ஹைதையிலிருந்து சென்னை வந்தோம். அப்பதான் ஏதோ ஒரு புஸ்தகத்துல “அம்மி” அப்படிங்கற வெட் கிரைண்டர் பத்தி படிச்சேன்.
டேபிள் டாப். (1998 மாடல்) அது வாங்கி கொடுத்தார் அயித்தான். சூப்பரா அரைச்சு மாவு கரைச்சு வெச்சதுக்கப்புறம் அது புசுபுசுன்னு மேலெழும்பி வரும் அழகே அழகு.
ஆனாலும் அந்த மாவு 2 நாளைக்குத்தான் இட்லியா வந்தது. அப்புறம் தோசைக்குத்தான் லாயக்கு.
இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வீடு மாறினோம். பக்கத்து வீட்டுல நோபல் அம்மான்னு ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க. அவங்க பேரு என்னவோ லீனா. ஆனா அவங்க சின்னமகன் பேரு நோபல். அவங்க வீட்டுல காலையில சுட்ட இட்லி மதியம் ஆனாலும் சாஃப்டா இருக்கும். அவங்க கிட்ட மெல்ல ரெசிப்பி கேட்டேன். ”நீங்க மாவு பொங்கி வந்ததும் கடகடன்னு கரண்டியால கலக்கி டப்பால போட்டுடறீங்க. அதான் மொதோ 2 நாள் மட்டும் இட்லி ஊத்த முடியுது.” அப்படின்னு சொன்னவங்க சொல்லிக்கொடுத்த ரெசிப்பி படிதான் இந்த 13 + வருடங்களா இட்லி செய்யறேன். (அதே மாவுதான் தோசைக்கும்) 6 நாளைக்காவது மாவு இருக்கும். 6ஆம் நாள் கூட இட்லி செய்யறேன். :))
தெரிஞ்சவங்களா போயிட்டீங்க. சரி வாங்க உங்களுக்கும் அந்த ரெசிப்பி சொல்றேன். அரிசி 3 + 1 உளுந்து . நான் பத்து கிளாஸ் அரிசி போடுவேன். இதுல 4 பச்சரிசி, 6 புழுங்கரிசி. உளுந்து முழு உளுந்துதான் உபயோகிக்கறேன். அது 3 கிளாஸ். இதுதான் ரேஷியோ. அரிசி, உளுந்து களையும் போதுதான் இருக்கு முக்கியமான விஷயம். உளுந்தை ஒரு தரம் மட்டும் கழுவி நிறைய்ய தண்ணி ஊத்தி ஃபிரிட்ஜல வெச்சிருங்க. அது நல்லா ஊறிக்கும். அரிசி இரண்டையும் ஒண்ணா போட்டு 2 தடவை நல்லா கழுவி தண்ணி ஊத்தி வெளிய ஊற வெச்சிடுங்க.
அரைக்கும்போது கல்லுரல்/கிரைண்டரில் முதலில் உளுந்தை ஆட்டிக்கணும். ஃப்ரிட்ஜில் வெச்ச அதே ஜில்லு தண்ணி ஊத்தியே உளுந்தை ஆட்டிக்கணும் என்பது முக்கியம். இதனால உளுந்து சூடாகாம குளுகுளுன்னு இருக்கும். உளுந்து நல்லா கொட கொடன்னு ஆட்டி மாவை அள்ளினதக்கப்புறம், 3 ஸ்பூன் உப்பு போட்டு பாத்திரத்தில் மூடி வெச்சிடுங்க. அரிசியை போட்டு ஆட்டி ரொம்ப மைய இல்லாம ரொம்ப கொரகொரன்னு இல்லாத பதத்துல ஆட்டி உளுந்தோட சேத்து நல்லா கலக்கி வெச்சிட்டா மாவு நல்லா பொங்கி வரும்.
மாவு சூடாவதால தான் புளிப்பது, சரியா செட்டாகதது எல்லாம் நடக்குது.
பொங்கி வந்த மாவை கரண்டி ஏதும் போட்டு கலக்காம நல்ல டப்பர்வேர் டப்பாவில் போட்டு வெச்சிட்டா அப்படியே இருக்கும். ஒருவாரம் ஆனாலும் புளிக்காது. கடைசி நாள் வரை இட்லி ஊத்திக்கலாம். இப்ப எங்க வீட்டுல சூப்பரா இட்லி சும்மா சாஃப்ட்டா மெத் மெத்னு ஜமாய்க்கறேன்.
எங்க அவ்வா தட்டுல இட்லி ஊத்தி கொடுப்பாங்க. கொஞ்சம் குழிவான தட்டுல எண்ணெய் தடவி 2 கரண்டி மாவை ஊத்தி டோக்ளாவுக்கு வைப்பது போல அப்படியே வேக வெப்பாங்க. அதென்னவோ ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டு பசங்களுக்கு குக்கர் செப்பரேட்டரில் (சின்னது) இட்லி ஊத்தி மேலே வெங்காயம் தக்காளி எல்லாம் வதக்கி போட்டு பிட்சா இட்லின்னு கொடுப்பேன். :)) கர்னாடகாவுல இந்த இட்லிக்கு பேரே தட்டே இட்லியாம். (தட்டே -தட்டு)
எங்க அப்பாவுக்கு அடுக்கு தீபாரதனையில் இட்லி ஊத்தினா அவ்ளவா பிடிக்காது. அது என்ன அடுக்கு தீபாரதனைன்னு கேக்கறவங்களுக்கு. (நம்ம மாமுல் இட்லி ஸ்டாண்ட் தான்) :)
எங்கப்பாவுக்கு துணியில சுடுவதுதான் ரொம்ப பிடிக்கும். விரும்பி ரெண்டு கூட சாப்பிடுவாங்க. (அம்மியில் அரைச்ச சட்னின்னா ரொம்ப இஷ்டம்). ஆனா எனக்கு மட்டும் என்னவோ துணியில இட்லி ஒட்டிப்பது, அதை சோப்பு போட்டு கசக்கினா சோப்பு வாசம் இட்லியில பிடிக்குமோன்னு ஒரு யோசனை. அதனால அடுக்கு தீபாரதனை தான். :)
இதுலயும் சில கன்ஃப்யூஷன். இண்டாலியத்துல உபயோகிக்காதீங்க. சில்வர்தான் நல்லதுன்னு சொல்றாங்க. ஆனா சில்வர் ஸ்டாண்ட்ல குழி ஏந்தலாத்தான் இருக்கும். இட்லி உப்பி வர்றது இல்லை. சில சமயம் இந்த தட்டுகளில் இட்லி ஊத்தும்போது மேலே எழும்பி மேல் தட்டுல ஒட்டிக்கும். அதை எடுக்கும்போது பாதி இட்லிதான் மிஞ்சும்.
ஆனா ஹாக்கின்ஸ் குக்கருக்கு மாமுல் இட்லி ஸ்டாண்டை உள்ளே வைக்க முடியாது. அதுக்குன்னு ஒரு தனி மாடல் இருக்கு. அந்த மாடல் இட்லி ஸ்டாண்ட்டில் இட்லி ஒட்டாம அழகா கும்முன்னு வருது.
நான் பொதுவா இட்லி குக்கர்னு தனியா வெச்சுப்பது இல்லை. எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்தான் எனக்கு இட்லி குக்கர். தண்ணி ஊத்தி இட்லி ஸ்டாண்டை உள்ளே வெச்சிருவேன். குக்கிங் மோட்ல 10 நிமிஷத்துல ரெடி. குக்கரை மத்த வேலைகளுக்கு உபயோகிக்கும்போது இட்லி செய்யணும்னா கவலையே படாம எலக்ட்ரிக் குக்கரில் இட்லி செய்யுங்க. ( கரண்ட் இருக்கணும் அது தனிக்கதை)
இட்லியில் எத்தனை வகைகள் இருக்குன்னு பல பதிவுகள் போடலாம் போல இருக்கு.
காபி கலப்பது என்பது ஒவ்வொரு வீட்டுக்கும் தனி ரெசிப்பி தான். அது போல இட்லி ரெசிப்பியும். எனக்கு நோபல் அம்மா ரெசிப்பி சரியா வந்தது. அதை உங்க கிட்டயும் பகிர்ந்துகிட்டேன். உங்களுக்கு சரியா வந்தா ஜமாயுங்க.
ALL THE BEST..... HAPPY EATING.

இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வீடு மாறினோம். பக்கத்து வீட்டுல நோபல் அம்மான்னு ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க. அவங்க பேரு என்னவோ லீனா. ஆனா அவங்க சின்னமகன் பேரு நோபல். அவங்க வீட்டுல காலையில சுட்ட இட்லி மதியம் ஆனாலும் சாஃப்டா இருக்கும். அவங்க கிட்ட மெல்ல ரெசிப்பி கேட்டேன். ”நீங்க மாவு பொங்கி வந்ததும் கடகடன்னு கரண்டியால கலக்கி டப்பால போட்டுடறீங்க. அதான் மொதோ 2 நாள் மட்டும் இட்லி ஊத்த முடியுது.” அப்படின்னு சொன்னவங்க சொல்லிக்கொடுத்த ரெசிப்பி படிதான் இந்த 13 + வருடங்களா இட்லி செய்யறேன். (அதே மாவுதான் தோசைக்கும்) 6 நாளைக்காவது மாவு இருக்கும். 6ஆம் நாள் கூட இட்லி செய்யறேன். :))
தெரிஞ்சவங்களா போயிட்டீங்க. சரி வாங்க உங்களுக்கும் அந்த ரெசிப்பி சொல்றேன். அரிசி 3 + 1 உளுந்து . நான் பத்து கிளாஸ் அரிசி போடுவேன். இதுல 4 பச்சரிசி, 6 புழுங்கரிசி. உளுந்து முழு உளுந்துதான் உபயோகிக்கறேன். அது 3 கிளாஸ். இதுதான் ரேஷியோ. அரிசி, உளுந்து களையும் போதுதான் இருக்கு முக்கியமான விஷயம். உளுந்தை ஒரு தரம் மட்டும் கழுவி நிறைய்ய தண்ணி ஊத்தி ஃபிரிட்ஜல வெச்சிருங்க. அது நல்லா ஊறிக்கும். அரிசி இரண்டையும் ஒண்ணா போட்டு 2 தடவை நல்லா கழுவி தண்ணி ஊத்தி வெளிய ஊற வெச்சிடுங்க.
அரைக்கும்போது கல்லுரல்/கிரைண்டரில் முதலில் உளுந்தை ஆட்டிக்கணும். ஃப்ரிட்ஜில் வெச்ச அதே ஜில்லு தண்ணி ஊத்தியே உளுந்தை ஆட்டிக்கணும் என்பது முக்கியம். இதனால உளுந்து சூடாகாம குளுகுளுன்னு இருக்கும். உளுந்து நல்லா கொட கொடன்னு ஆட்டி மாவை அள்ளினதக்கப்புறம், 3 ஸ்பூன் உப்பு போட்டு பாத்திரத்தில் மூடி வெச்சிடுங்க. அரிசியை போட்டு ஆட்டி ரொம்ப மைய இல்லாம ரொம்ப கொரகொரன்னு இல்லாத பதத்துல ஆட்டி உளுந்தோட சேத்து நல்லா கலக்கி வெச்சிட்டா மாவு நல்லா பொங்கி வரும்.
மாவு சூடாவதால தான் புளிப்பது, சரியா செட்டாகதது எல்லாம் நடக்குது.
பொங்கி வந்த மாவை கரண்டி ஏதும் போட்டு கலக்காம நல்ல டப்பர்வேர் டப்பாவில் போட்டு வெச்சிட்டா அப்படியே இருக்கும். ஒருவாரம் ஆனாலும் புளிக்காது. கடைசி நாள் வரை இட்லி ஊத்திக்கலாம். இப்ப எங்க வீட்டுல சூப்பரா இட்லி சும்மா சாஃப்ட்டா மெத் மெத்னு ஜமாய்க்கறேன்.
எங்க அவ்வா தட்டுல இட்லி ஊத்தி கொடுப்பாங்க. கொஞ்சம் குழிவான தட்டுல எண்ணெய் தடவி 2 கரண்டி மாவை ஊத்தி டோக்ளாவுக்கு வைப்பது போல அப்படியே வேக வெப்பாங்க. அதென்னவோ ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டு பசங்களுக்கு குக்கர் செப்பரேட்டரில் (சின்னது) இட்லி ஊத்தி மேலே வெங்காயம் தக்காளி எல்லாம் வதக்கி போட்டு பிட்சா இட்லின்னு கொடுப்பேன். :)) கர்னாடகாவுல இந்த இட்லிக்கு பேரே தட்டே இட்லியாம். (தட்டே -தட்டு)
எங்க அப்பாவுக்கு அடுக்கு தீபாரதனையில் இட்லி ஊத்தினா அவ்ளவா பிடிக்காது. அது என்ன அடுக்கு தீபாரதனைன்னு கேக்கறவங்களுக்கு. (நம்ம மாமுல் இட்லி ஸ்டாண்ட் தான்) :)
எங்கப்பாவுக்கு துணியில சுடுவதுதான் ரொம்ப பிடிக்கும். விரும்பி ரெண்டு கூட சாப்பிடுவாங்க. (அம்மியில் அரைச்ச சட்னின்னா ரொம்ப இஷ்டம்). ஆனா எனக்கு மட்டும் என்னவோ துணியில இட்லி ஒட்டிப்பது, அதை சோப்பு போட்டு கசக்கினா சோப்பு வாசம் இட்லியில பிடிக்குமோன்னு ஒரு யோசனை. அதனால அடுக்கு தீபாரதனை தான். :)
இதுலயும் சில கன்ஃப்யூஷன். இண்டாலியத்துல உபயோகிக்காதீங்க. சில்வர்தான் நல்லதுன்னு சொல்றாங்க. ஆனா சில்வர் ஸ்டாண்ட்ல குழி ஏந்தலாத்தான் இருக்கும். இட்லி உப்பி வர்றது இல்லை. சில சமயம் இந்த தட்டுகளில் இட்லி ஊத்தும்போது மேலே எழும்பி மேல் தட்டுல ஒட்டிக்கும். அதை எடுக்கும்போது பாதி இட்லிதான் மிஞ்சும்.
ஆனா ஹாக்கின்ஸ் குக்கருக்கு மாமுல் இட்லி ஸ்டாண்டை உள்ளே வைக்க முடியாது. அதுக்குன்னு ஒரு தனி மாடல் இருக்கு. அந்த மாடல் இட்லி ஸ்டாண்ட்டில் இட்லி ஒட்டாம அழகா கும்முன்னு வருது.
நான் பொதுவா இட்லி குக்கர்னு தனியா வெச்சுப்பது இல்லை. எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்தான் எனக்கு இட்லி குக்கர். தண்ணி ஊத்தி இட்லி ஸ்டாண்டை உள்ளே வெச்சிருவேன். குக்கிங் மோட்ல 10 நிமிஷத்துல ரெடி. குக்கரை மத்த வேலைகளுக்கு உபயோகிக்கும்போது இட்லி செய்யணும்னா கவலையே படாம எலக்ட்ரிக் குக்கரில் இட்லி செய்யுங்க. ( கரண்ட் இருக்கணும் அது தனிக்கதை)
இட்லியில் எத்தனை வகைகள் இருக்குன்னு பல பதிவுகள் போடலாம் போல இருக்கு.
காபி கலப்பது என்பது ஒவ்வொரு வீட்டுக்கும் தனி ரெசிப்பி தான். அது போல இட்லி ரெசிப்பியும். எனக்கு நோபல் அம்மா ரெசிப்பி சரியா வந்தது. அதை உங்க கிட்டயும் பகிர்ந்துகிட்டேன். உங்களுக்கு சரியா வந்தா ஜமாயுங்க.
ALL THE BEST..... HAPPY EATING.




































