நடந்து போய்க்கிட்டு இருந்தேன். அவங்களுக்கு ஷூ வாங்கத்தான்.
ரொம்ப டயர்டா இருந்துச்சு. அதோட கால் வலி வேற.
10 நாளா கால் எப்ப பிசகினிச்சுன்னு தெரியாமலேயே
கணுக்கால்கள் இரண்டுலயும் வலி. பத்தாததுக்கு
குதிங்கால் வலியும் சேர்ந்துக்குச்சு. எங்க அவ்வா
ஒரு டயலாக் சொல்வாங்க. “அழுதழுது பெத்தாலும்
பிள்ளை அவதானே பெறணும்னு” அதென்னவோ எனக்கு
எப்பவுமே அப்படித்தான். வலியோ என்ன கொடுமையோ
என் வேலையை யார் தலையிலையும் கட்ட முடியாது!:(
As I am suffering from severe leg pain i need 3 days
rest. kindly grant me the same and treat my absence
as leave அப்படின்னு ஆபீஸ்ல வேலை செஞ்சா லெட்டர்
எழுதி கொடுக்கலாம். நான் லெட்டர் எழுதி யார் கிட்ட
கொடுக்க? கொடுத்தாலும் நமக்கேது ஓய்வுன்னு ஆஷிஷ்
அம்ருதாகிட்ட பேசிகிட்டே நடந்துகிட்டே இருந்தேன்.
நீ லெட்டர் எல்லாம் எழுத வேண்டாம்மா! எங்ககிட்ட
சொன்னா போதும் நாங்க பாத்துப்போம் - இது ஆஷிஷ்.
உங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சே, நீங்க இப்ப பிசி கண்ணான்னு
சொல்ல ஆமாம்லன்னு அம்ருதா. அப்பா கிட்ட சொல்வோம்
அப்படின்னு சொன்னாங்க. அவர் கிட்ட சொல்லலாம் பாவம்
அவரு என்ன செய்வாரு? வேலையோ வேலைன்னு அவர்
சுத்திகிட்டு இருக்காரு.
நீ சமைக்க வேணாம்னு வேணாம் சொல்லலாம். சாப்பாடு
வெளியில் பாத்துக்கலாம். ஆனா இந்த இஸ்திரி, வேலைக்காரங்க
டும்மா அடிக்கறது, போன் கால்ஸ், கொரியர் இதுக்கெல்லாம்
எந்திரிச்சு வந்துதானே ஆகணும்!!. வெறுத்தே போச்சு.
எல்லா கொடுமையும் அந்த வலி இருக்கும்போதுதான் வரணுமான்னு
செம கோபம் வந்து என்ன செய்ய.
எங்க அம்மம்மா சரியாத்தான் சொன்னாங்க. ஆபீஸ் வேலைக்கு
கூட 58 வயசுல ரிட்டய்ர்மெண்ட் கிடைக்கும். ஆனா வீட்டுல
வேலைக்கு ரிட்டயர்மெண்ட், லீவு எல்லாம் கிடையாதுன்னு.
அம்மம்மா வாயில சக்கரை தான் போடணும்.
அம்மம்மா ஞாபகம் ஜாஸ்தியாகி பசங்க கிட்ட நேத்து
”நான் போய் ஒரு வாரம் எங்க அம்மம்மா கிட்ட இருந்துட்டு
வர்றேன்ன்னு” சொன்னேன். தாரளமா போம்மா, கூடவே
நாங்களும் வர்றோம்!!! அப்படின்னு இரண்டு பேரும் கோரஸா.
இதுக்கு நான் எதுக்கு அங்க போகணும்.:)
சின்ன வயசுல எங்க அப்பா சும்மாநானாச்சுக்கும் நான் வீட்ட
விட்டு ஓடிப்போறேன், உங்க தொல்லை தாங்கலைன்னு சொல்வார்.
“உடனே நான் அப்பா நீங்க இல்லாம எனக்கு ஜுரம் வந்திடும்
நானும் உங்க கூட வர்றேன் அப்படின்னு சொல்ல, தம்பி,
அம்மாவும் கூட வர்றதா சொல்வோம்” உங்க கிட்ட இருந்து
தப்பிக்கத்தான் நான் வீட்டை விட்டு போறேன்னு சொல்றேன்,
நீங்களும் கூட வர்றதா இருந்தா நான் ஏன் ஓடிப்போகணும்னு”
வீட்டுக்குள்ள வந்து உக்காந்திருவாரு. :)) இப்ப என் கதையும்
அப்படித்தான் இருக்கு.
ஹோம் மேக்கர்கள் எல்லோருக்கும் இந்த நிலைதான்.
ஆனா அசால்டா வீட்டுல இருக்கறவங்களுக்கு என்ன வேலை?
எப்ப பாரு டீவி பாத்துகிட்டு, தூங்கிகிட்டு இருப்பாங்கன்னு
சொல்ற கூட்டமும் இருக்கத்தான் செய்யுது.
கொஞ்சம் யோசிங்க பாஸ். உடம்பு சரியில்லாட்டியும் லீவு
லெட்டர் கொடுத்தோ, கொடுக்காமையோ பங்க் அடிச்சிட்டு
ரெஸ்ட் எடுக்க கூடிய வேலை இல்லை ஹோம் மேக்கர்.
ஹவுஸ் வொய்ஃபா இருப்பது ஈசி இல்லை.