Friday, April 01, 2011

ஐ லவ் மை இந்தியா!!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு
எப்போதும் மவுசு அதிகம் தான். இந்த முறை நடந்த போட்டியை
நானும் பார்த்தேன். கிரிக்கெட்டே வேண்டாம் என்று இருந்தேன்.
இந்தப் போட்டி என்னை மிகவும் கவர்ந்திழுத்து உட்கார வைத்திருந்தது.
இருவரும் சமமாக போட்டி இட மேட்சும் ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருந்தது. கபில்தேவ்
தலைமையில் ஒரு அணியாக இல்லாமல் ஒரு குடும்பம் போல
கலந்து இருப்பார்கள் வீரர்கள். இந்த போட்டியில் அப்படி ஒரு உணர்வு
எனக்கு ஏற்பட்டது. எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல்
தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று தோனி இருந்தது
பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் தோனி.

உலக அதிசயமாக அயித்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க அரை நாள்
விடுப்பு எடுத்து வீட்டில் உட்கார்ந்திருந்தார்!!! அன்றைக்கு ஹைதையில்
ஏதோ பந்த் போல ரோடுகள் வெறிச்சோடி கிடந்தன. 6 மணிக்கு முதல்
இன்னிங்ஸ் முடிந்த பிறகு கொஞ்சம் போல மக்களை வெளியே
பார்த்தேன். அதன் பிறகு ம்ம்ஹூம்.. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்
இருக்கும் பார்க்கில் கிரிக்கெட் விளையாடும் பொடிசுகள் கூட வெளியே
வரவில்லை.

நாளை இறுதிப்போட்டி. இலங்கையுடன் இந்தியா மோதுகிறது.
இதுவும் மற்றொரு விருவிருப்பான போட்டியாகத்தான் இருக்கும்.
தில்ஷானையும், தரங்கவையும் சீக்கிரம் அனுப்பிவிட்டால்
நிம்மதியாக இருக்கும்.

யே துனியா எக் துல்ஹன் துல்ஹன் துல்ஹனிக்கி மாதேகி பிந்தியா
யே மேரா இந்தியா... ஐ லவ் மை இந்தியா...




நம் பிரார்த்தனைகள் நம் வீரர்களின் வெற்றிக்காக. இந்த வெற்றி
நம் ஒவ்வொருவரின் வெற்றியாக நாம் கொண்டாடுகிறோம்.

இந்த சக் தே இந்தியா பாடலும் அவர்களுக்காகத்தான்!!!





கபில் தேவும் அவரது அணியினரும் சேர்ந்து 1983ல் படைத்த
அந்த வரலாறு.... நாளை மீண்டும் இந்த வரலாறுச் சாதனை
நடை பெற எங்கள் வாழ்த்துக்கள் நம் இந்திய அணிக்கு.





வென்று சரித்திரம் படைத்து வாருங்கள் தோழர்களே!!
இறைவன் உங்களுக்குத் துணை இருப்பான்!



என்னுடைய இந்த 750ஆவது பதிவை வெற்றி வாகை சூடிய
கபில்தேவுக்கும், நாளை வெற்றி வாகை சூடப்போகிற இந்திய
அணிக்கு சமர்ப்பணம்.