Total Pageviews

Wednesday, November 30, 2011

ஸ்ரீ லக்‌ஷ்மி ஹயக்ரீவாய நமஹ.

அறிவாற்றலை விரும்பாதார் யாரேனும் உண்டா. நல்ல கல்வி அறிவு
இருந்தால் இழந்த செல்வத்தைக்கூட திரும்ப பெறலாம் என்பார்கள்.
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான். சிறந்த கல்வியை
குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின்
முதல் கனவாக இருக்கும். வித்யா என்றதும் நினைவுக்கு வருவது
சரஸ்வதி தேவி. கலைமகளுக்காக பூஜைகள் செய்வோம். கலைமகள்
அருள் பெற புஸ்தகமண்டலம் அமைத்து “சாரதா நவராத்திரியில்”
அன்னைக்கு 3 நாள் பூஜை. மது,கைடப எனும் அசுரர்களிடமிருந்து
வேதங்களை காப்பதற்காக மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான்
ஹயக்ரீவ. நரசிம்மாவதாரம் போல ஹயக்ரீவர் மஹாலட்சுமியை
தனது மடியில் அமர்த்தி ஸ்ரீ லக்‌ஷ்மி ஹயக்ரீவராக காட்சி தருகிறார்.

சரஸ்வதி தேவிக்கே போதித்த தெய்வம் ஹயக்ரீவர். வைணவ தெய்வங்களில்
ஹயக்ரீவர் முக்கியமானவர். எந்த ஒரு கலையையும் கற்கும் முன்
ஹயக்ரீவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று.




ஹயக்ரீவ ஜெயந்தி ஆவணிமாத ஸ்ரவண (திருவோண) நட்சத்தித்தன்று
கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் மஹாநவமி (சரஸ்வதி ஆவாஹனம்)
அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் ச்ரவண(திருவோண)நட்சத்திரத்தன்றும் ஸ்ரீஹயக்கீரவருக்கு
பூஜை செய்யலாம். மஞ்சள் நிறம்தான் இவருக்கு உகந்தது. கையில் புஸ்தகத்தோடு
காட்சி தரும் இந்த ஹய்க்ரீவர் முகம் குதிரை போன்றும் உடல் மனித உடலாகவும்
இருக்கும். ச்ரவண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவ ப்ராசதம் செய்து, மஞ்சள் நிற
பூக்களால் அர்ச்சித்து, பூஜை செய்யலாம்.


ஸ்ரீவாதிராஜ என்கிற மாத்வ தீர்த்தருக்கு ஹயக்ரீவர் இஷ்ட தெய்வம்.
சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டார்.
அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும்,
நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை,
ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது.
அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயக்ருக்கு பதில் ஹய்க்ரீவ
விக்ரகம் தான் வந்தது. அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று
யோசித்து கொண்டிருக்கையில் அன்றிரவு இந்த விக்ரகத்தை
ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி கனவு வந்தது. வாதிராஜர்
ஹ்யக்கீரவருக்கு ஹய்க்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம்
செய்வார். (கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும்)

பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில்
வைத்துக்கொள்வார். ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது
முன்னாங்கல்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சமே கொஞ்சம்
பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்தது.
இப்படி எல்லாம் நடக்க சாத்தியமா என சந்தேகப்பட்டனர் சிலர்.


ஒரு நாள் பிரசாதத்தில் விஷம் கலந்து வைத்துவிட்டனர். அன்றைய தினம்
குதிரை உருவில் வந்த ஹயக்ரீவர் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் பிரசாதம்
முழுவதையும் தின்றுவிட்டார். அவரது உடல் முழுதும் பச்சை வண்ணமாயிற்று.
அதன்பிறகு கத்திரிக்காயை ஒரு விதமாக சமைத்து படைக்க அதை உண்டதும்
பச்சை வண்ணம் நீங்கியது. அந்த நிகழ்வுக்கு சான்றாக கழுத்தில் மட்டும்
பச்சை வண்ணத்தை தாங்கி அருள் பாலிக்கிறார் ஹயக்ரீவர்.

ஹய்க்ரீவ ப்ராசதம் தயாரிப்பது எப்படி?

கடலைப்பருப்பு பூரணம் செய்வோமே அது போல் தான்.
கடலைப்பருப்பை குக்கரில் அதிகம் குழையாமல் வேகவைத்து
ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
1 கப் பருப்பிற்கு 1 கப் வெல்லத்தூள் சேர்த்து வாணலியில்
நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல்
வரும் பொழுது நெய் சேர்த்து சுருள வதக்கவும்.

ஏலம், வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கினால் ஹயக்ரீவ
பிரசாதம் தயார்.


இந்த வாக்கியத்தை சொடுக்கினால் பல வைணவ ஸ்லோகங்களுக்கான
லிங்க் கிடைக்கும். அதில் கீழே ஸ்க்ரோல் செய்து பார்த்தால் ஹயக்ரீவ
ஸ்லோகங்கள் இருக்கும். கணிணியில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.
வேதாந்த தேசிகரின் இந்த ஸ்லோகம் மிகவும் அருமையானது.

சில ஹயக்ரீவ ஸ்லோகங்கள்:

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே.

கல்வி,வாக்ஸித்தி,புலமை பெற:
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸ்ர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹக்ரீவேதி யோ வதேத்
தஸ்ய் நிஸ்ஸரதே வாணீ ஜஹ்நுகன்யாப்ரவாஹவத்

ருக் யஜுஸ் ஸாமரூபாய வேதாஹரண கர்மணே
ப்ரணவோத்கீத வபுஷே மஹாச் வ சிரஸே நம

அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற
சந்த்ரமண்டல மத்யஸ்தம் ஹயக்ரீவம் ஸுநிர்மலம்
ஜ்ஞாந முத்ராதரம் தேவம் சங்க சக்ர தரம் விபும்
புஸ்தகம் வாமஹஸ்தே து தாரிணம் வனமாலினம்
கிரீடஹாரகேயூர கடகாத்யைரலங்க்ருதம்

எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள


ஹயக்ரீவம் கராலஸ்யம் சங்கசக்ரதரம் விபும்
ரக்தவர்ணம் த்ரிநேத்ரம் ச் த்யாயேத் வை க்ரூரகர்மஸு.

ஹயக்ரீவ காயத்ரி

ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸஹ பரசோதயாத்.

இன்று ச்ரவண நட்சத்திரம். ஹயக்ரீவரை பூஜித்து அவர் அருள் பெறுவோமாக.





Friday, November 25, 2011

EXPRESS YOURSELF!!!!

ஒருத்தரோட பேசும் பொழுது தன்னுடைய வெளிக்காட்டாம சிலர் இருப்பாங்க.
சிலர் முகம் முழுதும் சிரிப்போட பேசுவாங்க. சிலரோ உம்மணாமூஞ்சியா
இருப்பாங்க. ஆனா மொளனச்சாமியாரா இருக்கறவங்கதான் நல்லவங்கன்னோ,
லொடலொட பார்ட்டி கெட்டவங்கன்னோ முடிவு செய்திட முடியாது. தன்னை
மொத்தமா வெளிக்காட்டிக்காம அளவோட அளவளாவறவங்கதான் ஜாஸ்தி.
அதனால இவங்க இப்படி பட்டவங்கன்னு நம்மளால முடிவு செய்ய முடியாது.


ஆனா இப்ப எல்லா இடத்துலயும் EXPRESS YOURSELF!வாக்கியம் தான்
அகத்தின் அழகு முகத்துலன்னு சொன்னதுலாயோ என்னவோ இணைய
தளத்துல முகநூலை பயன் படுத்தாதவங்க ரொம்ப கம்மி. உங்க மனசுல
இந்த நிமிஷத்துல என்ன ஓடுதுன்னு சொல்லுங்க!ன்னு அவங்க இடம்
கொடுத்து நமக்கான பக்கத்தை திறந்து வெச்சு அதில் நம் உணர்வை
சொல்வதுன்னு இருக்கு. ஆனா அதுக்காக ஒரு வரையறை இல்லாம
சொல்லிட முடியாது. ஃபேஸ்புக்ல (உடம்பு முடியலைன்னு) லீவ் போட்டு டூர் போயிட்டு வந்த போட்டோவைப்பார்த்த அதிகாரி உடனடியா அந்த பொண்ணை வேலையை
விட்டு நீக்கி இருக்காரு. நாங்கல்லாம் டாடா பை பை போறோம்னு ஸ்டேட்ஸ்
மெசெஜ் போட்டுட்டு போனவங்க வூட்டுல கள்ளன் உள்ள புகுந்த கதைன்னு
இருக்கு.


எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் ஃபேஸ்புக்கில் தான் இல்லைன்னு சொன்னார்.
காரணம் கேட்டப்ப ,”என் ஸ்டூடண்ட்ஸ் ஏதாவது கமெண்ட் போட்டு, அதுக்கு
நான் பதில் சொன்னாலும் தப்பு, பதில் சொல்லவில்லைன்னாலும் தப்பு.
அதனாலேயே அக்கவுண்ட் வெச்சுக்கலைன்னு சொன்னார். :)) இதுவும் சரி.
60 வயதான தாத்தா ஒருத்தர். அட இந்த உலகம் புதுசா இருக்கு. என்
வெறுமையை போக்குது. ஆனா நான் யாரோட நட்பு கொள்ளனும் என்பதில்
உறுதியா இருக்கேன். ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்வதில்லைன்னு” சொன்னார்
இதுவும் சூப்பர். நமக்கு என்ன தேவை, எப்படி இருக்கணும் என்பதை நாம
தான் முடிவு செய்துக்கணும். எதுவும் அளவுக்கதிகமாகி அவதிப்படாமல்
இருப்பது நல்லது.



மைக்ரோப்ளாகிங்னு அழைக்கப்படற டுவிட்டரில் மெசெஜ் ரசிக்கறாப்ல
கொடுக்கறாங்க. சில விகடன் புத்தகத்துல கூட இடம்பெருது. ஆனா
அங்கயும் சிலர் வாயக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கிறா மாதிரியான
சம்பவங்கள் இருக்கு. நடிகை, நடிகர்கள் மட்டுமில்லாமல் சாதாரண
மக்களும் ஒருத்தருக்கு ஒருத்தட் அடிச்சிக்கறது நடக்கது.

நம்ம வலைப்பூக்களும் இதில் விதிவிலக்கல்ல. இங்கயும் நம் உணர்வுகளை
பதிவிடுகிறோம் என்றாலும் பல நல்ல விஷ்யங்களுக்காகவே நடத்தப்படும்
வலைப்பூக்களும் உண்டு. பத்திரிகையில் படிப்பதையும் விட அதிக அளவில்
கதை, கவிதை, கட்டுரைன்னு நாம வாசிக்க இப்ப இணையம் ஒரு நல்ல
இடம். எல்லா இடத்துலயும் நம்ம மனசுல பட்டதை அப்படியே சொல்வதை
விட எதை எங்கே எப்படி சொல்லனுமோ அப்படி சொல்லனும்.
EXPRESS YOURSELF! அப்படின்னு சொல்லிட்டாங்களே என்பதற்காக எதை
வேணா சொல்லிட முடியாது. இணையம் மட்டுமில்ல எங்கேயும் ரொம்ப
ஓபனா இருப்பது சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கற மாதிரியான
அனுபவத்தை கொடுத்துவிடும்.

அதற்காக ரொம்ப மூடியாவும் இருந்திரக்கூடாது. எதையும் அளவோட
வெச்சுப்பது அவசியம். எனக்கு இந்த ஃபேஸ்புக்கெல்லாம் தெரியாது.
டுவிட்டர்லாம் வேணாம், அப்படின்னு புலம்புவதை விட சரியா,
முறையா தெரிஞ்சுகிட்டு அளவோட இருந்தா நல்லது. பர்சனல்
டீடெய்ல்ஸ், மொபைல் நம்பர் எல்லாம் பொதுவுல கொடுக்காம
இருப்பதே நல்லது. (இதுல ஆண்/பெண் பேதமெல்லாம் இல்லை)

முகநூல் குழந்தைகள் உபயோகப்படுத்துவது பற்றி பேரண்ட்ஸ்கிளப்பில்
பதிவு எழுதியிருக்கிறார் நண்பர் செல்வகுமார். ரொம்ப உதவியா
இருக்கும். மொத்தம் 3 பாகம் இருக்கு. நேரம் கிடைக்கும் பொழுது
படிச்சு பாருங்க.

நம்மை முழுதுமாக நம் குடும்பத்தினரிடம் மட்டும் வெளிப்படுத்திக்
கொள்வோம்.

இனிய வார இறுதி



HAPPY WEEKEND

Wednesday, November 23, 2011

ஊரெல்லாம் உன் பேச்சுத்தான்!!!!!:(( :)

அம்ருதம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. பள்ளியில் வாமிட் செய்து
விட்டதாக சொன்னாள். வீட்டிற்கு வந்து எது சாப்பிட்டாலும் வயிற்றில்
தங்கவில்லை. சில சமயம் நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் வாயுக்கோளாறு
ஏற்பட்டு இப்படி ஆகும் (முதல் நாள் சத்தியநாராயண விரதத்திற்குச்
சென்று சாப்பாடு ரொம்ப லேட்டானது). சரி என்று அதற்கான மருந்து
கொடுத்தேன். அதன் பிறகு தொந்திரவு இல்லாமல் இருந்தாள்.

காலை எழுந்தது முதல் வயிற்றுப்போக்கும் சேர்ந்து கொள்ள டாக்டரிடம்
அழைத்துச்சென்றால் அங்கே நிறைய்ய குழந்தைகள் இதே சிம்ப்ட்ம்ஸுடன்.

ரெயின்போ மருத்துவமனை எனக்கு மிகவும் பிடித்தது. சுகாதாரமாகவும்
இருக்கும். மருத்துவர்களும் நல்லவர்கள். ஆரம்பமே ஆண்டிபயாடிக்
கொடுத்து டார்ச்சர் செய்ய மாட்டார்கள். (இந்த ரெயின்போ மருத்துவமனை
ப்ரதேயகமாக தாய்மார்கள், மற்றும் குழந்தைகளுக்காக மட்டுமே)

அம்ருதாவிற்கு என்ன உபாதை என்று சொன்னதுமே டாக்டர் பொறுமையாக
“இப்பொழுது ஊரில் இப்படி ஒரு தொற்றுவியாதி பரவியிருக்கிறது.
வாந்தி, பேதி இத்துடன் ஜுரமும் சேர்ந்து கொள்ளும்.” என்று சொல்லி
அதற்கான மருந்தை எழுதிக்கொடுத்து 3 நாளில் சரியாகிவிடும் என்று
சொன்னார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாருக்கு உடல்நிலை சரியில்லை
என்று மருத்துவரிடம் போனாலும் நான் கேட்டுக்கொள்ளும் முதல்
கேள்வி,” என்ன டயட் கொடுக்கலாம்?” இது ரொம்ப முக்கியம்.
சில சமயம் நாம் சாப்பிடும் உணவு அந்த நேரத்துக்கு உகந்ததாக
இல்லாமல் இருக்கும். குறிப்பாக அம்ருதாவிற்கு தற்போது பால்,
பழங்கள், பழச்சாறு கொடுக்ககூடாது. காரம்,எண்ணெய் கூடாது.

நம் ஊர் பக்கம் என்றால் இடியாப்பம் கூட வாங்கி கொடுக்கலாம்.
ஆரோருட் மாவு கஞ்சியும் ரொம்ப நல்லது. இங்கே அதைத்
தேட முடியாது. அதனால் சாதத்தை மறு உலைபாய்ச்சி (திரும்ப
தண்ணீரில் கொதிக்க வைத்து கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதால்
செரிமானம் சீக்கிரம் ஆகும்) கொஞ்சமாக தயிர் ஊற்றிக் கொடுக்க
திட்டமிட்டிருந்தேன். அம்மாவிற்கு போன் செய்த பொழுது
வயிற்று பிரட்டல் நிற்க ஒரு பொடி செய்து அதைக் கலந்து
கொடுக்கச் சொன்னார். பலருக்கும் உதவும் என்பதால் அதை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.

ஓமம்பொடி:

தேவையான பொருட்கள்:
10 மிளகு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 100 கிராம் ஓமம், பெருங்காயம் கொஞ்சம்.

செய்முறை:
மேல் சொன்னவற்றை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து
உப்பு சேர்த்து பொடித்து சூடான சாதத்தில் கலந்து முதல் கவளம்
இந்த பொடி சாதத்தைக்கொடுப்பதால் வயிற்று பிரட்டல் டாடா
காட்டி விடும்.

வயிறு சரியில்லாத சமயத்தில் அதிகம் சிரமம் கொடுக்காமல் இதமான
உணவு இட்லி, கஞ்சி இப்படி கொடுத்தல் நலம். ஆனால் காய்கறிகள்
இல்லாததால் உடம்புக்கு சத்து இல்லாமல் போய்விடும்.

இன்றைக்கு காய்கறி கஞ்சி செய்து கொடுக்கப்போகிறேன்.

கறிவேப்பிலை 4, கொஞ்சம் கேரட், பீன்ஸ் நறுக்கி தண்ணீரில்
கொதிக்க வைத்து அதே தண்ணீரில் அரிசி ரவையை போட்டு
நன்கு வேகும் வரை வேகவைத்து கஞ்சி பதத்தில் உப்பு,சீரகம்,மிளகு கொஞ்சம்
சேர்த்தால் சுவையும் நல்லா இருக்கும். உடம்புக்கும் நல்லது.
இத்தோடு விரும்பினால் கொஞ்சமாக தயிரும் சேர்க்கலாம்.


இந்த மாதிரி சமயத்தில் ப்ரெட் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது
நல்லது. தயிரும் காலையில் தோய்த்து மதியம், மதியம் தோய்த்து
இரவுக்கு என ஃப்ரெஷ்ஷாக செய்து கொள்ள வேண்டும். (சளித்தொல்லை
இருப்பவர்கள் குளிர்காலம் முழுதும் இதே போல் தயிர் சாப்பிடலாம்.
ஃப்ரிட்ஜில் வைக்கும் தயிர்தான் சாப்பிடக்கூடாது.)

இந்தக் குளிர் காலத்தில் தயிரை தோய்ப்பது ரொம்ப கஷ்டம். வெயில்
இல்லாமல் இருப்பதால் சீக்கிரத்தில் தோயாது. நான் எப்போதும் கைப்பற்றும்
பழக்கம் ஹாட்பேக்கில் இதமான சூட்டில் பாலை ஊற்றி, 1 ஸ்பூன் தயிரை
சேர்த்து நன்கு கலக்கி மூடி வைத்துவிட்டால் 1 மணிநேரத்தில் தயிர் ரெடி.
(எந்தக்காலத்திலும் இந்த ஐடியா ஒர்கவுட் ஆகும்) :))

இன்னைக்கு எங்க அம்ருதம்மா ஓகே. ஆனாலும் வீக்காக இருப்பதால்
பள்ளி செல்லவில்லை. நானும் என் அம்மாவும் எஞ்சாயிங் டுகதர். :))
சேர்ந்திருப்பது ஒரு சுகம் தானே!

Friday, November 18, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 18/11/11

ரயில்வே நிர்வாகம் எதையும் கண்டுக்கறதே இல்லை. ஏனோ தானோ
மனப்பான்மையிலேயே வேலை செய்வாங்க போல. எப்பப்பாரு ஏதாவது
எடக்கு மடக்கா செய்வதுதான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல.
இப்ப திரும்ப ரயில்வே சிக்கலில் மாட்டியிருக்கு. ரயிலில் டாய்லட் இருப்பதே
பெருசு. (இருக்கும் ஆனா உபயோகிக்க பயப்படுற அளவுல இருக்கும்)
இதுல ரயில்வே துறை டாய்லட் பேப்பரை வேற வெச்சு சிக்கலில் மாட்டியிருக்கு.




டாய்லட் பேப்பரில் தேசிய சின்னத்தை எப்படி அச்சிட்டாங்க?
இப்ப ரயில்வேத்துறை இதற்கு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியலை.

சிரத்தையே இல்லாம எப்படித்தான் இருக்காங்களோ!!! :((


*******************************************************************************
இந்த அழகுப்போட்டிகளில் எப்படித்தான் தேர்ந்தெடுக்கறாங்களோ தெரியலை.
அறிவுப்பூர்வமான பதில் சொல்லி எப்படியோ பிரைஸ் வாங்கிடறாங்க.
ஆனா அடிப்படை விஷயம் கூட தெரிவதில்லை. கேவலமா இருக்கு.

சமீபத்தில் நடந்த குழந்தைகள் தின விழாவில் முதல்வர்
கிரண்குமார் ரெட்டி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலக அழகி 2011
வாசுகி சுன்காவல்லி (ஆந்திரா பொண்ணு) பங்கேற்றிற்கார்.



தேசிய கீதம் பாடி முடித்ததும் புள்ளைங்கல்லாம் அமைதியா இருக்க
இந்தம்மா கையைத் தட்டியிருக்காம்!!!! என்ன கொடுமை சரவணன்!!!
************************************************************************************

இப்பொழுது பாலியல் பலாத்காரம் என்பது ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடிச்சு.
பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கே பயமா இருக்குன்னு சொல்ல
வெச்சிடுவாங்க போல இருக்கு. தினம் தினம் பேப்பரில் இது பத்திய ந்யூஸ்தான்.
ஆசிரியர், பிரின்ஸ்பால் இப்படி என்றால் பள்ளிக்கூடத்தில் பெருக்கும் ஒரு ஆள்
இரண்டாவது படிக்கும் பிள்ளையை.......... கடவுளே!!!

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி கஷ்டப்பட வேண்டுமோ!!
************************************************************************************
ஒரு வழியா ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்துவிட்டது.
அழகு தேவதைக்கு ஒரு குட்டி தேவதை. மீடியாக்கள் வாயை மூடிக்கிட்டு
இருந்தது தான் ஆச்சரியம் ( பத்து அம்ச கொள்கை மாதிரி
ஏன்னோ ஒண்ணு பத்திரிகை துறைக்கு போடப்பட்டிருந்ததாம். ஐஸ்வர்யா
ராய் டெலிவரி பத்தின ந்யூஸை அதிகம் போடக்கூடாது, ஹெட்லைன்ஸா
போடக்கூடாதுன்னு )ம்ம்ம்ம்
************************************************************************************மாயாவதி அக்கா upயை 4 ஆ வெட்டி கூறு போடப்போறாங்க.
தெலங்கானா பிரச்சனை என்னவோ சத்தம் இல்லாம இருக்கு.
ஆசாத் எல்லோரும் பேசி கலந்து முடிவெடுக்கணும்னு ஏதோ
சொல்லியிருக்கற நிலையில் மாயாவதி கொடுத்திருக்கும் திட்டம்
ஓகேவானா தெலங்கானா கொடுக்க வேண்டிய சூழல் வந்திடும்.
ஆண்டவா ஹைதையை காப்பாத்து!!!
***********************************************************************************

தங்கத்தமிழ் நாட்டில் பால் விலை, பஸ் டிக்கெட் விலை எல்லாம் ஏத்திப்புட்டாங்களாமே!!
கரண்ட் ரேட் கூட ஏத்தப்போறாங்களாம். இதுக்காக கவலைப்படாதீங்க. எங்களுக்கு
ஏற்கனவே எல்லாம் ஏத்தியாச்சு. பால் லிட்டர் 34 ரூவாய், பெட்ரோல்
ஜனவரில 65 ரூவா இருந்தது இப்ப 73, கரண்ட் ரேட் ஏத்தி இரண்டு மாசம்
ஆச்சு. லேட்டஸ்டா தண்ணிவரிப்பணத்தையும் அதிகரிச்சிட்டாங்க. சிலிண்டர்
410 ரூவா.

இதுக்கு முன்னாடி தமிழகத்தின் நிலை ஜுஜுபி. அதனால அழப்ப்டாது.
கண்ணைத் தொடச்சுக்கோங்க.
*******************************************************************************
மனச்சோர்வு அதிகமா இருக்கும் பொழுது உணவில் அரிசி கண்டிப்பா இருக்கணுமாம்.
தினமும் அரிசிதான் சாப்பிடறோம்னு சொல்வீங்க. நான் அதைப்பத்தி சொல்லலை.
இரவு உணவில் சிலர் டிபன், சப்பாத்தின்னு இருப்பாங்க. (மீ டூ :) )

எங்க டயட்டீஷன் சொல்லிக்கொடுத்தது என்னன்னா பசங்க பரிட்சை,
சில முக்கியமான வேலைகள்னு டென்ஷன் அதிகமா இருக்கக்கூடிய சமயங்களில்
இரவு 1 கப் சோறு சாப்பிடுவது மனச்சோர்வை கண்ட்ரோலில் வைக்கும் என்பது
தான். பசங்களுக்கு அந்த மாதிரி கொடுப்பதால அவங்களும் ஸ்ட்ரெஸில் இருந்து
எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு. நாம் உண்ணும் உணவே மருந்துதானே!

பாத்து பதமா இருந்துக்கோங்க. ஹேப்பி வீக் எண்ட்
*********************************************************************************

Thursday, November 17, 2011

பக்கத்து வீட்டு “பரு”வ மச்சான்!!!

பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு ரகமாக பிரச்சனைகள்
அதான் உடல் உபாதைகள் வரும். பதின்ம வயதில் ரொம்ப முக்கியமானது
“பரு”. இது பெண்குழந்தைக்கு மட்டுமில்லாது ஆண்குழந்தைகளுக்கும் வரும்.

அதுவரை உலர்ந்த சருமமாக இருந்த குழந்தைக்கு அடலஸன்ஸ் வயதில்
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பருவை வரவழைக்கிறது.
இதே ஹார்மோன் மாற்றங்களால் வேறு சில பிரச்சனைகளும் வருகிறது,

அடலசன்ஸ் வயதில் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் அதே சமயம்
சுகாதாரமாகவும் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வயதில்
வியர்வை துர் நாற்றம், வாய் துர்நாற்றம் எல்லாம் தலை எடுக்கும்.
இவற்றிற்கு நல்லதொரு சரும மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்வது
அவசியம். இதெல்லாம் இந்த வயசுல சகஜம் தான் என்று சொல்லி
தீர்வு காணாமல் விட்டால் ரொம்ப கஷ்டம்.

வாரம் இரு முறை முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது
பொடுகை தூரத்தில் வைக்கும். வாரத்திற்கு ஒரு முறை ஹாட் ஆயில்
மசாஜ் வீட்டிலேயே செய்விக்கலாம். சூடான எண்ணெய் மசாஜ் கொடுத்து
ஸ்டீமரால் மயிர்கால்களுக்கு ஆவி கொடுத்து, 30 நிமிடம் கழித்து
நல்ல தரமான ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு கழுவ வேண்டும்.
முக்கியமாக கண்டீஷனர் உபயோகிக்க தவறக்கூடாது. கண்டீஷனர்
உபயோகிக்கும் பொழுது மயிர்க்கால்களில் படாமல் கூந்தல் மேல்
மட்டும் படும்படி தடவி 10 நிமிடங்கள் ஊறி பின் அலசுவதனால்
கூந்தல் பராமரிக்க ஈசியாக இருக்கும்.

சில குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் நிறம் மங்க ஆரம்பிக்கும்.
டேனிங் என்பார்கள். நீச்சல் பழகும் பிள்ளைகளுக்கு உடல் நிறம்
மாறுவதுபோல இருக்கும். இதற்கு வீட்டில் தயிரில் கடலைமாவு,
எலுமிச்சை ரசம் சேர்ந்து கலந்து உடல் முழுதும் தடவி ஊறவிட்டு
குளித்தால்மாற்றம் தெரியும். பெண் குழந்தைகள் ஸ்நானப்பவுடர்
தயாரித்து அதை உபயோகிக்கலாம். இங்கே ஆந்திராவில் நலுகுபொடி
என்று கிடைக்கும். அதில் வேப்பிலை எல்லாம் சேர்த்து தயாரிப்பார்கள்.
நம் ஊரில் ஆண்டாள் ஸ்நானப்பவுடர் கிடைக்கும். அத்துடன் கொஞ்சம்
கடலை மாவு கலந்து உபயோகிக்கலாம்.

பரு விஷயத்துக்கு வருவோம். அழகான முகத்தில் இந்த பரு ஒரு
வடுவையே தந்து விடும். பரு, பால் உண்ணி எல்லா வற்றிற்கும்
சிறந்த தோல் மருத்துவ நிபுணரிடம் அழைத்துச்செல்வது மிக முக்கியம்.

பரு என்றாலே நாம் உடன் கடைக்கு ஓடி கிளியரிசல் வாங்கி வருவோம்.
அதானெல்லாம் சரியாகாது. ஒரு வகை பேக்டேரியாவால் உருவாவதுதான்
பரு. (பொடுகு கூட அப்படித்தான்) சரும நிபுணர் அதற்கு சில மாத்திரை
கொடுத்து நல்ல ஃபேஸ்வாஷ் (மெடிகேடட்) க்ரீம் கொடுப்பார்.

நம் முகத்தில் நமக்குத் தெரியாமல் கிருமிகள் இருக்கும். வெளியே
சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஹேண்ட்வாஷால் கைகளை
கழுவிய பிறகு தரமான ஃபேஸ்வாஷ் கொண்டு முகம் கழுவுவது
அவசியம்.

எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் 4 முறை கூட கழுவலாம்.
பருவை எந்தக்காரணம் கொண்டும் கையால் கிள்ளிவிடக்கூடாது.
இது பேக்டேரியாவை பரப்பிவிடும்.

பரு தழும்பு போக முள்ளங்கி ரசத்தை தடவுவது, பூண்டு ரசம்
தடவுவது எல்லாம் கூடாது. சிலர் நான் இப்படி செய்தேன் என்பார்கள்.
உண்மையில் இந்தப் பொருட்களில் இருக்கும் காரம் முகத்தை
பதம் பார்த்து பரு தழும்பை நீங்காமல் செய்துவிடும்.

10 நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்து கொள்வது அவசியம்.
க்ளன்சிங் மில்க் கொண்டு முகத்தை துடைத்து, ஃபேஸ்வாஷால்
கழுவி, ஸ்க்ரப் செய்யாமல், முகத்தை கொஞ்சம் தூரமாக வைத்துக்
கொண்டு ஆவி பிடித்து, முல்தானி மட்டி அல்லது துளசி பேக்
அல்லது நீம் பேக் போட்டுக்கொண்டால் பருவினால் அதிகம்
தொல்லை இல்லாமல் இருக்கும்.

பருவுக்கு ஆண்/பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
அதனால் ட்ரீட்மெண்ட் இருபாலரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள
வேண்டும். வீட்டுக்குறிப்புக்களுடன் முறையான மருத்துவ
பரிசீலனையும் அவசியம்.

முகம் நம் அகம் காட்டும் கண்ணாடி. “இந்த வயசுல படிப்புல
மட்டும் கவனம் செலுத்தினா போதும். அலங்காரம் வேண்டாம்”!!
என்று சொல்லாமல் தேவையான உதவிகளை பிள்ளைக்கு
செய்து கொடுப்பதால் குழந்தை தன்னம்பிக்கையுடன் வாழும்.






Tuesday, November 15, 2011

பதின்ம வயது சங்கடங்களும், நிபுணர் பதில்களும்

தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்
பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.

பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்
உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த
அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.

1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!
பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?

நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்
அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்
என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.
அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.

ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்
நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்
கூடாது.

2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.
நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு
சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.
நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?

நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி
பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை
நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு
ஆதரவாக இருப்பது அவசியம்.

3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து
கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)

நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி
வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை
புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த
பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்
சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்
அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த
தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று
ஓடுவதால் மகன் பாவம்)

( எனக்கு இந்த இடத்தில் தோணிய
பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்
அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.
தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)


4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?

நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு
உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்
இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது
பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை
கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.

5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது
நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு
படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்
கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.

6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்
குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்
பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.

இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக
பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்
என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது
ஒரு கலை தான்.

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.



சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.
அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்
ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு
விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.


நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்
எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.
ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.
எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்
9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))

காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.
அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்
என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்
பார்க்க ஆவலாக இருக்கிறேன்.



Friday, November 11, 2011

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேர வேண்டும்

அம்ருதம்மாவுக்கு டென்ஷன் கொஞ்சம் ஜாஸ்தி. நல்லா படிச்சாலும்
ஏனோ ஒரு பயம் உள்ளே இருக்கும். சைக்கலாஜிக்கலாத்தான் டீல்
செய்வேன். புதன் கிழமை செம டென்ஷன் மேடத்திற்கு. இன்று 11.11.11
அன்று நடைபெறவேண்டிய INTERSCHOOL COMPETION முன் கூட்டியே
நேற்று நடக்கும் என அறிவித்திருந்ததுதான்.

அம்ருதம்மா பாட்டு போட்டியில கலந்துகிட்டாங்க. அதாவது
ம்யூசிக் ட்ரூப் மாதிரி 5,6,7ஆம் வகுப்பு மாணவ,
மாணவிகளை வெச்சு செட் செஞ்சிருந்தாங்க. பாட்டு,
தபலா, கீ போர்டுன்னு கலக்கல். அதுல அம்ருதம்மா
கீ போர்டு வாசிச்சாங்க. 7 பள்ளிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி.

ஆஷிஷ் அண்ணாகூட இன்னும் 7 பேர் சேர்ந்து ஃப்யூஷன்
டான்ஸ். வெஸ்டர்ன் & இந்திய நடனம். ஆண் குழந்தைகள்
வெஸ்டர்ன், பெண்குழந்தைகள் இந்திய நடனம். அப்புறம்
இருவரும் சேர்ந்து சல்சா என்பது போல இருந்ததாம்.


மேட்டருக்கு வருவோம். என் தங்கங்கள் இருவரும் இந்தப்
போட்டிகளில் ஜெயிச்சிருக்காங்க. அம்ருதம்மா அண்ட் குழுவிற்கு
முதல் பரிசு(ஜூனியர்ஸ் கேட்டகிரியில்)
ஆஷிஷ் அண்ணா & குழுவிற்கு இரண்டாம் பரிசு.(சீனியர்ஸ் கேட்டகிரியில்)



அம்ருதம்மா இந்தப் பாட்டுக்குத்தான் வாசிச்சாங்க.
ஆஷிஷ் அண்ணா பாட்டு ஃப்யூஷன். இவங்க டீச்சர்
தயாரிச்சது என்பதால (மிக்ஸிங்) கொடுக்க முடியலை.

மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ஆஷிஷ் & அம்ருதா.


Wednesday, November 09, 2011

சனிபிடிச்சா கூட பரவாயில்லைப் போல இருக்கு :((

இந்த சனீஸ்வரர் கூட ஒரு பிரச்சனை என்னன்னா குறைஞ்ச பட்சமாவது
பிடிச்சு தன்னோட ஆட்டத்தை ஆடிட்டுத்தான் விடுவாரு. அவரோட
இருக்கும் அந்த “7 வருடங்கள்” வார்த்தைகளால் விவரிக்க முடியாத
ஒரு அவஸ்தை. நல்லாத்தானே போய்கிட்டு இருக்குன்னு நினைப்போம்.
திடும்னு ஒரு செக் வெப்பாரு. ஜென்மச்சனி மகாக்கொடுமை.

இந்த பயங்கர அவஸ்தைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத
ஒரு அவஸ்தை சளி. நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.
திடும்னு தொண்டையை அடைக்க ஆரம்பிச்சது. நாம
யாரை இன்னிக்கு ரொம்ப திட்டினோம்! அவங்க சாபத்தால
தான் தொண்டை வலி வந்திருக்குன்னு ரொம்ப யோசனை
செஞ்சதனாலத்தான் தலைவலி வந்திருக்குன்னு பேசாம
இருந்தேன்.

அயித்தானுக்கா, ஆஷிஷுக்கா, அம்ருதாவுக்கு யாருக்கு இன்றைக்கு
அர்ச்சனை செய்தோம்னு குழப்பம். கந்த ஷஷ்டி அன்னைக்கு
முருகனுக்கு அர்ச்சனை செய்ததைத் தவிர வேற யாரோடும்
பெருசா பேசலை. நல்ல நாளிலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடமாட்டேன்.
சைனஸ்தான். இப்ப வெளியில கூட தண்ணி குடிக்கலை. ஆனா
த்ரோட் இன்ஃபெக்‌ஷன்!!! நாளெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.
ஆனா இந்த ராத்திரியில் படுத்தா மட்டும் இதுக்கு தாங்காது.
ஆஞ்சு ஓஞ்சு படுத்திருக்காளேன்னு விடுமா? ஒரு மாதிரி
அவஸ்தை, கிச் கிச் எல்லாம் மூட்டி இருமலை வரவெச்சிடுது.

இதோட ஒரு இரவு போராடித்தாங்க முடியாம இருந்தா தலைவலி
உடம்பு வலின்னு வர ஆரம்பிக்க ஆகான்னு ஜெர்க்கானேன்.
இது ஒரு மாதிரி வைரல். ஜுரம் உள்ளுக்கு மட்டும் அடிக்கும்.
ஆனா வெளியே டெம்ப்ரேச்சரே இருக்காது. ஜுரத்திற்குண்டான
எல்லா அவஸ்தைகளும் இருக்கும்.

சளிபிடிச்சா குறைஞ்ச பட்சம் 3நாள் இருக்கும் (சனி பிடிச்சா
7 நிமிஷமாவது ஆட்டுவது போல) அப்படின்னு வீட்டு மருந்து
சாப்பிட்டு பாத்தேன். தொண்டையை ரொம்ப கஷ்டப்படுத்தாமல்
ப்ரெட் பால், இட்லின்னு ஓட்டினேன். ம்ஹூம் சரி வரலை.
சனிஸ்வரர் ஆட்டுறார்னு தெரிஞ்சாலும் அவருக்குன்னு சில
எதிர்கட்சி தெய்வங்கள் இருப்பாங்க. அவங்களை கும்பிட்டா
இவர் ஆட்டம் கொஞ்சம் குறையும் என்பது போல மருந்து
எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

நேற்று இரவு தலை சாய்க்க விடாம இருமல் ஆரம்பம்.
டாக்டர் கிட்ட வேணாம்னு அடம் பிடிச்சு கிட்டு இருக்கேன்.
ஆயில் இஞ்சஷன் போட்டா அந்த வலியில் வேலை செய்யவே
முடியாது. ஏற்கனவே நமக்கு உடம்பு வீக்குன்னு டாக்டர் சொல்லிக்கிட்டு
இருக்க இதுல இப்படின்னா கண்டிப்பா ஊசிதான்!! ஊசியைப்பாத்தால்லாம்
பயமில்லை. அதன் சைட் எஃபக்டா வேலை செய்ய முடியாம
கஷ்டமா இருக்குமே என்பதால் ஒரு கஷ்டம்!!

அயித்தான் விடுவாரா!!( இந்த நேரம் பார்த்து இவருக்கு டூர் ஏதும்
இல்லாம போச்சு. இருந்திருந்தா தப்பிச்சிருப்பேன்):)) அதனால
ட்ரீட்மெண்ட் கன்ஃபார்ம். லீவுதான். தேறி வர்ற அளவுக்கு பெரும் பிரச்சனை ஏதுமில்லைன்னாலும் ரெஸ்ட் எடுத்துக்கறது பெஸ்ட் என்பதால லீவு.

ஹைதையில் குளிர் துளிர் விட ஆரம்பிச்சதுக்கே இந்த
நிலமையா இருக்கு. இந்த வாட்டி மழை அவ்வளவா இல்லை.
அதனால குளிர் போனதடவை மாதிரி இருக்காதுன்னு நினைச்சேன்.
காலையில் பனி பொழியுது, பகலில் வெயில் பிரிச்சு மேயுது.
சாயந்திரம் 5 மணிக்கே இருட்டு, குளிர்னு ஒரு மார்க்மா
ஆரம்பிச்சிருக்கு.

நான் சீக்கிரம் 1000 பதிவு அடிச்சு விழா கொண்டாடலாம்னு
நினைச்சிருந்தேன். அது நடக்க கூடாதுன்னு யாரும் ஏதும்
செஞ்சிட்டாங்களா?!!! :))

சரி இந்தப் பாட்டைக்கேட்டுகிட்டு இருங்க.


Tuesday, November 08, 2011

கத்துக்கோ!! கத்துக்கோ!!!

”மணி 7.45 ஆயிடிச்சு!! இன்னும் அப்பா வர்லை. அவங்க ஃப்ரெண்ட்
வரும் நேரம் ஆகிடிச்சே! அப்பாவுக்கு போன் போடுங்க” என்றால் ரம்யா.

சொன்ன நேரம் வாசலில் காலிங் பெல் அடித்தது. அம்மா கிச்சனில்
பிசியாக இருக்க பிள்ளைகள் ஓடினர் கதவு திறக்க, நின்றது மனோஜ்.
ரம்யாவின் கணவன். “அப்பா வந்தாச்சும்மா!!” என்றனர் பிள்ளைகள்.
ரம்யா- மனோஜ் ஜோடிக்கு ஒரு மகனும் மகளும்.

அடுக்களையிலிருந்து ஒரு நொடி வெளியில் வந்தவள்
“காபியா? டீயா? என்ன குடிக்கறீங்க?” என கேட்க,

“தண்ணி போதும், ரகு வரும் நேரம் ஆயிடிச்சு. சமையல்
ரெடியா?!” என கேட்டான்.

எல்லாம் ரெடி!! என்று சொன்னவள் அடுக்களையில் ஒரு ரவுண்ட்
பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள்.

மனோஜ் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறான். வெகு நாள்
கழித்து சந்தித்த அவன் நண்பன் ரகுவையும் அவன் குடும்பத்தினரையும்
டின்னருக்கு அழைத்திருந்தான். அப்பாவின் பால்யகால நண்பனைப்
பார்க்க பிள்ளைகளும் ஆவலுடன் இருந்தனர்.

8.15 இருக்கும். ரகு குடும்பத்தினருடன் ஆஜர்.ரகு-உஷா தம்பதியருக்கும்
ஒரு மகன் மகள். மனோஜ் ரம்யா பிள்ளைகள் வயதுதான். பரஸ்பரம் அறிமுகத்துக்குப்
பின்னர் மனோஜ் புதிதாக வீடு வாங்கி குடி போயிருப்பதால் வீட்டைச்
சுற்றிக்காட்டினர்.

பளிச் பளிச்சுன்னு ஒரே சுத்தமாக இருந்தது வீடு. புழங்கவே மாட்டார்களோ!
என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தது. அந்த வீட்டிலும் இரண்டு
குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த ரகு தன் மனைவியிடம்,
“நல்லா பாரு உஷா! எவ்வளவு சுத்தமா வெச்சிருக்காங்க வீட்டைன்னு!
நீயும் கத்துக்க!!”.என்றவன் ரம்யாவிடம் திரும்பி,”
உங்க டெக்னிக்கை கொஞ்சம் உஷாவுக்கு சொல்லிக்கொடுங்க!” என்றான்.
இதையே குறைந்தது 4 தடவையாவது சொல்லியிருப்பான் ரகு.

மனோஜும் ரம்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட வேளையில்,
முகம் சுருங்கிப்போன உஷாவையும் பார்க்கத் தவரவில்லை.

”டேபிள் செட் செய்யறேங்க!” என்று அங்கிருந்து நகர்ந்த ரம்யா
பிள்ளைகளை அழைத்து உதவி செய்யச் சொன்னாள். ரம்யா சமையல்
கலையிலும் கில்லாடி. நார்த் இண்டியன், சொளத் இண்டியன் எல்லாம்
அருமையாக செய்வாள். அன்று ரகுவின் குழந்தைகளும் விரும்பும்
வகையில் சைனீஸ் நூடில்ஸும், பாஸ்தாவும் கூட செய்து வைத்திருந்தாள்.
எல்லாம் பேசி மகிழ்ந்து ஆனந்தமாக உண்டார்கள்.

நண்பர்கள் சேர்ந்தால் பேசி மகிழ்வது பற்றி சொல்லவா வேண்டும்.
டின்னர் முடிந்தது. மனோஜும் ரகுவும் பால்கனியில் போய் உட்கார்ந்தார்கள்.
ப்ளேட்டுக்களை எடுத்துப்போட்டு மிஞ்சிய சாப்பாட்டை டப்பாவில்
எடுத்துப்போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்த ரம்யாவுடன் அவளின்
குழந்தைகளும் உதவிக்கொண்டிருந்தனர்.
“நான் ஏதும் ஹெல்ப் செய்யவா? ”என வந்தாள் உஷா. வேணாம்!
நீங்க வாங்க, நாம டெசர்ட் சாப்பிடலாம். பசங்க பாத்துப்பாங்க என்ற
ரம்யா, “ கண்ணுங்களா, டேபிள் மேட் எடுத்து கழுவி விட்டு
நல்லா துடைச்சிட்டு, கை கழுவி விட்டு வாங்க டெசர்ட் சாப்பிடலாம்!”
என்றாள். ட்ரேயில் அழகான கண்ணாடி கிண்ணத்தில் சுடச்சுட
குலாப்ஜாமுன் பார்க்கவே அழகாக இருந்தது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரகு,” என்னடா இது சின்னப்பசங்களை
வேலை வாங்கறாங்க உன் மனைவி?” என்று சொல்ல.
அவங்க ரொம்ப சின்ன பசங்க இல்லப்பா, மகனுக்கு 12 வயசு, மகளுக்கும்
10 வயசு ஆகுது!” என்று சொல்லிக்கொண்டு இருக்க ரம்யா குலாப் ஜாமுனை
நீட்டினாள். அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

அதற்குள் குழந்தைகளும் வர, டெசர்ட் கிண்ணத்துடன் பிள்ளைகள் நால்வரும்
டீவி முன் போய் அமர்ந்தனர்.

உஷாவின் முகம் வாட்டத்துடனே இருந்தது ரம்யாவிற்கு என்னவோ செய்தது.
ஏதாவது செய்யுங்களேன்! என்ற அவளது பார்வைக்கு சிரிப்பை பதிலாக
தந்த மனோஜ் மெல்ல ஆரம்பித்தான்.

“ரம்யாவும் படிச்சிருக்கா, நல்ல வேலையில் அமரும் சாத்தியம் இருந்தும்,
பிள்ளைகள் வளர்ப்புக்காக ஹோம் மேக்கரா மட்டும் இருக்க சம்மதம்
தெரிவிச்சா. ஹோம் மேக்கர்னா வீட்டுல அவங்களுக்கு வேலை இல்லாம
இருக்குமா! அதனால எங்க வீட்டுல எழுதப்படாத சட்டம் ஒண்ணு இருக்கு!
அதாவது அவங்க ரூமை அவங்க அவங்க சுத்தம் செஞ்சிடணும். இது பசங்களுக்கும்
பொருந்தும். சமையற்கட்டையும்,ஹாலையும் மனைவி பாத்துப்பாங்க.
இப்படி நாங்க வேலையைப் பிரிச்சு பாத்துக்கறதால எங்க வீட்டை சுத்தமா
வெச்சிருக்க முடியுது. எல்லா வேலைகளையும் நாங்க 4 பேரும் பிரிச்சு
செய்வதால ரம்யாவுக்கும் அதிக சுமை இருக்காது, பசங்களுக்கும்
கத்துக்க முடியும்,” என்றான்.

பிள்ளைகளிடம் உதவி கேட்டாலே “ பிள்ளைகளை வேலை
சொல்லாம இருக்க முடியாதா உன்னால,
நீயே செய் என்று” கத்துவான் ரகு.

உஷா இப்பொழுது கணவனைப்பார்த்த பார்வையில்,” கத்துக்க வேண்டியது,
நீங்களும் தான்!” என்றது போல இருந்தது.


Monday, November 07, 2011

டப்பர்வேர் பாத்து ஓடாதீங்க!! - 2

டப்பர்வேர் பொருட்கள் பத்தி தெரியும். ஆனா அதை வாங்கனும்னா
எனக்கு பயம். விலையாலதான். ஆனாலும் எப்படியோ ஆசைப்பட்டதை
வாங்கி கிச்சனை அழகு செய்யலாம், அதோட பொருட்களும் பத்திரம
இருக்குமேன்னு நான் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஒரு
சமயம் சென்னையில் இருக்கும் என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட்
டப்பர்வேர் கன்ஸல்டண்ட் என்பதால அவங்க கிட்ட வேணுங்கறதை
சொல்லியிருந்தேன். சுமார் 5000 ஆச்சு. அதுக்கு ஒரே ஒரு சின்ன
டப்பா கிஃப்டா கொடுத்திருந்தாங்க.!!!!

அது முடிஞ்சு மதுரையில் எங்க சித்தியைப் பாக்க போயிருந்தேன்.
மதுரை அக்ரிணி குடியிருப்பில் சித்தி இருக்காங்க. அங்க நிறைய்ய
டப்பர்வேர் கன்ஸல்டண்ட். அங்க போனதக்கப்புறம்தான் எனக்கு
நிறைய்ய தெரிஞ்சது. எங்க சித்தி மெம்பர் ஆனாங்க. இப்ப எங்க
சித்தி ஒரு டப்பர்வேர் மேனேஜர்.


எங்க சித்தி மெம்பரா சேந்ததற்கப்புறம் தான் எனக்கு பல உண்மைகள்
புரிஞ்சது. MRP ரேட்டில் 24 சதவிகிதம் கன்ஸல்டண்டுக்கு போகும்.
இதைத் தவிர இவ்வளவு பணத்துக்கு ஆர்டர் கொடுத்தா ஆக்டிவிட்டி
கிஃப்ட் ஒண்ணும் கிடைக்கும். இது ஒவ்வொரு வாரத்துக்கும் மாறும்.
உதாரணமா இந்த வாரம் 3000 ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தா ஆனியன்
கீப்பர் டப்பா ஃப்ரி. இந்த 3000த்தில் கம்பெனிக்கு கொடுக்க வேண்டியது
2660 தான்!!

எனக்குத் தேவையான பொருட்களை சித்திகிட்ட ஆர்டர் செஞ்சு
வெச்சிடுவேன். இல்லை நான் அங்கு போகும் பொழுது வாங்கிக்குவேன்.
சித்திக்கு கிடைக்கும் கன்சல்டண்ட் ரேட்டிலேயே எனக்கு கிடைக்கும்.
சித்திக்கும் டார்கெட் அச்சீவ் செய்ய ஈசியா இருக்கும். எல்லோருக்கும்
இந்த மாதிரி உறவினர்கள் மெம்பரா இருக்க மாட்டாங்கல்ல!! இருந்தாலும்
தனக்கு வரும் லாபத்தை குறைச்சுக்கவும் சிலர் விரும்ப மாட்டாங்க.
அதனால டப்பர்வேர் பொருட்கள் வாங்கணும்னா இந்த மாதிரி செய்யலாம்.

1. சென்ற பதிவுல ராமலக்‌ஷ்மி பின்னூட்டத்துல சொல்லியிருக்கற
மாதிரி அவங்க இஷ்டப்படி பொருட்களை வாங்காம, எனக்கு என்ன
தேவையோ அதை வாங்கிக்கறேன்னு கண்டிப்பா சொல்லணும்.
அவங்க கிட்ட ஃப்ளையர்னு டப்பர்வேர் புத்தகம் இருக்கும். அதை
வாங்கி நமக்குத் தேவையானதை செலக்ட் செய்யலாம்.

2. அதைத் தவிர சில பொருட்கள் ஆஃபரில் வரும். ட்ராபிகல் ட்வின்ஸ்னு
ஒரு டப்பா இருக்கு அது 4 வாங்கினா 1 இலவசம். இந்த மாதிரி
வாங்கும் பொழுது நமக்கும் லாபம். அந்த சமயத்துல என்ன ஆஃபர்
இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு அது நமக்குத் தேவைன்னா வாங்குவது
புத்திசாலித்தனம்.


3. அவங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கண்டிப்பா பேசுங்க.
அதாவது எம் ஆர் பியில் டிஸ்கவுண்ட் குறைஞ்ச பட்சம் 10 பர்சண்ட்
வேணும்னு சொல்லுங்க. இரண்டாவதா 3000 அதுக்கு மேலன்னு ஒரே
சமயம் ஆர்டர் செய்தா அதுக்கு உண்டான ஆக்டிவிட்டி கிஃப்டும்
எனக்கு வேணும்னு சொல்லுங்க.



4. இன்னொரு வழி நாமளே மெம்பர் ஆவது. 700 ரூவா கட்டினா
அதுக்கு ஒரு பேக் 3 டப்பர்வேர் சாமான் எல்லாம் கொடுப்பாங்க.
அப்ளிகேஷன் ரெடி செஞ்சு கொடுத்தா நாமும் மெம்பர் ஆகலாம்.
நாம மெம்பர் ஆன 26 சதவிகிதம் நமக்கு கிடைக்கும். நமக்கு
டப்பர்வேர் சாமான்கள் வீட்டுக்கு வாங்கணும் எனும் பொழுது
இதுதான் பெஸ்ட் ஆப்ஷன். MRPயை விட குறைந்த விலையில்
நாம சாமான்கள் வாங்கலாம்.

5. நல்லா புரிந்துகொள்ளும் நட்பு இருக்கறவங்க நாலு பேர் சேர்ந்து
பணம் போட்டு ஒருத்தரை மெம்பராக்கி ஆர்டர் வெச்சு சாமான்கள்
வாங்கிக்கலாம். இதனால குறைந்த விலையில் எல்லோருக்கும்
கிடைக்கும். அதே சமயம் மெம்பரானா தொடர்ந்து ஆர்டர் போடணும்னு
இருக்கறதையும் சமாளிக்கலாம். குறைந்த பட்சம் 2000 ஆர்டர்
போடணும். வாராவாரம். (2000 ஆர்டர் என்றாலும் 1600 தான்
கம்பெனிக்கு கொடுக்கணும்)உடனே வாங்கலாம் எனும் நிலையில்
இருக்கும் தோழிகள், நட்புக்கள் ஒண்ணா சேர்ந்து பலம் பெறலாம்.

6. சில டீலர்கள் மெம்பரானா நீங்க உங்க தேவையின் பொழுது
மட்டும் ஆர்டர் போட்டு வாங்கிக்கங்க, நான் பாத்துகறேன்னு
சொல்வாங்க. அப்படி சொல்லும் பொழுது கறாரா எனக்கு
எப்பத் தேவையோ அப்ப மட்டும் போடுறேன்னு சொல்லி
தோழிகளுக்குத் தேவையான பொழுது ஆர்டர் போட்டு வாங்கிக்கலாம்.
கம்பெனியில வாங்கும் விலைக்கே நாம் தோழிகளிடம்
பகிர்ந்துக்கும் பொழுது நமக்கு லாபம் இருக்காது. ஆனா
குறைந்த விலையில் டப்பர்வேர் சாமான் நாம சேர்க்கலாம்.

7. இப்ப பரிசுப்பொருளா டப்பர்வேர் பொருட்கள் கொடுப்பதில்
நல்ல வரவேற்பு இருக்கு. இந்தப் பொருள் சீக்கிரம் பாழாகாது
என்பதாலும் இதன் மதிப்பு தெரிந்ததாலும் பலரும் இப்ப
கல்யாணம், பிறந்தநாள் எல்லாவற்றிற்கும் டப்பர்வேர் டப்பாக்கள்தான்
தர்றாங்க. சமீபத்தில் நான் கூட என் உறவினருக்கு இப்படி
பரிசளித்தேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மெம்பரானவங்க
எம் ஆர் பி விலைக்கும் குறைச்சலாத்தான் பணம் கட்டி
எடுத்திருப்பாங்க. ஆனா கொடுக்கும் பொழுது நிறைக்க கொடுத்தது
போல இருக்கும்.


இந்த பீகாக் கலெக்‌ஷன் இப்ப சூப்பரா இருக்கு. இதுலயே யானை,
ஒட்டகம் எல்லாம் போட்டும் வருது. கொடுக்கவும் நல்லா இருக்கும்.
MRP 595.

நாமளே மெம்பர் ஆனா டப்பர்வேர் சாமான்களை பரிசளிக்க ரொம்ப
ஈசி. விலையும் குறைவா இருக்கும். தரமான பொருளை பரிசளித்த
திருப்தியும் கிடைக்கும். இப்ப வெள்ளியில் கூட பரிசுப்பொருள்
வாங்க முடிவதில்லை. அதே 500 ரூபாய்க்கு இரண்டு டப்பாக்கள்
மேலே சொல்லியிருக்கும் பீகாக் கலெக்‌ஷன் கொடுக்கலாம். இதை
ஃபிரிட்ஜில் தான் வைக்க முடியாது. மற்றபடி ட்ரை ஸ்டோரேஜாக
உபயோகிக்கலாம்.





இப்ப BUYER'S MARKET தான். அதனால எனக்கு இவ்வளவு பர்சண்ட்
கமிஷன் வேணும்னு தாரளமா கேளுங்க. முன்ன மாதிரி எல்லாம்
இல்ல. எனக்குத் தெரிஞ்சு பலர் இப்ப கம்பெனி ரேட்டுக்கே
கொடுக்கறாங்க. அவங்களுக்கும் பணத்தட்டுப்பாடு இல்லாம இருக்கும்.
அந்த வாரத்துக்கான ஆர்டர் போடவும் வசதியா இருக்கும்னு தான்.
நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட பேசி அப்புறம் நமக்குத் தேவையானதை
மட்டும் வாங்கிகணும். இது ரொம்ப முக்கியம்.

எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துகிட்டேன். இன்னும் வேற
ஐடியாக்கள் யாருக்கும் தெரிஞ்சா தயவு செஞ்சு பகிர்ந்துக்கொள்ளும்
படி கேட்டுக்கறேன். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.
நன்றி



Friday, November 04, 2011

ஓடாதீங்க!ஓடாதீங்கtupperwareபாத்து ஓடாதீங்க

நம்ம உறவுலயோ இல்ல நட்பு வட்டத்துலயோ, இல்ல தெறிஞ்சவங்களோ
அவங்க இன்சுயூரன்ஸ் ஏஜெண்டா இருந்துட்டா அவங்களைக் கண்டாலே
ஓடுவோம். அவங்க டார்கெட் அச்சீவ் செய்ய நம்மை வற்புறுத்தறாங்களேன்னு
ஒரு பயம் தான். ஆனா சேமிப்பு எவ்வளவு அவசியம்னு தெரிஞ்சா
அவங்களை கூப்பிட்டு உக்கார வெச்சு விவரம் தெரிஞ்சிப்போம். இந்த
சேமிப்புகளில் இருந்து நமக்கு வருமானவரி விலக்கு கொஞ்சம் கிடைக்கும்
என்பது பலருக்குத் தெரியாது, அத்தோடு நமக்குத் தெரியாம ”சிறுதுளி
பெருவெள்ளமா” சேமிப்பது பிற்காலத்துல உதவும்னு புரியாம பலர்
கையில இருப்பதையெல்லாம் செலவழிச்சிடுவாங்க. இப்ப டாபிக்
அதைப்பத்தி இல்ல. இந்த இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்களைப்பார்த்து
ஓடுவது போல இன்னொருத்தங்க கிட்டேயிருந்து தப்பிக்க பாப்பது
யாரா இருக்கும்னா அது TUPPERWARE சாமான்கள் விக்கறவங்களாத்தான்
இருக்கும்.

TUPPERWARE ப்ளாஸ்டிக் பொருள் என்பதாலும், அதுக்கு போய்
அம்புட்டு விலை கொடுக்கணுமா? என்பதாலும் தான் நாம ஓடுவது.
மாவுக்கேத்த பணியாரம்னு சொல்வாங்க பாருங்க. அதுமாதிரி
நாம கொடுக்கும் காசுக்கு ஏத்தமாதிரிதான் பொருளும் இருக்கும்.

நாம பொதுவா என்ன செய்வோம். இந்த pearlpet, sunpet,
போன்ற டப்பாக்களைத்தான் அதிகம் சமையற்கட்டில் சாமான்கள்
போட வெச்சிருப்போம். pepsi, கோக் பாட்டில்களில்தான்
தண்ணி நிறைச்சு வெச்சிருப்போம். உண்மையில் நாம
அந்தமாதிரி பொருட்களை உபயோகிக்க கூடாது. அந்த மாதிரி
பாட்டில்களின் அடியில் பார்த்தா 1,3,5 அப்படின்னு நம்பர்கள்
இருக்கும். இது அந்த பாட்டில்களை நாம எத்தனை மறுபடி
உபயோகிக்கலாம்(கழுவி) என்பதை குறிக்குமாம். உங்க வீட்டுல
இருக்கும் எந்த ப்ளாஸ்டிக் பாட்டில் அல்லது டப்பாவின் அடியில்
பாருங்க நம்பர் கண்டிப்பா இருக்கும். அப்படி நம்பரே இல்லையென்றால்
அது உபயோகிக்கவே லாயக்கற்றது என அர்த்தம்.

கீழே கொடுத்திருக்கும் பட்டியலைப் பாருங்க. அந்தந்த
சாமான்களை பேக்கிங் செய்யன்னு ஒரு நம்பர் கொடுத்திருக்காங்க.
அதை ஒரு முறை உபயோகித்தற்கப்புறம் திரும்ப உபயோகப்படுத்த
கூடாது. ஜிப் லாக் கவர்களும் இப்படித்தான். ஒரு முறை
உபயோகிக்க மட்டும்தான்.


ஃபிரிட்ஜ்ல வைக்க கூட அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பொருளாத்தான்
இருக்கணும். கீழே கொடுத்திருக்கும் சிம்பல்களை பாருங்க.



கப் & ஃபோர்க் இது பல டப்பர்வேர் பொருட்களில் இருக்கும். இதுதான்
ஃபுட் க்ரேட் ப்ளாஸ்டிக் என்பதன் அடையாளம். ஃபிர்ட்ஜ்ல வைக்க,
மைக்ரோ அவனில் உபயோகிக்கன்னு அதற்கென குறியிடப்பட்டுள்ள
பொருளை வாங்குவதுதான் புத்திசாலித்தனம். சாதாராண ப்ளாஸ்டிக்
டப்பாவில் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தனுப்பவதற்கும், டப்பர்வேர்
டிபன் டப்பாவில் கொடுப்பதற்கும் நிறைய்ய வித்தியாசம் இருக்கு.


டப்பர்வேர் டப்பாக்களில் ஆப்பிள் போன்ற பழங்களை நறுக்கி
கொடுத்தனுப்பினா 11 மணி வாக்கில் பிள்ளைகள் சாப்பிடும்பொழுது
கறுத்து போகாது. பிள்ளைகள் தயிர் சாதம் எடுத்துச் செல்ல வெறுக்கும்
காரணம் அது புளித்து போகும். பாலும்,கொஞ்சமா தயிரும் ஊற்றி பிசைந்து
வைத்துவிட்டால் பிள்ளைகள் மதியம் சாப்பிடும் பொழுது தயிர் சோறு
சுவையா இருக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை இட்லி தோசைக்கு மாவாட்டி டப்பர்வேர்
டப்பாவில் போட்டு வைத்துவிட்டால் புளிக்காத மாவில் சூப்பரா
இட்லி, தோசை செஞ்சு கொடுக்கலாம்.

இப்போ பல ஐடி கம்பெனிகளில் அலுவலகத்திலேயே மைக்ரோ அவன்
இருக்கு. இந்த டப்பேர் டப்பாக்களில் உணவைக்கொடுத்து அனுப்பும்
பொழுது 20 செகண்ட் அவனில் வைத்து சூடாக்கி சாப்பிடலாம்.

காலை நேர அவசரத்தில் காய்கறி நறுக்கிக்கிட்டு இருக்க முடியாது.
கத்திரிக்காய், உருளை கறி செய்வதாக இருந்தால் தவிர முதல் நாள்
இரவே காய்கறிகளை வெட்டி டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து
விடுவேன் இதனால என்னோட காலை நேரம் வேலை ஈசியா
முடிஞ்சிடுது.

DRY STORAGE அப்படின்னு ஒரு வகை ப்ராடக்ட் இருக்கு டப்பர்வேரில்.
இதில் பருப்பு வகைகள், அரிசிமாவு, கடலைமாவு போன்றவை வைக்கலாம்.
பூச்சி வராது என்பது ப்ளஸ்.

இந்த மாதிரி டப்பாவில் அரிசி போட்டு வைக்கும் பொழுது வண்டு,
பூச்சி வராமல் இருக்கும். (வேப்பிலையைக் துணியில் கட்டிப்
போட்டு வைக்கும் வேலை இல்லை.)

இன்னொரு முக்கியமான விஷயம். வெள்ளிப்பாத்திரங்கள்.
இந்த வெள்ளிப்பாத்திரங்கள் காற்று படுவதால் கறுத்து போய் விடும்.
மர அலமாரி தவிர காட்ரேஜ் பீரோ போன்றவற்றில் வைத்தாலும்
கறுத்து விடும். என்னதான் செய்ய? இருக்கவே இருக்கு டப்பர்வேர்.

டப்பர்வேர் டப்பாக்கள் காற்றுபுகாத வகையில் இருக்கும். அதனால
பெரிய சைஸ் டப்பாக்கள் (நம்ம அலமாரியில் வைக்கும் வகையில்)
வாங்கி அதில் வெள்ளிப்பாத்திரங்களைப் போட்டு மூடிவைத்து
விட்டால் தேவையான பொழுது எடுத்துக்கொள்ளலாம். அதே
பளபளப்புடன்.

சரி. டப்பர்வேரில் இவ்வளவு நன்மைகள் இருக்கு. ஆனா
அதோட விலை. கண்ணைக்கட்டுதே!!! வாங்கனும்னு நினைச்சாலே
பயப்படுத்துவது அதன் விலைதான். மாவுக்கேத்த பணியாரம்
சொலவடை இங்கே நமக்கு நல்லா புரியுது. ஆனாலும் டப்பர்வேர்
வாங்கும் முன் சில டெக்னிக்குகள் இருக்கு.

அடுத்த பதிவுல சொல்றேன்.. வாங்க.


Thursday, November 03, 2011

இல்லத்தரசிகளுக்கான நாள்

எதெதற்கெல்லாமோ ஒரு நாளை டெடிகேட் செய்கிறார்கள்.
வேலண்டைன்ஸ்டே அன்று மட்டுமாவது காதல் பொங்குமா
என ஏங்கும் நெஞ்சங்கள் எத்தனையோ!!
இந்த அமெரிக்கர்களை பாராட்டியாக வேண்டும்.
இன்றைய நாள் நவம்பர் 3 அமெரிக்காவில் இல்லத்தரசிகளின் தினமாக கொண்டாடப்படுகிறது என படித்த பொழுது செம ஆச்சரியம்.

நம்ம நாட்டில் இப்படிச் சொன்னால் சிரிப்பார்கள். இல்லத்தரசிகள் என்றால்
கேவலம்!!. ஒன்றுக்கும் உதவாத ஜென்மங்கள், வேலைக்குச் செல்லும்
திறன் இல்லாத வகை என்றெல்லாம் ஒரு இழிவான எண்ணம் பலருக்கு
இன்றும் இருக்கிறது. ”நீங்க என்ன பெருசா வெட்டி முறிக்கறீங்க. நாங்க
ஆபீஸ் போனதக்கப்புறம் டீவி, இல்லாட்டித்தூக்கம்!! என்ற பேச்சை
கேட்டிருக்காத இல்லத்தரசி இல்லையென்றே சொல்லலாம்.

எத்தனையோ பேர் படித்திருந்தும் நல்ல வேலையில் அமரும் வாய்ப்பிருந்தும்
பிள்ளை வளர்ப்பிற்காகவும், குடும்பத்திற்காகவும் அதையெல்லாம்
ஓரங்கட்டி விட்டு குடும்பத்தை கவனிக்கும் வேலையை செய்கின்றனர்.
பிள்ளைகள் முன்னே அவனமானப்படுத்தப்படும் தாய் ஏதும் தெரியாதவளாகவே
அறியப்படுகிறாள். அவளுள் புதைந்து கிடக்கும் திறமைகளை அடக்கி
வாசித்து அவதிப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும். வீட்டை விட்டு
வெளியே செல்லாமலேயே அந்தக்கால ஹோம் மேக்கர்கள் பிள்ளை
வளர்த்து குடும்பத்தை வளர்த்தார்கள் என்றால், வேலைக்குச் செல்லும்
கணவனுக்கு தோள் கொடுத்து “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்,
வீட்டை நான் கவனிக்கிறேன்” என்று சொல்லி தங்கள் பங்களிப்பைச்
செய்கிறார்கள்.

நடிகர் சிவக்குமார் தான் வேலையில் பிசியாக இருந்தகாரணத்தால்
குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றும் தன்
மனைவியின் பங்களிப்பு இருந்திராவிட்டால் தன்னால் ஏதும்
செய்திருக்க முடியாது என்றும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர் பாலச்சந்தர், எழுத்தாளர் சுஜாதா என பலரின் அர்தாங்கிகளின்
பங்களிப்பு இல்லாவிட்டால் அவர்களால் பெரிதாக சாதித்திருக்க முடியாது.
நம் வீட்டை எடுத்துக்கொள்வோமே! அம்மா என்ற ஒரு ஜீவன் இல்லாவிட்டால்,
வீட்டின் நிலமை? ஆனால் வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு கொளரவம்
அவ்வளவாக இருப்பதில்லை. உன் மனைவி என்ன செய்யறாங்க?
வீட்டுல சும்மாதான் இருக்காங்க. என்பார்கள் பலர். அந்தச் சும்மாவாக
அவர்களால் இருக்க முடியுமா என ”சும்மா” உக்காந்திருக்கும் மனைவியின்
இடத்தில் அமர்ந்து அவளது வேலையைச் செய்தால் புரியும்.

ஹோம்மேக்கர்கள் பற்றிய என் முந்தைய பதிவு


அமெரிக்காவில் கொண்டாடப்படும் காதலர்தினம் இந்தியாவில்
கொண்டாடப்படும். ஆனால் ஹோம் மேக்கர் தினமெல்லாம் சான்சே
இல்லை. நமக்கு நாமே கொண்டாடிக்கொள்வோம். விருது அளித்துக்
கொள்வோம்.


நம்மை நாம் உணர்ந்துகொள்வது ரொம்ப அவசியம்.

நான் என்னை விரும்புகிறேன், என்னை
நானே மதிக்கிறேன் என்ற எண்ணம் இல்லத்தரசிகளுக்கு நிச்சயம்
வேண்டும். நம் திறமை நமக்குத் தெரியும். அதை அடுத்தவர்கள்
புரிந்துகொள்ளாவிட்டால் போகிறார்கள். இல்லத்தரசிகள் தங்களின்
உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நாளில் சில
நேரமாவது தனக்கென்று ஒதுக்கிக்கொண்டு, அதிலும் சில
கொஞ்ச நேரமாவது ஓய்வு எடுத்துக்கொள்வது தப்பே இல்லை.
அவசியமானதும் கூட.


தன்னலமற்ற பொது சேவையில் ஈடுபடுபவர்களைப்போல தன்னலம்
கருதாது தன்னையும் தன் திறமையையும் மறைத்துக்கொண்டு
குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு
என் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

நானும் ஒரு ஹோம் மேக்கர் என்பதால் எனக்கு நானே வாழ்த்துச்
சொல்லிக்கொள்கிறேன்.

HAPPY HOUSE WIFE'S DAY

Tuesday, November 01, 2011

நலம். நலமறிய ஆவல்.

தீபாவளி எப்படி கொண்டாடினேன்னு பதிவு போடறேன்னு சொல்லிட்டு
பதிவு பக்கமே வரலியேன்னு திட்டிகிட்டு இருந்திருப்பீங்க. ரொம்ப
சாரி. தம்பி வந்து போன சமயம், தீபாவளிக்கு ஊருக்குப்போன
வேலைக்காரம்மா தீபாவளிக்கு மறுநாள்தான் வந்தாங்க. ஆல் இன்
ஆல் அழகுராணியா நாம் வேலைப்பாத்தா கை சும்மா இருக்குமா?
செம வலி. க்ரேப் பேண்டேஜ் கட்டி ரெஸ்ட் கொடுத்தே ஆக
வேண்டிய கட்டாயம்.

தீபாவளிக்கு பலகாரம் செஞ்சதை எல்லாம் படம் பிடிச்சு
போடணும்னு நினைச்சிருந்தேன். இருந்த வேலைப்பளுவில
முடியவே இல்லை. படம் இல்லாட்டி என்ன செஞ்சதை
சொல்றேன். கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர், ஆந்திரா தட்டை,
அம்மா அனுப்பியிருந்த ரவாலாடு பொடியை வைத்து
ரவா உருண்டை, தீபாவளி லேகியமும் அம்மா பொடியா
அனுப்பியிருந்தாங்க. சரியான பதத்துல சூப்பரா லேகியம்,
மைக்ரோ அவன்ல மொறுமொறுன்னு, அப்புறம் சாஃப்டா
இரண்டு வகை மைசூர்பாக் செஞ்சேன். அயித்த்தான்
செம பாராட்டு. கோதுமை மாவில் லட்டு செஞ்சேன்.

தீபாவளிக்கு முதல் நாள் உக்காரை, வெங்காய,உருளை,
வாழைக்காய் பஜ்ஜி. அம்புட்டுதான்.

இனி தொடர்ந்து பதிவு எழுதுவேன்னு நினைக்கிறேன்.
ஆண்டவனருள் வேணும். இந்த சமயத்துல ஒரு சந்தோஷமான
செய்தியை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுறேன்.

ஆஷிஷ் அண்ணா போன மாதம் 9ஆம் தேதி FIITJEE
நடத்திய NATIONAL SCIENCE TALENT SEARCH EXAMல
கலந்துகிட்டாரு. 5ஆம் தேதி ராத்திரிதான் குல்லுவிலிருந்து
அண்ணா வந்தாரு. இருந்த கொஞ்ச நேரத்துல பரிட்சைக்கு
ரெடியானாரு. இன்னைக்கு கொரியர் வந்திருக்கு. ஆஷிஷ்
அண்ணா தேசிய அளவில் 12092ஆவது ரேங்கில் பாஸ்
செய்திருக்காரு. FIITJEE ல் கோர்ஸ் சேர்ந்து படிக்கும்
வாய்ப்பு வந்திருக்கு. இறைவனுக்கு நன்றி.
ஆஷிஷ்ற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மீண்டும் சந்திக்கிறேன்.