Wednesday, September 14, 2011

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்

இன்று என் அம்மம்மா, தாத்தா தங்களது 62ஆவது திருமண நாளைக்
கொண்டாடுகின்றனர்.
புதுகை சுப்பராமய்யர் பள்ளி வாத்தியார் சுந்துசார் என்று சொன்னால்
பலருக்கும் தெரியும். தாத்தாவிடம் பயின்றவர்கள் இன்று பல பெரிய
பொறுப்பான வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்ற கொசுவத்தியும்
உண்டு.

சுந்துசார்,ராஜலக்‌ஷ்மி தம்பதியருக்கு எங்கள் வணக்கங்களுடனான
திருமணநாள் வாழ்த்துக்கள்.


இன்று என் சித்தி உமாவிற்கும் திருமணநாள்.
சென்றமாதம் சித்தி ஹைதை வந்திருந்த பொழுது தன் நண்பிகளிடம்
சித்தியின் திருமணம் முடிந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்த
நேரத்தில் புதுகை பஸ்ஸ்டாண்டுக்கு அழுகையுடன் ஓடிவந்த என்னைப்
பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். சித்தியை விட்டு பிரிகிறோம்
(முன்பு மும்பையில் இருந்தாலும் சித்திக்கு விருப்பப்பட்டால் வர
இயலும். திருமணமாகிப்போனால் அப்படி வரமுடியாதே என வருத்தம்)
என்ற வருத்தம் அதிகமாகி பஸ்ஸ்டாண்டில் சித்தியை கட்டிக்கொண்டு
அப்படி ஒரு அழுகை.

இன்று சித்தி சித்தப்பா தங்களது 23ஆவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்.
வணக்கங்களுடன் எங்கள் அன்பு வாழ்த்துக்களும்.

இந்த மகிழ்வான நேரத்தில் இன்னுமொரு சந்தோஷமான செய்தியை
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அம்ருதம்மா
சென்றமாதம் Trinity college of London piano exam செய்துவிட்டு
மஹா டென்ஷனுடன் ரிசல்ட்டுக்காக காத்திருக்க, ரிசல்ட் வந்தே
விட்டது. அம்ருதம்மா DISTINCTION ல் பாஸ் செய்து இருக்கிறாள்.
அண்ணா,அப்பா, அம்மா அனைவரின் அன்பான பாராட்டுக்கள் அம்ருதா

KEEP UP THE GOOD WORK.


15 comments:

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துகள்!வாழ்த்துக்கள்!!

pudugaithendral said...

நன்றி ஸாதிகா :)

இரசிகை said...

vaazhthukal.....

ஆச்சி ஸ்ரீதர் said...

வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

ஒரே நாளில் மூன்று நல்ல விஷயங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்.அம்ருதாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்து.

Appaji said...

தாதா (....சார்..ன்னாலே பயம்...) + பாட்டிக்கு எனது பணிவான வணக்கங்களையும்....வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...
தங்களது மகளுக்கு...எனது பாராட்டுகள்...மேலும் வளர வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

அம்ருதாவுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

தாத்தா பாட்டிக்கும், சித்தி சித்தப்பாவுக்கும், எங்கள் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.

pudugaithendral said...

நன்றி ரசிகை

நன்றி திருமதி ஸ்ரீதர்

நன்றி சகோ

நன்றி அமுதா. அம்ருதாவுக்கு சொல்லிடறேன்.

pudugaithendral said...

எங்க குடும்பமே பள்ளிக்கூடத்துக்குன்னு நேர்ந்துவிட்ட குடும்பம் அப்பாஜி. புதுகையில் சொந்த ஸ்கூலே இருந்தது(100 வருஷ பாரம்பரியம் உள்ள ஸ்கூல் இப்ப கவர்ன்மெண்ட் கிட்ட இருக்கு):))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

கண்டிப்பா சொல்லிடறேன் கோவ2தில்லி. நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சுந்துசார்,ராஜலக்‌ஷ்மி தம்பதியருக்கு எங்கள் வணக்கங்களுடனான
திருமணநாள் வாழ்த்துக்கள்.

சித்தி சித்தப்பாவுக்கும், எங்கள் வணக்கங்களும், வாழ்த்துக்களும் ....

அம்ருதாவுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. எல்லாத்துக்கும் வாழ்த்துகள் தென்றல் :-)

மாதேவி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

wishes!