Sunday, March 07, 2010

உங்க பர்ஸில் பணம் காணாம போகுதா???

சில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா
இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும்
அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட்
செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா??
கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க.

யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம்
சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம வீட்டுலயும்
நம்ம சட்டையில வெச்ச பணம் காணாம போயிருந்தா உஷார்
ஆக வேண்டியதுதான். யாரோட வேலையா இருக்கும்!!
நான் இதைச் சொல்வதால் ஏதோ எல்லா பதின்ம வயதுப்பிள்ளையும்
இப்படித்தான்னு இல்லை. சில வீடுகளில் இதுதான் நிகழ்வு.

பணம் காணாமல் போயிருந்தால் அது அந்த சற்றே பெரிய
குழந்தைதான் எடுத்திருக்கு வாய்ப்பு அதிகம். வயிற்றுப்பசிக்கு
சோறு வீட்டுல இருக்கு, வகைவகையா ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கு,
வெளிய வாச நாங்களே கூட்டிகிட்டு போறோம் அப்புறம்
இதுகளுக்கு பணத்தை கொடுப்பானேன்! என்று சில பெற்றோர்.

பாக்கெட் மணியெல்லாம் வசதி உள்ள வீட்டுப்பசங்களுக்குத்தான்.
நம்மாள முடியாது எனும் வகை பெற்றோர்.

பிள்ளை கையில காசைக்கொடுத்தா கெட்ட
பழக்கத்துக்கு ஆளாகிடுவாங்க என பயப்படும் பெற்றோர்
இப்படி பட்டவர்களால்தான் அப்பாவின் சட்டைபை, அம்மாவின்
அஞ்சறைப்பெட்டி, ஹேண்ட்பேக் ஆகியவற்றில் பணம்
காணாமல் போவது.

சைக்கிளுக்கு காத்தடிக்க, பேனா, பென்சில் வாங்க,
நண்பர்களுடன் சாட் சாப்பிட(எனக்குத் தெரிஞ்சு ஒருபையன்
சாட் கடையில் கடன் சொல்லி சாப்பிட்டு வீட்டுக்குத்
தெரிஞ்சு அடி பின்னிட்டாங்க) என சில செலவீனங்கள்
பதின்ம வயதுக்கு உண்டு.

நாமதான் எல்லாம் செய்யறோமே அப்புறம் இவங்களுக்கு
எதுக்கு காசுன்னு பெத்தவங்க நினைப்போம். ஆனா தானா
தன் கையால காசு வெச்சுகிட்டு செலவு செய்யணும்னு
பசங்க நினைப்பாங்க. பொம்பளைப்பிள்ளைன்னா அழுது
ஆர்பாட்டம் செஞ்சு காசு கறந்துடுவாங்க. பசங்க பாவம்!!
”நீ சிகரட் குடிக்கத்தான் காசு கேக்குற, என் காசை கரியாக்கன்னே
பொறந்திருக்குன்னு” ஏச்சுத்தான் கிடைக்கும்.

இதனால அப்பா, அம்மாக்குத் தெரியாம காசை எடுக்க
ஆரம்பிக்கறாங்க. தனுஷோட ஒரு படம்.(திருடா திருடின்னு)
அவர் அப்பா பணத்தை எடுத்து செலவு செய்வதுபோல
காட்டியிருப்பாங்க. இது நிஜத்துல நடப்பதுதான்.
(இல்லைன்னு யாராவது சொல்லுங்கப்பா, பாப்போம்)

போன வாரத்துல ஒரு நாள் ஆஷிஷ் கூட பேசிகிட்டு இருந்த
போது அவன் வகுப்பில் சில பசங்க வந்து, ”நான் இன்னைக்கு
எங்க அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்தேன்” என்று
சொல்ல ஐயா ஷாக் ஆகியிருக்கிறார். ”அப்பா, அம்மா
பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பது தப்பாச்சேம்மா!!
எப்படிம்மா இப்படி செய்யலாம்? என்றான். இதனால்
இந்தப் பழக்கம் பசங்களுக்கு இப்பவும் இருக்குன்னு
நான் நம்பறேன்.


பணம் கையில் வைத்திருப்பது பெரிய மனிதத்தன்மையைக்
காட்டுது. தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடும் அந்த
வயதில் தன் கையில் காசில்லை என்பதே பெரிய குறையாத்
தெரியும். நல்லா படிச்சு முடிச்சாத்தான் சம்பாரிக்க முடியும்.
சம்பாரிக்காம காசுவரணும்னா பர்ஸ்ல கை வைப்பதுதான்.
நாமே நம் பையனை திருடனாக்குறோம்.

பசங்களுக்கு காசு கொடுத்து குட்டிச்சுவராக்கச் சொல்லறீங்களான்னு?
சண்டைக்கு வரவேணாம். நம்ம பிள்ளைகளை நாம் முறையா
வளர்க்கணும். பணத்தை எப்படி செலவு செய்வதுன்னு சொல்லி
கொடுக்க வேண்டியதும் நம் கடமையாச்சே! இப்ப பழக்குவது
பின்னாளில் தான் சம்பாதிக்கும்பொழுது சேமிக்க கற்க வைக்கும்.

யோசிச்சு பாருங்க. ஆரம்பத்துல சொல்லியிருக்கற நிகழ்வு
நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்கு நடந்தா நமக்கு
எவ்வளவு அவமானம்?? நம்மைப்பத்தி, நம்ம பிள்ளைய பத்தி
என்ன நினைப்பாங்க??

என்ன செய்யலாம்? பாக்கெட் மணி கொடுத்திடலாம்.
(பதின்மவயது பிள்ளைகள் ஆண்/பெண் இருவருக்கும்)
சும்மா தூக்கி கொடுத்திட்டா பணத்தோட அருமை தெரிஞ்சிடுமா?
1 ரூபாய் காசுகூட சும்மா கிடைக்காதுன்னு நாம
சொல்லிக்கொடுப்போம். எப்படி? நான் என் வீட்டில் செய்வதை
சொல்றேன். ஆரம்பத்துல சொல்லியிருந்த அனுபவம் விருந்தினராப்
போனப்ப எனக்கும் ஏர்பட்டிருக்கு. அதனால என் பசங்க
அந்த வழிக்கு போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருந்தேன்.

அதுக்கு உருவகம் கொடுத்தது என் தோழி அண்ணபூர்ணா.
அவங்க சொல்லிக்கொடுத்ததை நான் கொஞ்சம் முன்னேற்றி
ஆரம்பிச்சதுதான் என் பசங்களுக்கு பாக்கெட் மணி
கொடுக்கும் பழக்கம்.


HOME IMPROVEMENT COMMITTEE இங்க அதைப்பத்தி
சொல்லியிருக்கேன்.

GOLDEN RULES இதை வெச்சுத்தான் பாயிண்ட்ஸ் கொடுத்து
அதை மாத இறுதியில பாக்கெட் மணியா கொடுக்கறேன்.

என்ன கொடுமைன்னு என்ன புலம்ப வெச்சிட்டாங்க பசங்க :))


சின்னக்குழந்தையா இருக்கும்பொழுதே இதை பழக்கிட்டா
பதின்ம வயதுக்கு வரும்பொழுது சுலபமா இருக்கும் என்பதால்
அப்போதே போட்டுவைத்துவிட்டேன் இந்தத் திட்டத்தை.

எங்க அப்பார்ட்மெண்டில் இருக்கும் பசங்க கூட ஆஷிஷ்
பேசிகிட்டு இருக்கும்பொழுது தனக்கு மாசா மாசம்
பாக்கெட்மணி கிடைப்பது பத்தி சொல்ல அந்த பசங்களோட
அம்மாக்கள் என்னை கேட்டாங்க. நானும் என் திட்டத்தைப்
பத்திச் சொல்ல ,”ஐடியா நல்லாயிருக்கேன்னு!” ஆஷிஷ்,
அம்ருதாவோட பாயிண்ட்ஸ் புக்கை வாங்கிகிட்டு போய்
ஜெராக்ஸ் எடுத்து தன் வீட்டிலும் நடைமுறை படுத்த
ஆரம்பிச்சிட்டாங்க. ”ஆஷிஷ் உன் புண்ணியத்துல
இப்ப எங்களுக்கும் பாக்கெட் மணி கிடைக்குதுன்னு!”
பாராட்டுக்கள்தான்.

பணத்தை எப்படி செலவழிக்கறாங்க என்பதை கண்காணிக்கணும்.

செலவு செய்வதை எழுதச் சொல்லி பழக்கி, மாத கடைசியில்
கையிருப்பு எவ்வளவு என்பதை எழுதச் சொல்வதால் பணம்
எங்கே தேவையில்லாமல் செலவாகுதுன்னு புரியும்.
கட்டுப்படுத்த முடியும். இதெல்லாம் நாம பக்கத்துல இருந்து
செய்யணும்.

கார் கழுவுதல் போன்ற அதிகமான வேலைகளில்
உதவும் பொழுது எக்ஸ்ட்ரா பாக்கெட்மணி.
(கொழும்புவில் இருந்த பொழுது ஆஷிஷும்,
அம்ருதாவும் சேர்ந்து கார் பார்க் ஏரியாவை கழுவுவார்கள்.
நானும் உதவுவேன். அன்றைக்கு இருவருக்கும் 25 ரூபாய்
எக்ஸ்ட்ரா மணி)

இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் இருக்கு. அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் தன் குழந்தைகளுக்கு
பாக்கெட்மணி வேலை செய்வதற்குத்தான் கொடுக்கிறார்
என செய்தி படித்தேன்.(அவர் பசங்களை விட எங்களுக்கு
பாக்கெட் மணி கூடவே கிடைக்குதுன்னு பசங்களுக்கு
சந்தோஷம்.)

பதின்மவயதுப்பிள்ளைகளை மதித்து அவர்கள்
வாழ்வில் நல்லபடியாக வளர உதவுவோம்.

நாளை மகளீர் தினம் என்பதால் நாளை வரவேண்டிய
பதிவு வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அன்றே.



16 comments:

pudugaithendral said...

mic testing

சாந்தி மாரியப்பன் said...

ஹையா!! எங்க வீட்டிலும் இந்தப்பழக்கம் உண்டு. கடைகண்ணிகளுக்கு போய் வந்தா, வீட்டு வேலைகளில் உதவி செஞ்சா காசு கொடுப்பேன்.அவங்களும் உண்டியலில் சேத்து வெச்சிப்பாங்க. எல்.கே.ஜி யில் ஆரம்பிச்ச பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. சேத்து வெச்ச பணத்தை இப்போதைக்கு தங்கத்திலும் முதலீடு செஞ்சு வெச்சிருக்காங்க.

நட்புடன் ஜமால் said...

நல்ல பழக்கம் தான்.

-----------------

என் பர்ஸில் இப்போ பணம் காணாம போகுது கண்ணுக்கு தெரிஞ்சி, அதுக்கு ஒரு இடுக்கை போடுங்க ;)

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

சந்தோஷம்

pudugaithendral said...

என் பர்ஸில் இப்போ பணம் காணாம போகுது கண்ணுக்கு தெரிஞ்சி, அதுக்கு ஒரு இடுக்கை போடுங்க ;)//

ஸ்மைலியும் நீங்களே போட்டுட்டீங்க

கண்மணி/kanmani said...

தென்றல் பிள்ளங்களை வுடுங்க.தங்கமணிகளே பணம் எடுத்துட்டு கேக்கலைன்னா தப்பிக்கும்.கேட்டா பேப்பருக்கு காஸுக்குன்னு சமாளிக்கும் தெரியுமா?நிறைய கேள்விப் பட்டிருக்கேன்.உரிமையா எடுக்கிற திருட்டு:))))))) மாட்டாதவரை இலாபம்.மாட்டினா சமாளிபிகேஷன் தான்.

pudugaithendral said...

வாங்க கண்மணி,

தங்க்ஸ் ரங்க்ஸ் சட்டைப்பையிலிருந்து மட்டும்தான் சுடுவாங்க. இது மத்த இட வரைக்கும் போகும் ப்ரச்சனை. தங்க்ஸ் சொல்லும் சமாளிஃபிகேஷனுக்கு பதில் சொல்ல முடியும் ரங்க்ஸ் மகனை பின்னி எடுக்கும் காட்சிகளும் உண்டு

வருகைக்கு நன்றி

settaikkaran said...

ஹி..ஹி! சின்ன வயசுலே நானும் எங்கப்பா சட்டைப்பையிலேருந்து அபேஸ் பண்ணியிருக்கேனுங்க! அதிகபட்சம் பத்து ரூபாய் தானுங்க! ஆனா, அதெல்லாம் எங்க வீட்டோட சரி! :-))

ஹுஸைனம்மா said...

சேம் பிஞ்ச்!! நிறைய விஷயங்கள்ல நான் கடைபிடிக்கும் வழிகள்!!

ஆனாலும் தலைப்பைப் (மட்டும்) பாத்துட்டு திகீர்னு ஆகிடுச்சு!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

புதுகை - வாவ் chanceaa இல்ல. அருமையான டிப்ஸ். மிகவும் நன்றி
மகளிர் தின வாழ்த்துக்கள் புதுகை தென்றல்

pudugaithendral said...

வாங்க சேட்டைக்காரன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

தலைப்பைபாத்து பயந்துட்டீங்களா ஹுசைனம்மா,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாவி தங்கமணி,

உங்களுக்கும் மனமார்ந்த மகளீர் தின வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

இந்த கோல்டன் ரூல்ஸ்லாம் ஏற்கனவே நீங்க பதிவிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

மங்களூர் சிவா said...

ஆஹா கண்மணி டீச்சர் சொல்றது ரொம்ப டேஞ்சரா இருக்குதே!
:))

pudugaithendral said...

இந்த கோல்டன் ரூல்ஸ்லாம் ஏற்கனவே நீங்க பதிவிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

yessu