Showing posts with label எச்சரிக்கை பதிவுகள். Show all posts
Showing posts with label எச்சரிக்கை பதிவுகள். Show all posts

Sunday, November 22, 2009

நெஞ்சு பதை பதைக்குது....

அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.


13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????


பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....



பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.


ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???


பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.



பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???


இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.


பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.


பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

Tuesday, May 26, 2009

காற்றினிலே வரும் கீதம்......

இசை நமக்கு புத்துணர்ச்சி தந்து மனதை
இலகுவாக்குகிறது.

நிஜ வாழ்வில் யாரும் டூயட் பாடுவதில்லை..
சோக கீதம் வாசிப்பதில்லை. ஆனால்
பாடல்கள் கேட்காமல் யாராலும் இருக்க
முடியாது.

ரேடியோவை மட்டுமே நம்பி வாழ்ந்த
காலங்களில் எத்தனை பேர்வீடுகளில்
ரேடியோவுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தோம்.
அலுவலகம் செல்லும் வரை அலறிக்கொண்டிருக்கும்
பக்கத்து வீட்டு ரேடியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு
நம் வீட்டு ரேடியோவும் அலறும்.

பிறகு டேப்ரிக்கார்டர். ஆஹா சவுண்ட் எஃபக்டுக்காக
இதுவும் அலறும். தான் இந்த வீட்டில் இருக்கிறோம்
என்று டேப்ரிக்கார்டர் தன் குரலில் தானே கட்டியம்
கூறும்!!!!

காலங்கள் மாறினாலும் மாறாதது இசையை
கேட்பது. சாஸ்திரிய சங்கீதமோ, கர்நாடக
சங்கீதமோ, ராக் ம்யூசிகோ, திரைப்படப்பாடல்களோ
கேட்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறதே
தவிர குறையவில்லை.


ஆனால் கேட்கும் விதம் மாறிவிட்டது.
செல்போனிலோ, ஐபாட்டிலோ பாடல்கள்
கேட்பதுதான் இப்போதைய ஃபேஷன்.

பிறருக்கு துன்பம் தராமல் ஹெட்போன் மாட்டிக்கொண்டு
பாட்டு கேட்கிறார்கள். ஆனால் அதிலும் பிரச்சனை
இருக்கு. பாட்டு கேட்பவருக்கு பிரச்சனை.

””யார் பெத்த புள்ளையோ!!! தானா பேசிக்கிட்டு
போகுது!!” என கமெண்டடிக்கும் நிலையில் இன்றய
இளைஞர்கள் எப்போதும் ஹெட்போனும் கையுமாக
இருக்கிறார்கள்.


இப்படி ஹெட்போனோடு ரோட்டில் நடக்கும் பொழுது
வண்டிக்காரர்கள் எழுப்பும் சத்தம் கூட காதில் கேட்காது!


தன் நிலை மறந்து மூழ்கிக்கிடக்கும் அபாயம்
இருக்கிறது. இந்த அபாயம் மட்டுமா!!



கேட்கும் சக்தியை இழக்கும் அபாயம் இருப்பதாக
வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஒலி் அளக்கப்படும் அளவை டெசிபல் என்கிறோம்.

அதிக பட்ச சத்தம் 194 டெசிபல். இரகசியமாக
பேசும் பொது ஏற்படும் ஒலி 30 டெசிபல் இது ஆகக்குறைந்தது.

நாம் சாதரணமாக பேசும்பொழுது ஏற்படும் ஒலியின்
அளவு 60 டெசிபள். ஹேர் டிரையர் ஏற்படுத்தும் சத்தம்
85 டெசிபல். இதற்கு மேல் கேட்கும் எந்த அளவும்
காதைச் செவிட்டாக்கும்.(ஆம்புலன்ஸ், ஜெட் எஞ்சின்
எழுப்பும் ஒலிகள் 120,140 டெசிப்ல்கள்)

நம் ஐபாட் அல்லது எம்பி3 ஒலிக்க வேண்டிய
டெசிபல் 60 முதல் என்றாலும் சிலர் 120 டெசிபல்
வரை வைத்துக்கொள்வார்கள். இதனால்
காது அடையும் பாதிப்பிற்கு அந்தக் காதிற்கு
ஒரு வாயையாவது ஆண்டவன் வைத்திருந்தால்
சொல்லியழும்!!! (அப்போது கூட காதுக்கு
கேட்கும் தன்மை இருக்க வேண்டும்)





குறைபாடு ஏற்படாமல் நம் காதுகளை பாதுகாப்பது எப்படி?


குறைந்த அளவில் பாடல்களை கேட்கும் வழக்கத்தை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

sound isolating earphones வகைகள்
பாடலையும், இசையையும் பிரித்து பாடலைதுல்லியமாக
கேட்க செய்யுமாம். இவ்வகை இயர் போன்களுக்கு மாறலாம்.

அருகில் இருக்கும் நண்பர்களிடம் தனது ஐபாட்டிலிருந்து
வரும் சத்தம் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டால்
அவரது பதில் “ஆம்” என்றால் சத்தம் அதிகமாக
இருக்கிறது என்று அர்த்தம். உடன் வால்யூமை
குறைத்துக்கொள்ளலாம்.

விட்டமின் A,C,E and Magnesioum இவை நம்
காதுகளை பாதுகாக்கிறதாம்.


சுற்றுப்புரத்தை மாசுபடுத்துவதில் சத்தமும்
ஒரு மூலகாரணி. ஆனால் அதைப் பற்றி
யாரும் அலட்டிக்கொள்வதில்லை.

இப்போது அதிகம் ஹெட்போன் அதிக சத்தத்தோடு
மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் அதி விரைவில்
Hearing aid உதவி இல்லாமல் வாழப்போவதில்லை
என அபாயச்சங்கு ஊதுகிறார்கள் மருத்துவர்கள்.

அவர்கள் காதில் கேட்க வேண்டுமே....