Monday, August 08, 2011

5க்குள்ளே இருக்கு நம் ஆனந்தம்

சென்ற பதிவிற்கு இங்கே:

நமக்கும் நம்ம மனசுக்கும் அதிகம் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கணும்.
அது எப்படின்னு பாப்போம்னு போன பதிவுல சொல்லியிருந்தேன்.
கீதையின் சாரம் தான் அது. ஆனா அதைப் படிக்கும் பொழுது நல்லா
இருக்கும். இதெல்லாம் எப்படி செயல் முறைப் படுத்திப்பதுன்னு
மனசு லேசா குழம்பும். நாமும் ஆமாம்லன்னு அப்படியே விட்டுட்டு,
திரும்ப பாரங்களை சுமக்க ஆரம்பிச்சுடுவோம்.

வாழும் கலைப் பயிற்சியில் இந்த 5 கொள்கைகளைச் சொல்லிக்கொடுத்தாங்க.
அதை பத்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். இதுவும் கீதாசாரத்திலிருந்து
எடுக்கப்பட்டதுதான். ஆனா நம்ம மனசை கட்டுப்படுத்திக்க இது உதவும்.

1. சிலருக்கு வெயிலைக்கண்டா பிடிக்காது. மழை கொட்டினா பிடிக்காது.
குளிரும் பிடிக்காது. அப்புறம் எப்படி? வெயில், மழை எல்லாம் வேணும்.
வெயில், மழை இருந்தாத்தானே விளைச்சல். இரவு வந்தா அடுத்தநாள்
கண்டிப்பா விடியும். வெளிச்சம் கிட்டும். நம்ம வாழ்க்கையும் அதுபோலத்தான்.
இன்பம். இன்பதுக்கு பின் துன்பம். அதற்கு பின் இன்பம். இது ஒரு
சுழற்சி போல சுத்திக்கிட்டே இருக்கும். அதுதான் இயற்கையின் நியதி.
படைத்தவன் நம்மை புடம்போட கொடுக்கும் பயிற்சி.
அதனால நாம துன்பத்துக்கு பின் இன்பம் நிச்சயம் எனும் நம்பிக்கையை
மனசுல ஏற்படுத்திகிட்டு துவழும் பொழுதெல்லாம் த்ரீ இடியட்ஸ்
படத்தில் அமீர் கான் சொல்லுவது போல, “நம் மனதை கொஞ்சம
முட்டாளாக்கி ஆல் இஸ் வெல், எல்லாம் நன்மைக்கே, நல்லது நடக்கும்”
அப்படின்னு அடிக்கடி மந்திரம் மாதிரி சொல்வதால நம்பிக்கையான
வாழ்க்கை கிடைக்கும்.

2. ”மாமியார் உடைச்சா மண்பானை மருமகள் உடைச்சா பொன்பானைன்னு”
ஒரு வசனம் சொல்வாங்க. நாம செஞ்சா அது தப்பில்லை. அதுவே
அடுத்தவங்க செஞ்சா மாபாதகம்னு ஒரு நினைப்பு எல்லோருக்கும் உண்டு.
அலுவலகத்துல அதிகாரி அப்படி நினைப்பதாலத்தான் அவருக்கு கீழ
வேலை செய்பவருக்கு மன உளைச்சல், கணவன்/மனைவி உறவில்
இப்படி ஒரு நிலை இருவரில் யாருக்கு வந்தாலும் அமைதி தொலைந்து
போகும். இப்படி நிறைய்ய சொல்லலாம். தீர்வு என்ன? அடுத்தவங்க
செய்வதில் குற்றம் மட்டுமே பாத்துகிட்டு இருக்கக்கூடாது. வேணும்னே
செஞ்சிருப்பாங்க அப்படின்னு சொல்வதால நமக்குத்தான் உளைச்சல் ஆகும்.
ஆக நம்ம வேலையை நாம நல்லபடியா செஞ்சுகிட்டு போய்க்கிட்டே
இருப்போம். “தன் மெய்வருத்தக் கூலி தரும்”னு வள்ளுவர் சொல்லிருப்பது
பொய்யாகாது.

3. நாம அழகா ஒரு புதுப்புடவை வாங்கியிருப்போம். கத்திரிப்பூ கலர்.
மேட்சிங்கா ப்ளவுஸும் தெச்சு அப்படியே சந்தோஷமா வெளிய வர
ஃப்ரெண்ட் ஒத்தங்க பாத்து,” ஐய! இந்தக் கலர் உனக்கு நல்லாவே
இல்ல!!” அப்படின்னு சொன்ன உடனே மனசு புஸ்ஸுன்ன் ஆகி
ஆசை ஆசையா எடுத்துகிட்டு புடவை பிடிக்காமலே போயிடும்!!

ரொம்ப ஆசைப்பட்டு ஒருத்தர் செல்போன் ஒண்ணு வாங்கினார்.
அதை மறுநாள் அலுவலகத்துக்கு எடுத்துகிட்டுப்போக நண்பர்
பாத்திட்டு விலை, எங்க வாங்கின எல்லாம் கேட்டுட்டு,”இந்த
மாடல் சரியில்லன்னு எனக்குத் தெரிஞ்சவர் சொன்னார்பா”!
சொல்ல ஐயோ தப்பு செஞ்சிட்டோமோன்னு குமைவார்.

மேலே சொல்லியிருக்கும் விஷயத்துலேர்ந்து என்ன புரியுது.
நாம இஷ்டமா செஞ்சாலும் அடுத்தவங்க சொல்வதை ரொம்ப
கேட்கும் பொழுது அதுவே நம்ம மன உளைச்சலுக்கு வழி
வகுக்கும். அவங்களுக்கு பிடிச்சிருந்தா என்ன? பிடிக்காட்டி
எனக்கென்ன? எனக்கு பிடிச்சிருக்கு. அம்புட்டுதான்.எல்லா
இடத்துலயும் இதை அப்ளை செஞ்சு பார்த்தா நல்ல
இம்பூரூவ் மெண்ட் இருக்கு. அதுக்காக பெரியவங்க
நமக்கு அட்வைஸ் செய்யும் பொழுது அதை எடுத்துக்காம
நம்ம இஷ்டத்துக்கு இருக்கக்கூடாது. அனுபவம் நல்ல
ஆசான்.

4. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்.
ஒரே வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளும் வேற வேற விதம் தான்.
எல்லாம் ஒண்ணு போல இருந்துட்டா வித்தியாசம் இருக்குமா?
அதனால நம் சிந்தனை, செயல்பாடு எல்லாமே வேறு படும்.
அதனால நான் செய்வதுதான் சரின்னு சொல்ல முடியாது.
நாம சரின்னு நினைப்பது அடுத்துவங்களுக்கு தப்பா இருக்கலாம்.
அதனால தீர்வு என்னன்னா அவங்களை அவங்களாவே ஏத்துக்கறதைத்
தவிர வேற வழியில்லை. அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்
அப்படின்னு மனசுக்கு சொல்லிக்கொடுத்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.

5. நம்ம மனசுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிக்
கொடுக்கணும். ரொம்ப முக்கியமானதுன்னு வெச்சுக்கோங்க. இதை
கண்டிப்பா பழக்கி கொடுத்திட்டா அப்புறம் ஆனந்தம் தான்.
மனசுலேர்ந்து வேண்டாத நினைவுகளை, நாம பட்ட அடிகளை
தூக்கி போடுவது லேசான விஷயம் இல்லை. உள்ளாறாம இருக்கும்
நாவினால் சுடப்பட்ட வடு. அது மேலேயே திரும்ப அடி விழும்பொழுது
புண் பெருசாகுது. நம்ம மனசு பாதிக்கப்படுவதாலத்தான் நம்ம உடம்புக்கும்
முடியாம வருது. இது உளவியாளர்கள் சொல்லும் கூற்று.

என்ன செய்யணும்? வந்ததை வரவில் வைப்போம், சென்றதை செலவில்
வைப்போம். அம்புட்டே தான். அப்படி நினைச்சுக்கிட்டு மனசு பழைய
பஞ்சாங்கத்தை புரட்ட ஆரம்பிக்கும் போதெல்லாம் ஒரு அதட்டல் போட்டு
ஏய்! நடைமுறைக்கு வா. இப்ப இந்த நிமிஷம் முக்கியம். இதை
எப்படி நல்லா செய்யணும்னு பாப்போம்னு சொல்லிக்கிடணும்.
அதாவது வாழும் இந்த நொடியை 100 சதவிகிதம் உணர்ந்துகொள்வது.
இதனால இன்னைய வேலையை மட்டும் பாக்கலாம்.

நடந்தது நடந்து போச்சு. நாளைக்கு எப்படின்னு அப்ப பாத்துக்கலாம்.
ஆனா இன்றைய இந்தப் பொழுது போனா வராது. அதனால இதுக்கு
முக்கியத்துவம் கொடுப்போம். சரிதானே?!!

இதைக் கத்துகிட்டேன். அதை ஆங்கிலத்தில் ரொம்ப அழகா
சொல்லிக்கொடுத்திருந்தாங்க. அந்த வரிகளை மனப்பாடம் செஞ்சுகிட்டா
நல்லது. அதைவிட சூப்பரா யோசிச்சு ஒரு வேலை செஞ்சேன்.
அதை அப்படியே பிரிண்ட் செஞ்சு கண்ணில் படுமாதிரி 3 இடத்துல
ஒட்டி வெச்சிட்டேன். அதைப் பார்க்க படிக்க மனசுல மாற்றம் நல்லாவே
தெரியுது.

நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கும் என் சந்தோஷம் கிடைக்கணும்ல அதான்
இந்தப் பகிர்வு. நான் ரெடி செஞ்சு வெச்சிருக்கும் மேட்டரையும் தர்றேன்.
நீங்களும் ப்ரிண்ட் எடுத்து வெச்சு எப்படி இருக்கு எஃபக்ட்ன்னு சொல்லுங்க.
அந்த 5 கொள்கையோட நான் ரெய்கி affirmationயையும் சேத்துகிட்டேன்.



ஏதோ தேடும்பொழுது இதுவும் கண்ணுல பட்டது. ப்ரிண்ட் எடுத்து
ஒட்டி வெச்சுக்கிட்டு கண்ணுல படும்பொழுதெல்லாம் படிக்கிறேன்.
இதனாலயும் எனக்கு உடம்புக்கு ஒண்ணுமே இல்லாத மாதிரி
உணர ஆரம்பிச்சிருக்கேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே. அதுவும் நமக்குன்னு கிடைச்சிருக்கும் இந்த
வாழ்க்கையை ஆனந்தமா வாழ்ந்திட்டு போவோமே!! என்ன நான் சொல்றது?!!
:))) இந்த வாரத்துவக்கம் எல்லோருக்கும் இன்பமயமாக அமைய
வாழ்த்துக்கள்

8 comments:

pudugaithendral said...

மைக் டெஸ்டிங்

அன்புடன் அருணா said...

அத்தனையும் அருமை!

Chitra said...

வாழ்க்கையின் எதார்த்தங்களை புரிந்து கொள்ள வைக்கும் பதிவு. அருமை.

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள பகிர்வு.. நன்றி தென்றல்..

pudugaithendral said...

வாங்க அருணா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

ஆமாம் யதார்த்ததை புரிஞ்சுக்கும் பக்குவம் நமக்கு வந்திட்டாலே போதும். வாழும் கலையில் இதை கத்துக்கிட்டேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

ஹஸ்பண்டாலஜி போல, லைஃபாலஜியிலயும் தேறிட்டீங்க!! ;-)))))