Wednesday, February 22, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா??!!!....பாகம்-19

ஆழ்மனதிற்கு அளப்பரிய சக்தின்னு அடிக்கடி பாக்கறோம். அப்படி என்ன அளப்பரிய சக்தி? கொஞ்சம் விரிவா பாக்கலாமா?

மனசு எப்படி இருக்கும்? ஒரு பெரிய்ய பந்து.  அதுல ரெண்டு ப்ரிமாணம்.
conscious mind (உணரும் மனது), sub conscious mind ( ஆழ்மனது) இது இரண்டும் சேர்ந்ததுதான் நம் மனது. ( நான் கலந்துகிட்ட வகுப்புல எனக்கு சொல்லிக்கொடுத்ததில் என் புரிதலை வெச்சு இந்த விளக்கம். தவறா இருப்பவங்க கோபப்படாம புரிய வைக்கும்படி கேட்டுக்கறேன்)


நம்முடைய conscious mindடோட வேலை 10%விகிதம் தான். இது கம்ப்யூட்டரின் இன்புட் மாதிரி. நாம கொடுக்கும் டேட்டாக்களை எடுத்துகிட்டு நமக்கு காட்டும்.  ஆழ்மனம் பெரிய்ய்ய சைஸ் மெமரி பேங்க். டேட்டாக்களை சேத்து வெச்சுக்கும். பாதுகாப்பா பத்திரமா நாம எப்ப கேட்டாலும் எடுத்து கொடுக்கும். நமக்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் பர்மனண்ட்டா சேர்த்து வெச்சுக்கும். இதோட வேலை நாம எப்படி ப்ரொக்ராம் செஞ்சு வெச்சிருக்கோமோ அதே மாதிரி செய்வதுதான். இன்னும் சொல்லப்போனா நம்ம conscious mind கொடுக்கும் கட்டளைகளுக்கு கீழ்படியும். conscious mind ஒரு தோட்டக்காரன் மாதிரி விதைகளை போட்டு, அழகா பாத்துக்கிட மலரும் ஒரு அழகான நந்தவனம், ( அந்த மண்)  நம்ம ஆழ்மனம் அப்படின்னும் சொல்லலாம்.

என்ன விதை போடப்படுதோ அதுதான் விளையும். ஆழ்மனதிற்கு சிந்திக்கும் திறன் கிடையாது. கொடுக்கப்படும் விஷயங்களை படமா மாத்தி சேர்த்து வெச்சுக்கும். இதனால தான் நாம ஒரு விஷயம் பத்தி யோசிக்கும் போது வீடியோ போல மனக்கண்னுல தெரியுது. புதுசா ஒரு விஷயம் நாம செய்யும் போது ஒரு படபடப்பை பயத்தை உண்டாக்குவது ஆழ்மனம் தான். காரணம் அதை பொறுத்தவரைக்கும் இது ஏதோ புது ப்ரொக்ராம். புதுசா நாம ஏதும் செய்ய முயற்படும்போது நம்மளை திரும்ப நமக்கு சொளகர்யமான வழிக்கு இழுத்து வருது.

நாம பாத்தது, நமக்கு நடந்தது, நினைவுகள், திறமைகள், சூழ்நிலைகள் எல்லாவற்றையும் சேகரிச்சு வைப்பது ஆழ்மனது தான்.

நாம ஆழ்மனதுல நல்ல விஷயங்களை விதைச்சிட்டா நல்லதாவே நினைப்போம். நல்லதே நடக்கும்னு நம்புவோம். என்னத்த கன்னையா மாதிரி புலம்பல் குல திலகமா இருந்தா வாழ்க்கையும் அப்படியே ஆகிடும். ஆக வாயிற்காப்பாளன் மாதிரி இருக்கும் conscious mindக்கு நல்ல ஆரோக்கியமான, நேர்மறை விஷயங்களை அடிக்கடி சொன்னா அது அப்படியே போய் ஆழ்மனசுல பதியும். ஆழ்மனசுல பதிஞ்சிட்டா ஓகே இது நம்ம கிட்ட ஏற்கனவே இருக்கும் டேட்டா அப்படின்னு ஏத்துகிட்டு அப்படியே நமக்கு காட்டும். பயத்தை காட்டாம ஓகே go ahead  அப்படின்னு சிக்னல் கொடுக்கும்போது நாம பயமில்லாம வயத்துல பட்டாம்பூச்சியெல்லாம் பறக்காம அந்த வேலையை தைர்யத்துடன் சாதிக்கலாம்.

இது புரிஞ்சிருச்சுன்னா, இனி நம்ம ஆழ்மனதுக்கு எப்படி கட்டளை இடுவதுன்னு பாத்துகிட்டா போதும். எப்படி கட்டளை இடுவது? கட்டளை டைரக்ட்டா கொடுக்கணும்னா ஆல்ஃபா தியானம், self hypnosis இந்த மாதிரி செய்யலாம். ரொம்ப ஈசியான்னா conscious mindக்கு அடிக்கடி நேர்மறை உறுதிக்கூற்றுகளை கொடுத்தா அது அப்படியே ஆழ்மனதுல பதிய வெச்சிரும். எப்பவும் நேர்மறை சிந்தனைகளோட இருப்பது ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும். எதிர்மறை சிந்தனை வரும்போது டக்குன்னு மனசை மாத்தி நேர்மறை சிந்தனையை கொடுக்க பழகிட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துது.


நாளின் துவக்கத்தை அவசரகதியில ஆரம்பிக்காம நல்ல விஷயங்களை நினைச்சு ஆரம்பிப்பது அந்த நாளையே புத்துணர்ச்சியோட வெச்சிருக்கும். இதைப்பத்தி ஆரம்ப பாகத்துல பாத்திருக்கோம். எதிர் மறை எண்ணங்களை தூக்கிப்போட்டு மகிழ்ச்சியா இருக்கணும் என்பதை எல்லாம் பார்த்தோம். எப்போதும் அப்படி இருப்பது சாத்தியமா? சாத்தியமாக்கிக்கணும்னா ஆக்கிக்கலாம். நம்ம விருப்பம் தான். சந்தோஷமான ஒரு வாழ்க்கைதான எல்லோரும் விரும்புவது.

நல்லா சம்பாதிக்கணும் அப்படின்னு நினைப்பது கூட எதுக்கு சந்தோஷமா வாழத்தான். உண்மையில் சந்தோஷம் எதுலயுமோ, யாராலயுமோ நமக்கு கிடைக்க கூடியது இல்லை. இந்த நொடி நான் சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சா உடன் மனசுல மகிழ்ச்சி பொங்கும். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்.

இந்த புத்தகம் படிக்க கிடைச்சா படிங்க. ரொம்ப அருமையா இயல்பா நம்ம மனசுல ஒரு நல்ல நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.



இந்த புத்தகத்துல் Lous hay  அப்படிங்கறவர்கிட்ட Cheryl கேட்பாங்க. நாளெல்லாம் நேர்மறை சிந்தனையோட வாழ்வதை பாத்து பேசியாச்சு. தூங்குவதற்கு கூட ஏதேனும் டெக்னிக் வெச்சிருக்கீங்களான்னு கேட்பார். ஆமாம் ரொம்ப பெருசால்லாம் ஒண்ணுமில்லை, “ நாள் நல்லபடியா நடந்ததற்கு நன்றி சொல்லிட்டு LIFE LOVES ME அப்படின்னு சொல்லிட்டே இருப்பேன். தூக்கம் தானா வந்திரும்னு. நம்ம மனதை அமைதிப்படுத்த இதைவிட வேறெதுவும் நல்ல வழி இருக்கான்னு தெரியலை.

இதைப்படிச்சப்ப இன்னொரு விஷயமும் ஞாபகம் வந்தது. அதுவும் நட்பு ஒருவர் பகிர்ந்ததுதான். இரவு நாம என்ன மனநிலையில படுக்க போகிறோமோ, காலை எழுந்ததும் அந்த நினைப்புதான் முதல்ல வரும்.  இந்த ஒரு வாக்கியம் போதும். கோடிட்ட இடங்களை நிரப்ப.

ஏன் டீவி பாத்துட்டு தூங்கப்போகாதீங்க, மொபைல், லேப்டாப் இவைகளை தூங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே ஒதுக்கி வெச்சிட்டு தூங்குவதற்கான முஸ்தீபு வேலைகளை செஞ்சுக்கோங்கன்னு சொல்றாங்கன்னு புரியுது. நல்ல இனிமையான பாட்டு கேட்டுட்டோ, புத்தகம் படிச்சிட்டோ தூங்கலாம். தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அந்த விவாதங்களால நம்ம பீபீ ஏறி அப்படியே தூங்கப்போனா நமக்குத் தேவையான ஓய்வா கிடைக்கும்?

லூயிஸ் சொல்லியிருப்பது போல  “life loves me" ன்னு சொல்லிகிட்டே தூங்கிப்போகி ஆனந்தமான மன நிலையோட எந்திரிச்சா ஒரு இனிமையான நாளாக ஒவ்வொரு நாளும் ஆகிடுமே. நான் இப்ப இந்த மந்திரத்தை சொல்லிக்கிட்டேதான் இமைகளை மூடுறேன். தூக்கம் என் கண்களை தழுவுது. இனிய நாளுடன் விடியுது.

ரெய்கி இனிஷியேஷன் எடுக்கும் போது  இந்த நேர்மறை கூற்றை தினமும் சொல்லுங்கன்னு சொல்வாங்க. அதாவது கண் விழிச்ச உடனேயே கட்டிலை விட்டு இறங்குமுன் சொல்லுங்க நல்லதுன்னு சொல்வாங்க.



இதை உங்களுக்கும் பகிர்கிறேன். தினமும் உங்களுடைய நாளை இந்த நேர்மறைக்கூற்றோடு துவங்கலாம். ( வேற எது வேணாலும் உங்க மனதுக்கு தோணுவதை சொல்லிக்கலாம். என்ன சொல்லன்னு தெரியாதவங்களுக்காக இந்த பகிர்வு)


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// இந்த நொடி நான் சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சா உடன் மனசுல மகிழ்ச்சி பொங்கும்.. //

இது தான் பிரச்சனையே... காரணம் பேராசை...!