அந்தக்காலம்னு ஆரம்பிச்சாலே ஏதோ வயசானவங்க டயலாக் மாதிரி
ஆக்கிட்டாங்க. ஆனா ”அந்தக்காலம்” மறக்க முடியாத பொற்காலம்னு
பலரும் கொசுவத்தி சுத்துவோம். எங்க அப்பா கருப்பு,வெள்ளை
திரைப்படங்களா பாத்தப்பா இதையெல்லாம் போயி பாத்துகிட்டு
இருக்காறேன்னு நினைச்சிருக்கேன். ஆனா அதுல கிடைச்ச பல
விஷயங்கள் இப்ப மைனஸ். :( எனக்கு பிடிச்ச இடைக்கால
படங்கள் இப்பத்த பொடிசுகளுக்கு அந்தக்கால படங்கள் ஆனாப்லதான்.
ஆனா இந்த “அந்தக்காலம்” ரொம்பவே நல்லா இருந்துச்சுல்ல.
சமீபத்துல ஒரு இமெயில் வந்துச்சு. அதை எல்லோர்கிட்டயும்
பகிர்ந்துக்கவே இந்தப் பதிவு.
1930-1979 வருடம் வரை பிறந்து வளர்ந்தவர்களா நீங்க
அப்ப இந்தப் பதிவு படிக்கும் போது கண்டிப்பா “சேம் ப்ளட்”
சொல்லிப்பீங்க படிச்சு பாருங்க!!
குப்புற படுத்து தூங்கி, படுத்தது
ஒரு இடம், எந்திரிச்சது ஒரு இடம்னு குட்டி கரணம் போட்டு
தூங்கிய சந்தோஷம் ஆஹா!! (இப்ப எல்லாம் கட்டில்தான்!!)
மருந்துகளை குழந்தைகள் கைக்கு எட்டும் வைக்கும் விதத்தில்
வைக்காதீர்கள்!! அப்படின்னு சொல்லும் வாக்கியங்களோ,
மருந்துகளுக்கு ஷ்பெஷலான சீல்களோ இருந்ததில்லை.
சைக்கிளோ பைக்கோ ஓட்டும்போது ஹெல்மெட்டெல்லாம்
யாரும் போட்டதே இல்லை.
கார் இருக்கும் வீட்டுப்பசங்க கூட சீல்ட்பெல்ட்,பூஸ்டர் சீட்,
இல்லாத காருலதான் பயணம் செஞ்சிருப்பாங்க. ஏன் சில சமயம்
காருக்கு ப்ரேக்கூட இல்லாம இருந்திருக்கும்!! :))
குழாய்த்தண்ணி, கிணத்துத்தண்ணி தான் குடிச்சிருக்கோம்.
பிஸ்லரி தண்ணி எல்லாம் கிடையவே கிடையாது. ஆனாலும்
நோய்வாய்ப்படாம நல்லாத்தான் வாழ்ந்தோம்.
ஒரு கூல்ட்ரிங்க்ஸை 4 ஃப்ரெண்ட்ஸுங்க சேர்ந்து குடிச்சிருக்கோம்,
ஆனா யாரும் அதனால செத்ததில்லை.
கப் கேக்கு, வெண்ணெய் போட்ட கேக்குன்னு வகை வகையா,
சாப்பிட்டிருக்கோம். ஆனா யாரும் உடல்பருமனோட இருக்கலை.
காரணம் நதியோடி விளையாடி, கரையோரம் விழுந்தாடின்னு
வீதியில வந்து விளையாடி ஆரோக்கியமா இருந்ததுதான்.
காலேல பள்ளிக்கு கூடத்துக்கு நடந்துதான் போயிருப்போம்.
காலேலேயே போயிட்டு சாயந்திரம் விளக்கு வெச்சுத்தான்
வீட்டுக்கு வந்திருப்போம். ஆனா பயப்பட தேவையில்லாம
இருந்துச்சு. படிப்போடு விளையாட்டுக்கும் இடம் இருந்திச்சு.
செல்போன்,போன் இதெல்லாம் இல்லாத ஒரு ஆனந்தமான
வாழ்க்கை அப்ப இருந்துச்சு. லீவு போட்டுட்டு போனா
அந்த மனுஷரை கண்டுபிடிப்பதே கஷ்டம்னு ஆபிஸ்ல
டயலாக்லாம் வரும்.
டயர் வண்டி, நுங்கு வண்டி, கோலி, கில்லி, பாண்டி,
நொண்டி விளையாடுதல்னு ரொம்ப பிஸியான நாட்கள்.
கீழே விழுந்து அடிபட்டுன்னு இருக்கும். விழுப்புண்
இல்லாத உடம்பே கிடையாது!! இதுக்காக வேற
வீட்டுல அடி விழும். கீழே விழுந்த வலி, அடிபட்ட
வலின்னு இரண்டுக்கும் சேத்து அழுதவங்களும் உண்டு.
ஆனா அதுக்காக யாரும் புகார் எல்லாம் செஞ்சதில்லை.
இப்ப இருக்கும் மாடர்ன் விளையாட்டு சாதனங்களோ,
150 சேனல்களோ, நாள் முழுக்க போரடிக்கும் ரேடியோக்களோ
இல்லை. டீவிடி போட்டு படம் பாக்க முடியாது. வீசி ஆரில்
புதுப்படம் வர 6 மாசமாகும்!! கம்ப்யூட்டர், லேப்டாப்,
செல்போன், இணையம் இதெல்லாம் இல்லை ஆனா
“நண்பேன்டா” என சொல்லிக்கொள்ளும் நட்புக்கள்
இருந்தாங்க. வீட்டை விட்டு வெளியே வந்து நல்ல
நட்புக்களை தெரிவு செய்துகொண்டோம். உறவுகள்
பலப்பட்டு இருந்தது.
ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு போயி
பார்த்து பேசுறது என்பது சர்வ சாதாரண் விஷயம்.
போன் போட்டு வரட்டுமான்னு???!! கேட்டு போனதில்லை.
ஆனா இந்தத் தலைமுறையில்தான் நல்ல அதிகாரிகள்,
மேனேஜர்கள், பிரச்சனை தீர்க்கும் வல்லவர்கள்,
ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
என அனாயாசமான ரிஸ்க் எடுத்து சாதித்தவர்கள்,
கண்டுபிபிப்பாளர்கள் என பலர் பிறந்துள்ளனர்.
கடந்த 50 வருஷமா எத்தனையோ புதிய கண்டுபிடிப்புக்கள்.
இப்போதைய பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட சந்தோஷங்கள்
கிடையாது. கம்ப்யூட்டர் கேம்ஸ், எக்ஸ்பாக்ஸ் சந்தோஷங்கள்
தவிர வேறென்ன??!!!
நமக்கான சுதந்திரம் இருந்தது, தோல்விகள், சந்தோஷங்கள்,
சாதனைகள், பொறுப்புக்கள் எல்லாம் சரிவிகிதமாக இருந்தது.
இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளும்
தருணங்கள் இருந்தன.
என்ன இப்படிப்பட்ட சந்தோஷங்களை அனுபவித்தவர்களில்
நீங்களும் ஒருவரா???!!! வெல்கம்!! வெல்கம்!!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!