Sunday, September 07, 2008

நம்ம மங்களூர் சிவாவுக்கு கல்யாணம்



தாரைகள் தப்பட்டுக்கள் முழங்க சகலமானவர்களுக்கும்
அறிவிப்பது என்னவென்றால்
எனதருமைத் தம்பி (வீக் எண்ட் ஜொள்ளு ஷ்பெஷல் பிளாக்கர்)
மங்களூர் சிவாவுக்கு கல்யாணம். இந்தப் பதிவை நான் தான்
போடுவேன் என்று எப்பவோ சொன்னேன். அதற்காக அந்தப்
பொன்னான வாய்ப்பை எனக்களித்த தம்பி தங்கக்கம்பியின்
வாழ்வு இனிதாக தொடங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.




மணமகள் பெயர்: பூங்கொடி.
ஜெர்மனி பொண்ணு இல்ல. அங்கே படிச்சுகிட்டு
இருந்தாங்க. விருத்தாசலத்து பொண்ணு.

என் பிளாக்கு பக்கம் அடிக்கடி வந்து கமெண்டும்
ஹெய்டி தேவதைதான் அது.

செப்டம்பர் 11 திருமணம் வடபழனியில் இனிதாக
நடை பெறவுள்ளது.

மேலதிக தகவல்கள் சிவாவே தருவார்.

இல்லறம் இனிதே சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

வாழ்த்துக்கள் சிவா, வாழ்த்துக்கள் பூங்கொடி.





19 comments:

  1. வாழ்த்துக்கள் மாம்ஸ் மற்றும் என் அன்பு சீனியர் :)

    மங்களூர் சிவா திருமணம் - சென்னையில் - http://podian.blogspot.com/2008/09/blog-post_07.html

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தம்பி சிவா!

    மாட்டிக்கினியா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. கல்யாணத்துக்கு இன்னும் மூணுநாள்தான் இருக்கா?

    ஐயகோ... கலந்துக்க முடியாதே!!

    சரி... இங்கேர்ந்தே வாழ்த்திக்கறேன்!

    ReplyDelete
  4. தென்றல்... பின்னூட்டத்தை ரிலீஸ் பண்ணுங்க. மீ த ஃபர்ஸ்ட்டான்னு பார்க்க வேண்டாமா?

    இந்தப் பதிவுக்கு மாடரேஷனை எடுத்துட்டா வந்து கும்முவோம்ல?

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சிவா & பூங்கொடி....

    ReplyDelete
  6. 11ம் தேதி வியாழன் காலை 7.30 - 9.00க்குள் வடபழனி முருகன் ஆலயத்தில் அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்

    அன்புடன்
    மங்களூர் சிவா

    ReplyDelete
  7. இனிய திருமண வாழ்த்துக்களினை சொல்லிடுங்க அக்கா :))

    ReplyDelete
  8. அக்கா நீங்க சொன்னமாதிரி நான் நேரில் சென்று உங்க வாழ்த்தையும் சொல்லிடுறேன்

    ReplyDelete
  9. மங்களூர் மாம்ஸுக்கு வாழ்த்துக்கள் ;)

    அவர் கேரளா பக்கமா? முதல் வீடியோவில் செண்டை எல்லாம் முழங்குதே?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் :):):)

    ReplyDelete
  11. இனீய வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி :-)

    ReplyDelete
  12. பரிசல் கமெண்ட் மாடரேஷன் எடுத்துட்டேன். கும்மிக்கோங்க. :))

    ReplyDelete
  13. இனிய திருமண வாழ்த்துக்களினை சொல்லிடுங்க அக்கா :))

    ReplyDelete
  14. நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    (2 பேருக்கும் சொல்லணுமில்ல)


    ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!

    :)

    ReplyDelete
  15. நாங்க முன்னாடியே சொன்னோமுல்ல

    http://kummionly.blogspot.com/2008/05/blog-post_08.html

    ReplyDelete
  16. அடுத்தவர்
    ஜொள்ளா விட
    அழகுப் படங்களை
    அசத்தலா போட்டுத்தந்து
    அற்புதமாய் இருந்துவந்தார்
    நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
    சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
    இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
    விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
    பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
    யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
    எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!

    ReplyDelete
  17. முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

    கவிதை உண்மைதான்..
    எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
    பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

    மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

    செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

    ReplyDelete
  18. //புதுகை.அப்துல்லா said...
    அக்கா நீங்க சொன்னமாதிரி நான் நேரில் சென்று உங்க வாழ்த்தையும் சொல்லிடுறேன்//

    அப்துல்லா....என்னோட வாழ்த்துக்களையும்
    மறக்காம சொல்லிடுங்க!

    ReplyDelete
  19. //புதுகை.அப்துல்லா said...
    அக்கா நீங்க சொன்னமாதிரி நான் நேரில் சென்று உங்க வாழ்த்தையும் சொல்லிடுறேன்//

    //அப்துல்லா....என்னோட வாழ்த்துக்களையும்
    மறக்காம சொல்லிடுங்க!//

    வந்துடுறோம் - இல்லன்னா ஒரு ரிப்பீட்ட்டேய் - அப்துல்லா மறந்துடாதீங்க

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று