Thursday, October 06, 2011

அலைகடலின் ஓரத்திலே..............

நவராத்திரி சமயமாக இருந்ததால் கண்டிப்பாக இந்தக்கோவிலுக்கு
போகவேண்டும் என திட்டம் போட்டிருந்தேன். நவராத்திரி சமயம்
என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். தரிசனத்திற்கு 4 மணி
நேரத்திற்குமேல் ஆகும் என்று மாமா சொன்னார். ஆனால்
விடாது கருப்பாக தரிசனம் செய்ய திட்டம்.

அதிகாலையிலேயே எழுந்துவிட்டோம். குளித்து ரெடியாகி 6.45க்கு
வீட்டைவிட்டு புறப்பட்டு, 7.20 வசாய் ரோட் லோக்கல் ட்ரையினில்
ஏறினோம். அயித்தான் முதல்நாளே எங்கள் மூவருக்கும் ஃபர்ஸ்ட்கிளாஸில்
3 நாளுக்கான பாஸ் வாங்கிவைத்திருந்ததால், டிக்கெட் வாங்க க்யூவில்
நிற்கத்தேவையில்லை + 3 நாள் பாஸில் எத்தனை முறை வேண்டுமானாலும்
பயணம் செய்யலாம்.


கொஞ்சம் கூட்டம் இருந்தாலும் உட்கார இடம் கிடைத்தது. 7.30 மணிக்கே
ட்ரையினில் தள்ளுமுள்ளு கூட்டத்தை பார்த்து அம்ருதா ஷாக்காகிவிட்டாள்.
மும்பை செண்ட்ரல் ஷ்டேஷனில் இறங்கி அங்கிருந்து வாடகை கார்
பிடித்தோம். அங்கேயிருந்து மஹாலாக்‌ஷ்மி கோவிலுக்கு சேரிங்கில்
ஆளுக்கு பத்துரூபாய். இன்னொரு பேசஞ்சருக்காக காத்திருக்காமல் அந்த
பத்துரூபாயையும் நாங்களே தருவதாக சொல்லி உடன் போகச் சொன்னோம்.
காரணம் மும்பையின் பிரசித்தி பெற்ற மஹாலக்‌ஷ்மி கோவிலில் நவராத்திரி
சமயம் தரிசனத்திற்கு க்யூவில் நிற்க வேண்டும்.


அனுமார் வால் போல நீண்டு கொண்டே சென்றது க்யூ.hEERA PANNA SHOPPING
CENTRE ஹாஜிஅலி எனும் முஸ்லிம் ப்யூர் வெஜ் கடை ஒன்று வைத்திருக்கிறார்கள்.
jUICE & SNACKS கிடைக்கும். அதற்கு இன்னும் கொஞ்சம் அந்தப்பக்கம்
தள்ளி மெயின் ரோடிலிருந்து வரிசையில் நின்றது கூட்டம். மணி 8.35.
மெல்ல மெல்ல ஊர்ந்த வரிசையில் ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு
தனி வரிசை. கோவில் முகப்பை சென்றடைந்த பொழுது மணி 10.20

கோவிலுக்கு செல்லும் இருபுறமும் கடைகள். பேடா, அம்பாளுக்கு
ரவிக்கைத்துணி, தேங்காய் எல்லாம் வைத்த தட்டு ஒன்று வாங்கிக்
கொண்டேன். பசி வயிற்றைக்கிள்ளியது. கையில் பிஸ்கட்டும் தண்ணீரும்
இருந்தது அதை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டோம். சீக்கிரமே
வந்தால் அதிகம் க்யூவில் நிற்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால்
தரிசனம் அவ்வளவு சீக்கிரம் தரவில்லை.


மஹாலக்‌ஷ்மி கோவில் என்று சொல்லப்பட்டாலும் இங்கே முப்பெருந்தேவியரும்
குடியிருக்கிறார்கள். மஹாகாளி, மஹாலக்‌ஷ்மி, மஹா சரஸ்வதி இந்த
மூவரும் இங்கே அருள் புரிகிறார்கள். மஹாலக்‌ஷ்மியின் ப்ரத்யக்‌ஷ்ம கடாட்சம்
மும்பையின் மீது இருப்பதாகவும் அதனால்தான் மக்கள் இங்கே நல்ல
வாழ்க்கை வாழ்வதாகவும் மக்கள் நம்பிக்கை. அவளின் அருள் இருப்பதால்தான்
மும்பை மாநகரமே இந்தியாவின் வர்த்தக மையமாக இருக்கிறது. அவளைத்
தரிசித்தேன். நவராத்திரி சமயத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ந்தேன்.
தங்கக் கவசங்கள் சாற்றி இருகைகளாலும் பக்தர்களுக்கு மூவரும்
அபயஹஸ்தம் அளித்த காட்சி கண்கொள்ளாக்காட்சி.

வரிசையில் நின்ற பொழுது எனக்கு பின்னால் இருந்த ஒரு அம்மா
ரொம்பவே புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தார். ”உங்க மக எவ்வளவு
பொறுமை!! கோவிலுக்கு வந்து எதுவும் சாப்பிடாமல் வரிசையில்
நின்று அம்மனை பார்க்க வந்திருக்கிறாள். என் மகளை அழைத்தற்கு
நீயே போம்மா என்று சொல்லிவிட்டாள்” என 15 தடவையாவது
சொல்லியிருப்பார்.

பக்தர்களுக்காக பந்தல் அமைத்து, அதில் மின்விசிறியும்
ஏற்பாடு செய்திருந்ததோடு மட்டுமல்லாமல், அங்காங்கே தண்ணீர்,
குளுக்கோஸ் லெமன் ஜூஸ் என விநியோகம் செய்தார்கள்.
ஃபளைட்டில் தருவது போல மினரல் வாட்டரை சீல் செய்த
டம்பளரிலும் கொடுத்தார்கள். மும்பையில் இப்பொழுது
இரண்டாவது வெயில்காலம். மிகக்கொடுமையானது. தாகசாந்தி
செய்தவர்கள் நன்றாக இருக்கட்டும்

இந்த பத்து நாளுக்கும் ஒவ்வொரு கலர் அலாட் செய்து அன்றைக்கு
அந்த கலர் உடை அணிந்து பூஜிக்க வேண்டும் என்று ஒரு தீம்
செட்டாகி இருக்கிறது மும்பையில். கர்பா ஆட்டங்கள், பெரிய்ய
சைஸ் ஸ்பீக்கர்களுடன் அங்காங்கே பார்க்கலாம். இதற்காக அதிக
மின்சாரம் உபயோகப்படுத்தப்படுவதாலோ என்னவோ தெரியவில்லை
வசாயில் மின் வெட்டு அதிகமாக இருந்தது.


எனக்கு முன்பே அயித்தான் சென்றாலும் ஆண்கள் வரிசை
குறைவாக இருந்தாலும் கொஞ்சம் அவர்களையும் நிற்க
வைத்து அனுப்பியிருக்கிறார்கள். நான் கோவிலின் முகப்பு
துவாரத்தில் நுழையும் இடத்தில் அயித்தான் நின்றிருந்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்தோம். நேராகா ஓடியது
எஸ்ஸூ.... :)))

வடாபாவ் சாப்பிடத்தான். மணி 11.15. அதுவரை எதுவும்
சாப்பிடவில்லை. சுடச்சுட வடா பாவ்... ம்ம்ம்ம். அடுத்து
சூப்பராக ஒரு பஞ்சாபி லஸ்ஸி. :)) ஒரு காலத்தில் என்
நித்ய உணவாக இருந்தது இவை இரண்டும். அப்போ 3 ரூபாய்
விற்ற வடாபாவ் இப்பொழுது 8 ரூபாய். 5 ரூபாய் இருந்த
லஸ்ஸி 15 ரூபாய்.

அடுத்து இன்னும் இரண்டு இடங்களுக்குச் செல்ல திட்டம்.
ஆனால் ஒன்று முடியாது. நேரம் ஆகிவிட்டது.
போன இடம் எங்கேப்பா..... அடுத்த பதிவில் சொல்றேன்.


4 comments:

வெங்கட் நாகராஜ் said...

வடா பாவ் + பஞ்சாபி லஸ்ஸி... ம்.. நல்லாத்தான் இருக்கு காம்பினேஷன்.... :)

அடுத்து எங்க?

pudugaithendral said...

aduthathukum adutha postla solren sago.

varugaiku nandri

ராமலக்ஷ்மி said...

நான் சென்றிருக்கிறேன் இக்கோவிலுக்கு. அருமையான பகிர்வு தென்றல். விழாக்கால வாழ்த்துக்களும்:)!

சாந்தி மாரியப்பன் said...

கடைத்தெருவுல போட்டோ எடுக்க விடறாங்களா??.. பொண்ணோட காலேஜ் ப்ரொஜெக்டுக்காக நாங்க கோயிலுக்கு போயிருந்தப்ப அனுமதி கிடைக்கலை. இவ்வளவுக்கும் அது மெயின் தெரு இல்லை.