Showing posts with label kalangadhirumaname. Show all posts
Showing posts with label kalangadhirumaname. Show all posts

Saturday, March 18, 2023

100 days of holistic Life with kala - Day 5

வணக்கம் நட்புக்களே!!!

நொடிக்கு நொடி மாறும் மனம் அதை  Kshana chitham Kshana pitham  என்பார்கள்.
அலைபாயும் மனது அதனால் நமக்கு பாதிப்பு அதிகம்.

இப்படி நம்மை உழட்டி அடிக்கும் அந்த மனசு எங்க தான் இருக்கு? 

மனம் என்பது நம் எண்ணங்களின் தொகுப்பு. நமக்கு ஏற்பட்ட அல்லது பிறருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நுகர்ந்தவை, சிந்தனை இப்படி எல்லாம் சேர்ந்தது.

ஆங்கிலத்தில் மெடாபிசிக்கல் என்பார்கள். கிரேக்க சொல்லான மெட்டாபிசிக்கல் என்றால் “இயற்கையின் விஷயங்களுக்கு அப்பாற்பட்டது, மனோ தத்துவம் சம்பந்தபட்ட ஒரு உணர்வு.

உருவமில்லாதது. அதனால் தொட்டு உணர அதும் நம் உடம்பில் இருக்கும் ஒரு உடல் உறுப்பு என்று சொல்ல முடியாது.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் கணினிக்கு எனும் ஹார்ட் வேர் இயங்க, ஒரு சாஃப்ட்வேர் தேவையோ, நாம் இயங்க அப்படி மனம் எனும் இந்த சாஃப்ட்வேர் தேவை.

தொடரும்.

அன்பும் நன்றியும்.

100days of Holistic Life with Kala - Day/4

மனம் - ஒரு புரிதல்

மனம் அப்படின்னா என்ன? அது கருப்பா, சிவப்பா, உருவம் இருக்கா இல்லையா?

ஆனா நம்மளை ஆட்டிபடைக்குதே!!! எப்படின்னு கேக்கறீங்களா? 

மனம் போல வாழ்வு,

மனசிருந்தா மாரியாத்தா!! இல்லைன்னா காளியாத்தா

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

மனசுல ஒண்ணு வெச்சுக்கிட்டு வெளியில ஒண்ணு பேசக்கூடாது.

இதெல்லாம் நடைமுறையில் மனம் குறித்த சொல்லாடல்கள். 


மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா????? போகக்கூடாதா??

நொடிக்கு குரங்கு போல தாவி மாறிக்கிட்டு, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைபாயும் மனசு இதால நாம எத்தனை சங்கடங்களை அனுபவிக்கிறோம்.

இதிலிருந்து நமக்கு தெரிவது என்ன? மனம் இது நம் வாழ்வில் ஒரு அங்கம்.

அந்த ஒரு அங்கத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏன் தெரியணும்?
 வரக்கூடிய நாட்களில் மனம் சம்பந்தபட்ட பதிவுகள் வரும்.

இணைந்திருங்கள்.

#கலங்காதிருமனமே!!