Monday, November 09, 2009

தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்

தொடர்பதிவான்னு ஓடிடாதீங்க. வாங்க ப்ளீஸ்.
இது உபயோகமான தொடர் பதிவு.


விகடன் வரவேற்பரையில் நம்ம பேரண்ட்ஸ்கிளப்
வந்ததும் எல்லோரும் தெரிஞ்சிருக்கும். (எனக்கு
முதலில் போன் போட்டு சொன்னது அமித்து அம்மாதான்.
நன்றி).

விகடன் இந்த வலைப்பூவில் இருக்கும் திருக்குறள்
கதையை வெகுவாக பாராட்டியிருக்கிறது.
அந்த திருக்குறள் கதையை மறுபடியும்
தொடரலாம்னு நினைக்கிறேன்.

விருப்பம் இருக்கறவங்க கதை எழுதி பேரண்ட்ஸ்கிளப்பிலோ,
இந்த வலைப்பூவிலோ லிங்க் கொடுத்தால் அதை
வலைப்பூவில் சேர்த்திடலாம். அத்தனையையும்
புத்தகமாக்கும் ஐடியா இருக்கிறது.

தயங்காமல் வாங்க. இந்த வருடம் முடிவதற்குள்
எத்தனை நல்ல கதைகள் உருவாகின்றன
என பார்ப்போம். கடைசி தேதி டிசம்பர் 30.

31 அன்று அத்தனை கதைகளையும் தொகுத்து
பதிவு வரும்.

இதற்கு முந்தைய திருக்குறள் கதைகளின்
தொகுப்பு பேரண்ட்ஸ்கிளப் வலைப்பூவில் இருக்கிறது.

ஆதரவது தருவது மட்டுமல்லாமல் கதையும்
எழுத வேண்டுகிறேன்.

18 comments:

  1. நல்ல முயற்சி பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    கடைசிவரி மட்டும் படிக்கலை :)

    ReplyDelete
  2. கடைசிவரி மட்டும் படிக்கலை//

    நான் ஏதும் சொல்லலை. :))))))))

    ReplyDelete
  3. செஞ்சுட்டாப் போச்சு...:))

    --வித்யா

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அக்கா,

    பெரியவங்களுக்கு கதை வுடுறது வேற; சின்னவங்களுக்கு கதை சொல்றது வேற. பொறுப்பான வேலையைக் கொடுத்தீட்டீங்களே, முயற்சி செய்கிறேன் அக்கா.

    ReplyDelete
  6. செஞ்சுட்டாப் போச்சு..//

    இதை இதைத்தான் எதிர் பார்த்தேன் வித்யா.

    குட்

    ReplyDelete
  7. வாங்க ஹுசைனம்மா,

    கதை சின்னவங்களுக்குத்தான்னு இல்லை. பெரியவங்களுக்கு சொல்ற மாதிரி இருந்தா கூட ஓகே தான். திருக்குறளின் கருத்து படிப்பவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல அமரணும்.

    ReplyDelete
  8. எனக்கும் பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து சில பதிவுகள் தரவேண்டும் என்ற ஆசை உண்டு. என்ன.. ஒரு வலையை உருப்படியாக மெயிண்டைன் பண்றதே கஷ்டமா இருக்கேன்னுதான் கேட்காமலிருக்கிறேன். இதற்காவது ஒரு கதை எழுத முயல்கிறேன்.

    வாழ்த்துகள் உங்கள் நன்முயற்சிக்கு.!

    ReplyDelete
  9. செய்யலாம் தென்றல்.

    ReplyDelete
  10. பூங்கொத்து!முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  11. வாங்க ஃப்ரெண்ட்,

    பேரண்ட்ஸ் கிளப்பில் சேர விருப்பத்துக்கு சந்தோஷம். சேர்ந்துக்கோங்க. முடிஞ்சபோது எழுதுங்க. அம்புட்டுதானே.

    நன்றி

    ReplyDelete
  12. நன்றி ராமலக்‌ஷ்மி

    ReplyDelete
  13. அன்பின் புதுகைத் தென்றல்

    நல்ல முயற்சி - வெற்றி பெற நல்வாழ்த்துகள்

    வூட்ல தங்க்ஸ் சும்மா தான் இருக்காங்க - எழுதச் சொல்றேன்

    சரியா

    ReplyDelete
  14. /மங்களூர் சிவா said...

    நல்ல முயற்சி பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    கடைசிவரி மட்டும் படிக்கலை :)/


    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!

    ReplyDelete
  15. வூட்ல தங்க்ஸ் சும்மா தான் இருக்காங்க - எழுதச் சொல்றேன்

    சரியா//
    ஆஹா எழுதச் சொல்லுங்க சீனா சார்.

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. தம்பி நிஜம்ஸ் வருகைக்கு நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று