Showing posts with label ganagandharvan. Show all posts
Showing posts with label ganagandharvan. Show all posts

Thursday, January 10, 2019

கான கந்தர்வன் பிறந்த நாள்

இன்று கானகந்தர்வனுக்கு 79ஆவது பிறந்த நாள்.  இவரது குரலுக்கு ஒரு மந்திரம் உண்டு. அது உயிரை உருக்கும் சுகானுபவம்.  மன அழுத்தங்கள்இந்தக்குரலில் கரைந்து போய்விடும்.

நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு என்றால் காதல் கொள்ள தோன்றும்.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா என்றால்  நாமே திருப்பாற்கடல் அருகில் நின்று பெருமானை பார்த்த உணர்வு வரும்.

மதுபன் குஷ்பு தேத்தாஹை என்று உருகும்  குரலில் பாஷை தடையாக இருக்காது.

தில் கோ டுக்கடே டுக்கடே கர்கே என்ற பாடும் பாடலில் சோகம் சுமந்த மனது ஆகா நமக்கான பாட்டுன்னு சுருதி சேரும்.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா என்ற பாட்டிலோ வாழ்வில் இன்பம் துன்பமும் சரிபாதிதான். என நம்பிக்கை சொட்டும்.

இப்படியே இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்து உன் குரலால் எம் மனதுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனைகள்