Friday, June 11, 2010

சரித்திரம் மாறுதோ!!!!!!

ஒரு மேகசின்ல இந்த மேட்டரைப் படிச்சதும் ஆச்சரியமா இருந்துச்சு.
ஓடம் ஒரு நாள் கரைமேலேன்னு சொல்வாங்க. அதுமாதிரில்ல
ஆகிப்போச்சு!!!

வியாபாரம் செய்யும் நோக்கிலே இந்தியாவுக்குள் அடியெடுத்து
வெச்சு மெல்ல மெல்ல நம்மையே ஆள ஆரம்பிச்சாங்க
ஆங்கிலேயர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

East India Company அப்படிங்கற பேர்லதான் மொதல்ல
வந்தாங்க. ஆனா இப்ப இந்தக் கம்பெனிக்கு உரிமையாளர்
நம்ம இந்தியர். ஆச்சரியமாவும் அதே சமயம் கொஞ்சம்
கர்வமாவும் இருக்குல்ல.

சஞ்சீவ் மெஹத்தா எனும் இந்தியர் இந்தக் கம்பெனியை
வாங்கி லண்டனில் ஒரு கடையையும் திறந்திருக்காரு.
கம்பெனியை வாங்கிய பொழுது வானவில்லின் ஓரத்தில்
தங்கம் இருப்பது போல தெரிஞ்சாலும் மனதுக்குள் ஒரு
இந்தியனாக நம்மை முன்பு ஆண்டவர்களின் கம்பெனியை
வாங்கியிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது என்று
சொல்லியிருக்காரு.

லண்டனில் கடை தொறந்தாச்சு. சீக்கிரமாவே
அதாவது இந்த வருடத்துக்குள் இந்தியாவிலும்
East India Company கடை திறக்கப்படுமாம்.

fine foods, furniture, real estate, health and hospitality
இவற்றிற்கான கடையாக கிழக்கு இந்திய கம்பெனி
இருக்குமாம்.

வலைத்தள முகவரி
ஒரு இந்தியனாக சஞ்சீவ் மெஹத்தா நம்மை
தலை நிமிரச் செய்திருக்கிறார்.


வாழ்த்துக்கள் சஞ்சீவ் புதிய சரித்திரம் படைத்து
காட்ட வாழ்த்துக்கள்





10 comments:

  1. history repeats itself என்று சொல்றது இதைத் தானா? வாவ்.

    ReplyDelete
  2. vaanga lk,

    romba nala pathivu eluthalaya athanala ippa intha newsa poten

    varugaiku nandri

    ReplyDelete
  3. அப்படியே லண்டனை நாம் பிடிச்சிட்டா

    ச்சே என்னா கற்பனை
    (அளவிலா ஆசை)

    ReplyDelete
  4. எனக்கு அறியாத செய்தி தான், நன்றி தென்றல்.

    ReplyDelete
  5. எனக்கு இது புதிய செய்தி, நன்றி தென்றல்.

    ReplyDelete
  6. அப்படியே லண்டனை நாம் பிடிச்சிட்டா//

    இப்ப நம்ம ஆளுங்க எல்லா ஊர்லயும் இருக்காங்க. நடந்தாலும் நடக்கலாம் ஜமால். இறைவன் சித்தம்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி பொற்கொடி

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று