Saturday, August 06, 2011

ONE LIFE TO LOVE

ONE LIFE TO LOVE என்ன ஒரு அழகான வாக்கியம்.
நமக்குன்னு இருக்கும் ஒரு வாழ்க்கை இது. ஆனால் இதில் நாம்
தேவையில்லாம எத்தனையோ பாரங்களை சுமந்துகிட்டு திரிவதனால
பொதி அதிகமாகி வாழ்க்கையை வாழ்வதை விடுத்து ஏனோ தானோன்னுதான்
வாழறோம்.

வாழ்க்கையின் உசரத்துக்கு போகணும்னு இல்லாட்டியும் வாழ்வாதாரத்துக்கு
பங்கம் வந்திடக்கூடாதுன்னு கொடுப்பதுக்கு மேல கூவுற மாதிரி தான்
நாம் செய்யும் வேலைகள் இருக்கு. விட்டா நம்ம இடத்தை அடுத்தவங்க
பிடிச்சிடுவாங்கற பயத்துலேயே நேரம் காலம் பாக்காம, உடம்பை கூட
கண்டுக்காம எத்தனை பேர் வேல செய்யறாங்க.

உடலும் மனசும் துவண்டு போய் ஏதோ ஒரு மெஷின் போல
ஆயிடறதாலத்தான் கோவம், கையாலாகதத்தனம் அப்படி இப்படின்னு
ஒரு மாதிரியா ஆகிடறோம். நம்மை நாம் கவனிச்சுக்குவதே இல்லை!!
எங்கங்க இதுக்கெல்லாம் நேரம் இருக்குன்னு? சொல்லிட்டு ஓடிக்கிட்டே
இருக்கோம். ”என்னையும் கொஞ்சம் கவனியேன்னு!!” உடம்பும் மனசும்
கெஞ்சுவதை என்னிக்காவது நாம சட்டை செஞ்சிருக்கோமா? தன்னலம்
கூடாதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டதால வந்த வினைதான் இது.

நம்மளை நாம கவனிச்சுக்கிட்டாத்தானே அடுத்தவங்களையும் நல்லா
கவனிச்சு நாம சாதிக்க வேண்டியதை சாதிக்க முடியும். நமக்குன்னு
கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
சுகபோகங்களால அனுபவிப்பதைச் சொல்லலை. ஒரு வேளை கஞ்சி
குடிச்சாலும் சந்தோஷமா இருக்கணும்னு! சொல்வாங்கள்ல அந்த
மாதிரி. இருப்பதை வெச்சு நாம சந்தோஷமா வாழணும்.

இதெல்லாம் எனக்கும் ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சுதுன்னு வெச்சுக்கோங்க.
என்னை நான் உணர்ந்து, என்னை நான் விரும்ப ஆரம்பிச்சதுதான்
முதல் படி. இப்ப நமக்கு பிடிச்சது ஒண்ணு இருக்குன்னு வெச்சுக்கோங்க.
அதை எப்படி பொத்தி பொத்தி பாதுகாப்போம்!! எந்த பங்கமும் வராம
பாத்துக்குவோம்ல. ஏன்! நம்ம பசங்க, நம்ம பெத்தவங்க இவங்க்
கஷ்டப்படக்கூடாதுன்னுதானே ஓய்வொழிச்சல் இல்லாம சம்பாதிப்பது.
எங்கே அவங்களை திண்டாட விட்டுடுவோமோன்னு தானே வாழறோம்.
அதே மாதிரி நம்மை நம் உடம்பை, நம் மனசையும அப்பப்ப கவனிக்கணும்.



ஒரு அழகான குளம் இருக்குங்க. அதுல தண்ணி அழகா ஓடிக்கிட்டு இருக்கு.
ஆனா ஒரு மழை வெள்ளம் வந்தா கரை உடைஞ்சு தண்ணி வெளிய
வந்தா ஊரே வெள்ளக்காடாயிடும் தானே! கரைக்குள் அடங்கி நடந்தத்தான்
அந்த குளம் அழகானது.

ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் ....அப்படின்னு ஒரு பிரபல பாடலே இருக்கே.

கரைக்கட்டி நாமாவைச் சொல் அப்படின்னு பெரியவங்க சொல்வாங்க.
அதாவது நாம் இறைவனை பெயர்ச்சொல்லி வணங்கும் பொழுது
அந்த மந்திரம் அல்லது பேருக்கு முன்னாடி ஓம் என்றும் கடைசியில்
நமஹ என்றும் சொன்னால்தான் மந்திரத்தின் பலனே இருக்கும்.

நம் மனசையும் இப்படி கட்டி காக்க முடிஞ்சா எம்புட்டு நல்லாயிருக்கும்.
இருக்கும் அதுக்கும் வழி இருக்கு. நான் கத்துகிட்டதை உங்களுக்கும்
பகிர்வதில் சந்தோஷம்.

இந்த 5 முக்கியமான விஷயங்களை இப்ப நான் பிரிண்ட் எடுத்து
வீட்டில் கண்ணில் படும் சில இடங்களில் வைத்து பார்த்து பார்த்து
என் மனதுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதுவரைக்கும் தலைப்பில் சொல்லியிருக்கும் அந்த ஆங்கில வார்த்தைக்கான
அர்தத்தை கொஞ்சம் யோசிச்சு உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதுன்னு
பாருங்க. வார விடுமுறைதானே! கொஞ்சமாவது நேரம் கிடைக்கும்.
திங்கள் கிழமை பதிவோடு வர்றேன்.

டிஸ்கி:
NDTV GOOD TIMESல ONE LIFE TO LOVE அப்படிங்கற பேர்ல ஒரு நிகழ்ச்சி
வரும். அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். நிறைய்ய கத்துக்கலாம்.
ஆனா அந்த நிகழ்ச்சிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால அதையும், அந்தப்
படத்தையும் மட்டும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான செய்திகள்..... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

இராஜராஜேஸ்வரி said...

ONE LIFE TO LOVE என்ன ஒரு அழகான வாக்கியம்.//

அழகான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

pudugaithendral said...

வாங்க சகோ,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

பயனுள்ள பதிவு.

ஷர்புதீன் said...

i already practiced this!

சாந்தி மாரியப்பன் said...

திங்கட்கிழமைக்காக காத்திருக்கேன்..

pudugaithendral said...

வாங்க அமுதா,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஓ அப்படியா மிக்க சந்தோஷம் ஷர்புதீன்

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

பதிவு போட்டாச்சு அமைதிச்சாரல்

வருகைக்கு மிக்க நன்றி