Total Pageviews

Tuesday, December 28, 2010

fruit & milkஐ ஹேண்டினில் ஏந்தி!!!!

எங்க மாமா ஒருத்தர் இந்தப் பாட்டை
அருமையா பாடினார். ஆனா கேட்டமாதிரி
ட்யூன் இருக்க நடுவுல ஆங்கில கலந்த மாதிரி இருக்கேன்னு
ஆச்சரியப்பட்டேன். இந்த பாட்டு முக்கால்வாசி
மாமா இந்த மாதிரி பாடுவார்.


fruit & milkஐ handinil ஏந்தி
பவள mouthil Smilenai சிந்தி
கோல peocock போல யூ வருவாயே
கொஞ்சும் parrote அமைதி கொள்வாயே...

இப்படி அந்தந்த ட்யூன்களில் நாமே பாடல்களை
எட்டுகட்டுவது ஒரு சுகம். அப்படி சில பாடல்கள்
இதோ...
**********************************************
நாங்க தாக்குவது நிர்மாவை
(எல்லோரும் இப்படித்தான்னு நினைக்கிறேன்)
வாஷிங் பவுடர் நிர்மா..
ஆயாவீட்டுல குருமா!!
மணமணக்கும் குருமா
பூரியோடு வருமே!!
வளைச்சு அடிப்போம் நாமே!!
ஆயாவீட்டுல குருமா!!

********************************************
மேரே சொப்பனோக்கி ராணி கப் ஆயேகி தும்
அருமையான ஆராதனா படப் பாட்டு.
ஆனா தம்பி அதை
அவனுக்கு மிகவும் பிடித்த மிளகு ரசம்
வெக்கும் அன்னைக்கெல்லாம் இப்படி பாடுவான்!!

“ஜீரகால மிரிகால சாறு! சாறு!”
ஹோய் ஜீரகால மிரிகால சாறு சாறு.


*******************************************

என் ஃப்ரெண்டோட தங்கச்சியை அவங்க ஆயா
எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
பொறுத்து பொறுத்து பாத்த அந்தப் பொண்ணு
பாட்டு படிச்சு பாட்டியை கடுப்பேத்திடிச்சு.
இப்பவும் மறக்க முடியாத பாட்டு அது.

பூஞ்சிட்டு குருவிகளா
புதுமெட்டு தருவிகளா
பாடத்தான் போறேன் பாட்டு
புதுக்கோட்டை கிழவியைப் பாத்து
அம்மாடி ஆத்தாடி பொல்லாத கிழவியடா
டொய் டொய்ய்ய்...

:))))))))))) எங்க அவ்வாவையும் நாங்க இந்தப் பாட்டு பாடி
கலாய்ச்சது தனிக்கதை!!

************************************************
அயித்தானும் சாதராணம் இல்லை.

ஆஹா இன்ப நிலாவினிலே பாட்டில் ஒரு வரி
வருமாம். அதை இப்படி பாடுவாங்களாம்.
அனுதினம் செய்வார் போளி... அதை நாம் ரசிப்போம் ஜாலி
அப்படின்னு அவங்க ஸ்டைல் பாட்டு.

நீங்களும் இந்த மாதிரி எட்டுக்கட்டி பாடியிருப்பீங்களே!!
அதை பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க.

அனைவருக்கும் மனமார்ந்த ஆந்கில புத்தாணு நல்வாழ்த்துக்கள்.
பிறக்கும் ஆண்டு எல்லாவித வளங்களையும், மனமகிழ்ச்சியும்
தருமொரு ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திக்கிறேன்.









Get Your Own Hindi Songs Player at Music Plugin

videoku:






Wednesday, December 22, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 22/12/10

ஆரம்பிச்சிட்டங்கய்யா!! ஆரம்பிசிட்டாங்கன்னு சொல்வது போல
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணாத்தே சந்திரபாபு நாயுடு
திடும்னு வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு உண்ணாவிரதம் இருக்கப்
போறேன்னு ஆரம்பிச்சாரு. சரி ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு
விரதம் + உண்ணாவிரதம்னு நினைச்சுகிட்டேன். :))

எனக்கு எப்பவுமே சந்திரபாபு நாயுடு மேல மரியாதை உண்டு.
ஹைதையை ஒரு மெட்ரோ ரேஞ்சுக்கு கொண்டு வந்ததுலயும்,
ஐடி கம்பெனிகள் இன்னைக்கு கொடிகட்டி பறப்பதிலயும்
இவரோட பங்கு நிறைய்யவே. அப்பவே அரசு அலுவலகங்களில்
வெப்கேமரா வெச்சு சாட் செஞ்சு, எங்கும் கணிணி, எதிலும்
கணிணின்னு கொண்டு வந்து தங்கு தடை இல்லாம வேலை
நடக்க வெச்சவர். ஆந்திராவைப்பத்தி அதிகம் தெரிஞ்சிருக்க
வாய்ப்பில்லாத வெளிநாடுகளில் கூட சந்திரபாபு நாயுடு ஊருன்னா
புரிஞ்சக்கூடிய ஒரு செல்வாக்கு அவருக்கு உண்டு.

எலக்‌ஷனில் தோற்க காரணம் விவசாயிகளை அவர் கண்டு
கொள்ளவே இல்லை என்பதுதான். அதனால் இப்ப அந்த
விவசாயிகளின் ஓட்டுக்களுக்காக மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு அரசு அறிவிச்சது
பத்தாதுன்னு, மேலும் வேணும்னு கோரிக்கை வெச்சு
இந்த உண்ணாவிரதம். குண்டுகட்டா தூக்கிகிட்டு போய்
ஹாஸ்பிடலில் சேர்த்ததற்கப்புறமும் உண்ணாவிரதம்
தொடர்ந்துகிட்டு இருக்கும்பொழுது மத்திய அரசு 400 கோடி
ரூபாய் பட்ஜட் ஒதுக்கியிருப்பதா சொல்லியும் உண்ணாவிரதத்தை
கைவிடலை. இதுக்கு மேலயும் என்னத்த எதிர் பார்க்கிறார்.
இழப்பை ஓரளவுதான் சரிக்கட்ட முடியும். விவாசியகளின்
நிலை பாவமா இருந்தாலும் அரசால எவ்வளவு செய்ய முடியும்?
புரியலை!!

கோயிந்து கொஸ்டின்:

எல்லாம் சரி! ஐயாவை அரெஸ்ட் செஞ்சு ஹாஸ்பிடலில்
சேர்த்தற்கு தெலுகு தம்பிக்கள் கொதிதெழுந்து பஸ்களை
கொழுத்தி, கடை அடைப்பு செய்து வன்முறையில்
ஈடுபட்டார்களே!! இதற்கு நஷ்ட ஈடு யாரு தரப்போறாங்க??
*************************************************************
ஜகன் அண்ணாவும் விஜயவாடாவில் ஒரு லட்சம் பேரை
கூட்டு சேத்துகிட்டு 48 மணிநேர உண்ணாவிரதம் அதுவும் தன்
பிறந்த நாள் அன்னைக்கு ஆரம்பிச்சிருக்காரு. அதுக்கு
வந்து போன ஆளுங்கட்சி எம் எல் ஏக்களுக்கு பரேட்
இருக்குன்னு நினைக்கிறேன். திரும்ப எலக்‌ஷன்
வந்தாலும் வரலாம். சிச்சுவேசனுக்கு தகுந்த பாட்டு
மைண்ட்ல ஓடுது. அது இன்னான்னா,”இராம ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும் கவலையில்லை!!”
:(((
**********************************************************

வெங்காயம் விலையேற்றம்!! இதுதான் இப்ப செய்தி.
அதிக பட்சமாக 80ரூபாய் விற்குது.(எங்க ஊர்ல 60)
இன்னும் 3 வாரத்துக்கு இப்படித்தான் இருக்கும்னு மத்திய அரசு சொல்லிட்டாங்க.
இரண்டுகிலோ வெங்காயம் வாங்குவதும் 2 கிராம் வெள்ளி
வாங்குவதும் ஒண்ணாபோச்சே!!

வெங்காயத்தை பத்தி மட்டுமே கவலைப்பட்டுகிட்டு இருப்பவங்களுக்கு
மேலும் ஒரு ஷாக்கிங் ந்யூஸ். பூண்டு கிலோ 340ரூபாய்.
எந்த காய்கறியும் கால்கிலோ 10ரூபாய்தான். சாமானியனின்
நிலை??????
பெட்ரோல் விலை ஏறியாச்சு. ஆட்டோ மினிமம் 12 லேர்ந்து 14.
அப்புறம் ஒவ்வொரு கிலோமிட்டருக்கும் 8ரூபாய். அதனால்
மத்த விலைகளும் ஏறியாச்சு. மாசசம்பளக்காரங்களுக்கு
அதே சம்பளம்தான்!!! பட்ஜட்ல துண்டு இல்ல பெரிய
கோலாபூர் பெட்ஷீட் தான். :(((
***********************************************************
எங்க ஊர்ல இன்னொரு விஷயம். குளிர். குறைந்த பட்சமா
8.9 ஹைதையில். அரக்குவெளியில் 4ஆம். ஹை ஜாலியா
இருக்கு. குளிருக்கு இதமா இழுத்து போத்திக்கினு தூங்கலாம்.
:))) பகலில் கூட தண்ணீர் ஜில் ஜில் ரமாமணியா இருக்கு.
இன்னம் கூட குறையுமாம். ஐ லவ் திஸ் கிளைமேட்.
*********************************************************

20 வயதுலேர்ந்து 30 வயதுக்குள் இருக்குற, ஐடித்துறையில்
வேலை பார்க்கும் கணவன்,மனைவிகள்தான் அதிகமாக
விவாகரத்து கேட்பதா வக்கீல்கள் சொல்லியிருக்காங்க.
தனது துணைக்காக கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத
நிலை இருப்பதால சின்ன பிரச்சனையும் பெரிசாகி விவாகரத்து
கேக்கறாங்களாம்!
மத்த கேஸ்களுக்கு நேரங்காலம் பாக்காம வேலை வேலைன்னு
ஓடுவது, கணிணியை கட்டிகிட்டு அழுவது, கர்ணணுக்கு
கவச குண்டலம் போல போனை வெச்சுகிட்டு சுத்துவது
போன்றவை மற்ற காரணங்களாம்.

என் ஹஸ்பண்டாலஜி பாடங்கள் 100% உண்மை!!!
**************************************************

Tuesday, December 21, 2010

இந்த மாற்றம் தேவைதானா????!!!!!????????

பெண்ணுக்கு படிப்பெதற்குன்னு சொல்லி வீட்டில் அடுப்பங்கரையே
உலகம்னு வெச்சிருந்தாங்க. பெண் குடும்பத்தை பாத்துகிட்டா
போதும்னு அவளோட திறமைகளை அடக்கி ஒடுக்கி உருத்தெரியாம
ஆக்கினாங்க. அதுலயும் பிரகாசித்தது ரொம்ப கொஞ்சம் பேருதான்.
பெண்களோட இந்த நிலைக் கண்டு மீசைக்கார கவிஞனுக்கு மீசை
துடித்து கோபம் வந்து,” நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்”
பெண்களுக்கு வேணும். படிப்பு மிக மிக அவசியம். என்றெல்லாம்
சொன்ன பாரதியின் கனவு நனவாகி பெண்கள் பாரதி கண்ட
புதுமைப் பெண்களாக திகழ் வேண்டும் என எத்தனையோ
பாடுபட்டு மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது.

மாற்றங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து விடவில்லையே!! மெல்ல
மெல்ல இந்த நிலையை அடைய 3 தலைமுறை ஆகியிருக்கிறது.
ஆனால் இப்பொழுது இருக்கும் நிலை... இந்த மாற்றம்
மகிழ்ச்சிக்கு பதில் வெட்கத்தை தருகிறது.

அனைவரும் இப்படி இல்லை. ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கைகளால்
பெண் இனத்துக்கே அவமானம். தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள
முடியாமல் அப்படி என்ன ஒரு குணம்?? சமீபத்தில் நாளிதழ்
ஒன்றில் படித்ததில் நெஞ்சு குமுறியது.

கணவன் வெளிநாட்டில் இருக்க கணிணி வலைத்தளம் மூலம்
நட்பான ஒருவனுக்காக வெப்கேமராவில் தன்னை துகிலுரிந்து
காட்ட அவன் அதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு
மிரட்ட வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் திருடி
அவனிடம் கொடுத்திருக்கிறாள். அந்தப் பணமும் போதாமல்
வேறொருவனுக்கு தனது புகைப்படங்களைக்காட்டி அதன்
மூலம் பணம் பெற்று தருவதாக செய்தி. என்ன கொடுமை இது
கடவுளே!!

மிஸ்டுகால் கொடுத்து நட்பான ஒருவனுடன் சாட்டிங், போட்டோக்கள்
பகிர்வு என ஒரு பெண் அவதிபட்டதாகவும் படித்தேன். இப்படி
எத்தனையோ வெளியுலகிற்கு தெரியாத பல விஷயங்கள்.
தன்னோடு அலுவலகத்தில் வேலைபார்ப்பவருக்கு
ஃபார்வேர்டு மெசெஜ் அனுப்பி வைக்கும் பழக்கம் ஒரு பெண்ணுக்கு
உண்டு. அந்த சாதாரண ஃபார்வேர்டு மெசெஜ்ஜே அந்த ஆணின்
மனைவிக்கு சந்தேகம் உண்டாக்கி இருவருக்கும் சண்டை
முற்றி விவாகரத்து வரை போய்... இந்தப் பெண் தான்
காரணம் என அலுவலகத்துக்கு சென்று அனைவரின் முன்னிலும்
அவமானப்படுத்தி... போலிஸுக்கு போவதாக மிரட்டி
எல்லாம் நடந்தது.

இந்த மாதிரி விஷயங்களில் திருமணமான பெண்களும்
மாட்டிக்கொள்ளும்பொழுதுதான் பிரச்சனை அதிகமாகிறது.
எனக்குத் தெரிந்து பல சம்பவங்கள் இருக்கின்றன. சம்பந்த
பட்ட கணவன் மற்றும் குடும்பத்தாரின் நிலையை பார்க்கும்
பொழுது பாவமாக இருக்கிறது.
விவாகரத்துக்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்திருக்கிறது.

நமக்கான எல்லை எது என புரிந்து ஆணும்,பெண்ணும்
நடந்து கொண்டால் பிரச்சனையே இல்லை. அல்ப சந்தோஷங்களுக்கு
அடிமை ஆகாமல் ,மனதை அலைபாய விடாமல் நல்ல
நட்பு கொள்ள தெரியாதா??? நட்பிற்கு இலக்கணம் வள்ளுவர்
சொல்லியிருக்கிறாரே!! அவற்றையெல்லாம் மனனப்பகுதி
மதிப்பெண்களுக்காக மட்டும்தான் பள்ளியில் படிக்கிறார்களா?????

பெண்ணை மட்டும் குற்றம் சொல்ல முடியாது!!! இந்த
காலகட்டத்திலும் பெண்ணை அடிமையாக்கி,, பேசி மயக்கி
செய்யும் குள்ளநரிகள் பேச்சுக்கு மயங்குவதைத் தவிர
அவர்கள் செய்யும் குற்றம் வேறொன்றுமில்லை.அது
ஒன்றே அவர்களை எழ விடாமல் செய்து விடுகிறது.
குள்ளநரியின் தந்திரத்தை புரிந்து கொள்ளும் தன்மையை
பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.எந்த காலகட்டத்திலும்
இந்த வகை ஆண்கள் இருப்பார்கள்தான். நாம்தான்
நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதை படிக்கும் பொழுது
சில ஆண்களுக்கு கோவம் வரலாம். நண்பர்களே, நல்ல
உள்ளங்களே உங்களை சாட வில்லை. பொதுவாக
சொல்வது போல சொன்னேன்.

தவறு செய்யும் சில பெண்களால் பெண் சமூகத்துக்கே
அவப்பெயர் வருவது போல சில ஆண்களால் ஆண்
சமூகத்துக்கும் அவப்பெயர் வருகிறது.

ஷாப்பிங் மால்களில்.. ஹோட்டல்களில் டூ வே மிர்ரர்
பயங்கரம், தவறானவர்கள் கையில் இருக்கும் செல்போன்
கேமரா என நம்மை எப்போதும் இரு ஜோடி கண்கள்
உத்து பார்த்துக்கொண்டே இருக்கின்றன என வருத்தப்பட்டுக்
கொள்ளும் சூழலில் தாமகவே வலிய சென்று வம்பை
விலைக்கொடுத்து வாங்கிக்கொள்ளும் அவலம் ஏன்???

மீண்டும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து
கொடுமை படுத்த ஆரம்பித்து விடும் சூழ்நிலை உருவாகிடுமோ
என அச்சம் ஏற்படுகிறது!! இது அனாவசியாமனது என்றும்
சொல்லிவிட முடியாது. அரிதாக கிடைத்த பெண் சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தி களங்கத்தை ஏற்று பரிதவிக்க்கும்
இந்த மாற்றம் தேவைதானா????!!!!

கிடைத்த சுதந்திரத்தை அளவாக உபயோகித்து தக்க வைத்துக்கொள்ள
வேண்டும். பெற்றோர்களும் முக்கிய பங்கு எடுத்து பார்க்க
வேண்டும். தோளுக்கு மிஞ்சிய பிள்ளையை கொஞ்சம்
நோட்டம் வைத்து பார்ப்பதும் நல்லது. பிள்ளை வழிதவறுகினா/ளா
என கண்கொத்தி பாம்பு போல பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய
ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நான் எந்த ஈயவாதியும் இல்லை. ஒரு சாதாரணப் பெண்ணின்
மனநிலையாக இந்தப் பதிவு..


Monday, December 20, 2010

2011ஆம் வருடத்தின் நிறம்!!!!

புதுவருடம் பிறக்க இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன.
என்னவிதமான புதுமைகளை உள்ளடக்கி வருகிறதோ??
ஆச்சரியமும்,எதிர்பார்ப்பும் நம்முள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பிறக்கும் வருடம் எல்லோருக்கும் நல்லதைத் தர வேண்டுமென
பிரார்த்தனைதான் அனைவருக்கும் இருக்கும்.

ஒவ்வொரு வருடம் என் பதிவில் கண்டிப்பாக அந்தந்த
வருடத்தின் நிறத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கலர்களின் ராஜா எனப்படும் [PANTONE] நிறுவனம்
ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து
வெளியிடுகிறது. அது போல பிறக்க இருக்கும் 2011ஆம்
ஆண்டிற்கான நிறம் Honeysuckle. பேரிலேயே தேன் இருக்கிறது.
சர்க்கரை பொங்கலில் தேன் மழைப்பொழிந்தது போல
புத்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும்
என பிரார்த்திப்போம். இனி இந்தக் கலரின் குணாதியசங்களைப்
பார்ப்போம்.





வர்ணங்கள் காட்டும் ஜாலங்கள் எத்தனையோ. ஒவ்வொரு
கலருக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. நாம் அணியும்
நிறத்தைப்பொறுத்து நம் மனநிலையைக்கூட சொல்லிவிடலாம்.

பிரச்சனைகளிலிருந்து தப்பி ஓடாமல் அதை எதிர்த்து
தைரியம், தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும்
தன்மை இந்த இளஞ்சிவப்போடு கலந்த
பிங்க் நிறத்திற்கு உண்டாம்.  பிங்க் என்பதால் பெண்களுக்கு
மட்டுமேயான நிறமில்லை. இந்த  Honeysuckle இருவருக்கும்
பொருத்தமான நிறம்.


கண்ணிற்கு இதமான இந்த நிறத்தை 2011 ஆம் ஆண்டிற்கு
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. மனதிற்கும் இதத்தை
தரும் ஆண்டாக மலர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


டிஸ்கி: இது என் 700ஆவது பதிவு.



Friday, December 17, 2010

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

இன்று வைகுண்ட ஏகாதசி. புதுகையில் இருந்த வரை
ராணிஸ்கூலுக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவில்
செல்வது வழக்கம். வீட்டில் கண்டிப்பாக விஷ்ணு சஹஸ்ர்நாமம்
படிப்போம். முடிந்ததும் கோவிலுக்கு செல்வோம். வரிசையில்
நின்று துளசி மாலையுடன் இறைவனைத் தரிசித்து
சொர்க்கவாசல் வழியாக வெளியே வருவதற்குள் மதியம்
ஆகிவிடும்.



பல சமயம் விரதம் மட்டும். அவ்வாவுடன் சேர்ந்து
பரமபதம் விளையாட்டு. ஒரே ஒரு முறை எதிர் வீட்டினருடன்
சேர்ந்து இரவு கண்விழித்தேன். எப்போதும் ரேடியோவில்
கேட்கும் இந்தப் பாடல் என் ஆல்டைம் ஃபேவரைட்.
பாடியது கானகந்தர்வனாச்சே!!!

SwamiAyyappan-Thir...


திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்குதிருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஉரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணாஇரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஇந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணாதேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயேகணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயேஅனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனிவருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


ஸ்ரீமன் நாராயணாஸ்ரீபதி ஜெகன்னாதாவருவாய்
திருமாலே - துணைதருவாய்
பெருமாளே.


இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கி
அருள் புரியட்டும்!!!!


Thursday, December 16, 2010

நாகவல்லி வந்தாச்சு!!!!!

விக்டரி வெங்கட் நடித்து இன்று வெளிவந்திருக்கும் தெலுகு
ஹாரர் படம் “நாகவல்லி”.. பி.வாசு டைரக்‌ஷனில்
வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் வெங்கடேஷுடன்
6 ஹீரோயின் நடிக்கிறார்களாம்!!!

அனுஷ்கா ஷெட்டி- சந்திரமுகி
ரிச்சா- கொளரி
கமலினி முகர்ஜி- காயத்ரி
ஷ்ரத்தா தாஸ்- கீதா
என லிஸ்ட் நீளுகிறது.



சந்திரமுகியின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்திருக்கிறது.
இன்று வெளியாகி இருக்கும் இந்தப் படம் நல்ல கலெக்‌ஷனைக்
கொடுத்திருப்பதாகவும் 5வருடங்களுக்கு முந்தைய ரஜினியின்
சந்திரமுகி டப்பிங் படத்தின் முதல் கலெக்‌ஷனையும் மிஞ்சி
விட்டதாக சொல்கிறார்கள்.

சந்திரமுகியில் பிரபலமான “லகலகலக” மாதிரி இதில்
வெங்கடேஷ் ”அவுர அவுரா” என கலக்கியிருக்கிறாம்!!!



இந்த மாதம் தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய
விக்டர் வெங்கி என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும்
வெங்கடேஷ் இந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என்கிறார்!!
பொறுத்திருந்து பார்ப்போம். பாடல்கள் கொடுத்திருக்கிறேன்.




Monday, December 13, 2010

கலக்கல் போட்டோக்கள் செய்யலாம் வாங்க!!!!

இப்ப எல்லாம் டிஜிட்டல் போட்டோக்கள்தான் நிறைய்ய.
இணையம் உதவியோட அந்த போட்டக்களை விதம்விதமா
செஞ்சுக்கலாம்.

ஒரு புத்தகத்தின் கவர் போட்டோவா நம்ம போட்டோ
எப்ப வரும்னு யோசிச்சிருப்போம். நாமளே அந்த மாதிரி
செஞ்சுக்கலாம். எப்புடி??? அதை வாங்க பாப்போம்.

  இந்த மாதிரி போட்டோக்கள் வலைத்தளங்களின்
உதவியோடு தயார் செய்வது எப்படின்னு பாப்போம்.

இந்த வலைத்தளத்தில் போய் நமக்கு பிடித்த டிசைனை





செலக்ட் செய்து நம் புகைப்படத்தை அப்லோட் செய்தால் நிமிடத்தில்
படம் ரெடியாகி விடும். கணிணியில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.




அடுத்து கவர் போட்டோ.  Fake magazine cover   
எனும் இந்தத்தளத்துக்குப்போய் புகைப்படத்தை அப்லோட்
செய்து நமக்குப்பிடித்த நாழிதழின்(ஆங்கில இதழ்கள்)
முகப்பில் வரும்படி செய்துக்கொள்ளலாம்.


நீங்களும் செஞ்சு பார்த்து சொல்லுங்க. (தெரியாதவங்களுக்குத்தான்
இந்தப் பதிவு. தெரிஞ்சவங்க இதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு
திட்டாதீங்க :)) )


Friday, December 10, 2010

வீடு பாக்கலாம் வாங்க!!!

வீட்டின் நுழைவுவாயிலில் வரவேற்கும் கணேசர்.
இருக்கும் இடத்தை சரியாக உபயோகித்துக்கொள்ள
திட்டமிட்டு செய்திருக்கிறேன்.




ஹாலிலிருந்து டைனிங் ஹாலுக்குச் செல்லும் பாதையில் இருந்த
இடத்தில்show case.  அதனால்show case  க்கு என்று தனி இடம்
தேவைப்படாமல் பொருத்தமாக அதே சமயம் இடைஞ்சல்
இல்லாமல் அமைந்திருக்கிறது.

கட்லரி யூனிட்.




கிச்சனில் மட்டும் எத்தனை இடமிருந்தாலும் போதாது.:))
அதனால் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் மற்றும் தேவையான
இடத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஐலண்ட்.
இது என்னம்மா என்று கேட்டாள் அம்ருதம்மா. இதற்கு
பெயர் ஐலண்ட் என்று சொன்னதற்கு. அப்ப இந்த ஐலண்டிற்கு
என்ன பெயர்னு சொல்லவா??? என்றாள். என்ன பெயர்
வைத்திருப்பாள்??? எனி கெஸ்!!! :)))

அதே தான் ஸ்ரீலங்கா :))) மறக்க முடியவில்லை!!!!


மேலும் படங்களுக்கு இங்கே சென்றால் பார்க்கலாம்.

படங்களை பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க

Thursday, December 09, 2010

இந்தக்கொடுமையை நான் பாத்தேன்!!!!

ரொம்ப ஆசை ஆசையாய் எதிர் பார்த்து ரொம்ப சர்ப்ரைஸா
டிக்கெட் புக் செஞ்சு தியேட்டருக்கு போனோம். ஆஹா
அந்தக்காலம். பேகி பேண்ட்... 70களில் நடந்தது போல
இருக்கும் படம்னெல்லாம் பேசிகிட்டாங்களேன்னு ரொம்ப
எதிர் பார்ப்போட உக்காந்திருந்தேன். Action replay படம்.

கொடுமைன்னாலும் கொடுமை மஹா கொடுமை அது!!!
ஐஸ்வர்யா ராயும் அக்‌ஷ்யகுமாரும் கணவன் மனைவிகள்
அப்படின்னு சொல்வதற்கு பதில் எலியும் பூனையும்னு
சொல்லலாம்!!! எடுத்ததெற்கெல்லாம் சண்டை போடும்
ரகம். இவங்க மகனுக்கு இதனாலேயே கல்யாணம்னா
வெறுப்பா இருக்கு.

தன்னை விரும்பும் பெண்ணோட தாத்தா கண்டு பிடிச்ச
டைம்மிஷினில் போய் தன் அப்பா அம்மா கல்யாணத்தை
லவ் மேரேஜ்ஜா மாத்துறார். திரும்பி வந்து பாக்கும் பொழுது
இருவரும் சந்தோஷமான தம்பதிகளா இருக்காங்க. இவரும்
கல்யாணத்துக்கு ஒத்துக்கறாரா. கஷ்டம்!!!!



Churake Dil Mera அப்படின்னு அக்‌ஷ்ய் பாடி ஆடின காலத்திலேர்ந்து
நான் அவரோட ஃபேன். அப்புறம் அக்‌ஷயை ரொம்ப பார்க்க
முடிஞ்சதில்லை. சிங் இஸ் கிங் இப்படி சமீபமா நல்லா ஹிட்டான
படங்கள் கொடுத்திருக்காரு. ரொம்ப நாளைக்கப்புறம் நடிப்பை
பாக்கலாம்னு போனதுக்கு பல்புதான் கிடைச்சது. ஹோட்டலில்
வெயிட்டரா இருந்து, கராத்தே உதவியோட பாலிவுட்டில் நுழைஞ்சு
தனக்குன்னு ஒரு இடத்தை தக்க வெச்சிருந்தாலும் இந்தப் படம்
செம பல்பு. ஐஸ்வர்யா ராய் அடாவடி கேரக்டர். ஓம்பூரி, கிரோன் கெர்
எல்லோரையும் வேஸ்டாக்கிட்டாங்க. அந்தக்கால பூனைக்கண் அழகர்
ரண்தீர் கபூரை வேஸ்ட் கேரக்டர் கொடுத்து ரீ எண்ட்ரி தந்திருக்காங்க.

கட்டா மீட்டான்னு ஒரு படம். கொஞ்ச நேரம் பாத்துட்டு ஆஃப் செஞ்சிட்டேன்.
நல்ல வேலை தியேட்டருக்கு போகாம ஃப்ரெண்ட் கொடுத்த சீடியில
பாத்தேனோ தப்பிச்சேன். த்ரிஷா இப்படி ஒரு படத்துல அறிமுகம்.
ஆனா இந்தப் படத்துல அக்‌ஷயோட நடிப்பை குறை சொல்ல முடியாது.
கதைதான் ஜவ்வுமாதிரி இழுக்குது.
ஆக்‌ஷன் ரீப்ளே படத்துல வரும் இந்தப் பாட்டு மாதிரி
படம் பாக்கப்போறவங்களுக்கு “ஜோர் கா ஜட்கா”தான்னு சொன்னதை
புரிஞ்சிக்காம படம் போக்க போனோமேன்னு என்னை நானே
நொந்துக்கறேன்.

இந்த வருடத்தில் நான் பார்த்து நொந்தப் படம் எனும் சிறப்பை
இந்தப் படம் பெறுகிறது. :(((









மாதங்களில் டிசம்பர்!!!!

மாதங்களில் மார்கழியாக இருப்பதாக கண்ணன் சொன்னான்.
எனக்கு மிகவும் பிடித்தது மாதம் இந்த டிசம்பர். என் திருமணம்
நடந்தது,அயித்தானுடன் ஹைதைக்கு வந்து சேர்ந்தது, ஆஷிஷுடன்
முதலில் ஹைதைக்கு வந்திறங்கியது என பல நினைவுகள் இந்த
மாதம் எனக்குத் தந்திருக்கிறது.

அயித்தானுக்கும் டிசம்பர்தான் ஆகிவந்த மாதம்:)) அவர்
ஹிந்துஸ்தான் லீவரில் சேர்ந்தது, இலங்கைக்கு நாங்கள் கிளம்பியது
என எல்லாம் இந்த மாதம் தான். டிசம்பர் ””ஸோ ஸ்பெஷல்””
மாதம்.

டிசம்பர் 15தேதிக்கு மேல் மார்கழி பிறந்து குளிர் ஆரம்பிக்கும்.
இங்கே ஹைதையில் அக்டோபர் இறுதிக்கே துவங்கிவிடும்
என்றாலும் இப்போது பற்கள் கிடுகிடுக்கும் நிலை.
இதமான வெயிலுடன் கூடிய அருமையான தட்பவெட்பம்.
வண்டியில் செல்லும்போது முகத்தில் அறையும் குளிர் காற்று.....
சீசனுக்கு தகுந்த பழங்கள் வரிசையில் தற்போது கொய்யாக்காய்.
அப்படியே நறுக்கி உப்பு, கொஞ்சமாய் மிளகாய்த்தூள் சேர்த்து
சாப்பிட்டால்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))))

இலங்கை சென்றதும் ஒரு டிசம்பர் மாதத்தில்தான். மரங்கள்
செடிகள் எல்லாம் விளக்கொளியில் ஜொலி ஜொலிக்கும்.
கிறிஸ்துமஸிற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் துவங்கி
அருமையாக இருக்கும். ஊர் மொத்தமும் விளக்கொலியில்
ஜொலிப்பது போலிருக்கும். அங்கேயும் குளிர் அதிகம்தான்.
அப்படிப்பட்ட ஒரு குளிர் நிறைந்த பொழுதில் நாங்கள்
நால்வரும் கொழும்புவிலிருந்து 2 மணிநேரத் தொலைவில்
இருக்கும் "BENTOTA" போய்க்கொண்டிருந்த பொழுது
எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனி...


இந்த டிசம்பர் மாதத்தில்தான் நாங்கள் 4 அல்லது 5 குடும்பங்கள்
சேர்ந்து வண்டி எடுத்துக்கொண்டு கதிர்காமம் செல்வது
பழக்கம். முதன் முதலில் சிங்கப்பூர், மலேசியா சென்றதும்
இப்படி ஒரு டிசம்பரில்தான்.

புதுகை கீழ3ஆம் வீதியில் நாங்கள் குடியிருந்த வீட்டில்
டிசம்பர் பூக்கள் பூக்கும். இல்லை இல்லை பூத்துக் குலுங்கும்.
அவர்கள் அதை விற்பார்கள் கூட. பிங்க்,நீலம், இராமர் கலர்,
மஞ்சள் என வகை வகையாய் இருக்கும். முதல் நாள்
சாயந்திரமே மொட்டுக்களை பறித்து தொட்டி முற்றத்தில்
துணி பரத்தி போட்டு வைத்துவிடுவார்கள். காலையில்
அரும்பி இருக்கும். காலையிலும் நிறைய்ய பூ பறிக்க
வேண்டி இருப்பதால் இப்படி செய்வார்கள்.ஆனால் ஒரு பூ கூட
நான் வைத்துக்கொள்ள மாட்டேன். வாசமில்லா மலருக்கும்
எனக்கும் சம்பந்தமே இல்லை.:))


பாசமிகு அவ்வாவை இழந்தது இப்படி ஒரு டிசம்பரில்.
நோய்வாய்ப்பட்டிருந்த என் மாமியார் இறைவனிடம் சேர்ந்ததும்
10 வருடங்களுக்கு முந்தைய டிசம்பரில்தான்.

இப்படி ஒரு டிசம்பரில்தான் நெல்லூரிலிருந்து மாமா போன்
செய்து இலங்கையில் பூகம்பமாமே!! பத்திரமா இரும்மா!!
என்றது. மாமா சொல்லும் வரை இலங்கையில் சுனாமி,
பூகம்பம் எதுவும் தெரியாது. அன்று காலைதான் அயித்தான்
இந்தியாவுக்கு பயணமானது.நான் தம்பி மற்றும் குழந்தைகள்
தனியாக இருந்தோம். இந்த ட்ராக்கிலிருந்துதான் ரயில் ஒன்று
அடித்துச் செல்லப்பட்டு அதில் இருந்த மக்கள் அனைவரும்
இறந்ததும். வலது பக்கம் கடல், நடுவில் கார் செல்லும் சாலை,
இடதுபக்கம் ரயில் என நான் பலமுறை ரசித்த இடம் இது. :((



வெள்ளவத்தையிலிருந்து சுனாமியின் ஆட்டமும் இதன்
விளைவுகள் இருப்பதாகச் செய்தி. நாங்கள் இருந்த
இடத்தில் எந்த பிரச்சனை இல்லை என்றாலும் நீரின்
அளவுக்கூடிக்கொண்டே இருப்பதாகவும், அதுவும்
ஏர்போர்டுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் ”கெளனிய”
பிரிட்ஜ்க்கு அடியில் ஓடும் நதியில் நீரின் வரத்து அதிகமாக
இருப்பதால் ஏர்போர்ட்டுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படலாம்
என்றும் செய்தி கேட்டு ஒரே பீதியானது. டிக்கெட் கிடைத்தால்
அடுத்த ஃப்ளைட்டில் இந்தியா வந்துவிட நினைத்துக்கொண்டிருந்தேன்.
கடைகளில் பால்பவுடர் கூட கிடைக்கவில்லை. இருந்தவற்றை
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களாக இங்கிருந்தவர்கள்
வாங்கி அனுப்பிக்கொண்டிருந்ததால் ஸ்டாக் இல்லாமல்
போயிற்று. 2 நாளில் நிலமை சரியானது. அப்போது அஞ்சா
நெஞ்சமாக தனியாகவே சமாளித்தேன்.


triton எனும் ஹோட்டலை
சூரையாடியிருக்கிறது சுனாமி. :(( இது போல் எத்தனையோ
அழிவுகள் அப்போது. நெஞ்சை விட்டு நீங்காத கொடுமை அது.


இந்த வருடம் கிறிஸ்துமஸ் மரம் வைத்தாயிற்று.
இந்த மரத்தை வைக்கும் பொழுது மனதுக்கு ரொம்பவே
இதமாக உணர்கிறேன்.அடுத்த முறை பெரிய மரமாக
வாங்க வேண்டும் என அம்ருதம்மா சொல்லியிருக்கிறார்.:))

எட்டு வருடங்களுக்கு முன் அண்ணனும் தங்கையும் கொழும்பு
கலதாரி ஹோட்டல் லாபியில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ்
மரத்துக்கு முன்பு.



ஹாலிடே ஜாலிடே சீசன் என்பதால் இந்த சீசனில் சீசனல்
மூவீஸ் பார்க்க ரொம்ப இஷ்டம். அதுவும் என் ஆல்டைம்
ஃபேவரைட் ஹோம் அலோன்.




கொள்ளையடிக்க வரும் திருடர்களுக்கு ஆட்டம் காட்டும்
இடம் ரொம்பவே நன்றாக இருக்கும்.அந்தத் திருடர்கள்
இருவருக்கும் ஷாக் அடிப்பது, நெருப்பு பிடித்துக்கொள்வது
என சூப்பராக இருக்கும். ஹோம் அலோன் 1,2,3,4
இவற்றில் 2,3,4 இவையே எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.


ஐ லவ் டிசம்பர்.

Wednesday, December 08, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க- நிறைவுப்பகுதி

பார்ட்டி முடிஞ்சதும் செகண்ட் கோட் பெயிண்ட் அடிக்க
சொல்லியிருந்தேன். நவம்பர் 27 புதுவீட்டுக்கு சாமான்
சிப்டிங் அப்படின்னு திட்டம் போட்டாச்சு. இவங்களை
இப்படியே விட்ட என் திட்டம் நிறைவேறாது. ஆகவே
தினமும் இங்கேயே வந்து தங்கி வேலை வாங்கினேன்.

கண்ணாடிக்கதவுகளை ஃபிட் செய்ய திங்கள்கிழமை
வரச்சொல்லியிருந்தேன். ஆளைக்காணோம்!!! மரவேலைகளுக்கு
பாலிஷ் போட வரும் ஆளையும் காணோம். இருவருக்கும்
போன அடிச்சு அடிச்சு கைதான் வலிச்சிச்சு. :(( புதன் கிழமை
காலையில் வருவதாக சொன்னாங்க. நான் வந்து
உக்காந்திருந்தேன். அவங்களைக்காணோம்.

பாத்ரூம் கம்மோட் ஃபிட் செய்ய 3 நாள் ஆகும்னு
வியாழக்கிழமை வந்த ப்ளம்பர் சொன்னார்.
பீபீ ஏற ஆரம்பிசிச்சு. அன்னைக்கு வந்த பாலிஷ் காரர்
கையில சாமான் ஏதும் கொண்டு வராம அட்வான்ஸ்
பணம் கொடுங்கன்னு கேக்க நல்லா காய்ச்சு காய்ச்சின்னு
காய்ச்சி,”நாளைக்கு வா வேலையை முடி, பணம் தரேன்னு”
கத்தி அனுப்பினேன். கண்ணாடிக்கதவுகள் வந்து வெச்சாங்க.

இங்கே ஹைதையில் ஒரே ஒரு பிரச்சனை அது இங்கே
இருப்பவர்கள் “லேட் லத்தீபுகள்”. மெல்ல 12மணிக்குத்தான்
வேலையை ஆரம்பிப்பாங்க. மால்கள் கூட 11 மணிக்குத்தான்
திறக்கும்.ப்ளம்பர் டைல்ஸை உடைச்சு மட்டும் வெச்சிட்டாரு.
“கல் ஆகே ஃபிட் கரேங்கே மேடம்”(நாளைக்கு செய்யறாராம்)
அப்படின்னு போயிட்டாரு. நல்ல வேலை கீயிசர் வெச்சிட்டாரு.
12 மணிக்கு வந்து வேலை ஆரம்பிச்சா எப்ப
முடியும்? வெள்ளிக்கிழமை இரவாகியும் பாலிஷ் வேலை
முடியலை. ”இன்று போய் நாளைவா!!””ன்னு அனுப்பி
வெச்சிட்டு வீட்டுக்கு வந்து கட்டையை சாச்சதுதான் தெரியும்.

அடுத்த நாள் சனிக்கிழமை சாமான் எடுக்கறோம். காலேலியிருந்து
பேக்கிங் நடக்குது. அதுக்குள்ள அயித்தானும் பிள்ளைங்களும்
புத்தகங்களை கொண்டு போய் வெச்சிட்டு வந்தாங்க.
10.30மணிக்கு ”அமாலி” சாமான் எடுப்பவங்க வந்தாங்க.
4 பேர் சொல்லியிருந்தோம். 3 பேர்தான் வந்திருந்தாங்க.
பாலிஷ்காரங்க காத்திருப்பதா சொல்லவும் நானும் அம்ருதாவும்
கிளம்பி அங்கபோக கீழே வந்தா சின்னதா ஒரு ஆட்டோ நிக்குது.
நாங்க கேட்டிருந்ததோ பெரிய லாரி. ஒரே லாட்டுல அடிச்சிடலாம்னு!!

என்னய்யா??ன்னு கேட்டா,”ஹிஹி... அந்த லாரி வேற இடத்துக்கு
போயிருக்குன்னு!” சொல்ல இனி கத்தி ஒண்ணும் செய்ய முடியாது,
வேலை முடியனும்னு சாமானை ஏத்தி கொண்டுவந்தாங்க. 4 ட்ரிப்
தான் அடிச்சாங்க. ஆனா அதுக்கே சாயந்திரம் 5 மணி ஆக்கிட்டாங்கன்னா
எம்புட்டு நல்ல காரியக்காரங்கன்னு பாருங்க. :((

4 மணிவரைக்கு சோறு கூட சாப்பிடலை. நானும் அம்ருதாவும்
இங்கே, ஆஷிஷுஅயித்தானும் அங்கே!! எங்க சாப்பிட?
அப்புறம் 3ஆவது ட்ரிப்பின் போது அயித்தான் பாவ்பாஜி
வாங்கிட்டு வந்து கொடுக்க எல்லோரும் சாப்பிட்டோம்.
சக்ஸச்ஃபுல்லா கம்மோட் ஃபிட் செஞ்சிட்டாரு ப்ளம்பர்.
“ஷாம் தக் யூஸ் கர் சக்தே ஹே” அப்படின்னு சொல்ல
7.45மணிக்கு பழைய வீட்டுக்குப்போய் ஹீட்டர் போட்டு
குளிக்கலாம்னு போனா ட்ரான்ஸ்பார்மர் ஒண்ணு வெடிச்சு
நோ கரண்ட். :)) அரைமணிநேரம் வெயிட் செஞ்சு குளிச்சு
ஃப்ரெஷ்ஷாகி திரும்ப கொஞ்ச சாமான் எடுத்துகிட்டு புது
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, கட்டையை அப்படி சாச்சோம்.

அடுத்த நாள் காலையில் எழுதிருக்கவே முடியவில்லை.
பசங்க பாவம். அதுவும் ஆஷிஷும் அம்ருதாவும்
மேலே ஏறி இறங்கி கால் ஒரே வலி. அடுத்தநாள்
முதல் பசங்க ஸ்கூலுக்கு போய் ஆகணுமேன்னு
நல்லா ரெஸ்ட் எடுக்க வெச்சேன். அந்த வீட்டைப்போல
ரெண்டு பேருக்கும் பஸ் வீட்டு வாசலிலேயே வருது.
அதைவிட குஷி காலையில் 30 நிமிடம் எக்ஸ்ட்ராவா
கிடைக்குது பசங்களுக்கு. அங்கே காலைல 7 மணிக்கு
பஸ். இங்கே 7.30க்குத்தான்.:))

அஷ்ட கஷ்ட பட்டாலும் சொந்த வீட்டுல இருப்பது
ஒரு சுகம். எதுவும் சுலபமா கிடைச்சிட்டா அதோட
அருமை தெரியாதுன்னு சொல்வாங்க. இந்த் வீட்டோட
அருமை பசங்களும் நல்லாவே உணர்ந்திருக்காங்க.
இன்னமும் சின்னச் சின்ன வேலைகள் பாக்கியிருக்கு.
மொத்த அப்பார்ட்மெண்ட்டில் எங்களையும் சேர்த்து
இரண்டு குடும்பம்தான் வந்திருக்கு. பெயிண்ட், வார்னிஷ்
வாசம்... சில ப்ளாட்டுகளில் டும் டும்னு மரவேலை
நடக்கும் சத்தம்... எல்லாவற்றுக்கும் இடையில்
வாழ துவங்கி 11 நாள் ஆயாச்சு.

HOME SWEET HOME!!!!


Tuesday, December 07, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-4

நவம்பர் 20 சனிக்கிழமை நட்புக்களை கூப்பிடத்திட்டம். ஆனா 14ஆம் தேதி
வரை சுவத்துக்கு பெயிண்ட் கூட அடிக்கலை!!! இப்படியே
விட்டா சரியா வராதுன்னு வூட்டுல சமைச்சு வெச்சிட்டு
காலேலியே புதுவீட்டுல போய் உக்காந்து சூப்பர்வைசர்
வேலை பார்க்க ஆரம்பிச்சேன். எனக்கு இப்ப ஆளை அனுப்பறீங்களா?
இல்லையான்னு பில்டர் கிட்ட சண்டைப்போட்டு திங்கள்கிழமை
பெயிண்ட் அடிக்க ஆரம்ப வேலை நடந்துச்சு. மதியம் சாப்பாட்டுக்கு
அயித்தான் வந்து அழைச்சுகிட்டு போய் திரும்ப கொண்டு வந்து
விடுவாரு. பசங்க ஒரு சாவி எடுத்துக்கிட்டு போய் தானே திறந்து
வீட்டுக்கு வருவாங்க. வீட்டுல துணி காயப்போட்டு, மடிச்சு
பாத்திரம் கவுத்துன்னு பசங்க செஞ்சு எனக்கு டீயும் போட்டு
வெச்சாங்க. தினமும் இதே கதைதான். பாவம் பசங்க
இரண்டு பேரும் உதவி செய்யத்தான் எங்களால மேனேஜ்
செய்ய முடிஞ்சது. குட்டீஸூங்களுக்கு அன்பு முத்தங்கள்.

இங்க வேலை முடிஞ்சதும் ஒரு 6.30மணிக்கு அயித்தான் வந்து
என்னியக்கூட்டிகிட்டு போவாரு. அடுத்த நாளிலிருந்து சோத்தையும்
கட்டி எடுத்துகிட்டு வந்து அங்கயே உக்காந்திட்டேன். வீட்டுக்கு
போனா அந்த நேரத்துல இவங்க எஸ்ஸாகிடறாங்க. அவங்க தடுக்குல
பாஞ்சா நான் கோலத்துல பாயற ஆளாச்சே!!! :))
கறாரா நின்னு சண்டை போட்டு, பேசி பேசி முதல் கோட்டிங்
பெயிண்டிங் முடிச்சாச்சு,( அந்த தைரியம் வந்தப்புறம் நண்பர்களை
விருந்துக்கு அழைச்சோம்.வேலை முடியாட்டி அப்புறமா பாத்துக்கலாம்னு
திட்டம்) பில்டர் சொன்ன மாதிரி 3 நாளில் எல்லாம் வீடு
ரெடியாகாது. முதல் கோட்டிங் பெயிண்டிங் முடிஞ்சு இரண்டு
நாள் கழிச்சு லப்பம், பட்டி பாத்து அப்புறம் உப்புத்தாள் வெச்சு
தேச்சு அப்புறம்தான் செகண்ட் கோட்டிங்.

ஃபேன்,லைட் எல்லாம் பக்கத்துலேயே இருந்து வெச்சோம்.
எங்க பில்டர் தரப்பு எலக்ட்ரீஷியனுக்கு வேலையே தெரியாது
போல. அவர் கன்னா பின்னா கனெக்‌ஷன் கொடுத்துவெச்சிருக்க,
பத்தாதக்கு எங்க இண்டீரியர் டெக்கரேட்டர் தரப்பு எலக்ட்ரீஷியனும்
தன் இஷ்டத்துக்கு வேலை பாக்க அதை சரி செய்ய வந்தாளு
தலையை பிச்சிக்கினு வேலையை பாத்ததானல சாதரண ட்யூப்
லைட் ஃபிக்சிங் கூட இரண்டு நாள் இழுத்துச்சு. கிச்சன்,
பசங்க புத்தக அலமாரி, டைனிங் ஹால் யூனிட் ஆகிய இடத்துல
கண்ணாடி கதவுகள் வைக்கணும். இந்தோ வர்றேன் அந்தோ
வர்றேன்னு அந்த ஆளு வரலை. சனிக்கிழமை காலேல
கொண்டு வந்து வைக்கறேன்னு சொன்னாரேன்னு அங்க போய்
12 மணி வரைக்கும் நிக்கறோம். ம்ஹூம்... வண்டி கவுந்திடிச்சு,
குடை சாஞ்சிடிச்சுன்னு சொல்லிட்டாரு.

அந்தக் கண்ணாடிகள் வெச்சப்புறம்தான் அழகே கூடுதலா இருக்கும்.
அது இல்லாமலே பார்ட்டி. 7.30மணிக்கு பார்ட்டின்னா நானும்
அயித்தானும் 6 மணி வரை புதுவீட்டுலேயே இருக்கோம்.
வீடு க்ளீனிங் எல்லாம் நடக்கணுமே!! அப்புறமா வீட்டுக்குப்போய்
ஃப்ரெஷ்ஷாகி ஓடி வந்தோம்.

இரவு 12 மணி வரை நண்பர்களோட கலகலன்னு இருந்துச்சு
வீடு. எல்லோருக்கும் வீடு பிடிச்சிருந்துச்சு. கல்யாணப்பொண்ணு
மாதிரி நல்லா அலங்காரமா இருக்கு!!! வீடுன்னு ஒருத்தங்க
சொன்னாங்க. ஒரு கல்யாணம் செய்வதும் வீடு கட்டிப்பாப்பதும்
சமமா ஏன் பெரியவங்க சொன்னாங்கன்னு நல்லாவே புரிஞ்சது.
தலைப்பை கொண்டுவந்தாச்சுன்னா முற்றும்னு நினைக்கறீங்களா!!
அதான் இல்ல. இதக்கப்புறம் என்ன நடந்துச்சு????
அடுத்த பதிவுல. :))



Monday, December 06, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-3

சாமான்களை கண்ட இடத்தில் போட்டுவெப்பதை விட அதை நேர்த்தியா
அழகா எடுத்து வெச்சாலே ஒரு அழகு கிடைக்கும். அதே போல இருக்கும்
இடத்தை சம்யோசிதமா உபயோகிச்சு, சின்ன இடத்தையும் பெரிதாக
காட்டும் மாயாஜாலத்தை INTERIOR DECORATION மூலம் செய்யலாம்.
கப்போர்ட் செய்வதானால் கூட அதை எந்த இடத்தில் சரியான
லைட்டிங்க் விழுவது போல செஞ்சு வெச்ச அந்த இடமே அமர்க்களமா
இருக்கும். இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதுன்னு வெச்சுக்கலாம்.
அதனாலேயே சொந்த வீட்டை ஒரு நல்ல டெகரேட்டர் வெச்சு
வடிவமைக்கணும்னு ஆசை. இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை
செலவு செய்யும் சமாச்சாரம்.

அந்த எண்ணத்தில்தான் அவங்க கிட்ட அந்த வேலையைக் கொடுத்தேன்.
ஆகஸ்ட் 16ம் தேதியே பீம் போட அரம்பிச்சு ஆகஸ்ட்30 வயரெல்லாம்
தொங்க்கினு இருந்துச்சு. என் கிட்ட அவங்க சொன்னது செப்டம்பர்1
ஆம் தேதியிலேர்ந்து கிச்சன் வேலை ஆரம்பமாகிவிடும். அக்டோபர்
15க்குள் வீடு ரெடியாகிடும் என்பது திட்டம். கிரஹப்ரவேசம் முடிஞ்சு
அசதியானதுல கொஞ்சம் கண்டுக்காம இருந்திட்டேன். செப்டம்பர்
4 தேதி வாக்கில் வீட்டுக்குப்போய் பார்த்தா??!! வீடு அப்படியே இருக்கு.
எந்த ஒரு வேலையும் நடக்கலை. மெட்டீரியல்ஸ் வாங்க பணம்
வேணும்னு கேட்டிருந்தாங்கனு சொல்லி கொடுத்திருந்தோம்.
”லேபரர்ஸ் ஊருக்கு போயிருக்காங்க, வந்த உடன் வேலை ஆரம்பமாகும்னே!”
சொல்லிகிட்டு இருந்தாங்க. அந்த ஆளு ஊருக்குப்போனவன் வரவே இல்லை. :((

செப்டம்பர் 20 தேதி ஆகியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனக்கு
செம டென்ஷன். இவங்களை நம்பி அக்டோபர் கடைசியோட வீட்டைக்
காலி செய்வதா சொல்லியாச்சு. ஆரம்பிச்ச பிறகு வேற ஒருத்தர் கிட்ட
போகவும் முடியாது. பாதியில நின்ன வேலைன்னு தெரிஞ்சா புதுசா
வரும் ஆளு அதை லாபம் ஆக்கிக்க பாப்பான். தவிர பெருந்தொகை
கொடுத்தாச்சு. ”என்னங்க இப்படி ஆச்சு? ஒரு வேலையும் நடக்கலை!
அப்படின்னு கேக்க அவங்க டென்ஷன் ஆகிட்டாங்க. ”லேபரர் ஓடிப்போனா
நான் என்ன செய்ய??!!” அப்படின்னு சொல்ல நல்லா காய்ச்சிவிட்டோம்.

சரின்னு மரவேலையை ஆரம்பிச்சாங்க. கட கடன்னு சமையற்கட்டு,
மற்ற இடங்கள் ஆரம்பமாச்சு. அப்பவும் ஃபால்ஸ் சீலிங் ஆள் வரலை.:((
இண்டீரியர் டெகரேஷன்ல ஒரு வேலைக்குப்பின்னாடி ஒரு வேலைன்னு
தொடர்ச்சியா இருக்கணும். ஒரு வேலை முன்ன பின்ன ஆனாலும்
மத்த வேலை சரியா இருக்காது. உதாரணமா: ஃபால்ஸ் சீலிங் முடிச்சு,
உப்புத்தாள் வெச்சு தேப்பாங்க. அப்புறம் தான் லப்பம் பட்டி பாத்து
பெயிண்ட் அடிப்பாங்க. அப்புறம் அழகா லைட் வெக்க குடைஞ்சு
லைட் ஃபிட்டிங்.அப்புறம் எலக்ட்ரீஷியன் வந்து கனெக்‌ஷன் கொடுக்கணும்.
இதெல்லாம் நடக்காம மரவேலை ஆரம்பிச்சா!! மரவேலைகளின் மீது
பவுடர் தூள்கள் விழுந்து நாசமாகும். ஆனா எனக்கு இப்படித்தான்
நடந்துச்சு. மரவேலைகள் முடிக்க 10 நாள் இருக்கும்பொழுது
ஃபால்ஸ் சீலிங் வேலை செஞ்சாங்க. மரவேலைகளின் மீது
பேப்பர் போட்டு முடுங்கடா தம்பிகளான்னு!! பேப்பரைக் கொடுத்தும்
அதை அப்படியே போட்டுட்டு அவங்க பாட்டுக்க அவங்க வேலையை
செஞ்சுகிட்டு இருந்தாங்க.

ஃபால்ஸ் சீலிங் காரங்க வேலை முடிஞ்சு அது காய 1வாரமாவது
டைம் கொடுக்கணும். என் நேரம் வருண பகவான் ரொம்பவே
ஆனந்தமா ஆட்டம் போட்டுகிட்டு இருந்தாரு.அதனால வேற
லேட்டாகிடிச்சு.

கீழேயெல்லாம் பெயிண்ட். இந்த லட்சணத்துல தரையை பாலிஷ்
செய்யும் ஆளு மிஷினை வேற இடத்துக்கு எடுத்துகிட்டு போகணும்னு
உடனே வேலையை முடிக்கணும்னு சொல்ல அந்தக் கூத்தும்
நடந்துச்சு. அந்த பாலிஷ் தண்ணி மரவேலைகளின் மீது தெறிச்சு
அதை சுத்தம் செய்வதுன்னு அது ஒரு சோகக்கதை.
இதுக்கு நடுவுல தசராவுக்கு ஊருக்குப்போன ஆளுங்களும் திரும்ப
வரலை. மரவேலைக்காரங்களை எங்கயும் போகவிடாம எங்க
வீட்டுலேயே தங்க வெச்சு வேலை நடக்குது. அவங்க வேலை
நடக்கும் இடத்திலேயே சமைச்சு சாப்பிட்டுக்கிடு இருந்தாங்க.
அதனால அந்த வேலை மட்டும் சுறுசுறுப்பா போய்க்கினு இருந்துச்சு.
தசராவுக்கு புதுவீட்டுக்கு போகமுடியாதுன்னு புரிஞ்சதும்
வீட்டு சொந்தக்காரரிடம் 2 மாசம் எக்ஸ்டண்ட் செஞ்சுகிட்டோம்.
ஆனா வேலைக்காரங்க கிட்ட நவம்பர் 4 கடைசி தேதி. அதுக்குள்ள
எல்லோரும் வேலையை முடிச்சு வெளியே போனாத்தான்,
பில்டர் பெயிண்டிங், பாத்ரூம் ஃபிக்சிங், எல்லாம் செய்வாரு
அப்படின்னு சொன்னோம். பில்டர், இவங்களை வெளியில அனுப்பிட்டு
”எனக்கு 4 நாள் டைம் கொடுங்க நான் வீடு ரெடி தர்றேன்னு”
நம்பிக்கை வார்த்தை சொன்னாரு.

தினமும் நானும் அயித்தானும் புதுவீட்டுக்குப்போய் ஒரு விசிட்
அடிப்பதுன்னு வெச்சிருந்தோம். சில சமயம் நான் 11 மணிக்கு
கிளம்பிப்போய் மதியம் வரை இருந்து வேலை வாங்கிட்டு
வருவேன்.

நடுவுல இண்டீரியர் டெக்கரேட்டரோட பொண்ணுக்கு (இஞ்சினியரிங்
படிக்கற பொண்ணு) வைரல் ஃபீவர் வந்திருச்சுன்னு அவங்க
டென்ஷனாகி வீட்டை சரியா கவனிக்கலை. வேலை சரியா
நடக்கலையேன்னு எங்க கவலை. அவங்களே மெட்டீரியல்ஸும்
பாத்துகிட்டதனால பணம் கொடுக்கனும், பணம் கொடுக்கணும்
போன் போடுவாங்க. வேலை சரியா நடக்காம பணம் மட்டும்
கேக்கறாங்களேன்னு பயங்கர கோபம். அதுல கொஞ்சம் தகராறு.
அப்புறம் அவங்க பொண்ணுக்கு சரியானதும் கொஞ்சம் ரிலாக்ஸ்டானாங்க.


ஹேண்டில் வாங்குவது, விளக்குகள் வாங்குவதுன்னு ஹோல்ஸேல்
கடைக்கு அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேன். துணைக்கு இண்டீரியர்
டெக்கரேட்டர் அம்மாவும் வந்தாங்க. திரும்ப திரும்ப அவங்க கிட்ட
ஒரே ராமயணம் பாடிக்கிட்டு இருந்தோம். நவம்பர் 10ஆம் தேதிக்குள்ள
வீடு கொடுத்திருங்க. எங்களுக்குமத்த வேலையிருக்குன்னு கிளிப்பிள்ளைக்கு
சொல்ற மாதிரி சொல்லிகிட்டே இருந்தோம்.

”பணம் பணம்” அப்பப்பா இந்த வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு
வருது இப்ப. அட்வான்ஸா பணம் கொடுத்தாத்தான் வேலை நடக்கும்.
ஏதோ கொஞ்சமா வாங்குவாங்களா? அதுவுமில்லை 75% சதவிகிதம்
போல வாங்கிக்கறாங்க. பணத்தைக் கொடுத்திட்டு பக் பக்குன்னு
உக்காந்திருக்கணும். வேலை நடக்கற வரைக்கும் நிச்சயமில்லாத
நிலையில அவ்வளவு பணம் கொடுக்கணும்னா கோவமாத்தான் வருது.
சிலருக்கு நான் அட்வான்ஸ் தரமாட்டேன்னு சொன்னா எங்க
வேலையை வாங்கிகிட்டு பணம் கொடுக்காம போயிடுவோமோன்னு
ஒரு நினைப்பு. நாங்க நம்பணும். ஆனா அவங்க நம்ப மாட்டாங்க.
என்ன மாதிரியான உலகமடா சாமின்னு நானும் அயித்தானும்
வெறுத்திட்டோம்.

அப்படி இப்படின்னு நவம்பர் 14 வீடு ரெடியானிச்சு.அதாவது மரவேலை,
ஃபால்ஸ் ஸீலிங் முடிஞ்சு அலங்கார விளக்குகள் வெச்சாச்சு.
மரவேலைகளுக்கு பாலிஷிங் வேலையும், கண்ணாடிக்கதவுகள்
வைக்க வேண்டியது பாக்கியிருந்துச்சு. 20ஆம் தேதி நண்பர்களுக்கு
விருந்து.

பார்ட்டி நடந்துச்சா??!!! அப்புறம் என்னாச்சு? அடுத்த பதிவுல.



Friday, December 03, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-2

எப்படியோ லோன் வாங்கி பணம் கொடுத்ததுல நிப்பாட்டினேனா!!
வீட்டை ரெஜிஸ்ட்ர் செஞ்சாச்சு. இனி அடுத்த கட்டம். அதான்
கிருஹப்ரவேசம். முடிஞ்சும் முடியாமலும் இருக்கும் சமயத்துல
தான் புதுமனை புகுவிழா செய்யணும்னு சொல்வாங்க. சரி செப்டம்பர்
மாசம் வெச்சுக்கலாம்னு ப்ளான் செஞ்சிருந்தேன். ஆனா வெளியூரில்
இருந்து வரவேண்டிய உறவினர்களுக்கு முன்னக்கூட்டியே சொன்னத்தானே
டிக்கெட் புக் செஞ்சுக்க முடியும்!!

சரி நல்ல நாள் பார்க்கப்போனேன். என் நேரம் செப்டம்பர் மாசம்
எங்க இரண்டு பேருக்கும் ஒத்துவரும் நல்ல நாளே இல்லை. அப்ப
ஆகஸ்ட் மாசமே கிருஹப்ரவேசம் செஞ்சாகணும். இதை விட்டா
நவம்பரில் தான் கிருஹப்ரவேசம் செய்ய முடியும்!!! இதை நான்
கொஞ்சமும் எதிர் பார்க்கவேயில்லை. இவ்வளவு சீக்கிரமா எப்படி??
வேற வழியில்லை 20 நாளில் கிருஹப்ரவேசம். அம்மா,அப்பா
கிரஹப்ரவேசத்துக்கு 2 நாள் முன்னாடி வந்தாங்க. அயித்தானோட
அண்ணி வந்திட்டாங்க. அவங்க அக்கா,மாமாவால வரமுடியாத
சூழல். இதனால நாளைத் தள்ளவும் முடியாது. சீக்கிரமா மரவேலைப்பாடுகள்
முடிச்சு நவராத்ரியை புது வீட்டில் கொண்டாடனும். வீட்டு வாடகையும்
கட்டி, லோனையும் கட்டின்னு இரட்டைக்குதிரை சவாரி செய்ய
முடியாது. சரின்னு ஏற்பாடுகளை செஞ்சோம்.

கிருஹப்ரவேசம் உறவினர்கள் வரைக்கும். அதன்பிறகு தனியா
நண்பர்களைக்கூப்பிட்டு பார்ட்டி கொடுத்துக்கலாம்னு ப்ளான்
செஞ்சோம். கிருஹப்ரவேசமும் ரொம்ப நல்லாவே நடந்துச்சு.






அட புதுமனைபுகுவிழா பத்தி சொல்ல ஆரம்பிச்சதுல அதுக்குமுன்னால
நடந்த மேட்டரைச் சொல்ல மறந்திட்டேனே!!
பில்டர் 4 சுவரு மட்டும்தான் தந்தாருன்னு சொன்னேன்ல,
முழு வீடாக்க மரவேலைப்பாடுகள் முக்கியமாச்சே. துணிமணி
வைக்க இடம் வேணுமே!! சரி நல்லதொரு இண்ட்ரீயர் டெகரேட்டரை
கூப்பிட்டு தரமான பொருட்களால நம்ம பட்ஜட்டுக்குள்ள முடிக்கச்
சொல்லணும்னு நினைச்சோம். ஆனா யாரை கேப்பதுன்னு புரியலை.

அப்பதான் அயித்தானின் அலுவலகத்துல இருக்கும் ஒருத்தர்
தனக்கு தெரிஞ்சவர் ஒருவர் இருக்காருன்னு சொல்லி கூட்டிகிட்டு
வந்தார். நாங்க சொன்னதையெல்லாம் கேட்டுகிட்டாரு. இமெயிலில்
ப்ளான் அனுப்புவதாகவும் அதைவெச்சு நீங்க மாற்றம் ஏதும்
வேணும்னா செய்வதா சொன்னாரு. அனுப்பி வெச்ச ப்ளான் களில்
சில மாற்றங்கள் செய்யச் சொன்னேன்.

”நீங்க என் ஆபிஸூக்கு வாங்க மத்ததெல்லாம்(!!) பேசலாம்னு!!”
போனோம். அவரு வீடு/ஆபிஸ் இருப்பது மெஹதிபட்டணம்.
இங்கேயிருந்து 15 கிமீட்டருக்கு மேல இருக்கும். போனோம்.
பேசினோம். இண்ட்டீரியர் டெக்கரேட்ட்டர்களுக்கு அவங்க
தரும் டிசைனுக்கு ஒரு ரேட், மெட்டீரியல்ஸ் வரவழைச்சு,
தேவையான ஆள்களை கொடுப்பதுக்கு ஒரு ரேட். மொத்தமா
எல்லாத்தையும் முடிச்சு கொடுப்பது படி காண்ட்ராக்ட்.
அவர் கேட்ட ஃபீஸெல்லாம் ஓகே. ஆனா நாங்க சொன்ன பட்ஜெட்டுக்கு
சரி சரின்னு சொல்லிட்டு போக போக அவரு,” பேங்கல 10 லட்சம்
வெச்சுக்கங்க!!! நான் கேட்கும் போது கொடுத்தாத்தான் நல்லா
செய்ய முடியும்னாரு!!!” பாருங்க, நானும் அயித்தானும்
மயக்கம் போட்டு விழாம  இருக்க உக்காந்திருந்த சேரை
பத்திரமா பிடிச்சுகிட்டோம். இதுல இவரு அடிக்கடி வந்து
மேற்பார்வை செய்ய மாட்டாராம். 3 தடவை மட்டும் இலவசமா
செய்வாராம். அதற்கப்புறம் ஒரு தடவைக்கு 3000 ஃபீஸ்!!!
நாம போய் அல்லாட முடியாதுன்னுதான் காண்ட்ராக்டுக்கு
விடுறது. அதுவும் செய்ய மாட்டாருன்னா!!

அடுத்த தெருவுல ஒரு வீட்டுல அவர் போட்ட டிசைன்ல
வேலை நடந்துக்கிட்டு இருப்பதை போய் பார்த்துட்டு
வரச்சொன்னாரு. ப்ளைவுட்டுதான் உபயோகிச்சிருந்தாலும்
அதுவும் தரமானதா தோணலை. யோசிச்சு சொல்றோம்னு
வந்திட்டோம். பத்து லட்சம்லாம் டூமச், நம்மால ஆவாது.
நம்ம பட்ஜட்ல முடிக்கும் ஆளைப்பாப்போம்னு!”நானும்
அயித்தானும் பேசிக்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.

அந்த ஆள் கிட்ட வேலை கொடுக்கப்போவதில்லைன்னு
சொன்னதுக்கு அவரு அப்படின்னா நான் டிசைன் போட்டுக்
கொடுத்ததுக்கு 30000 பணம் கொடுக்கணும்னு சொல்லிவிட்டாரு.
அந்த டிசைன் எங்களுக்கு வேண்டவே வேண்டாம், திருப்பி
கொடுத்திடறோம், 1 நையா பைசாக்கூட கொடுக்க மாட்டோம்னு
சொல்லிட்டோம்.

சரி! இனி யாரைக்கேட்பது? என்ன செய்வது. ஒண்ணும்
புரியலை. எங்க அப்பார்ட்மெண்ட்ல லிஃப்ட பலநாள்
வேலை செய்யாது. அன்னைக்கும் அப்படித்தான் ஆகி
நானும் அயித்தானும் பேசிக்கிட்டே மாடிப்படி ஏறிகிட்டு
வந்தோம். அப்போது எங்க அப்பார்ட்மெண்ட் நண்பரும்
வந்தாரு. வீட்டு வேலை ஆரம்பிச்சீங்களான்னு!! கேக்க
எங்க சோகக்கதையைச் சொன்னோம்.
எனக்குத் தெரிஞ்சவரோட மருமகள் செய்யறாங்க, அப்படின்னு
சொல்லி நம்பர் கொடுக்க, பேசினோம்.எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே
அவங்க இருப்பது வசதியாக போய் உடன் வந்தாங்க. அவங்க
இப்ப செஞ்சுகிட்டு இருக்கும் இடத்தை கூட்டிகிட்டு போய்க்காட்டினாங்க.
வேலை நல்லா இருந்துச்சு.


எங்க புதுவீட்டைக்கூட்டிக்கிட்டு வந்து காட்டி, எங்க தேவைகளைச்
சொன்னோம்.CADDயில் டிசைன் போட்டா 30000 ஆகும். நான்
போட்டோவா காட்டறேன்னு சொன்னாங்க. சரின்னு சொன்னோம்.
எங்க பட்ஜட் தாண்டாம செய்யணும்னு திரும்ப திரும்ப சொன்னோம்.
புது வீடு இரண்டாவது மாடிதான்னாலும் அயித்தானுக்கு ஃபால்ஸ்
சீலிங் போட்டு அலங்கார விளக்குகள் வைக்கணும்னு ஆசை.

சரின்னு அதுக்கும் சேத்து பேசினோம். முதலில் ஃபால்ஸ் சீலிங்
வேலை அடுத்து மரவேலைகள் அப்படின்னு முடிவு செஞ்சாங்க.
ஆகஸ்ட் 15  அட்வான்ஸ் பணம் கொடுத்து வேலைகளை ஆரம்பிக்கச்
சொன்னோம்... ஆகஸ்ட் 30 கிருஹப்ரவேசத்தின் போது
ஃபால்ஸ் சீலிங்கிற்கு பீம் போட்டு, விளக்குகளுக்கு வயர்லாம்
தொங்கிகிட்டு இருந்துச்சு....

 அப்புறம்!!??!!




Thursday, December 02, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!!!!!

நம்ம சொந்த வீடு நம்ம விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இருக்கணும்னு
நினைப்பது தப்பில்லையே!! அந்த நினைப்போட ஹைதைக்கு
வந்து இறங்கியதிலேர்ந்து வீடு தேட ஆரம்பித்தோம். என்னைப்
பொறுத்த வரை வீட்டில் சமையற்கட்டும், பாத்ரூமும் வசதியோட
இருக்கணும். ஆனா நம்ம நாட்டுல அந்த இரண்டு இடமும்
ரொம்பவே சின்னதா இருக்கும்!!! அதனாலேயே பல வீடுகளை
வேணாம்னு சொல்ல வேண்டியதா போச்சு. என் மனசுல தனிவீடு
ஆசை எப்பவும் இருக்கும். அதுவும் ட்யூப்ளஸ் ஹவுஸ் ரொம்பவே
இஷ்டம். அப்படிப்பட்ட வீடுகளை பாத்தோம். அதுவும் கூட
சொல்லிக்கற மாதிரி இல்லை.:( நல்லா இருந்தா ஊருக்கு
கடைசியில இருக்கு, இல்லாட்டி விலை நம்ம பட்ஜட்டுக்கு
அடங்காம போனிச்சு. :(((

ஹைதையில் பிரசித்தமான பல பில்டர்கள் ப்ராஜக்ட்களைப்
போய்ப் பார்த்தோம். முன்னாபாய் எம் பீபீ எஸ்ஸில் சொல்வது
போல,”ஆரம்பிச்ச உடனேயே முடிஞ்சு போகும்” டைப்பா
தெரிஞ்சிச்சு. சில இடங்களில் அம்புக்குறி போட்ட போர்டு
இருக்கும் ஏரியாவை சுத்தி சுத்தி அது கடைசியில் ஊர்கடைசிக்கு
போனுச்சு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படி
வீடு பாப்பதிலேயே போய் ஒரு நேரத்துல வெறுத்துப்போய்
கொஞ்ச நாளைக்கு கேப் விடுவோம்னு விட்டோம். எங்க
நல்ல நேரம். சதுர அடி விலை நல்லா குறைஞ்சிச்சு.

திரும்பவும் தேட ஆரம்பிச்சோம். இந்த வாட்டியும்
சரியா அமையலை. அப்பத்தான் நாங்க குடியிருந்த
அப்பார்ட்மெண்டில் இருக்கும் நண்பர் தனது நிலத்தை
அப்பார்ட்மெண்ட் கட்ட விட்டிருப்பதாச் சொன்னார்.
எங்களை கூட்டிகிட்டுப்போய் காட்டினார். சரியா கட்டப்படாத
நிலையில அமைப்பு புரியலை. வேணாம்னு சொல்லிட்டேன்.
ஆனா கொஞ்சம் தளம் போட்ட நிலையில் திரும்பவும்
கூட்டிகிட்டுப்போனார். கிச்சன் நான் நினைச்சபடி இருக்கு.
3 பெட்ரூம், 3 பாத்ரூம். ஆனா ஒரே ஒரு பாத்ரூம்
மட்டும் பொதுவா இருக்கு. மத்த இரண்டும் அட்டாச்ட்.
சரி எல்லாமே சரியா அமையாது ஏதாவது ஒரு வகையில
காம்ப்ரமைஸ் செஞ்சுதான் ஆகணும்னு!! ஓகே சொல்லும்
முன்னாடி பசங்களை கூட்டிகிட்டுப்போயி காட்டினோம்.
அவங்களுக்கும் பிடிச்சிருக்கணும்ல!!!

ஆஷிஷுக்கு செம குஷி. ஏன்னா?? இந்த வீட்டுலசாமிக்கு
தனியா சின்னதா ஒரு ரூம். :)) அதனால ஐயாவுக்கு
தனி ரூம் கொடுக்க வாய்ப்பு இருக்கு. அம்ருதம்மாவுக்கும்
தனி ரூம். எனக்கும் அயித்தானுக்கும் இந்த வீட்டில்
இருக்கும் சிட் அவுடு ரொம்ப பிடிச்ச இடம். ரெண்டு
சேர் போட்டு அமைதியா உக்காந்து டீ குடிக்கலாம். :))
சரி வாங்கிடலாம்னு முடிவு செஞ்சு பணம் அட்வான்ஸ்
கொடுத்திட்டு லோனுக்கு அப்ளை செஞ்சோம். லோன்
வாங்க தகுதி இருந்தாலும் 2 பேங்குல என்னவோ முடியாதுன்னு
சொல்ல திக்குன்னு ஆயிடிச்சு. ஒரு வழியா இன்னொரு வங்கி
லோன் கொடுத்தாங்க. பணத்தை வாங்கி நண்பரிடம்
கொடுக்கும் வரை உயிரே இல்லை.

அப்புறம் என்ன நடந்துச்சு????? அடுத்த பதிவுல