Total Pageviews

Tuesday, November 30, 2010

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!! இன்பத்தில் ஆடுது என் மனமே!!

என் திருமண வீடியோவில் இந்தப்பாட்டு இருக்கு. இந்தப் பாடலின்
வரிகள் ரொம்பவே இஷ்டம்.

“மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமுகமோ”
சிம்பிளி சூப்பர்.

புதுவீட்டுக்கு சனிக்கிழமை வந்தோம். வீட்டுக்கு வந்ததும்
முதல் கொண்டாட்டம் எங்கள் திருமண நாள். இந்த வருடம்
எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் நாங்கள் இருவரும் கொடுத்துக்
கொண்ட அன்புப் பரிசு, எங்கள் 15 வருட கனவு எங்கள் 15ஆவது
திருமணநாள் பரிசாக இந்த வீடு.

10ஆவது திருமணநாளை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
என சுத்தி அங்கங்கே இருக்கும் முருகன் கோவிலை தரிசித்து
கொண்டாடினோம்.

நாளை எங்கள் திருமண நாள்.இந்த வருடம் இங்கே
புதுவீட்டில் சிம்பிளாக கொண்டாட திட்டம்.
அயித்தானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




டிஸ்கி: இனி தொடர்ந்து பதிவுகள் வரும் என்று அறிவித்துக்கொள்கிறேன். :)))



Monday, November 22, 2010

ஆஷிஷ் அம்ருதா ஷ்பெஷல்

புது வீட்டு கிருஹப்ரவேசத்தின் போது புடவைகள் வாங்க
கடைக்கு போன போது ஆஷிஷ் அம்ருதாவையும் கூட்டிகிட்டு
போயிருந்தேன். ஹைதையில் இருக்கும் நல்லி கிளைக்கு
போனோம். அங்கே விற்கும் பட்டுப்புடவைகளை ஆஷிஷ்
பார்த்துகிட்டே இருந்தாப்ல். வீட்டுக்கு வரும் வழியில்
25000,30000ம்னு புடவை விக்குதே யாரும்மா இதெல்லாம்
வாங்கி கட்டுவாங்கன்னு? அப்பாவியா கேட்டாரு. அதுக்கும்
ஆளுங்க இருக்காங்கன்னு சொன்னேன்.

அதற்கப்புறம் வந்த விகடன் இதழில் சுமார் நாலே முக்கால்
லட்சம் பெருமானமுள்ள பட்டுப்புடவையை ஒரு பெண்
கட்டிப்பார்த்து போட்டோ போட்டிருந்ததை ஆஷிஷிடம்
காட்டினேன்.” இதெல்லாம் டூமச் அம்மா!! இந்தக் காசை
கொண்டுபோய் புடவையில் கொட்டி இருப்பதற்கு பதில்
அழகா 5 லட்சத்துக்கு காரே வாங்கியிருக்கலாம்!!! ஏம்மா
இப்படி எல்லாம் யோசிக்க மாட்டங்கன்னு” கேக்க நான்
என்னத்த பதில் சொல்ல?!!!

********************************************************




வீட்டு வேலைகள் 90 சதவிகிதம் முடிஞ்சிருச்சு. அடுத்த வாரம்
சனிக்கிழமை அங்கே போய்விடத் திட்டம். அதற்கு முன் இங்கே
இருக்கும் நண்பர்களை விருந்துக்கு அழைச்சிருந்தோம். 20.11.2010
இரவு விருந்து மிக அருமையாக நடந்தது. இரவு 11 மணி வரை
வீடு கல கலவென பேச்சும் சிரிப்புமாக இருந்தது. டின்னர் முடிந்து
எல்லாம் ஏறக்கட்டிக்கொண்டு இருந்த பொழுது மிஞ்சியிருந்த
சாப்பாட்டை பார்த்து அம்ருதா,”  நீ ஏன் பர்த்டே பார்ட்டி வைக்க மாட்டேன்னு சொல்வது இப்ப புரியுதும்மா!! பார்ட்டியின் போது அனாவசியாமா
உணவுப்பொருட்கள் மிஞ்சி போகுது”” என்ற பொழுது ஆஹா
நம்மளை இம்புட்டு தூரம் உத்து பாத்துகிட்டே இருக்காங்களான்னு
இருந்துச்சு.
******************************************************************
தனக்கு என்ன வேணும், எப்படி அதை செஞ்சுக்கணும் என்பதில்
எல்லாம் இந்தக்கால பசங்க நல்லா தெளிவா இருக்காங்க.
தனது அறையை எப்படி எல்லாம் ரெடி செய்யணும் என்பதில்
அண்ணன், தங்கை இருவரும் மஹா கில்லாடிகள். எங்கே
என்ன வரவேண்டும்? எல்லாம் பக்கா ப்ளான்.





அவங்களுக்கு பிடிச்ச கலரை ரூமோட ஒரு பக்க சுவரில்
அடிச்சிருந்தோம். அதை சர்ப்பரைஸா கூட்டிகிட்டு போய்
காட்டினோம். ரொம்ப சந்தோஷம். ஐயாவோட ரூம் கலர் தீம்
நீலம். அம்மாவுக்கு பிங்க்.

*****************************************************************
நாம எதையும் வற்புறுத்தக்கூடாது என்பதுல நான் திடமா
இருப்பேன். திடும்னு ஒரு நாள் அம்ருதா ,”நீங்க எந்த
வயசுல கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சீங்க??”ன்னு
கேட்க 10 வயசுலன்னு சொன்னேன். அப்ப நானும் இப்பவே
கத்துக்கறேன்னு சொன்னாப்ல. ஆங்கிலத்திலும், தமிழிலும்
இருப்பது போல ஒரு புத்தகம் வாங்கிக்கொடுத்தேன். முதலில்
பாட்டா கேட்டு, கேட்டு அப்புறம் அத்தோடு புத்தகத்தை
வெச்சு படிச்சுன்னு நவராத்திரி லீவிலிருந்து அம்ருதம்மா
கந்த ஷஷ்டி கவசம் படிக்க ஆரம்பிச்சாங்க. இப்ப யாரவது
சொன்னா அவங்க கூட பாக்காம சொல்லும் அளவுக்கு
வந்தாச்சு. தாத்தாவுக்கு போனப்போட்டு தான் கத்துகிட்டதை
சொல்லிக்கிட்டு இருப்பாங்க. வீட்டில் இன்னொரு முருக
பக்தை ரெடி. நேற்று புதுவீட்டில் கார்த்திகை தீபம் வைக்க போயிருந்தோம்.
அண்ணனும் கந்த ஷஷ்டி கவசம் படிக்க ஆரம்பிச்சிருக்காரு.
ஆண்டவனருள்.





Saturday, November 20, 2010

மனது வலிக்கும் தருணங்கள்

கிட்டத்தட்ட 6 மாத காலமாக நான் அவ்வளவாக பதிவு
போடுவதில்லை. என் வேலைப்பளு ஒரு புறம் என்றாலும்
கணிணி முன் உட்காரும் பொழுது என் மனதுக்குள் ஓடும்
ஒரு வரி “நம்ம நட்புக்கள் யாரும் இப்போது இல்லையே??”
என்பதுதான். இது எனக்கு ஒரு பெரிய குறை.

நண்பனை இழப்பது என்பது மிகப் பிரிய சோகம்.
வலையுலகம் எத்தனையோ நட்புக்களையும், உறவுகளையும்
தந்திருக்கிறது. இது அனைவரின் அனுபவமாக இருக்கும்.
பழையன கழிதலும் புதியன் புகுதலும் வேறு எதற்கு
வேண்டுமானாலும் தகுமே தவிர நட்புக்கு இல்லை.

எழுத(!!!) வந்து 3 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்
என் ஆரம்பகாலத்தில் இருந்த நட்புக்கள் பலர் இப்போது
வலையுலகை விட்டே ஓடிவிட்டார்கள். அவரவர்கள்
பார்வையில் அது சரி. ஆனால் என்னவோ மனதுக்கு
அது ஒருகுறையாக அமைந்துவிட்டது. எப்போதும்
அவர்களைப்பற்றியெல்லாம் நினைத்துப்பார்ப்பது உண்டு.

நட்பு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நண்பர்களிடம்
இருக்கும் புரிதல் உறவினர்களிடம் கூட அமையாது.
எப்போதும் எங்கேயும் நட்பை விட்டுக் கொடுக்க
முடியாது, கூடாது. எங்கிருந்தாலும் தொடர்பில்
இருக்க முயற்சிக்க வேண்டும். இருகரம் சேர்ந்தால்தான்
ஓசை எழுப்ப முடியும். எதிர் தரப்பிலிருந்து பதில்
வரத்து குறைந்தால் நாளடைவில் அந்த நட்பு
கட்டெறும்பாகி காணாமல் போய்விடும்.

இப்படியெல்லாம் மனசு பாதிக்கும்னு பலர் உணர்வதே இல்லை.
அதனால “நாடோடிகள்” சினிமா பாணியில் பாடம்
புகட்டியே ஆகவேண்டும். யாருக்கு? எல்லாம் நட்புக்களுக்குத்தான்.

இனி யாராவது நான் ஓடிடறேன், விலகிடறேன், டாடாபைபை,
நிக்கட்டுமா?போகட்டுமா? அப்படிங்கற ரீதியில பதிவு போட்டு
அப்ஸ்காண்டாக பாத்தா சும்மா விடுறதில்லை. ஆட்டோ,லாரி,
ஹெலிகாப்டர் இப்படி ஏதோ ஒண்ணு தேவைக்கு ஏற்ப
பார்த்து அனுப்பி வைக்கப்படும்.கண்டிப்பா இது நடக்கும்.

உடனடியா அனுப்ப வேண்டியது அஹம் ரஸனையாஸ்மி
அப்படின்னு சொல்லிக்கும் ஃப்ரெண்ட் ஆதிமூலகிருஷ்ணன்
வீட்டுக்குத்தான். (ஆமா ஃப்ரெண்ட் இந்த ரஸனையாஸ்மி
அப்படின்னா ரஸிகா ரசிகன்னு அர்த்தமா???!!)

ச்சும்மா இருக்க முடியாம வாக்கெடுப்பெல்லாம் நடத்தி
டார்ச்சர் தாங்க முடியலை. அவரோட ப்ளாக்ல
வலது பக்கம் ஓட்டுப்பெட்டில்லாம் வெச்சிருக்காரு.

யாரங்கே!!! சீக்கிரமா ஃப்ரெண்ட் ஆதிமூலகிருஷ்ணன் வீட்டுக்கு
ஒரு ஆட்டோ, ரெண்டு லாரி, 2 ஹெலிகாப்டர் அனுப்பிவைச்சு
என்னன்னு கொஞ்சம் கவனிங்க.



Wednesday, November 17, 2010

ஆமாம்ப்பு!! நாங்க அந்தக்காலம்தேன்!!!

அந்தக்காலம்னு ஆரம்பிச்சாலே ஏதோ வயசானவங்க டயலாக் மாதிரி
ஆக்கிட்டாங்க. ஆனா ”அந்தக்காலம்” மறக்க முடியாத பொற்காலம்னு
பலரும் கொசுவத்தி சுத்துவோம். எங்க அப்பா கருப்பு,வெள்ளை
திரைப்படங்களா பாத்தப்பா இதையெல்லாம் போயி பாத்துகிட்டு
இருக்காறேன்னு நினைச்சிருக்கேன். ஆனா அதுல கிடைச்ச பல
விஷயங்கள் இப்ப மைனஸ். :( எனக்கு பிடிச்ச இடைக்கால
படங்கள் இப்பத்த பொடிசுகளுக்கு அந்தக்கால படங்கள் ஆனாப்லதான்.

ஆனா இந்த “அந்தக்காலம்” ரொம்பவே நல்லா இருந்துச்சுல்ல.
சமீபத்துல ஒரு இமெயில் வந்துச்சு. அதை எல்லோர்கிட்டயும்
பகிர்ந்துக்கவே இந்தப் பதிவு.

1930-1979 வருடம் வரை பிறந்து வளர்ந்தவர்களா நீங்க
அப்ப இந்தப் பதிவு படிக்கும் போது கண்டிப்பா “சேம் ப்ளட்”
சொல்லிப்பீங்க படிச்சு பாருங்க!!

குப்புற படுத்து தூங்கி, படுத்தது
ஒரு இடம், எந்திரிச்சது ஒரு இடம்னு குட்டி கரணம் போட்டு
தூங்கிய சந்தோஷம் ஆஹா!! (இப்ப எல்லாம் கட்டில்தான்!!)

மருந்துகளை குழந்தைகள் கைக்கு எட்டும் வைக்கும் விதத்தில்
வைக்காதீர்கள்!! அப்படின்னு சொல்லும் வாக்கியங்களோ,
மருந்துகளுக்கு ஷ்பெஷலான சீல்களோ இருந்ததில்லை.
சைக்கிளோ பைக்கோ ஓட்டும்போது ஹெல்மெட்டெல்லாம்
யாரும் போட்டதே இல்லை.

கார் இருக்கும் வீட்டுப்பசங்க கூட சீல்ட்பெல்ட்,பூஸ்டர் சீட்,
இல்லாத காருலதான் பயணம் செஞ்சிருப்பாங்க. ஏன் சில சமயம்
காருக்கு ப்ரேக்கூட இல்லாம இருந்திருக்கும்!! :))

குழாய்த்தண்ணி, கிணத்துத்தண்ணி தான் குடிச்சிருக்கோம்.
பிஸ்லரி தண்ணி எல்லாம் கிடையவே கிடையாது. ஆனாலும்
நோய்வாய்ப்படாம நல்லாத்தான் வாழ்ந்தோம்.

ஒரு கூல்ட்ரிங்க்ஸை 4 ஃப்ரெண்ட்ஸுங்க சேர்ந்து குடிச்சிருக்கோம்,
ஆனா யாரும் அதனால செத்ததில்லை.

கப் கேக்கு, வெண்ணெய் போட்ட கேக்குன்னு வகை வகையா,
சாப்பிட்டிருக்கோம். ஆனா யாரும் உடல்பருமனோட இருக்கலை.
காரணம் நதியோடி விளையாடி, கரையோரம் விழுந்தாடின்னு
வீதியில வந்து விளையாடி ஆரோக்கியமா இருந்ததுதான்.

காலேல பள்ளிக்கு கூடத்துக்கு நடந்துதான் போயிருப்போம்.
காலேலேயே போயிட்டு சாயந்திரம் விளக்கு வெச்சுத்தான்
வீட்டுக்கு வந்திருப்போம். ஆனா பயப்பட தேவையில்லாம
இருந்துச்சு. படிப்போடு விளையாட்டுக்கும் இடம் இருந்திச்சு.

செல்போன்,போன் இதெல்லாம் இல்லாத ஒரு ஆனந்தமான
வாழ்க்கை அப்ப இருந்துச்சு. லீவு போட்டுட்டு போனா
அந்த மனுஷரை கண்டுபிடிப்பதே கஷ்டம்னு ஆபிஸ்ல
டயலாக்லாம் வரும்.

டயர் வண்டி, நுங்கு வண்டி, கோலி, கில்லி, பாண்டி,
நொண்டி விளையாடுதல்னு ரொம்ப பிஸியான நாட்கள்.
கீழே விழுந்து அடிபட்டுன்னு இருக்கும். விழுப்புண்
இல்லாத உடம்பே கிடையாது!! இதுக்காக வேற
வீட்டுல அடி விழும். கீழே விழுந்த வலி, அடிபட்ட
வலின்னு இரண்டுக்கும் சேத்து அழுதவங்களும் உண்டு.
ஆனா அதுக்காக யாரும் புகார் எல்லாம் செஞ்சதில்லை.


இப்ப இருக்கும் மாடர்ன் விளையாட்டு சாதனங்களோ,
150 சேனல்களோ, நாள் முழுக்க போரடிக்கும் ரேடியோக்களோ
இல்லை. டீவிடி போட்டு படம் பாக்க முடியாது. வீசி ஆரில்
புதுப்படம் வர 6 மாசமாகும்!! கம்ப்யூட்டர், லேப்டாப்,
செல்போன், இணையம் இதெல்லாம் இல்லை ஆனா
“நண்பேன்டா” என சொல்லிக்கொள்ளும் நட்புக்கள்
இருந்தாங்க. வீட்டை விட்டு வெளியே வந்து நல்ல
நட்புக்களை தெரிவு செய்துகொண்டோம். உறவுகள்
பலப்பட்டு இருந்தது.

ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு போயி
பார்த்து பேசுறது என்பது சர்வ சாதாரண் விஷயம்.
போன் போட்டு வரட்டுமான்னு???!! கேட்டு போனதில்லை.

ஆனா இந்தத் தலைமுறையில்தான் நல்ல அதிகாரிகள்,
மேனேஜர்கள், பிரச்சனை தீர்க்கும் வல்லவர்கள்,
ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
என அனாயாசமான ரிஸ்க் எடுத்து சாதித்தவர்கள்,
கண்டுபிபிப்பாளர்கள் என பலர் பிறந்துள்ளனர்.

கடந்த 50 வருஷமா எத்தனையோ புதிய கண்டுபிடிப்புக்கள்.
இப்போதைய பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட சந்தோஷங்கள்
கிடையாது. கம்ப்யூட்டர் கேம்ஸ், எக்ஸ்பாக்ஸ் சந்தோஷங்கள்
தவிர வேறென்ன??!!!

நமக்கான சுதந்திரம் இருந்தது, தோல்விகள், சந்தோஷங்கள்,
சாதனைகள், பொறுப்புக்கள் எல்லாம் சரிவிகிதமாக இருந்தது.
இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளும்
தருணங்கள் இருந்தன.

என்ன இப்படிப்பட்ட சந்தோஷங்களை அனுபவித்தவர்களில்
நீங்களும் ஒருவரா???!!! வெல்கம்!! வெல்கம்!!

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!





பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆச்சுடா பட்டாபி!!! அப்படின்னு ஒரு டயலாக் எஸ்.வீ.சேகரின் நாடகம்
ஒன்றில் வரும். அது மாதிரி நானும் வலைப்பூ துவங்கி 3 வருஷம்
ஓடிடிச்சு. கொஞ்சம் தாமதமாத்தான் பிறந்த நாள் கொண்டாட்டம்.



ஒரு நாளைக்கு 4 பதிவு போட்டுகிட்டு இருந்தேன்னு யாரோ கண்ணு வெச்சிட்டாங்க
போல :)) அதான் இந்த வருஷம் 750 பதிவாவது போடணும்னு வெச்சிருந்த டார்கெட்டை
எட்ட முடியலை. அதுக்கென்ன வட்டியும் முதலுமா அடுத்த வருஷம் அடிச்சு ஆடிடலாம்.

வரும் 19ஆம் தேதி நம்ம பதிவர் தோழி முத்துலெட்சுமிக்கு பிறந்தநாள்.
அட்வான்ஸா என்னோட வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறேன். தோழிக்கு
பிடிச்ச பாடல்களை சென்ற முறை வாழ்த்தில் இருக்கு. ஒரு எட்டு போய்
பாடல்களை ரசிக்க

இறைவன் எல்லா வளத்தையும் கொடுத்து என்றும் இனிமையான
வாழ்வை தர பிரார்த்திக்கொண்டு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை
சொல்லிக்கொள்கிறேன்.


Tuesday, November 02, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 2/11/10

தீபாவளி அவசரத்துல பிரியாணி போட மறந்துட்டேன். :)
இது ஆந்திரா ஷ்பெஷல் பிரியாணி.

நேற்று ஆந்திரபிரதேசத்துக்கு பர்த்டே. (ஆந்திரபிரதேசம்
உருவான நாள்) தெலங்கானா அரசியல் கட்சி காரங்களும்,
எப்பவும் அவங்களுக்கு அல்லக்கையா இருக்கற உஸ்மானியா
மாணவர்களும் கறுப்புக்கொடி குத்தி பந்த், வன்முறை
எல்லாம் செஞ்சாங்க. டீவில ஒரு பக்கம் என்.டி.ஆர்
ஸ்டேடியத்துல முதல்வர் கலந்துகிட்ட நிகழ்ச்சி, இன்னொரு
பக்கம் அடிதடின்னு காட்டிகிட்டு இருந்தாங்க.
கே.சி.ஆரோட பொண்ணு கருப்பு கலர் புறாவை பறக்கவிட்டு
தன்னோட எதிர்ப்பை காட்டினாங்க!!!! இந்தக் கலாட்டாவுக்கு
பயந்து டெல்லி பப்ளிக் பள்ளி ஞாயிற்றுக்கிழமை பள்ளிவெச்சு
நேத்து லீவு விட்டிருந்தாங்க!!! எங்க பிள்ளைங்களுக்கு
நேத்து ஸ்கூல் இருந்துச்சு. காய்கறி வாங்கலாம்னு மார்கெட்
போனேன். ஆஹா.... காத்து வாங்கிகிட்டு இருந்துச்சு
மார்க்கெட். அழகா தேவையான சாமான்களை வாங்கிகிட்டு
வந்திட்டேன்!!!

*******************************************************

”தாங்கமுடியலடா சாமி விருது” அமெரிக்காவாழ் தெலங்கானா
காரங்களுக்கு கொடுக்கலாம்!! நேற்று டீவியில இவங்களையும்
பேசவிட்டாங்க(ச்சும்மா 5 நிமிஷம் தான்) அம்புட்டு பேரும்
கறுப்பு சட்டை போட்டுகிட்டு இருந்தாங்க. அவங்க சொன்ன
மேட்டர்தான் விருதுக்கு பரிந்துரை செய்ய வெச்சுச்சு.

அதாவது தெலங்கானால இருக்குற ஆந்திரா காரங்க எல்லாம்
ஓடிப்போயிடனுமாம்! எங்க வீட்டுக்கே வந்து, எங்க சாப்பாட்டை
சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. இதுதான் பிரச்சனை!!! நீங்க
போனாத்தான் எங்களுக்கு விடிவுகாலம் ரேஞ்சுல பேசினாங்க.

மக்களே! நீங்க அமெரிக்காவுல உக்காந்துகிட்டு இப்படி பேசுவதுல
இன்னா நியாயம்பா??? ஒபாமா சீக்கிரம் பத்தி விட்டாருன்னா
அப்பத் தெரியும்?? இந்தப் பாட்டுதான் இப்ப நிலமை!
***********************************************************
தீபாவளிக்கு சட்டம் எல்லாம் போட்டிருக்காங்க. பட்டாசு
வெடிக்கும் நேரம் பத்திதான் சொல்றேன். சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு படி இரவு 10 மணிலேர்ந்து அதிகாலை 6 மணிவரை
பட்டாசுக்கு நோவாம். ஆந்திராவுல அதை ரொம்ப அதிகாரப்பூர்வமா
அறிவிச்சு அமுல் படுத்த சொல்லியிருக்காரு எங்க ஊரு
போலீஸ்கார் ஏ.கே.கான். ஆனா இந்த வடநாட்டுக்காரங்க
சிலருக்கு தீவளி அன்னைக்குத்தான் புத்தாண்டு. அவுக
விடிய விடிய... விடிய விடியன்னு பட்டாசு கொளுத்துவாங்க.
அவுகளை எல்லாம் சட்டம் ஒண்ணும் செய்யாது போல!!!
உங்க ஊருல எப்புடி???!!!
********************************************************
இந்த வாட்டி குளிர் சீக்கிரமே ஆரம்பமாகிடிச்சு. தெலங்கானா
பகுதிகளில் இரவு நேர வெப்பம் 19 டிகிரி. :))) மேடக்கில்
ஆரம்பமே 15 டிகிரி. இந்த நிலமைல வடமேற்கு மழைவேற!!!
ச்சும்மா குளிருதுல்ல்லன்னு சொல்லும் நிலமை. குவார்ட்டர்
அடிச்சா மாதிரி இருக்கு வானம். சாயந்திரம் 5 மணிக்கே
கும்மிருட்டா இருக்கு. ஆரம்பமே இப்படின்னு இன்னும் 3 மாசத்தை
எப்படித்தான் ஓட்டப்போறோமோ!!!
*****************************************************
அம்புட்டும் ஆந்திரா மேட்டரா இருக்கேன்னு புலம்பாதிங்கப்பா.
சுவாரசியமான சமாசரம் ஒண்ணு இருக்கு. சென்னைஅம்மாக்கள் அப்படின்னு ஒரு இணையதளம்.
அங்க போய் பாருங்க. நீங்களும் சேர்ந்துக்கலாம். நிறைய்ய
விஷயங்களை பகிர்ந்துக்கலாம். எங்க ஊருக்கும் ஒரு தளம்
இருக்கு. நான் சேர்ந்திட்டேன். உங்க ஊர் பேரைப்போட்டு
கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டுப்பாருங்க(eg.mumbaimoms)
கிடைச்சா சேர்ந்து மகிழுங்க. ரொம்ப உபயோகமா இருக்கு
இந்தத்தளம்னு பேப்பர்ல படிச்சேன்.
******************************************************]
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்



Monday, November 01, 2010

தீபாவளி நினைவுகள்

இந்தப்பதிவு என்னுடைய மீள்பதிவுதான். ஆனாலும் இந்த நினைவுகள்
தரும் இதம், சுகம் எப்போதும் அலாதி. எப்போதும் இனிக்கும் தீபாவளி நினைவுகள்.


கார்த்தி பய இரண்டு ரூபாய் பாட்டியை கேட்டதும்
பாட்டி,”எதுக்குடா? 2 ரூபாய்ல என்ன வெடி வாங்குவன்னு
கேட்டாங்க?”

பாட்டி அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்! அப்படின்னு
சொல்ல ஜோஸ்யக்காரர் திட்டிகிட்டே போனாரு.

அப்பாக்கு இந்த விவரம் தெரிய,”தீபாவளிக்கு
முதல் நாள் வெடி வரும்”னு சொல்ல தீபாவளிக்கு
முதல் நாள் எப்பவரும்னு கவுண்டவுன் செய்ய ஆரம்பிப்போம்.


தீபாவளி பலகாரங்கள் வீட்டுலயே செய்வாங்க.
பாட்டி பெரிய ட்ரம் நிறைய மிக்ஸர், தேன்குழல்,
ரவா லட்டு, ஓமப்பொடி எல்லாம் செய்வாங்க.
அம்மாவும் ஒத்தாசையா இருப்பாங்க.

நான், அப்பா தம்பி 3 பேரும்கூட ரொம்ப
ஒத்தாசை செய்வோம். செய்ய்ற பலகாரத்தை
சாப்பிட ஆளு வேணும்ல :)

அப்பா செய்யற அன்னைக்கு மட்டும் தான்
சாப்பிடுவாரு. டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லி
சொல்லியே பாதி காலி ஆகிடும்.

பாட்டி விவரமா கள்ளிப்பெட்டிக்குள்
1 டப்பா நிறைய ரவா லட்டு, பூந்தி லட்டு,
தேன்குழல் எடுத்து வெச்சிருப்பாங்க.
தீபாவளி முடிஞ்சதுக்கப்புறம் அதை ரிலீஸ்
செய்வாங்க.

அம்மா செய்யும் ஜாங்கரிக்கு நானும் தம்பியும்
அடிமை. அம்மம்மாவுக்கு அப்புறம் அதே
பக்குவத்தோட அம்மா செய்வாங்க.
அவங்க பேரை நிலை நாட்ட நானும்
செய்ய கத்துகிட்டேன். தலைமுறை
ஜாங்கிரி பக்குவம் எனக்கும் வந்திடுச்சே :)

தீபாவளி அன்னைக்கு காலைல எழுந்திருச்சு
மொத வெடி போட்டுட்டுத்தான் மத்த வேலையே.
எண்ணை தேச்சு குளிச்சு, தீபாவளி லேகியம்
சாப்பிட்டாத்தான் அம்மா காபியே தருவாங்க.

அந்த அதிகாலையில் நாங்க எண்ணைய் குளியல்,
செஞ்சு கஷ்டப்பட்டுகிட்டு இருப்போம் அப்பா
நல்லா தூங்கிகிட்டு இருப்பாரு.
அவர் தீபாவளி கொண்டாடவே மாட்டாரு,
புதுசு எடுத்தாலும் அன்றைக்கு உடுத்துவது
கிடையாது. பட்டாசு வெடிக்கும் போது
பாட்டியின் ஸ்டாண்டர்டு டயலாக்,”சீக்கிரம்
வெடிச்சிட்டு வாங்க”??!! :(

காலை 5.30 மணிக்கு மெல்ல வெளிச்சம்
பரவ ஆரம்பித்தாலே தீபாவளி முடிந்துவிட்டது
எங்களுக்கு. :)

அம்மா உறவினர்களுக்கு நண்பர்களுக்கு
பலகாரங்கள் எடுத்து வைத்திருப்பார்
கொண்டுபோய் கொடுத்து வாழ்த்துக்கள்
சொல்லி வருவோம்.

இப்போதெல்லாம் எல்லோரும் டீவி
முன் தான் இருப்பார்கள். முன்பு
தீபாவளி கொண்டாடிய சந்தோஷம்
இப்போது இல்லை. புத்தாடைக்கோ,
திண்பண்டங்களுக்கோ காத்திருப்பு
இல்லை. அதனால் தீபாவளிக்கு இருந்த
ஸ்பெஷல் மதிப்பு குறைந்ததாகவே
தோன்றுகிறது.

இதில் தொலைக்காட்சிகளின் சிறப்பு
நிகழ்ச்சிகளும் முக்கிய பங்குவகுக்கிறது.

மும்பையில் இருந்த போது தீபாவளி
இன்னும் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு
முன் சீரியல் செட்கள் போட்டு ஒவ்வொரு
வீடும் பளிச்சென்று இருக்கும்.
நான் வேலைபார்த்த கம்பெனில் நாங்கள்
3 பேர்தான் பெண்கள். தீபாவளி ஷ்பெஷலாக
முப்பெருந்தேவியரும் ஜரிப்புடவை கட்டி
அசத்துவோம்.

தன் த்ரேயச் ( வட நாட்டு பழக்கமாக) தீபாவளிக்கு முதல் நாள்
வரும் த்ரயோதசி திதி அன்று அம்மம்மா
தங்க நகை வாங்குவார்கள். தங்கம்
முடியாவிட்டால் வெள்ளிக்காசு. கண்டிப்பாக
பால் காய்ச்சும் பாத்திரம் வாங்குவார்கள்.
அதில் பாயசம் செய்துதான் குபேரலட்சுமிக்கு
பூஜை செய்து படைப்பார்கள்.

இந்த இனிமையான நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே
தீபாவளிக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன்.

இதுக்கு முந்தைய தீபாவளி கொசுவத்திகளுக்கு

டிஸ்கி: ரொம்ப நாளா பதிவும் எழுதறதில்லை, ஆளையே
காணோம் அப்ஸ்காண்டான்னு???!!! என்னியக் காணோமேன்னு
தேடிக்கிட்டு(!!!) இருக்கற நண்பர்களுக்கு மீ கொஞ்சம் பிஸி.
புதுவீட்டில் மரவேலைகள் நடந்துகிட்டு இருக்கு. மத்த
வேலைங்களும் சீக்கிரம் முடிச்சு இந்த மாசக் கடைசியில்
குடி புக வேணும். அந்த வேலைகளாலத்தான் பதிவுலுகம்
பக்கம் வரமுடியவில்லை! எல்லாம் முடிச்சிட்டு கண்டிப்பா
வந்திடுவேன்.

அனைவருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
எப்பவும் மறக்க முடியாத இந்தப் பாடல் உங்கள்
அனைவருக்கும்: