Total Pageviews

Monday, January 31, 2011

மீ டாடா கோயிங்...

ஆஹா நினைச்சு பாக்கயிலேயே எம்புட்டு சந்தோஷமா இருக்கு.
ஆடி ஆடி தாலாட்டும் ரயில்.... படிக்க புத்தகம்... பாட்டு
கேக்க மொபைல்.. ம்ம்ம் ஜாலி!!

நாம ரெண்டு பேரும் மட்டும் ஃபட்ஸ்டைம் தனியா ஊருக்கு
போறோம்லம்மான்னு எங்க அம்ருதம்மா கேட்டுகிட்டு இருக்காங்க.
நாங்க PDKT போயி (அதாங்க புதுகை போயி) குமார் அங்கிள்
கடையில தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிடப்போறோமே,
வரும்போது பல்லவன்ல வர்றோம் அண்ணான்னு
அண்ணனை வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க அம்மா!!

அண்ணன் அம்மம்மாவுக்கு போனைப்போட்டு ரவா உருண்டை
பொடி, தீபாவளி லேகியம்!!, அம்மா செய்யும் இட்லி பொடி
எல்லாம் ஞாபகமா செஞ்சு எடுத்து வெச்சுக்கச் சொல்லிகிட்டு
இருக்காரு!!

நானும் எங்க அம்ருதம்மாவும் மட்டும் கூகூ சுகுசுகுன்னு
ஊருக்கு போறோம்! ஆஷிஷ் அண்ணாவுக்கு 9த் கிளாஸ்
என்பதால இப்ப வர முடியாது. மார்ச் மாசம் முழுப்பரிட்சை.
ஊருக்கு போயி அதாவது புதுகைக்கு போயி அம்மா
அப்பாவை அழைச்சுகிட்டு வரப்போறேன்.

போக 1 1/2 நாள் வர 1 1/2 நாள் , புதுகையில்
1 1/2நாள். இவ்வளவுதான் என் பயணம். ஸோ...
நான் இல்லைன்னு யாரும் வருத்த படாதீங்க. அடுத்த
திங்கள் முதல் வந்து கொடுமை படுத்துவேன்.. :)))

சென்னையில யாரையும் சந்திக்கலைன்னு எனக்கு நிறைய்ய
திட்டுக்கள்... போன் கால்கள் வரும்.. நட்புக்களே, உடன்பிறப்புக்களே
மன்னிச்சிடுங்க. ரொம்பவே ஷார்ட் ட்ரிப்பா போறேன்.இல்லாட்டியும்
சென்னையில 4 நாள் தங்கிட்டுதான் மறுவேலைன்னு ...
திட்டறது புரியுது. அது ஒரு மைண்ட் செட்டாவே ஆகிப்போச்சு. :))

அடுத்த வாட்டி (அது எப்பன்னு எனக்கே தெரியாது) கண்டிப்பா
மீட்டலாம்.

புதன் கிழமைதான் ட்ரையின் ஆனா அதுக்குள்ள உறவினர்
வருகை இருப்பதால இப்பவே டாடா சொலறேன்.


Friday, January 28, 2011

ஜம்பலக்கடி பம்பா... கிதகிதலு

ஆண்களிடம் பெண்கள் படும் கொடுமையை பார்க்க சகிக்காத
பெண் ஒருவர் ஒரு யோகியிடம் சென்று கேட்க அவர்
“ஜம்பலக்கடி பம்பா” எனும் மருந்தை கொடுக்கிறார். அதை
ஆண்களுக்கு தெரியாமல் சோற்றில் கலந்து கொடுத்துவிட நிலமை
மாறுகிறது. கணவன் வீட்டு வேலை செய்வது முதல் குடிகார மனைவியிடம்
அடிவாங்குவதை எல்லாம் மாறிப்போகிறது. பெண் தான் குழந்தை
பெறுகிறாள் என்றாலும் வலி மட்டும் அந்தக் குழந்தையின் தகப்பனுக்கு
தான். சிரிசிரித்துக்கொண்டு பிள்ளை பெறும் பெண்.... வலியால் துடிக்கும்
பக்கத்து வீட்டுக்காரன்!!! அவனுடன் சண்டை போடு அந்தப் பெண்ணின்
கணவனை தடுத்து வலிபட்ட கணவனின் மனைவி வீட்டுக்குள் அழைத்துச்
சென்று பரேடு நடத்துவாள் பாருங்கள்!!! தன் கணவன் செய்த துரோகம்
தாளாமல் குடித்து குடித்து இறக்க அவளது கணவனுக்கு வெள்ளை உடை!!!
ஆண்களின் கழுத்தில் தாலி!!!!

பாஷை புரியாவிட்டாலும் வீடியோ பாருங்க!! காமெடியா இருக்கும்.

இப்படி இந்தக் கிராமம் மட்டும் வித்தியாசமாக இருக்க காரணம் என்ன?
என மண்டையைக் குடைந்து கொள்ளும் போலிசார் ஒரு காவலரை
அனுப்பி வேவு பார்த்து வரச் சொல்வர். அந்தக் காவலரின் அண்ணன்
அந்த ஊரில் இருக்க அவரது வீட்டுக்கு வரும் காவலரை சந்தேகித்து
போலீஸ் உளவாளி என கண்டுபிடித்து விடுவார் அந்தப் பெண். அவருக்கும்
மருந்தை கலந்து கொடுக்க முயலும் ஒவ்வொரு தருணமும் தட்டிப்போகும்.
தன்னையும் அந்த ஊர் ஆண்கள் போல மாற்ற முயல்கிறாள் என்பதை
கண்டுபிடித்து ஒவ்வொரு முறையும் மருந்திலிருந்து தப்பித்து....
ஆண்களின் நடவடிக்கை பெண்களுக்கும், பெண்களின் நடவடிக்கைகள்
ஆண்களுக்கும் வருவது போல கதை எழுதி அதை அழகாக
வடிவமைத்திருந்ததில் பார்த்தவர்களின் வயிறுகள் சிரிப்பால்
பஞ்சராகிப்போனது. கடைசியில் இரு பாலினருக்கும் பைத்தியம்
பிடித்து பிள்ளைகளைப்போல நடந்துகொள்வதாக வரும்.

அந்தப் பெண்ணின் மனதில் இருக்கும் ஆண்கள் மீதான வெறுப்பை
களைந்தானா? இருவருக்கும் திருமணம் நடந்ததா? ஊர் மாறியதா
அது தான் ஈ.வி.வி சத்யநாராயாணா இயக்கி 1993ஆம் ஆண்டு
வெளிவந்த தெலுங்கு படம் ஜம்பலக்கடி பம்பா!!!

நரேஷ் (நடிகர் கிருஷ்ணாவின் மூத்தமகன்) போலிஸ் அதிகாரியாகவும்,
ஆண்களை வெறுத்து மாற்றும் பெண்ணாக ஆமனி நடிக்க மற்ற
கேரக்டர்களில் பிரம்மானந்தம், கோடா ஸ்ரீநிவாச ராவ், பாபுமோகன்,
மல்லிகார்ஜுன ராவ், அன்னபூர்ணா, ஸ்ரீலட்சுமி என பெரிய பெரிய
புள்ளிகள்.

இந்தப் படத்தின் இரண்டாவது பார்ட்டாக பம்பலக்கடி ஜம்பா படம்
எடுக்க திட்டமிட்டிருந்தார் சத்யநாரயணா! அந்த மகாபாக்யம் தெலுங்கு
திரையுலகிற்கு கிடைக்கவில்லை. எத்தனையோ தெலுங்கு படங்களை
ரீமேக் செய்யும் தமிழ் திரையுலகம் இந்த ஜம்பலக்கடி பம்பாவை
விட்டு வைத்தது ஏனோ!!! லாஜில் இல்லாத சூப்பர் நகைச்சுவை
படம் அது!!

கிதகிதலு:




சத்ய்நாராயணா தன் மகன் அல்லரி நரேஷை வைத்து எடுத்த
படம். சின்ன வீடு, சதிலீலாவதி படத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம்
சுட்டா மாதிரி இருந்தாலும் படம் காமெடி ட்ரீட்மெண்ட். அதிகமாக
கிடைக்கும் வரதட்சணைக்காக அல்லரி நரேஷ் குண்டு பெண்ணை
திருமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ முடியாமல் வேறொரு
பெண்ணை காதலிக்க மூத்த தாரத்தை விவாகரத்து செய்து இந்தப்
பெண்ணை மணக்கலாம் என திட்டமிட்டு மனைவியிடம் கேட்க
நீ இன்னொரு திருமணம் செய்து கொள்வது போல் எனக்கும்
இன்னொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடு! நான்
விவாகரத்து செய்கிறேன்” என்று சொல்ல நரேஷின் காதலி
அவர் இருக்கும் வீட்டை பார்த்து இந்த வீட்டை தன் பேரில் எழுதி
கொடுக்கச் சொல்ல அது தன் மனைவியுனைடயது என்று சொல்ல
உண்மை வெளிப்படுகிறது. உண்மை என்னவென்றால் நரேஷுக்கு
போலிஸ் உத்யோகத்தில் கிடைப்பது 10000 சம்பளம் மட்டுமே!
அவர் இருக்கும் வீடு, கார் அதற்கு டிரைவர், செலவுக்கு இரண்டு
லட்சம் எல்லாம் மாமனார் தருவது!!


இது தெரிந்து அந்தப் பெண் விட்டு ஓட உண்மை உணர்ந்து
குண்டோ ஒல்லியோ தன் மனைவிதான் சிறந்தவள் என புரிந்து
சுபம்!!


படத்தின் சில போட்டோக்கள் பாருங்கள்


Thursday, January 27, 2011

E. V. V. Satyanarayana

E. V. V. Satyanarayana இந்தப் பெயர் டாலிவுட்டில் மிகப் பெரிய பிரபலமான
பெயர். எத்தனையோ ஹிட் சினிம்மாக்களை கொடுத்தவர்.
செல்வச்செழிப்பில் வளர்ந்தவர் திடும்மென நொடித்துப்போன விவசாயத்தில்
இருந்த 70 ஏக்கரையும் விற்று கடனடைக்கும் சூழல். கையில் இருந்த
85ரூபாய் எடுத்துக்கொண்டு சென்னை வந்தார். மனைவியையும் பிள்ளைகளையும்
பெற்றோரிடம் விட்டிருந்தார்.ஜந்த்யாலா எனும் காமெடி பட டிரைக்டரிடம்
8 வருடங்கள் வேலை பார்த்து இவர் இயக்கிய முதல் படம் தோல்வியைத்
தழுவியது.


தெலுங்கு திரையுலகின் ப்ரம்மா ராமாநாயுடு இவருக்கு படங்கள்
இயக்க வாய்ப்பு கொடுக்க அங்கே ஆரம்பித்தது இவரின் வெற்றிக்கொடி.
தனக்கென ஒரு பாணி வைத்து பெரிய பெரிய நடிகர்களுடன்
இவரது படம் வெளிவந்தன. நாகார்ஜுனா டபுள் ரோலில் கலக்கிய
ஹலோ ப்ரதர் சூப்பர் டூப்பர் ஹிட்.

சூர்யவம்சம் ஹிந்தியில் இயக்கம் இவர்தான். அமிதாப் ஹீரோ அதில்.
தமிழில் ஆல்பம் எனும் படத்தில் நடித்த ராஜேஷின் தந்தை இவர்.
தொண்டை புற்றுநோய்க்கு ஆளாகி வைத்தியம் பார்த்து சற்று
குணமடைந்திருந்தார் சத்யநாராயணா. தனது இளைய மகன்
அல்லரி நரேஷை வைத்து ஹிட் காமெடி சினிமாக்கள் இயக்கி
வந்தார். ஜனவரி 21 அன்று இரவு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்.

ஒரு சிறந்த காமெடி பட இயக்குனர் மறைந்ததில் தெலுங்கு சினிமா
உலகிற்கு பெரிய நஷ்டமே. தரமான காமெடி படங்களுக்குத்தானே
இப்போது பஞ்சம்!!!


சம்பங்கி பூவும்.... தாத்தாவின் நினைவுகளும்.

காட்டுபாக்கம் தாத்தாவுக்கு காடுபோல தாடியாம் எனும் பாட்டை
ஞாபகப்படுத்தும் தும்பைபூ தலைமுடி + தாடி, கெச்சலான உருவம்
இதுதான் முருக்கூர் தாத்தா. அவரது உண்மையான பெயர்
மகாலிங்கம். நான் வைத்த பெயர் முருக்கூர். புதுகைக்கு அருகில்
இருக்கும் முருக்கூரில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார்.
தான் மட்டுமே அங்கே இருப்பார். விடுமுறை கிடைத்தால்
தனது மகள்கள் இருக்கும் திருச்சிக்கும், புதுகைக்கும் வந்து
செல்வார். வேலை ஓய்வு பெற்ற பின் அம்மம்மாவிடம் இருந்தார்.

அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் அவரது நாள். கிணற்றில்
தடால் என வாளி போட்டு தண்ணீர் இறைத்து பல் தேய்த்து
அந்த தண்ணீரை குடித்துவிட்டு ஆரம்பிப்பார் நாமஸ்மரனை.
காளி... காளி பத்ரகாளி.. இப்படி அதிகாலையில் சொல்லி
அடுத்தவர் தூக்கத்தை கெடுத்துவிடுவதைப் பத்தி தாத்தா
யோசித்ததே இல்லை. காபி குடித்துவிட்டு பூக்கள் பறிப்பார்.
குளித்து பூஜை சாப்பாடு, காலாற நடை, கொஞ்சம் பூனைத்தூக்கம்
மதியம் 3 மணிக்கு காபி, பிறகு விரும்பினால் எங்கேயாவது
சென்றுவருவார்( என் அம்மாவை பார்க்க வருவார்)
இரவு ஒரே டிபன் தான் அதை மாற்றி ஏதும் வித்தியாசமாக
ஏதும் கொடுத்தால் சாப்பிட மாட்டார். கோபம் ஜாஸ்தி.
இரவு உணவு அரிசி உப்புமா + தயிர். அலுக்காமல் சலுக்காமல்
அவர் எப்படி தினமும் சாப்பிட்டாரோ!!!

ஆடி வெள்ளி, தைவெள்ளிக்கள் பூஜை அமலோகப்படும்.
கேசரி,வடை, சக்கரை பொங்கல் அம்மம்மா செய்துவைக்க
பூஜை செய்வார் தாத்தா. உள்ளூரில் இருக்கும் என் அம்மா
வரவேண்டும் என கண்டிப்பாய் சொல்லிவிடுவார். என் அம்மாவென்றால்
தாத்தாவுக்கு ரொம்ப இஷ்டம். என் அம்மம்மாவின் சிறுவயதிலேயே
அவரது அம்மா இறந்துவிட தாத்தா மறுகல்யாணம் எல்லாம் செய்து
கொள்ளாமல் உறவினர் உதவியுடன் தனது பிள்ளைகளை வளர்த்தார்.

என் அம்மா அவரது மிக அபிமான பேத்தி. அம்மாவுக்கு பிடிக்குமென
கிராமத்திலிருந்து பழுத்த விளாம்பழம் கொண்டு வந்து அதை தட்டி
வெல்லம் சேர்த்து பக்குவமாக பிசைந்து கொடுப்பார். அம்மா
வர முடியாவிட்டால் சின்ன மாமாவிடம் டப்பாவில் போட்டு கொடுத்தனுப்புவார்.
இலங்கையில் விளாம்பழம் ஜூஸ் கிடைத்த பொழுது அம்மாவிற்காக
வாங்கி வைத்திருந்து கொடுத்தேன். அம்மா அப்போது நினைத்தது
முருக்கூர் தாத்தாவைத்தான்.

நான் பிறக்கும் முன் தாத்தாவின் மனைவி கனவில் வந்து செய்தி
சொல்லி அவசர அவசரமாக என் அம்மாவை பார்க்க வந்தாராம்.
என் நட்சத்திரமும் ஜாதகப்பெயரும் அந்த அவ்வாவுடையது என்பதில்
தாத்தாவுக்கு ரொம்ப சந்தோஷம். என் மீதும் மிகப் பிரியம்.
என் பெயர் சொல்லி கூப்பிடமாட்டார். “காளி” என்றுதான் அழைப்பார்.
தாத்தாவுக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் இருந்தது.



எனக்கு பூக்களில் வாசம் இருந்தால் தான் பிடிக்கும். சம்பங்கி பூ
மிக இஷ்டம். அம்மம்மாவீட்டில் சம்பங்கி இருந்தது. அதை
பறித்து,கோர்த்து கவரில் போட்டு சின்ன மாமாவிடம் கொடுத்தனுப்புவார்.
புதுகை டவுன் பக்கம் வரும் வேலை இருந்தால் சரி. இல்லாவிட்டாலும்
கண்டிப்பாக போய் கொடுத்துவிட்டு வா என சொல்வார். மாமா
கோவமெல்லாம் அவர் முன் செல்லாது. திட்டி அனுப்பி விடுவார்.
முனுமுனுத்துக்கொண்டே மாமா கொடுத்து செல்வார்.

அப்பா வடக்கு4ஆம் வீதியில் வீடு வாங்கிய பொழுது அதை கொஞ்சம்
மராமத்து செய்ய வேண்டி இருந்தது. காண்ட்ராக்டில் வேலை செய்ய
கொடுத்திருந்தோம். இங்கே வேலை நடப்பது தெரிந்து தாத்தா வந்து
விட்டார். வந்தவர் சும்மா இருக்காமல் தார்பாய்ச்சி கட்டிக்கொண்டு
கூரை மேலே ஏறி கொத்தனாருடன் சண்டை. “கலவை சரியில்லை!!
ஓடு சரியாவெக்கலை..” என சத்தம் போட்டிருக்கிறார். கலவை
கலக்கும் பொழுது தான் சொல்லும் ரேஷியோவில்தான் சிமெண்ட்+
மண் கலக்க வேண்டுமென சொல்ல அவன் அப்படி போட்டால் கட்டாதுன்னு
சண்டை. இவர் இருந்தால் வேலைக்கு வரமாட்டேன் என்று கொத்தனார்
போயே விட்டார். தாத்தாவை வீட்டை விட்டா விரட்ட முடியும்!!
மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் காண்ட்ராக்டரை
வரச்சொல்லி தாத்தா அவருடன் பேசி தாத்தா சொல்படி கட்டுவதாக்
சத்தியம் வாங்கிய பிறகுதான் தாத்தா அம்மம்மா வீட்டுக்கு கிளம்பினார்.
வடக்கு 4 வீட்டை விற்றபொழுது இந்த நினைவுகள் வருத்தத்தை
தந்தன.

எல்லா வேலைகளும் தெரியும் தாத்தாவுக்கு. வயல் வைத்திருந்ததால்
அந்த வேலைகளும் செய்வார். சிறுவாச்சூர் மதுரகாளி தாத்தாவின்
இஷ்ட தெய்வம். எப்போதும் சுறு சுறுப்பு, அளவான சாப்பாடு என
ஆரோக்கியமாக இருந்தார். இறக்கும் பொழுது 96 வயதென நினைக்கிறேன்.
பாலை விட பாலாடை ருசி என்பார்கள். என் அம்மாவிடம்
தாத்தாவிற்கு மிக அன்பு. கொள்ளுப்பேத்தியான என் மேலும் அவர்
அன்பில் செலுத்தியது அதை பெரும் பாக்கியத்தை கொடுத்தது
இறைவன் அருளே!!

கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்பதற்கு
தாத்தா நல்ல உதாரணம்.


Tuesday, January 25, 2011

UN SUNG HEROINES!!!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பெண் ஒரு பெண் உண்டுன்னு எல்லாம்
நல்லாச் சொல்வாங்க ஆனா எல்லா பெண்களுக்கும் புகழாரம் கிடைக்கறதில்லை.
இராமனோடு காட்டுக்கு போன சீதைக்கு பெயர் கிடைச்ச மாதிரி,
14 வருடம் தன் அண்ணனை காக்க நானும் காட்டுக்குபோவேன்னு போன
லட்சுமணனின் மனைவியின் தியாகம்... அதைப்பத்தி பெருசா
யாருக்குமே தெரியாது! அவளோட சோகம், தனிமை, பிரிவு இதெல்லாம்
கட்டாயம் பாராட்டப்பட்டு சரித்திரத்துல இராமாயணம்னு சொல்லும் பொழுதே
சீதையின் பெயரோடு லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் பேரும்
சொல்லப்படணும். ஆனா இல்லை. இந்த மாதிரி மறக்கப்பட்ட
ஹீரோயின்கள் தான் UN SUNG HEROINES.

ஆரம்பம் முதலே நாட்டுக்காக உயிர்விட்ட தியாகிகளைப்பற்றி அதில்
சில பெண்கள் இருந்தால் அவர்களைப்பற்றி படிச்சு அவங்க தைரியம்
பார்த்து வியந்திருக்கிறோம், மரியாதை செலுத்தறோம். ஆனா
அந்த ஆண்கள் தன் வீட்டையும் மறந்து நாட்டின் மீது அக்கறை
செலுத்த காரணம் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லைன்னு
பாட்டு எழுதிகிட்டு பாரதியார் இருந்தார். ஆனா அவங்க மனைவி
அடுத்த வேளை சோறு சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு குடும்பத்தை
எப்படியோ காப்பாத்தினாரே!!

இப்படி எத்தனையோ பேர்!!! அப்படி பட்ட பெண்களாலும் தான்
நமக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதால் அத்தகைய பெருமைமிகு
பெண்களுக்கு “ராயல் சல்யூட்”.

ஹைதையே ஆர்மி ஏரியாவுக்குச்சுற்றிதான் இருக்கிறது. ஒவ்வொருமுறை
அந்தப்பாதையை கடக்கும் பொழுதும் அந்த காவலர்களை பார்க்கும்பொழுதும்
இந்த லட்சுமணர்கள் தன் கடமையை ஆற்ற அவரை அனுப்பி வைத்திருக்கும்
ஊர்மிளையின் ஞாபகம்தான் வரும். பலர் அன்னையின் அனுமதி பெற்று
வந்திருப்பார்கள். எப்போது ஊருக்கு போவோம் எனும் எண்ணம் அவர்களுக்கு
இருக்கும். தன் கணவன் வந்து செல்லும் நாளுக்காக காத்திருக்கும் அந்த
காதல் மிகுந்த மனைவியின் ஏக்கமும் தான் நம்மை சுதந்திரமாக
பயமில்லாமல் வாழ வைக்கிறது என எண்ணும் பொழுது அவர்களின்
தியாகத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. மரண நேரக்கூடும்
என தெரிந்தும் தைரியமாக தேசிய படையில் சேர்ந்திருக்கும் காவலர்களுக்கு
தன் மகளை கொடுத்திருக்கும் அந்த மகான்களுக்கும் என் வந்தனம்.

பார்டர் படத்தில் இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் என்னுடைய
இந்த நினைப்பு இன்னும் அதிகமாகும்.

ஊரிலிருந்து வந்திருக்கும் கடித்தத்தில் தங்கள் நல்வரவை எதிர்பார்க்கிறேன்
என எழுதிருப்பாள் அந்தக் காதலி. கர்ப்பமான மனைவியை அருகிலிருந்து
பார்த்துக்கொள்ள வேண்டிய நேரத்திற்கு கூட இருக்க முடியாமல் எல்லையிலிருந்து
நாட்டைக் காக்கும் அந்த காவலர்களுக்கு என் வணக்கங்கள்.

தன்னுடைய ஒவ்வொரு சின்னச்சின்ன சந்தோஷத்தையும் விட்டுவிட்டு
ஏக்கங்களுடன் வாழும் சிப்பாய்களின் தாய்கள், மனைவி இவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.



உடனிருக்கும் சிப்பாய்களே தன் உறவினர்களாக நினைத்து தங்கள் கடமையை
அவர்கள் நிறைவேற்ற, கண்கண்ட தெய்வமான கணவனையும், மகனையும்
தேசத்துக்கு அர்ப்பணித்து பெரிய கடமையைச் செய்து அந்த மன நிறைவில்
வாழ இவர்களின் தியாகத்தில் நாம் வாழ்கிறோம். இதை நம் பிள்ளைகளுக்கும்
எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் புரியவைப்போம் தியாகம் எவ்வளவு
பெரியதென்பதை!!!

ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.

Monday, January 24, 2011

இராகம்!! தாளம்! பல்லவி!!

பேர் சொன்னால் போதும் தரம் விளங்கும்னு சொல்வது போல
புதுக்கோட்டை அப்படின்னு எங்க ஊரு பேரைச் சொன்னாலே போதும்
எல்லோருக்கும் நல்லாத்தெரிய அளவுக்கு புகழ் பெற காரணம்
மே மாதத்தில் அங்கே நடக்கும் நரசிம்ம ஜெயந்தி + கச்சேரிகள்.
பெரிய பெரிய பிரபலங்கள் நிகழ்ச்சிகள் நடக்கும். எம் எஸ் அம்மால்லாம்
வந்திருக்காங்க. பக்கத்துலேயே தஞ்சாவூர் என்பதாலும், இப்படி
கச்சேரிகள் நடக்கும் இடம் என்பதாலும் எங்க ஊரில் அங்கங்கே
பாட்டு,வீணை, வயலின், மிருதங்கம்,நடன வகுப்புக்கள் நடக்கும்.

அம்மாவின் கொள்ளுத்தாத்தா சிதம்பர பாகவதர். ஸ்ரீராமதாஸ் சரிதத்தை
தெலுங்கில் எழுதியவர். ஆண்கள் கூட மிக அழகாக பாடும் குடும்பத்தில்
வந்த அம்மாவும் பாட்டுக் கற்றுக்கொண்டார். இப்போதும் நல்ல
குரல்வளம் அம்மாவுக்கு. ஏனோ அவ்வாவுக்கு அம்மா பாடுவதில்
இஷ்டமில்லாமல் போக அம்மாவின் குரல் அமுங்கித்தான் போனது.
ஆனாலும் பண்டிகைநாட்களில் அம்மா பாடும் மாயா தீதஸ்வருபீனியும்,
ஸ்ரீ சத்யநாராயணாவும் கேட்கும் போது அம்மாவின் குரல்வளத்தில்
உருகிப்போவேன்.

இப்படிப்பட்ட குடும்பத்தில் வந்த நான் பாடத்தெரியாவிட்டால் எப்படி
என்று யோசித்து என் அவ்வா(!!) வரவீணா ம்ருதுபாணி பாட்டு
சொல்லிக்கொடுத்து அம்மா பாட்டுபயின்ற சீனு சாரிடமே என்னை
பாட்டுக்கிளாஸுக்கு சேர்த்துவிட்டார். அம்மா பெரிதாக எந்த
ரியாக்‌ஷனும் காட்டவில்லை. பெண் பார்க்க வந்தால் பாடத்
தெரிந்திருக்க வேணுமென என் 14 வயதில் பாட்டுக்கற்றுக்கொள்ள
அனுப்பினார் அவ்வா. சீனு சார் மிக நல்ல கலைஞர். குரல்வளத்தோடு
அவர் வீணையிலும் வித்தகர். வீணையை வைத்துக்கொண்டுதான்
பாட்டு சொல்லித்தருவார். வீணை + வாய்ப்பாட்டு என நிதம்
வகுப்பே ஒரு கச்சேரி போல இருக்கும். நேரடியாக கீர்த்தனைகள்
சொல்லிக்கொடுத்தார்.

சுதாமயி சுதா நிதி- ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்
பாடல் எனக்கு ரொம்ப இஷ்டமாக இருந்தது. துலசி தல முலசே
என பல பாடல்கள் கற்றேன். 1 வருஷம் நடந்தது பாட்டுகிளாஸ்.
நான் இவ்வளவு அழகா பாட்டுகத்துகிட்டாலும் யாரும் என்னை
என்ன கத்துகிட்ட? பாடிக்காட்டு! என்று கேட்கவே இல்லை.
வகுப்பில் சேர்த்த அவ்வாவும் கேட்கவில்லை, அம்மாவும்
அப்பாவும் வேலை பிசியில் என் பாட்டுக்கிளாஸா ஞாபகம்
இருக்கும்! நொந்து நூலாகி ஒரு நாள் நான் இனி பாட்டு கிளாஸ்
போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதற்கும் பெரிதாக
ரியாக்‌ஷன் இல்லை!!!



அம்மாவுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்த குருவிடம் நாமும்
கற்க போனால் எல்லாவற்றிற்கும் அவரோடு கம்பேரிசன் நடக்கும்.
அம்மாவைப்போல இல்லாவிட்டாலும் எனக்கென ஒரு தனிபாணி,
குரல் இருந்ததால் எந்த கமெண்டும் இல்லை. ஆனால் என்னை
ஊக்குவிக்க ஆள் ஏதும் இல்லாததால் ஒரு குறையாக தோன்றி
நல்ல திறமையை வளர்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

எல்லோரும் பாடினால் கேட்க ஆள் வேண்டாமா!! நான் அந்த
லிஸ்டில் சேர்ந்தேன். இனிமையான இசையை ரசிக்க இஷ்டம்.
அதுவும் என் மானசீக குருநாதர் யேசுதாஸ் குரலில் பாடல்கள்
என்றால் இகம் பரம் எதுவும் தெரியாது. ரசனை ரசனை!
கேள்வி ஞானம் இவைகளால் இப்போதும் பாடுவது உண்டு.
சினிமா பாடல், கர்நாடக சங்கீதம் என பேதம் கிடையாது.
இசை அது ஒன்று தான்.

அப்பாவும் நல்ல ரசிகர். ஒவ்வொரு வருடமும் தியாகய்ய ஆராதனை
கண்டிப்பாய் பார்ப்பார். இன்று தியாகய்யருக்கு 164ஆவது ஆராதனை
மிகச்சிறப்பாக நடந்தது. தூர்தர்ஷனில் பார்த்து ரசித்தேன்.


எந்தரோ மஹானுபாவுலு....


ரசிக்கும் அனைவர்களுக்கும் அந்த தியாகப்ரம்மத்தின் பாடல்கள்
மனதை மயக்கும். இராம பக்தி பெருகும்.


Friday, January 21, 2011

டச்சிங்!!... டச்சிங்!!!...டச்சிங்!!!...

அன்னையின் கதகதப்பை மறக்க முடியுமா!! தந்தையின் தோளில் ஆடியதை
மறக்க முடியுமா!! தாத்தாவின் கைபிடித்து நடந்தது!! இவை எல்லாவற்றிலும்
ஒரு ஒற்றுமை. அது தொடுதல் எனும் சுகம். பாசத்தோடு அம்மா வாரி
அணைத்துக்கொள்ளும் பொழுது அந்த சுகானுபவமே சரி.



படகோட்டி படத்தில் அருமையான இந்தப் பாடல்.
”தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை”

என்ன அருமையான வரிகள்.



நிஜமும் அதுதான். கைகளால் தொட்டு அனுபவிக்காமல் நம்மால்
கற்கக்கூட முடியாது. மாண்டிசோரி முறைக்கல்வியில் பாடங்கள்
ஐம்புலன்களைக் கொண்டு கற்பதாக இருந்தாலும் அதில் முதலில்
கைகளால் தொட்டு உணர்ந்து கற்பதாகவே இருக்கும்.




பள்ளிப்பாடங்களில் கூட செய்முறை மிக முக்கியம். அதனால்தான்
”சித்திரமும் கைப்பழக்கம்” என்று சும்மாவா சொன்னார்கள்.

அலுவலக மீட்டிங்குகளில் கைகொடுத்தல் என்பது முக்கியமான
நிகழ்வு. ஒருவர் கைகுலுக்கும் ஸ்டைலை வைத்தே அவர்
எப்படி பட்டவர் என அறிந்துக்கொள்ள முடியும்.

வடக்கே பெரியவர்களைக்கண்டால குனிந்து அவர்கள் காலைத்தொட்டு
வணங்கும் பழக்கம் இருக்கிறது. இறைவனிடம் கூட சரணாகதிதான்
பெஸ்ட். வேலை பிடித்தவனின் காலை பிடித்துக்கொண்டால்தான்
வேதனை இல்லாத மனம் கிடைக்கும். வளர்ந்த பெரியவர்கள் கூட
ஓடிப்போய் அம்மாவின் மடியில் படுக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
காரணம் அந்த கதகதப்பு.

திருமண பந்தத்தில் கூட கைபிடித்து தான் பல சடங்குகள்.
தலையில் ஜீரகம்+வெல்லம் கலந்த கலவையை வைப்பதுதான்
தெலுங்கு சம்பிரதாயத்தில் முக்கியம். தாலிகட்டுவதெல்லாம் கூட
இரண்டாம்பட்சம்தான்.

தோழிகளைக்கண்டால் கட்டிக்கொள்ளும் போது பெருமையாக இருக்கும்.
ஆண்களுக்கும் அப்படித்தான். “டேய் மச்சான்” என்று தோள் சேருவார்கள்.
இத்தனை நல்லது இருந்தும் பலருக்கு தொடுவதே பிடிக்காது.
பிள்ளைகள் வந்து கட்டிக்கொண்டால் கூட எட்ட நில்லு என்றே சொல்வார்கள்.

பிள்ளைகளுக்கு வயது ஆக ஆக அவர்களை கட்டிக்கொள்வதை ஏறக்கட்டி
விடுகிறோம். ”ஏழு கழுதை வயசாச்சு! இன்னும் என்ன கொஞ்சல்” என்று
எகிருவார்கள். உண்மையில் பதின்மவயதுக்குழந்தையை கட்டி அணைத்தால்
தனக்கு தன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என நம்பிக்கை இருக்கும்.
சின்னதாக இருக்கும்பொழுது எந்தக் கையை பற்றிக்கொண்டு நடந்தார்கள்
அந்தக் கை தன்னோடு எப்போதும் இருப்பதை உணரும்பொழுது அவர்களின்
தன்னம்பிக்கை வளர்கிறது.


அனைத்து தொடுதலிலும் புனிதமானது கணவன் மனைவி உறவு.
ஆனால் ஏனோ பலருக்கு பகலில் அருகருகே அமர்வது கூட
பிடிக்காது. இந்த நிலையில் தொட்டுக்கொள்வதாவது?? யாரும்
தவறாக நினைத்துவிடுவார்களோ! வயது வந்த பிள்ளை இருக்கிறானே!
என ஏகப்பட்ட பயங்கள்தான் பெரும்பான்மை காரணம். இரவில் மட்டும்
நெருங்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். காரணம்
பெண்ணுக்குத் தேவை அன்பு, அனுசரணையுடன் நானிருக்கிறேன் என
தன் அருகாமையை எப்போதும் உணர்த்தும் கணவன். மற்றதெல்லாம்
கடைசிதான்.

வயதான காலத்தில் அன்புக்குரிய துணையோடு கைபிடித்து
உனக்கு நான் எனக்கு நீ என நடக்கும் பெரியவர்களை பார்க்கும்பொழுது
மனதிற்கு இதமாக இருக்கும் தானே!! அவர்கள் கைபிடித்து
நடக்கும் அழகே அழகு!!!!!

கடைசியாக உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் எப்போது கட்டியணைத்தீர்கள்!!!
நினைவுப்படுத்திப்பாருங்கள். உங்களின் தொடுதலுக்காக, அதில் பொங்கும்
அன்புக்காக அவர் ஏங்கிக்கொண்டிருக்கலாம். அந்த அன்புக்குரியவர் உங்கள்
வளர்ந்தக் குழந்தை, மனைவி/ கணவன், அம்மா,அப்பா, அக்கா, தங்கை
என பெரிய லிஸ்டே இருக்கலாம்!! அன்பெனும் செடிக்கு தொட்டணைப்பது
தண்ணீர் ஊற்றுவது போல!

வசூல்ராஜா எம்பீபீஎஸ் படத்தில் கமலின் “கட்டிப்பிடி வைத்தியம்” உண்மை.
ஆனால் அதை வெளியாருக்கு செய்வதை விட நம் வீட்டில் இருக்கும்
நம்மவர்களுக்கு செய்து அவர்களை குஷிப்படுத்தலாமே!!!
நம் வீட்டில் நம்முடன் இருப்பவர்களைப் பற்றி நாம் பெரிதாகக்
கவலைப்படுவதில்லை காரணம் ஆங்கிலத்தில் அழகாக
சொல்வது போல “WE ARE TAKING THEM FOR GRANTED"
இந்த ஒற்றைவரி சொல்லிவிடும் எல்லா விஷயங்களையும்.

தொட்டால் சிணுங்கி போல சுருங்கிவிடாமல் தொட்டால் மலரும்
பூக்களாய் அன்பை வளர்ப்போம். தயங்காமல் டச்சிங்.. டச்சிங்க..


பனீர் நல்லதா?!! கெட்டதா??!!

ஒரு ஹோட்டலுக்கு போயிருந்தப்ப பக்கத்து டேபிளில் வந்த அமர்ந்தாங்க
ஒரு குடும்பம். மெனுகார்டை பாத்து அந்தம்மா அந்த சப்ஜீல பனீர் இருக்கும்
வேண்டாம்! இதுவும் பனீர் வேண்டாம்னு சொல்லிகிட்டே இருந்தாங்க.
பனீர் சாப்பிட்டா தப்பில்லம்மான்னு மகன் சொல்லவும் அவங்க பதில்,
“பனீர் சாப்பிட்டா குண்டாகிடுவோம்!!!”

உண்மையில் பனீர் நல்லதா கெட்டதா? பெரிய குழப்பம் தான் நமக்கு.
பனீர் எப்படி செய்யப்படுது?

மற்ற நாடுகளில் செய்யப்படும் சீஸ்வகைகளில்
இது முற்றிலும் வேறானது. ரென்னட் என்று சொல்லப்படும் enzyme சேர்க்கப்படாதது.
அதனால் சுத்தமான வெஜீடேரியன்கள் தாரளமாக பயப்படாமல்
எடுத்துக்கொள்ளலாம். (ஆமாம் நீங்க சீஸ் வாங்கும் பொழுது அதில்
ரென்னட் இருக்கா இல்லையான்னு பாப்பீங்களா? இல்லையா?
அது மாமிச வகையைச் சார்ந்தது)

பாலில் எலுமிச்சம் ரசம்/தயிர் ஊற்றி திரியவிட்டு, அதை துணியில்
வடிகட்டி வைத்து செய்வது தான் பனீர். அந்தத் தண்ணீர் வே வாட்டர்
என பெயர். சப்பாத்தி மாவு பிசையலாம். அதிகமாக வாந்தி
எடுப்பவர்களுக்கு அந்த வே வாட்டர் கொடுத்தால் சக்தி கிடைக்கும்.




ஊட்டச்சத்து நிபுணர்கள் பனீரை மிகச்சிறந்த புரதச் சத்து தரும் ஒரு
உணவாக சொல்கிறார்கள். பனீரில் கொழுப்புச் சத்தே கிடையாது.
நாம் பருப்பு போட்டு செய்யும் சாம்பார், கூட்டு வகைகளில்
கிடைக்கும் புரதச் சத்தை விட அளவான புரதமே பனீரில் இருப்பதால்
நாம் தாரளமாக பனீரை சாப்பிடலாம் என சத்தியம் செய்கிறார்கள்
நிபுணர்கள்.

பனீரீல் கால்சீயமும் இருப்பதால் எலும்புகளுக்கும் பற்களுக்கும்
நல்லது. வளரும் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. காய்கறிகளுக்கு
நோ சொல்லும் குழந்தைகளுக்கு அதில் கொஞ்சம் பனீர் சேர்த்து
கொடுத்துவிடுங்கள். அதிகம் புரதம் என்பதால் எளிதில்
செரிமானமாகாது. அதனால் அளவோடு கொடுங்கள்.

கடைகளில் லோ ஃபேட் பனீர், டோஃபு பனீர் ஆகியவையும் கிடைக்கிறது.
கடையில் வாங்குவதில் க்ரீம் சேர்க்கப்பட்டிருக்கலாமாம். வீட்டிலேயே
செய்யலாம் எப்பூடி? வருது வீடியோ!!



வாரத்திற்கு 3 நாள் பனீர் உணவில் சேர்க்கப்படுவதால் உடம்புக்குத்
தேவையான புரதச்சத்து, கால்சியச்சத்து கிடைச்சிடும். பால் குடிக்க
அடம் பிடிக்கும்குழந்தை கூட பனீர் விரும்பி சாப்பிடும். நல்லா
சாப்பிடக் கொடுங்க. நீங்களும் எடுத்துக்கோங்க. பனீர் சிறியவர்கள்,
பெரியவர்கள் அனைவருக்கும் நல்லது.

குழப்பம் தீர்ந்துச்சா? இனி தெகிரியமா ஹோட்டலில் பனீர் ஐட்டங்களுக்கு
ஆர்டர் கொடுக்கலாம். அதைவிடவும் சூப்பரா நீங்களே வீட்டில் செய்யலாம்.
சாப்பிடவாங்க ப்ளாக்குல இப்ப சப்பாத்தி வகைகள், சைட் டிஷ்வகைகள்
பதிவுகள் வந்துகிட்டு இருக்குல்ல. அங்க வாங்க. தெரிஞ்சிக்கோங்க.





Thursday, January 20, 2011

அரே ஓ சாம்பா!!!

மறக்கமுடியாத படம் ஷோலே!! ஷோலேவை ரீமேக் செய்ய நினைச்சு
அம்ஜத்கானின் குரல் இப்ப கம்பீரமா இல்லைன்னு அவரை அந்த
ரோலுக்கு நிராகரிச்சாங்கன்னு படிச்சு சிரிச்சுகிட்டே இருந்தேன்.
அமிதாப்புக்கு 67 வயசு, ஹேமமாலிஹி 60, தர்மேந்த்ரா 70, சஞ்சீவ்
குமார் பரலோகத்துக்கே போயிட்டாரு!! ஆனா ரீமேக் செஞ்சாலும்
அந்த மாதிரி படம் வருமா??? சந்தேகம் தான். பட படன்னு ஹேமா
மாதிரி பேச கூட யாராலும் முடியாது!

சரி ஷோலே புராணம் இப்ப எதுக்கு? என் மகனுக்கு எங்கேயிருந்துதான்
காரைப்பத்தியும், ஹோட்டல்ஸ் பத்தியும் இன்பர்மேஷன் கிடைக்குதோ??!!!
எங்க வெட்டிங் டேக்கே இந்த ஹோட்டலுக்கு போகணும்னு சொன்னான்.
ஏனோ அன்னைக்கு அங்க போகல. சரி தங்கச்சி பர்த்டேவுக்காகவாது
அங்கே போகணும்னு சொல்லிட்டார். பேகம்பேட்டில் இருக்கும்
”ஷோலே” அப்படிங்கற ஹோட்டல். அந்த தண்ணி டேங்கிலேர்ந்து
எல்லாமே சூப்பர். வீரு,ஜெய் வீடுன்னு எழுதி அங்க அவங்க போட்டோ
வெச்சிருந்தாங்க. அதுல அமிதாப் படம்தான் கொடுமை!!!


ஹேமமாலினி ஷோலேவுல அழகா இருப்பாங்க. அவங்களை ஏதோ
அரக்கி மாதிரி வரைஞ்சிருந்ததுதான் கொடுமை. ஆனா டாகூர், அம்ஜத்கான்,
அந்த ஜெயலர் அஸ்ரானி போட்டோக்கள் அருமையா இருந்தது.


சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம். அலாகரட்டி மெனுதான். பைசா வசூல்னு
சொல்வாங்களே அது இங்கே நிஜம். விலையும் அநியாயம் இல்லை.
தக்காளி சூப் இன்ஸ்டண்ட்டால செய்யாம ஒரிஜனலா செஞ்சிருந்தாங்க.
சுவை அபாரம். “Desi ghee ki paratha" அப்படின்னு ஒண்ணு இருக்கு.
நம்ம ஆலு,கோபி, பனீர் பராத்தக்கள்தான். ஆனா நெய் சொட்டச்சொட்ட. தொட்டுக்க
தயிர் ம்ம்ம்ம்... ஒரு ப்ளேட் 2 (நாலு ஹாஃப்) கொடுக்கறாங்க.
விலை 110/-. லொகிக்கி கோஃப்தான்னு நம்ம சுரைக்காய் கோஃப்தா
சாப்பிட்டோம். சூப்பர். இந்த ஹோட்டலின் ஷ்பெஷாலிட்டின்னு எனக்கு
பட்டது உணவு ஃப்ரெஷ்ஷா இருப்பதால சுவை நல்லா இருக்கு.
(சில ஹோட்டலிகளில் மிஞ்சியதை சூடு செஞ்சு கொண்டு வந்து
கொடுப்பாங்க)

burrp.com இந்த ஹோட்டலை தன்னோட
லிஸ்டில் சேத்திருக்கு.

celebrity hotels குருப்பை சேர்ந்தது இந்த ஹோட்டல். ஹைதை
ஷமீர்பேட்டீல் செலிபிரட்டிரிசார்ட் இருக்கு. பிரஜய் வாட்டர் ஃப்ரண்ட்
எல்லாம் இவங்களோடதுதான்.

மெனு கார்ட்ல ஷோலே டயலாக்குகள், ஷோலே பத்தின அபூர்வ படம்,
இருக்கு. மெனு கார்ட்ல கடைசியா கப்பரோட படம் போட்டு அவரோட
ஃபேமஸ் டயலாக் ஒண்ணு.

தூர் தூர் காவோன் மே ஜப் பச்சா ரோத்தா ஹை!!
தோ மா கெஹ தீ ஹை!

சோ ஜா பேட்டா! சோ ஜா பேட்டா!

வர்ணா கப்பர் ஆ ஜாயேகா!!

DHOOR DHOOR GAAOON MEIN

JAB BACHA ROTHA HEIN

THO MA KAHATHE HAI

SO JAA BETA... SO JAA

VARNA

GABBAR AA JAYEGA!!!!

டெஸ்ட்டாக சூப்பர் ரஸமலாயுடன் டின்னர் இனிதே நிறைவேறியது.

celebrity hotels இந்த லிங்குல ஹோட்டலோட சில போட்டோக்கள்.










Wednesday, January 19, 2011

HAPPY BIRTHDAY AMRUTHA

அம்மா நல்லா ப்ரே செஞ்சுகோங்க!!

எதுக்கு??

19த் தெலங்கானா பந்த் ஏதும் வந்து ஸ்கூல் லீவு விட்டுடக்கூடாது!!!
ஏன் அன்னைக்கு என்ன?
என்னோட பர்த்டேம்மா!!

பர்த்டேதானேன்னு சும்ம சொன்னேன். முறைத்த முறையில்
நான் பஸ்மம் ஆகிப்போயிருப்பேன். :))

ஜனவரியில் வரும் பிறந்த நாளுக்கு டிசம்பரிலேயே நச்சரித்து
ட்ரெஸ் வாங்கி வைத்தாகிவிட்டது!!

அண்ணா ஒரு ட்ரெஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.



என்ன மெனு இன்னைக்கு? என கேட்டதற்கு
மதியம் லஞ்சிற்கு பாக்கெட் புளியோதரை(எம்டிஆர்)சோற்றில்
கலந்து வேணும். கேசரி. சரி. அத்தோடு காலை டிபனாக
காஞ்சிபுரம் இட்லியும் காஸ்ட்லி சட்னி(அதாங்க வெங்காய சட்னி)
ஆச்சு.

இரவு டின்னருக்கு எங்க போகப்போறோம்? எனக்கேட்டாள்.
நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கார்னர் ஷாப்பில் பாவ்பாஜி.
அதுவும் உனக்கு பிடித்த சீஸ் பாவ்பாஜி. போதும்தானேன்னு
நானும் அண்ணாவும் கலாய்த்து கொண்டிருக்கிறோம். :))

இத்தனையும் எங்கள் அன்புச் செல்லம் அம்ருதாவின்
பிறந்தநாளுக்குத்தான். ஒபாமா வந்தது சென்றதைவிடவும்
பக்கா ப்ளானிங் முன்னகூட்டியே நடக்குது. எங்கம்மா
ரொம்ப முன்னேறிட்டாங்க!!!

இந்த நந்நாளில் எல்லா வளமும் பெற்று, நோயற்ற
வாழ்வும், குறைவற்ற செல்வமும் அடைந்து மகிழ்ச்சியோடு
வாழ வாழ்த்தும்.

அம்மா, அப்பா & ஆஷிஷ் அண்ணா.







Tuesday, January 18, 2011

நான் சோத்துக்கட்சி இல்லீங்கோ!!!!!

நம்ம கோவை2தில்லி ஒரு தோசை தர்றதா சொல்லிருந்தாங்க.
இதுக்கு எதிர் பதிவு போட்டே ஆகணும்னு இந்தப் பதிவு.




இரண்டாவது பிரசவத்திற்காக அம்மா அம்மம்மா வீட்டுக்கு(லோக்கல்தான்)
போயிருந்தாங்க. நானும் சின்ன மாமாவும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்.
அம்மம்மா மாமாகிட்ட எனக்கு மதிய உணவு கொடுத்தனுப்புவாங்க.
ஒரு நாள் சப்பாத்தி கொண்டு வந்திருந்தார் மாமா. நான் சாப்பிடமாட்டேன்னு
ஒரே அடம் பிடிச்சேன். அன்னைக்கு சோறும் கொடுக்கலை. என்ன
செய்யன்னு தெரியாம என் சின்ன மாமா,” ஏன் சப்பாத்தி வேணாம்?”
அப்படின்னு கேக்க,” கெட்டியா இருக்கும் மாமா, வெட வெடன்னு
அதை எப்படி சாப்பிடன்னு கேட்டேன்” சப்பாத்திங்கற பேர்ல எங்க் அவ்வா
செஞ்சு கொடுத்த ஒரு வஸ்துவால வந்த பயம் அது. சின்ன மாமா,
இந்தச் சப்பாத்தியை சாப்பிட்டு பாரு! சாஃப்டா எப்படி இருக்குன்னு
சொல்லு, பாத்தியா பை பையா இருக்கும்னு பிச்சு காட்டி ஒரு கடி
ஊட்டி விட்டாரு!!” ம்ம்ம் செம சாஃப்டா அம்மம்மா சப்பாத்தி செஞ்சு
அனுப்பிருந்தாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சுச்சு எனக்கும் சப்பாத்திக்கான
பந்தம்!!

ஆனா அம்மம்மா, சித்தியைத் தவிர சப்பாத்தி அருமையா யாரும்
செஞ்சதில்லை. அம்மாவும் சரி அவ்வாவும் சரி அப்படித்தான். இதுல
சப்பாத்தி நிறைய்ய செய்ய வேண்டியிருக்குன்னும், அதனால தனது
கைகள் வலிக்குதுன்னு இரண்டு பேரும் புலம்பி(இதுல மட்டும் மாமியாரும்
மருமகளும் எப்படி ஒத்து போனாங்க??!!) சப்பாத்தி எப்பவாவது ஒரு
முறை செய்யும் பலகாரம் ஆச்சு. சில சமயம் அம்மா அதுக்கு தோதா
குருமா செய்வாங்க.

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனதாலும், அவ்வாவால அடுப்படியில்
எல்லா நேரமும் நிக்க முடியாது என்பதாலும் எங்க வீட்டுல அதிகாலையிலேயே சோறு வடிச்சு வெச்சுடுவாங்க. மதியம் ஸ்கூல் முடிஞ்சு வந்து ஆறிப்போய் கிடக்கும்(திரும சூடு செய்வதா? சான்சே இல்லை) அந்த சோத்தைதான் சாப்பிடவேணும்!! :(( காலையும் இரவும் டிபன் எனும் பெயரில் அரிசிக்கட்டி!!!சோறு சாப்பிடவேண்டும் என்றால் எப்படி இருக்கணும்? ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம, உதிர் உதிரா சுடச்சுட இருந்தால் ருசிக்கும்!!! நம்ம தென்னிந்திய குடும்பங்களில் அரிசிச்சோறுதான் பிரதான உணவு.

மும்பை போனதும் அம்மம்மாகிட்ட சப்பாத்தி போட கத்துகிட்டேன்.
சப்பாத்தி போடுவதை விட அந்த மாவை பிசையும் கலையில்தான்
இருக்கு சூட்சுமம். சரியாக பிசைந்து அழகாக உருட்டி வட்டவட்டமாக
இட்டால்...... அம்மம்மாவீட்டுக்கு எதிரில் ஒரு குஜராத்தி குடும்பம்.
அவங்க வீட்டுப் பெண் தீப்தி என் ஃப்ரெண்ட். வேலைக்கெல்லாம் போகலை.
ஆனா என் கிட்ட,”நான் செய்யும் ஒரு சப்பாத்தியும் உப்பி வரும் தெரியுமான்னு!!” பெருமை பீத்தக்காரியா சொல்ல சொல்ல எனக்கும் ரோஷம். “நாங்களும் செய்வோம் சப்பாத்தின்னு!!” வெரைட்டி வெரைட்டியா செய்யக் கத்துகிட்டேன்.

எண்ணெய் போடாம புல்கா, அதை தவாவில் கொஞ்ச நேரம், அடுப்பில் நேரடியா என போட்டு நெய் தடவியோ, தடவாமலோ செஞ்சா சும்மா சாஃப்டா இருக்கும். கொஞ்சமா எண்ணெய் விட்டு பிசைஞ்சு, சின்னதா செஞ்சு அதை மடித்து போட்டு செய்வது சப்பாத்தி. நான் செய்யும் போது அந்தச் சப்பாத்தி சந்தோஷத்துல அப்படியே உப்பி வரும்(பூரி போல). ஆச்சு கல்யாணம் முடிச்சு ஹைதை வந்தாச்சு. அவங்க வீட்டுலயும் சப்பாத்திங்கற பேர்ல தோசைக்கல்லு சைஸுக்கு ரொட்டி மாதிரி கெட்டியா ஒரு வஸ்துதான் செய்வாங்களாம். நான் செஞ்சு கொடுத்த சப்பாத்தி சாப்பிட்டு அயித்தான் மயங்கினார்னு சொல்லவும் வேணுமா?? !!:) (பலருக்கு சப்பாத்தி பிடிக்காம போகக்காரணம் பெருசு பெருசா வரட்டி மாதிரி செய்வதுதான். சிலருக்கு சேமியா உப்புமான்னா ஆகாது. காரணம் கொச கொசன்னு எண்ணெய் ஊத்தி, பாயசமா? உப்புமான்னு குழம்பும் ஸ்டேஜுல அது இருக்கும். ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம சேவை மாதிரி செஞ்சு தொட்டுக்க ஊறுகாய் இருந்தா சேமியா உப்புமா கூட அமிர்தம் தான்)


கல்யாணம் ஆன அதே மாதம் பெங்களூரில் அயித்தான் கம்பெனி ஃபேமலி
கெட்டுகதர் நடந்துச்சு.” உங்க வொய்ஃப் சமையல்ல எது பிடிக்கும்னு?”
எல்லோரும் கேட்க அயித்தான் சொன்னது,” பூரியைவிட கொஞ்சம் பெருசா,
மெத்து மெத்துன்னு சப்பாத்தி செய்வா பாருங்க!!” அப்படின்னு புகழ்ந்தாரு.
(எனக்கு வெக்கம் வெக்கமா வருது!) சென்னையிலிருந்து இவங்க ஆபீஸ்காரங்க எல்லோரும் புறப்பட்டு மும்பைக்கு மீட்டிங்கிற்காக போனாங்க. ஆளுக்கொண்ணு செஞ்சு எடுத்துகிட்டு போனாங்க. நான் அயித்தானுக்கு ஒரு கிலோ சப்பாத்திமாவில் சின்ன சின்னதா சப்பாத்தி செஞ்சு, தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலா செஞ்சு அனுப்பினேன். அதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சுக்க சொல்லியிருந்தேன். காலை 7 மணிக்கு கிளம்பின ட்ரையினில் 8 மணிக்குள் அந்தச் சப்பாத்தி, உருளை மசால் காலி!!! அந்தச் சப்பாத்தி செஞ்சுகிட்டு இருக்கும்பொழுது கிச்சனில் வந்து பார்த்த அயித்தானின் அண்ணன் மகள்,”சப்பாத்தி இப்படி கூடச் செய்யலாம்? வாயில் போட்டதுமே கரையுதே!! நீங்க சப்பாத்தி ஷ்பெஷலிஷ்ட் சித்தின்னு”” பாராட்டு.

சப்பாத்தி புராணம் பாடுவதால எனக்கு சோறே சமைக்க வராதுன்னு இல்லை.
அதுவும் கலக்குவோம். ஆனா எனக்கு சோறு சமைப்பதை விட சப்பாத்தி
ரொம்ப ஈசி. நின்னுகிட்டு போடனும் அது இதுன்னு சொல்றவங்க நான்
சொல்வதை கொஞ்சம் யோசிங்க. சோறு + காய்கறி மட்டும் செஞ்சா
போதாது. கூட்டா, பொரியலான்னு பாத்து அது தக்க குழம்பு/சாம்பார்/ரசம்
இல்லாட்டி ருசிக்காது. இம்புட்டு செய்வதற்கு பதில் மாவை பிசஞ்சோமா!
தட்டி ஹாட் பேக்ல போட்டோமா! சப்ஜி செஞ்சோமான்னு ஹாயா
சீக்கிரமா வேலை முடிச்சிடலாம்.

சப்பாத்தியிலயும் வெரைட்டி செய்யலாம். புல்கா, சப்பாத்தி, பரோட்டா,
பராத்தா. இதுல ஸ்டப்டு பராத்தா செய்யும் பொழுது தொட்டுக்க தனியா
சப்ஜி செய்யத்தேவையில்லை. தொட்டுக்க தயிரில் ரெய்தா செஞ்சுகிட்டா
போதும். தேப்லான்னு ஒரு வகை. குஜராத்தி ஐட்டம். கோதுமை மாவில்
கசூரி மேத்தி, காரப்பொடி, உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காம தயிரில்
பிசைந்து சப்பாத்தி செஞ்சு எண்ணெய்/ நெய் விட்டு சுட்டு எடுத்தால்
தொட்டுக்கொள்ள கூட எதுவும் தேவை இருக்காது. இது நீண்ட தூரம்/
நீண்ட பயணங்களுக்கு ஏற்றது. 3 நாள் ஆனாலும் கெடாது!! புளி சோறும்
3 நாள் ஆனாலும் ருசியா இருக்கும்தான். ஆனா தேப்லா லைட் வெயிட்டா
இருக்கும்!!!  பாவ்பாஜி பராத்தான்னு ஒண்ணு செய்வேன். சூப்பரா
இருக்கும். (ரெசிப்பி பேரண்ட்ஸ் கிளப்புல இருக்கு)

சப்ஜி ஆஹா அதுலதான் எம்புட்டு வெரைட்டி. தால் தடுக்கா, தால் மக்கனி,
சன்னா மசாலா, பாலக் பனீர், ஹரியாலி பனீர், பனீர் மசாலா, மிக்ஸட் வெஜிடபிள், குருமா, மலாய் கோஃப்தா, வெஜிடபில் கோஃதா, தம் ஆலூ, ஆலு மட்டர், மட்டர் பனீர், இன்னும் நெறைய்ய்.....ய்ய அலுக்காம வெரைட்டி
வெரைட்டியா செஞ்சு கொடுத்துகிட்டே இருக்கலாம்.

அரிச்சோறோட ருசியில நாம ஃபுல்லா வளைச்சுகட்டி தொப்பையை
கூட்டும் வேலை நடக்கலாம்! ஆனா அதுவே சப்பாத்தின்னா அளவோட
எடுத்துக்க முடியும். இரண்டுலயும் அதே கார்போஹைடரேட்தான் இருக்குன்னாலும் சப்பாத்தியோட ஷ்பெஷாலிட்டி இது.

ஆஷிஷ் பிறந்ததும் இரவில் சப்பாத்தி என்பது எழுதப்படாத விதியாகிடிச்சு.
ஐயா தன்னோட நெஸ்டத்தை விட்டுட்டு சப்பாத்தி சாப்பிடத்தான் விரும்புவாரு. இப்பவும் தொடர்ந்து 3 நாளைக்கு கூட சோற்றைக் கண்ணில் காட்டாம, சப்பாத்தி செஞ்சு போட்டாலும் என் மகனுக்கு குஷிதான். அயித்தானுக்கும் அம்ருதாவுக்கும் எதுன்னாலும் ஓகேதான். என் மகன் என்னைப்போல!! :))

அயித்தான் ஊருக்கு போயிட்டா ஸ்கூலுக்கு பசங்களுக்கு வெரைட்டி
சப்பாத்தி செஞ்சு அனுப்பிடுவேன். வேலை சீக்கிரம் முடிஞ்சிடும்.
இப்பவும் தினமும் இரவு சப்பாத்திதான். இன்னைக்கு மூளிபராத்தா,
(முள்ளங்கி ஸ்டஃப்டு பராத்தா) வெள்ளரிக்காய் ரெய்தா!!
சுடச்சுட சாப்பிட வாங்க!!!






Monday, January 17, 2011

பஞ்சவடி, திரிவேணி சங்கமம்.

இராமயணத்திற்கும் நாசிக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. வனவாசத்திற்கு
புறப்பட்ட இராமர், சீதை லட்சுமணருடன் தங்கியது இங்கே தான்.
அதுவும் பஞ்சவடியில் (பஞ்ச=5, வடி= மரம்) 5 ஆலமரங்கள் இருக்கும்
இடத்திற்கு பஞ்சவடியென்று பெயர். அங்கு செல்வதற்கு முன் இந்த
த்ரிவேணி சங்கமம் சென்றோம். கங்கா காட் என்று அழைக்கப்படும்
இந்த இடத்தில் அருணா,வருணா,கோதாவரி ஆகிய 3 நதிகளும்
சங்கமிக்கின்றன்.


பல்லக்கில் சாமியை ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என
ஒரு பெண் வீதியை அடைத்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
மிக நேர்த்தியாக அந்தப் பெண் போட்டுக்கொண்டிருந்ததை அனைவரும்
பார்த்துக்கொண்டிருந்தனர். இதோ அந்தக்கோலம்.

இதுதான் கபிலேஷவரர் கோவில். இந்தக்கோவிலில் ஒரு சிறப்பு
உண்டு. இங்கே நந்தி கிடையாது. நந்தி இல்லாத சிவன் கோவிலே
கிடையாது. ஆனால் இங்கே மட்டும் ஏன் விதிவிலக்கு? சிவனுக்கு
ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை நந்திதேவர் தீர்த்துவைத்தாராம். சொல்லிகொடுப்பவர்
எவரும் குரு. எனவே சிவன் இங்கே தனக்கு குருவாக இருந்து நந்திதேவர்
உபதேசித்ததால் நந்திதேவர் இங்கே இருக்கவேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

நகரத்தார் உருவாக்கியிருக்கும் முருகன் கோவில் ஒன்று தரிசித்தோம்.
நகரத்தார் வீடு போன்ற அமைப்பில் முற்றத்தில் அழகன் முருகன்
அமர்ந்திருக்கிறான். புத்தாண்டு அன்று என்னை தரிசிக்காமல்
இருக்கவேண்டாமென அப்பன் முருகன் தரிசனம் தந்துவிட்டான்.

அங்கேயிருந்து “காலாராம் கோவில்” சென்றோம். கருங்கல் சிலையில்
சீதா,ராமர், லட்சுமண உருவங்கள். 1782ஆம் ஆண்டு கட்டப்பட்ட
கோவில் இது. அங்கேயிருந்து நடக்கும் தூரத்தில்
பஞ்சவடி. இங்கே சீதாகுகை இருக்கிறது. உள்ளே கஷ்டபட்டு நுழைந்து
பார்த்தால் சீதா பூஜித்த சிவலிங்கம் தெரியும். இங்கேயிருந்துதான் சீதையை
இராவணன் கடத்தி சென்றதாக சொல்கிறார்கள். எதிரில் பத்ராசலத்தில்
வைத்திருப்பது போல ராவணன் சீதை அபகரிப்பதை வண்ண சிற்பங்களாக
அமைத்து வைத்திருக்கிறார்கள்.

நாசிக் ட்ரிப்பில் ரசித்து ரசித்து சாப்பிட்ட அயிட்டங்கள்!!!

மஹாராஷ்ட்ராவில் பிரசித்தமான வடாபாவ். ம்ம்ம்ம்ம்
ஒருகாலத்தில் எனது நித்திய உணவாக இருந்த ஐட்டம்.
பசங்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் நாசிக்கில்
வாசுதேவ் எனும் கடையில் கிடைக்கும் வடாபாவ் சூப்பர்.


அப்புறம் மஹாராஷ்ட்ரர்கள் மட்டும் அறிந்திருக்கும் ஒரு ஷ்பெஷல்
“மிசல் பாவ்”. சாப்பிட்டால் முகமெல்லாம் வியர்த்து கொட்டும்.
எஸ்ஸு கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் நல்ல சத்து.


முளைகட்டிய பயறுகளால் செய்யப்படுவது. சப்ஜி மாதிரி.
அதை ப்ரட்டுடன் சாப்பிடவேண்டும். புனேவில்தான் சூப்பராக
இருக்கும். நாசிக்கிலும் ரசித்தேன்.

அப்புறம் இருக்கவே இருக்கு. காந்தா போஹா. வெங்காயம்
போட்டு செய்யப்படும் அவல் உப்புமா.

நாசிக்கில் கிடைக்கும் சிவ்டா( chivda) கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால்
இந்த லக்‌ஷ்மிநாராயண் சிவ்டா கொஞ்சம் இனிப்பாக நன்றாக் இருக்கும்.
2 பாக்கெட் வாங்கிக்கொண்டேன். அடுத்த முறை நீங்கள் யாரும்
நாசிக்கோ, பூனேவோ சென்றால் இதை ருசி பார்க்க மறக்காதீர்கள்.


செல்லும் இடத்தில் சிறப்பான இடங்களை பார்ப்பது மட்டுமல்லாமல்
அந்த இடத்தின் ப்ர்த்யேகமான உணவு பதார்த்தங்களையும் ருசி
பார்த்தால்தான் அந்த இடத்தின் கலாசாரத்தை நாம் புரிந்து
கொள்ள முடியும். உணவு கலாசாரத்தின் ஒரு அங்கமாயிற்றே!!!

இத்தோடு ஷனிசிங்கனாபூர், ஷீரடி, நாசிக் பயண குறிப்புக்கள் முடிந்தது.


Thursday, January 13, 2011

கோதவரித்தாயே!!! உனக்கா இந்த நிலை!!!!1


சொட்டு சொட்டா சொட்டி, குளம்போல இருக்கும் கோதாவரியை பாத்தாச்சு.
சுழித்து ஓடும் கோதாவரியைப் பாக்கனுமேன்னு ஆசை. சித்தப்பா கூட்டிகிட்டு
போனாரு. பத்ராசலத்தில் ஓடும் நதி, பாபிகொண்ட ட்ரிப் (போட்டில்
போனேனே! ஞாபகம் இருக்கா? இல்லாட்டி இங்க ஒரு எட்டு போய்
பாத்திட்டு வாங்க.) இதெயெல்லாம் நினைச்சுகிட்டு அங்க போனா...???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மழை நேரத்துல மொத்த இடமும்
மறைஞ்சு போயிடுமாம். இப்ப இவ்வளவுதான் தண்ணி!!!


சரி அதுவாவது சுத்தமா இருக்கான்னு பாத்தா??? ப்ச்...
அதுல ஓடுறது தண்ணியே இல்லை. சுத்தி இருக்கும் ஆலைகளிலிருந்து
வரும் கழிவுதான்!!!! எங்கயோ பிறந்து கல்யாணம் செஞ்சுகிட்டு
போன இடத்துல கஷ்டபடற பொண்ணுவிட கேவலம். பிறந்த
வீட்டுலேயே கொடுமை நடக்குது!!! இங்கே இவ்வளவு கேவலமா
இருக்கும் கோதாவரி சுழித்து ஓடும் தெய்வீக நதியாக பத்ராசலம்,
ராஜமுந்திரி பக்கம் வருவது எப்புடி???? கடவுளே!!!


அப்புறம் ஒரே குழப்பம். பத்ராசலம் போனபோது லட்சுமண சூர்ப்பனகையின்
மூக்கை அறுத்த இடம், இராவணன் சீதையை அபகரித்த இடம், சீதை
குளித்து, புடவை ஆறப்போட்ட இடம் என பல இடங்கள் பார்த்தோம்.
இங்கே நாசிக்கிலும் லட்சுமண் ரேகா என்று ஒரு இடம். அங்கேதான்
சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாக இந்தச் சிலை வைத்திருக்கிறார்கள்.

சூர்ப்பனகைக்கு இன்னொரு பெயர். நாசிகா. அவளது பெயரால்
தான் இந்த இடத்திற்கு நாசிக் என்று பெயர் வந்திருக்கிறது.

இப்போழுது இருக்கும் இந்தியவரைபடத்திற்கும் இராமயண கால
வரைபடத்திருக்கும் வித்தியாசம் இருந்திருக்கும். இதுவும்
கோதாவரி தீரம்,அதுவும் கோதாவரி தீரம். எல்லாம் பக்கத்துலேயே
தான் இருந்திருக்கும்.


இன்னொரு முக்கிய விஷயம் இங்கே கோதாவரியோடு கபில
தீர்த்தமும் வந்து இணைகிறது.

சீதை தன் இரு குமாரர்களுடன் இருப்பது போல சிலையும்
வைத்திருக்கிறார்கள்.


நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க. ஆனா விஞ்ஞான
முன்னேற்றத்திற்கு நாம் பலிகொடுப்பது நதிகளை என்றால் அதன்
விளைவுகள் மோசமானதால்ல இருக்கும்?? இதைப்பத்தி
அரசாங்கம் ஏதும் செய்யாமல் இருப்பது மனதுக்கு வேதனையாத்தான்
இருக்கு. புலிகளுக்காக குரல் எழுப்பவது போல( save tigers)
இனி நதிகளை மாசுபடுத்துவதற்கும் குரல் எழுப்ப வேண்டியது
மிக அவசியாகிகிட்டு வருதுன்னு நினைக்கிறேன்.

பதிவு பெருசா போனதால... மீதி அடுத்த பதிவுல.

Wednesday, January 12, 2011

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்...

தடுக்கி விழுந்தால் ஏதாவது கோவிலின் வாசலில் தான்
விழவேண்டும் என்பது போல இருக்கிறது நாசிக். நாசிக்கிலிருந்து
45 நிமிட பயணத்தில் இருக்கிறது த்ரயம்பகம். ஜோதிர்லிங்கங்கலில்
ஒன்று இந்த த்ரயம்பகம். ஜனவரி 1 ப்ரதோஷமாம். அதுவும்
சனிபிரதோஷம். மிக மிக விசேஷம். இது ஏதும் தெரியாமல்
அங்கே ஓரளவு கூட்டத்தை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு
செம கூட்டம் பார்த்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தது.

வரிசையில் நின்றிருந்தோம். திடும்மென எல்லோரும் கோவிலின்
பின்புறம் இருக்கும் இடத்திற்கு வரவும் அந்த வழியாக தரிசனம்
என்று சொல்ல கடைசியில் நின்றிருந்த நாங்கள் ஓடி கம்பிகளுக்குள்
புகுந்து முதலில் நின்றோம். இந்த வழியாக மஹாசிவராத்திரியின்
போதுதான் தரிசனத்திற்கு அனுமதிப்பார்களாம்.


நாங்கள் சென்ற பொழுது மஹா பூஜை ஆரம்பமாகி விட்டது
சீக்கிரம் தரிசனம் செய்து வரும்படி அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது.
தள்ளுமுள்ளு கூட்டம். திருப்பதியில் நடக்கும் ”ஜரகண்டி” போல
கையை பிடித்து தள்ளியே விட்டுக்கொண்டிருந்தார்கள் போலிஸார்.
1 நிமிடம் கூட நின்று தரிசிக்க விடாமல் அப்படி என்ன என்று
கத்திவிட்டேன்.” அவ்வளவு தூரத்திலிருந்து தரிசனத்திற்கு வருகிறோம்.
இப்படியா நடத்துவீர்கள்!!” என்று சீர ஓரமாக நின்று கண்ணாடியில்
தெரியும் பிம்பத்தை தரிசிக்க அனுமதித்தார் ஒரு பெண்போலிஸ்.

இந்த ஜோதிர்லிங்கத்தில் லிங்கத்தின் மேல்பாகம் இல்லாமல் இருப்பது
விசேஷம். இதோ கோபுர தரிசனம்.



ருத்ரனின் ரூபமாக போற்றி அணியப்படும் ருத்ராட்சங்கள் விற்றுக்
கொண்டிருந்தார்கள். பஞ்சமுகி, சதுர்முகின்னு சொல்வாங்க. நமக்கு
தெரியாம ஏமாந்திடக்கூடாதுன்னு போட்டோ மட்டும் எடுத்துகிட்டோம்.
நாகலிங்கம் மாதிரி இருந்த ருத்ராட்சம் ஒட்டினதா? தானா வளர்ந்ததான்னு
இப்ப வரைக்கும் சந்தேகம் தான் எனக்கு.!!

கோவிலுக்கு செல்லும் முன் கூட்டம் கூட்டமாக மாடுகள்,
அவற்றிற்கு அருகில் அகத்திக்கீரைகள் விற்கும் அம்மணிகள்.
கோவிலுக்கு போய் வந்தபின் மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்தோம்.


த்ரயம்பகத்தில் இன்னொரு சிறப்பு சுற்றி அமைந்திருக்கும் சைய்யாதிரி
மலையில் 2 மணிநேரம் ஏறி பார்த்தால் கோதாவரி உற்பத்தி ஆகும்
இடத்தை பார்க்கலாம். அங்கே சொட்டிக்கொண்டுதான் இருக்குமாம்.
நமக்கு அதெல்லாம அகாது என்பதால் என்னைப்போன்ற சோம்பேறிகளுக்காக
நந்தி வாயிலிருந்து கொட்டும் கோதாவரி ஒரு குளமாக அடிவாரத்தில்
இருக்கிறது. அதைப் பார்த்து ப்ரோட்சனம் செய்து கொண்டோம்.


இங்கே குளித்தால் கோதாவரி ஸ்நானம். த்ர்யம்பகத்தில் பித்ரு காரியங்கள்
(இறந்தவர்களுக்கு செய்வது) செய்கிறார்கள். கோவிலுக்கு அருகிலேயே
இவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சு

விஷ்ணு அனந்த சயனமாக படுத்திருக்க அதற்கு பக்கத்தில்
சின்ன குழியில் எடுக்க எடுக்க தண்ணீர் வந்து கொண்டே
இருக்கிறது. மேலெ மலையிலிருந்து வரும் கோதாவரியாம்
அது. நாமே எடுத்து விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யலாம்.
எப்பவும் சிவன் தான் அபிஷேகப்பிரியராக தலைக்கு மேலே
தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும். இங்கே விஷ்ணு!!
சின்னதாக கறுப்பாக அழகாக இருக்கிறது.

த்ர்யம்பகம் செல்லும் வழியில் அஞ்சனேரி என்று ஒரு இடம்.
இதுதான் அனுமன் பிறந்த இடமாம். பார்க்க போகலாம் சித்தப்பான்னு
சொன்னேன். மலைமேல ஏறணும்னு சொன்னது, நான் இங்கயே
இருந்து மனசால தரிசனம் செஞ்சுக்கறேன்னு சொல்லிட்டேன். :)

மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம். கேட்பது மகா புண்ணியம்.

Get this widget | Track details | eSnips Social DNA

நேற்றைய பதிவில் சொல்லியிருந்த படி குஜராத்தி சாப்பாடு
சாப்பிட்டோம். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு. நாம
எம்மாத்திரம். தூக்கம் சொக்க எல்லோரும் வீட்டுக்குபோய் நல்லா
தூங்கி எந்திரிச்சு, சூடா டீ குடிச்சு, கிளம்பியாச்சு!

எங்க போனோம். அடுத்த பதிவுல...