Friday, March 17, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா??!!!! - நிறைவுப் பகுதி.

ONE LIFE TO LOVE என்ன ஒரு அழகான வாக்கியம். நமக்குன்னு இருக்கும் ஒரு வாழ்க்கை இது. ஆனால் இதில் நாம் தேவையில்லாம எத்தனையோ பாரங்களை சுமந்துகிட்டு திரிவதனால பொதி அதிகமாகி வாழ்க்கையை வாழ்வதை விடுத்து ஏனோ தானோன்னுதான் வாழறோம். வாழ்க்கையின் உசரத்துக்கு போகணும்னு இல்லாட்டியும் வாழ்வாதாரத்துக்கு பங்கம் வந்திடக்கூடாதுன்னு கொடுப்பதுக்கு மேல கூவுற மாதிரி தான் நாம் செய்யும் வேலைகள் இருக்கு.

 விட்டா நம்ம இடத்தை அடுத்தவங்க பிடிச்சிடுவாங்கற பயத்துலேயே நேரம் காலம் பாக்காம, உடம்பை கூட கண்டுக்காம எத்தனை பேர் வேல செய்யறாங்க. உடலும் மனசும் துவண்டு போய் ஏதோ ஒரு மெஷின் போல ஆயிடறதாலத்தான் கோவம், கையாலாகதத்தனம் அப்படி இப்படின்னு ஒரு மாதிரியா ஆகிடறோம். நம்மை நாம் கவனிச்சுக்குவதே இல்லை!! எங்கங்க இதுக்கெல்லாம் நேரம் இருக்குன்னு? சொல்லிட்டு ஓடிக்கிட்டே இருக்கோம். ”என்னையும் கொஞ்சம் கவனியேன்னு!!” உடம்பும் மனசும் கெஞ்சுவதை என்னிக்காவது நாம சட்டை செஞ்சிருக்கோமா? தன்னலம் கூடாதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டதால வந்த வினைதான் இது.

 நம்மளை நாம கவனிச்சுக்கிட்டாத்தானே அடுத்தவங்களையும் நல்லா கவனிச்சு நாம சாதிக்க வேண்டியதை சாதிக்க முடியும். நமக்குன்னு கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும். சுகபோகங்களால அனுபவிப்பதைச் சொல்லலை. ஒரு வேளை கஞ்சி குடிச்சாலும் சந்தோஷமா இருக்கணும்னு! சொல்வாங்கள்ல அந்த மாதிரி. இருப்பதை வெச்சு நாம சந்தோஷமா வாழணும்.

 இதெல்லாம் எனக்கும் ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சுதுன்னு வெச்சுக்கோங்க. என்னை நான் உணர்ந்து, என்னை நான் விரும்ப ஆரம்பிச்சதுதான் முதல் படி. இப்ப நமக்கு பிடிச்சது ஒண்ணு இருக்குன்னு வெச்சுக்கோங்க. அதை எப்படி பொத்தி பொத்தி பாதுகாப்போம்!! எந்த பங்கமும் வராம பாத்துக்குவோம்ல. ஏன்! நம்ம பசங்க, நம்ம பெத்தவங்க இவங்க் கஷ்டப்படக்கூடாதுன்னுதானே ஓய்வொழிச்சல் இல்லாம சம்பாதிப்பது. எங்கே அவங்களை திண்டாட விட்டுடுவோமோன்னு தானே வாழறோம். அதே மாதிரி நம்மை நம் உடம்பை, நம் மனசையும அப்பப்ப கவனிக்கணும்.

ஒரு அழகான குளம் இருக்குங்க. அதுல தண்ணி அழகா ஓடிக்கிட்டு இருக்கு.
ஆனா ஒரு மழை வெள்ளம் வந்தா கரை உடைஞ்சு தண்ணி வெளிய
வந்தா ஊரே வெள்ளக்காடாயிடும் தானே! கரைக்குள் அடங்கி நடந்தத்தான்
அந்த குளம் அழகானது.  ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் ....அப்படின்னு ஒரு பிரபல பாடலே இருக்கே.

கரைக்கட்டி நாமாவைச் சொல் அப்படின்னு பெரியவங்க சொல்வாங்க. அதாவது நாம் இறைவனை பெயர்ச்சொல்லி வணங்கும் பொழுது அந்த மந்திரம் அல்லது பேருக்கு முன்னாடி ஓம் என்றும் கடைசியில் நமஹ என்றும் சொன்னால்தான் மந்திரத்தின் பலனே இருக்கும்.

மன அழுத்தம் அதிகமா இருந்தா நாம அளவுக்கதிகமா சாப்பிடுவோம். பல சமயம் நல்லா சாப்பிட்டு முடிஞ்சதுக்கு அப்புறமும் கூட பசிக்கற மாதிரி ஃபீலிங் இருக்கும். பலருக்கு இனிப்பு அதிகம் வேணும்னு தோணும். பலருக்கு சாக்லெட் பிடிக்கும். இதெல்லாத்துக்கு காரணம் நாம நம்ம மனசை சந்தோஷமா வெச்சுக்காததுதான்னு உளவியளாலர்கள் சொல்றாங்க.

என்ன செய்யனும்? உங்க மனதுக்கு பிடிச்ச ஏதோ ஒண்ணை ஆரம்பிங்க. ஆது பாட்டு கேட்பதா இருக்கலாம், புத்தகம் படிப்பதா இருக்கலாம், வரைதல், நடனம்னு எதுவேணா இருக்கலாம். நேரமில்லைன்னு சொல்லாம தினம் 10 நிமிஷம் இதை செய்ய ஆரம்பிக்க அப்புறம் நேரம் தானா கூடும். தியானம், கோவிலுக்கு போவது, ஏதோ புதுசா கத்துப்பதுன்னு ஆரம்பிங்க. வாழ்க்கை இனிதானதா மாறிடும்.

வாழ்வது ஒரு முறை. அதை ஆனந்தமா வாழ்ந்திட்டு போவோம். நம் மனதுக்கு பிடிச்ச செயல்களில்  (தீங்கு விளைவிக்காத செயல்கள்) மனதை திசை திருப்பினா நல்லது.

டியர் ஜிந்தகின்னு ஒரு இந்திப்படம். அதுல கருத்துக்கள் ரொம்ப அழகா சொல்லியிருப்பாங்க. அதை நாம எல்லோரும் கட்டாயம் கடைபிடிக்கணும். வாழ்க்கையில என்னென்னவோ நடந்திருச்சு. சின்ன வயசு காயங்களை அப்படியே உள்ள புதைச்சு நாம வாழ ஆரம்பிக்கிறோம். மறந்திட்டதா நினைக்கறோம் ஆனா எந்த நிகழ்வும் தூக்கி போடாத வரைக்கும் உள்ளேயே தான் இருக்கும். அது நம்ம நடவடிக்கையில் வேற விதமா பிரதிபலிக்கும். நாம செய்யக்கூடியது ஒண்ணுதான். நம்மை நம்ம வாழ்க்கையை நாம கண்டுக்காம இருந்திட்டோம். அதனால என்ன? புதுசா ஆரம்பிப்போம். நமக்கும் நம்ம வாழ்க்கைக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு இனி நம் வாழ்க்கையை காதலிப்போம், நம்மை காதலிப்போம்.

ONE LIFE TO LOVE - LOVE AND LIVE YOUR LIFE.

இந்த தொடருக்கும் ஆதரவு வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள். ஏதேனும் ஒரு வகையிலாவது இந்த தொடர் உங்களுக்கு உதவியிருந்தால் அது உங்களுக்கு வந்து சேரவேண்டிய செய்தியை பிரபஞ்ச சக்தி தெரிவித்தது. அதற்கு ஒரு காரணியாக நான் இருந்ததேன் என்பதில் எனக்கும் பெருமகிழ்ச்சி.






3 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அம்மா...
தொடர்ச்சியாக வாசிக்க முடியாத சூழல்....
எல்லாத்தையும் வாசிக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பொதுவாக நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருந்தாலே போதும், நிறைவான மன நிம்மதி கிடைக்கும். அருமையான தொடர். நன்றி.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி.

சீக்கிரமே மின்னூலாக வரும் :)