Friday, November 04, 2016

அமிர்தசரஸ் பயணம்

போனமுறை டில்லி போனப்போ போயிருக்க வேண்டியது. பிள்ளைகளின் லீவு பிரச்சனையானதால கேன்சல் செஞ்சோம். அம்ருதம்மா அடுத்த வருஷம் காலேஜ் போறாங்க, அப்புறம் அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் சேர்ந்தாப்ல லீவு வருவது கஷ்டம். அதான் சரின்னு ப்ளான் செஞ்சு கிளம்பினோம்.
சென்னையிலிருந்து தில்லி அங்கேயிருந்து அமிர்தசரஸ் பயணம்.

4 நாள் லீவுல சுத்தி பாக்கணும் என்பதால் விமானப் பயணம் தான்.  எந்த வித தாமதமும் இல்லாம எல்லாம் ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தது. அமிர்தசரஸை நெருங்கிட்டோம், க்யூல இருக்கோம் அப்படின்னு விமானி அறிவிப்பு செஞ்சார்.  ஆனா கிட்டத்தட்ட 30 நிமிஷத்துக்கும் மேல வானத்துலயே வட்டமடிச்சுக்கிட்டு இருந்தது விமானம்.

எங்களுக்கு கீழ ஒரு ஃப்ளைட், மேல ஒரு ப்ளைட் இந்த ரேஞ்சுல லேண்டிங் ஆகாம சுத்திக்கிட்டு இருக்கு. இதோ அதோன்னு நேரம் போய்க்கிட்டு இருந்தது. போர் மேகம் ஏதும் சூழ்ந்திருச்சா? இல்ல ஹைஜெக் ரேஞ்சுக்கு ஏதும் ஆகிடிச்சோன்னு பயமா போயிருச்சு. ஒரு வழியா 2.15 மணிக்கு லேண்டிங் ஆனதும் தான் மனசு லகுவாச்சு.

ரொம்ப சின்ன ஏர்போர்ட். அதான் ப்ராப்ளம் (நம்ம முன்னாள் திருச்சி ஏர்போர்ட்டையும் விட குட்டி) வெளிய வந்தோம். அயித்தானோட நண்பர் எல்லா ஏற்பாடும் செஞ்சு வெச்சிருந்தார்.  கார் வெயிட் செஞ்சுகிட்டு இருந்தது . ஹோட்டல் போனோம். ஹோட்டல்ல அயித்தானோட நண்பரோட ஆபீஸ்ல வேலை பாக்கிறவர் காத்துக்கிட்டு இருந்தார். நீங்க 10 நிமிஷத்துல கிளம்பணும். இன்னைக்கு ஷோ இருக்கு, இப்பதான் தகவல் வந்துச்சுன்னாரு.

அமிர்தசரஸ் பயணத்துல ரொம்ப முக்கியமான விஷயம் வாகா பார்டர். அது இல்லாட்டி கோவில்களுக்கு போயிட்டு வந்த எஃப்கட் தான்.  அப்பதான் சில சண்டைகள் நடந்து போர் அபாயாம் மாதிரி இருந்தது.  நாங்க ஊருக்கு கிளம்பும் முன்னேலேர்ந்தே வாகா பார்ட்டர் பரேட் கேன்சல் ஆகுதுன்னு செய்தி பாத்துக்கிட்டு இருந்தோம்.

சரின்னு ரூமுக்கு போய் ரெடியாகி கீழ வந்தோம். நண்பர் ட்ரைவர்கிட்ட எப்படி செய்யணும் எல்லாம் சொல்லி வெச்சிருந்தார். மிஸ்ஸாகிடும்னு நினைச்ச ஷோவை பார்க்க போறோம். அப்படின்னு குஷியா போனா.......................


இந்த போர்ட் இருக்கும் இடத்துல வீரர்கள் நின்னுக்கிட்டு எந்த வண்டியையும் உள்ளே போக விடல. இங்கேர்ந்து ரெண்டு கிமீ தூரத்துல தான் அந்த பார்டர்.
பொது மக்கள் பார்வைக்கு அனுமதிப்பதை நிறுத்தி பத்து நாளாச்சே! உங்களுக்கு யார் சொன்னாங்க அப்படின்னு வீரர் கேக்கறாப்ல. இந்த மாதிரி வீஐபி பாஸுக்கு ஏற்பாடு ஆகியிருக்குன்னு சொல்ல, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிச்சிருந்து பாஸ் கொடுத்தா எங்க கிட்ட அந்த லிஸ்ட் இருக்கும் அப்படி ஏதுமில்லைன்னு உள்ளே போக அனுமதி இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார். இதுக்கா இவ்வளவு அடிச்சு பிடிச்சு ஓடியாந்தோம்னு ஆகிடிச்சு.

எதை வெச்சு அந்த நண்பர் ஷோக்கு அனுமதி இருக்குன்னு சொன்னார்னு இப்ப வரைக்கும் புரியாத புதிர்! பார்டர்லேர்ந்து ரெண்டு கீமீ தூரத்துக்கு ஊரே வெறிச்சோடி கிடக்கு. எல்லாரையும் காலி செய்ய சொல்லிட்டாங்க. படத்துல பாக்கற மாதிரி இருக்காது, பஸ்ஸெல்லாம் இங்க இருக்கும்னு பசங்க பேசிக்கிட்டு இருக்க, ட்ராக்டர்ல மக்கள் உக்காந்து போனது பாத்து பசங்க ஆஹா, படத்துல பார்த்த மாதிரி இருக்கேன்னு குஷியானாங்க.

சங்கர் தாபாங்கற தாபால சுடச்சுட சமோசாவும், ஃபுல் கிளாஸ் லஸ்ஸியும் குடிச்சோம். பஞ்சாபி சமோசான்னா அதுதாங்க சமோசா! காரமில்லாம இதமான டேஸ்ட்ல செமயா இருந்தது. லஸ்ஸி லா ஜவாப் தான். :)

படங்கள் உதவி: கூகுளாண்டவர். (எங்க கேமராவுல இருப்பதை இன்னும் கம்ப்யூட்டர்ல் போடலை. போட்டதும் தனி செஷனா அதை பகிர்றேன்.)

ரூமுக்கு போகலாமான்னு யோசிச்சோம். பாக்க வேண்டிய மத்த இடங்கள்ல ஏதாவது பாக்கலாம்னு போனோம்.

தொடரும்......

2 comments:

கோமதி அரசு said...

அமிர்தசரஸ் பயணத்துல ரொம்ப முக்கியமான விஷயம் வாகா பார்டர்//

மிக அருமையாக இருக்கும். மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சிப் பார்த்தோம்.

pudugaithendral said...

வாங்க அம்மா,
அதை தான் பார்க்க முடியலை
வருகைக்கு மிக்க நன்றி