Wednesday, August 21, 2013

சீதா கல்யாண வைபோகமே - 5

ராஜி அம்மம்மா தான் அடுத்து பேசினார். ”ஒதினகாரு பொட்டு முடி சீர (நாத்தானார் தாலி முடிய புடவை) வாங்குவதை பத்தி பேசிடலாமே!” ”ஆமாம்மா, நல்லவேளை ஞாபகப்படுத்தின!” என்ற பத்மா லீலாவிடம், “ ரூபாவுக்கு என்ன புடவை வேணுமோ, அதை பாத்து நீங்களே வாங்கிடுங்க. அதுக்கும் நாங்க பணம் கொடுத்திடறோம். பட்டு புடவைன்னா பட்டு இல்லை வேற மாதிரி வேணும்னா அப்படி, விலையைப்பத்தி பாத்துக்க வேணாம். ரூபாவுக்கு மரியாதை கரெக்டா செய்யணும்” என்றதும் லீலா “சரிம்மா, ரூபாவை கூட்டிக்கிட்டு போய் அவளுக்கு என்ன வேணுமா வாங்கி அந்த புடவையை சத்திரத்துக்கு வந்ததும் உங்களுக்கு கொடுத்திடறேன். நீங்க ஓதியிட வசதியாய் இருக்கும் என்றதோடு, ராஜ கட்டணம், அடப்ப கட்டணத்திற்காக உங்க மகன் ஷ்யாமிற்கு நாங்க மோதிரம் வாங்கறோம். அவரோட அளவுக்கு நீங்க வாங்கிட்டு பணம் எவ்வளவுன்னு சொன்னா அதையும் கொடுத்திடலாம் என்றார்.

”ஆக பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சு. இனி எல்லாத்தையும்  லிஸ்ட் எழுதிட்டா போதும் அப்படின்னு ராஜி அம்மம்மா சொல்ல ,” ஒரு பேப்பரும் பேனாவும் கொடுங்கோ எழுதிடறேன்!” என்றார் மணி

 மணமகன் வீட்டார் வாங்க வேண்டியது:

 1. மஞ்சள் குங்கும புடவை, ரவிக்கை
2. நிச்சயதார்த்தம் - புடவை,ரவிக்கை
3. வரபூஜை - புடவை,ரவிக்கை
 4. நாகவல்லி - பட்டு புடவை,ரவிக்கை
5. சாந்தி முஹூர்த்தம் - புடவை,ரவிக்கை & வேஷ்டி, அங்கவஸ்த்திரம்
6. திங்கள் நாகவல்லி- புடவை, ரவிக்கை & வேஷ்டி, அங்கவஸ்த்திரம்
 7. சம்பந்திக்கு புடவை, வேஷ்டி, பேண்ட்
 8. செளபாக்ய கந்தா புடவை (பெண்ணின் தாயாருக்கு)
 9. கொண்டு வந்து விடுபவர்களுக்கு புடவை, ரவிக்கை, பேண்ட் & ஷர்ட்
 10. மணமகள் சகோதரனுக்கு டிரஸ்/ தங்க காயின் அல்லது மோதிரம். (வசதிப்படி)
 11. பொட்டு, சுட்டு (மெட்டி), பில்லாண்ட்லு, நானுகோலு, குண்டுதாலியில் கோர்க்க.
12. நல்ல பூசலு ( கருகமணி செயின்), வங்கி மோதிரம்.
 13. கொளரி பூஜை சாட்டவாயனம், கோலு தரி முத்யாதலு சாட்டவாயனம்.
14. சாட்டவாயன சாமான் & டப்பா - 5 செட் (1 முறம் கண்டிப்பாக வாங்க வேண்டும்)

”எல்லாம் சரியாக எழுதிக்கொண்டு விட்டேன் அம்மா ரொம்ப தேங்க்ஸ்”  என்றார் மணி. “பின்னி அப்படியே நாங்க வாங்க வேண்டியதையும் ஃபைனல் லிஸ்டா சொல்லிடுங்கோ, எழுதிடறேன்” என நோட்புக்கையும், பேனாவையும் ரெடியாக வைத்துக்கொண்டார். “சொல்றேன், எழுதிக்கோ என பானுபின்னி சொல்ல ஆரம்பித்தார்,



மணமகள் வீட்டார் வாங்க வேண்டியது:

லக்னப்பத்திரிகை: பேண்ட் & ஷர்ட்

ஜானவாசம்: (கோட்/சூட்/ ஷர்வாணி), ஊஞ்சலடி துப்பட்டா. ஷூ அல்லது ஜூத்தி.

மாங்கல்ய தாரண(மதுபர்க்கம் )மஞ்சள் அல்லது கேரளா காட்டன் வெள்ளை புடவை, ரவிக்கை, உத்தரிக்காத 9x5 மயில்கண் வேஷ்டி அங்கவஸ்திரம்

நாகவல்லிக்கு பட்டு மயில்கண் வேஷ்டி, உத்தரிய அங்கவஸ்திரம்.

கிருஹப்ரவேசம்:  புடவை, ரவிக்கை, வேஷ்டி, அங்கவஸ்திரம்.

சாட்டவாயன சாமான்கள் & 5 டப்பா.

ஒதினகாரு பொட்டு முடி புடவை, ரவிக்கை (கல்யாணமாகி இருந்தால் அவரின் கணவருக்கும் ட்ரஸ் எடுக்க வேண்டும். அதை தனியாக தரவேண்டும்)

சம்பந்திக்கு புடவை, ரவிக்கை, பேண்ட்& ஷர்ட்.

பருப்புத் தேங்காய் (நிச்சயதார்த்தம், மாங்கல்ய தாரணம், நாகவல்லி,
கிரஹப்ரவேசம், சாந்தி முகூர்த்தம்.) மொத்தம் 5 செட்.

சீர் பட்சண வகைகள். ( 7 சுத்து முறுக்கு, 5 சுத்து முறுக்கு, லட்டு, மைசூர்பா, தேன்குழல், முள்ளுமுறுக்கு வகைகள்)



”எல்லாம் சரியா எழுதிக்கொண்டாச்சு. இனி நாம கல்யாண வேலையை ஆரம்பிச்சுக்கலாம். நீங்க நல்ல நாள் பார்த்து சொல்லுங்க.  எங்க சொளகர்யம் பாத்து டேட் ஓகே பண்ணிக்கலாம்” என்றார் மணி. “வளைகாப்பிற்கு வரும்போதே 4 நல்ல நாள் பார்த்து கொண்டு வர்றேன். நீங்க முடிவு செஞ்சு சொன்னதும் சத்திரம் புக் செய்ய வசதியாய் இருக்கும்” என்றார் தியாகு. ஓகே என்று சொல்லிவிட்டு,” அப்ப நாங்க கிளம்பறோம் மத்த வேலைகள் பாக்கி இருக்கு” என புறப்பட்டனர்.

சமையல் வேலை முடிந்து சீதாவும் வெளியே வந்து அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
ஷ்யாம் உள்ளே சென்று எல்லோருக்கும் ஜூஸ் கலந்து எடுத்து வந்தான்.


பானு பின்னி பத்மாவை பார்த்து,”  தங்கம் 25 பவுன் வாங்கியிருக்கேன்னு சொன்னியேம்மா!! என்னென்ன வாங்கி இருக்க? “ எனக்கேட்க ”இருங்க எடுத்துகிட்டு வந்து காட்டறேன்” என சொல்லி,” ஷ்யாம் கொஞ்சம் உள்ளே வந்து பரண்லேர்ந்து எடுத்துக்கொடுப்பா ”என கூப்பிட்டாள். இரண்டு பைகளை கீழே இறக்கி தந்தான் ஷ்யாம்.

அதற்குள் தியாகு பானுபின்னியிடம்,”பின்னி, சும்மா சொல்லக்கூடாது பத்மாவை!! சீதாவிற்கு 12 வயசு ஆறதுக்குள்ள சேர்த்து வெச்சிடணும், அப்பதான் பையன் படிப்புக்கு பார்க்க முடியும்னு வெள்ளி, தங்கம் சேர்த்து வெச்சிருக்கா” என பெருமையாக சொன்னார்.  “ அதான்ம்பா நல்லது. ஆனா இது புரியாம சில பேர் இந்த பொம்பளைகளுக்கு நகைமேல ஆசை, வருஷா வருஷம் நகை வாங்க சொல்லி சண்டை போடறாங்கன்னு கோப படுவாங்க. உண்மைக்கு இதுவும் ஒரு சேமிப்பு!” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே பைகளுடன் ஷ்யாமும், பத்மாவும் வர சீதா அவர்களுக்கு உதவியாக வாங்கி வைத்தாள்.

தங்கத்தில் தான் வாங்கி வைத்திருந்த ஹாரம், நெக்லஸ், செயின், ஒரு பெரிய வளையல், 4 சிங்கிள் வளையல்கள், குடை ஜிமிக்கு, செயின் 2 எல்லாம் காட்டினார். “எல்லாம் ரொம்ப நல்லா இருக்குமா. உன் சாமர்த்தியத்தை ரொம்ப மெச்சறேன்.” என்றதும் “எல்லாம் எங்கம்மா சொல்லிக்கொடுத்தது தான் அத்தா” என்றபடி வெள்ளி பாத்திரங்களை காட்டலானார் பத்மா. (அதை நாங்களும் பார்க்க வேண்டாமா என கேட்கும் நேயர்களுக்காக இதோ படங்கள் :) )

                                                     பஞ்ச பாத்திரம், உத்தரணி



                                                     காமாட்சி தீபம், குங்கும பரணி,






                                                       மஞ்சள் குங்குமம் கிண்ணங்கள்










                                                        ஆரத்தி தீபம்- ப்ளேட்





தவழும் கண்ணன்

வரலட்சுமி அம்மன் & கலசம்











”எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்மா.  பொண்ணுக்கு ஆசை ஆசையாய் அத்தனையும் பார்த்து செஞ்சிருக்க. எக்ஸ்ட்ராவா அந்த மணியும், அகர்பத்தி ஸ்டாண்டும் கூட வாங்கியிருக்க. ரொம்ப அழகுனா அது ஜோங்காடே கிருஷ்ணடு தான். சாதாரணமாக வெங்கலத்தில் தான் வாங்குவாங்க. நீ வெள்ளியிலேயே வாங்கியிருக்க “ என பானு பின்னி பாராட்ட, “எல்லாம் ஒரே நாள்ல வாங்க முடியாதுல்ல அத்தை. அதான் கையில பணம் இருக்கும் போது வாங்கிடுவேன். பசங்க சின்னதா இருந்த போது பக்கத்துல இருக்கற ஹைஸ்கூல்ல வேலை போயிட்டு இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா அத்தை?!! அந்த சம்பளத்தில் நகைச்சீட்டு கட்டுவேன். 10த் பரிட்சையின் போது சூப்பர்வேஷன் பண்ணப்போவேன். அதுல வரும் 300 ரூவாய்க்கு வெள்ளி சாமான் வாங்கி வைச்சிடுவேன். இப்படித்தான் அத்தே சேர்த்தேன்!!” என்றார் பத்மா.

”உன்னை மாதிரி மனைவி கிடைக்க தியாகு கொடுத்து வெச்சிருக்கணும்!” என பானுபின்னி சொல்ல, “ எங்க மாப்பிள்ளைக்கு மட்டும் என்ன குறைச்சல். பத்மா சொன்னதை புரிஞ்ண்டதாலத்தானே பத்மாவால இதெல்லாம் செய்ய முடிஞ்சதும். இது பத்மா அதிர்ஷ்டம் “ என சொல்ல தியாகு சிரித்தார்.


ஆஹா! அது சரி. இப்ப மத்த விஷயம் பேசுவோமா அப்பா? என ஷ்யாம் கேட்க,
சொல்லுப்பா, என்றார் தியாகு. கல்யாணத்திற்கு தேவையான பணம்.. அதைப்பத்தி என சொல்ல. நகை, வெள்ளிப்பாத்திரம் இருக்கு. சத்திரம், சாப்பாடு, வர்றவங்களுக்கு துணிமணி இதுக்குத்தான். சீதாபேர்ல போட்டிருந்த மேரேஜ் எண்டோவ்மெண்ட் பாலிசி மெச்சூரிட்டி ஆன பணம் வந்ததை ஃபிக்ஸட்ல போட்டிருக்கேன் என தியாகு சொன்னதும். “ என் சம்பளத்தையும் அம்மா பாங்குலதான் போட்டு வெச்சிருக்காங்க. அதையும் எடுத்துக்கலாம் என சீதா சொல்ல,” வேணாம் சீதா. மீதத்திற்கு நான் இருக்கேன். எனக்கும் கடமை இருக்கு. அப்பாவுக்கு தோள் கொடுக்கணும்,” என்று சொல்லிவிட்டு ஷ்யாம் தொடர்ந்தான்.

“அப்பா, அம்மா, சீதா சம்பளப்பணத்தை அவ பேரிலேயே ஃபிக்ஸட்டில் போட்டு வைக்கலாம். எதிர்காலத்தில் சீதா வேலையை விட்டுவிட்டாள் என்றாள் இந்த பணம் அவள் கைச்செலவுக்கு உதவும். மாப்பிள்ளை நல்லவர். ஆனாலும் தான் வேலைக்கு போய் பழகியவளுக்கு இந்த பணம் உதவியாய் இருக்கும். நான் லோன் போடறேன். அதை வெச்சு சமாளிக்கலாம் என்றதும் பெற்றவர்கள் இருவரும் மகனின் மனமுதிர்ச்சியை கண்டு அதிசயத்து ,”சரிப்பா உன் இஷ்டம் போலவே செய்வோம் என்றவர் சீதாவிடம் திரும்பி ,”ஆமாம்மா சீதா உன் வேலையையைப் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்க? என கேட்டார்.

”நேத்திக்கு நானும் மிஸ்டர் ரகுவும் தனியா போய் பேசியதே அதைப்பத்திதான் பா. வேலை உன் விருப்பம்னு சொல்லிட்டார். நான் என்ன உதவி செய்யணுமோ செய்யறேன் அப்படின்னு சொல்லிருக்கார்பா. என் கம்பெனி வேலையில் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். முடிந்த வரை செய்து பார்க்கறேன். என்னால் மேனேஜ் செய்ய முடியாது என தோணும் போது விட்டுவிடுகிறேன் அப்படின்னு சொல்லிருக்கேன்பா!” என்றாள். ”ஆமாம் சீதா வேலைக்கு போவது என்பது அவரவர் சூழலை பொறுத்த விஷயம். சரியான முடிவுதான்” என தங்கையை பாராட்டினான் ஷ்யாம்.

“நேரம் ஆச்சும்மா, சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாதான் நீங்க ஊருக்கு கிளம்ப முடியும். ஷ்யாம் உங்களை  ஏத்தி விட வருவான்” என சொல்ல எல்லோரும் சாப்பிட போனார்கள்.

தொடரும்


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்மா..... தொடர்கிறேன்...

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத்தென்றல் - இப்பதிவுடன் 989 பதிவுகள் ஆகி இருக்கின்றன - இன்னும் 11 பதிவுகள் இட்டு 1000 வது பதிவினை இட்ட மகிழ்ச்சியினைக் கொண்டாடும் வகையில் ஒரு பதிவிடுங்கள்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ஆகா புதுகைத்தென்றல் - நான் கூட இனிமே கல்யாண வேலைதான்னு நினைச்சேன் - தியாகு ஷ்யாம் பத்மா சீதா எல்லாம் கூடிப்பேசி மனமகிழப் பேசி - சீதாவுக்கு என்னன்ன செய்யணூம்கறத ஃபைனலைஸ் பண்ணிட்டு - குடுமப் ஒரு பல்கலைக் கழகம்னா இந்தக் குடும்பந்தான் - சூப்பரா நடந்துக்கறாங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

தொடரட்டும் - திருமணம் சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நாங்க எல்லாத்துக்கும் வருவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

நலமா.

வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

ஆயிரத்தை கொண்டாடிடுவோம். :))

pudugaithendral said...

சீனா சார்,

கதையா படிக்கும்போதாவது பாசிட்டிவ் கேரக்டர்களாக இருந்து விட்டு போகட்டுமே.:)

வருகைக்கும், வாழ்த்திற்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி