கல்யாண வீடு மட்டுமல்ல இப்ப ஆஸ்பத்திரிக்கு போனா கூட எந்த சமூகம், ஜாதியா இருந்தாலும் பேசப்படுற டாபிக் மகன் கல்யாணம். எல்லாரும் சொல்லி வெச்சாப்ல ஒரே மாதிரி மகனுக்கு பொண்ணு கிடைக்கலை???!!! இதுதான்.... இது மட்டும்தான் பலருக்கு பிரச்சனை.
இப்பவும் எப்பவும் எனக்கு ஞாபகம் வருவது “மணல்கயிறு” படம் தான். அந்த படத்துல ஒரு டயலாக். முகத்துல பருவந்தும் கல்யாணம் ஆகலை என்பது இந்தக்கால பிரச்சனை. பருவவயதைக்கடந்தும் இன்னைக்கு பல இளைஞர்களும், இளைஞர்களும் கல்யாண நாள்..... காண்பது எப்போதுன்னு தான் இருக்காங்க. இது சரியா??? எதனால??
எது சரி? தவறு?
1. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்குன்னு மூலையில உட்கார வெச்சாங்க. இப்ப நல்லா படிக்கறாங்க. அதுவே தான் பிரச்சனையா??
2. எந்த வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செய்வதாக உத்தேசம்??
22 வயசுலயே ஜாதக்கட்டை தூக்கி அடுத்த 2 வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிச்சு அனுப்பிகிட்டு இருந்தாங்க. கல்யாண வயசாகியும் இன்னமும் கல்யாணம் செஞ்சு வைக்காம சிலர் இருக்காங்களே அது ஏன்?
3. கல்யாணம் கட்டாயமான வழக்கம்னு திணிக்கலை. திருமண உத்தேசம் இருக்கறவங்களைப்பத்திதான் பேச்சு.
4. படிப்பு, வேலை இதெல்லாமும் பெண்களுக்கு அவசியம் தான். ஆனா எந்த வயசுல திருமணம்? மகளுக்கு வயது ஏற ஏற வரப்போகும் மருமகனும் வயசாளியாத்தான இருப்பார்? அவங்க எப்ப குழந்தை பெத்து வாழ்க்கையில செட்டில் ஆவுறது?
5. ஒரு நல்ல துணையிடம் மகளை ஒப்படைத்து அவள் அந்த வாழ்க்கையையும் அனுபவித்து மகிழ்வதை பார்க்கணும்னு ஆசை இல்லையா?
6. மகளை படிக்க வெச்சிருக்கோம்!!! நம்ம பேச்சை கேட்க மாட்டாள்னு பெத்தவங்களே தப்பா யோசிச்சு மகள் கிட்ட பேசாம இருக்காங்களா?
7. வரன் பார்ப்பதில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும், தேடி தன் மகளுக்கு வரனை பார்த்து காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை ஒரு தலைமுறையினர் மறந்துவிட்டார்களா?? இந்த மாற்றம் ஏன்?
8. 30 வயது பெண்களை முதிர்கண்ணிகள் என்று அந்தகாலத்தில் சொல்லகேள்வி. இப்பொழுது வயது வரம்பு இல்லையா? முதிர்கன்னிகளுக்கு வரன் தேடினால மணமகன் முத்தி முதிர்ந்துல்ல இருப்பாரு??
9. திருமண பந்தமே வேண்டாம் என்று பெண்கள் முடிவு கட்டிவிட்டார்களே? ஏன் இந்த தட்டுப்பாடு. பெண்வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதா?
திருமணங்கள் ஆகாமல் இருக்க இன்னும் வேறு என்ன காரணம்???!!!!

எது சரி? தவறு?
1. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்குன்னு மூலையில உட்கார வெச்சாங்க. இப்ப நல்லா படிக்கறாங்க. அதுவே தான் பிரச்சனையா??
2. எந்த வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செய்வதாக உத்தேசம்??
22 வயசுலயே ஜாதக்கட்டை தூக்கி அடுத்த 2 வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிச்சு அனுப்பிகிட்டு இருந்தாங்க. கல்யாண வயசாகியும் இன்னமும் கல்யாணம் செஞ்சு வைக்காம சிலர் இருக்காங்களே அது ஏன்?
3. கல்யாணம் கட்டாயமான வழக்கம்னு திணிக்கலை. திருமண உத்தேசம் இருக்கறவங்களைப்பத்திதான் பேச்சு.
4. படிப்பு, வேலை இதெல்லாமும் பெண்களுக்கு அவசியம் தான். ஆனா எந்த வயசுல திருமணம்? மகளுக்கு வயது ஏற ஏற வரப்போகும் மருமகனும் வயசாளியாத்தான இருப்பார்? அவங்க எப்ப குழந்தை பெத்து வாழ்க்கையில செட்டில் ஆவுறது?
5. ஒரு நல்ல துணையிடம் மகளை ஒப்படைத்து அவள் அந்த வாழ்க்கையையும் அனுபவித்து மகிழ்வதை பார்க்கணும்னு ஆசை இல்லையா?
6. மகளை படிக்க வெச்சிருக்கோம்!!! நம்ம பேச்சை கேட்க மாட்டாள்னு பெத்தவங்களே தப்பா யோசிச்சு மகள் கிட்ட பேசாம இருக்காங்களா?
7. வரன் பார்ப்பதில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும், தேடி தன் மகளுக்கு வரனை பார்த்து காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை ஒரு தலைமுறையினர் மறந்துவிட்டார்களா?? இந்த மாற்றம் ஏன்?
8. 30 வயது பெண்களை முதிர்கண்ணிகள் என்று அந்தகாலத்தில் சொல்லகேள்வி. இப்பொழுது வயது வரம்பு இல்லையா? முதிர்கன்னிகளுக்கு வரன் தேடினால மணமகன் முத்தி முதிர்ந்துல்ல இருப்பாரு??
9. திருமண பந்தமே வேண்டாம் என்று பெண்கள் முடிவு கட்டிவிட்டார்களே? ஏன் இந்த தட்டுப்பாடு. பெண்வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதா?
திருமணங்கள் ஆகாமல் இருக்க இன்னும் வேறு என்ன காரணம்???!!!!
