திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கியதுமே
பெரிய மாமா கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.
“உனக்கு மாப்பிள்ளை உள்ளூரில்(மும்பை)தான் இருக்கணும்.
மும்பையை விட்டு வெளியே மாப்பிள்ளை பார்த்தால்
நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்,” என்று. (இங்கதான்
எங்கப்பாவுக்கும், மாமாவுக்கு இடையே சண்டை
வந்தது) அம்புட்டு கறாராக இருந்த மாமா
,” ஸ்ரீராம் என்பதால் தான் மும்பைக்கு வெளியே
உன்னை அனுப்ப சம்மதிக்கிறேன்”, என்று சொன்னதிலிருந்து
தெரிந்தது அயித்தான் மேல் அனைவருக்கும் இருக்கும்
அபிப்ராயம். நல்ல மனிதர். அயித்தானைப் பத்திதான்
எல்லா இடத்திலும் சொல்லிகிட்டே இருக்கேனே!!
மூத்தமகனாக நினைக்கும் தம்பி கார்த்தி,
இளைய மகன் ஆஷிஷ் இவர்களைத் தவிர
உங்கள் அனைவருக்கும் தெரிந்த கல்யாண் அண்ணா,
அனில் அண்ணா எல்லோரும் என் உலகில் இருக்காங்க.
இவர்கள் மட்டுமே இருந்த என் உலகில் இப்போ
ஏகப்பட்டவங்க சேர்ந்துட்டாங்க.
பிளாக்கர்களிடம் ஜாக்கிரதையா இருங்க!!ன்னு
என்னை பலர் எச்சரிச்சாங்க. ஆண்டவனால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் எனக்கு இங்கும்
நல்ல நட்பு, உறவு கிடைத்திருக்கிறது. இதில்
யாரைச் சொல்ல? யாரை விட?(யாரும் கோச்சுக்க
கூடாது)
மங்களூர் சிவா தம்பியில் ஆரம்பித்த உறவு
இன்றைக்கு பலரும் என் உலகில் நட்பாக
உறவாக மலர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி
போன் செய்து பேசும் அன்புத்தம்பிகளும் உண்டு,
ஆன்லைனில்
பார்க்கும்பொழுதெல்லாம்”ஹாய் அக்கா!”
என்றோ, எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா?
என மறக்காமல் கேட்கும் அன்பு நெஞ்சங்களும்
உண்டு. உணவு வேளையில் தட்டில் சாப்பாட்டை
வைத்துக்கொண்டு இந்த உறவுகளோடு, நட்புகளோடு
அளவளாவிக்கொண்டுதான் தினமும் சாப்பிடுகிறேன்.!
முன்பெல்லாம் பதிவு போட்டுவிட்டு, படித்துவிட்டு
கமெண்டிவிட்டு போய்விடுவேன். இப்பொழுதெல்லாம்
பதிவு போடும் நேரத்தை விட சாட்டிங் நேரம்
அதிகமாகிவிட்டது!! :)))
என் உலகில் இருக்கும் இந்த ஆண்கள் எனக்கு
ஒவ்வொரு வகையில் உதாரணமாக, கற்றுக்கொடுத்து
உதவியாய் இருந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து
வியந்திருக்கிறேன். என் உலகில் இருக்கும் அனைத்து
ஆண்களுக்கும் என் மனமார்ந்த பிரார்த்த்னைகளும்,
வாழ்த்துக்களும்.
******************************************
இத்துடன் இந்தத் தொடர் முடிகிறது.
ரொம்பநாளைக்குமுன்னாடியே போட்டிருக்க
வேண்டிய பதிவு. வீடு தேடினது, மாத்தினதுன்னு
நடுவில் தவிர்க்க முடியாமல் வந்த வேலைகளால்
தள்ளிப்போய் இன்றுதான் போடமுடிந்தது.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Showing posts with label என் உலகில் ஆண்கள். Show all posts
Showing posts with label என் உலகில் ஆண்கள். Show all posts
Monday, February 02, 2009
Friday, January 23, 2009
என் உலகில் ஆண்கள்....
நம் வீட்டில் தோட்டம் போட செடியை கொண்டு
வருகிறோம். அந்தச் செடியை முறையாக பராமரித்தால்
தான் அழகாக தளைத்து வளரும். இல்லையேல்
வாடி, வதங்கிப் போய்விடும்.
செடி சிறிதாக வளர்ந்த பொழுது இருந்த
மண்ணோடு மேலும் புது மண் சேர்த்தல் அவசியம்.
புதுமண்ணில் வளர முடியாமல் போய்விடும்.
ஒரு செடிக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள
வேண்டி இருக்கும்பொழுது, 22/25 வருடங்கள்
தான் வளர்ந்த வீட்டை விட்டு வரும் பெண்ணின்
நிலை? அப்பா, அம்மா பாசத்தோடு, அம்மம்மாவின்
செல்ல பேத்தி், மகளாக வளர்த்த மாமா,
பாசமிகு அத்தை இந்த உறவுகளை நான் பிரிந்து
வாழவேண்டியதுதான் வாழ்க்கை.
(திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டு
கிளம்பிய போது தான் மிக மிக அழுதேன்)
”கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்”
என்பார்களே! அப்படித்தான் இருந்தது.
புது இடம், தூரத்துச் சொந்தம் தான் என்றாலும்
அதிகம் பழகி பார்த்தே இராத குடும்பம்.
உடல்நிலை சரியில்லாத மாமியார்.
அயித்தானின் அண்ணன் குடும்பத்தினர்
அப்பொழுது சென்னையில் இருந்தார்கள்.
திருமணம் முடிந்து நாங்கள் முதலில்
சென்றது அவர்கள் வீட்டிற்குத்தான்.
பயந்து பயந்து இருந்த என்னிடம் வந்தார்
அயித்தானின் அண்ணன்.”அம்மா!
இது உன் வீடென நினைத்துக்கொள்.
நாங்களும் உன் உறவுதான்.” என்ற
அந்த வார்த்தை தந்த ஊக்கத்தை
வார்த்தையால் சொல்லிவிட முடியாது.
சொன்னது போல் மட்டுமில்லாமல்
இன்றளவும் “அம்மா” என்றழைப்பதைத்
தவிர என்னைஎதுவும் சொல்லியது கிடையாது.
ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது
அடிக்கடி போனில் பேசுவார் மாமா.
(நான் அப்படித்தான் அயித்தானின்
அண்ணனை அழைப்பேன். பிறந்த 11ஆம்
நாள் முதல் தன் தம்பியை மகன் போல்
வளர்த்தவர். இருவருக்கு 25 வருட வயது
வித்தியாசம். அண்ணன் என்றால் அவர்
தந்தைக்கு சமமானவர் தானே!!)
”குழந்தை 3 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்”
அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழ்ந்தையாக
இருக்கும். நிறைய பாலக்கீரை சாப்பிடு!!”
இப்படி பல அறிவுரைகள் சொன்னார்.
(பேறுகாலத்திற்கு அம்மாவீட்டிற்குச்
செல்லும் வரை தனியாகத்தான் இருந்தேன்.)
ஆஷிஷ் 3.25 எடையுடன் பிறந்த பொழ்து
”நான் சொன்னதை கேட்டதற்குச் சந்தோஷமம்மா!!”
என மகிழ்ந்தார்.
தம்பிமேல் இருக்கும் அதே பாசம் என்மீது
வைத்து கவனித்துக்கொள்ளவேண்டும் என
நினைத்த அந்த பெரிய மனது மாமாவுக்கு இருந்தது.
அப்பா அலுவலகத்தில் பிசியாக இருப்பதால்
அம்மாதானே எல்லாம் செய்கிறார். அம்மாவை
மதித்து அம்மா சொல்வதைக் கேள்! இது
என் குழந்தைகளுக்கு மாமா அடிக்கடி
சொல்லும் வார்த்தைகள். மருமகளை
வேற்றுக்கிரக வாசி போல் நினைத்து
குழந்தைகளை தாயுடன் ஒட்டாமல்
செய்யும் பெரிய்வர்களைப் பார்த்திருந்த
எனக்கு இது ஆச்சரியமான விடயம்!!
ஆஷிஷும் அவனது பெரியப்பாவும் சந்தித்துக்கொள்ளும்
காட்சி திரைப்படக்காட்சி போலிருக்கும். :)))))))))))
“பெத்தா!” என்று இவன் இரு கைகளையும்
நீட்டிக்கொண்டு ஓட, அவரோ”கண்ணா!”என
அழைத்தப்படி கையில் சாக்லேட்டுடன் வந்து
இருவரும் கட்டிக்கொள்வார்கள். :)
(அம்ருதா பெரியம்மா செல்லம்)
எனக்குள் எப்போது ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்.
திருமணமான புதிதில் ஹைதையில் இருந்தோம் சரி.
சென்னைக்கு மாற்றலாகிப்போன பிறகும் தனிக்குடித்தனம்
தான்? இது ஏன்? எனக்குப் புரியாமலேயே இருந்தது.
இலங்கைக்கு மாற்றலாகி கிளம்புவதற்கு முன்
மாமா, நான், குழந்தைகள் மட்டும் மெரினா
பீச் சென்றிருந்தோம்.(அயித்தான் அப்போ
இலங்கையில் இருந்தார்) பிள்ளைகளுடன்
அளவளாவிக்கொண்டு நல்ல பிள்ளைகளாக
இருக்கவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தவர்,
“அம்மா, ஏன் உங்களைத்தனிக்குடித்தனம்
வைத்தேன் என்று தெரியுமா?” என்றார்.
”தெரியவில்லை” என்றேன்.
”நானும் தம்பியும் சேர்ந்து இருக்கலாம்
தவறில்லை. சேர்ந்து இருக்கும்பொழ்து
குடும்பத்தலைவனாக நானே எல்லாவற்றையும்
கவனித்து உங்களை நன்றாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், நான் அப்படிச் செய்திருந்தால் நீங்கள்
வாழ்க்கையை கற்பது எப்போது? வருவாய்க்குள்
செலவு, சேமிப்பு, குடும்பப் பொறுப்பு போன்றவைகளை
கற்காமல் போயிருப்பீர்கள்!” என்ன ஒரு நற்சிந்தனை!
“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்
வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த
ஆசான்” என் யோசித்து அதை செயற்படுத்தி
எங்களை நல்வழிகாட்டி அழைத்துச் சென்ற
இவர் வயதால் மட்டுமல்ல குணத்தாலும்
பெரியவர் தான்.
இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது... என சென்ற
பதிவில் நான் சொல்லியிருந்தேன். இப்படி பட்ட
உறவு எனக்குக் கிடைக்கச் செய்த ஆண்டவனுக்கு
நன்றி.
**************************************
எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்
உணர்ந்தேன். அதாவது நல்லவர்களாக
நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்
அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.
என் பார்வை, கண்ணோட்டம் கற்றுத் தந்தது
இதைத்தான். அடுத்த பதிவு இந்தத் தொடரின்
கடைசி பதிவு.
இதில் யாரெல்லாம் இருக்காங்க?
வெயிட் அண்ட் சீ :)))
வருகிறோம். அந்தச் செடியை முறையாக பராமரித்தால்
தான் அழகாக தளைத்து வளரும். இல்லையேல்
வாடி, வதங்கிப் போய்விடும்.
செடி சிறிதாக வளர்ந்த பொழுது இருந்த
மண்ணோடு மேலும் புது மண் சேர்த்தல் அவசியம்.
புதுமண்ணில் வளர முடியாமல் போய்விடும்.
ஒரு செடிக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள
வேண்டி இருக்கும்பொழுது, 22/25 வருடங்கள்
தான் வளர்ந்த வீட்டை விட்டு வரும் பெண்ணின்
நிலை? அப்பா, அம்மா பாசத்தோடு, அம்மம்மாவின்
செல்ல பேத்தி், மகளாக வளர்த்த மாமா,
பாசமிகு அத்தை இந்த உறவுகளை நான் பிரிந்து
வாழவேண்டியதுதான் வாழ்க்கை.
(திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டு
கிளம்பிய போது தான் மிக மிக அழுதேன்)
”கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்”
என்பார்களே! அப்படித்தான் இருந்தது.
புது இடம், தூரத்துச் சொந்தம் தான் என்றாலும்
அதிகம் பழகி பார்த்தே இராத குடும்பம்.
உடல்நிலை சரியில்லாத மாமியார்.
அயித்தானின் அண்ணன் குடும்பத்தினர்
அப்பொழுது சென்னையில் இருந்தார்கள்.
திருமணம் முடிந்து நாங்கள் முதலில்
சென்றது அவர்கள் வீட்டிற்குத்தான்.
பயந்து பயந்து இருந்த என்னிடம் வந்தார்
அயித்தானின் அண்ணன்.”அம்மா!
இது உன் வீடென நினைத்துக்கொள்.
நாங்களும் உன் உறவுதான்.” என்ற
அந்த வார்த்தை தந்த ஊக்கத்தை
வார்த்தையால் சொல்லிவிட முடியாது.
சொன்னது போல் மட்டுமில்லாமல்
இன்றளவும் “அம்மா” என்றழைப்பதைத்
தவிர என்னைஎதுவும் சொல்லியது கிடையாது.
ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது
அடிக்கடி போனில் பேசுவார் மாமா.
(நான் அப்படித்தான் அயித்தானின்
அண்ணனை அழைப்பேன். பிறந்த 11ஆம்
நாள் முதல் தன் தம்பியை மகன் போல்
வளர்த்தவர். இருவருக்கு 25 வருட வயது
வித்தியாசம். அண்ணன் என்றால் அவர்
தந்தைக்கு சமமானவர் தானே!!)
”குழந்தை 3 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்”
அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழ்ந்தையாக
இருக்கும். நிறைய பாலக்கீரை சாப்பிடு!!”
இப்படி பல அறிவுரைகள் சொன்னார்.
(பேறுகாலத்திற்கு அம்மாவீட்டிற்குச்
செல்லும் வரை தனியாகத்தான் இருந்தேன்.)
ஆஷிஷ் 3.25 எடையுடன் பிறந்த பொழ்து
”நான் சொன்னதை கேட்டதற்குச் சந்தோஷமம்மா!!”
என மகிழ்ந்தார்.
தம்பிமேல் இருக்கும் அதே பாசம் என்மீது
வைத்து கவனித்துக்கொள்ளவேண்டும் என
நினைத்த அந்த பெரிய மனது மாமாவுக்கு இருந்தது.
அப்பா அலுவலகத்தில் பிசியாக இருப்பதால்
அம்மாதானே எல்லாம் செய்கிறார். அம்மாவை
மதித்து அம்மா சொல்வதைக் கேள்! இது
என் குழந்தைகளுக்கு மாமா அடிக்கடி
சொல்லும் வார்த்தைகள். மருமகளை
வேற்றுக்கிரக வாசி போல் நினைத்து
குழந்தைகளை தாயுடன் ஒட்டாமல்
செய்யும் பெரிய்வர்களைப் பார்த்திருந்த
எனக்கு இது ஆச்சரியமான விடயம்!!
ஆஷிஷும் அவனது பெரியப்பாவும் சந்தித்துக்கொள்ளும்
காட்சி திரைப்படக்காட்சி போலிருக்கும். :)))))))))))
“பெத்தா!” என்று இவன் இரு கைகளையும்
நீட்டிக்கொண்டு ஓட, அவரோ”கண்ணா!”என
அழைத்தப்படி கையில் சாக்லேட்டுடன் வந்து
இருவரும் கட்டிக்கொள்வார்கள். :)
(அம்ருதா பெரியம்மா செல்லம்)
எனக்குள் எப்போது ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்.
திருமணமான புதிதில் ஹைதையில் இருந்தோம் சரி.
சென்னைக்கு மாற்றலாகிப்போன பிறகும் தனிக்குடித்தனம்
தான்? இது ஏன்? எனக்குப் புரியாமலேயே இருந்தது.
இலங்கைக்கு மாற்றலாகி கிளம்புவதற்கு முன்
மாமா, நான், குழந்தைகள் மட்டும் மெரினா
பீச் சென்றிருந்தோம்.(அயித்தான் அப்போ
இலங்கையில் இருந்தார்) பிள்ளைகளுடன்
அளவளாவிக்கொண்டு நல்ல பிள்ளைகளாக
இருக்கவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தவர்,
“அம்மா, ஏன் உங்களைத்தனிக்குடித்தனம்
வைத்தேன் என்று தெரியுமா?” என்றார்.
”தெரியவில்லை” என்றேன்.
”நானும் தம்பியும் சேர்ந்து இருக்கலாம்
தவறில்லை. சேர்ந்து இருக்கும்பொழ்து
குடும்பத்தலைவனாக நானே எல்லாவற்றையும்
கவனித்து உங்களை நன்றாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், நான் அப்படிச் செய்திருந்தால் நீங்கள்
வாழ்க்கையை கற்பது எப்போது? வருவாய்க்குள்
செலவு, சேமிப்பு, குடும்பப் பொறுப்பு போன்றவைகளை
கற்காமல் போயிருப்பீர்கள்!” என்ன ஒரு நற்சிந்தனை!
“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்
வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த
ஆசான்” என் யோசித்து அதை செயற்படுத்தி
எங்களை நல்வழிகாட்டி அழைத்துச் சென்ற
இவர் வயதால் மட்டுமல்ல குணத்தாலும்
பெரியவர் தான்.
இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது... என சென்ற
பதிவில் நான் சொல்லியிருந்தேன். இப்படி பட்ட
உறவு எனக்குக் கிடைக்கச் செய்த ஆண்டவனுக்கு
நன்றி.
**************************************
எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்
உணர்ந்தேன். அதாவது நல்லவர்களாக
நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்
அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.
என் பார்வை, கண்ணோட்டம் கற்றுத் தந்தது
இதைத்தான். அடுத்த பதிவு இந்தத் தொடரின்
கடைசி பதிவு.
இதில் யாரெல்லாம் இருக்காங்க?
வெயிட் அண்ட் சீ :)))
Thursday, January 22, 2009
நான் வியக்கும் இளைஞர்!!!
அதிக முறை பயணம் செய்ய ஏதுவாய் இருக்கும்
என்பதால் லோக்கல் ட்ரையினில் சீசன் டிக்க்கெட்
எடுக்கும் வசதி உண்டு.
மற்ற ஊர்களுக்கும் அடிக்கடி பயணிக்கற
இந்த இளைஞருக்காக
சீசன் டிக்கெட் கொடுக்கச் சொல்லி தர்ணா
செய்யலாமான்னு இருக்கோம்.
மும்பை, சென்னை, பெங்களூர்ன்னு
தாத்தா சுத்திகிட்டே இருப்பாரு. ஒவ்வொரு மாதமும்
இந்த இடங்களை கட்டாயம் விசிட் செய்வாரு்.
சில சமயம் இந்த லிஸ்டில் ஹைதையும்
சேர்ந்து கொள்ளும்.
ஓய்வே இல்லாமல் எறும்புபோல் அப்படி ஒரு ஓட்டம்.
இவர் அந்தேரி தாத்தா என எங்களால்(பேரன்/பேத்திகளால்)
அழைக்கப்படும் இவர்தான் அந்த இளைஞர்.
வயது அதிகமில்லை 85 தான்.
(அந்தேரி மும்பையில் ஒரு இடம். பலவருடங்களாக
தாத்தா(என் அம்மாவின் தாய்மாமா)
அங்கே வசித்ததால் தாத்தாவின் பெயரோடு
அந்தேரி ஒட்டிக்கொண்டுவிட்டது. தாத்தா இப்பொழுது
அந்தேரியில் வசிப்பதில்லை. ஆனாலும் அந்தேரி
தாத்தா தான்!!! )
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மும்பையில்
INCOME TAX DEPARTMENTல் OFFICERஆக பணிபுரிந்தவர்.
அந்த மிடுக்கும், கம்பீரமும் தாத்தாவிடம் மிகவும்
பிடித்தமானது. பார்க்கத்தான் கரடு முரடாக
தெரிவார். உண்மையில் மிருதுவான மனிதர்.
தனக்கு வாரிசு இல்லாவிட்டாலும் தன் அக்கா மற்றும்
தங்கையின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக
பார்க்கும் நல்ல மனது. 12 வருடங்களுக்கு முன்
தன் துணையை இழந்த பிறகு முற்றிலும்
தன்னை பணியோடு(அலுவலக வேலையில்லை,
தன்னை ஒரு அமைப்போடு சம்பந்தப் படுத்திக்கொண்டு
எந்த ஒரு ஆதாயமும் பெறாமல் சேவை
செய்கிறார்) பி.எல் படித்திருப்பதால் சில
சமயம் கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக
இருக்கிறார். (எம்.எஸ். அம்மாவிற்கு தாத்தா
சட்ட ஆலோசகராக அவ்வப்போது வேலை
பார்த்ததுண்டு)
எல்லாவற்றிலும் மிதமாக இருக்கும் தாத்தா
எடுத்துக்கொண்ட வேலையில் மட்டும் பம்பரமாகவே
சுற்றுவார். ”இந்த வயதில் இப்படி சுற்றி ஆகவேண்டுமா?”
என்று நாங்கள் கேட்டால்,”என்னால் 4 பேருக்கு
நல்லது நடக்குது. என் உடம்பை பத்தி கவலைப்பட
கூடாது. நன்றாகத்தான் இருக்கிறேன்”, என்பார்.
உழைக்க வயது ஒரு தடையல்ல என்பது தாத்தாவின்
எண்ணம்.
அளவானச் சாப்பாடுதான் தாத்தாவிடம் எனக்கு
மிகவும் பிடித்த விஷயம்.
8 மணி அடித்தால் ஏகாக்ஷரம் +4 மாரி பிஸ்கட் வேண்டும்.
(வேறு ஒன்னுமில்லை! ஏகாக்ஷ்ரம் என்றால்
ஒற்றை எழுத்து. அதாங்க டீ. :))
11 மணி அளவில் சோறு குறைவு, காய்கறி கொஞ்சம்
அதிகம் எனும் சாப்பாடு.
சாயந்திரம் 4 மணி வாக்கில் ஏகாக்ஷ்ரம் அல்லது
ஹார்லிக்ஸ்.
இரவு 8 மணி வாக்கில் இட்லி,தோசை, சப்பாத்தி
ஏதாவதுஒரு வகையில் 3 மட்டும் தான்.
ஃபேன் கூட இல்லாமல் தூங்கிவிடுவார்.
பட்டுப்புடவை, வரதட்சனைக்கு நோ போன்ற
எங்களின் கொள்கைகளுக்கு ஆரம்ப கர்த்தா
அந்தேரி தாத்தாதான்.( இந்த கொள்கைக்காக
2000ஆம் வருடம் என் சின்னமாமாவின்
திருமணத்தின் போது மங்கையர் மலரிலிருந்து
வந்து பேட்டி எடுத்து எங்கள் மொத்த
குடும்பத்தினரையும் போட்டோ எடுத்து
போட்டிருந்தார்கள். )
85 வயதில் தன் நலத்தையும் பாராமல்
பொது நலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த
இளைஞருக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தை
வழங்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை.
****************************************
அடுத்தது யாருன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்கலாம்.
இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது. யாரு?????
வெயிட்டுங்கோ.....
என்பதால் லோக்கல் ட்ரையினில் சீசன் டிக்க்கெட்
எடுக்கும் வசதி உண்டு.
மற்ற ஊர்களுக்கும் அடிக்கடி பயணிக்கற
இந்த இளைஞருக்காக
சீசன் டிக்கெட் கொடுக்கச் சொல்லி தர்ணா
செய்யலாமான்னு இருக்கோம்.
மும்பை, சென்னை, பெங்களூர்ன்னு
தாத்தா சுத்திகிட்டே இருப்பாரு. ஒவ்வொரு மாதமும்
இந்த இடங்களை கட்டாயம் விசிட் செய்வாரு்.
சில சமயம் இந்த லிஸ்டில் ஹைதையும்
சேர்ந்து கொள்ளும்.
ஓய்வே இல்லாமல் எறும்புபோல் அப்படி ஒரு ஓட்டம்.
இவர் அந்தேரி தாத்தா என எங்களால்(பேரன்/பேத்திகளால்)
அழைக்கப்படும் இவர்தான் அந்த இளைஞர்.
வயது அதிகமில்லை 85 தான்.
(அந்தேரி மும்பையில் ஒரு இடம். பலவருடங்களாக
தாத்தா(என் அம்மாவின் தாய்மாமா)
அங்கே வசித்ததால் தாத்தாவின் பெயரோடு
அந்தேரி ஒட்டிக்கொண்டுவிட்டது. தாத்தா இப்பொழுது
அந்தேரியில் வசிப்பதில்லை. ஆனாலும் அந்தேரி
தாத்தா தான்!!! )
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மும்பையில்
INCOME TAX DEPARTMENTல் OFFICERஆக பணிபுரிந்தவர்.
அந்த மிடுக்கும், கம்பீரமும் தாத்தாவிடம் மிகவும்
பிடித்தமானது. பார்க்கத்தான் கரடு முரடாக
தெரிவார். உண்மையில் மிருதுவான மனிதர்.
தனக்கு வாரிசு இல்லாவிட்டாலும் தன் அக்கா மற்றும்
தங்கையின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக
பார்க்கும் நல்ல மனது. 12 வருடங்களுக்கு முன்
தன் துணையை இழந்த பிறகு முற்றிலும்
தன்னை பணியோடு(அலுவலக வேலையில்லை,
தன்னை ஒரு அமைப்போடு சம்பந்தப் படுத்திக்கொண்டு
எந்த ஒரு ஆதாயமும் பெறாமல் சேவை
செய்கிறார்) பி.எல் படித்திருப்பதால் சில
சமயம் கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக
இருக்கிறார். (எம்.எஸ். அம்மாவிற்கு தாத்தா
சட்ட ஆலோசகராக அவ்வப்போது வேலை
பார்த்ததுண்டு)
எல்லாவற்றிலும் மிதமாக இருக்கும் தாத்தா
எடுத்துக்கொண்ட வேலையில் மட்டும் பம்பரமாகவே
சுற்றுவார். ”இந்த வயதில் இப்படி சுற்றி ஆகவேண்டுமா?”
என்று நாங்கள் கேட்டால்,”என்னால் 4 பேருக்கு
நல்லது நடக்குது. என் உடம்பை பத்தி கவலைப்பட
கூடாது. நன்றாகத்தான் இருக்கிறேன்”, என்பார்.
உழைக்க வயது ஒரு தடையல்ல என்பது தாத்தாவின்
எண்ணம்.
அளவானச் சாப்பாடுதான் தாத்தாவிடம் எனக்கு
மிகவும் பிடித்த விஷயம்.
8 மணி அடித்தால் ஏகாக்ஷரம் +4 மாரி பிஸ்கட் வேண்டும்.
(வேறு ஒன்னுமில்லை! ஏகாக்ஷ்ரம் என்றால்
ஒற்றை எழுத்து. அதாங்க டீ. :))
11 மணி அளவில் சோறு குறைவு, காய்கறி கொஞ்சம்
அதிகம் எனும் சாப்பாடு.
சாயந்திரம் 4 மணி வாக்கில் ஏகாக்ஷ்ரம் அல்லது
ஹார்லிக்ஸ்.
இரவு 8 மணி வாக்கில் இட்லி,தோசை, சப்பாத்தி
ஏதாவதுஒரு வகையில் 3 மட்டும் தான்.
ஃபேன் கூட இல்லாமல் தூங்கிவிடுவார்.
பட்டுப்புடவை, வரதட்சனைக்கு நோ போன்ற
எங்களின் கொள்கைகளுக்கு ஆரம்ப கர்த்தா
அந்தேரி தாத்தாதான்.( இந்த கொள்கைக்காக
2000ஆம் வருடம் என் சின்னமாமாவின்
திருமணத்தின் போது மங்கையர் மலரிலிருந்து
வந்து பேட்டி எடுத்து எங்கள் மொத்த
குடும்பத்தினரையும் போட்டோ எடுத்து
போட்டிருந்தார்கள். )
85 வயதில் தன் நலத்தையும் பாராமல்
பொது நலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த
இளைஞருக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தை
வழங்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை.
****************************************
அடுத்தது யாருன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்கலாம்.
இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது. யாரு?????
வெயிட்டுங்கோ.....
Wednesday, January 21, 2009
என் உலகில் இவர்கள்.....
என் வாழ்வில் இந்த ஆண்மகனுக்கும் பெரும்பங்கு
இருக்கிறது.
பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் ஒரு
காட்சி. வங்கி அதிகாரியான மொளலி தன்
வீட்டு வேலையைச் செய்வார். ”வீட்டில் நான்
என் மனைவிக்கு கணவன்” என்பார்.
இது என் பெரிய மாமா திரு.சத்தியநாராயணன்
அவர்களுக்கும் பொருந்தும். புதுகையில்
பீ.காம் படித்துவிட்டு மும்பைக்குச் சென்றவர்
B.L, A.C.S என படித்து கம்பெனி செக்ரட்டரியாக
இருந்தார்.
ஆனால் வீட்டில் மிக சிம்பிளாக இருபபார்.
வார இறுதி நாட்களில் நானும் மாமாவும்
சேர்ந்து மொத்த வீட்டையும் கழுவி சுத்தமாக்குவோம்.
முதன் முதலில் டாய்லட்டை மாமாவே
கழுவும் காட்சியைப் பார்த்து,”என்ன? மாமா
இது?” என்றதற்கு,” இதுவும் நம் வீட்டுக்குள்தான்
இருக்கிறது. நாமே கழுவினால் கவுரக் குறைச்சல்
ஆகிவிடாது” என்றார். இன்றும் நான் எங்கள்
வீட்டு டாய்லட்டை சுத்தமாக வைத்திருக்க கற்றது
இவரிடம்.
இது மட்டுமா?
சட்டியிலிருந்து தணலுக்கு!! என்பார்களே அதுமாதிரி
ஆகிவிட்டது என் நிலை. (மும்பையில் நான்
மாமாவீட்டில்தான் இருந்தேன்.)
”மளிகை சாமான் லிஸ்ட் எழுது” என்பதோடல்லாமல்
உடனழைத்துச் சென்று சாமான் வாங்கக் கற்ற்றுக்கொடுத்தார்.
“ஆங்கில நாளிதழ்கள் கட்டாயம் படிக்க வேண்டும்”
(அப்படி படிச்சு அதனால் வந்த வினைதான் இது:))
வீடு சுத்தமாக இருக்க வேண்டும். தூசி இல்லாமல்
துடைக்கவேண்டும். இல்லாவிட்டால்
“டேக் இட் ஈசி பாலிசின்னு “டான்ஸ்
ஆடத்தெரியுது. அந்த டேப்ரிக்கார்டரில்
தூசி இருக்கு. அதைத் துடைக்கத் தெரியலை!!”
என்பது போல நிறைய்யா........
புதுகையில் இருந்த வரை அப்பாவைத் தேடி
யார் வந்தாலும் விவரங்கள் கேட்டுகொண்டு
உள்ளே போய்விட வேண்டும். அதனால் அதிகம்
யாரிடமும் பேசியதில்லை.
அப்படி இருந்த என்னை தனது நண்பர்கள்
வீட்டிற்கு கட்டாயமாக அழைத்துச் செல்வார்.
வரவில்லை என்று சொன்னால் கண்டபடித்
திட்டி அழைத்துச் செல்வார்.” அனைவரிடமும்
பேசிப் பழகினால்தான் நிறைய தெரிந்துக்கொள்ளலாம்”
என்பார். (அது இப்போது அயித்தானின்
அலுவலக நண்பர்களுடன் பேச, அவர்கள்
குடும்பத்தாருடன் அளவளாவ வசதியாய் இருக்கிறது)
அப்பாவைவிட்டு முதன் முதலாக 19 வயதில்
நான் பிரிந்து மும்பை சென்றேன். அடிக்கடி
அப்பா ஞாபகம் வரும். அம்மம்மா மடியி்ல்
தஞ்சமடைந்த பொழுதெல்லாம்,” ஏன்? இங்க
இருக்கறவங்க எல்லாம் மனிஷங்களாத் தெரியலையா?”
என்பார். மாமா அடிக்கடி இப்படித் திட்டும்போதெல்லாம்
அதிகம் வருத்தப் படுவேன்.
அம்மாம்மாவிடம் ஒரு முறை அழுத பொழ்து
அம்மாம்மா சொன்ன வார்த்தை மாமாவைப்
பற்றி புரிய வைத்தது. “மாமா சொல்லும்பொழ்து
அவனை உன் தகப்பனாக நினைத்துப் பார்!!
பாசம் புரியும்! அழமாட்டாய்!” ஆமாம்.
புரிந்தது.
”நீ திருமணமாகி புகுந்த வீட்டில் நல்ல பெயர்
எடுக்க வேண்டும். சத்யா மருமகள் தவறு
செய்துவிட்டாள், அவளால் எங்கள் குடும்பத்தில்
பிரச்சனை என்று பெயர் வரக்கூடாது. அதற்காகத்தான்
உனக்கு இங்கு நல்ல பயிற்சி கொடுக்கிறேன்”
என்றார். (ஆமாம். எனது கருப்பு ரசத்திற்கு
என மற்ற சமையற்கூட சோதனைகளுக்கு
எலிகள் பெரிய மாமா மற்றும் சின்ன
மாமா தானே!!! )
புதுகையிலேயே இருந்திருந்தால் கிணற்றுத்
தவளையாகி இருப்பேன்.
”தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை” எனும்
பாடல் வரிகளுக்கேற்ப
என்னை புடம் போட்டு , மாற்றிய பெருமை
சத்யா மாமாவிற்குத்தான்.
அக்கா மகள் தானே நமக்கென்ன என
இருந்துவிடாமல் என்னையும் தன் மூத்தமகளாய்
(மாமாவிற்கு 2 பெண் குழந்தைகள்) நினைத்து
பாசம் காட்டியதை என்னவென்று சொல்வது.
காட்பரீஸ் சாக்லேட் விளம்பரம் ஒன்று
வரும். அது வந்தால் உடனே.”...
இங்க பாரு உன்னோட ஃப்வரிட்” என்பதிலாகட்டும்,
நான் அல்சர் வந்து அவதி பட்ட பொழுது
தான் கண்ணீர் சிந்தியதிலாகட்டும் இவர் மாமாவா?
அப்பாவா? என குழம்பியிருக்கிறேன்.
இப்போது ஒவ்வொரு தந்தையர்
தினத்திற்கும் நான் மறக்காமல் போன் செய்து
வாழ்த்துச் சொல்லும் இன்னொரு தந்தை
என் பெரிய மாமா.
தனது திருமணத்தின் போது மாமா
ரொம்ப கண்டீஷன் போட்டார்.
1. மாப்பிள்ளை அழைப்பு ஊர்கோலம்
கிடையாது.
2. பெண்ணிற்கு தங்கள் விருப்பம் போல்
சீர் செய்யலாம். நாங்கள் ஏதும் கேட்க
மாட்டோம்.வரதட்சணை கிடையாது.
3. எனக்காக ஒரு தியாகம் மட்டும்
மணமகள் செய்யவேண்டும். அது
திருமணத்தின் போதும், அதற்குப்பிறகும்
பட்டுப்புடவை உடுத்தக் கூடாது.
மாமாவின் இதே கண்டீஷன்களில்
2,3 மட்டும் நானும் என் திருமணத்தின்
போது போட்டேன். அப்பா திட்ட,
மாமாதான் சப்போர்ட் செய்தார்.
அயித்தானும் வரதட்சினை வேண்டாம்
எனும் கொள்கையோடு இருக்க,
நான் பட்டுப்புடவை கட்ட மாட்டேன்
என்றதற்கு ஒத்துக்கொண்டார்.
எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை
பார்க்கும் பொழ்து இந்த இரு பாசக்கார தகப்பன்களுக்குள்
பெரிய சண்டையே வந்தது!!!! (அதைப் பற்றி
அப்புறமா சொல்கிறேன்)
அடுத்த பதிவு ஒரு 85 வயது இளைஞரைப்
பற்றியது
இருக்கிறது.
பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் ஒரு
காட்சி. வங்கி அதிகாரியான மொளலி தன்
வீட்டு வேலையைச் செய்வார். ”வீட்டில் நான்
என் மனைவிக்கு கணவன்” என்பார்.
இது என் பெரிய மாமா திரு.சத்தியநாராயணன்
அவர்களுக்கும் பொருந்தும். புதுகையில்
பீ.காம் படித்துவிட்டு மும்பைக்குச் சென்றவர்
B.L, A.C.S என படித்து கம்பெனி செக்ரட்டரியாக
இருந்தார்.
ஆனால் வீட்டில் மிக சிம்பிளாக இருபபார்.
வார இறுதி நாட்களில் நானும் மாமாவும்
சேர்ந்து மொத்த வீட்டையும் கழுவி சுத்தமாக்குவோம்.
முதன் முதலில் டாய்லட்டை மாமாவே
கழுவும் காட்சியைப் பார்த்து,”என்ன? மாமா
இது?” என்றதற்கு,” இதுவும் நம் வீட்டுக்குள்தான்
இருக்கிறது. நாமே கழுவினால் கவுரக் குறைச்சல்
ஆகிவிடாது” என்றார். இன்றும் நான் எங்கள்
வீட்டு டாய்லட்டை சுத்தமாக வைத்திருக்க கற்றது
இவரிடம்.
இது மட்டுமா?
சட்டியிலிருந்து தணலுக்கு!! என்பார்களே அதுமாதிரி
ஆகிவிட்டது என் நிலை. (மும்பையில் நான்
மாமாவீட்டில்தான் இருந்தேன்.)
”மளிகை சாமான் லிஸ்ட் எழுது” என்பதோடல்லாமல்
உடனழைத்துச் சென்று சாமான் வாங்கக் கற்ற்றுக்கொடுத்தார்.
“ஆங்கில நாளிதழ்கள் கட்டாயம் படிக்க வேண்டும்”
(அப்படி படிச்சு அதனால் வந்த வினைதான் இது:))
வீடு சுத்தமாக இருக்க வேண்டும். தூசி இல்லாமல்
துடைக்கவேண்டும். இல்லாவிட்டால்
“டேக் இட் ஈசி பாலிசின்னு “டான்ஸ்
ஆடத்தெரியுது. அந்த டேப்ரிக்கார்டரில்
தூசி இருக்கு. அதைத் துடைக்கத் தெரியலை!!”
என்பது போல நிறைய்யா........
புதுகையில் இருந்த வரை அப்பாவைத் தேடி
யார் வந்தாலும் விவரங்கள் கேட்டுகொண்டு
உள்ளே போய்விட வேண்டும். அதனால் அதிகம்
யாரிடமும் பேசியதில்லை.
அப்படி இருந்த என்னை தனது நண்பர்கள்
வீட்டிற்கு கட்டாயமாக அழைத்துச் செல்வார்.
வரவில்லை என்று சொன்னால் கண்டபடித்
திட்டி அழைத்துச் செல்வார்.” அனைவரிடமும்
பேசிப் பழகினால்தான் நிறைய தெரிந்துக்கொள்ளலாம்”
என்பார். (அது இப்போது அயித்தானின்
அலுவலக நண்பர்களுடன் பேச, அவர்கள்
குடும்பத்தாருடன் அளவளாவ வசதியாய் இருக்கிறது)
அப்பாவைவிட்டு முதன் முதலாக 19 வயதில்
நான் பிரிந்து மும்பை சென்றேன். அடிக்கடி
அப்பா ஞாபகம் வரும். அம்மம்மா மடியி்ல்
தஞ்சமடைந்த பொழுதெல்லாம்,” ஏன்? இங்க
இருக்கறவங்க எல்லாம் மனிஷங்களாத் தெரியலையா?”
என்பார். மாமா அடிக்கடி இப்படித் திட்டும்போதெல்லாம்
அதிகம் வருத்தப் படுவேன்.
அம்மாம்மாவிடம் ஒரு முறை அழுத பொழ்து
அம்மாம்மா சொன்ன வார்த்தை மாமாவைப்
பற்றி புரிய வைத்தது. “மாமா சொல்லும்பொழ்து
அவனை உன் தகப்பனாக நினைத்துப் பார்!!
பாசம் புரியும்! அழமாட்டாய்!” ஆமாம்.
புரிந்தது.
”நீ திருமணமாகி புகுந்த வீட்டில் நல்ல பெயர்
எடுக்க வேண்டும். சத்யா மருமகள் தவறு
செய்துவிட்டாள், அவளால் எங்கள் குடும்பத்தில்
பிரச்சனை என்று பெயர் வரக்கூடாது. அதற்காகத்தான்
உனக்கு இங்கு நல்ல பயிற்சி கொடுக்கிறேன்”
என்றார். (ஆமாம். எனது கருப்பு ரசத்திற்கு
என மற்ற சமையற்கூட சோதனைகளுக்கு
எலிகள் பெரிய மாமா மற்றும் சின்ன
மாமா தானே!!! )
புதுகையிலேயே இருந்திருந்தால் கிணற்றுத்
தவளையாகி இருப்பேன்.
”தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை” எனும்
பாடல் வரிகளுக்கேற்ப
என்னை புடம் போட்டு , மாற்றிய பெருமை
சத்யா மாமாவிற்குத்தான்.
அக்கா மகள் தானே நமக்கென்ன என
இருந்துவிடாமல் என்னையும் தன் மூத்தமகளாய்
(மாமாவிற்கு 2 பெண் குழந்தைகள்) நினைத்து
பாசம் காட்டியதை என்னவென்று சொல்வது.
காட்பரீஸ் சாக்லேட் விளம்பரம் ஒன்று
வரும். அது வந்தால் உடனே.”...
இங்க பாரு உன்னோட ஃப்வரிட்” என்பதிலாகட்டும்,
நான் அல்சர் வந்து அவதி பட்ட பொழுது
தான் கண்ணீர் சிந்தியதிலாகட்டும் இவர் மாமாவா?
அப்பாவா? என குழம்பியிருக்கிறேன்.
இப்போது ஒவ்வொரு தந்தையர்
தினத்திற்கும் நான் மறக்காமல் போன் செய்து
வாழ்த்துச் சொல்லும் இன்னொரு தந்தை
என் பெரிய மாமா.
தனது திருமணத்தின் போது மாமா
ரொம்ப கண்டீஷன் போட்டார்.
1. மாப்பிள்ளை அழைப்பு ஊர்கோலம்
கிடையாது.
2. பெண்ணிற்கு தங்கள் விருப்பம் போல்
சீர் செய்யலாம். நாங்கள் ஏதும் கேட்க
மாட்டோம்.வரதட்சணை கிடையாது.
3. எனக்காக ஒரு தியாகம் மட்டும்
மணமகள் செய்யவேண்டும். அது
திருமணத்தின் போதும், அதற்குப்பிறகும்
பட்டுப்புடவை உடுத்தக் கூடாது.
மாமாவின் இதே கண்டீஷன்களில்
2,3 மட்டும் நானும் என் திருமணத்தின்
போது போட்டேன். அப்பா திட்ட,
மாமாதான் சப்போர்ட் செய்தார்.
அயித்தானும் வரதட்சினை வேண்டாம்
எனும் கொள்கையோடு இருக்க,
நான் பட்டுப்புடவை கட்ட மாட்டேன்
என்றதற்கு ஒத்துக்கொண்டார்.
எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை
பார்க்கும் பொழ்து இந்த இரு பாசக்கார தகப்பன்களுக்குள்
பெரிய சண்டையே வந்தது!!!! (அதைப் பற்றி
அப்புறமா சொல்கிறேன்)
அடுத்த பதிவு ஒரு 85 வயது இளைஞரைப்
பற்றியது
Tuesday, January 20, 2009
என் உலகத்தில் இவர்கள்....
பிரபல பெண்கள் இதழில் அடிக்கடி படிக்கும் பகுதி
“என் வாழ்வில் பெண்கள்”. பிரபல மான ஆண்கள்
தங்களின் வாழ்வில் மிகவும் மதிக்கும், நேசிக்கும்
பெண்களைப் பற்றி கூறியிருப்பார்கள்.
பெருமையாக இருக்கும்.
யோசித்து பார்த்தால் பெண்களின் வாழ்விலும்
ஆண்களின் பங்கும் அவசியாமன ஒன்று.
தந்தை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா,
பெரியப்பா என மிகவும் பிடித்த ஆண்கள்
இரு்ப்பார்கள். தாலிக்கொடி தந்த உறவும்,
தொப்புள் கொடி தந்த உறவும் மறக்க முடியாத
உறவுகள்.
ரீஜண்டா என் தங்கை சொன்ன கமெண்ட்
இங்கு பொருந்தும்.
“ஜீன்ஸ் போட்டவங்க எல்லாம் கெட்டவங்க
இல்லை! சுடிதார் போட்டவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்லை”!! :)))
பெண்கள் மட்டும்தான் நல்லவர்கள்,
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள்னு
சொல்லிட முடியாது. ரோல்மாடலாக,
மிகவும் நேசித்த, ஆண்கள் நம்மைச்சுற்றியும்
உண்டு.
என் உலகில் ஆண்கள், இந்த வரிசையில்
சிலரை அடுத்த பதிவுகளில்
நான் அறிமுகப்படுத்த போகிறேன்.
முதல் அறிமுகமாக என் உலகத்தின்
முதல் ஆண்மகன்.
ஆம் என் அப்பா திரு. ரமணி அவர்கள்.
அப்பா கற்றுத் தந்தவை தான் இன்று என்னை
வழி நடத்திச் செல்கின்றன.
புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியில்
எழுத்தராக தன் வாழ்க்கையை துவங்கி
மேனேஜராக ஓய்வு பெற்றவர்.
கண்டிப்புக்கு பேர் போனவர். ராசி சிம்மமானதால்
இவர் ஒரு நடமாடும் சிம்மம்.
அப்பா பத்திய என் கொசுவத்திக்கு இங்கே.
கண்டிப்புன்னா சும்மா உங்க கண்டிப்பு எங்க
கண்டிப்பு இல்லை.
இந்தப் பதிவு அப்பாவால் நான் கற்றுக்கொண்டதெப்படி?
என்பதை சொல்லும்.
இதுவே 4 பதிவா வந்துச்சுன்னா பாருங்க.
இரண்டு
மூன்று,
நான்கு
ஒவ்வொரு பெண்ணிற்கு தன் தந்தைதான்
ரோல் மாடல். தன் அப்பா போன்ற கணவர்தான்
வேண்டுமென்று கூட நினைப்பார்கள்.
நானும் அப்படித்தான்.(அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) )
பெண் பிள்ளைகளுக்கே அப்பா மேல்தான்
பாசம் என்பதால் மட்டும் சொல்லவில்லை
அப்பாவின் வளர்ப்பு கற்றுத்தந்தவை ஏராளம்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசாங்கத்தால்
பட்ஜட் தாக்கல் செய்யப்படும். அன்று
அப்பா டீவி முன் ஆஜர். நானும் அங்கே
இருக்க வேண்டும்!!!(அப்போது எனக்கு வயது
13 அல்லது 14 இருக்கலாம்) இதெல்லாம் எனக்கெதுக்குப்பா”!!
என்றால், ”இது எதுக்கா? அது சரி!!
நாட்டோட பட்ஜாட்டால நம்ம வாழ்க்கை
பட்ஜட்டுக்கும் எம்புட்டு பாதிப்பு வரும்னு
தெரிஞ்சிக்கலாம். அங்க ரயில்வே பட்ஜட்டில்
டிக்கெட் வெல ஏத்தினாங்கன்னு வைய்யி
நம்மளுக்கு பாதிக்கும்ல???” என் கேட்பார்.
இப்போது நான் வீட்டு பட்ஜட் போடுவதில்
எக்ஸ்பர்டாகி இருக்கிறேன் என்றால் அது
அப்பா அன்று கற்று கொடுத்தால்தானே!
10 வயதாக இருக்கும்பொழுது, தினமும்
காக்க! காக்க! என்று ஏதோ ஸ்லோகம்
தினமும் சொல்கிறாரே ”!என்று அவரை
ஆச்சரியப்படுத்தவேண்டுமென்று அப்பாவுக்கு
தெரியாமல் நானே படித்து மனப்பாடம் செய்து
அப்பாவிடம் சொல்லிக்காட்ட சந்தோஷமாகி
கவசத்தின் அருமை பெருமையைச் சொன்னார்.
அப்படியே மனதில் ஏற்று இன்றளவும் கந்தனின்
காலைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவனுக்கு
வேதனை இல்லை என்பார்கள். மகள் வாழ்வு
வேதனை இல்லாமல் இருக்க அழகாக
(தானே ஒரு உதாரணமாக இருந்து)
பக்தியை போதித்த நல்ல தந்தை
எனக்குக் கிடைத்தது ஆண்டவனருள்.
அப்பாவைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம்.
முடிவே இல்லை. சூரியவம்சம் படத்தில்
சரத்குமார் ஒரு வசனம் சொல்வார்.
அது சத்தியமான உண்மை.
“அப்பா திட்டுகிறார் என்று மனது
வருத்தப்படாமல் தன் நல்லதிற்குத்தான்
சொல்கிறார்” என்று உணர்ந்தால் பிள்ளைகள்
வாழ்வு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???
(எனி கெஸ்??? :)))) )
“என் வாழ்வில் பெண்கள்”. பிரபல மான ஆண்கள்
தங்களின் வாழ்வில் மிகவும் மதிக்கும், நேசிக்கும்
பெண்களைப் பற்றி கூறியிருப்பார்கள்.
பெருமையாக இருக்கும்.
யோசித்து பார்த்தால் பெண்களின் வாழ்விலும்
ஆண்களின் பங்கும் அவசியாமன ஒன்று.
தந்தை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா,
பெரியப்பா என மிகவும் பிடித்த ஆண்கள்
இரு்ப்பார்கள். தாலிக்கொடி தந்த உறவும்,
தொப்புள் கொடி தந்த உறவும் மறக்க முடியாத
உறவுகள்.
ரீஜண்டா என் தங்கை சொன்ன கமெண்ட்
இங்கு பொருந்தும்.
“ஜீன்ஸ் போட்டவங்க எல்லாம் கெட்டவங்க
இல்லை! சுடிதார் போட்டவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்லை”!! :)))
பெண்கள் மட்டும்தான் நல்லவர்கள்,
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள்னு
சொல்லிட முடியாது. ரோல்மாடலாக,
மிகவும் நேசித்த, ஆண்கள் நம்மைச்சுற்றியும்
உண்டு.
என் உலகில் ஆண்கள், இந்த வரிசையில்
சிலரை அடுத்த பதிவுகளில்
நான் அறிமுகப்படுத்த போகிறேன்.
முதல் அறிமுகமாக என் உலகத்தின்
முதல் ஆண்மகன்.
ஆம் என் அப்பா திரு. ரமணி அவர்கள்.
அப்பா கற்றுத் தந்தவை தான் இன்று என்னை
வழி நடத்திச் செல்கின்றன.
புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியில்
எழுத்தராக தன் வாழ்க்கையை துவங்கி
மேனேஜராக ஓய்வு பெற்றவர்.
கண்டிப்புக்கு பேர் போனவர். ராசி சிம்மமானதால்
இவர் ஒரு நடமாடும் சிம்மம்.
அப்பா பத்திய என் கொசுவத்திக்கு இங்கே.
கண்டிப்புன்னா சும்மா உங்க கண்டிப்பு எங்க
கண்டிப்பு இல்லை.
இந்தப் பதிவு அப்பாவால் நான் கற்றுக்கொண்டதெப்படி?
என்பதை சொல்லும்.
இதுவே 4 பதிவா வந்துச்சுன்னா பாருங்க.
இரண்டு
மூன்று,
நான்கு
ஒவ்வொரு பெண்ணிற்கு தன் தந்தைதான்
ரோல் மாடல். தன் அப்பா போன்ற கணவர்தான்
வேண்டுமென்று கூட நினைப்பார்கள்.
நானும் அப்படித்தான்.(அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) )
பெண் பிள்ளைகளுக்கே அப்பா மேல்தான்
பாசம் என்பதால் மட்டும் சொல்லவில்லை
அப்பாவின் வளர்ப்பு கற்றுத்தந்தவை ஏராளம்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசாங்கத்தால்
பட்ஜட் தாக்கல் செய்யப்படும். அன்று
அப்பா டீவி முன் ஆஜர். நானும் அங்கே
இருக்க வேண்டும்!!!(அப்போது எனக்கு வயது
13 அல்லது 14 இருக்கலாம்) இதெல்லாம் எனக்கெதுக்குப்பா”!!
என்றால், ”இது எதுக்கா? அது சரி!!
நாட்டோட பட்ஜாட்டால நம்ம வாழ்க்கை
பட்ஜட்டுக்கும் எம்புட்டு பாதிப்பு வரும்னு
தெரிஞ்சிக்கலாம். அங்க ரயில்வே பட்ஜட்டில்
டிக்கெட் வெல ஏத்தினாங்கன்னு வைய்யி
நம்மளுக்கு பாதிக்கும்ல???” என் கேட்பார்.
இப்போது நான் வீட்டு பட்ஜட் போடுவதில்
எக்ஸ்பர்டாகி இருக்கிறேன் என்றால் அது
அப்பா அன்று கற்று கொடுத்தால்தானே!
10 வயதாக இருக்கும்பொழுது, தினமும்
காக்க! காக்க! என்று ஏதோ ஸ்லோகம்
தினமும் சொல்கிறாரே ”!என்று அவரை
ஆச்சரியப்படுத்தவேண்டுமென்று அப்பாவுக்கு
தெரியாமல் நானே படித்து மனப்பாடம் செய்து
அப்பாவிடம் சொல்லிக்காட்ட சந்தோஷமாகி
கவசத்தின் அருமை பெருமையைச் சொன்னார்.
அப்படியே மனதில் ஏற்று இன்றளவும் கந்தனின்
காலைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவனுக்கு
வேதனை இல்லை என்பார்கள். மகள் வாழ்வு
வேதனை இல்லாமல் இருக்க அழகாக
(தானே ஒரு உதாரணமாக இருந்து)
பக்தியை போதித்த நல்ல தந்தை
எனக்குக் கிடைத்தது ஆண்டவனருள்.
அப்பாவைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம்.
முடிவே இல்லை. சூரியவம்சம் படத்தில்
சரத்குமார் ஒரு வசனம் சொல்வார்.
அது சத்தியமான உண்மை.
“அப்பா திட்டுகிறார் என்று மனது
வருத்தப்படாமல் தன் நல்லதிற்குத்தான்
சொல்கிறார்” என்று உணர்ந்தால் பிள்ளைகள்
வாழ்வு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???
(எனி கெஸ்??? :)))) )
Subscribe to:
Posts (Atom)