Monday, March 03, 2008

M.SC HUSBANDOLOY - முதுகலை இல்லறவியல் -நிறைவுப் பகுதி.

"இந்தப் பொம்பளங்களே இப்படித்தான்! எப்பப்பாரு புரளி
(GOSSIP) பேசிகிட்டு இருப்பாங்க. அவங்க இருக்கற பக்கம்
சத்தமா இருக்கும். ரகசியத்தை காப்பாத்த மாட்டாங்க",
இது ரங்கமணிகள் தங்கமணிகள் மீது அபாண்டமாக
வீசிக்கிட்டு இருக்கிற குற்றச்சாட்டுக்கள்.

இதுக்குபோய அலட்டிக்கலாமா? :))

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?!!!
2 பெண்கள் சேர்ந்தாலே மட்டுமல்ல
2 ஆண்கள் சேர்ந்தாலும் "கிசு கிசு"
பேசுவாங்க. அவங்களும் அலுவலக
நண்பர்கள் பத்தி, தெரிஞ்ச வங்க பத்தி
பேசுவாங்கதான்.

தங்கமணி பேசினா அது "கிசு கிசு"!!
ரங்கமணி பேசினா "பின்னூட்டம்"!!!

(ஹலோ! நான் பதிவுகளுக்குப் போடற
பின்னூட்டத்தை சொல்லல. )

அவங்க பேசுறதை "ஜஸ்ட் கமெண்ட்"
அப்படின்னு சொல்லிப்பாங்க.

"கமெண்டை" பின்னூட்டம்னு தானே
சொல்வாங்க? ":))

ஆஹ இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க.
இதுக்கெல்லாம் டிரீட்மெண்ட் கிடையாது.


சரி, இத்தோட ஹஸ்பண்டலாஜிப் பாடத்தை
முடிச்சுக்கலாம். சொல்லிப் புரிவதுக் கொஞ்சமே.
இந்தப் பாடங்களை பேஸா வெச்சு எது எதுக்கு எப்படி
டீரீட் பண்ணனும்னு நீங்களே முடிவு
செஞ்சு, செயற் பாடத்தை தொடருங்க.
புதுப்புது டெக்னிக்சை நீங்களே கண்டுபிடிக்க
முடியும்.



இதுக்காக தனிப் பரிட்சை எல்லாம் தேவையில்லை.
அதான் தினம் தினம் வாழ்க்கையில பரிட்சை
நடக்குதே!? தனியே பரிட்சை எதுக்கு?

34 comments:

மங்களூர் சிவா said...

//
-நிறைவுப் பகுதி.
//
தலைப்பு சூப்பர்!!

மங்களூர் சிவா said...

//
இந்தப் பொம்பளங்களே இப்படித்தான்! எப்பப்பாரு புரளி
(GOSSIP) பேசிகிட்டு இருப்பாங்க.
//
அப்பிடியா?

மங்களூர் சிவா said...

//
அவங்க இருக்கற பக்கம்
சத்தமா இருக்கும். ரகசியத்தை காப்பாத்த மாட்டாங்க",
//

oh my god !!

மங்களூர் சிவா said...

//
இது ரங்கமணிகள் தங்கமணிகள் மீது அபாண்டமாக
வீசிக்கிட்டு இருக்கிற குற்றச்சாட்டுக்கள்.
//
கிடையவே கிடையாதே :(

மங்களூர் சிவா said...

//
ஆஹ இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க.
இதுக்கெல்லாம் டிரீட்மெண்ட் கிடையாது.
//
நன்றி சொல்லவே எனக்கு வார்த்தை இல்லையே எக்க்கா

மங்களூர் சிவா said...

//
சரி, இத்தோட ஹஸ்பண்டலாஜிப் பாடத்தை
முடிச்சுக்கலாம்.
//

பதிவிலேயே இதுதான் மிக சிறந்த வரிகள்

(நன்றி : குசும்பன்)

மங்களூர் சிவா said...

//
அதான் தினம் தினம் வாழ்க்கையில பரிட்சை
நடக்குதே!? தனியே பரிட்சை எதுக்கு?
//
அவங்கவங்க திறமைக்கு தக்க பரிச்சை எழுதி பெயில் மார்க்கோ பாஸ் மார்க்கோ அடியோ உதையோ வாங்கிக்கங்கப்பா ரங்கமணிகளா!!

pudugaithendral said...

வாங்க சிவா,

டீரீட்மெண்ட் கிடையாதுன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்களே பாவம் நீங்க.

டீரீட்மெண்டை பொதுவா சொல்ல முடியாது. அது எப்படி கையாளணும்னு அவங்களுக்குத் தெரியும் :)

பாச மலர் / Paasa Malar said...

//தங்கமணி பேசினா அது "கிசு கிசு"!!
ரங்கமணி பேசினா "பின்னூட்டம்"!!!//

ஹாஹா..எவ்வளவு சரியாச் சொல்லிருக்கீங்க..எத்தனை வகுப்புல படிச்சாலும் இந்தக் கலையக் கத்துக்கவே முடியாது..இருந்தாலும் நல்ல டிப்ஸ் தந்த புதுகைத்தென்றலுக்கு ஓஓஓ போடலாம்..

pudugaithendral said...

//அடியோ உதையோ வாங்கிக்கங்கப்பா ரங்கமணிகளா!!//

என் வேல ஈசி ஆயிடுச்சு. :)
நான் சொன்னா தப்பாயிருக்கும்.

pudugaithendral said...

பாடம் முடிஞ்சதுக்கு சந்தோஷப்படாதீங்க சிவா,
இந்தப் பாடத்தை உங்க வரப்போற ரங்கமணி படிச்சா என்னா மாதிரி டீரிட்மெண்ட் அப்படின்னு நினைச்சுப் பாருங்க அது போதும். :)))))))))))

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

உங்க ஓஒக்கு ஒரு நன்றி. :)

நிஜமா நல்லவன் said...

////இந்தப் பொம்பளங்களே இப்படித்தான்! எப்பப்பாரு புரளி
(GOSSIP) பேசிகிட்டு இருப்பாங்க. அவங்க இருக்கற பக்கம்
சத்தமா இருக்கும். ரகசியத்தை காப்பாத்த மாட்டாங்க",////




அடுத்தவங்கள பத்தின ரகசியத்தை மட்டும் தான் காப்பாத்தமாட்டாங்க. அதுவே அவங்கள பற்றியதா இருந்தா வாயே திறக்கமாட்டாங்க.

நிஜமா நல்லவன் said...

///ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?!!!
2 பெண்கள் சேர்ந்தாலே மட்டுமல்ல
2 ஆண்கள் சேர்ந்தாலும் "கிசு கிசு"
பேசுவாங்க. அவங்களும் அலுவலக
நண்பர்கள் பத்தி, தெரிஞ்ச வங்க பத்தி
பேசுவாங்கதான்.////



உண்மைய இப்படி பொதுவுல போட்டு உடைக்கிறீங்களே?

நிஜமா நல்லவன் said...

///சரி, இத்தோட ஹஸ்பண்டலாஜிப் பாடத்தை
முடிச்சுக்கலாம்.///



அப்பாடா இனி ரங்கமணிகளுக்கு நல்ல காலம் தான்.

pudugaithendral said...

//அடுத்தவங்கள பத்தின ரகசியத்தை மட்டும் தான் காப்பாத்தமாட்டாங்க. அதுவே அவங்கள பற்றியதா இருந்தா வாயே திறக்கமாட்டாங்க.//

இப்படி நீங்க சொல்லீட்டா அது சரின்னு அர்த்தம் இல்ல நிஜமா நல்லவன்.

நிஜமா நல்லவன் said...

///புதுப்புது டெக்னிக்சை நீங்களே கண்டுபிடிக்க
முடியும்.///



இருக்கிற டெக்னிக் பத்தாதா? இன்னும் வேற கண்டுபிடிக்கணுமா?

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

//உண்மைய இப்படி பொதுவுல போட்டு உடைக்கிறீங்களே?//

அதுதானே ஹஸ்பண்டாலஜியின் சிறப்பு :)

நிஜமா நல்லவன் said...

///இதுக்காக தனிப் பரிட்சை எல்லாம் தேவையில்லை.///







இதுல எதுவும் உள்குத்து இல்லையே? வேற எங்கேயோ பரிட்சை நடந்தது. அதான் கேட்டேன்.

pudugaithendral said...

புதுப்புது டெக்னிக்சை நீங்களே கண்டுபிடிக்க
முடியும்.///



இருக்கிற டெக்னிக் பத்தாதா? இன்னும் வேற கண்டுபிடிக்கணுமா?

வாங்க நிஜமா நல்லவன்,
டெக்னிக் கண்டுபிடிச்சாதானே டீரீட்மெண்ட் கொடுக்க வசதி!!!!

சுரேகா.. said...

அப்பாடி....ஒருவழியா முடிச்சுட்டாங்க!

-நான்..

அய்யய்யோ...முடிச்சுட்டாங்களா?

தங்கமணி..!

pudugaithendral said...

//அப்பாடா இனி ரங்கமணிகளுக்கு நல்ல காலம் தான்.//

பாவம் நிஜமா நல்லவன்.
இனி ஏது நல்ல காலம். ஹஸ்பண்டாலஜி பாடத்தை படிச்ச தங்கமணிகள் இனி ரங்கமணிகளுக்குத் தரப்போற டீரிட்மெண்டுகளை நினைச்சுப் பார்த்தேன் சிரிச்சேன்.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

இன்னும் சில டாபிக்குகள் சொல்லலாம்னுதான் இருந்தேன்.

அதெல்லாம் சொல்லியிருந்தா ரங்கமணிகளைக் காப்பாற்ற நீங்கள் எல்லாம ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டி வந்திருக்கும்னு விட்டுட்டேன்.

pudugaithendral said...

உள்குத்து இல்லாமலா நிஜமா நல்லவன்.:)

நிஜமா நல்லவன் said...

புதுகைத் தென்றல் said...
//அப்பாடா இனி ரங்கமணிகளுக்கு நல்ல காலம் தான்.//

பாவம் நிஜமா நல்லவன்.
இனி ஏது நல்ல காலம். ஹஸ்பண்டாலஜி பாடத்தை படிச்ச தங்கமணிகள் இனி ரங்கமணிகளுக்குத் தரப்போற டீரிட்மெண்டுகளை நினைச்சுப் பார்த்தேன் சிரிச்சேன்.////





இத்தோட பாடத்த முடிச்சீங்களே அதைத்தான் நல்ல காலம்ன்னு சொன்னேன். உங்க பாடம் தொடர்ந்தா எங்க கதி?????????

நிஜமா நல்லவன் said...

//புதுகைத் தென்றல் said...
உள்குத்து இல்லாமலா நிஜமா நல்லவன்.:)///




அப்ப நான் நினைச்சது சரிதான்.

pudugaithendral said...

சரியா நினைச்சீங்க, சரியா சொன்னீங்க நிஜமா நல்லவன்.

:))))))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
// புதுகைத் தென்றல் said...
வாங்க சுரேகா,

இன்னும் சில டாபிக்குகள் சொல்லலாம்னுதான் இருந்தேன்.

அதெல்லாம் சொல்லியிருந்தா ரங்கமணிகளைக் காப்பாற்ற நீங்கள் எல்லாம ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டி வந்திருக்கும்னு விட்டுட்டேன்.
==>
அடடா,அந்த டாபிக்குதானே வேணும்.
பாடத்துல சுவாரஸ்யமே இல்ல. "சப்"னு இத்தனை சீக்கிரமே முடிச்சிட்டீங்களே. =)))

pudugaithendral said...

//அடடா,அந்த டாபிக்குதானே வேணும்.
பாடத்துல சுவாரஸ்யமே இல்ல. "சப்"னு இத்தனை சீக்கிரமே முடிச்சிட்டீங்களே. =)))//

வாங்க சாமான்யன்,

பாடங்கள் எல்லோருக்கும் சுவாரஸ்யமா இருப்பதில்லை.

சொல்ல வேண்டிய முக்கிய விடயங்களைச் சொல்லியாச்சு.

அதனாலதான் முற்றும் போட்டேன்.

நிஜமா நல்லவன் said...

///புதுகைத் தென்றல் said...
வாங்க சாமான்யன்,

பாடங்கள் எல்லோருக்கும் சுவாரஸ்யமா இருப்பதில்லை.///





சொல்லுகின்ற விதத்தில் சொன்னால் எல்லோருக்கும் சுவாரஸியம் தான்

pudugaithendral said...

//சொல்லுகின்ற விதத்தில் சொன்னால் எல்லோருக்கும் சுவாரஸியம் தான்//

ஆமாங்க. ஆனாலும் சிலருக்கு
சுவாரசியமாக இராது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
நிஜமா நல்லவன் said...
///புதுகைத் தென்றல் said...
வாங்க சாமான்யன்,

பாடங்கள் எல்லோருக்கும் சுவாரஸ்யமா இருப்பதில்லை.///

சொல்லுகின்ற விதத்தில் சொன்னால் எல்லோருக்கும் சுவாரஸியம் தான்
3 March, 2008 9:23 PM
==>
அறிவியல் பாடத்தைப்போய் சுவாரஸ்யமாய் நடத்த முடியுமா? அதுமாதிரி தான் இதுவும். ஏதோ டீச்சர் நினச்ச மாதிரி சில/பல பேருக்கு உபயோகமா இருந்தா சரிதான்.

ராமலக்ஷ்மி said...

அருமையான தொடர். ரசித்தேன் தென்றல்:))!

pudugaithendral said...

வாங்க ராமலக்சுமி

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி