Wednesday, February 18, 2009

கனவு காணும்வாழ்க்கையாவும்........

ஆசிரியை ஆவதுதான் எனது கனவு.
ஆனால் நான் +2படித்த பொழுது பேராசிரியை
ஆக வேண்டுமென கனவல்ல கங்கணம்
கட்டிக்கொண்டேன்.

அதற்காகத்தான் ஆங்கில இலக்கியத்தை
எடுத்து படித்தேன். இந்த துறைதான்
வேண்டுமென்று நான் வேண்டி
பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில்
ஆனந்தமாய் துவங்கினேன் என் கல்லூரிப்
படிப்பை.

கல்லூரியில் சேர்ந்த அன்று என் அம்மாவிடம்
“ஒரு கோல்ட் மெடலிஸ்டாகத்தான் நான்
வெளியே வருவேன்!” என சொன்னேன்.
அந்த நேரத்தில் ததாஸ்து தேவதைகள்
அந்தப் பக்கம் வரவில்லை போலிருக்கிறது!!!!

என் கனவு நனவாக வாய்ப்பில்லாமல்
கல்லூரிப் படிப்பு கட்டாகி போனது. :(
அதன் காரணம் இங்கே..

ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆர்வத்தில் இலங்கையில்
இருந்த பொழுது மாண்டிசோரி
ஆசிரியைப் பயிற்சி பெற்று
வேலை செய்தேன்.

அப்பொழுதெல்லாம்
M.A english Literature, M.phil. ph.d
செய்ய வேண்டும், ஒரு கல்லூரியில்
ஆங்கிலத்துறையில் பேராசிரியையாக
ஆசைப்பட்டோமே! B.A முடித்து இப்பொழுது
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
போதிக்க ஆண்டவன் அனுப்பி
விட்டானே! என நினைத்துக்கொள்வேன்.

இந்தக் குழந்தைக்கு நான் சொல்லிக்
கொடுக்காத எதையும் கல்லூரியில்
சொல்லிக்கொடுத்துவிட முடியாது
என்பதை புரிந்து சந்தோஷமாக செய்தேன்.

ஆனாலும் மனதின் மூலையில்
பேராசிரியை ஆகவில்லையே என
வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு கதவை மூடிய ஆண்டவன் மறு
கதவை திறந்துவிட்டு அதன் பிறகு
மூடிய கதவையும் திறந்துவிட்டால்
எப்படி இருக்கும்? அப்படித்தான்
ஆனது.

கனவுக்காணும் வாழ்க்கையெல்லாம்
கலைந்து போகும் ஓடங்களல்ல...
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்
சொன்னது போல் நான் அடிக்கடி
கண்ட கனவு நனவானது.

( ஹஸ்பண்டாலஜி
பேராசிரியை ஆனதை சொல்லவில்லை! :)))

எங்கே? எப்படி? என்னையும் மதித்து
அவர்கள் கூப்பிட்டதனால் என்னாச்சு??!!!

நாளைக்கு வாங்க சொல்றேன்.

31 comments:

  1. //( ஹஸ்பண்டாலஜி
    பேராசிரியை ஆனதை சொல்லவில்லை! :)))

    //

    இங்கபாரு காமெடிய???

    :))

    ReplyDelete
  2. உங்க குடும்பமே ஆசிரியர் மட்டும்தான்.. நோ பேராசிரியர்ன்னு ஆண்டவர் ஏதாவது டீ ஃபால்ட் செட் பண்ணிட்டாரா???

    ReplyDelete
  3. // எங்கே? எப்படி? என்னையும் மதித்து
    அவர்கள் கூப்பிட்டதனால் என்னாச்சு??!!!

    நாளைக்கு வாங்க சொல்றேன். //

    ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கீறீங்க...

    தாங்க முடியல...

    ReplyDelete
  4. என்னா அக்கா

    பாடல்களின் தலைப்பா வருது

    ReplyDelete
  5. கனவல்ல கங்கணம்
    கட்டிக்கொண்டேன்.\\

    தூள் ...

    எப்படியும் அடையவேண்டும் என்ற எண்ணம் அதை நோக்கி நம்மை செலுத்தும்.

    ReplyDelete
  6. யக்கோவ் சஸ்பென்ஸ சீக்கிரம் உடைங்க:)

    ReplyDelete
  7. \\இந்தக் குழந்தைக்கு நான் சொல்லிக்
    கொடுக்காத எதையும் கல்லூரியில்
    சொல்லிக்கொடுத்துவிட முடியாது
    என்பதை புரிந்து சந்தோஷமாக செய்தேன்.
    \\

    சரிதான்.

    ReplyDelete
  8. \\நாளைக்கு வாங்க சொல்றேன்\\

    வருவம்ல

    ReplyDelete
  9. பீடிகையைப் பார்த்தால் வாழ்த்து சொல்ற நேரம்னு நெனைக்குறேன்.. முன்னாடியே சொல்லிக்கிறேன்..என் இனிய வாழ்த்துகள் ஆயிரம்.!

    ReplyDelete
  10. //( ஹஸ்பண்டாலஜி
    பேராசிரியை ஆனதை சொல்லவில்லை! :)))

    //

    இங்கபாரு காமெடிய???

    :))

    ReplyDelete
  11. உங்க குடும்பமே ஆசிரியர் மட்டும்தான்.. நோ பேராசிரியர்ன்னு ஆண்டவர் ஏதாவது டீ ஃபால்ட் செட் பண்ணிட்டாரா???

    ReplyDelete
  12. // எங்கே? எப்படி? என்னையும் மதித்து
    அவர்கள் கூப்பிட்டதனால் என்னாச்சு??!!!

    நாளைக்கு வாங்க சொல்றேன். //

    ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கீறீங்க...

    தாங்க முடியல...

    ReplyDelete
  13. சஸ்பென்ஸ் வச்சி போஸ்ட் போடுறதே உங்களுக்கு வேலையா போச்சு....:)

    ReplyDelete
  14. இங்கபாரு காமெடிய???

    :)))))))))))

    நோ பேராசிரியர்ன்னு ஆண்டவர் ஏதாவது டீ ஃபால்ட் செட் பண்ணிட்டாரா???//

    பேராசிரியர் ஆனேன்னு சொன்னேனெ அப்துல்லா

    ReplyDelete
  15. மீ த ஃபர்ஸ்ட்//

    இல்லை இராகவன் அப்துல்லா முந்திட்டாரு

    ReplyDelete
  16. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கீறீங்க...

    தாங்க முடியல...//


    :))))))))

    ReplyDelete
  17. பாடல்களின் தலைப்பா வருது//

    :)))


    எப்படியும் அடையவேண்டும் என்ற எண்ணம் அதை நோக்கி நம்மை செலுத்தும்.//

    ஆமாம்

    ReplyDelete
  18. யக்கோவ் சஸ்பென்ஸ சீக்கிரம் உடைங்க:)//

    நாளைக்கு உடைச்சிடுவோம்

    ReplyDelete
  19. வருவோம்ல//

    வாங்க வாங்க.

    ReplyDelete
  20. சஸ்பென்ஸ் வச்சி போஸ்ட் போடுறதே உங்களுக்கு வேலையா போச்சு....:)//

    :))))))))))

    ReplyDelete
  21. பீடிகையைப் பார்த்தால் வாழ்த்து சொல்ற நேரம்னு நெனைக்குறேன்.. முன்னாடியே சொல்லிக்கிறேன்..என் இனிய வாழ்த்துகள் ஆயிரம்.!//

    வாழ்த்துக்களுக்கு நன்றி. விரிவா பதில் சொன்னால் சஸ்பென்ஸ் கிழிஞ்சிடும்(எத்தனை நாளைக்கு உடைஞ்சிடும்னு சொல்லுது)

    :)))))

    ReplyDelete
  22. ஐயே கனவு நிறைவேறிச்சா....இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கப்பா..
    அட....என் வலைப்பூவுக்கு லிங்க் எல்லாம் கொடுத்துருக்கீங்க??? இப்போதான் பார்த்தேன் நன்றிங்க...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  23. ஐயே கனவு நிறைவேறிச்சா....இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கப்பா..//
    இன்னைக்கு யாரும் தூங்கக்கூடாது. நாளைக்குத்தான் சஸ்பென்ஸ் சொல்வேன்,

    அட....என் வலைப்பூவுக்கு லிங்க் எல்லாம் கொடுத்துருக்கீங்க??? இப்போதான் பார்த்தேன் நன்றிங்க...//

    படிக்க வசதியா இருக்கும். அடுத்தவங்களுக்கு உதவின்னு வெச்சேன். இதுக்கெதுக்கு நன்றி.

    ReplyDelete
  24. //அந்த நேரத்தில் ததாஸ்து தேவதைகள்
    அந்தப் பக்கம் வரவில்லை போலிருக்கிறது!!!!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

    ReplyDelete
  25. //
    எங்கே? எப்படி? என்னையும் மதித்து
    அவர்கள் கூப்பிட்டதனால் என்னாச்சு??!!!

    நாளைக்கு வாங்க சொல்றேன்.
    //

    அப்ப பின்னூட்டமும் நாளைக்குத்தான் போடுவோம். பரவாயில்லயா? :)))

    ReplyDelete
  26. வாங்க அத்திரி

    :))

    ReplyDelete
  27. அப்ப பின்னூட்டமும் நாளைக்குத்தான் போடுவோம். பரவாயில்லயா? :)))//

    ஆஹா அதுக்கென்ன?

    ReplyDelete
  28. ஸ்மைலிக்கு நன்றி இயற்கை

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று