Friday, March 20, 2009

கண்ணீர் அஞ்சலி

இந்தப் பதிவு எழுத நேரும் என்று சற்றுமுன் வரை நினைத்திருக்கவில்லை.
ஆனால்............



திரு.சுப்பிரமணியம்
தோற்றம் : 08.07.1942
மறைவு : 20.03.2009
உடல்நிலை சரியில்லாமல் இருந்த என் மாமா
இறைவனடி சேர்ந்தார்.

நம் பிரார்த்தனையின் பலனாக சற்று முன்னேற்றமாக
இருந்தது அவரது உடல்நிலை.

மாமாவைப்போன்ற நல்லவர் துணை தனக்கும்
தேவையெனும் நிலை இறைவனுக்கு ஏற்பட்டிருக்கும்
போல மாமாவை தன்னிடம் அழைத்துச் சென்றார்.

அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

மாமா! என்றும் தங்களின் சொற்படியே நடப்பேன்.
என்றும் தெய்வமாக இருந்து எனக்கு
நல்வழி காட்டுங்கள்.

அழும் ஆஷிஷையும் அம்ருதாவையும் தான்
சமாதனம் செய்ய முடியவில்லை. என் விழிகளிலும்
நீர்!!!!!!!!

34 comments:

  1. கஷ்டமாக இருக்கிறது.நேற்று உங்களிடம் பேசும் போது கூட உடல்நிலை சற்று முன்னேறி இருக்கிறது என்று சொன்னீர்களே அக்கா?

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் வேண்டுகிறேன்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல எனது குடும்பத்தினரின் ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  3. :( இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான மனவலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்கட்டும்.

    ReplyDelete
  4. தங்கள் மாமாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  5. நாம் அனைவரும் ஒரு நாள் இறைவனிடம் திரும்பிச் செல்லக் கூடியவர்களாகவே இருக்கின்றோம். வருந்தாதீர்கள். அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete
  6. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
    தைரியமா இருங்க!!

    ReplyDelete
  7. ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  8. மனது கனக்கிறது.

    ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  9. விதி வலியது !.
    மனம் விட்டு அழுங்கள்! மனதைத் தேற்றுங்கள்!
    அவர் ஆத்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  10. நாம் அனைவரும் ஒரு நாள் இறைவனிடம் திரும்பிச் செல்லக் கூடியவர்களாகவே இருக்கின்றோம். வருந்தாதீர்கள். அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
    புதுக்கோட்டை Mohideen

    ReplyDelete
  11. அவரது ஆத்ம சாந்திக்கும் அவரது பிரிவினைத் தாங்கும் சக்தியை தைரியத்தை உங்கள் குடும்பத்தினருக்கு இறைவன் தரவும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  13. ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  14. தங்களுக்கும்

    அவர்கள் குடும்பத்தினருக்கும்

    சாந்தியும் சமாதானமும் வல்ல இறைவன் அருளவானாக - ஆமின்.

    குழந்தைகளின் நிலை தான் ரொம்ப வருத்தமாயிருக்கு ...

    ReplyDelete
  15. நேற்று என்னை அழைத்து திடீரென உடல்நிலையில் உன்னேற்றம் கண்டு இருப்பதாக மகிழ்வோடு பேசினீர்களே, என்னாச்சு ஒரே நாளில்???

    இறைவன் உங்களுக்கு மன தைரியத்தைத் தர இருகரம் ஏந்தி வேண்டுகின்றேன்.

    :(

    ReplyDelete
  16. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! எனது பிரார்த்தனைகள்! தங்கள் குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் வல்லமையை தேவன் தரட்டும்!

    ReplyDelete
  17. ஆழ்ந்த வருத்தங்கள்.
    துயரிலிருந்து மீட்டெடுக்கும் பலம் காலத்திற்க்கு மட்டுமே உண்டு.

    ReplyDelete
  18. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் உங்கள் காயத்தை ஆற்றட்டும்

    ReplyDelete
  19. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கின்றேன்.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  20. அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் வேண்டுகிறேன்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்.

    இந்த இழப்பை தாங்கும் மனவலிமையை இறைவன் உங்களுக்கு தரட்டும்.

    ReplyDelete
  21. ஆழ்ந்த வருத்தங்கள். :(

    ReplyDelete
  22. :(((

    ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  23. எனது மனம் நெகிழ்ந்த இரங்கல்களை பதிவு செய்துகொள்கிறேன்.. காலம் உங்களுக்கான ஆறுதலை தரட்டும்.!

    ReplyDelete
  24. ஆழ்ந்த வருத்தங்கள்.
    துயரிலிருந்து மீட்டெடுக்கும் பலத்தை காலம் உங்களுக்குத் தரட்டும்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  25. எனது ஆழ்ந்த வருத்தங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன். உங்கள் குடும்பத்தினருக்கும் துயரைத் தாங்கிக் கொள்ளும் பலத்தை இறைவன் தரட்டும்.

    ReplyDelete
  26. //"சாவே உனக்கொரு நாள் சாவு வந்து நேராதோ...
    சஞ்சலமே நீயும் தான் சஞ்சலத்தை காணாயோ...
    தீயே உனையும் தான் தீ மூட்டிபாரோமோ...?
    தெய்வமே உனையொருநாள் தேம்பி அழ வைப்போமா...?"//
    பெரியவரின் ஆத்மா சாந்தியடைந்து...அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்...

    ReplyDelete
  27. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

    ReplyDelete
  28. ஆழ்ந்த இரங்கல்கள் .மரணம் அது எப்போதுமே வலியை உண்டாக்கியே கடந்து போகிறது,துக்கங்கள் கண்ணீரில் கரையட்டும், கண்ணீரைக் காட்டிலும் சிறந்த மருந்து இல்லை துக்கத்தின் வடுக்கள் மாற. மீண்டு வருவீர்கள் ,அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனைகள்

    ReplyDelete
  29. :((

    ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  30. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  31. உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.
    அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று