Total Pageviews

Thursday, December 31, 2009

சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை..

ஓடிவிட்டன பத்துவருடங்கள். பத்துவருடங்கள் முடிவு
என்பது ஒரு மைல்கல். இந்த பத்துவருடங்களில் நடந்தவைகளை
அசைபோட்டு பார்த்தீர்களா? எவ்வளவோ மாற்றங்கள்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
நம் அனைவரின் வாழ்விலும் நல்லதை விதைத்து,
நன்மையை வழங்கும் ஆண்டாக மலர எங்கள்
பிரார்த்தனைகள்.

நம்பிக்கை மிளிரும் இந்தப் பாடலை மனதில்
வைங்கள். சோகம் இனி இல்லை... வானமே எல்லை.




சோகமினியில்லை அட இனி வானமே எல்லை
தூரமினியில்லை அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானமிருந்தால் அட நல்லது
தகு திகு தகு திகு தகத தக ஹே!
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி!

உறவுகள் வேண்டாம் உலகமெங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரமிருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா?
வாழ்வோமே இதிலே பத்தியமா


உலகினை விற்று நிலவுலோகம் வாங்கலாம்
நிலவினை விற்று வானம் கொஞ்சம் வாங்கலாம்
கவலையை விற்று கவிதை நூல்கள் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை இருபது வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு!
வாழ்வோமே இதுவே உத்தரவு!




அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்

ஸ்ரீராம், கலா, ஆஷிஷ், அம்ருதா

Wednesday, December 30, 2009

சமயபுரத்தாளே சரணம்

அடுத்து நேராக சென்றது அருள்மிகு சமயபுரம்.

மாரியம்மன். கண்கண்ட தெய்வம்.
ஆயிரம் கண்ணுடையாள்.

அவ்வா உயிரோடு இருந்த வரை எங்களுக்கு ஏதும்
உடல்நிலை சரியில்லாமல் போனால் சாமிக்கு நேர்ந்து
கொண்டு பணம் முடித்து வைப்பார். வருடத்தில் ஒரு
தடவை கண்டிப்பாய் கூட்டி வந்து மாவிளக்கு போடுதல்
போன்ற பிரார்த்தனைகள் செய்வார். அதே பழக்கம்
நாங்களும் நேர்ந்து கொள்வதுண்டு. எப்போதும் போக
முடியுமோ அப்போது காணிக்கையை உண்டியலில்
செலுத்துவோம்.





கோவிலை நெருங்கிய நொடியிலிருந்து டென்ஷன் தான்.
இங்கே மட்டுமில்லை எங்கேயும் அதாவது முக்கியமாக
சுற்றுலா தலங்கள், புகழ்பெற்ற கோவில்களுக்கு போனால்
பிச்சைக்காரர்களின் ரோதனை தாங்கவே முடியவில்லை.
இவர்களை கட்டுப்படுத்த அரசு ஏதும் செய்யாதா?

பிச்சையிட விரும்பும் மனிதர்களிடம் வாங்கிக்கொண்டு,
மற்றவர்களை நிம்மதியாக இருக்க விட ஏற்பாடு செய்தால்
நல்லது. போக்கிரி தெலுங்கு படத்தில் பிரம்மானந்தத்தின்
பின்னாடியே அவர் எங்கு போனாலும் அவருடனுயே செல்லும்
பிச்சைக்காரர்கள் கூட்டம் போல பல மொழி பிச்சைக்காரர்களும்
இங்கே.

இவர்களுடன் போராடிக்கொண்டிருக்கும் பொழுதே வந்து
விடுகிறார்கள் கண்மலர், உருவாரம் விற்பவர்கள். வெள்ளி
மாதிரியான தகடில் ஆண் உருவம், பெண் உருவம்,
கண் மலர், உருண்டை, வீடு, கை, கால், இப்படி
செய்து வைத்திருப்பார்கள். கை வலி இருப்பவர்கள்
கை வாங்கிப்போடுகிறேன் என நேர்ந்து கொள்வார்கள்.

இவர்களுக்கும் ஒரு வரைமுறை செய்து ஒருவர்
பின்னாடியே 5 பேர் வருவதை தடுக்க ஏதாவது
நடவடிக்கையை அரசு எடுத்தாக வேண்டும்.

ஐயப்ப பக்தர்களின் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை
என்பதாலும் பக்தர்களின் கூட்டம். இந்த நிலையில்
பிச்சைக்காரர்கள் + விற்பவர்களின் டார்ச்சர்.

சரி கோபம் எனக்கு. இரு தரப்பினரையும் நன்கு
பிடிச்சு கத்திவிட்டேன். இன்னும் என் பின்னாடி
வந்தால் கை பிடித்து இழுத்துக்கொண்டு போய்
போலிசில் விட்டு விடுவேன் என்று மிரட்டியதும் தான்
பிச்சைக்கார கூட்டம் விட்டது.

உருவாரம் விற்பவர்கள் யாராவது ஒருவரிடம் நாம்
வாங்க முடியாது. ”நான் ரொம்ப நேரமா உங்க கூடயே
வந்துகிட்டு இருக்கேன், என் கிட்ட வாங்காம வேற
ஆளுகிட்ட வாங்கினா எப்படி”ன்னு சண்டைக்கு வருவாங்க.

உப்பு மிளகு போடும் பழக்கம் உண்டு. உடலில் எந்த
அரிப்பு, எரிச்சல் இல்லாமல் இருக்க போடுவார்கள்.
அரிப்பு அதிகமாக இருந்தால் அரியரிசி செய்து சாமிக்கு
படைப்பதாக வேண்டு, படைத்து அனைவருடனும்
பகிர்ந்துகொள்வதும் வழக்கம். உப்பு மிளகு மட்டும்
வாங்கிக்கொண்டோம்.கண்மலர், உருவாரம் வாங்கி
கொண்டு உப்பு, மிளகு கூட போட்டிருக்க மாட்டோம்.

இன்னொரு வியாபாரப் பெண் வந்து,” நீங்கள் அந்தப்
பையனிடம் வாங்கினீர்கள், காசை எல்லோரும்
பகிர்ந்து கொடுக்கச் சொல்லுங்கள்!!!”(54ரூவாயை
அத்தனை பேருக்கும் எப்படி பகிர்ந்து கொள்வார்கள்!!)
என்று பின்னாடியே வர வந்த கோபத்தில் அந்தப் பெண்ணின் கையை
பிடித்துக்கொண்டு வா,” போலிஸ் ஷ்டேஷன் போகலாம்,
உனக்கும் எனக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்!” என
சொல்ல கையை உதறிவிட்டு ஓடியே போனாள்.

ஆலயத்தில் சீட்டு கொடுப்பவர்,”இவங்களை இப்படித்தான்
டீல் செய்யணும்மா!!” என்று சொல்ல, ”கோவில் நிர்வாகம்
என்ன செய்யுதாம்!!”” என்று கேட்க பதிலே சொல்லாமல்
சீட்டு கிழித்து கொடுத்தார்.

அம்மனின் சந்நிதியை அடைந்த நொடியில் மனம்
வெல்லமாக கரைந்து விட்டது. புற்றில் அம்மன்குடி
இருப்பதாக ஐதீகம். அதனால் அபீஷேகம் எல்லாம்
உற்சவ விக்ரகத்துக்குத்தான்.

மேலும் விவரங்களுக்கு கோவிலின் தளம்.

திருவானைக்காவல், உறையூர், வயலூர் முருகன்
எல்லாம் போகும் இட லிஸ்டில் இருந்தாலும்
டயர்டாகிவிட்டதால் மதிய உணவு முடித்து கொஞ்சம்
ரெஸ்ட் எடுத்துக்கொண்டு புதுகைக்கு பயணமானோம்.









மேலே இருக்கும் புகைப்படங்கள் எந்த விமான நிலையம்னு
நினைக்கறீங்க. நமது தங்கத் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சி
சர்வதேச விமான நிலையம் புது கெட்டப்புல சூப்பரா இருக்குல்ல.

திருச்சி ஏற்போட்டும் மாறிடிச்சுப்பா
:)))))

Tuesday, December 29, 2009

திருச்சியில் ஒரு ரவுண்ட் அப்.

புதுகைக்கு போகும்போது வரும்போதும் திருச்சியை
தாண்டிதான் பயணம். ஆனால் ஒரு முறை கூட
பிள்ளைகளை ஊருக்குள் அழைத்துச் சென்றதே இல்லை.

நமக்கும் இந்த முறை உடல்நிலைக்குறைவால் அதிகம்
அலைய முடியாத நிலை. ஆனால் பிள்ளைகளையும்
புது இடத்துக்கு அழைத்து போகவேண்டும்!! எப்பூடி??
அப்படி யோசிச்சப்ப கிடைச்ச ஐடியாதான் திருச்சி ரவுண்ட் அப்.

நாங்க குளிச்சு முடிச்சு காத்திருந்தது அம்மையப்பனுக்காக.
அட எங்க அம்மா, அப்பாவுக்காக. புதுகையிலிருந்து
கார் எடுத்து வந்திட்டாங்க. ஆஷிஷுக்கு ரொம்ப பிடிச்ச
அம்பாசிடர் கார். :)) செம காட்டுல இருந்தாப்டி ஆஷிஷ்.

அம்மா, அப்பா நாங்க இருந்த ஹோட்டலுக்கு வந்தாங்க.
அங்கேயிருந்து நேரா சென்றது உச்சிப்பிள்ளையார் கோவில்.
அடிவாரத்துல மாணிக்க விநாயகரை தரிசிச்சுகிட்டு படியேற
ஆரம்பிச்சா...... படி போய்க்கினே இருக்கு.

இந்தக் கோவிலில் உச்சி பிள்ளையார் எம்புட்டு பிரசித்தமோ,
தாயுமானவ சுவாமியும் ரொம்ப பிரசித்தம். அதைப்பத்தி
ஏற்கனவே போட்ட பதிவு இங்க.

மொத்தம் 438 படிகள். அம்புட்டு தூரம் ஏற முடியாதுன்னு
அம்மாவும் அப்பாவும் கார்லேயே இருந்தாங்க. நாங்க மட்டும்
போனோம்.
மாணிக்க விநாயகரை தரிசிச்சு படியேற ஆரம்பிச்சோம்.
முன்னாடி ராம் மாமா திருச்சில இருந்தாங்க. சின்ன வயசுல லீவுக்கு
திருச்சிக்கு வருவேன். அப்ப மலையடிவாரக்கோவில்ல
கட்டியிருந்த யானைகிட்ட என்னை விட்டுவிடுவதா சொல்லி
குமார் மாமா பயப்படுத்துவாங்க. பசங்களுக்கு யானைன்னா
இஷ்டம். இப்பவும் யானை இருக்கும்னு
நினைச்சு போனேன். யானை கட்டியிருந்த இடம் காலியா
இருந்துச்சு. பழைய நினைவுகளை அசைபோட்டுகிட்டே
படியேறினேன்.

200 படி ஏறினப்புறம் நம்பவேமுடியாத அளவுக்கு பெரிய
பிராஹரத்துடன் கூடிய பெரிய லிங்கம். இவர்தான்
அருளிமிகு தாயுமானவ சுவாமி. அப்பனே அன்னையின்
உருவில் வந்த இடமாச்சே. எப்போதும் எல்லோருக்கும்
அருள் புரிப்பான்னு வேண்டிகிட்டேன்.

மட்டுவார்குழலம்மையையும் தரிசிச்சு மேலே படி ஏற
ஆரம்பிக்கும்பொழுதே திருச்சி நகரம் அழகா தெரியுது.

இந்த இடத்தை ஏறுவது தான் கொஞ்சம் கஷ்டம்.



குகைக்குள் இருக்கும் விநாயகரை தரிசனம் செஞ்சுகிட்டோம்.

திருச்சிராப்பள்ளிக்கு நிறைய்ய கதை இருக்கு.
அதை எழுத ஆரம்பிச்சா நிறைய்ய பதிவாகும்.
இங்க போனா படிச்சிக்கிடலாம்.


முழுமுதற்கடவுளை தரிசிச்சு முடிச்சு காலை உணவு
முடிச்சிட்டு நேரா ஓடினது ஸ்ரீரங்கரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்ய. ராப்பத்து, பகல்பத்துல பெரியவர் பிசியா
இருந்தாலும் ஹலோ சொல்லிட்டேன். தங்க கொலுசு போட்டிருக்கார்
பாருங்க ரங்கநாதர். ம்ம்ம்ம்



இந்தக்கோவிலில் ரங்கநாதருக்கு காலையில் ரொட்டியும், வெண்ணையும்
நிவேதனம் செய்வாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா??
காண்டினெண்டல் ப்ரேக்ஃபாஸ்டான்னு கேக்ககூடாது. தனக்காக
காதாலால் கசிந்துருகிய துலுக்கநாச்சாரியக்காக இப்படியாம்.
அந்தக் கதையை சமீபத்தில் புத்தகத்தில் படிச்சேன்(அவள்விகடனா,
ஆனந்த விகடனா, சக்தி விகடனா தெரியலை. டிசம்பர் மாச
புத்தகம் தான்)

வெளிப்ப்ராகாரத்தில் துலுக்க நாச்சியாருக்கென சந்நிதி இருக்கு.
5குழி 3வாசல் அப்படின்னு ஒரு இடம் கோவிலில் உண்டு.
5குழிக்குள் கையை வெச்சு பார்த்தால் 3 கோபுரங்கள் தெரியும்னு
சொல்வாங்க. இப்ப ஏதும் தெரியலை.

அங்கேயிருந்து நேராக குணசீலம் போனோம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு
வேண்டிகிட்டு அம்புட்டு தூரம் போக முடியாதவங்க குணசீலம்
வெங்கடாசலபதிக்கு செய்யலாம். ஆனா இவருக்கு நேர்ந்துகிட்ட
இங்க மாத்திரம் தான் பிரார்த்தனை செய்யலாம்.
இங்கே 12.30க்கு சங்க தீர்த்தம் முகத்தில் அடிப்பார்கள். மனநலம்
குன்றியவர்களுக்கும் நலம் கிடைக்கும் அப்படின்னு சொல்வாங்க.
இங்கே இறைவன் பேரு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி. லக்‌ஷ்மியை
இதயத்தில் வைத்த படி திரு உருவம்.



குணசீலம் தளத்திற்கு

அடுத்து செல்ல வேண்டிய இடமும் கோவில்தான். மணி 12 ஆகிடுச்சு.
கோவில் மூடிடாம இருக்கணுமேன்னு போன் போட்டு கேட்டோம்.
ஐயப்ப சாமி சீசன் + மார்கழி மாதம் என்பதால் கோவில் மூடுவதில்லைன்னாங்க.
ஆஹான்னு சந்தோஷப்பட்டுகிட்டு கிளம்பினோம்.

கோவில் தரிசனம் நல்லா நடந்தாலும் சில விஷயங்கள்
நெருடுது. எங்கே? என்ன நெருடல் எல்லாம் அடுத்த பதிவுல
வருதுல்ல.

Saturday, December 26, 2009

அயித்தானை கலாய்த்த பிள்ளைகள்!!!

சென்னைக்கு போகும் ஒவ்வொரு முறையும்
பிள்ளைகள் ”ஞாபகம் வருதே” பாட்டு பாடுவாங்க.
(அயித்தானுக்குத்தான். அவர்தான் மிஸ்டர்.மெட்ராஸாச்சே)

அதுவும் இந்த முறை காலை முதல் இரவு வரை
சென்னையில் டேராவென்றால் கேக்கவேண்டுமா.

கோடம்பாக்கத்தில் என் தோழி இருக்கிறார். அவரது
வீட்டிற்குச் சென்று பெட்டியை வைத்துவிட்டு
சுடச்சுட வெந்நீரில் குளித்து ரெடியாகி மாம்பலம்
கிளம்பியாச்சு. ரவுண்ட் அப் + கொஞ்சமாய் பர்சேசிங். :))

முடித்து 2 மணிக்கு வந்தால் தோழி மதிய உணவு
தயார் செஞ்சு வெச்சிருந்தாங்க. சாப்பிட்டுவிட்டு
அவர்களோடு பேசி, அளவளாவிகிட்டு இருந்து
5 மணி வாக்கில் அயித்தான் ஊருக்கு புறப்பட்டோம்.

என்னதிது? சென்னையை சேர்ந்தவர்னு சொல்லிட்டு
அவுக ஊருக்கு? அப்படின்னா என்ன அர்த்தம்னு
கேக்கறீகளா??? அயித்தான் ஊரு திருவல்லிக்கேணி.



பீச் ரோடு சும்மா டாலடிக்குது. கிரானைட் நடைபாதை,
ஸ்டீல் கம்பிகள்னு ஒரு மார்கமா இருந்துச்சு. அந்த
பாதையில் கார் நுழைஞ்சதுமே பசங்க,” அப்பாவுக்கு
இப்ப கொசுவத்தி சுத்தும்! சந்தோஷமா இருக்கும்னு”
சொல்லிகிட்டு ஞாபகம் வருதே பாடினாங்க.

அங்க ஒரு சொந்தக் காரவுக வூட்டுல கல்யாணம்
விசாரிக்கப்போனோம். அவுக வீட்டுல பேசி, காபி
சாப்பிட்டு கிளம்பும்போது பக்கத்துலேயே இருக்கற
பார்த்தசாரதியை பாக்காட்டி போனா எப்படின்னு?
அயித்தானை கேட்டேன். அதுவும் சரிதான்னு
கூட்டிகிட்டு போனாரு.

வைகுண்ட ஏகாதசிக்காக பூஜைகள் நடைபெறுவதால
திரைப்போட்டு மூடியிருக்கு. உற்சவர் தான் இருந்தார்.
ஹலோ சொல்லிட்டு பாத்தா மணி 8. 10.30க்கு தான்
ராக்போர்ட். நிறைய்ய நேரம் இருந்துச்சு.

சரி ராச்சாப்பாட்டையும் இங்கயே பாக்கலாம்னு
அயித்தான் சொன்னார். அதுக்கு முன்னாடி நீங்க
இருந்த வீட்டை காட்டுங்க, நீங்க படிச்ச ஸ்கூலை
காட்டுங்கன்னு பசங்க கேட்டுகினு இருந்தாங்க.

அதுக்கு முன்னாடி சூப்பரா டின்னர் சாப்பிடலாம்னு
சொல்லி அயித்தான் ரத்னா கபே கூட்டிகிட்டு போனார்.
என்ன ஆர்டர் செய்யலாம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி
4 ப்ளேட் இட்லின்னு சொன்னார். ”இட்லியான்னு!!” வாய்
பிளந்த பசங்களுக்கு,” சாப்பிட்டுப்பாரு!! அப்புறமா சொல்லுன்னாரு”

2 இட்லி தட்டுல வந்துச்சு. தொட்டுக்க சட்னி, சாம்பார்
எதையும் காணோம். அயித்தானை பசங்க பாக்க அதுக்குள்ள
குவளையில் சாம்பாரை கொண்டுவந்து ஊத்தினார் சர்வர்.
(படம் நெட்டுல சுட்டது)


இப்படி மிதஞ்சுச்சு இட்லி. :)) சுடச்சுட சாம்பார்
சும்மா தேவாமிர்தமா இருந்துச்சு. பசங்களுக்கு
ரொம்பவே பிடிச்சு போச்சு. நாங்க சாப்பிட்டுகிட்டு
இருந்த போது வந்த மத்தவங்களும் மொதல்ல
ஆர்டர் செஞ்சது இட்லிதான். ஒரு ப்ளேட்டாவது
ஆர்டர் செய்யாதவங்களே இல்லை.


சாப்பிட்டு முடிச்சதும் பசங்க அயித்தான் சின்னப்ப இருந்த வீடு,
பிறந்த கோஷா ஆஸ்பத்திரி, படிச்ச ஹிந்து சீனியர் ஸ்கூல்
எல்லாம் பாத்தாங்க. எக்மோருக்கு வண்டியை விடச்சொல்லி
அங்க போய் சேர்ந்தோம். இரவு 10.30க்குதான் வண்டி.
அதுவரை ரெஸ்ட் ரூமில் போய் ஓய்வெடுத்தோம்.

9.45க்கெல்லாம் ப்ளாட்பார்முக்கு வண்டி வந்திருச்சு.
ஏறி படுத்துததுதான் தெரியும். கண்விழிச்சப்போ வண்டி
30 நிமிஷம் லேட்டுன்னாங்க. ரொம்ப நல்லதாப்போச்சுன்னு
இருந்தோம். திருச்சிராப்பள்ளி சேர்ந்து வெளியில வந்தோம்.
பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்ல ஒரு சின்ன ஹோட்டல். குளிச்சு
ரெடியாக மட்டும்தானேன்னு புக் செஞ்சு வெச்சிருந்தோம்.
அங்க போக ஆட்டோ 50ரூபாய் கேட்டாங்க. அதுக்குள்ள
பஸ் காலியா வந்துச்சு. பசங்க ,”பஸ்ஸுல போகலாம்பா!!” ன்னு
சொல்ல பஸ்ல போனோம். பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

ஆளுக்கு ரெண்டு ரூவாதாண்ணா,
ஆட்டோல போயிருந்தா 50 ரூவா செலவாகும். இப்ப 42 ரூவா
மிச்சம்னு அண்ணனும் தங்கச்சியும் பேசிகிட்டாங்க.

ரூமுக்கு போய் குளிச்சு ரெடியாகி மீ த வெயிட்டிங்கா
காத்திருந்தோம். யாருக்கு???

தொடரும்.

வருவியா? வரமாட்டியா??

நல்லா இருக்கீகளா??



ஹுசைனம்மா மட்டும் காணலியே என்னாச்சு??
ஏன் பதிவு போடலை?ன்னு கேட்டு மெயில் அனுப்பியிருந்தாங்க.
நம்மையும் ஒருத்தர் அன்பா விசாரிக்கப்ப சந்தோஷமா
இருக்குல்ல. தாங்க்ஸ் ஹுசைனம்மா.


அம்மம்மா, தாத்தாவை பாக்கணும்னு
பசங்க சொல்லிகிட்டு இருந்தாங்க.
புதுகைக்கு போகணும்னு திட்டம்.
2 மாசம் முன்னாடியே திட்டமெல்லாம் போட்டு
டிக்கெட் புக் செஞ்சு வெச்சாச்சு. கிளம்புவதற்கு
முன்னால தெலங்கானா பந்த போய் ஆந்திரா பந்த்
வந்திருச்சு. ”ரயில் ரோக்கோன்னு” வண்டிகளை
நிப்பாட்டிகிட்டு இருந்தாங்க.

அப்பாக்கு செம டென்ஷன்.” வருவியா, வரமாட்டியான்னு
தெரியலையே!” பாதி வழியில ரயிலை நிப்பாட்டிட்டா
என்ன செய்யன்னு யோசனை.

தமிழ்நாட்டில் வார்ட் புயல்னு அறிவிப்பு. புதுக்கோட்டை,
தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மாவட்ட பள்ளிகளுக்கு
விடுமுறை வேறயாம். எப்படியோ சென்னை போனாலும்,
புதுகை போவது கேள்வி குறியா இருக்கும் போல
இருக்கேன்னு கஷ்டமா இருந்துச்சு. பசங்களுக்கும்
“ஊருக்கு போய் அம்மம்மா, தாத்தாவை பார்க்க
முடியாதா”ன்னு வருத்தம்.

”வியாழக்கிழமை வரை பாக்கிறேன், பிரச்சனையின்னா
டிக்கட்டை கேன்சல் செஞ்சிடலாம்னு அயித்தான்
சொன்னார்”

பசங்க பரிட்சைக்கு படிக்கறதை விட ஊருக்கு
போக முடியாம போயிடுமோன்னு டென்ஷனா
இருந்தாங்க.

ஒரு வழியா சென்னை வரை பிரச்சனையில்லைன்னு
தெரிஞ்சு பசங்களுக்கு லீவு விட்ட அன்னைக்கு ராத்திரியே
”கூ கூ சுக்கு சுக்கு”ன்னு கிளம்பிட்டோம்ல.

போறப்ப ஒரு டென்ஷன்னா வர்றப்பா டென்ஷனோ
டென்ஷன். தெலுங்கானா தற்போது அமைக்கப்போவதில்லைன்னு
சொன்னதும் ஹைதையில் திரும்ப கலவரம் வெடிச்சிருச்சு.
பந்த் அறிவிச்சிருந்தாங்க. இதைக்கேள்வி பட்டதும்
”ஆஹா!! திரும்ப எப்படிடா சாமி போறதுன்னு”
ரோசனை.

சனிக்கிழமை அயித்தான் அலுவலகத்தில் இருந்தே
ஆகவேண்டிய அவசியம். நடப்பது நடக்கட்டும்னு
நினைச்சுகிட்டு இருக்க, 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ்
தினம் என்பதால் கிறிஸ்துவ சகோதரர்களுக்காக’
பந்த் செய்யப்போவதில்லைன்னு அறிவிச்சாங்க.

அப்பாடின்னு உசிரு வந்துச்சு. ஆண்டவன் புண்ணியத்துல
25ஆம் தேதி கிளம்பி 26 ஹைதை வருவது போல
முன் பதிவு செஞ்சிருந்தேன்.
இன்னைக்கு காலேல தான் ஹைதை வந்து இறங்கினேன்.
சாமிக்கு நன்றி சொல்லிகிட்டே இருந்தேன்.

பதிவு போட்டுக்கினு இருக்கறப்ப அப்பா போன்ல
கூப்பிட்டாரு.

”நல்லவேளைம்மா, நீங்க ஊரு போய் சேந்துட்டீங்க.
ரயில்பட்டியை எடுத்திருக்காங்கன்னு ஹைதைக்கு
போற ரயில்கள் இன்னைக்கு கேன்சல் செஞ்சிருக்காங்கன்னு”
அப்பா சொன்னாரு.

ஆஹா!!!!!!!!!!!!!!

Thursday, December 17, 2009

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பதிவு

பாட்டி செத்ததுக்காக லீவு கேட்ட ஆபீஸ் பையன் ஜோக்
ஞாபகம் இருக்கா... அது மாதிரி “நான் தூங்கணும்! அதுக்காக
லீவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்னு” லீவு லெட்டர்
எழுத வேண்டிய நிலமை நம் இந்தியர்களுக்கு வந்தாச்சு.
என்ன எல்லா இந்தியர்களுக்குமான்னா இல்ல 93%!!!
மீதி 11% பேருங்க வேலை பார்க்கற இடத்துல தூங்கறாங்களாம்!!!!!!


Philips Electronics India limited நடத்தின ஒரு
சர்வேயில் 11 % பேர் தூங்குவதற்காக லீவு போட்டாங்கன்னு
தெரிய வந்துச்சாம்.

சர்வே எடுப்பதையே வேலையா வெச்சிருக்கறா
Nielsen Company நவம்பர் 2009ல் எடுத்த சர்வேயில்
இந்தியா முழுதும் இருக்கற 35-65 வயசுக்குள்ள இருக்கற பலர்
”சரியாக தூக்கமில்லாதது தங்கள் வேலையை
பாதிக்குதுன்னு” சொல்லியிருக்காங்களாம்.

74% பேர் தூக்கத்தில் குறைந்தது 3 அல்லது 4 முறை
எழுந்திருப்பதால் சரியாக தூங்க முடியலைன்னு
சொல்லியிருக்காங்க.


இயற்கையின் அழைப்பு,மன அழுத்தம், வெளியில்
ஏற்படும் சத்தங்கள் தங்கள் தூக்கத்தை கெடுக்குதுன்னு
சொல்லியிருக்காங்க.

இதுல 62 % பேர் OBSTRUCTIVE SLEEP APNEA(OSA)
தூக்கத்தின் போது மூச்சுவிட சிரம்ப்படும் ஒரு
வியாதியால் இருக்காங்களாம். அது இருதய
நோய்க்கு ஆளாக்கிடும்னு சொல்றாங்க.


என்ன கொடுமைங்க இது?

வேலை வேலை வேலை வேலைக்கு இல்லை வேளை.

சரிங்க. ஆபீஸுக்கு போறவங்க லீவு போட்டுட்டு
வீட்டுல தூங்கலாம். இல்லத்தரசிகள் எந்த ஆபிஸுக்கு
லீவு போட்டு எப்படி தூங்குவது?????

புலம்பியிருக்கேன் படிச்சு பாருங்க. :((

Wednesday, December 16, 2009

2010ஆம் வருடத்தின் நிறம்!!

ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நிறத்தை வழங்குவது
Pantone எனும் நிறுவனம்.

வரும் 2010ஆம் வருடத்திற்கான நிறம் Turquoise.
நீலமும் பச்சையும் கலந்த நிறம்.

ஒரு மாதிரியான இதமான நிறம் இது. பீச்களில்
இருக்கும் கடல்நீரின் நிறம் இந்த நிறம். பீச்களில்
ஓய்வெடுக்கும்போது அந்த நிறத்தை பார்த்தே
மனதுக்கு சாந்தமாக இருக்கும். புத்துணர்ச்சி
கிடைக்கும்.






சில நிறங்கள் குறித்து மக்களுக்கு நெகட்டிவான
எண்ணங்கள் உண்டு. Turquoise குறித்து எல்லோருக்கும்
பாசிட்டாவான எண்ணம்தான் வரும்.

பிறக்க இருக்கும் புத்தாண்டு மனதுக்கு இதத்தையும்,
புத்துணர்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும்.

Tuesday, December 15, 2009

சமையற்குறிப்பு



திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மம்மாவிடம்தான் சமையல் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் அம்மா (நான் அப்படித்தான் அழைப்பேன்) தந்த சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.


1.அடுக்களையில் நுழையும் முன் உன் கோபதாபங்களை மூட்டை கட்டி வைத்து விடு.


2. மனது அமைதியாக இருந்தால் தான் சமையலில் மனம் லயிக்கும்.


3. ரசித்து சமை! ருசியாக இருக்கும்.


4. தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு.


5. அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்.


இந்த சமையற்குறிப்பை நான் இன்று வரை கடை பிடிக்கிறேன்.



என் அடுக்களையைய் அலங்கரிக்கும் அடுக்களை பிரார்த்தனை. இதோ.

MY KITCHEN PRAYER
MY KITCHEN IS A HEAVEN THAT'S MINE AND MINE ALONE
BUT ALL WILL GET A WELCOME HERE, THE WARMEST THEY HAVE KNOWN.
SO, GOD I ASK YOU KINDLY TO BLESS THIS HALLOWED SPOT
WHERE I PERFORM GREAT MIRACLES WITH OVEN, PAN AND POT.
PLEASE ALSO BLESS MY COOKING SO THAT EACH MEAL I MAKE
BRINGS DEEPEST SATISFACTION TO ALL WHO MIGHT PARTAKE.
AND NOW GOD LET ME OFFER MY WARMEST THANKS TO YOU
FOR GRANTING US, OUR DAILY BREAD AND OTHER BLESSINGS TOO...


யாரோ சொன்னது:
A RECIPIE IS ONLY A THEME, WHICH AN
INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION".


புத்திசாலித்தனம், சுவை, கற்பனனத்திறன்
ஆகியவை சமையற்கலையில் முழுதும்
பயன் படுத்தபடுகிறது.

Monday, December 14, 2009

பெட்ஷீட் பராமரிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அலுத்து, சலுத்து வேலை பார்த்து நாளின் இறுதியில் ஓய்வெடுக்க
நாம் தேடுவது படுக்கை. அதில் சுகந்த மணம் வீசாட்டியும்,
வேர்வை மணம், அழுக்காக இல்லாமல் இருப்பது சுகாதாரம்.


பலருக்கு பெட்ஷீட், தலையனை உறை மாத்துவதுன்னா
மட்டும் கஷ்டம். ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது
மாத்துவாங்களான்னு சந்தேகம் தான்!!

ஆனா இது தவறு இப்படிப்பட்ட படுக்கையில் படுத்து
நமக்கு கிடைப்பது சுகாதரமான ஓய்வில்லை.

வாரத்துக்கு இருமுறை மாற்றணும்னு சொல்வாங்க.
அது சாத்தியமில்லைன்னாலும் வார இறுதியில்
கண்டிப்பாய் மாற்றுவதுன்னு வெச்சுக்கிட்டா
சுத்தமா, சுகமா தூங்கலாம்.

கைவசம் 3 பெட்ஷீட் செட் வெச்சுக்கணும்.(தலையணை
உறையும் தான்)

1 செட் துவைக்க போனால், 1 செட் பெட்டின் மீது,
இன்னொன்று அவசர தேவைக்கு ரெடியாக கப்போர்டில்
இருக்கணும்.

உறவினர் வந்து சென்ற பிறகு வார இறுதிக்காக
காத்திராமல் உடன் மாற்றுவது தான் நல்லது.

இப்படி பெட்கவர் போட்டு மூடி வைத்தாலும் நல்லது.
ஹோட்டல்களில் பெட்கவர் போட்டு அழகாக வைத்திருப்பார்கள்.


செய்யக்கூடாதது:

1. தூங்கும் அறையில் சாப்பாடு, விளையாட்டு ஆகியவைக்கு
பெரிய ”நோ”. இது அறையின் சுகாதாரத்தை பாதிக்கும்.

2. பிள்ளைகளுக்கு இருக்கும் கெட்ட பழக்கம் பெட்டில்
உட்கார்ந்து சாப்பிடுவது, பெட்டின் மேல் நடப்பது ஆகியவை.
இது தவறுன்னு எடுத்து சொல்லி திருத்தனும். காலின்
அழுக்குகள் பரவி அதனால் கிருமி தொற்று ஏற்படலாம்.

3. போதிய வெளிச்சம் அறையில் இருக்கா, காற்றோற்றமா
இருக்கான்னு பாத்துக்கணும். இதுவும் நல்ல தூக்கத்துக்கு
முக்கியம்.


பராமரிப்பு:
மிஷினில் துவைக்கும் பொழுது பெட்ஷிட், தலையணை உறைகளை
மட்டும் தணியாக துவைக்க வேண்டும். மற்ற துணிகளோடு
துவைக்கக்கூடாது.

வெள்ளை நிற பெட்ஷீட்களை உபயோகிப்பவர்கள் அதை
தணியாக துவைக்க வேண்டும்.

கறைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் மாற்றி துவைத்து
விட வேண்டும், காய்ந்த கறைகள் போவது கடினம்.

கலர் பெட்ஷீட்களை ட்ரைக்ளீன் தான் செய்ய வேண்டுமென்பதில்லை.
பெட்ஷீட், தலையணை உறை, போர்வைகளை மிஷினில் போட்டு
delicate cycle என இருக்கும் அந்த முறையில் துவைத்து,
இறுதியில் liquid fabric softener சேர்த்தால் வாசமாக இருக்கும்.

சின்னக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் படுக்கை நனைவது
சாதாரணம். அப்போது அடுத்த நாள் அந்த பெட்ஷீட்டை
தனியாக நீரில் அலசி, அப்புறம் டெட்டால் கொண்டு அலசி,
அதன் பின் மிஷினில் துவைத்தால் வாசனை இருக்காது.

துவைத்த துணிகளை உடன் வெயிலில் காயவைத்து
உடனே எடுத்து மடித்து வைத்து விடுவது அவசியம்.
இதனால் கிருமிகள் கொல்லப்படுகின்றன. வெயிலில்
நன்கு காய்வதால் ஈர வாசனை இல்லாமல் இருக்கும்.


பெட்ஷீட் தானே என கண்ட இடத்தில் வைக்காமல்,
கப்போர்டில் அழகாக, நேர்த்தியாக வைப்பதால்
அடுத்த முறை உபயோகத்துக்கு உதவியாய் இருக்கும்.

பெட்ஷீட்களை கைகளால் துவைப்பதாக இருந்தால்
அதிக கவனம் வேண்டும். சோப் முழுதும் போகும்படி
நன்றாக அலச வேண்டும். இல்லையேல் உடலுக்கு
ஒவ்வாமை உண்டாகும்.

உலர்த்தும் பொழுது தரையில், புல்வெளியில் பரப்பி
உலர்த்துவதென்றால் அந்த இடம் சுத்தமாக இருக்கிறதா
என்று பார்த்துக்கொள்ளவும். கொடியில் காய வைப்பது
சுகாதாரம்.



Sunday, December 13, 2009

புயலும், மழையும் பின்னே கொசுவத்தியும்...

புயல், மழைக்கெல்லாம் கொசுவத்தியான்னு!!! கேக்கறீங்களா?
ஆமாங்க எல்லாமும் நம்ம வாழ்க்கையில விளையாண்டிருக்குல்ல!!

ஒவ்வொரு வருஷம் நான் அசை போடும் நிகழ்வுகளில் இதுவும்
ஒண்ணு. டிசம்பர் 16 முதன் முதலில் ஹைதை வந்ததும் இந்த
நாளில்தான், குட்டி ஆஷிஷோடு ஹைதைக்கு முதன் முதலில்
வந்ததும் அந்த நாள் தான்.

13 வருடங்களுக்கு பிறகும் மனதில் அப்படியே சிம்மாசனம்
போட்டு இருக்குது அந்த நாள். காரணம்??? அதுதான் கொசுவத்தி.

அக்டோபர் 7 ஆஷிஷ் பிறந்தது. பேருக்கு 3ஆவது மாசம்
”நான் ஊருக்கு போவேன்னு: கிளம்பிட்டேன். அயித்தான்
மட்டும் தனியே இருப்பதால் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு
இருந்தாரு(கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டல்லதான் சாப்பிட்டுகிட்டு
இருந்தாலும், நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல!!)

குழந்தை பிறந்து மகளை கொண்டு விடுவதுன்னா சும்மாவா!
அப்பா, அம்மா கூட வந்தாங்க. அப்பா சென்னை வரை,அம்மா ஹைதை வரை.

சனிக்கிழமை இரவு இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் புதுகையிலிருந்து
நான், அப்பா, அம்மா குட்டி ஆஷிஷ் எல்லோரும் கிளம்பினோம்.
s4 கோச் முழுவதும் புதுகை கோட்டா. எங்க ஊர்க்காரவுங்க தான்
எல்லோரும். அப்பாவைத் தெரியாதவங்க உண்டா!!

“என்ன ரமணி சார், பாப்பாவை(!!) கொண்டு விட போறீங்களா?”
“பேரனா சார்! சந்தோஷம் சார்”னு எல்லாம் அப்பா கூட பேசிக்கிட்டு
இருந்தாங்க.

இரவு பேருக்கு படுத்து, தூங்காத ஆஷிஷுடன் போராடி
எப்பவோ தூங்கிப்போயி விடிஞ்சா சென்னையை சேர்ந்திருப்போம்னு
கண்ணத் தொறந்தா வண்டி நிக்குது சிதம்பரத்தில்!!!

”இதுக்கு முன்னாடி கிளம்பின கம்பன் எக்ஸ்ப்ரஸ் கூட அப்படியே
நிக்குது சார், மத்த ட்ரையினுங்களும் கூட நிக்குது”ன்னு அப்பாவோட
ப்ரெண்ட் வந்து சொன்னாங்க.

சரி நம்ம இந்திய ரயில் என்னைக்கு சீக்கிரமா போயிருக்குன்னு
இருந்தோம். வண்டி நகர்ற பாடே தெரியலை!!!

காலையில் சென்னையை சேர்ந்திடுவோம் என்பதால் கையில
சாப்பாடு ஏதும் எடுத்துக்கலை. வயிறு பசி. எங்க வண்டி
சிதம்பரம் ஷ்டேஷன் கிட்ட நின்னதால் தம் டீயாவது குடிக்க
கிடைச்சுது. கைவசம் பிஸ்கட் எப்பவும் இருக்கும் அதானால
அன்னைக்கு காலை உணவு டீயும், பிஸ்கட்டும்தான்னு
நினைச்சோம். மணி ஆவுது வண்டி கிளம்பற வழியைக்
காணோம். அப்புறமாத்தான் மேட்டர் தெரிஞ்சது.


பெஞ்ச மழையில ட்ராக் தண்ணியில மூழ்கிருக்கு.
வண்டி போவது கஷ்டம்னு!!! கைக்குழந்தையுடன்
ட்ரையினில் அம்மாடி அந்தக் கஷ்டம்!!!






ஞாயிறு மாலை 7 மணியாகியும் வண்டி சிதம்பரத்தை
விட்ட அகலல. அப்பா திங்கள்கிழமை காலை அப்பா
ஆபிஸ் போயே ஆகணும் அதனால,” அம்மாவும் நீயும்
சென்னை போயிடுங்கன்னு” அப்பா பாதிவழியிலேயே
புதுகைக்கு திரும்ப முயற்சி செய்ய கிளம்பிட்டார்.


வண்டில இருக்கறவங்க அக்கம் பக்கத்து ஊர்களுக்குள்ளாற போய் சாப்பாடு
ஏதும் கிடைக்குதான்னு பாக்கப்போனாங்க! கிடைச்சதை
கொண்டு வந்து எல்லோரும் பகுந்து சாப்பிட்டோம்.
அதுலயும் கைக்குழந்தைக்காரின்னு என் வயிறு நிறைய்யற
மாதிரி எல்லோரும் பாத்துக்கிட்டாங்க.அம்மாவுக்கு அவங்களே
வாங்கிக்குடுத்தாங்க. (இப்பல்லாம் புதுகைக்குன்னு ஒரே
கோச் போடுறதில்லை)


மெல்ல மெல்ல நகர்ந்த ட்ரையின் கடலூர் வந்துச்சு.
அங்க ஒரு 3 மணிநேரம் வாக்குல இருந்து திங்கள்கிழமை
அதிகாலை 6 மணிக்கு எக்மோர் ஷ்டேஷன் வந்து
சேர்ந்தோம். நாத்தனார் வீடு ரயில்வே குவார்டர்ஸ்லதான்.
நேரே அங்கேதான் போனோம்.

ஸ்ரீராமின் அண்ணா வியாசர்பாடியில இருந்தார். மாமியாரும்
அங்கேதான் இருந்தாங்க. அவங்க பேரனை பார்க்கணும்னு
ஆசைப்பட்டதா சொன்னாங்க.(உடல்நிலை சரியில்லாதவங்க)
எக்மோர்லேர்ந்து வியாசர்பாடி போகும் பாதை மழையில
பாதிப்பு, பிரிட்ஜ்ல தண்ணி. மணலி எல்லாம் சுத்தி
வியாசர்பாடிக்கு ஆட்டோல போய் பேரனை காட்டிட்டு
வந்து அன்றைக்கு சாயந்திரம் ட்ரையினில் ஹைதைக்கு
புறப்பட்டு 16ஆம் தேதி செகந்திராபாத்தில் காத்திருந்த
அயித்தானைப் பார்த்து அழணும்போல ஆயிடுச்சு.


நாங்க கிளம்பும்போது இல்லாத மழையும், புயலும்
சடனா வந்து 14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு. புதுகை-சென்னை
48 மணிநேரப்பயணம் கைக்குழந்தையுடன் இருந்தாலும்,
நடுவில் அப்பா ஊருக்குத் திரும்பும் அவசர சூழல் இருந்தாலும்
அதிகம் கஷ்டம் தராமல் இருந்தது அன்பு மிகு புதுகைவாழ்
மக்களால்தான்!!

எங்க ஊர் மக்களுக்கு என் நன்றி.

Saturday, December 12, 2009

பிரிப்பது பிரச்சனையை தீர்க்குமா???

என்னுடைய முந்தைய பதிவில் சஞ்சய் தம்பியின்
இந்த பின்னூட்டம் மனதுக்குள் ஓடிக்கொண்டே
இருந்தது.

""நில பரப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில்
பெரிய மாநிலங்கள் அனைத்தும் பிரிக்கப் படனும்
என்பது என் கருத்து. நிர்வகிக்க முடியாமல் எல்லா
பெரிய மாநிலங்களிலும் மோசமான வறண்ட
பகுதிகள் தொடர்கிறது.""


சஞ்சய் மாநிலங்களை பிரித்தல், மாவட்டங்களை பிரித்தல்
எல்லாம் செய்வதற்கு முன் பல விடயங்களை ஆலோசிக்க
வேண்டும்.

எங்க புதுக்கோட்டையை உதாரணமா எடுத்துக்கலாம்.
தொண்டைமான் ஆண்ட புதுக்கோட்டை சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஊர். திருமயம் கோட்டை,
சித்தன்னவாசல் ஓவியங்கள்,குடுமியான் மலை கோவில்,
நார்த்தாமலை மகாமாயி கோவில் என பல இருக்கின்றன.

தொல்பொருள் ஆய்வாளர்களுக்கும், சுற்றுலாக்காரர்களுக்கும்
சொர்க்கமாக இருக்கும் எங்க ஊரை நல்லா விளம்பர படுத்தி
சுற்றுலா மூலம் அதிக வருவாய் வர வைக்கலாம்.


மண்ணின் மணம் பகுதி 1

மண்ணின் மணம் பகுதி 2


ஆரஸ்பதிக்காடுகளும், ஆதனக்கோட்டை முந்திரி பருப்பும் கூட
எங்கள் ஊரின் மணத்தில் இருக்கு.

எங்க ஊர் பத்திய இந்தத் தளத்தை பாருங்க.

ராஜாவின் ஊர்வலத்திற்காகவும், அன்னை பிரகாதாம்பாளின் பவனிக்காகவும்
எங்க ஊரின் ஒவ்வொரு வீதியும் ரிப்பன் வைத்து கட்டியது போல்
ஒரே சீராக இருக்கும். எந்தக் குழப்பமும் இல்லாமல் எளிதில்
அட்ரஸ் கண்டுபிடித்து விடலாம்.

இப்படி எங்க ஊரின் புகழ் எத்தனையோ இருக்கு.

திருச்சி, மதுரை போல வெளிநாட்டவர்களை இந்த
ஊருக்கு வரவழைக்க கூடிய சமாச்சாரங்கள் இருந்தும்
அதை சந்தை படுத்தாதது யார் தவறு???

மக்கள் செய்ய முடியாத காரண காரியங்களுக்குத்தான்
மக்களின் பிரதிநிதியாக அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் செய்வது என்ன???

தமிழகத்திலேயே தலைசிறந்த பேருந்து நிலையத்தை
கொண்டது புதுகைதான். அதைப் பார்த்துத்தான் பிற
மாவட்டங்களில் பேருந்து நிலையத்தை சிறப்பாக
அமைத்தார்கள்.


மேன்மை மிகு ராணியார் பள்ளி, கோர்ட், மாமன்னர்
கல்லூரி ஆகியவை கட்டப்பட்ட அந்த செங்கல் போன்றது
தில்லி செங்கோட்டையில் பார்க்கலாம் என்று எனது
வரலாற்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மன்னரின்
அரண்மனையில்தான் தற்போதைய கலெக்டர் அலுவலகம்
நடை பெறுகிறது.

எத்தனையோ சிறப்பு மிக்க எங்கள் ஊர் தற்போது
பாராளுமன்ற தொகுதி கிடையாது.இதற்கு காரணம் யார்??
மக்களா??? இன்றைய நிலைக்கு காரணம் யார்???

எங்கள் புதுகை பதிவர் சுரேகாவின் வலைப்பூவில் பாருங்கள்.
பல பதிவுகள் புதுகையின் அவல நிலையைச் சொல்லும்.
:(((

புதுகையின் பாரம்பரியம் பற்றி அப்துல்லா எழுதி வரும்
ப்ளாக்கின் முகவரி தவற விட்டுவிட்டேன். கிடைத்ததும்
சேர்க்கிறேன்.


பராமரிக்க முடியாமல் போகும் அவல நிலை ஏன்??
பாரம்பரிய மிக்க வளைவையே இடித்து போட்டு விட்டார்களே!!!

பிரிவு எப்போதும் தீர்வு தராது. வரும் காலங்களில்
புதுகை என்றொரு ஊர் இருந்ததாம் என்று சொல்லும்
அவல நிலைக்கு புதுக்கோட்டை தள்ளப்பட்டு, பாராளுமன்ற
தொகுதிக்காக பிரிக்கப்பட்டது போல் பக்கத்து ஊர்களான
தஞ்சை, தி்ருச்சியோடு புதுக்கோட்டையை இணைத்தாலும்
இணைப்பார்கள்.

:((((((

(இது என் மன ஆதங்கம் + கருத்து)

THANKS KUDUKUDUPAI FOR THE LINK

புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்

Thursday, December 10, 2009

அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்

இப்படி எல்லாம் தேசபக்தி தளும்ப பாடிக்கிட்டு இருந்தோம்.
இனிமே “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது தேசக்
கொள்கை” அப்படின்னு சொன்னா யாரும்,”அப்படியா!!”ன்னு
கேப்பாங்கன்னு நினைக்கிறேன்.

வேற்றுமையை மட்டும் பார்ப்பதுதான் நமது கொள்கையாயிருச்சே.
தெலுங்கானா கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுதே,

தெலுங்கானா - பற்றிய விரிவான கதைக்கு இங்கே
கட்டாயம் பார்க்கவும்.



“தெலுங்கானா மட்டும் பிரிச்சா நாங்க சும்மாயிருக்க மாட்டோம்!
ராயலசீமா கேப்போம்னு” ஒரு கோஷ்டி,

”உத்தராந்த்ரா(வடக்கு ஆந்திரா) தந்தே ஆகணும்னு” ஒரு கோஷ்டி,

இதுல ரொட்டிக்கு சண்டை போட்டுகிட்ட பூனைகள் மாதிரி
ஹைதராபாத் எங்களுக்கேங்கறாங்க சிலர், சிலரோ ஹைதையை
யூனியன் டெரிடரி ஆக்கிடுங்கன்னு சொல்றாங்க. ஹைதை
எங்கே? யாருக்கு? என்னாவாக போகுதுன்னு பாக்கணும். :((

காங்கிரஸ், பிரஜாராஜ்யம், தெலுகு தேசத்தை
35 எம்பிக்கள் ராயலசீமாவுக்காக தனது பதிவியை ராஜினாமா
செஞ்சாங்கன்னு செய்தி இன்னைக்கு மதியம் டீவில் வந்துச்சு.

தெலுங்கானா கொடுத்தா கம்மம் மாவட்டத்தில் இருக்கும்
பத்ராசலம் கோவிலும், கோதாவரியும் தமக்கே சேரணும்னு
கரையோர ஆந்திரா கேட்டதாக டீவில காட்டினாங்க.


என்ன கொடுமைடா சாமி இதுன்னு பாத்துகிட்டு இருக்கும்போது
தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்து இன்னுமும்
நொந்துக்க வேண்டியதாச்சு. புதுச்சேரியிலிருந்து காரைக்காலை
பிரிச்சு தனி யூனியன் டெரிடரியாக கொடுக்கணும்னு
ஆரம்பிச்சிருக்காங்க. மஹாராஷ்ட்ரத்தில் விபர்தாவை
தனியா பிரிக்கணுமாம்!!!


இதே போக்குல போனா இந்தியா எனும் நாடு இருந்துச்சுன்னு
சொல்லிக்கறா மாதிரி ஆகிடும் போல இருக்கே. இப்ப
தனி மாநிலம் வேணும்னு கேக்கறவங்க, பின்னாளில்
மாநிலமா இருந்து போரடிச்சு போச்சு, எனக்கு பிரதம
மந்திரி ஆகணும்னு தனி நாடு கேட்டு போராடுவாங்க.


தெலுங்கானா வரும்னு கண்டிப்பான உத்திரவாதம்
ஏதும் காங்கிரஸ் கொடுக்கலை என்பது என் கருத்து.
சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால்
மாணவர்கள் இன்னமும் வன்முறையில் ஈடுபடுவாங்க.
அதை தடுத்து நிறுத்தவே தெலுங்கானா வரும்னு
சொல்லியிருக்காரு. வரும்,வராது என்பது போலன்னு
வெச்சுக்கலாம்.

தெலுங்கானா எனும் மாநிலம் அமைய எடுத்து வைத்திருக்கும்
முதல் அடி இதுன்னு காங்கிரஸ் சொல்லுது. மாநிலம்
உருவாக எத்தனை நாளாகும்னு சொல்ல முடியாதுன்னும்
சொல்லியிருக்காங்க. இந்த வெண்டைக்காய் கொழ கொழ
மாதிரி இருக்கறதை புரிஞ்சிக்காமலா TRS கட்சி தனது
போராட்டத்தை கைவிட்டுச்சு!!!!!! இன்றைக்கு நடந்த பேரணியை
“வெற்றிப் பேரணியா” நடத்தினாங்க.

இன்னைக்கு காலேல பேப்பர் படிச்சபவே புரிஞ்சிருச்சு
இது ஒரு கண் துடைப்புன்னு. டீவி 9 சேனலில்
ஒருவர் சொன்னது தான் கொடுமையா இருந்துச்சு.
“50 வருட போராட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கு.
இதுவரை அரசியல்வாதிகள் மட்டுமே போராடி
எதுவும் செய்ய முடியலை. இந்த முறை மாணவர்கள்
அதை செஞ்சு காட்டியிருக்காங்க!!!””
இது தவறான செய்தியாக மாணவர்களுக்கு போய்ச்
சேருமேன்னு தான் கவலையா இருக்கு.

போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும் பள்ளிகள்,
கல்லூரிகள் மூடப்படுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இன்னும் எத்தனை உண்ணாவிரதமோ, எத்தனை
பந்த்களோ,போராட்டங்கள் இதற்கு விலையாகும்
மாணவர்களின் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி??????

Wednesday, December 09, 2009

ஊருக்கு போனதும் கடுதாசி போடுவீகளா????

ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த..

சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் கைகளிலே...


என்ன அருமையான பாட்டுல்ல..

ஒரு காலத்துல கடுதாசி எழுதிப்போடறதுன்னா பெரிய விஷயம்.
கடுதாசியில மஞ்சள் தடவி வந்தச்சுன்னா சுபத்தை சொல்லுது.
ஓரத்துல கருப்பு மை தடவி வந்துச்சுன்னா சோகத்தை சொல்லுது
அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.



ரொம்ப பெரிய விஷயம் சொல்லணும்னா இன்லெண்ட் லெட்டர்
அல்லாடி 15 பைசா கார்ட் போதும். ”15 கார்ட் பெற மாட்டேனா
நானு, ஒரு கடிதம் எழுதினாத்தான் என்னன்னு? சண்டை
போட்ட அக்கா, தங்கச்சிக எம்புட்டு பேரு”!!!


”வீட்டுல கலந்து பேசி, தாக்கல் சொல்றோம்னு” மாப்பிள்ளை
வீட்டுக்காரக சொல்லிட்டு போனதுலேர்ந்து தபால்காரருக்காக
காவல் கிடந்தவக எம்புட்டு பேரு!!



அடுத்து போன். இது எல்லார் வீட்டிலயும் இருக்காது.
பூத் தான்.

ட்ராங்கால் புக் செஞ்சு பேசி மாளாது. புதுகையிலிருந்து
திருச்சியே எஸ்.டீ.டீ. காசு ஜாஸ்தி. அவசரமான
தாக்கல்னா தான் யாருக்கும் போன் போடுவோம்.



”போன் பேசுற அளவுக்கு பெரிய ஆளா... லெட்டர்
போடு போதும். காசை வீணாக்காதேன்னு!” பெரியவங்க
அட்வைஸ் செய்வாங்க.

ராத்திர் 9 மணிலேர்ந்து காலேல 6 மணி வரை 1/4 ரேட்

6.30 லேர்ந்து 9 மணி 1/2 ரேட்
9 லிருந்து 9 வரை ஃபுல் ரேட்

இந்த பல்ஸ் ரேட்டில் சின்ன சின்னதா மாத்தம் வந்து
இப்ப இந்தியா முழுக்க எப்ப பேசினாலும்
காசு குறைவா ஆகுற மாதிரி மாறியிருக்கு.
கை வலிக்க டயல் செஞ்சது போக இப்ப
நாம வீடு முழுக்க தூக்கிகிட்டு போற மாதிரியெல்லாம்
போன் வந்திடுச்சு.


இந்த மொபைல் வருவதற்கு முன்னால பேஜர்னு ஒண்ணு
இருந்துச்சு. நாம் சொல்வதை அவங்களுக்கு மெசெஜ்ஜா
அனுப்பிடுவாங்க. எங்க இருந்தாலும் நாம சொல்ல வேண்டிய
தாக்கல் அவங்களுக்கு போயிடும். ரொம்ப வசதியா இருந்துச்சு.

அயித்தானுக்கும் பேஜர் இருந்துச்சு. எப்பவும் “கால் மீ பேக்”
மெசெஜ் கொடுத்து வெச்சிடுவேன். சும்மாவா லோக்கல் காலுக்கு
காசு அதிகமாச்சே. அதுவும் பூத்லேர்ந்து தான் செய்வேன்.

”உப்பு, புளி எல்லாம் மறக்காம வாங்கி வரச்சொல்லி
மெசெஜ் வருதுப்பா! இந்த பேஜரை கண்டுபிடிச்சவன்
எவனோன்னு!!” அயித்தானோட ஃப்ரெண்ட் ஒருத்தர்
அழுவாரு பாவம்.


பார்த்திபன் கனவு படத்துல சேல்ஸ் மெனா வர்ற
ஸ்ரீகாந்த் ஒரு டயலாக் சொல்வார்.”உங்க எம்ப்ளாயிஸுக்கு
பேஜர் கொடுக்கறதை விட மொபைல் கொடுக்கலாம்.
பேஜர் இருந்தா பேசாம இருக்க வாய்ப்பு இருக்கு.
மொபைலை எடுத்து பேசியே ஆகணும்.” ரொம்ப
சரியான விஷயம்.

இப்ப எல்லோர் கையிலயும் மொபைல் போன் தான்.
அது இல்லாதவங்க குறைவுதான்.


இப்ப மொபைலைத் தாண்டி இமெயில்,ஆர்குட்,ட்விட்டர்
ஃபேஸ்புக்னு போய்க்கினு இருக்கோம்.

ஆனா எனக்கு மனசு மட்டும் கொஞ்சம் கணமாத்தான் இருக்கு.
நம்ம நட்புக்களோட பேசுறோம், மெயில் அனுப்பிக்கிறோம்.
உறவுக்காரவுகளை சுத்தமா மறந்திடறோம்.
தூரத்து உறவு, ஒண்ணுவிட்ட உறவெல்லாம் வேண்டாம்.

சொந்த சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை இவுக கிட்டயாவுது
பேசுறோமா? மெயில் வசதி இல்லாதவகளுக்கு லெட்டராவது
எழுதி போடுவோமா?? ஒரு போனு???

முன்னாடியெல்லாம் அத்தை, சித்தி வீட்டுக்கு போயிட்டு
வந்த பிறகு, வந்து சேந்துட்டேன்! நான் அங்கன இருந்த போது
நல்லா கவனிச்சதுக்கு நன்னின்னு சொல்லி 4 வார்த்தை
கார்டாவது எழுதுவோம். இப்ப யாரும் யாரு வீட்டுக்கும்
போறதுமில்லை, வாரதுமில்லை. அப்புறம் எங்க கடிதம்??


உறவை பலப்படுத்த இந்த கடித போக்குவரத்தாவது முக்கியம்.
அதனால் நம்ம நட்பு, உறவுகிட்ட என்னோட விண்ணப்பம்
இன்னான்னா? இந்த புதுவருஷத்துலேர்ந்தாவது நம்ம
சொந்த பந்தங்கிட்டயும் உறவை புதுப்பிச்சு தொடர்புல இருப்போம்
என்பதுதான்.

எங்க சித்திக்கு நானும் தம்பியும் சேர்ந்து 3 வருஷம் முன்னாடி
மொபைல் வாங்கிக் கொடுத்தோம். எஸ்.எம்.எஸ் அடிக்கத்
தெரியாது. போன் செஞ்சா பேசுவாங்க. இப்ப எங்க சித்தி
சும்மா சூப்பரா மெசெஜ் அனுப்பறாங்க.

அப்படி சில எஸ்.எம்.எஸோட அடுத்த பதிவுல
சந்திக்கறேன்.


டிஸ்கி:நாலுவரி கடுதாசி போட நேரமில்லைன்னா ...
ஒரு மணியார்டர் அனுப்பிருங்க. நீங்க நல்லபடிப்
போய்ச் சேர்ந்த இருக்கும் விவரம் புரிஞ்சுக்குவேன்.

ஐடியா தந்த துளசி டீச்சருக்கு நன்றி):))

Saturday, December 05, 2009

OHRIS HAVMORE-70MM

வயி்ற்றெரிச்சல் புகைகளும், காதுல புகைகளும் கிளப்பும் பதிவு இது.

திருமணநாள் அன்று டின்னருக்கு எங்கே போகலாம்னு? அயித்தான்
கேட்டார். அங்கத்தி போகலாம்னு சொன்னேன். ஆஷிஷ் 70MM
ட்ரை செஞ்சு பாக்கலாம்னு சொல்ல சரின்னு அயித்தான் சொன்னார்.

ஆஹா, அற்புத ப்ரபஞ்சமால்ல இருந்துச்சு. பாலிவுட் தீமில்
இருக்கும் ஒரே ரெஸ்டாரண்ட் இது தானாம்.

உள்ள நுழைஞ்சதிலேர்ந்து எங்கெங்கு காணினும் ஹிந்தி
சினிமா தான்.






AMAR AKBAR ANTONY படத்துல எண்ட்ரி தரும் அமிதாப்!!



டான்சர் ஹெலன்!!



ஆவாரா ஹூ என பாடும் ராஜ் கபூர்!!


சண்டை காட்சி எல்லாம் சூப்பரா செஞ்சு வெச்சிருக்காங்க.



புஃபே டைப் சாப்பாடு. வெஜ், நான் வெஜ்னு தனியா பிரிச்சு வெச்சிருக்காங்க.



வெஜ் மெனு சொல்றேன்.
ஸ்பினாச்+ப்ரோகலி சூப், வெஜ் பிட்சா, நூடல்ஸ், பாஸ்தா,
வடை, சாம்பர், சட்னி, காலிஃபளவர் மஞ்சூரியன்,
தால்மக்கானி, கடாய் வெஜிடபிள், பனீர் பட்டர் மசாலா,
ஸ்டீம்டு ரைஸ், சீரக ரைஸ், தஹி வடா பக்கத்துல
பூந்தி, காரச் சட்னி, இம்லி சட்னி, சுடச்சுட சாஃப்டாக
நான் எல்லாம் இருக்கு. சுவையோ சுவை. ஓரீஸ்
உணவுவகங்களில் சுவை ரொம்ப நல்லா இருக்கும்.

அதிக காரமில்லாத உணவு வகைகள்.




டெஸர்ட் எது எடுப்பது? எதை விடுவதுன்னு தெரியலை. :))

கேக், டபுள் கா மீட்டா, ஐஸ்கிரீம் வித் ஹாட் சாக்லேட் +
சாக்லேட் சிப்ஸ். தனியா ஐஸ்கிரிம் கவுண்டர் ஒண்ணும் இருக்கு.
வேணுங்கறத ஆர்டர் செஞ்சா தனியா செஞ்சு தனி பில்லா
கொடுப்பாங்க.

சினிமா பத்தின தீம்ல இருக்கறதால சாப்பாட்டு பில்லும்
ஃபிலிம் ரோல் டப்பாவுல வருது. :))



இம்புட்டு சொன்னேனே. சாப்பாடு விலை
ஒரு ஆளுக்கு :ரூபாய்.225 + டாக்ஸ்
பிள்ளைகளுக்கு (8வயதுக்குள்) பாதி விலை.

இடம்: ஓரிஸ் 70MM ஜலவிஹார்.
நெக்லஸ் ரோடு
ஹைதராபாத்

Phone: 040-64543333
Mobile: 9959400038, 9959400040

Friday, December 04, 2009

ஹைதை ஆவக்காய் பிரியாணி - 4/12/09

பழைய நட்புக்களை சந்திக்கறது சந்தோஷமான விஷயம்.
அப்படி இரண்டு சந்தோஷம் எங்களுக்கு கிடைத்தது.

மும்பையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஹரியின்
மனைவி அயித்தானுடன் ஹிந்துஸ்தான் லீவரில் பணி
புரிந்தார்.(அப்போ அவர்களுக்குத் திருமணமாகலை)
ஹைதைக்கு மாற்றலாகி வந்திருந்த அவர்களின்
தொலைபேசி எண் கிடைக்க நெம்ப சந்தோஷமாக
பேசினார்கள். என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.

ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து காலிங் பெல்
அடிக்க, கதவைத் திறந்த மகனுக்கு யாருனு தெரியாமல்
என்னை கூப்பிட்டான். ஹரியை பார்த்துவிட்டு ”அப்பச்சா” என
கத்தியே விட்டேன். (ஹரியை அப்படித்தான் அழைப்பேன்)

பரஸ்பரம் பிள்ளைகளுக்கு எங்களின் கதையை சொல்ல
“ஆ.. அப்படியா” என செம ஆச்சரியம். :)))


**********************************************
திருமணமான புதிதில் ஹைதையில் அயித்தானின்
நண்பர்கள் விருந்துக்கு வந்திருந்ததை பதிவாக
போட்டிருந்தேன்.
அதில் சந்தர் எனும் நண்பர்
ஹைதைக்கு மாற்றாலாகி வந்திருக்கிறார்.
நட்புக்கள் இருவரும் “என்னடா எப்படி இருக்க?
நீ குண்டாகிட்ட, மாறவே இல்லை” என
பேசி மகழ்ந்துகிட்டாங்க. நேற்று இரவு டின்னருக்கு
வீட்டிற்கு வந்திருந்தார். பழைய நினைவுகளை
அசை போட்டுகிட்டே சாப்பிட்டோம்.

(தம் ஆலு, சப்பாத்தி, ரைஸ், தயிர்,சாலட் நான் போட்ட
ஆவக்காய் இதான் மெனு) :))

சென்ற முறை சோறுக்காக காக்க வைக்க நேர்ந்தது.
இந்த முறை வயிறு ஃபுல் என சொல்லும் அளவுக்கு
சாப்பாடு போட்டாச்சு.

********************************************

போன மாசமே ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஆட்டம்
ஜாஸ்தியாத்தான் இருக்கு. ஹைதை குளிரத்தான்
சொல்றேன். வெயில் அடிக்குது ஆனா உரைக்க
மாட்டேங்குது. :)

பகலில் கூட ஸ்வெட்டர் போட்டுக்க வேண்டிய
நிலை. இரவில் கெட்டி பெட்ஷீட் பத்தாமல்
க்வில்ட் போத்திக்க வேண்டி இருக்கு.

ச்சே என்ன குளிர்!! ( வயிற்றெரிச்சலை
கிளப்பியாச்சு. நிம்மதியா இருக்கு)
:)))))))))

**************************************

தெலுங்கானா பந்த் தந்த திருப்பமா
ஹைதை ஒரு மார்கமாத்தான் இருக்கு.
அங்கங்கே தர்ணா, அடிதடி எல்லாம் நடக்குது.
கலவரத்துல கலந்துகிட்ட உஸ்மானியா
யுனிவர்சிட்டி பசங்களை உசுப்பேத்தி விட்ட
புண்ணியவான் யாரோ! நாசமாப்போக.

இப்படி கலவரங்களில் மாணவர்கள் கலந்துகிட்டதை
மீடியாக்களில் பார்த்த கம்பெனிகள் ப்ளேஸ்மெண்ட்
வைக்க வர மாட்டாங்களாம். அவங்க எதிர் காலமே
வீணாயிடுமுன்னு பேராசிரியர் ஒருவர் சொல்லிக்கிட்டு
இருந்தார். அம்மா, அப்பா கஷ்டபட்டு படிக்க அனுப்பினா
இவங்க கையில தடி எடுத்துகிட்டு கார், பெட்ரோல் பங்குன்னு
அடிக்க கிளம்பறாங்க.

ப்ளேஸ்மெண்ட் இல்லாம வேற இடத்துல வேலைக்கு
ட்ரை செய்யலாம்னாலும் ஓ.யூ ல படிச்ச பசங்களுக்கு
வேலை இல்லைன்னு சொல்லும் நிலையும் இருக்குமாம்.

தேவையா மக்கா உங்களுக்கு இது??

*********************************************

இந்த வருட ஆரம்பத்தில் என்னென்னவோ கத்துக்கணும்னு
திட்டம் போட்டு வெச்சிருந்தேன். மாமாவின் இழப்பு,
என் உடல்நிலை சரியில்லாமல் போனதுன்னு இந்த
வருடமெல்லாம் இருந்ததால் எதுவும்
உருப்படியா செய்யவே இல்லைன்னு மனசுக்கு ஒரே
வருத்தம்.

2009ஆம் வருஷமும் முடியப்போகுது. ஒண்ணும் புதுசா
கத்துக்கலையேன்னு இருந்தேன். ஏதாவது ஒண்ணு
கத்துகிட்டே ஆகணும்னு குக்கரி கிளாசில் சேர்ந்திட்டேன்.
ஐஸ்கிரீம், மாக்டெயில், சாக்லேட், கேக், பிஸ்கட்ஸ்
அப்படி இப்படின்னு 125 ஐடம் கத்துக்க போறேன்.

பாவம் பசங்களும், அயித்தானும். :))))
*************************************
நான் பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்த படம்
ஆவக்காய பிரியாணி. தியேட்டரை விட்டே
படம் சீக்கிரம் போயிடிச்சி. போன வாரம்
ஜீ தெலுகுவில் இந்தப் படம் பாத்தேன். ஹிந்து
முஸ்லீம் களம். ஹீரோ முஸ்லிம், ஹீரோயின்
ஹிந்து. அவர்களி காதல் கரை சேருதா? இல்லையா
என்பதுதான் கதை.

நல்லாத்தான் எடுத்திருக்காங்க. நல்ல படம் எல்லாம்
என்னிக்கு ஓடிருக்கு? (நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமே
போடாமத்தானே நாமளும் இருக்கோம்)எப்படியோ
படம் பார்த்த திருப்தி எனக்கு.

Tuesday, December 01, 2009

வாழ்த்துக்கள்

உங்களைப்பத்தி நிறைய்ய சொல்லியிருக்கேன்.
இன்னமும் சொல்லலாம். ரொம்பவே உங்க
புகழ் பாடுவதா என்னிய கலாட்டா செஞ்சுக்கினு இருக்காக
சில நட்புக்கள். :))

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் ஆண்மகன்களை
பாத்திருக்கிறேன். மனைவியை தரக்குறைவாக
நடத்தும் கணவர்களை பார்த்திருக்கிறேன்.

நீங்கள் இவர்களில் விதிவிலக்கு. அன்பு,
புரிதல், பாசம் இதன் உருவம் நீங்கள்.

ஃப்ரெண்ட் ஜ்யாதா, பதி கம் (Friend jyada pathi cum)
என சிம்பிளி ஆக சொல்லிவிட்டாலும் நல்ல நட்பான
கணவர் கிடைத்தது என் பாக்கியம்.

Get this widget | Track details | eSnips Social DNA


நாம் இருவரும் சேர்ந்து அடி எடுத்து வைக்கத் துவங்கிய
நாள் இன்று.

இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.