வலியோடு வாழ்வது எப்படி? என்று பழக ஆரம்பித்திருக்கிறேன்.
அப்படி என்னதான் வலி????
என் முந்தைய பதிவு இங்கே.
ஸ்பாண்டிலைடிஸ் என்று சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
ட்ராக்ஷன், பிசியோதெரபி கையை அசைக்க உதவியது.
மெல்ல மெல்ல முன்னேற்றம் வந்தது. ஆனாலும்
கைகளில் வலி குறையவில்லை.
மேலும் பரிசோதித்து பார்த்த மருத்துவர் சொன்னது
Fibromyalgia - பேரெ வாயில் நுழையவில்லை எனக்கு.
ஃபைரோமயால்ஜியா. இது வரை இதைப்பற்றி
கேள்விபட்டதுமில்லை.

வலி வலி என எப்போதும் வலி இருந்து கொண்டே
இருக்கும். அதிகம் பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளக்
கூடாது என்பதால் வலி வரும்போது மேலே நிவாரனி
பூசி, வெந்நீர் ஒத்தடம் தான். தவிர நரம்புகளுக்கு
வலு தரும் மருந்து எடுத்துக்கொள்கிறேன்.
Fibromyalgia - எப்படி எதனால் வருகிறது என்று
கண்டுபிடிக்க முடியாத ஒன்றாம்.நோயின்
அறிகுறி பற்றிய செய்திக்கு இங்கே கி்ளிக்கவும். கீழே படத்தில்
பாருங்கள். இந்த இடங்களில் எல்லாம் வலி இருக்கும்.
தலை சுற்றி மயக்கம் வரும். குனிந்து ஏதும்
செய்யப்போனால் ”டமால்” என் விழுந்துவிட நேரம்.
படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் பெரிய விடயம்.

எனக்கு வலது கையில் வலி என்பதால் கையை
உபயோகிப்பது குறைவாகிப்போனது.
தூக்கம் நல்ல நாளிலேயே சரியாக
வராது. இந்த நிலையில் நிம்மதியான
தூக்கம் இராது. கொடுக்கப்படும்
மருந்தில் தூக்கம் வரவழைக்கும் காரனிகள்
உண்டு. தூக்கம் ஒருவகையான மருந்தாகிறது.
அதிக தூக்கம் பழக்கமேயில்லாத ஒன்று
கஷ்டமாக இருக்கிறது.
மருந்துடன், உடற்பயிற்சி அதுவும் ஸ்ட்ரெட்சஸ்
என்ப்படும் வகை மிக அவசியம் என
மருத்துவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
1 மாதத்தில் கொஞ்சம் முன்னேற்றம்.
அதிகம் வீட்டு வேலை(பாத்திரம் கழுவுதல்,
பெருக்குதல்) காய்கறி வெட்டுதல் போன்றவை
செய்யாமல் இருந்தால் உடற்பயிற்சியின் உதவியோடு
வலி குறைவாக இருக்கிறது.
சோம்பி இருக்க முடியாமல் மெல்ல மெல்ல
என் வேலைகளை செய்கிறேன். ஆனால்
முன்புபோல் செய்யமுடியவில்லையே என்று
மன வருத்தம். மன வருத்தம் மேலும் வருத்தத்தை
தரும் என்று சொல்கிறார்கள். அதனால் மனதை
மாற்ற பாட்டு, புத்தகம் எப்போதாவது பதிவு என
இருக்கிறேன்.
இந்த நேரத்தில் நம் ராமலட்சுமியின் இந்த கவிதை
படித்து பாருங்கள். எனக்கு ஊட்டம் தரும் விதமாக
இருக்கிறது.
ஒரு வேண்டுகோள்:
Fibromyalgia பற்றி அதிகம் சொல்லக் கூடியது
நம் தமிழ்த்துளி தேவா டாக்டர் தான்.
உங்களிடம் எனது அன்பு கோள் இதுதான்
தேவா சார். இந்த வலியைப் பற்றி தமிழில்
பதிவு எழுதுங்கள். பலருக்கு இந்த வலி
இருக்கிறது என்றே தெரியாமல் கழுத்தெலும்பு
தேய்வுக்கு மருத்துவம் தவறாக கொடுக்கப்படுகிறதாம்.
ப்ளீஸ்...
வலைத்தளத்தில் தேடினால் நிறைய்ய விடயங்கள்
கிடைத்தது. எப்படி எதிர்கொள்வது? போன்ற
விடயங்கள். என் மருத்துவர் சொன்னது Fibromyalgia
வுக்கு இந்தியாவில் அதிக மருந்துகள் அல்லது
மருத்துவ முறை இல்லை. விடாமல் உடற்பயிற்சி
முக்கியம். அவர் சொன்ன தகவல் வலிகுறைய்ய
தாய்ச்சி கற்றுக்கொள்வார்களாம்ம். (தாய்ச்சி ஒருவகை
கராத்தே பயிற்சி)Taichi india
”நானும் தாய்ச்சி கத்துக்கறேன்”என்று அயித்தானிடம்
கேட்டேன். உடனே ஆஷிஷ், அம்ருதாவைக்கூப்பிட்டு
“கண்ணுங்களா! எப்பவும் என் கூடவே இருங்க.
என்னிய பத்திரமா பாத்துக்கங்க. நீங்க டீவி பாக்கறப்ப
ஏதும் சத்தம் கேட்டா கவனமா இருங்க”ன்னு சொன்னார்.
பசங்க,”ஏன்பா! என்னாச்சு”ன்னு கேட்க,
”அம்மா தாய்ச்சி கத்துக்கப்போறாங்களாம்!!!!” என்னை
நீங்க தான் காப்பத்தணும்னு” கிண்டல் அடிச்சு பயந்து
போயிட்டார்.
அயித்தான் ரொம்பவே பயந்து போயிருப்பதால்
தாய்ச்சி கற்றுக்கொள்வதை தள்ளி வைத்து
யோகா மட்டும் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.
:)))))))))
