Monday, November 01, 2010

தீபாவளி நினைவுகள்

இந்தப்பதிவு என்னுடைய மீள்பதிவுதான். ஆனாலும் இந்த நினைவுகள்
தரும் இதம், சுகம் எப்போதும் அலாதி. எப்போதும் இனிக்கும் தீபாவளி நினைவுகள்.


கார்த்தி பய இரண்டு ரூபாய் பாட்டியை கேட்டதும்
பாட்டி,”எதுக்குடா? 2 ரூபாய்ல என்ன வெடி வாங்குவன்னு
கேட்டாங்க?”

பாட்டி அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்! அப்படின்னு
சொல்ல ஜோஸ்யக்காரர் திட்டிகிட்டே போனாரு.

அப்பாக்கு இந்த விவரம் தெரிய,”தீபாவளிக்கு
முதல் நாள் வெடி வரும்”னு சொல்ல தீபாவளிக்கு
முதல் நாள் எப்பவரும்னு கவுண்டவுன் செய்ய ஆரம்பிப்போம்.


தீபாவளி பலகாரங்கள் வீட்டுலயே செய்வாங்க.
பாட்டி பெரிய ட்ரம் நிறைய மிக்ஸர், தேன்குழல்,
ரவா லட்டு, ஓமப்பொடி எல்லாம் செய்வாங்க.
அம்மாவும் ஒத்தாசையா இருப்பாங்க.

நான், அப்பா தம்பி 3 பேரும்கூட ரொம்ப
ஒத்தாசை செய்வோம். செய்ய்ற பலகாரத்தை
சாப்பிட ஆளு வேணும்ல :)

அப்பா செய்யற அன்னைக்கு மட்டும் தான்
சாப்பிடுவாரு. டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லி
சொல்லியே பாதி காலி ஆகிடும்.

பாட்டி விவரமா கள்ளிப்பெட்டிக்குள்
1 டப்பா நிறைய ரவா லட்டு, பூந்தி லட்டு,
தேன்குழல் எடுத்து வெச்சிருப்பாங்க.
தீபாவளி முடிஞ்சதுக்கப்புறம் அதை ரிலீஸ்
செய்வாங்க.

அம்மா செய்யும் ஜாங்கரிக்கு நானும் தம்பியும்
அடிமை. அம்மம்மாவுக்கு அப்புறம் அதே
பக்குவத்தோட அம்மா செய்வாங்க.
அவங்க பேரை நிலை நாட்ட நானும்
செய்ய கத்துகிட்டேன். தலைமுறை
ஜாங்கிரி பக்குவம் எனக்கும் வந்திடுச்சே :)

தீபாவளி அன்னைக்கு காலைல எழுந்திருச்சு
மொத வெடி போட்டுட்டுத்தான் மத்த வேலையே.
எண்ணை தேச்சு குளிச்சு, தீபாவளி லேகியம்
சாப்பிட்டாத்தான் அம்மா காபியே தருவாங்க.

அந்த அதிகாலையில் நாங்க எண்ணைய் குளியல்,
செஞ்சு கஷ்டப்பட்டுகிட்டு இருப்போம் அப்பா
நல்லா தூங்கிகிட்டு இருப்பாரு.
அவர் தீபாவளி கொண்டாடவே மாட்டாரு,
புதுசு எடுத்தாலும் அன்றைக்கு உடுத்துவது
கிடையாது. பட்டாசு வெடிக்கும் போது
பாட்டியின் ஸ்டாண்டர்டு டயலாக்,”சீக்கிரம்
வெடிச்சிட்டு வாங்க”??!! :(

காலை 5.30 மணிக்கு மெல்ல வெளிச்சம்
பரவ ஆரம்பித்தாலே தீபாவளி முடிந்துவிட்டது
எங்களுக்கு. :)

அம்மா உறவினர்களுக்கு நண்பர்களுக்கு
பலகாரங்கள் எடுத்து வைத்திருப்பார்
கொண்டுபோய் கொடுத்து வாழ்த்துக்கள்
சொல்லி வருவோம்.

இப்போதெல்லாம் எல்லோரும் டீவி
முன் தான் இருப்பார்கள். முன்பு
தீபாவளி கொண்டாடிய சந்தோஷம்
இப்போது இல்லை. புத்தாடைக்கோ,
திண்பண்டங்களுக்கோ காத்திருப்பு
இல்லை. அதனால் தீபாவளிக்கு இருந்த
ஸ்பெஷல் மதிப்பு குறைந்ததாகவே
தோன்றுகிறது.

இதில் தொலைக்காட்சிகளின் சிறப்பு
நிகழ்ச்சிகளும் முக்கிய பங்குவகுக்கிறது.

மும்பையில் இருந்த போது தீபாவளி
இன்னும் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு
முன் சீரியல் செட்கள் போட்டு ஒவ்வொரு
வீடும் பளிச்சென்று இருக்கும்.
நான் வேலைபார்த்த கம்பெனில் நாங்கள்
3 பேர்தான் பெண்கள். தீபாவளி ஷ்பெஷலாக
முப்பெருந்தேவியரும் ஜரிப்புடவை கட்டி
அசத்துவோம்.

தன் த்ரேயச் ( வட நாட்டு பழக்கமாக) தீபாவளிக்கு முதல் நாள்
வரும் த்ரயோதசி திதி அன்று அம்மம்மா
தங்க நகை வாங்குவார்கள். தங்கம்
முடியாவிட்டால் வெள்ளிக்காசு. கண்டிப்பாக
பால் காய்ச்சும் பாத்திரம் வாங்குவார்கள்.
அதில் பாயசம் செய்துதான் குபேரலட்சுமிக்கு
பூஜை செய்து படைப்பார்கள்.

இந்த இனிமையான நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே
தீபாவளிக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன்.

இதுக்கு முந்தைய தீபாவளி கொசுவத்திகளுக்கு

டிஸ்கி: ரொம்ப நாளா பதிவும் எழுதறதில்லை, ஆளையே
காணோம் அப்ஸ்காண்டான்னு???!!! என்னியக் காணோமேன்னு
தேடிக்கிட்டு(!!!) இருக்கற நண்பர்களுக்கு மீ கொஞ்சம் பிஸி.
புதுவீட்டில் மரவேலைகள் நடந்துகிட்டு இருக்கு. மத்த
வேலைங்களும் சீக்கிரம் முடிச்சு இந்த மாசக் கடைசியில்
குடி புக வேணும். அந்த வேலைகளாலத்தான் பதிவுலுகம்
பக்கம் வரமுடியவில்லை! எல்லாம் முடிச்சிட்டு கண்டிப்பா
வந்திடுவேன்.

அனைவருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
எப்பவும் மறக்க முடியாத இந்தப் பாடல் உங்கள்
அனைவருக்கும்: