Tuesday, March 01, 2011

சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்.........

குட்டி பாப்பா கூட அம்மாவின் துப்பட்டாவை சேலையாக
கட்டி அழகு பார்க்கும். புடவை இதற்கு இருக்கும் மதிப்பே
தனிதான். சேலையின் மதிப்பு சொல்லிவிட முடியாது
என்றாலும் இந்தப் பாடல் கேட்டால் சுவாரசியமாக இருக்கும்.



இந்தியாவில் புடவைகள் மாநில வாரியாக பிரசித்தமானவை.
நம்ம ஊர் செட்டிநாடு, கோயம்புத்தூர் காட்டன், ஆரணிபட்டு,
காஞ்சிப்பட்டு என எத்தனையோ வகைகள். எனக்குத் தெரிந்த
மற்ற மாநில புடவைவகைகளைப்பத்தி கொஞ்சம் எழுதலாம்னு
நினைக்கிறேன். வித்தியாசமா இருக்கணும்னு நினைக்கறவங்க,
பட்டைத் தவிர்க்கணும்னு நினைக்கறவங்களுக்கு காட்டன் என
சில வெரைட்டிகளை ஒவ்வொரு பதிவா எழுதப் போறேன்.

ஆந்திராவின் சிறப்பு பெற்ற சில புடவைவகைகளை
முதலி பார்ப்போம். கத்வால் இது ஆந்திராவில் இருக்கும் ஒர்
சின்ன ஊர். இங்கேயிருந்து தயாரிக்கப்படும் கத்வால் புடவைகள்
ரொம்ப விஷேஷம். பருத்தி, பட்டுன்னு இதே புடவையை
தயாரிக்கறாங்க.

ஒவ்வொரு இழையும் கையாலேயே நெய்யப்படுகிறது.
கீழே வீடியோவுல பாருங்க தெரியும்.



ஜரிபார்டர்,முந்திகளில் மட்டும் பட்டுஜரி கலந்து உடலில் காட்டனாக
தயாரிக்கறாங்க. இவற்றின் விலை 1500லேர்ந்து இருக்கும்.
கூலாக இருக்க பருத்தியிலும் கத்வால் புடவைகள் தயாராகின்றன.
இவற்றின் விலை 500க்குள் அடக்கம். உடுத்தினாலும் வித்தியாசமா
நல்லா இருக்கும்.

ஜரியில் உபயோகிக்கப்படும் பட்டு துஸ்ஸார் அல்லது
மல்பேரி பட்டுவகைகளைச் சேர்ந்ததா இருக்கும்.


Gadwal புடவைகள் வெளி மாநிலங்களிலும் கிடைக்கிறது.
சென்னையில் பெரிய பெரிய புடவைக் கடைகளில் பார்க்கலாம்.
1930ஆம் ஆண்டிலிருந்து பிரபலாமாக இருக்கும் இந்தப் புடவைகள்
மிக நேர்த்தியாக தயாரிக்கப்படுகிறது.

பட்டு கட்டி போரடித்தவர்கள் வித்தியாசமாய் இந்தப் புடவை
அணியலாம். நல்ல ரிச் லுக் இருக்கும். பட்டு வேண்டாமென
தவிர்ப்பவர்களும் காட்டனில் கிடைக்கும் கத்வால் புடவையை
அணியலாம்.

அடுத்த இழை நாளை...