Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Thursday, October 10, 2013

அஞ்சலி!!!!

8 வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். கொழும்புவில் இருக்கும் ARPICO supermarket சாமான்கள் வாங்கி கொண்டு பில்லிங்கிற்கு வரிசையில் நிற்கிறோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் பில்லிங்கிற்கு ஏனோ கொஞ்சமே சாமான் இருந்தாலும் நேரமாகிகொண்டிருந்தது. அயித்தான், பிள்ளைகளுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். முன்னே இருந்தவர் திரும்பி “நீங்க தெலுங்கா சார்!!”” என பேச ஆரம்பித்தார். அப்பொழுதுதான் அவருக்கு முன் நின்று கொண்டிருந்த அவரின் மனைவியை பார்த்தேன். தன் இரு மகன்களுடனும் ஏதோ சொல்லிக்கொண்டே பில்லிங்கில் பிசியாக இருந்தது நடிகை டிஸ்கோ சாந்தி. அவரின் கணவர் என தெரியாது எங்களுக்கு ஆனால் நான் ஸ்ரீஹரி. ஆந்திராவில் வந்திருக்கிறேன் என அறிமுகம் செய்து கொண்டு முதல் தடவை பேசுகிறோம், தெரியாதவர், தான் ஒரு நடிகர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அவரி 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். பில்லிங் முடிந்து சாந்தி போகலாமா என கேட்க வர்றேன் சார் என்று விடைபெற்றபோது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

 டிஸ்கோ சாந்தியை ஒரு ஐட்டம் சாங்க் கேர்ளாகத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் தம்பி, தங்கைகளுக்காக அவர் அப்படி நடிக்க நேர்ந்தது என தெரிந்த பொழுது அவர் மீது ஒரு மரியாதை வந்தது. அப்படி ஐட்டம் கேர்ளாக நடித்த நடிகையை மணம் புரிந்து கொண்டார் என்பதாலேயே எனக்கு ஸ்ரீஹரி மீது ஒரு மரியாதை உண்டு.

இங்கே ஹைதை வந்ததும் இவர் நடித்த பல படங்கள் பார்த்தோம். மகதீராவில் ஷேர்கான் வேஷம் ரொம்பவே நல்லா இருக்கும்.





பிருந்தாவனம், நு வொஸ்தானட்டே நேன் ஒந்தண்ட்டானா போன்ற படங்களில் அருமையான நடிப்பு. அதிலும் நுவொஸ்தானட்டே படத்திற்கு ஆந்திர அரசின் பெருமை மிகு நந்தி அவார்டு கிடைத்திருக்கிறது ஸ்ரீஹரிக்கு. டோலிவுட்டை பொறுத்தவரை நடிகர்கள் சீமாந்திராவிலிருந்துதான். ஸ்ரீஹரி மற்றும் இன்னொரு நடிகர் மட்டும் தான் தெலங்கானாவிலிருந்து.

அந்த நடிகர் நேற்று மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மனசு கஷ்டமாகிவிட்டது. ஒரு நடிகரின் இறப்புக்கா!! என கேட்காதீர்கள், நானறிந்தவகையில் ஸ்ரீஹரி ஒரு நல்ல மனிதர். டிஸ்கோ சாந்தியை திருமணம் செய்து கொண்டதும் சாந்தி நடிப்பதை நிறுத்தி விட்டார்.  தன் மனைவியுடன் சேர்ந்து 4 கிராமங்களை தத்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தார். தன்னை விட்டு பிரிந்த 4 வயது மகள் அக்‌ஷராவின் நினைவில் ட்ரஸ்ட் ஆரம்பித்து வித்யாதானம் செய்து வந்திருக்கிறார்.


லேண்டன் ஷோவிற்கு அயித்தானின் நண்பர் அழைத்தார் என போயிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியது ஸ்ரீஹரியும், சாந்தியும் தான். தான் சினிமாவில் நடித்ததே தெரியாத அளவிற்கு சராசரி மனைவியாக தன் கணவருடன் சேர்ந்து பல சேவைகளை அவர் செய்து வருவதை அங்கே தெரிந்து கொண்டேன். சமீபகாலமாக மிகவும் இளைத்து காணப்பட்டாராம் ஸ்ரீஹரி. லீவர் பிரச்சனை.  ராம்போ ராஜ்குமார் சினிமா ஷூட்டிங்கிற்கு மும்பை சென்றிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடந்து கொண்டிருந்த பொழுதே உயிர் துறந்தார்.

49 வயதில் அகால மரணம் எய்திய ஸ்ரீஹரிக்கு எங்கும் நல்ல பெயர்தான்.
எந்த பிரச்சனை என்றாலும் அண்ணனாக முன்னிருந்து உதவி செய்த உத்தமர் என்று சொல்கிறார்கள். எந்த பிரச்சனைகளிலும் தன்னை நுழைத்துக்கொள்ளாமல், எல்லோரிடமும் அன்பான, நட்பாக வாழ்ந்திருக்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலிகள்.







Tuesday, October 09, 2012

கண்ணீர் அஞ்சலி

சற்று முன் என் உயிர்த்தோழி போன் செய்தாள். “அம்மா போயிட்டாங்க கலா!!” என்றழுத போது ஒன்றுமே புரியவில்லை. போன வாரம்தான் புதுக்கோட்டையை தாண்டிப்போயிக்கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளோடு” என எஸ் எம் எஸ் அடித்தாள். விடுமுறைக்கு காரைக்குடி சென்றிருந்தாள். இரவு 11 மணிவரை தன் வேலையைத் தானே செய்துகொண்டிருந்திருக்கிறார் அம்மா. திடும்மென நெஞ்சுவலிக்கிறது என்று சொல்ல மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார்கள். முதலுதவி செய்த குடும்ப டாக்டர் அப்பல்லோ அழைத்து செல்ல சொல்லியிருக்கிறார். வழியிலேயே பல்ஸ் குறைந்துவிட்டதாகவும், மருத்துவம் பலனளிக்காமல் உயிர் நீத்துவிட்டார். :( பாவம் என் தோழி. வாழ்வில் எத்தனையோ சோகங்களை தாண்டி இப்போதுதான் பிஎச்டி, கார் வாங்கியது என சந்தோஷத்தின் கீற்று சற்றே பட்டுக்கொண்டிருந்த வேலையில், யாதுமாகி தாங்கிக்கொண்டிருந்த அம்மாவை இழந்து வாடிக்கொண்டிருக்கிறாள்.
தோழியின் தம்பிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாயில்லாத அந்த வீடு சோகத்தின் இடமாகி போகிவிட்டது. ஆண்டவன் இந்த வலி தாங்கும் வலிமையை சாந்திக்கும், அவளது அப்பாவுக்கும், தம்பி மணிக்கும் கொடுக்க வேண்டும். காலம் அவர்களின் காயங்களுக்கு மருந்து போட இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ!!!!!

Wednesday, September 08, 2010

முரளிக்கு அஞ்சலி

ரொம்ப பாவமாக இருக்கிறது. இத்தனை காலமாக காலேஜுக்கு
போய்க்கொண்டிருந்த நடிகரின் வாரிசு நடிக்க வந்து முதல்
படம் ரிலீஸாகி இருக்கும் இந்த நேரத்தில் இன்று அவர்
மாரடைப்பில் இறந்துவிட்டதாகச் செய்தி. அவரது
குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இறங்கல்கள்.
இரண்டு வாரத்துக்கு முன்பு தான் காபி வித் அனுவில்
மகனுடன் வந்து கலந்து கொண்டிருந்தார் முரளி.

மிக அருமையாக இருந்தது நிகழ்ச்சி. சக்ஸஸிற்கான
காரணம் கடினமான உழைப்பு என்று சொன்னார்.
கன்னட தேசத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் தன்னை
நிலைநாட்டிக்கொண்டு மைக் முரளியாக எல்லோர்
மனதிலும் இடம் பிடித்தவர்.

இதயம் படத்தில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த
ஒன்று.



தஞ்சாவூர் மண்ணெடுத்து இந்தப் பாடல் விரும்பாதவரும்
உண்டா!!!


48 வயதில் உதிர்ந்து விட்ட இந்தக் கலைஞனுக்கு என்
இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.