள வைக்கும் என்று சொன்னார். கராத்தே, குங்ஃபூ,
தாய்ச்சி என கலவையாக கலந்து சொல்லிக் கொடுத்தார்.
ஆஷிஷ் ப்ரவுன் பெல்ட் வரை வந்தது படம் பார்க்கையில்
நினைவுக்கு வந்தது.

Friday, July 02, 2010

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களும் சில ஞாபகங்களும்

ஹுசைனம்மா ஊருக்கு போறதா சொல்லி மடல் அனுப்பியிருந்தாங்க.
நல்லா எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க ஹுசைனம்மா!!

அவங்க மடல் பாத்ததுக்கப்புறம்தான் எனக்கும் கொசுவத்தி
சுத்தினிச்சு. இலங்கையில் இருந்தப்போ ஜூலை, ஆகஸ்ட்
மாதங்களுக்காக காத்திருப்போம். அப்போதான் அங்கே
வருட கடைசி பரிட்சை முடிந்து பிள்ளைகளுக்கு
லீவு. அப்பத்தான் இந்தியா வருவோம். வருடத்துக்கு
ஒரு முறை மட்டும்தான் வருவோம் என்பதால
நல்லா ப்ளான் செஞ்சு எங்கே போகவேண்டும், யார் யாரை எல்லாம்
பாக்க வேண்டும்னு திட்டம் போட்டு வருவோம்.

15 நாள்தான். அயித்தானோட வந்து அவரோடவே ஊருக்கு
திரும்பிடுவோம். அவருக்கு சோத்துக்கும் கஷ்டம் வரப்டாதில்லை.
அவருக்கும் 15 நாள் லீவு. சோ நோ போன் கால்ஸ்!, நோ லேப்டாப்!
ஜாலியோ ஜாலின்னு இருக்கும். அப்பா, அம்மா எங்க வருகைக்கு
காத்திருப்பது போல எங்களுக்காக காத்திருக்கும் இன்னொரு ஜீவன்
மறைந்த சுப்பிரமணியன் மாமா(அயித்தானோட அண்ணன்)

அநேகமா திருச்சிக்குத்தான் வந்து இறங்குவோம். அம்மாவீட்டுக்கு
ஒரு மணிநேரத்துல போய் சேர்ந்திடலாமே! அப்புறம் சென்னையிலிருந்து
கிளம்ப வசதியாக இருக்கும்னுதான். அப்பா அம்மா கார் எடுத்துகிட்டு
திருச்சி ஏர்போர்டுக்கு வந்து காத்திருப்பாங்க. பசங்க பாஞ்சு ஓடி
கட்டிக்குவாங்க. ”தாத்தா ஏன் அம்பாசிடர் கொண்டுவந்தீங்கன்னு?”
செல்லமா சண்டை போட்டுகிட்டே ஆஷிஷ் வருவான்.

கிளம்புமுன்னாடியே அம்மம்மாவுக்கு ஆர்டர் போட்டிருப்பாங்க
பசங்க. இட்லி மிளகாப்பொடி, ரவா லட்டு, தீபாவளி லேகியம்
எல்லாம் செஞ்சு வெக்கச் சொல்லி. அதை விடவும் ஆஷிஷுக்கு
புதுகை போறோம்னாலே குமார் அண்ணா கடை தோசை!

எங்க வடக்கு 4 வீட்டுக்கு பக்கத்துல டீ கடை வெச்சிருந்தாரு
குமார் அண்ணா. இப்ப அதோட டிபன் கடையும் நடக்குது.
உலகத்துல எங்கயும் அந்தக் கடைக்கு ஈடா ரோஸ்டட் தோசை
கிடைக்காது என்பது ஆஷிஷோட ஒபீனியன். இப்பவும் புதுகை
போனா கடைக்கு போயிடுவான். “வா மாப்பிள்ளைன்னு” இவனுக்காக
ரோஸ்ட் போட்டு கொடுப்பாரு.

இந்தியா வரும்போது பிள்ளைகளுக்கு நம்ம தேசத்தை சுத்தி
காட்டுவதுன்னு கட்டாயமா வெச்சிருந்தோம். நம்ம தேசம்
அவர்களுக்கு அந்நியப்பட்டுடக்கூடாது + நம் கலாசாரமும்
தெரிஞ்சிக்கணும்ல்..

இப்படி ஒரு ஆகஸ்ட் மாத பயணத்தின் போதுதான் அயித்தானோட
அண்ணா, அண்ணி, அக்கா, மாமா, நாங்க நாலு பேரும்
கொடைக்கானல் போனோம். ஒரு பெரிய வீடு வாடகைக்கு
எடுத்து தங்கினோம். ரொம்ப எஞ்சாய் செஞ்சோம். அதுவும்
அயித்தானோட அண்ணா, பசங்க கூட இருந்த அந்த நேரம்
ரொம்ப பிடிச்சிருந்ததா சொன்னாரு. “வருஷத்துக்கு ஒருவாட்டி
நம்ம மொத்த குடும்பமும் இந்த மாதிரி வெளில வரணும்,
சேர்ந்து போகணும்டா”அப்படின்னு தம்பிகிட்ட சொன்னாரு.


இங்க வந்த பிறகு நாங்க சேர்ந்து தில்லி போகத்திட்டம்
போட்டிருந்தோம். ஆண்டவனோட திட்டம் வேறயா இருந்து
மாமாவை தன் கிட்ட கூட்டிகிட்டாரு. :(  (ஸ்டைலா கூலிங்கிளாஸ்
எல்லாம் போட்டுகிட்டு நிப்பதுதான் மாமா. ஆஷிஷை கட்டிகிட்டு
நிக்கிறாரு)

மாமாகூட நெல்லூருக்கு போனது அங்கே பக்கத்தில்
இருக்கும் இடங்களை சுத்தி பாத்ததுன்னு ஒரே கொண்டாட்டமா
இருக்கும். அம்மா அப்பா கிட்ட இரண்டு நாள் இருந்துட்டு
மாமா,அத்தை கூட 3 நாள் இருப்போம். எங்களை ஃப்ளைட்
ஏத்திவிட முடிஞ்சா மாமா ஒரு எட்டு சென்னை வராம
இருந்ததில்லை.

இப்பவும் இந்த நினைவுகளை அசைபோடாம இருக்க
முடியறதில்லை. ஜூலை 8 மாமாவுக்கு பிறந்தநாள்.
பசுமை நினைவுகள் எப்போதும் இனிக்கும். அதை
நினைச்சு பாப்பதே ஒரு சுகானுபவம்.




கோவிந்தனின் நகைகள் கோவிந்தா!!!

திருப்பதி வெங்கடாஜலபதி பத்தி நிறைய்ய மகிமைகள்
சொல்வாங்க. நேர்ந்துகிட்டதை கொடுக்காட்டிப்போனா
வட்டியும் முதலுமா வாங்கிடுவான்னு. ஆனா இப்ப
அந்த கோவிந்தனின் நகைகளே கோவிந்தா போட்டுட்டாங்க.
பாவம் அந்த பரந்தாமன்.

கோவிந்தனுக்கு பக்தர்கள் காணிக்கையாக முடி, காசு
மட்டும் கொடுப்பதில்லை. தங்கம், வைரமாகவும்
கொடுப்பது வழக்கம். அப்படி எத்தனையோ நகைகள்
அந்த பரந்தாமனின் திருமலை தேவஸ்தானத்திடம் இருக்கு.
ஆனா அதிமுக்கியமான சில நகைகள் மாயமாகிருக்கு.
அதுவும் கொடுத்ததற்கு சாட்சிகள் பலமா இருக்காம்.



கொடுத்தது யாரோ அல்ல ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணதேவராய மஹாராஜா.
தனது ஆட்சி காலத்தில் 7 தடவை ஆண்டவனை தரிசிக்க
தனது பட்டத்து ராணியுடன் போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும்
அவர் அந்த கோவிந்தனுக்கு நகைகளை சமர்பித்து ஆனந்தமடைந்திருக்கிறார்.

அந்த நகைகளைத்தான் இப்ப காணோமாம். கிருஷ்ண தேவராயரின்
500ஆவது பிறந்தநாளை ஒட்டி பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஏற்பாடு
செய்ய ஆந்திர அரசு ஏற்பாடு செய்ததுகொண்டிருக்கிறது. ஜனாதிபதி
பிரதிபா பாட்டில் அவர்களையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக்க
திட்டம். அந்த சமயத்தில் தான் ராயர் அவர்கள் இறைவனுக்கு
சமர்ப்பித்த நகைகளை படம் பிடிச்சு போட்டு அதை இறைவனுக்கு
ஒரு நாள் சார்த்தி அழகு பாக்கலாம்னு திட்டம் போட்டு திருப்பதி
தேவஸ்தானத்தை கேட்டிருக்காங்க. ஆனா அங்கே ,”அப்படி ஏதும்
நகைகள் இருப்பதா தெரியலைன்னு”!! சொல்றாங்க.


திருவாபரணங்களை பாதுகாக்கும் துறையில் அரசு காலத்தில்
எந்த ஆபரணங்களையும் தாங்கள் யார் கொடுத்ததுன்னு
குறிப்பில் வெச்சுக்கலை, அதனால ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயர்
கொடுத்தது எந்த நகைகள்னு தெரியாது!!!” அப்படின்னு
சொல்லிட்டாங்க. அரசன் கொடுத்தாலும் சாதாரண மானுடன்
கொடுத்தாலும் அப்ப அதை சமமாத்தான் பாத்தாங்க. அப்படின்னு
சொல்லும் தேவஸ்தானம் 1953ல் ஆனந்தநிலையத்தில் தங்ககூரை
வேய ராயரின் நகைகளை கருக்கிட்டோம்னு சொல்றாங்க.


ஆனா மீடியாவோ நகைகளை கருக்கவில்லை, அதை
திருடிட்டாங்க, மறைச்சிட்டாங்கன்னு
சொல்றாங்க.1521ல் கடைசியாக கிருஷ்ணதேவராயர் கோவிலுக்கு
வந்தபோது கொடுத்த நகைகள் 1523ஆம் வருஷமே காணாம
போயிடுச்சாம்!!! இதற்கு சரித்திர ஆதாரம் இருப்பதா தேவஸ்தானத்
தலைவர் சொல்லியிருக்கிறார்.


திருப்பதி தேவஸ்தானம் சமீப காலமா
ரொம்பவே சர்ச்சைக்குள்ளாகுது. அங்கே வழங்கப்படும்
சேவா டிக்கெட்டுகளில் மோசடி, வீ.வீ.ஐ.பீக்களுக்கு
வழங்கப்படும் ஷ்பெஷல் தர்ஷன் என ஏகப்பட்ட விவகாரம்.
திருமலை அர்ச்சகர்கள் ஹைதைக்கு வந்து முதலைமைச்சர்
ரோசைய்யா அவர்களிடம் மனு கொடுக்கும் அளவுக்கு இரண்டு
தரப்பினருக்கும் இடையே சர்ச்சைகள். இப்ப இது வேற!!!!

தன் நகைகள் இருக்கும் இடத்தை அந்த கோவிந்தன் தான்
தெரியப்படுத்தணும். தான் வேண்டிகிட்டதை கொடுக்க மறந்தவனிடம்
வட்டியும் முதலுமாக வாங்கும் கலியுக தெய்வம் நகைகளை
களவாடியிருந்தா அவர்களுக்கும் தண்டனை வட்டியும்
முதலுமா கொடுக்கட்டும்.