Thursday, September 01, 2011

கடனே இல்லாத வாழ்க்கை வாழ!!!!

எங்க வீட்டு வரலக்‌ஷ்மி போட்டோ அப்ப அப்லோட் செய்ய முடியலை.
இன்னைக்கு உங்களுக்கு தன் முகம் காட்ட வந்திருக்கா லட்சுமி.
தேங்காய் இல்லாத இந்த கலச அலங்காரம் அடியேன் செய்தேன்.
கிருஹப்ரவேசத்திற்கு வாங்கியிருந்த தஞ்சாவூர் பெயிண்டிங் லட்சுமி
போட்டோவுடன் அம்மன் முகம் வைத்து வரலட்சுமி நடந்தது.
(இந்த முறை கலசம் வைத்து பூஜை செய்யக்கூடாத சூழல்.
ஆனால் புதிதாக வாங்கியிருக்கும் முகத்தை பூஜையில் வைக்க
ஆசை. சொம்பில் ஸ்கேலை வைத்து அதில் அம்மன் முகம்
கட்டி அலங்காரம் செய்தேன்)




கடன் பெற்றார் நெஞ்சம் போல அப்படின்னு சொல்வாங்க.
வாங்கிய கடனை அடைத்து நிம்மதியான வாழ்வு வாழ தான்
எல்லார் மனசும் இருக்கும். குறைஞ்ச பட்சம் வீட்டு லோனாவது
நமக்கு இருக்கும்.

இதற்கு எவ்வளவோ ஸ்லோகங்கள் இருப்பதா பெரியவங்க
சொல்லியிருக்காங்க. அமாவாசை அன்று கொழுக்கட்டை
செய்து படைத்தால் ரொம்ப விசேஷமாம். என் அத்தை
(அப்பாவின் சகோதரி) சொல்லிக்கொடுத்தார். கிரஹ
தோஷம் நீங்க கூட இது நல்லதாம். என் அம்மம்மா
சொன்னது அமாவாசை அன்று கொழுக்கட்டை செய்து
நிவேதனம் செய்தால் கடனே இல்லாததொரு வாழ்க்கையை
மோதகப்பிரியன் நமக்கு அருள்வானாம்.

அமாவாசை கொழுக்கட்டை அவனுக்கு செய்து படைப்பது
கஷ்டமில்லை. பூர்ண கொழுக்கட்டைதான் வேண்டும் என
அடம் பிடிக்க மாட்டான். உப்பு கொழுக்கட்டை(உப்புமா
கொழுக்கட்டை, திதிப்பு கொழுக்கட்டை செய்தால் கூட போதும்)

இதுதான் அந்தக்கோலம். இந்தக்கோலத்தை போட்டு நமக்குத்
தெரிந்த கணபதி ஸ்லோகம் சொல்லி கொழுக்கட்டை நிவேதனம்
செய்ய வேண்டும்.


இன்றைக்கு விநாயக சதுர்த்தி பூஜை சிறப்பாக நடந்தது.
அம்மா கொளரி முதலில் வந்தாள்.(ஸ்வர்ண கொளரி விரதம்)
கூடவே மகனும் வந்துவிட்டான்.
அம்மாவை விட்டு பிரிந்து இருக்க முடியாதாம்!!



அம்மாவுக்கு கடலைப்பருப்பு பாயசம் செய்தேன். மகனுக்கு திதிப்பு
கொழுக்கட்டை, வடை போதும்னு சிம்பிளா செஞ்சேன். (ஏற்கனவே தொப்பை கணபதி.
இப்போ எல்லார் வீட்டுக்கும் போய் சாப்பிட்டு வந்தால் ஜீரணம்
கஷ்டம்!)ரெசிப்பி தட்கா கார்னரில் வரும்

டிஸ்கி:

இது என்னுடைய 800ஆவது பதிவு. :)) இந்த கணேசனுக்கு அர்ப்பணம்