Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Sunday, February 26, 2012

நன்றி... நன்றி

எல்லோரும் நல்லா இருக்கீகளா??? ரொம்ப நாளாச்சு பேசி.
சென்னைக்கு போய் வந்தாலே இப்படித்தான் ஆகுது எனக்கு.
ஒரு திருமணத்திற்காக சென்னை ட்ரிப் அடிக்க வேண்டி இருந்தது.
ஊருக்கு திரும்பும் பொழுது ட்ரையினில் இருந்தே ஜுரம் ஆரம்பம்.
வைரல் ஃபீவர். என்னோடு ஹைதைக்கு வந்த அம்மா, அப்பாவுக்கும்
ஜுரம். அம்மா, அப்பா ட்ரீட்மெண்ட்ற்காக ஹைதை வந்திருக்கிறார்கள்.
ஜுரம் சரியாகி அதன் பிறகு அவர்களை மருத்துவத்திற்கு அழைத்து
சென்றேன். இதோ நாளை அவர்கள் கிளம்புகிறார்கள்.

ஆஷிஷ் அண்ணாவுக்கு மார்ச் 2 முதல் தேர்வு ஆரம்பம். அம்ருதம்மாவுக்கும்
அதே நாளில் துவங்குகிறது. இதனால்தான் பதிவு பக்கம் வரமுடியாமல்
போய்விட்டது.

நண்பர் வேங்கடஸ்ரீநிவாசன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.
மிக்க நன்றி சகோ.

எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்ல வேண்டுமா??!!! சரி
சொல்றேன் கேட்டுக்கோங்க.

1. பாட்டு: எப்போதும் பாடல் கேட்க ஆசை. கானக்கந்தர்வனின்
குரலில் பாடல்கள் என்றால் கூடுதல் சந்தோஷம்.

2. குழந்தைகளுக்கு இனி விடுமுறை. ஆனந்தமாய் அவர்களுடன்
அளவளாவும் அந்த இனிமையான தருணங்கள் ரொம்ப இஷ்டம்.
மீ த வெயிட்டிங் ஃபார் த ஹாலிடேஸ் :))

3. டீவி விளம்பரங்களாகட்டும், மருத்துவமனை, தியேட்டர்
போன்ற இடங்களில் ஆகட்டும் பச்சிளம் குழந்தைகளை
பார்க்க ரொம்ப பிடிக்கும். அந்தக்குழந்தைகளின் ஒவ்வொரு
செய்கையும் ஒரு ஆனந்தம்.

4. நட்புக்களுடன் அளவளாவ ஆசை.

5. பயணம் தரும் சுகமே சுகம்.

6. படிப்பது. புத்தகம், இணையம் என எங்கே படிக்க வாய்ப்பிருக்கிறதோ
அங்கே நான் தொலைந்து போவேன் :)

7.

இந்த விருதினை 5 பேருடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.



துளசி டீச்சர்: இந்த விருது கனகச்சிதமாக பொருந்துவது இவருக்கு
என்பதில் சந்தேகமே இல்லை.

அமைதிச்சாரல்: கேமிரா, கைவண்ணம், கதை, கவிதைன்னு கலக்கறாங்க.

ராமலக்‌ஷ்மி: இவங்க கேமிரா பார்வைக்கு, கவிதைக்கு நான் அடிமை.

தீராத விளையாட்டுப்பிள்ளை ஆர்வீஎஸ். இவரது நகைச்சுவை பதிவுகள்
மிக அருமை.

என் இனிய இல்லம் சிநேகிதி. கைவேலைப்பாடுகள் பதிவுகள் ரொம்ப அருமை.

விருது பெற்று பகிர்வதில் மகிழ்ச்சி அடையும் இந்த வேளையில்
இன்னொரு சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
விகடன் வலையோசையில் எனது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர் அப்பாஜி பீடிஎஃப் அனுப்பியிருந்தார். ஹுசைனம்மா மடல்
அனுப்பியிருந்தார். இலங்கையிலிருந்து சுபாஷினியும் மடல் அனுப்பி
வாழ்த்து சொல்லியிருந்தார். நான் இன்னும் புத்தகம் பார்க்கவில்லை.
அப்பாஜி அனுப்பியிருந்த பீடிஎஃப்தான் பார்த்தேன்.

விகடனுக்கும் நண்பர்களுக்கும் தம்பி அப்துல்லாவுக்கும் மிக்க நன்றி
















Monday, June 14, 2010

வலைப்பதிவர் தின வாழ்த்துக்களும் விருது வழங்கலும்

தோழி அமைதிச்சாரல் எனக்கு இந்த விருதை
கொடுத்திருக்காங்க. வைரம். வைரம் வாங்குவதுன்னாலே
எனக்கு ஏனோ பயம். அதனால இத்தனை நாள்
அயித்தான் பர்ஸ் தப்பிச்சிச்சு. :))

அதனால தோழி கொடுத்திருப்பதுதான் என்னோட
முதல் வைரம். ரொம்ப நன்றிப்பா. இத்தனை நாளா
இதுக்கு பதிவு போட தள்ளிபோட்டுகிட்டே இருந்தேன்.
இன்னைக்கு போடலாம்னு முடிவு செஞ்சேன். அதுவும்
நல்லதுக்குத்தான். இன்னைக்கு 14.6 வலைப்பதிவர்
தினமாம். சுவரொட்டி பாத்து தெரிஞ்சுகிட்டேன்.

நட்புக்கள், உறவுகள், புதிதாய் வந்தவர்கள் என பரந்து விரிந்திருக்கும்
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த நந்நாளில்
என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கறேன்.

வைரத்தை வாங்கி நான் மட்டும் வெச்சுகிட்டா
சரி இல்லை. பகிர்ந்துக்க வேண்டும்.



அப்பாவி தங்கமணி

தம்பி அப்துல்லா

ஹுசைனம்மா

அனந்யா மஹாதேவன்

கோமா

இவங்க எல்லோருக்கும் வைரத்தை பரிசளிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.







Monday, April 12, 2010

ராஜா ஆரு ராணி ஆரு!!!!

சகோதரி ஸாதிகா இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்காங்க.
சந்தோஷமா இருக்கு. நான் விரும்பும் சிலருக்கு
ராஜா ராணி விருது கொடுக்க விரும்புகிறேன்.

எப்பவும் லேடீஸ் ஃபர்ஸ்டுதானா. ஒரு மாறுதலுக்கு
இந்த தடவை ஜென்ஸ் ஃபர்ஸ்டு.




சர்வே எடுப்பதே என் தொழில்னு இருக்கும் சர்வேசனுக்கு
இந்த விருது.( பொண்ணு பாக்கப்போனதைப்பத்தி
இன்னும் பதிவு வரலைன்னு ஞாபகம் இருக்கட்டும்)

மறந்து போகக்கூடாத பாடல்களை அவ்வப்போது
ஞாபகப்படுத்தும் எங்கள் பாஸ் கானா பிரபாவுக்கு
இந்த விருது.

சமீபத்துல நான் படிக்க ஆரம்பிச்சு விரும்பி படிக்கற
(சில சமயம் படிச்சிட்டு பின்னூட்டம் போடாம
வர்றதும் உண்டு) பதிவரில் சேட்டைத் தம்பி.
இந்த ஒரு போஸ்டுக்காகவே இந்த விருது. என் ராசி பலன்
எப்பன்னு காத்துகிட்டு இருக்கேன். பாப்போம் சரியா
சொல்றீங்களான்னு.





நானானி. இவங்க ப்ளாக் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா
எப்படியெல்லாம் சுவாரசியமா பதிவு போடலாம்னு
ஐடியா கிடைக்கும். தான் நனையாமல் கார் மட்டும்
குளிச்ச போஸ்ட் படிச்சிருக்கீங்களா?? இல்லையா.
சீக்கிரம் போய் படிங்க. நானானிக்கு இந்த விருது.

வலையுலக ஆசிரியை துளசி டீச்சருக்கு
இந்த விருது.

பக்கடோ சுத்தி வந்த காகிதத்தையும் படிக்கும்
என்ன மாதிரி ஆளுங்க இருப்பாங்கன்னு நல்லாத்
தெரியும் போல விதூஷுக்கு. தன் வலைப்பூவுக்கு
அந்தப் பெயர்தான் வெச்சிருக்காங்க. சுவாரசியமாவும்
இருக்கும். அவங்களுக்கு இந்த ராணி விருது.

கிறுக்குவதா சொல்லிக்கிட்டு கலக்கல் போஸ்டுகள்
போடும் வித்யாவுக்கு இந்த விருது.

விருதுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

Thursday, August 06, 2009

நன்றி! நன்றி

அமுதா இந்த விருதை முன்பே கொடுத்திருந்தாங்க.
உடனடியா பதிவு போட முடியலை.

இப்ப அருணாவும் அன்புடன் பூங்கொத்தோடு
விருது கொடுத்திட்டாங்க.

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




நான் விருதை வழங்க நினைப்பவர்கள் லிஸ்ட் இதோ:

சென்ஷி



வகுப்பறை

பொலம்பல்கள்



மிஸஸ்.டவுட்

தம்பி கார்க்கி


டிஸ்கி: கைவலி கொஞ்சம் குறைஞ்சிருப்பதாலும்,
போர்டு மாட்டாட்டி வேற யாரும் கொடுத்திடுவாங்க
என்பதாலும் இந்தப் பதிவு போட்டேன். திட்டாதீங்க.

:)))

Monday, July 20, 2009

நட்புக்கு மரியாதை..

நட்பு இந்த சொல் எனக்குள் உண்டாக்கும் அதிர்வு
சொல்லில் அடங்காது.

இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு என் பதிவு

நண்பர் ரங்கா எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறார். நன்றி ரங்கா. மிக்க மகிழ்ச்சியாக
இருக்கிறது.




வலையுலகில் எனக்கு நிறைய்ய உறவுகள்.
மிகச் சிறந்த நட்பும் உண்டு. இதில் எனக்கு
மிக்கச் சந்தோஷம்.

ரங்கா இந்த விருதை ஏற்படுத்த காரணமாக
கூறியிருக்கும் காரணங்கள் மிக்க அருமை:

முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.

இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.

மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.

இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

1.முதல் சந்திப்பிலிருந்தே தோழி என்றழைத்து
பேசியவர் ஆதி(தாமிரான்னு சொன்னா புரியும்)இவருக்கு என் நட்பு விருது.


2. கார்பரேட் கம்பர் நர்சிம். சொல்லுங்க ஃப்ரெண்ட்
என்றழைத்து பேசும் தொனியிலேயே நட்பு உணரப்படும்.
இந்த நண்பருக்கும் என் விருது.

3. எனது 50ஆவது பதிவிற்கு வந்த நண்பர் ஹரி.
இன்றளவும் சாட்டிங் உண்டு. யூ டுய்பில் தான் ரசித்தது,
என நிறைய்ய பகிர்தல்கள். அவரது வலைப்பூ.


4. கயல்விழி முத்துலெட்சுமி இவரைப்பற்றி தெரியாதவங்க
உண்டா?? அவங்களுக்கு தோழியின் அன்புப் பரிசு இந்த விருது.

5. ஹைதையில் இருந்து கொண்டு முத்துச்சரத்துக்கு
விருது கொடுக்காவிடில் எப்படி?? முத்துச்சரம் தொடுக்கும்
ராமலக்‌ஷ்மியும் என் தோழி என்று சொல்லிக்கொள்வதில்
பெருமை.

6. ஊஞ்சல்னு சொன்னதும் இவங்க பெயர்தான் ஞாபகத்துக்கு
வரும். யெஸ் தாரணிப்பிரியாவுக்கு இந்த விருது.

7. அன்புடன் அருணா உங்களுக்கும் இந்த விருது.
பொறுப்பான ஆசிரியை வேலைக்கிடையே அழகான
கவிதைகள் சிம்பிளி சூப்பர்ப்.

8.மனதில் உறுதி வேண்டும் எஸ்,பி.பீ போல
மருத்துவருக்குள் இம்புட்டு திறமையா என நான்
வியக்கும் நண்பர் டாக்டர் தேவா. பின்ன என்ன?
இன்றைய அவரது பதிவில் இருக்கும் பென்சில்
ஸ்கெட்சிங் அவரே போட்டதுங்க.


9.என் வானம் அமுதா நல்ல தோழின்னு
சொல்வதில் சந்தோஷம். பாத்தா ஹாய் (சாட்டிங்கில்)
சொல்லாம இருக்க மாட்டாங்க.


10.சமீபத்தில் அறிமுகமாகிய நண்பர்.
வண்ணத்துப்பூச்சியாருக்கு என் விருது.


இவ்வளவுதானா என் நட்பு வட்டம் என்று நினைக்காதீங்க.
மிகப் பெரிய வட்டம்தான். இந்த விருது பகிரப்படும்பொழுது
வழங்க ஆள் வேணுமே!! அதான் பத்து பேரோடு
நிறுத்திக்கொண்டேன்.


இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
அப்படின்னு ரங்கா சொல்லியிருக்காரு.

நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பருக்கு
விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்.

Friday, February 27, 2009

ஹை சந்தோஷமா இருக்கு!!!

தமிழ்மண விருதுகள் முதற்கட்ட முடிவுகள்
அறிவிச்சிருக்காங்க.

நம்ம நண்பர்கள் பலரின் பதிவுகள் இருக்கு.

அனைவருக்கும் என் மன்மார்ந்த பாராட்டுக்கள்.

தமிழ்மண விருது


பிரிவு: அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
இந்தப் பகுதியில் என் மாண்டிசோரி முறைக்கல்வி 6ஆவது
இடத்தில் இருக்கு.


நகைச்சுவை, கார்ட்டூன் பகுதியிலும்
என் பொண்ணு பார்க்கப்போகும்பொழுது பதிவு
9ஆவது இடத்தில் இருக்கு.



வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கு இதயம் கனிந்த
நன்றிகள்.

Wednesday, February 25, 2009

வண்ணத்துப்பூச்சி விருது


டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்!!!!

அப்படின்னு லிங்க் கொடுத்து நாகைசிவா பின்னூட்டம்
போட்டிருந்தாரு!!! அவ்வ்வ்வ்வ்வ்

இவங்க வரிசையில் நானா?? ஆஹா அப்படின்னு
அடிச்சு பிடிச்சு ஓடிபோய் பார்த்தா எனக்கு கூல்
ப்ளாகுக்கான விருது
கொடுத்திருக்காரு. மனமார்ந்த
நன்றிகள் சிவா.



புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.

இந்த வரிகள் எனக்கு
நல்ல விஷயங்களை இன்னமும் எழுதணும்னு
ஊக்கத்தை கொடுக்குது. மறுபடியும் என் நன்றிகள் சிவா.


சரி நான் விருது கொடுக்க விரும்பும் நபர்கள்

1. ராமலக்‌ஷ்மி -
டைமிங்கான கவிதை. அழகான வார்த்தைகள். இவருக்கு நான்
ஏற்கனவே ”வலையுலகின் கவிக்குயில்” அப்படின்னு பட்டம்
கொடுத்திருக்கேன். இந்த வண்ணத்துப்பூச்சி விருதையும் கொடுப்பதில்
மகிழ்ச்சி. ஜெய்ஹோ கவிதை யூத்ஃபுல் விகடனில் வந்திருப்பதற்கும்
எனது பாராட்டுக்கள் ராமலக்‌ஷ்மி.


2. நட்புடன் ஜமால் - அனைத்து
வலைப்பூக்களிலும் மீ த பர்ஸ்டாக வந்து பின்னூட்டம் இடுபவர்.
தனது வலைப்பூவில் மிக அழகாக கற்பிப்பார். கற்போம் வாருங்கள்.
இதுதான் இவரது வலைப்பூ. அன்புத் தம்பிக்கு விருது கொடுப்பதில்
சந்தோஷம்.


3. தேன் கிண்ணம் :
1000 மாவது பாட்டை சீக்கிரம் பதிவிடபோகிறார்கள்.
இசையைத்தவிர நம்மை கூலாக வைக்க என்ன இருக்கிறது.
தேன் கிண்ணத்து தேனீக்களுக்கு கூல்ப்ளாக் வண்ணத்துப்பூச்சி விருது.


4.சுரேகா -
அஷ்டாவதானி. பல வேலைகளுக்கு இடையேயும் பல
நல்ல பதிவுகளைத் தரும் இவருக்கு கூல் ப்ளாக் விருது.


5. மங்களூர் சிவா
the only cololurful blog - வீக் எண்ட் ஜொள்ளு படங்கள்
வந்த (அது ஒரு காலம்!!!) ப்ளாக். அப்புறம் கவுஜை கவிதைகளா
வந்துச்சு. இப்ப அப்பப்போ பதிவெழுதும் அன்புத் தம்பி
சிவாவிற்கு கூல் ப்ளாக்
விருது.


//இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம//

அப்படின்னு நாகை சிவா சொல்லியிருந்தாரு. நான்
கொடுக்க நினைத்தவங்களுக்கு கொடுத்திருக்கேன்.
இதை அவர்கள் யாருக்கேனும் கொடுக்க நினைத்தால்
கொடுக்கலாம். இல்லையேல் விருது வழங்கும் விழாவை
முடிச்சுக்கலாம்.

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்


*************************************

இது எனது 350ஆவது பதிவு. :))