மனசே போகாது :)) அவங்களுக்கு லீவு விட்டிருக்காங்க. அதனால
பதிவுக்கும் கொஞ்ச நாளைக்கு லீவு சொல்லிக்கறேன். பசங்க கூட
ஆனந்தமா இருக்க வேண்டிய தருணத்தில் வேறு எதற்கும் இடம் இல்லை
என்பதலாத்தான் இந்த லீவு.
தவிரவும் இப்ப விடுமுறை மாதம் என்பதால் விருந்தினர்கள் வருவதும்
போவதுமா இருக்கு. இன்னொரு ரொம்ப முக்கியமான மேட்டர்
இருக்கு. பசங்க என்னை ரிவெஞ் எடுத்துகிட்டு இருக்காங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
சும்மா இருப்பானேன்னு டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல பீ.காம்
படிக்க பணத்தைக் கட்டினேன். லிட்ட்ரேச்சர் பட்டயம் இருந்தாலும்
பீ.காம், எல்.எல்.பீ என் கனவு! ஆரம்ப கட்டமா பீ.காம்
சேர்ந்து இருக்கேன். இதுல இந்த மாசம் முதல் வருட பரிட்சை.
அதுக்குத்தான் பசங்க என்னை ரிவெஞ் எடுத்துகிட்டு இருக்காங்க. :)
படிச்சதை கேள்வி கேப்பாங்களாம்! நான் சொன்னதெல்லாம் எனக்கு
திரும்ப நடக்குது. :))))
பரிட்சை சமயத்துல கணிணி கூடாதுன்னு பசங்களுக்கு சொல்லிட்டு
நானே உட்கார்ந்தா தப்பாயிடும்ல. அதான் கொஞ்ச நாளைக்கு
கட்டாய லீவு.
இந்த வருடம் அன்னையர் தினத்துக்கு பசங்க எனக்கு காந்தா எம்ப்ராய்டரி
ஒர்க் புடவை பிரசண்ட் செஞ்சிருக்காங்க. டிஸ்டம்பர் கலரில் கத்திரிப்பூ
கலந்த புடவை. அப்புறமா இந்த ஒர்க் பத்தியும் அந்தப் புடவை போட்டோவும்
போடுறேன்.
அன்னையர்கள அனைவருக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
