அதான் உடல் உபாதைகள் வரும். பதின்ம வயதில் ரொம்ப முக்கியமானது
“பரு”. இது பெண்குழந்தைக்கு மட்டுமில்லாது ஆண்குழந்தைகளுக்கும் வரும்.
அதுவரை உலர்ந்த சருமமாக இருந்த குழந்தைக்கு அடலஸன்ஸ் வயதில்
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பருவை வரவழைக்கிறது.
இதே ஹார்மோன் மாற்றங்களால் வேறு சில பிரச்சனைகளும் வருகிறது,
அடலசன்ஸ் வயதில் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் அதே சமயம்
சுகாதாரமாகவும் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வயதில்
வியர்வை துர் நாற்றம், வாய் துர்நாற்றம் எல்லாம் தலை எடுக்கும்.
இவற்றிற்கு நல்லதொரு சரும மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்வது
அவசியம். இதெல்லாம் இந்த வயசுல சகஜம் தான் என்று சொல்லி
தீர்வு காணாமல் விட்டால் ரொம்ப கஷ்டம்.
வாரம் இரு முறை முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது
பொடுகை தூரத்தில் வைக்கும். வாரத்திற்கு ஒரு முறை ஹாட் ஆயில்
மசாஜ் வீட்டிலேயே செய்விக்கலாம். சூடான எண்ணெய் மசாஜ் கொடுத்து
ஸ்டீமரால் மயிர்கால்களுக்கு ஆவி கொடுத்து, 30 நிமிடம் கழித்து
நல்ல தரமான ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு கழுவ வேண்டும்.
முக்கியமாக கண்டீஷனர் உபயோகிக்க தவறக்கூடாது. கண்டீஷனர்
உபயோகிக்கும் பொழுது மயிர்க்கால்களில் படாமல் கூந்தல் மேல்
மட்டும் படும்படி தடவி 10 நிமிடங்கள் ஊறி பின் அலசுவதனால்
கூந்தல் பராமரிக்க ஈசியாக இருக்கும்.
சில குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் நிறம் மங்க ஆரம்பிக்கும்.
டேனிங் என்பார்கள். நீச்சல் பழகும் பிள்ளைகளுக்கு உடல் நிறம்
மாறுவதுபோல இருக்கும். இதற்கு வீட்டில் தயிரில் கடலைமாவு,
எலுமிச்சை ரசம் சேர்ந்து கலந்து உடல் முழுதும் தடவி ஊறவிட்டு
குளித்தால்மாற்றம் தெரியும். பெண் குழந்தைகள் ஸ்நானப்பவுடர்
தயாரித்து அதை உபயோகிக்கலாம். இங்கே ஆந்திராவில் நலுகுபொடி
என்று கிடைக்கும். அதில் வேப்பிலை எல்லாம் சேர்த்து தயாரிப்பார்கள்.
நம் ஊரில் ஆண்டாள் ஸ்நானப்பவுடர் கிடைக்கும். அத்துடன் கொஞ்சம்
கடலை மாவு கலந்து உபயோகிக்கலாம்.
பரு விஷயத்துக்கு வருவோம். அழகான முகத்தில் இந்த பரு ஒரு
வடுவையே தந்து விடும். பரு, பால் உண்ணி எல்லா வற்றிற்கும்
சிறந்த தோல் மருத்துவ நிபுணரிடம் அழைத்துச்செல்வது மிக முக்கியம்.
பரு என்றாலே நாம் உடன் கடைக்கு ஓடி கிளியரிசல் வாங்கி வருவோம்.
அதானெல்லாம் சரியாகாது. ஒரு வகை பேக்டேரியாவால் உருவாவதுதான்
பரு. (பொடுகு கூட அப்படித்தான்) சரும நிபுணர் அதற்கு சில மாத்திரை
கொடுத்து நல்ல ஃபேஸ்வாஷ் (மெடிகேடட்) க்ரீம் கொடுப்பார்.
நம் முகத்தில் நமக்குத் தெரியாமல் கிருமிகள் இருக்கும். வெளியே
சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஹேண்ட்வாஷால் கைகளை
கழுவிய பிறகு தரமான ஃபேஸ்வாஷ் கொண்டு முகம் கழுவுவது
அவசியம்.
எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் 4 முறை கூட கழுவலாம்.
பருவை எந்தக்காரணம் கொண்டும் கையால் கிள்ளிவிடக்கூடாது.
இது பேக்டேரியாவை பரப்பிவிடும்.
பரு தழும்பு போக முள்ளங்கி ரசத்தை தடவுவது, பூண்டு ரசம்
தடவுவது எல்லாம் கூடாது. சிலர் நான் இப்படி செய்தேன் என்பார்கள்.
உண்மையில் இந்தப் பொருட்களில் இருக்கும் காரம் முகத்தை
பதம் பார்த்து பரு தழும்பை நீங்காமல் செய்துவிடும்.
10 நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்து கொள்வது அவசியம்.
க்ளன்சிங் மில்க் கொண்டு முகத்தை துடைத்து, ஃபேஸ்வாஷால்
கழுவி, ஸ்க்ரப் செய்யாமல், முகத்தை கொஞ்சம் தூரமாக வைத்துக்
கொண்டு ஆவி பிடித்து, முல்தானி மட்டி அல்லது துளசி பேக்
அல்லது நீம் பேக் போட்டுக்கொண்டால் பருவினால் அதிகம்
தொல்லை இல்லாமல் இருக்கும்.
பருவுக்கு ஆண்/பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
அதனால் ட்ரீட்மெண்ட் இருபாலரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள
வேண்டும். வீட்டுக்குறிப்புக்களுடன் முறையான மருத்துவ
பரிசீலனையும் அவசியம்.
முகம் நம் அகம் காட்டும் கண்ணாடி. “இந்த வயசுல படிப்புல
மட்டும் கவனம் செலுத்தினா போதும். அலங்காரம் வேண்டாம்”!!
என்று சொல்லாமல் தேவையான உதவிகளை பிள்ளைக்கு
செய்து கொடுப்பதால் குழந்தை தன்னம்பிக்கையுடன் வாழும்.