Total Pageviews

Monday, February 28, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி- 28/2/11

ஆந்திராவில் குளிர் காலத்தில் எதிர் பார்த்த வெப்பம்
வெய்யில் காலம் நெருங்கும் பொழுது சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.
ஒரு பக்கம் ஜகன் அண்ணா உண்ணாவிரதமா இருக்காரு.(டாக்டர்
உடம்பை குறைக்கச் சொல்லியிருப்பாரோ!!) தெலங்கானா பிரச்சனையில்
போன வாரம் நடந்த பந்த் பத்தாதுன்னு மார்ச் 5லேர்ந்து ஆர்ப்பாட்டம்
அதிகமா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. ஈஸ்வரா..... காப்பாத்துப்பா!!
மார்ச் 1 முதல் 9த்க்கு போர்டு எக்ஸாம்( சிபிஎஸ்ஸி ல இந்த வருஷத்
த்லேர்ந்து ஆரம்பிசிச்ருக்காங்க) அப்புறம் 10க்கு எக்ஸாம் எல்லாம்
வருது. இவங்க பிரச்சனையில வருங்காலத்தூணளின் வாழ்க்கை
கேள்விக்குறியாகிடாம இருக்கணும்!!!

அதான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை கொடுத்திருக்காங்கள்ல.அதுல
அவங்களே சொல்லியிருக்கும் 6 திட்டங்களில் ஒண்ணை செலக்ட்
செஞ்சு தீர்த்து விட வேண்டியதுதானே!! ஹைதை யூனியன் டெரிட்டரி
ஆனா எம்புட்டு நல்லா இருக்கும்!!

******************************************************************

ஆந்திர அசெம்பிளி அமளி துமளி பட்டுச்சு. கவர்னர் நரசிம்மன்
அறிக்கை படிக்கும் பொழுது மைக்கை பிடிச்சு ஒடைச்சது, அவரது
சேரைத் தள்ளிவிட்டது, அவர் படிச்சுகிட்டு இருக்கும் பொழுது பேப்பரை
உருவப்பாத்ததுன்னு செம ஹாட்..

ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களை ஒரு எம்பியோட டிரைவர்
தலையில் அடிச்சிருக்காரு. அடிடா அவனைன்னு ஏவிவிட்டது
மாண்புமிகு.கேசிஆரோட புத்திரன் கேடிஆர்.
அசெம்பிளிக்கு போகும் ஆளுங்களுக்கே இந்த கதின்னா சும்மா இருக்கும்
மிஸ்டர் பொதுஜனத்துக்கு பாது காப்பு ஏது???
************************************************************
இரயில்வே பட்ஜட் பாத்தேன். ஆஹா!! ஆஹா!! படக் படக்னு
கோவிச்சிக்கினு தீதீ பட்ஜெட் படிச்சது காணக் கண் கொள்ளாக்
காட்சி. கோவத்துல ஸ்கூல் பொண்ணு மாதிரி அவிக படக்னு
உக்காந்து கிட்டது கூட நல்லாத்தான் இருந்துச்சு. எலக்‌ஷன்
வரப்போறதால கட்டணத்தை உயர்த்தாம இருந்தாக. ஆந்திராவுக்கு
நிறைய்ய ட்ரையின் விட்டிருக்காக. எங்க புதுக்கோட்டைக்கும்
மன்னார்குடிக்கும் இடையே ரயில் பாதையை சீரமைச்சு ரயில்
விடப் போறாங்களாம்!! இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தவிர
வேற ஏதாவது ஒரு ட்ரையின் புதுகையிலேர்ந்து சென்னைக்கு
விட்டா புண்ணியமாப்போகும்!!

இன்னைக்கு மத்திய பட்ஜட். பாப்போம் என்ன பண்ணப்போறாங்கன்னு!
ஒழுங்கா வரிகட்டுற மாசச்சம்பளக்காறங்க வயித்துல பால் சொட்டாவது
வார்த்தா சரி. (ரொம்ப நாளா மண்டைய குடையற விஷ்யம் ஒண்ணு
இருக்கு. மாசச் சம்பளக்காரங்க கிட்ட மட்டும் சம்பளத்துலேர்ந்து
வரிக்குன்னு பிடிச்சுகிட்டுத்தான் சம்பளமே தர்றாங்க. ஆனா மத்தவங்க
வரியே கட்டாம ஏய்ச்சு பிட்டு போறாங்களே!! அவிங்கள ஒண்ணுமே
செய்ய முடியாதா!! ஏன்??!!!)
*********************************************************************
என்னக் கொடுமையோ தெரியலை!! புதுமையா இருக்கு.
திடும்னு மேகம் இருட்டுது மழை வர பாக்குதுன்னு நினைக்கும் பொழுதே
அடிச்சு ஊத்துது வானம். மப்பும் மந்தாரமாத்தான் இருக்கு. நடக்கட்டும்.
****************************************************************
ஆரம்பிச்சிருச்சு கிரிக்கெட் திருவிழா. அதுவும் பசங்களுக்கு பரிட்சை
இருக்கும் பொழுதுதான் இந்தத் திருவிழா வரும். இந்த வாட்டியும்
இப்படித்தான். பசங்களை படிக்க விடாம செய்ய என்னன்ன நடக்கணுமோ
அத்தனையும் நாட்டுல நடக்குது. நாமதான் பத்திரமா பாத்துக்கணும்.
*******************************************************************

ஊருக்கு போயிருந்தேன்ல. அங்க நடந்த ஒரு மேட்டரை கட்டாயம்
சொல்லியே ஆகணும். தெரிஞ்சவங்க கூட பேசிக்கிட்டு இருந்தப்ப
இந்த கரண்ட் கட்டால ரொம்ப பிரச்சனை! நமக்கு கரண்ட் இருந்தா
கேபிள் காரனுக்கு கரண்ட் இல்ல! போரடிக்குதுன்னு சொன்னாங்க.

எதுக்கு கஷ்டப்படணும்? பேசாம டிஷ் டீவி வாங்கிப்போடுங்களேன்னு!
சொன்னேன். அதுக்கு அவுங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு
நினைக்கறீக!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அட போம்மா! கேபிள்ல புது படம்லாம் போடறான்ல!! அது நீ
சொல்ற டிஷ்ஷுல வராதே!!..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



Sunday, February 27, 2011

ரவை புளி உப்புமா

அம்மா செய்யும் பக்குவங்களுக்கு நான் அடிமை.
கண்ட திப்பிலி தேசாவரம், பூண்டு போட்டு
ரசம் ஒண்ணு செய்வாங்க. அதைச் சாப்பிட்டா அடிச்சுப்
போட்டாப்ல தூக்கம் வரும். உடம்புல இருக்கும் அசதியெல்லாம்
போயிடும். (எண்ணெய் தேச்சு குளிச்சு இந்த ரசம் சோறு
மட்டும் சாப்பிட்டு பாருங்க அப்புறம் தெரியும் மகத்துவம்)
சரி சரி.... ரெசிப்பி சீக்கிரம் போடுறேன்.

அதுக்கு முன்னாடி இந்த வாட்டி அம்மா செஞ்சு
கொடுத்த (அம்மா கைபக்குவ) டிபன் ஒண்ணு. அதைப்
பத்தி சொல்லாட்டி எப்படி.

அரிசி மாவு கொண்டு செய்யப்படும் புளி உப்புமாவில்
வேலை அதிகம். மணல் மாதிரி உப்புமா செய்வதற்குள்
கை வலி கண்டுவிடும். ஆனால் அதே டேஸ்ட்டில்
அதிகம் கைவலிக்காமல் செய்ய ஈசியா இருப்பது
ரவை புளி உப்புமா.




தேவையான பொருட்கள் பாப்போமா!!

வறுத்த ரவை - 2 கப்
புளித்தண்ணிர் - (எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து
வடிகட்டி வைத்துக்கொள்ளவும்)
தாளிக்க -கடுகு, உளூத்தம் பருப்பு, மிளகாய்-2
கறிவேப்பிலை, பெருங்காயம்.
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 கரண்டி (ந.எ பெஸ்ட்)

செய்வது எப்படின்னு சொல்றேன்:

வறுத்து வெச்சிருக்கும் ரவையை ஒரு அகலமான
பாத்திரத்தில் போட்டு,அதில் உப்பு, மஞ்சள் தூள்
சேர்க்கவும். கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை
ஊற்றி நன்கு கலந்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
(ரவை ஊறவும் + புளிப்பு ரவையில் பிடித்துக்கொள்ளவும்
இந்த நேரம் அவசியம். 2 மணி நேரம் ஊறவைத்தாலும் சரி)

வாய் அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி (விரும்புபவர்கள்
மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் சேர்க்கலாம். ருசி தூக்கலாக
இருக்கும்)தாளிக்க கொடுத்திருக்கும் சாமான்களை சேர்த்து
கலந்து வைத்திருக்கும் ரவையை போட்டு நன்கு கிளறவும்.
உதிரி உதிரியாக வரும் வரை கிண்டி இறக்கினால் சுவையான
மொறு மொறு ரவை புளி உப்புமா ரெடி. பக்குவம் ரொம்ப முக்கியம்.
அதனால் ரவையை ஊற வைக்கும் பொழுது அதிகம் தண்ணீர்
விடாமல் பக்குவமாக பார்த்து கலக்கவும்.

தொட்டுக்கொள்ள பெரிதாக எதுவும் வேண்டாம். கொஞ்சம்
கிரேவி வேண்டும் என நினைப்பவர்கள் நீர்க்க சாம்பார்
வைத்துக்கொள்ளலாம்.

Wednesday, February 23, 2011

வாழ்க்கை என்பது இதுதான்!!

வாழ்க்கையில் எப்பொழுது என்ன நிகழும் என்பது புரியாத புதிர்.
திடுக் திருப்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கையே
கும்மிருட்டாக மாறிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்
திடும்மென ஒரு ஒளிக்கீற்று தோன்றும்.

இரவுக்கு பின் விடியல், விடியலுக்கு பின் இரவு என சுழலும்
வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் எப்பவும் நிகழலாம்.

இந்த கருத்தை உள்ளிருத்தி இருக்கும் இந்தப் பாடல் எனக்கு
மிகவும் பிடித்த பாடல். பல பொழுதுகளின் இந்தப் பாடலைத்தான்
ஹம் செய்து கொண்டிருப்பேன். அனோகி ராத் எனும் ஹிந்திப் படத்தில்


முகேஷின் குரலில் அருமையான பாடல் வரிகள்.


Get this widget | Track details | eSnips Social DNA

oh re taal mile nadii ke jal me.n
nadii mile saagar me.n
saagar mile kaun se jal me.n
koI jaane naa
oh re taal mile nadii ke jal me.n ...

anjaane ho.nTho.n par ye (pahachaane giit hai.n - 2)
kal tak jo begaane the janamo.n ke miit hai.n
o mitavaa re e e e kal tak ...
kyaa hogaa kaun se pal me.n
koI jaane naa
oh re taal mile nadii ke jal me.n ...

suuraj ko dharatii tarase (dharatii ko cha.ndramaa - 2)
paanii me.n siip jaise pyaasii har aatamaa
o mitavaa re e e e e paanii me.n ...
buu.nd chhupii kis baadal me.n
koI jaane naa
oh re taal mile nadii ke jal me.n ...

Monday, February 21, 2011

எங்க ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க!!!

அடிக்கடி சொந்த ஊருக்கு போறவங்களுக்கு ஊரில் ஏற்படும்
மாற்றங்கள் பெருசா தெரியாது. என்னிய மாதிரி ஆடிக்கொரு தரம்
அமாவாசைக்கொரு தரம் போறவங்களுக்கு, நம்ம ஊரு தானா!!
இதுன்னு தோணும்!

நானிருந்த புதுகையா இதுன்னு நினைக்கற மாதிரி பல
மாற்றங்கள்!! எங்க ஊருக்கு!! சிக்னல் போட்டப்பவே
புதுமையா பாத்தம். இது இங்க இருந்துச்சுன்னு நினைச்ச
இடத்துல அந்த கட்டிடம் இல்லை! புதுகையின் அடையாளமா
இருந்த விக்டோரியா வளைவை இடிச்சு தள்ளியதக்கப்புறம்
அந்தப் பக்கம் நிதானமா இப்பத்தான் போனேன். ஐசிஐசி பேங்க்
இருக்கும் அந்தக் கட்டிடம் அழகாத்தான் புளு கலர்ல மினுக்குதுன்னாலும்
ஆர்ச் இல்லாத அந்த இடம் வெறுமையைக் கொடுக்குது.

சமீபத்துல ஒரு புத்தகத்துல வைரமுத்து அவர்களின் ஊரில்
தியேட்டர் ஒன்றை இடிச்சிட்டாங்கன்னு அதைப்பத்தி
போட்டிருந்தாங்க. எங்க ஊருல ஒரு காலத்துல நிறைய்ய
தியேட்டர்கள் இருந்துச்சு. எஸ்.வீ.எஸ், சரவணா தியேட்டர்களோடு
பழநியப்பா தியேட்டரும் காணாம போயிடிச்சு. மிச்சம் இருந்தது
ஈனா,சாந்தி, ஆர்கேபி, வெஸ்ட் டாக்கிஸ் தான். இந்த
வாட்டி வெஸ்ட் டாக்கீஸ் பக்கம் போனா ஷாக் தான்! பாழடைஞ்ச
கட்டிடமா நிக்குது. அதையும் இடிக்கப் போறாங்கன்னு கேள்விப்பட்டு
திக்குன்னு ஆயிடிச்சு. இந்த தியேட்டர்ல தான் க்யூல நின்னு
அம்மாவோடு தேவர் மகன் படம் பாத்தது!!!
இப்படி சாதாரணமான தியேட்டர்களை பராமரிக்க முடியாமல்
இல்லாவிட்டா மற்ற ஏதோ காரணத்தால இடிச்சிடறாங்க.
மல்டிப்ளக்ஸ் இல்லாட்டி ஏசி தியேட்டர்களின் டிக்கெட் விலையைப்
பாத்து” கட்டுபடியாகாதுண்ணேன்!! கட்டுபடியாகாதுண்ணு”
சொல்லிக்கிட்டு திருட்டு வீசீடி வாங்கிப்பாக்க வேண்டிய
நிலைக்கு தள்ளிப்பிட்டு திருட்டு வீசிடியில படம் பாக்காதீங்க,
தியேட்டருக்கு வாங்கன்னு சொல்றாங்களே!! என்ன நியாயம்????

அப்பா புதுகை கோபரேடிவ் வங்கியில அப்பா வேலை செய்யும்
பொழுது ஒவ்வொரு வருடமும் வங்கியிலேர்ந்து காலண்டர்
கொண்டு வருவாரு. தேதி,நாள் எல்லா காலண்டருலையும் தான்
இருக்கு. ஆனா எனக்கு அந்தக் காலண்டர் ரொம்ப பிடிக்கும்!
காரணம் காலண்டரின் மேலே சின்னதா வங்கியோட படம்
இருக்கும். பிங்க் கலர்ல சூப்பரா இருக்கும். அதையும் மாத்திப்புட்டாங்க.
மேலே கூம்பு மாதிரி இருப்பதை மாத்தலை ஆனா முகப்பை
நீளக்கலர் கண்ணாடி கொண்டு அழகு செஞ்சிருக்காங்க!!
அசிங்கமா இருக்கற மாதிரி இருக்கு!!

ரோடுகள் விரிவுபடுத்தறாங்கன்னு கடைகள் உள்வாங்கி இருக்க,
பாதாள சாக்கடைகள் போடப்பட்டதன் அடையாளமா குண்டும்
குழியுமா வீதிகள். அளவு எடுத்தாப்ல அழகா இருந்த
வீதிகளா இதுன்னு இருக்கு. அங்கங்க புது ரோடு போட
மண்ணும்,ஜல்லியும் கொட்டி வெச்சிருக்காங்க. அந்த மண்ணெல்லாம்
மேடு மாதிரி ஆகி கிடக்கு.

நம்ம ஊரின் அடையாளம்னு நான் நினைப்பது கடைவீதிகளைத்தான்.
நகைக்கடைக்கு தனி வீதியே இருக்கும். ஆனா இந்த நகைக்கடை
வீதியிலையும் மாற்றம். டாடா கோல்டு ப்ளஸ், ஜோஸ் ஆலுக்காஸ்
போன்ற பெரிய கடைகள் ஆக்கிரமிக்க பாரம்பரிய சின்னக்கடைகள்
காத்துவாங்கிகிட்டு இருக்கு. நகைக்கடை வீதியில வேறக்கடைகள்
வந்திருக்கு.




கடைவீதியில் ராம் சைக்கிள்&கோ பாக்கும் பொழுது இந்தக் கடை
பசங்க படத்துல வந்துச்சே! நம்ம ஊரின் அடையாளாமாச்சேன்னு
போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டேன் (அப்ப இந்தக் கடையும்
எஸ்வீஆரும் தான் சைக்கிளுக்கு ஃபேமஸ்) கடை உரிமையாளரைக்
கேட்காம போட்டோ எடுக்கக்கூடாதுன்னு மெல்ல அவங்க கிட்ட
போயி போட்டோ எடுத்துக்கலாமா? நான் பீசிசி பேங்க ரமணி
சாரோட பொண்ணுன்னு! சொன்னேன். உங்களுக்கு அறிமுகமாம்மா!
நல்லாத்தெரியும், தாராளமா போட்டோ எடுத்துக்கங்கன்னு சொன்னாரு.




ஊருல அறிஞ்ச குடும்பம்தான் எங்களதுன்னாலும் அப்பா ரிட்டையர்
ஆகி 10 வருஷமாச்சு. நான் ஊரை விட்டு வந்து 18 வருஷமாச்சு.
இன்னமும் என்னை ரமணி மகள்னு ஞாபகம் வெச்சிருக்காங்கன்னு
நினைக்கும் பொழுது சந்தோஷமா இருந்துச்சு. அப்படியே க்ளுகோஸ்
ஏத்தினாப்ல ஆகிடிச்சு.

ஆஷிஷ் கேட்டுகிட்டதனால பேக்கரி மஹாராஜாவுலஅவருக்கு
பிடிச்ச கேக்குகள்பேக் செஞ்சு எடுத்துகிட்டு வந்தேன்.
எங்க ஊரு பக்கம் போனா இந்த பேக்கரி மஹாராஜாவுல கிடைக்கும் கேக்குகளை மட்டும் ருசி பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க. மதிய சாப்பாடு சாப்பிட கொஞ்சம் நேரம்தான் இருக்கும். கடைவீதியில பர்ச்சேஸ்
செஞ்சுகிட்டு இருந்தேன். அம்ருதம்மா அம்மா பேக்கரி மஹாராஜாவுல
கேக் வேணும்னு” கேட்டாங்க. இப்ப வேணாம்மா சாப்பிடணும்னு
சொல்ல இந்தக் கேக் ருசி எங்கயும் வராதும்மான்னு ஒரே
கெஞ்சல்ஸ்தான்!!! சரின்னு வாங்கிக்கொடுத்தேன். பேக்கரி மஹாராஜாவுக்கு
நிறைய்ய கிளைகள் ஊரெங்கும் இருக்கு.

முந்தி மாதிரி ஜவுளி வியாபரமும் இல்லைன்னு தான் தோணுது.
முதலியார் சில்க் பேலஸ், வாழைமரத்து ஜவுளிக்கடை
எல்லாம் பாவமோன்னு நினைச்சேன். தாரகை கடை வந்தபோது
இந்தக் கடைகளுக்கு நல்ல அடி. இப்ப அங்கயும் கூட்டம் இல்லை.
திருச்சியிலேயே போத்திஸ், சென்னை சில்க்ஸ்னு வந்திருச்சு.
தவிரவும் இப்ப எல்லோரும் அடிக்கடி சென்னை அப்படி இப்படின்னு
போறதாலயும் வியாபாரம் டல்லுதான்.

எங்க வீட்டுக்கு வாடிக்கையா பூ போட்டுகிட்டு இருந்த பூக்காரம்மாவை
பாத்து நலம் விசாரிச்சேன். அவங்க பையனுக்கு கல்யாணம்
ஆகலைன்னு விசனப்பட்டாங்க. பொண்ணுங்க ரொம்ப படிச்சிருக்கும்மா!
பையனுக்கு படிப்பு பத்தலை! எப்படித்தான் கல்யாணம் நடக்குமோன்னு?
புலம்பினாங்க. ம்ம்ம் இது யுனிவர்சல் ப்ராளமா போச்சேப்பா!!!

மொத்தத்துல ஊருக்கு போனா என்னவோ புது ஊருக்கு போன
மாதிரி ஃபீலிங் வர ஆரம்பிச்சிடிச்சு. ஆனா அந்த கொத்து
பரோட்டா போடும் சத்தமும், பரோட்டா மடித்து போட்டுக்கொண்டு
இருக்கும் சமையற்காரர்களின் கையிலயும் தான் ஊரின் ஞாபகத்தை
மிச்சம் வெச்சிருக்கோ!!!

நிரம்பி இருக்கும் செங்கல்பட்டு ஏரி:) கண்ணுக்கு இதமா இருந்துச்சு.
பல்லவனில் வரும்பொழுது போட்டோ பிடிச்சேன்.



Sunday, February 20, 2011

நலம் தானா?!! நலம் தானா?!!

என்ன? எல்லோரும் சொளக்கியமா இருக்கீகளா?
ஊருக்கு போயித்திட்டு வந்திட்டேன். ஆனா பாருங்க
நம்ம கணிணிக்கு பெரிய ஜுரம் வந்திருச்சு. அதை
ஹாஸ்பிடலில் வெச்சு வைத்தியம் பாத்து கொண்டாந்தாங்க.
சரிதான்... அப்பா, அம்மா வந்திருக்கிற நேரம் அவுகளோட
இருக்கலாம்னு வலைப்பக்கம் வராம இருந்திட்டேன்.அத்தோட
மகனுக்கு ப்ரீபோர்டு பரிட்சை வேற!
கோவிச்சுக்கிடாதீக!!!

அம்மம்மா,தாத்தா வந்ததுல குட்டீஸுக இரண்டும் செம குஷில
இருக்காக! ஒரு நாள் டீவி பார்த்துகிட்டு இருந்தாரு தாத்தா!
ஸ்கூல்லேர்ந்து வந்து பேரன் சேனலை திருப்பிக்கிட்டு இருக்க
”ஹை!! சூப்பர் படம்னு!” ஒரு சேனலை வெச்சு பாக்க
ஆரம்பிக்க,தாத்தா “அந்த சேனல்ல நல்ல படம்டா தம்பி”
அப்படின்னு சொல்ல. இதுதான் தாத்தா சூப்பர்னு சொல்ல
அந்தக் காமெடியை மட்டும் பாத்திட்டு உங்களுக்கு உங்க
சேனல் வைக்கறேன்னு சொன்னாரு. (பேரன் பாத்துகிட்டு
இருந்த படம் “காதலிக்க நேரமில்லை”!!! தாத்தா பாத்தது
“ஏப்ரல் மாதத்தில்” :)) )

ரொம்ப நாளைக்கப்புறம் இந்த வாட்டி என்னோட ரயில் பயணம்
ரொம்பவே இனிமையா இருந்துச்சு. சென்ற பதிவுல துளசி
டீச்சர் சொன்னாப்ல சக பயணிகளும் சுமூகமா இருக்கறவங்களா
வந்தா பயணம் இனிக்கும் தானே!. மறக்க முடியாத ரயில் சிநேகம்.
எதிர் சீட்டுல உக்காந்திருந்தவரு அம்ருதாவை பார்த்து தன்
உறவினர் மகள் மாதிரி இருப்பதா சொல்ல பேச்சு ஆரம்பிச்சது.
பரஸ்பரம் அறிமுகத்தின் போது நானொரு முன்னாள் மாண்டிசோரி
ஆசிரியைன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்து சீட்டுக்கார
தனது மகளின் பள்ளி அனுபவத்தை ஆரம்பிச்சாரு.

பணத்தை கொட்டுறேன், எல்லாம் அவங்க சொல்லிக் கொடுக்கணும்னு”
சொல்ல ஆரம்பிச்சது கச்சேரி. ஆசிரியையா அவங்க பங்கைச்
செய்யணும்னு சொல்றீங்க, பெற்றோரா, தகப்பனா உங்க பங்குக்கு
என்ன செய்யறீங்கன்னு கேக்க? மத்தவங்களும் யோசிச்சாங்க.
பக்கத்துல இருந்த் 1 வயசு குழந்தையோட அப்பாவும் கச்சேரில
சேந்துக்க சுவாரசியம் ஆரம்பமானது. எதிர் சீட்டுல இன்னொரு
நண்பர் படிப்பு சம்பந்தமா சில சீடிக்களை வியாபராம் செய்பவராம்.
அவரும் சேர்ந்துக்க செம ஜாலி.

குழந்தைகளோட நேரம் செலவழீப்பங்களான்னு கேக்க பேந்த பேந்த
முழிச்ச அந்த அப்பாக்களை பாக்க பரிதாபமா இருந்துச்சு. டீச்சரை
எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்றீங்க, ஆனா ஆசிரியர்
பயிற்சி இல்லாதவர் பயிற்சி கொடுத்தா ஒத்துக்கறீங்க! டாக்டருக்கு
படிக்காதவங்ககிட்ட மருத்துவம் பாக்க மாட்டீங்க தானே! இது
மாத்திரம் ஓகேவான்னு கேக்க ஒருத்தர் ஆமாங்க! இந்தக் கோணத்துல
யோசிக்கலியேன்னு சொன்னார்.

உங்க ஒரு குழந்தையை கட்டி மேக்க முடியலைன்னு கத்தறீங்க,
டீச்சருங்களை நினைச்சு பாருங்க! அப்படின்னு நம்ம பேரண்ட்ஸ்
கிளப்பில் எழுதின பல மேட்டருங்களை பகிர்ந்துகிட்டேன். நீங்க
சொல்வது நியாயங்க! நானும் இனி என் பிள்ளைகளோட நேரம்
ஒதுக்கறேன்!அப்படின்னு ஒரு நண்பர் சொல்ல மனதுக்கு இதமா
இருந்துச்சு. என் மகளுக்கு இப்ப ஒரு வயசு! வீட்டுல இங்கிலீஷ்
மட்டும்தான் பேசப்போறேன். என் மகளுக்கு ஆங்கிலம் தெரியணும்.
அப்படின்னு ஒருத்தர் சொல்ல,”ஆங்கிலம் எப்படியும் கத்துக்கலாம்!
ஆனா தாய்மொழியை நாமதான் வீட்டுல சொல்லிக்கொடுக்கணும்னு!!
சொல்ல அவர் யோசிக்க ஆரம்பிச்சாரு. பிரபாலமான பள்ளியில்
சேர்த்து பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் தரணுமா?? இப்படி
பல டாபிக்குளில் பேச்சு சுவாரசியமா நடந்துச்சு.

உங்க பாயிண்டுக்கள் ரொம்ப உபயோகமா இருந்துச்சு. சுவாதிங்கற
தெலுங்கு பத்திரிகையில் என் நண்பர் இருக்காரு, அவரை உங்களை
வந்து சந்திக்க சொல்றேன். இப்ப நீங்க எங்க கிட்ட பகிர்ந்துகிட்டதை
பத்திரிகையில சொல்லுங்க. பல லட்சம் பேருக்கு சென்று சேரும்னு!
சொல்ல எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை! (என்னோட
விவரங்களைத் தராமலே வந்திட்டேன்!! :) பேசி முடிச்சுட்டு தூங்கி
எந்திரிச்சு தாமதமாக சென்னையை அடைந்த ட்ரையினிலிருந்து இறங்கி
7.50க்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க ஓடும் அவசரத்துல
மறந்து போச்சு)

குருவாயூர் எக்ஸ்பிரஸ் சூப்பர். மதியம் வைகையை பிடிக்கும்
வரை காத்திருக்காமல் திருச்சியை அடைய சூப்பர் வழி இது.
திருச்சியில் அப்பா அம்மா வந்து காத்திருக்க சங்கீதா ஹோட்டலில்
சூப்பரா லன்சை சாப்பிட்டு புதுகை போய் சேர்ந்தாச்சு.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பி சென்னை வந்து,
சென்னையில் என் தோழியை சந்திச்சு, மாம்பலத்தில்
பர்ச்சேஸ் முடிச்சு :) செண்ட்ரலில் நுழையவும் எங்க ட்ரையின்
ஷ்டேஷனுக்கு வரவும் சரியா இருந்துச்சு. அப்பா, அம்மாவுக்கு
பக்கத்து கம்பார்ட்மெண்ட். மாத்தலை. அசதியா இருந்ததால
சாப்பிட்டு தூங்க போயிட்டோம்.

சரியான நேரத்துக்கு செகந்திராபாத் அடைய போகுதுன்னு ஆனந்தப்
பட்டுகிட்டு இருந்த நேரத்துல ஷ்டேஷனுக்கு 5 நிமிஷம் முன்னாடி
போட்டுட்டாங்க ரெட்!! ஷ்டேஷனில் ப்ளாட்பார்ம் காலியில்லை!!
40 நிமிடங்கள் கழிச்சு!! ஷ்டேஷனில் நுழைஞ்சிச்சு ட்ரையின்.
அயித்தான் வந்திருந்தாரு ஷ்டேஷனுக்கு. வந்தக் கதையை
சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா அதுக்குள்ள அப்பா, அம்மா
திரும்பி போகும் நாளும் வந்திடிச்சு. ஆமாம் இந்த வாரக் கடைசியில
கிளம்பறாங்க.

இனி தொடர்ந்து பதிவுகள் வரும். சந்திப்போம்