Friday, August 09, 2013

முதன் முதலில் பார்த்தேன்....... காதல் வந்தது!!!!!

முதல் கணிணி அனுபவம் பத்தி எழுதச்சொல்லி ஆதி அழைப்பு அனுப்பியிருந்தாங்க. இதோ பதிவு. இங்கிலீஷ் டைப்ரடைட்டின் ஹையர்,லோயர் பாஸ் செஞ்சு முடிச்சாச்சு. தமிழ் கீஸ் ஸிஃப்ட் போட்டு அடிக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லி மாட்டேன்னு சொல்லிட்டேன். ஷார்ட் ஹேண்ட்ரைட்டிஙெல்லாம் வேணாம்னு ஃபிரியா இருக்க நினைச்ச நேரம். விதி வலியது.  ஒரு நாள் அப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், நம்ம பிருந்தாவன் ஸ்டாப்பிங் கிட்ட “மிதுன் கம்ப்யூட்டர் செண்டர்னு” இருக்குல்ல அங்க போய் பூங்குழலின்னு என் ஃப்ரெண்டோட மகள் இருப்பாங்க. அவங்க கிட்ட பேசி நாளைக்கு பணம் கட்டிடறேன். கம்ப்யூட்டர் கிளாசுக்கு போ” அப்படின்னு அப்பா சொல்ல  ஹை கம்ப்யூட்டர்னு சந்தோஷமா இருந்தாலும், நம்மளை ஃப்ரியாவே இருக்க விடமாட்டாங்களான்னு கோவம்.

கோவமெல்லாம் வெளில காட்டினோம் “கெட் அவுட் தான்”. மிதுன் கம்ப்யூட்டர்ட் செண்டர்தான் புதுகையில் புதுசு, மொதோ செண்டர்லாம். அதோட ஓனர் அம்மாவோட வேலை பார்த்த டீச்சரின் தம்பி கனகசபாபதி சார்.
அடுத்த நாள் காலேஜ் முடிச்சு வந்ததும் மிதுன் கம்ப்யூட்டர் செண்டர் போய் பூங்குழலி அப்படிங்கறவங்க யாருன்னு கேட்டு விசாரிச்சு போய் நான் சுய அறிமுகம் செஞ்சுகிட்டதும் அந்த அக்கா தான் எனக்கு கிளாஸ் எடுக்க போறதை சொன்னாங்க.


கம்ப்யூட்டர் இருக்கும் ரூமுக்கு கூட்டிபோய் காட்டினாங்க.  கன்னாபின்னா சூடாகிடும். ஏசி இல்லாட்டி ஃபேன் ஓடிகிட்டே இருக்கணும்னெலலாம்சொன்னாங்க. ஏதோ மொதோ நாள்லேர்ந்து கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார போறதா நினைச்சிருந்தேன். ஃப்ளோ சார்ட்,
அதுஇதுன்னு ஏதோ சொல்லிகொடுத்தாங்க. வாரத்துக்கு ஒருநாள் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காரலாம்.  அங்கே பேசிக்ஸ் கோர்ஸ் முடிச்சேன்.

மும்பையில் வேலை கிடைச்சு போயாச்சு. அங்கே ஒரு வருஷம் டைப்ரைட்டிங் வேலை. புது ஆபிஸுக்கு போன நேரம் என்னை கம்ப்யூட்டர்
டிபார்ட்மெண்ட்டுக்கு மாத்தினாங்க. பேசிக்ஸ் தெரியும் என்பதால இல்லை கீ போர்டை பார்க்காம கடகடன்னு அடிச்சு தள்ளுவேன் எனும் தகுதிதான்.
( டேடா எண்ட்ரி) அங்கே கூட வேலை பார்த்த கல்யாண் அண்ணா ஃபாக்ஸ்ப்ரோல எப்படி வேலை செய்வதுன்னு சொல்லிகொடுதாப்ல. அப்பதான் மோடம் வெச்சு இமெயில் அனுப்புவது அமலுக்கு வந்தது. ஃபேக்ஸ் மாதிரியே போன் அடிக்கும். எடுத்தா கட் ஆகிடும். இந்த மாதிரி காமெடிகள் அடிக்கடி நடக்க காட்கோபரில் இருக்கும் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டுக்கு போன் போட்டு ஐயா, நாங்க இமெயில் அனுப்பறோம், யாரும் போனை எடுத்து அட்டெண்ட் செய்யாம பாத்துக்குங்கன்னு சொல்லி போனுக்கு ஒரு காவலாளி போட்டு வெச்சு மெயில் அனுப்புவோம். அந்த மோடம் வேலை செய்ய ஆரம்பிச்சதும் கொடுக்கும் சவுண்ட் ஒரு மாதிரியா இருக்கும்.  கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில் நாம ஒரு பெண்புலியா இருந்தது பலருக்கு காண்டு. கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல ஆண்கள் மட்டுமே எங்க ஆபிஸில் இருந்த காலகட்டத்துல மும்பை ரீஜனல் ஆபிஸில் ஒரு பெண் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல இருக்கறதுன்னா சும்மாவா!!! :))


கல்யாணம் ஆச்சு. ஹைதை அப்புறம் சென்னை போயிட்டோம். 2001ல அயித்தானுக்கு ஆபிஸ்ல கம்ப்யூட்டர் வாங்க லோன் கொடுத்தாங்க.  அவங்க வேலைகளுக்கு உதவியா இருக்கும்னு கம்ப்யூட்டர் வாங்கினோம். அதை வாங்கின உடனேயே அயித்தான் மட்டும் இலங்கை போயிட்டாரு. அப்புறம் கணிணி நம் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. :)) அப்பவே ஹாட்மெயில், யாஹூ மெயில்லாம் வெச்சு காண்டாக்ட் செஞ்சுகிட்டு இருந்தோம்.

கொழும்பு போனதக்கப்புறம் பசங்களுக்கும் ரொம்ப உதவியா இருக்கும் என்பதால (எடகஸல் கோர்ஸ் கட்டாய பாடம் அவங்களுக்கு) கணிணி அத்தியாவசிமாகிடிச்சு.அயத்தானுக்கு கம்பெனியே் லாப்டாப் கொடுக்க,
எந்த தடையும் இல்லாம :) கணிணி பகல் நேரத்தில் நம்ம ஆளுகைக்கு வந்து,

 எத்தனையோ விதமா கணிணி எனக்கு உதவியா இருக்கு. இப்போ என்னை பதிவராவும் ஆக்கி கூடிய சீக்கிரமே 1000 பதிவு கண்ட சிகாமணியா ஆக்க இருக்கு.

விட்ட குறை தொட்ட குறையா கடந்த 22 வருஷமா கணிணி என் வாழ்வில் பின்னி பினைஞ்சிருக்கு.

தன்னுடைய அனுபவங்களை பகிர நினைக்கிற யாரும்  தன் முதல்கணிணி அனுபவத்தை பதிவிட அழைக்கிறேன்.






9 comments:

மங்களூர் சிவா said...

கம்ப்யூட்டரை எரிச்சி புகைச்சி எதாவது சாதனை செஞ்சிருப்பீங்கன்னு பாத்தா

ப்ச் :(

:))

இரசிகை said...

nallaayirukke...

:)

வெங்கட் நாகராஜ் said...

இனிய அனுபவங்கள்.....

தொடர்ந்ததற்கு நன்றி.....

இராஜராஜேஸ்வரி said...

முதல் கணிணி அனுபவம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! நன்றி!

கோமதி அரசு said...

எத்தனையோ விதமா கணிணி எனக்கு உதவியா இருக்கு. இப்போ என்னை பதிவராவும் ஆக்கி கூடிய சீக்கிரமே 1000 பதிவு கண்ட சிகாமணியா ஆக்க இருக்கு.//

வாழ்த்துக்கள் புதுகை தென்றல்.
கணினி அனுபவம் அருமை.

Jaleela Kamal said...

அருமையான அனுபவங்கள்

pudugaithendral said...

நன்றி சிவா

நன்றி ரசிகை

நன்றி சகோ

நன்றி இராஜராஜேஸ்வரி

நன்றி சுரேஷ்

நன்றி கோமதி அரசு

நன்றி ஜலீலா

மாதேவி said...

இனிய அனுபவம்.