Wednesday, October 29, 2014

காற்று வாங்கப் போனேன்.......

அழகான வீக் எண்ட் அது. அந்த வீக் எண்ட் முடிஞ்சதும் ஆஷிஷ் அண்ணாவுக்கு பர்த்டே. (சார் இப்போ மேஜர்):) அதுக்கான ட்ரீட்டாவும், அட்வான்ஸ் கொண்டாட்டம் + அம்ருதம்மா முதல் டர்ம் எக்ஸாம் முடிச்ச ரிலாக்சேஷனுக்காகன்னு ப்ளான் செஞ்சு ரிசார்ட்டுக்கு போகலாம்னு ப்ளான் செஞ்சோம்.

லியோனியா ரெண்டு வாட்டி போயாச்சு. சாப்பாடு சூப்பர்னாலும் என்னவோ போர் அடிச்சா மாதிரி இருந்தது. சரி வேற ரிசார்ட் போகலாம்னு ராமோஜி ஃபிலிம் சிட்டி கேட்டோம். பயங்கர ரேட்!!! அதுக்கு பக்கத்துல மொளண்ட் ஒபரான்னு தீம் பார்க் இருக்கு அங்க ஸ்டே பண்ணலாம்னு கேட்டோம். தண்ணீர் பிரச்சனை சார் எதுக்கும் நீங்க 1 நாள் முன்னாடி போன் செய்ங்கன்னாங்க. அட போங்கய்யா நினைச்சு நம்ம உறவுக்கார பையருக்கு போன் போட்டோம். அவருக்கு தெரிஞ்ச நட்புக்கள் மூலம் வேற ரிசார்ட்ல பெஸ்ட் ப்ரைஸ் விசாரிச்சு சொல்றதா சொன்னாப்ல.

கோல்கொண்டா ரிசார்டுன்னு முடிவானிச்சு. இது கண்டிபேட் லேக் பக்கத்துல இருக்கு. நம்ம வீட்டுலேர்ந்து 1 மணிநேரத்துக்கு மேல ஆகும்.  சனிக்கிழமை மதியம் போய் ஞாயிறு மதியம் லஞ்ச் முடிச்சு வந்திடறதா புக் செஞ்சுகிட்டோம். காட்டேஜ் ரூம்கள்தான். நல்லா இருந்துச்சு. எக்ஸ்ட்ரா பெட் போட்டுத்தர்றதா சொல்லியிருந்தாங்க.

பச்சை பசேல்னு இருக்கு. லியோனியா அளவுக்கு பெருசு கிடையாது. அதுல கால்வாசிதான் இருக்கும் இந்த ரிசார்ட்.
 


நாங்க லன்சுக்கு அப்புறம் தான் அங்க போயிருந்தோம். ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு படுத்தோம்.  பக்கத்து ரூம்காரங்க ரொம்ப கத்தி பாடிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப பொறுத்து பார்த்துட்டு ரிஷப்ஷனுக்கு போன் செஞ்சு சொன்னோம்.  அப்புறம் கொஞ்சம் குறைஞ்சது. ஆனா தூக்கம் போயே போச்சு. அங்க ஸ்பா சர்வீஸ் கூட இருக்குன்னு சொன்னதால் சரி அதைப்பத்தி விசாரிப்போம்னு கிளம்பினோம்.

அந்த ரேட்டுலயும் எங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைச்சது.  ரிலாக்ஸ்டா மசாஜ் செஞ்சுகிட்டோம். அருமையான சர்வீஸ். வலிக்காம ரொம்ப அழகா மசாஜ் செஞ்சப்ப நல்லா இருந்துச்சு. அப்படி இப்படின்னு மணி 7 ஆகிடிச்சு. சரி இனி ரூம் போய் என்ன செய்யப்போறோம்னு அண்ணாவும், அம்ருதம்மாவும் இண்டோர் கேம்ஸ் விளையாட, நாங்க காலாற நடந்துகிட்டு இருந்தோம்.



பெரிய்ய அளவுல பாட்டு சத்தம் கேட்டுச்சு. சரி ஏதோ டிஸ்கோத்தேதான் நடக்குது போலன்னு இருந்தோம். 8 மணிக்கு சாப்பிட போனோம். அருமையான சாப்பாடு.  சாப்பிட்டு முடிச்சும் சத்தம் நிக்கலை. எங்க சத்தம்னு பாப்போம்னு கீழ இருந்த பூல் ரெஸ்டாரண்ட்ல கேட்டோம் அப்பதான் தெரிஞ்சது அது டிஸ்கோத்தே சவுண்ட் இல்லை, கெஸ்டா வந்திருக்கற 6 குடும்பம் (மொத்தம் 24 பேர்) சேர்ந்து ஸ்பீக்கர்லாம் வெச்சு பாட்டு போட்டுக்கிட்டு, தண்ணியடிச்சுக்கிட்டு இருந்தாங்க. கொடுமைக்கு அவங்க எங்க பக்கத்து ரூம். (எங்களுக்கு மேலே அவங்களுக்கு கீழே).

ரிஷப்ஷன்ல போய் கம்ப்ளையண்ட் செஞ்சு அந்த மேனேஜர் போய் பேசி பாட்டு சத்தத்தை குறைச்சாங்க. 9 மணியாச்சு... 10 மணியாச்சு. ஸ்பா ட்ரீட்மெண்ட் வேற செஞ்சுகிட்டதால சுகமா தூக்கம் வருது. கண்ணசந்து தூங்க ஆரம்பிச்சோம். ஹோன்னு சத்தம். அதே கும்பல் இப்ப சேர்ந்து விளையாடறது, கத்தி பேசி சிரிக்கிறதுன்னு அதகளம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.  எவ்வளவோ ட்ரை செஞ்சும் அவங்க சத்தம் அடங்கற மாதிரி தெரியலை. எத்தனை தடவை ரிஷப்ஷனுக்கு போன் செய்யறது.

பிள்ளைகளை கூட்டிக்கிட்டு நான் ரிஷப்ஷன்ல போய் உக்காந்துட்டேன். எங்க ரூம்ல இருக்கறதை விட இங்க சத்தம் இல்லாம இருக்கு. இன்னைக்கு நைட் ஃபுல்லும் நாங்க இங்கதான் இருக்கப்போறோம்னு சொல்ல, மேனேஜர் தன்னோட உயரதிகாரிய  போன் போட்டு கூப்பிட்டாப்ல. அவங்க ரெண்டு பேரும் போய் பேசுவதா சொல்ல அப்ப அந்த கூட்டம் காண்டாகி, நாங்க எஞ்சாய் செய்ய வந்திருக்கோம். பர்த்டே பார்ட்டி அப்படி இப்படின்னு சொல்ல, மத்த கெஸ்ட்களுக்கு கஷ்டமா இருக்குன்னு சொன்னா அவங்க மேனேஜரை கண்ட படி திட்ட , அயித்தான் இது சரிப்பட்டு வராது நாங்க கிளம்பறோம்னு. எங்க வீட்டுக்கு ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்திடலாம் சொன்னபோது இரவு மணி 12!!!!

தொடரும்




1 comment:

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்ம்.... இப்படியும் சிலர். :(