Monday, February 15, 2010

ஆவதும் நட்பாலே மனுஷன் அழிவதும் நட்பாலே- இறுதி பாகம்

தீய நட்புக்களால் பிள்ளைகள் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும்.
இதுல முக்கிய காரணியா உளவியாளர்கள் சொல்வது பெற்றோரைத்தான்.

பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவுகள் பெற்றோருக்கு அதிகமாக இருக்கும்.
அன்பாலே இணைந்து அன்புச்சின்னத்தை பெற்றவர்கள் வாழ்வு மட்டுமல்ல,
அவர்களின் குழந்தையின் வாழ்வும் மலர்ந்து இருக்கும்.

ஏனோ தானா கல்யாணம்,குழந்தை பிறப்பு என வளரும் குழந்தை
தன்னம்பிக்கையை இழக்கிறதுன்னு சுய மரியாதை பதிவுலேயே
பார்த்தோம்.

மேலை நாடுகளைப்போல இப்ப நம்ம இந்தியாவிலயும் விவாகரத்துக்கள்
பெருகிவிட்டன. விவாகம் ரத்தானால் பாதிப்பு அவர்களின்
பிள்ளைகளுக்குத்தான். பெற்றோரின் சண்டை, சச்சரவுகள் இவற்றை
குழந்தை பருவத்தில் அனுபவித்த குழந்தை பதின்மவயதைத்
தொடும்பொழுது தன் குடும்பத்தை விட்டு பிரிகிறான்.


பொதுவாகவே பதின்மவயது பிள்ளைகளுக்கு mood swings
எனப்படும் மனநிலை மாற்றம் அதிகம். சில பிள்ளைகள்
அதிகம் கோபம் கொள்வர். சிலர் தனி அறைக்குள் அடைந்து
போய்க்கிடப்பர். வீடியோ கேம்ஸ், ஐபாட், கம்ப்யூட்டர்
என குடும்பத்தினரிடமிருந்து விலகியே இருக்க விரும்புகின்றனர்.

காரணம் பிள்ளையின் மனநிலை புரியாமல் நாமும் அவர்களுடன்
சண்டையிடுவது, தனது கனவை தன் பிள்ளையாவது நினைவாக்க
வேண்டும் என பிள்ளைக்கு பிடிக்காத படிப்பை படிக்க வற்புறுத்துவது.

அதிகம் கண்ணாடி முன் நிற்க விரும்பும் வயது இது. அதற்கும்
திட்டு வாங்குவார்கள். இதனால் பதின்ம வயது பிள்ளைக்கு
பெற்றோர்கள் வில்லன்களாகத் தெரிகிறார்கள். சிடு சிடுப்பு,
கோபம், எரிச்சல் என இருவரும் பேசிக்கொள்வதால் விரிசல்
அதிகமாகிறது.

குழந்தையையாக இருந்த பொழுது பக்கத்தில் இருத்தி பேசுவோம்.
பிள்ளை வளர வளர அரவணைப்பதே இல்லை. தொட்டு பேசுவது
சுத்தமாக இல்லை. ஸ்பரிசம் தரும் சுகம், கதகதப்பு இல்லாமலேயே
போய்விட முகம் பாக்காமலேயே பதில் சொல்லிப்போகும் குழந்தைதான்
அதிகம்.

இதெல்லாம் பிள்ளையை நட்பு வட்டத்துக்குள் பின்னிபிணைக்கிறது.
அது தீய கூட்டமாக இருந்தால் அவ்வளவுதான். படிப்பு, எதிர்காலம்,
உடல்நலம் எல்லாம் பாதிக்கப்படும்.

என்ன செய்யலாம்??

அன்பு காட்டுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
நட்பாக நாம் மாறுவதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை.
“தோளுக்கு மிஞ்சினால் தோழன்” என பெரியவங்க சொல்லி
வெச்சதை பெத்தவங்க நாமே மறந்திட்டா எப்படி??

வீட்டுக்குள்ளேயே நட்பு வட்டத்தை உருவாக்க வேண்டும்.
கணவன்,மனைவி சச்சரவுகளைக்குறைத்து இது என் குடும்பம்,
என் பலம் இது, இங்கே நான் நிம்மதியாக இருக்கிறேன் எனும்
எண்ணத்தை பிள்ளையிடம் வளர்க்க வேண்டும்.

“என்ன ஆனாலும் ராசாத்தி நானிருக்கிறேன்”எனும்
நம்பிக்கையை பெண்ணுக்கு தந்துவிட்டாள் அவள் ஏன்
படிக்கும் வயதில் காதலை தேடப்போகிறாள்.

”என் வீடு எனக்குத் துணையிருக்கு என்ற எண்ணம்
இருந்தாலே தவறான பாதைக்கு அழைக்கும் நண்பனை
விட்டு விலகிடுமே பிள்ளை!!”

இதற்கு பள்ளிகளும் உதவ வேண்டும். கவுன்சிலர்கள்
உளவியாலர்கள் வைத்து பதின்ம வயது பிள்ளைகளுக்கு
கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க
வேண்டும்.

உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், போஷாக்கான
உணவு(வீட்டை விட்டு பிள்ளை இறங்கும்போது வெறும்
வயிற்றோடு அனுப்பாமல் போஷாக்கான உணவு கொடுத்து
அனுப்புவது நட்புக்களுடன் ஹோட்டல், பாஸ்ட் ஃபுட் என
ஓட விடாமல் செய்யும்) மிக மிக அவசியம்.


தேவையான அன்பு, அதீதமில்லாத கண்டிப்பு, நட்பான
பெற்றோர் இதுதான் பதின்மவயதுப்பிள்ளையின் தேவை.

பொண்ணும், பரிசும், பொருளும் இவற்றை ஈடு செய்யாது.
குவாலிட்டி டைம் மிக மிக முக்கியம்.


some tips for the adolescents:




* Develop trustworthy relationships with others and be open and
be open honest.

* Develop hobbies

* Physical exercise is a must to relax build and sustains the body.

* Avoid junk and fast food. Nutrition is very important. A balanced
diet gives balanced body and mind.

* Avoid tobacco, smoking and use of alcohol. Remember the alcoholic
you see today took his first drink when he was an adolescent.

* Listen to good music, not the kind that pushes your blood pressure up.

* Follow good rituals and religious practices and once you cultivate the
habit, you will find in them an emotional anchor.

இந்தத் தொடரில் அடுத்த பதிவு வியாழக்கிழமை வரும்

ஆவதும் நட்பாலே மனுஷன் அழிவதும் நட்பாலே. இது முந்தைய பதிவுக்கு லிங்க்.

14 comments:

நட்புடன் ஜமால் said...

வெறும் பாட புத்தகம் மட்டுமே என்பதல்ல மாணவ பாடம்

நிறைய சொல்லி குடுக்கனும்

பெற்றோரும் ஆசிரியரும் நிறைய கத்துகிடனும் ...


நல்ல இடுக்கை.

pudugaithendral said...

ஆமாம் ஜமால்,

அப்பத்தான் ஆரோக்கியமான தலைமுறை மனிதர்கள் உருவாக முடியும். மீ த பர்ஸ்டா வந்ததுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு. தென்றல்.

துளசி கோபால் said...

நல்ல இடுகை.

நண்பர்கள்தான் உலகமுன்னு இருக்கும் பிள்ளைகளைத் 'திருத்துவது' மெகாக் கஷ்டம்.

சில பிள்ளைகள் சீக்கிரம் முழிச்சுக்குவாங்க. பலர் கடைசிவரை நம்பியே கெட்டுருவாங்க.

பெற்றோர்கள் நல்லதை எடுத்துச்சொன்னாலும் காது....கேக்காது:(

பெற்றோர்கள்தான் பொறுமையைக் கடைப்பிடிக்கணும். அவர்களும் சாதாரண மனிதர்கள்தானே?

பெற்றோர்களுக்கான ஒரு ஸ்லோகன்,

'சக்தி கொடு கடவுளே'

Unknown said...

தென்றால் //தேவையான அன்பு, அதீதமில்லாத கண்டிப்பு, நட்பான
பெற்றோர்// இது எல்லா வயது பிள்ளைகளுக்கும் வேண்டும்.. நல்ல பல கருத்துக்களை அள்ளி தரிங்க வாழ்த்துக்கள்

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க துளசியக்கா,

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.

நன்றி

pudugaithendral said...

வாங்க பாயிஷா,

கற்றதை பகிரும்பொழுதுதானே பலன் அதிகம்.

வருகைக்கு நன்றி

நாஸியா said...

Very nice sister.. :))

pudugaithendral said...

நன்றி நாஸியா

ஹுஸைனம்மா said...

பாடம் படித்துக்கொண்டேன். படிக்கும்போதே பிராக்டிகல்ஸும் செய்யறது நாந்தான்னு நினைக்கிறேன்!!

pudugaithendral said...

பகிர்ந்து கொண்டே ப்ராக்டிகல்ஸ் நானும் செஞ்சுகிட்டு இருக்கேன் ஹுசைனம்மா :))

வருகைக்கு நன்றி

Ungalranga said...

கலாம்மா,

நல்ல பதிவு..

அதுக்குள்ள முடிஞ்சுடுச்சேன்னு ஒரு குட்டி வருத்தம்.. :)

pudugaithendral said...

அதுக்குள்ள முடிஞ்சுடுச்சேன்னு ஒரு குட்டி வருத்தம்.//

அது சரி..

வருகைக்கு நன்றி ரங்கா. வியாழக்கிழமை வாங்க சூடு பிடிக்கும் மேட்டர். :))