Tuesday, November 01, 2011

நலம். நலமறிய ஆவல்.

தீபாவளி எப்படி கொண்டாடினேன்னு பதிவு போடறேன்னு சொல்லிட்டு
பதிவு பக்கமே வரலியேன்னு திட்டிகிட்டு இருந்திருப்பீங்க. ரொம்ப
சாரி. தம்பி வந்து போன சமயம், தீபாவளிக்கு ஊருக்குப்போன
வேலைக்காரம்மா தீபாவளிக்கு மறுநாள்தான் வந்தாங்க. ஆல் இன்
ஆல் அழகுராணியா நாம் வேலைப்பாத்தா கை சும்மா இருக்குமா?
செம வலி. க்ரேப் பேண்டேஜ் கட்டி ரெஸ்ட் கொடுத்தே ஆக
வேண்டிய கட்டாயம்.

தீபாவளிக்கு பலகாரம் செஞ்சதை எல்லாம் படம் பிடிச்சு
போடணும்னு நினைச்சிருந்தேன். இருந்த வேலைப்பளுவில
முடியவே இல்லை. படம் இல்லாட்டி என்ன செஞ்சதை
சொல்றேன். கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர், ஆந்திரா தட்டை,
அம்மா அனுப்பியிருந்த ரவாலாடு பொடியை வைத்து
ரவா உருண்டை, தீபாவளி லேகியமும் அம்மா பொடியா
அனுப்பியிருந்தாங்க. சரியான பதத்துல சூப்பரா லேகியம்,
மைக்ரோ அவன்ல மொறுமொறுன்னு, அப்புறம் சாஃப்டா
இரண்டு வகை மைசூர்பாக் செஞ்சேன். அயித்த்தான்
செம பாராட்டு. கோதுமை மாவில் லட்டு செஞ்சேன்.

தீபாவளிக்கு முதல் நாள் உக்காரை, வெங்காய,உருளை,
வாழைக்காய் பஜ்ஜி. அம்புட்டுதான்.

இனி தொடர்ந்து பதிவு எழுதுவேன்னு நினைக்கிறேன்.
ஆண்டவனருள் வேணும். இந்த சமயத்துல ஒரு சந்தோஷமான
செய்தியை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுறேன்.

ஆஷிஷ் அண்ணா போன மாதம் 9ஆம் தேதி FIITJEE
நடத்திய NATIONAL SCIENCE TALENT SEARCH EXAMல
கலந்துகிட்டாரு. 5ஆம் தேதி ராத்திரிதான் குல்லுவிலிருந்து
அண்ணா வந்தாரு. இருந்த கொஞ்ச நேரத்துல பரிட்சைக்கு
ரெடியானாரு. இன்னைக்கு கொரியர் வந்திருக்கு. ஆஷிஷ்
அண்ணா தேசிய அளவில் 12092ஆவது ரேங்கில் பாஸ்
செய்திருக்காரு. FIITJEE ல் கோர்ஸ் சேர்ந்து படிக்கும்
வாய்ப்பு வந்திருக்கு. இறைவனுக்கு நன்றி.
ஆஷிஷ்ற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மீண்டும் சந்திக்கிறேன்.