மனம் அப்படின்னா என்ன? அது கருப்பா, சிவப்பா, உருவம் இருக்கா இல்லையா?
ஆனா நம்மளை ஆட்டிபடைக்குதே!!! எப்படின்னு கேக்கறீங்களா?
மனம் போல வாழ்வு,
மனசிருந்தா மாரியாத்தா!! இல்லைன்னா காளியாத்தா
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மனசுல ஒண்ணு வெச்சுக்கிட்டு வெளியில ஒண்ணு பேசக்கூடாது.
இதெல்லாம் நடைமுறையில் மனம் குறித்த சொல்லாடல்கள்.
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா????? போகக்கூடாதா??
நொடிக்கு குரங்கு போல தாவி மாறிக்கிட்டு, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைபாயும் மனசு இதால நாம எத்தனை சங்கடங்களை அனுபவிக்கிறோம்.
இதிலிருந்து நமக்கு தெரிவது என்ன? மனம் இது நம் வாழ்வில் ஒரு அங்கம்.
அந்த ஒரு அங்கத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏன் தெரியணும்?
வரக்கூடிய நாட்களில் மனம் சம்பந்தபட்ட பதிவுகள் வரும்.
இணைந்திருங்கள்.
#கலங்காதிருமனமே!!
No comments:
Post a Comment
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று