Total Pageviews

Sunday, February 26, 2012

நன்றி... நன்றி

எல்லோரும் நல்லா இருக்கீகளா??? ரொம்ப நாளாச்சு பேசி.
சென்னைக்கு போய் வந்தாலே இப்படித்தான் ஆகுது எனக்கு.
ஒரு திருமணத்திற்காக சென்னை ட்ரிப் அடிக்க வேண்டி இருந்தது.
ஊருக்கு திரும்பும் பொழுது ட்ரையினில் இருந்தே ஜுரம் ஆரம்பம்.
வைரல் ஃபீவர். என்னோடு ஹைதைக்கு வந்த அம்மா, அப்பாவுக்கும்
ஜுரம். அம்மா, அப்பா ட்ரீட்மெண்ட்ற்காக ஹைதை வந்திருக்கிறார்கள்.
ஜுரம் சரியாகி அதன் பிறகு அவர்களை மருத்துவத்திற்கு அழைத்து
சென்றேன். இதோ நாளை அவர்கள் கிளம்புகிறார்கள்.

ஆஷிஷ் அண்ணாவுக்கு மார்ச் 2 முதல் தேர்வு ஆரம்பம். அம்ருதம்மாவுக்கும்
அதே நாளில் துவங்குகிறது. இதனால்தான் பதிவு பக்கம் வரமுடியாமல்
போய்விட்டது.

நண்பர் வேங்கடஸ்ரீநிவாசன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.
மிக்க நன்றி சகோ.

எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்ல வேண்டுமா??!!! சரி
சொல்றேன் கேட்டுக்கோங்க.

1. பாட்டு: எப்போதும் பாடல் கேட்க ஆசை. கானக்கந்தர்வனின்
குரலில் பாடல்கள் என்றால் கூடுதல் சந்தோஷம்.

2. குழந்தைகளுக்கு இனி விடுமுறை. ஆனந்தமாய் அவர்களுடன்
அளவளாவும் அந்த இனிமையான தருணங்கள் ரொம்ப இஷ்டம்.
மீ த வெயிட்டிங் ஃபார் த ஹாலிடேஸ் :))

3. டீவி விளம்பரங்களாகட்டும், மருத்துவமனை, தியேட்டர்
போன்ற இடங்களில் ஆகட்டும் பச்சிளம் குழந்தைகளை
பார்க்க ரொம்ப பிடிக்கும். அந்தக்குழந்தைகளின் ஒவ்வொரு
செய்கையும் ஒரு ஆனந்தம்.

4. நட்புக்களுடன் அளவளாவ ஆசை.

5. பயணம் தரும் சுகமே சுகம்.

6. படிப்பது. புத்தகம், இணையம் என எங்கே படிக்க வாய்ப்பிருக்கிறதோ
அங்கே நான் தொலைந்து போவேன் :)

7.

இந்த விருதினை 5 பேருடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.



துளசி டீச்சர்: இந்த விருது கனகச்சிதமாக பொருந்துவது இவருக்கு
என்பதில் சந்தேகமே இல்லை.

அமைதிச்சாரல்: கேமிரா, கைவண்ணம், கதை, கவிதைன்னு கலக்கறாங்க.

ராமலக்‌ஷ்மி: இவங்க கேமிரா பார்வைக்கு, கவிதைக்கு நான் அடிமை.

தீராத விளையாட்டுப்பிள்ளை ஆர்வீஎஸ். இவரது நகைச்சுவை பதிவுகள்
மிக அருமை.

என் இனிய இல்லம் சிநேகிதி. கைவேலைப்பாடுகள் பதிவுகள் ரொம்ப அருமை.

விருது பெற்று பகிர்வதில் மகிழ்ச்சி அடையும் இந்த வேளையில்
இன்னொரு சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
விகடன் வலையோசையில் எனது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர் அப்பாஜி பீடிஎஃப் அனுப்பியிருந்தார். ஹுசைனம்மா மடல்
அனுப்பியிருந்தார். இலங்கையிலிருந்து சுபாஷினியும் மடல் அனுப்பி
வாழ்த்து சொல்லியிருந்தார். நான் இன்னும் புத்தகம் பார்க்கவில்லை.
அப்பாஜி அனுப்பியிருந்த பீடிஎஃப்தான் பார்த்தேன்.

விகடனுக்கும் நண்பர்களுக்கும் தம்பி அப்துல்லாவுக்கும் மிக்க நன்றி
















Wednesday, February 08, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 8/2/12

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.... ஆரம்பிச்சிட்டாங்கன்னு திரும்ப
புலம்ப வெக்கறாங்க. தெலங்கானா கட்சித் தலைவர் கேசிஆர்
மார்ச் மாதம் முக்கியமான தேர்வுகள் முடிந்ததும் எங்கள்
போராட்டம் முழு வீச்சில் இருக்கும்னு சொல்லி போர்ட் எக்ஸாம்
எழுதப்போகும் எங்களைப்போன்ற பெற்றோரின் வயிற்றில்
ஜில்லின்னு ஐஸைக்ரீம் சேர்த்தார் (எத்தனை நாளைக்குத்தான்
பால் வார்த்தார்னு சொல்றது. பாலை விட ஐஸ்க்ரீம் ஜில் அதான்)
அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்க ஜேஇசி என்னவோ
போராட்டம்னு ஆரம்பிச்சிருக்காங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.
***************************************************************
கர்நாடக அமைச்சரவையில் அமைச்சர் செல்போனில் தவறான
வீடியோவை பார்த்துக்கிட்டு இருந்ததை படம் பிடிச்சு வீடியோ
போட்டுட்டாங்க சேனல் காரங்க.

அவங்க அமைச்சரவைக்குள் செல்போன் கொண்டு செல்ல
தடை இருக்காம். ஆனாலும் இன்னொரு அமைச்சர்கிட்ட
வீடியோ அனுப்புன்னு கேட்டதையும் வீடியோவுல காட்டினாங்க.

என்ன கொடுமை இது!!!!!!
***********************************************************
ஏடிஎம் திருட்டு சர்வ சாதாரணமாகிவிட்டது. டெக்னாலஜி
டெக்னாலஜி முன்னேற்றம்னு நாம சந்தோஷப்படும் விஷயமே
நமக்கு இப்ப வில்லனா ஆகுது.

ஏடிஎம்மில் நாம பாஸ்வேர்ட் போட்டு வந்ததும் நம்ம
கை சூடு எந்த நம்பர்களின் மீது இருக்கோ அதை வெச்சு
நம்ம பாஸ்வேர்டை கண்டு பிடிச்சு திருட்டு நடக்குதுன்னு
செய்தி பாத்தேன். (இதையும் ஒரு மிஷின் மாதிரி
வெச்சு பார்ப்பதை காட்டினாங்க.) இந்த மாதிரி விஷயங்களுக்காகவும்
கண்டு பிடிப்புக்கள் நடக்குது.

அதனால சமீப காலமா ஏடிஎமிலிருந்து வெளியே வருவதற்கு
முன் ஒரு வாட்டி எல்லா நம்பரையும் திரும்ப அமுக்கி
வெச்சிட்டு வந்திடறேன்னு நண்பர் ஒருவர் சொன்னார்!!!!
************************************************************
இப்ப ஆந்திராவில் அராஜகம் தான் நடக்குது. வரிசையா
ஐஏஎஸ் அதிகாரிகள் அரெஸ்ட் ஆவுறாங்க. எல்லாம் ஊழல்தான்

அமைச்சர்கள் அனுமதி இல்லாம நாங்க இப்படி செய்ய முடியுமான்னு?
பாதிக்கபப்ட்ட அதிகாரிகள் கேக்கறாங்க. இதுல நியாயமில்லைன்னும்
சொல்ல முடியாது. போன வாரம் அரெஸ்ட் ஆன ஆச்சார்யா எனும்
ஐஏஎஸ் எனக்கு நெஞ்சுவலின்னு சொல்லி ஒரு ஆஸ்பத்திரில
அட்மிட் ஆனார், நீங்க நல்லாத்தான் இருக்கீங்கன்னு, டிஸ்சார்ஜ்
செஞ்சு அனுப்ப, இன்னொரு ஹாஸ்பிடல் போனார் அங்கேயும்
யூ ஆர் ஃபிட்டுன்னு அனுப்பி வெச்சு இப்ப கஸ்டடிக்கே போயிட்டாரு.
இதுல ஸ்ரீ லக்‌ஷ்மிங்கற பெண் அதிகாரியும் இருக்காங்க. இன்னொரு
பெண் ஐஏஎஸ் ஜகன் அண்ணா சொத்து விவகாரத்துல விசாரணைக்கு
அழைக்கப்பட்டிருக்காங்க.

ஒண்ணும் சொல்வதற்கில்லை.

*********************************************************************
ஓட்ஸுக்கும், கார்ன்ஃபேளேக்ஸுக்கும் இப்ப ரொம்பவே விளம்பரம்.
உடல் பருமனை தவிர்க்க நினைக்கறவங்க இந்த விளம்பரங்களைப்
பார்த்து உபயோகிக்கறாங்க. ஆனா இதுல கவனிக்க வேண்டிய
முக்கியமான விஷயம் இருக்கு.

விளம்பரத்துல காட்டுற மாதிரி கார்ன்ஃபேளேக்சில் எந்த பழங்களையும்
யாரும் சேர்த்துக்கொள்வது இல்லை. பாலில் சர்க்கரை சேர்த்துதான்
சாப்பிடுவோம் என்பதால் அதிகப்படியான சர்க்கரை உடம்பில் சேருது.
தவிர சிலருக்கு காலை நேரத்தில் கொஞ்சம் உடம்பில் உப்பு, காரம்
பட வேண்டியது இருக்கும். இல்லாவிட்டால் கைகால்கள் வெலவெலத்து
போன மாதிரி இருக்கும். அப்படிப்பட்டவங்க கார்ன்ஃபேளேக்ஸ் மட்டும்
சாப்பிட்டால் உடல் சோர்வாகிடும்.

உடல் இளைக்கணும்னு நினைக்கறவங்க ஒரு மாதம் கார்ன்ஃபேள்க்சை
காலை உணவா எடுத்துகிட்டாலும் 11 மணிவாக்கில் சாலட் சாப்பிடுவது
முக்கியம்.

ஓட்ஸ் சாப்பிடறேன் உடம்பு இளைச்சிடும்னு நினைக்கறவங்களுக்கு
ஒரு தகவல். ஓட்ஸ் மீல்ஸ் மாதிரியான பலன் தான் தரும்.
அத்தோடு காய்கறிகள், இப்படி சேர்த்து சாப்பிடணும்னு டயட்டீஷியன்
சொல்றாங்க.
**********************************************************************
நம்ம உடம்புக்கு என்ன சாப்பிட்டால் நல்லதுன்னு ஒரு வாட்டி
நல்ல டயட்டீஷியன் கிட்ட காட்டி அதுக்கு தக்க சாப்பிட்டுக்கறது
புத்திசாலித்தனமா படுது. சாப்பிடுவதற்கு தகுந்த மாதிரி உடல்
உழைப்பு இருக்கணும். பலருக்கு மூளைக்கு வேலை அதிகமா
இருக்கும். அதனாலேயே சோர்வா இருப்பாங்க. டயர்டா இருக்குன்னு
எக்சர்ஸைஸ் கூட செய்ய மாட்டாங்க. மூளை வேலை செய்வது
தனிக்கதை. மெயின் ஸ்டோரியா உடலையும் வேலை செய்ய
வைப்பது ரொம்ப முக்கியம்.
******************************************************************

Tuesday, February 07, 2012

நலம் பெற பிராத்தனை..

எதேச்சையாக டீவி9 பார்த்த பொழுது பிரபல பாடகி எஸ்.ஜானகி
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி
இருந்தது.நெட்டில் இதுபற்றி தெரிய தேடினால் ஏதும் தெரியவில்லை.
ஆனால் டிவி9ன் செய்தி இதுதான்.

இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி வந்திருக்கிறார்
ஜானகிம்மா. காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின்
பாத்ரூமில் கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு
உடன் மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
சீ.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தலையில் இரத்தம்
உறைந்திருப்பதாக மட்டும் தெரிந்தது என செய்தி சொல்கிறது.
இது பற்றி எந்த மருத்துவ ரிப்போர்ட்டும் வெளியே வரவில்லை.

தன் இனிமையான குரலால் மகிழ்வித்த இந்தக் குயிலுக்காக
பிராத்தியுங்கள்.





எந்த பிரச்சனையும் இல்லாமல் திரும்பி வந்து எல்லாரையும்
தன் குரலால் மகிழ்விக்க வேண்டி அந்த இறைவனை
பிராத்திக்கிறேன். மேற்படி தகவல்கள் ஏதும் கிடைத்தால்
உடன் பகிர்கிறேன்.


Monday, February 06, 2012

அமைதிச்சாரல் வாங்க ரெசிப்பி ரெடி :)))

போனவாட்டி புளிப்பொங்கல் பத்தி பதிவு போட்டதும்
ரெசிப்பபி தெரிஞ்சு பதிவு போடுங்கன்னு அமைதிச்சாரல்
கேட்டிருந்தாங்க. அவங்களுக்காகவும் புளிப்பொங்கல்
தெரியாதவங்களுக்காகவும் இந்தப் பதிவும் (நேத்துதான்
மொதோ வாட்டி செஞ்சேன்)



இந்தப் புளிப்பொங்கல் நொய்யரிசிப்பொங்கல்னு
சொல்வாங்களாம். அதாவது நொய் (குருணை)
இதில் தான் செய்வாங்க. நம்ம மக்கள் குருணையும்
விடாமல் ஏதோ ஒரு தின்பண்டம் செஞ்சிடறாங்க
பாருங்க. கஞ்சிக்கு உபயோகிச்சுகிட்டிருந்த நொய்யில்
சூப்பரா புளிப்பொங்கல். இது புழுங்கலரிசியில் செஞ்சாதான்
ருசிக்குமாம்.

இப்ப குருணை,கல், நீக்கப்பட்ட அரிசிதான் நாம் வாங்குறோம்
அதனால நாமளே குருணையாட்டம் மிக்சியில் உடைச்சிக்கிடலாம்.
அரிசி உப்புமாவுக்கு உடைப்போமே அதுமாதிரி கொஞ்சம்
பெரிய்ய சைஸ் ரவையா உடைக்கணும். முக்கியமா
ஒண்ணு சொல்ல மறந்திட்டேனே அதுல 1/2 கப்
துவரம்பருப்பு சேர்த்து ரவை மாதிரி உடைச்சு வெச்சுங்கங்க.

புளிப்பொங்கலுக்கு புளி இல்லாமலா!!! எலுமிச்சம் சைஸ்
புளியை நல்லா ஊறவெச்சு, கரைச்சு ரசம் எடுத்து வெச்சுக்கோங்க.

தாளிக்க வழக்கம் போல காஞ்ச மிளகா, கறிவேப்பிலை,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொஞ்சமா நிலக்கடலை,
கடுகு, கொஞ்சமே கொஞ்சம் வாசனைக்காக வெந்தயம்,
எல்லாம் ரெடியா வெச்சிக்கிடுங்க. பெருங்காயம் சேத்தா
இன்னும் வாசனையா இருக்கு. உப்பு, மஞ்சத்தூள் கூட
ரெடியா வெச்சிக்கிடுங்க.

அடுப்புல ப்ரஷர் பேன் மாதிரியோ அல்லது குக்கரையோ
வெச்சு நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊத்துங்க.
காஞ்சதும் தாளிக்கிற சாமான்களை சாமான்களை
ஒவ்வொண்ணா போட்டு தாளிச்சு அதுல கரைச்சு
வெச்சிருக்கிற புளிக்கரைசலை ஊத்தணும். மஞ்சள்
தூள், உப்பு சேர்த்து நல்லா கலக்கிட்டு ரவை மாதிரி
பொடிச்சு வெச்சிருக்கிற அரிசி+ துவரம்பருப்பை
சேத்து நல்லா கிண்டனும். கொஞ்சமா கெட்டி ஆனதும்
மூடி விசில் போட்டு, இரண்டு அல்லது 3 விசில் வந்ததும்
அடுப்பை ஆஃப் செஞ்சிடுங்க.

ஸ்டீம் போனதும் குக்கரைத் திறக்கும் பொழுதே
வாசனை தூக்கும்!! :)) சுடச்சுட புளிப்பொங்கல்
ரெடி. தொட்டுக்க எதுவுமே வேணாம். ஆனா அப்பளத்தை
சுட்டு வெச்சீங்கன்னா இன்னும் இரண்டு கரண்டி கூட
உள்ள போகும். :))

படம் நெட்டுல சுட்டதுதான்.


Wednesday, February 01, 2012

IKEA...

நான் சிங்கை போவதாக (5 வருடம் முன்னாடி) சொன்னப்ப
அப்போதான் சிங்கை போயிட்டு வந்த தோழி நிறைய்ய
டிப்ஸ் சொன்னது எனக்கு உதவியா இருந்தது. அதில் முக்கியமாக
மறக்காம அவங்க போயிட்டு வான்னு சொன்னது IKEA.
அங்கே என்ன இருக்கும்? அப்படின்னு கேட்க அவங்க காமிச்ச
சாம்பிள்ஸை பாத்ததும் கண்டிப்பா போயாகணும்னு முடிவே
செஞ்சிட்டேன்.

ஆப்பிள் ஸ்லைசர்னு இப்ப மார்க்கெட்டில் ஒண்ணு விக்குதுல்ல
அது அநேகமா சைனீஸ் ப்ராடக்டாத்தான் இருக்கும். அது
ரொம்ப நாள் உழைக்காது. ஆனா என் ஃப்ரெண்ட் காட்டியது
ஐக்கியாவில் வாங்கியது. இப்ப வரைக்கும் என் வீட்டில்
உபயோகத்தில் இருக்கு.


அதுக்கப்புறம் இது ரொம்ப முக்கியமா வாங்கிக்கோ கலான்னு
சொன்னாங்க. ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த கிளிப்.
ப்ரெட், ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய சில கவர்கள்,
சிப்ஸ், ஊருக்கு போகும் பொழுது பிஸ்கட் எல்லாம் இப்படி
ஜிப் லாக் கவரில் போடுவதையும் விட ஏர் டைட்டா வைக்க
உதவுதுன்னு காட்டினாங்க. நானும் போய் இரண்டு கவர்
வாங்கியாந்தேன். சின்னதும் பெருசுமா ரொம்ப ஹேண்டியா
இருக்கு. 3 வருஷம் முன்னாடி ப்ரூ இன்ஸ்டண்ட் காபி
பொடியோட ஃப்ரெஷ்ஷா வைக்க லாக்குடன்னு மஞ்சக்கலர்ல
கூட கொடுத்தாங்க. ஆனா IKEA கிளிப்ஸ் மாதிரி வராதுங்க.




வீட்டில் பசங்க இருக்கறவங்களுக்கு ஒரு பிரச்சனை பிள்ளைகளூக்கு
ஏத்தாமாதிரி சாப்பாடு கொடுக்கும் பொருள் இருக்கணும். பார்க்க
நல்லாவும் இருக்கணும், அத்தோட உடையாம பத்திரமாவும்
இருக்கணும். இதுக்கு IKEAவோட இந்த செட் ரொம்ப
உபயோகமா இருக்கும். கலர்ஃபுல்லா எம்புட்டு அழகா
இருக்கு பாருங்க.

சரி இதைத்தவிர இன்னும் என்ன நல்லா இருக்கும்னு நீயே
போய் பாத்து தெரிஞ்சிக்கன்னு சொல்லிட்டாங்க. ஆவலோட
IKEA ஸ்டோருக்கு போன என்னை ஏமாத்திடலை. அங்கே
கிடைக்கும் வெரைட்டிதான் என்ன? ஃபர்னீச்சர்ஸ், கிச்சன்
கேபினெட்ஸ் எல்லாமே கிடைக்கும் அங்கே. டிஸ்மாண்டில்
செஞ்சு வேற எடுத்துக்கு தூக்கிகிட்டு போறமாதிரி இருக்கும்.

எனக்கு அங்க ரொம்ப பிடிச்சது கத்தியை ஷார்ப்பாக்கறதுக்கு
உபயோகமா இருக்கும் இந்த ஷார்ப்பனர்.

சின்ன க்ரைண்டிங் மில். இதுல ஜீரகம், மிளகு, வெந்தயம்
எல்லாம் போட்டு கையாலேயே திருப்பி திருப்பி பொடிச்சிடலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும் பொழுது கொஞ்சமா வெந்தயத்தை
வறுத்து அதை இதில் போட்டு சாதத்தின் மேலே அப்படியே
பொடிச்சு போடலாம்.

இப்படி இந்தக்கடையில நிறைய்ய உபயோகமான பொருட்கள்
கிடைச்சது. ஒரு வாட்டி சிங்கையிலிருந்து வரும்பொழுது
பசங்ககிட்ட என்னடா வேணும் உங்களுக்குன்னு தம்பி கேட்க
இது வாங்கிகிட்டு வாங்க மாமான்னு போட்டோ அனுப்பினாங்க.
வலையால செய்யப்பட்ட இந்த ஹேங்கிங் செல்ஃப்ல நாம
என்ன வெச்சிருக்கோம்னு அழகா தெரியும். பசங்க டாய்ஸ்,
பெல்ட் எல்லாம் ஒரே இடத்துல் வெச்சிடவும் உதவியா இருக்கும்.

அதை வாங்கப்போனப்போ இந்த லாண்டரி பேக்கும் கண்ணுல பட்டு
தம்பி வாங்கியாந்தாப்ல. துவைக்க வேண்டிய துணிகளை அழகா
இதுல போட்டு வெச்சிடுவோம். கண்ட இடத்துல துணி கிடக்கமா
காத்தோட்டமா துவைக்கறவைக்கும் சொகுசா துணிகள் இந்த
கூடைக்குள் அடைக்கலம் ஆகிடும். நம்ம ஊர்லயும் கிடைக்குது.
ஆனா அது அவ்வளவு ஸ்டராங்கா இருப்பதில்லை.

இது சிங்கையில் மட்டுமில்ல பல நாடுகளில் இருக்கு.
அதைத் தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க.

IKEAவில் என்னென்ன பொருட்கள் கிடைக்குதுன்னு பார்க்க
இங்க சொடுக்கினால் பார்க்கலாம்.


இந்த ikea சீக்கிரம் இந்தியாவில் கடை திறக்கும் வாய்ப்புக்கள்
இப்ப வந்திருக்கு. நம்ம இந்தியாவின் கொள்கையால இங்கே
வரமுடியாம இருந்திருக்கு. ஆனா இப்ப Foreign direct investment
கொண்டு வரப்போறதால ikea வந்திடும்னு சொல்றாங்க.

அதைப்பத்தி இங்கப்போனா தெரிஞ்சிக்கலாம்.

இந்தியாவுக்கு வரும் வரைக்கும் யாரும் ஃபாரீன் டூர் போனீங்கன்னா
அங்கே ஐக்கியா ஸ்டோர் இருக்கான்னு பாத்து கண்டிப்பா ஒரு
எட்டு போயிட்டு வாங்க. இல்ல சொந்தக்காரங்க யாரும் வர்றதா
இருந்தா ஐக்கியா போயிட்டு வாங்கிகிட்டு வரச் சொல்லுங்க.